Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

பாடகர் கோவனின் கைது இந்திய ஒட்டு ஜனநாயகத்தின் குறுக்குவெட்டு முகம்

இனியொரு... by இனியொரு...
11/01/2015
in பிரதான பதிவுகள் | Principle posts, இன்றைய செய்திகள்
0 0
1
Home பிரதான பதிவுகள் | Principle posts

kovanமன்னர் ஆட்சியும் நிலப்பிரபுத்துவமும் மேற்கு நாடுகளில் எண்ணூறு ஆண்டுகளுக்கு மேலாக யாரும் கேள்வி கேட முடியாமல் நிலைத்து நின்றது. அப்போதெல்லாம் மன்னர்களின் ஆட்சியையும் பேரரசுகளையும் தவிர வேறு ஆட்சியதிகாரம் தோன்றும் என யாருமே நினைத்துப் பார்த்திருக்கவில்லை. நிலப்பிரபுத்துவ அமைப்பு சிதைவின்றி அத்தனை நீண்ட ஆண்டுகள் நிலைத்திருந்த போதும் முதலாளித்துவ அமைப்பு அதன் கருவிலேயே சிதைந்து சீர்குலைந்து போனது. பதினெட்டாவது நூற்றாண்டின் அரைப் பகுதி முழுவதும் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டங்கள் உலகைக் குலுக்கின.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பாடகர் கோவன் கைது தொடர்பாக தந்தித் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதம் ஒன்றில், நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்கிறார், உலகம் முழுவதும் சோசலிசமும் கம்யூனிசமும் இல்லை, இந்தியாவில் மட்டும் எப்படி நடைமுறக்குக் கொண்டுவரலாம் என்று.

மன்னர்களின் காலத்தில் ஊடகங்களும் விவாதங்களும் இருந்திருந்தால் முதலாளித்துவமும் அது கூறும் ஜனநாயகமும் சாத்தியமற்றது என்றே அந்தக்காலத்து தந்தித் தொலைக்காட்சி கூறியிருக்கும்.

இந்தியா இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில் காலனி ஆதிக்க நாடுகளால் ஒட்டவைக்கப்பட்ட ஜனநாயகத்திற்கு இன்னும் எழுபது வயதுகூட ஆகிவிடவில்லை. பிரான்சிலும் பிரித்தானியாவிலும் முதலாளித்துவ ஜனநாயகம் முகிழ்ந்து வளர்ந்து ஐரோப்பா அமெரிக்கா எங்கும் கிளைபரப்பி இன்னும் மூன்றரை நூற்றாண்டுகள் கூட முடியவில்லை. மேற்கு ஏகாதிபத்திய நாடுகளில் ஜனநாயகம் காலாவதியாகிப் போய்விட்டது என மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர்.

மேற்கு ஏகாதிபத்திய நாடுகளில் முதலாளித்துவம் தோன்றிய காலப்பகுதியில் காணப்பட்ட ஜனநாயகத்தின் எச்ச சொச்சங்கள் இன்னும் நிலைத்திருக்கின்றன.

davidcபிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரன் தனது இளமைக்கால களியாட்ட விழா ஒன்றின் முடிவில் போதை தலைகேற உயிரற்ற பன்றியுடன் உடலுறவு கொண்டார் என்ற தகவலை பிரித்தானியாவின் பல ஊடகங்கள் பரபப்புச் செய்தியாக வெளியிட்டன. டேவிட் கமரன் பன்றியுடன் தோன்றும் படங்களும் வெளியாகின. டேவிட் கமரனின் அண்மைய விருந்துபசார நிகழ்வில் போதைப் பொருள் பயன்படுத்தப்பட்டதாக ஊடகங்கள் தலைப்புச் செய்திகளை வெளியிட்டன.

டேவிட் கமரன் விரும்புவது பன்றியையா மனைவியையா என ஊடகம் ஒன்று தலைப்புச் செய்தியோடு வெளிவந்தது.

இந்தியா போன்ற நாடுகளில் மேற்கு நாடுகளால் வலிந்து ஒட்டவைக்கப்பட்ட ஜனநாயகத்தில் இவ்வாறான விமர்சனங்களுக்கு இடமில்லை.

இவ்விமர்சனங்களுக்கு இடமளிபதெல்லாம், மேற்கு நாடுகளில் ஜனநயகம் கொடிகட்டிப் பறக்கிறது என்பது அர்த்தமல்ல. ஆனால் விமர்சனங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தாழ்த்தப்பட்டவர்களில் வாயில் மலம் ஊட்டுவதும், தெருவோரங்களில் வைத்து அவர்களைக் கொன்றுபோடுவதும் மக்கள் மத்தியில் பேசப்படாத தமிழகத்தில் பாடகர் கோவனைக் கைது செய்வததைத் தலைகுனிவாக எண்ணாதவர்கள் வாழ்வது வியப்பிற்குரியதல்ல.

அதிகாரவர்க்கத்தின் அடியாள் படைகளான ஆளும் கட்சிகளின் அரசியலை விமர்சித்தாலே சிறையிலடைக்கப்படுவார்கள். கொலை அச்சுறுத்தல்களுக்கு உள்ளாவார்கள்.

கோவனின் பாடல் தொடர்பாகக் கருத்து வெளியிட்ட பாரதீய ஜனதாக் கட்சியின் மாநிலச் செயலாளர், கோவன் தனது பாடலில் பிரதமரையும், முதலமைச்சரையும் கொச்சப்படுத்துவதாகக் கூறி கைதை நியாயப்படுத்துகிறார்.

பலம் மிக்க மக்கள் ஜனநாயக அமைப்பான மக்கள் கலை இலக்கியக் கழகத்திற்கே இந்த நிலை என்றால், அப்பாவி மக்களின் நிலையை எண்ணிப்பார்க்கக்கூட முடியாது.
கோவன் கைது தொடர்பாகத் தெரிவித்த ஜெயலலிதாவின் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த எஸ்.ஆர்.சரஸ்வதி தமது தலைவர் ஜெயலலிதாவை அவமானப்படுத்தியதற்காகவே கோவன் கைதாகியுள்ளார் என்கிறார்.

பாடகர் கோவன் மீது ஆயுள் தண்டனை விதிக்கக் கூடிய 124- ஏ (தேசத்துரோகம்), 153-அ சமூகத்தில் இரு பிரிவினருக்கிடையில் மோதல் ஏற்படுத்துதல் உள்ளிட்ட கடும் சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துளதைப் பொதுவாக அனைத்துக் கட்சிகளும் கண்டித்துள்ளன. எது எவ்வாறாயினும் கைதை ஆதரித்து எந்தக் கூச்ச உணர்வும், அவமான உணர்வுமின்றிப் பேசுவதற்கும் தமிழகத்தில் ஒரு கூட்டம் வாழ்ந்துகொண்டிருக்கிறது.

இந்திய ஒட்டு ஜனநாயகம் ஏற்படுத்திய பின் தங்கிய சமூகத்தின் உள்ளூர் பிரதிநிதிகளின் ஜனநாயகம் என்பது மன்னர் காலத்தின் சர்வாதிகாரத்திலிருந்து பெரிதாக மாற்றம் பெறவில்லை.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
மக்கள் அதிகாரம் ஊடகச் சந்திப்பு

மக்கள் அதிகாரம் ஊடகச் சந்திப்பு

Comments 1

  1. sumerian says:
    10 years ago

    கோவனை உலகறியவைத்த கொடநாட்டு தாயே
    ஊத்திக்கொடுக்கும் உத்தமியே
    டாஸ்மார்க் நாயகியே
    நீ ஆள, மக்கள் குடியில் சாக
    வாழ்துக்கள்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...