Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

39 பில்லியன் டாலர் ஊழல் – கருணாநிதி வியாபாரக் கோட்டைக்குள் சிக்கல் : ஜமீலா

இனியொரு... by இனியொரு...
01/02/2011
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
10
Home பிரதான பதிவுகள் | Principle posts

இந்தியாவின் மிகப் பெரும் ஊழல்களில் ஒன்றான அலைக்கற்றை மோசடியின் பிரதான சூத்திரதாரி முத்துவேல் கருணாநிதியும் அவரின் குடும்ப அரசியல் வியாபாரிகளும் என்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தமிழக முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற வியாபார அரசியல் அமைப்பின் தலைவருமான மு.கருணாநிதி வன்னிப் படுகொலைகளின் போது இந்திய மத்திய அரசு மற்றும் இலங்கை அரசுகளுடனான வியாபார அரசியல் ஒப்பந்தங்களுக்காக தமிழ் நாட்டில் அரசியல் எழுச்சிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கோடு நாடகமாடியவர்.

39 பில்லியன் டாலர் பெறுமானம் மிக்க அதிர்ச்சி தரும் இந்த ஊழல் விவகாரத்தின் பின்புலத்தில் பல உள்ளூர் பிரமுகர்களிலிருந்து வெளிநாட்டுத் தலைகளும் தொடர்பு பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்திய அரசியல் வியாபரமும் வியாபாரத்திற்கான அரசியலும் ஒரு சில ஆளுமை மிக்க அரசியல் தலைவர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.

தமிழ் நாட்டில் ஜெயலலிதாவும் கருணாநிதி குடும்பமும் வியாபார அரசியலில் ஆளுமைமிக்க புள்ளிகள். தனது ஊழல் சாம்ராஜ்யத்தின் பணபலத்தால் இந்தியப் பிரதமாராவதற்கான கனவுகளில் ஈடுபட்டிருந்தவர் ஜெயலலிதா என்பதும் இங்கு சுட்டிக்காகட்டத் தக்கது. அரசியல் வியாபாரத்தைத் தலமை வகிக்கும் இவ்வாறான முக்கிய புள்ளிகள் அல்லது பிரமுகர்கள் அதிகாரிகளையும், அமைச்சர்களையும் பதவியில் அமர்த்துவது தான் ஊழலின் ஆரம்ப நிலையாக அமையும்.

அதிகாரத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தனிமனிதர்கள் பின்னதாக மோசடியில் ஈடுபடுவதற்கான பொறிமுறைகளுக்காகப் பயிற்றுவிக்கப்படுவார்கள். பன்னாட்டுக் கம்பனிகளின் தொடர்புகளை ஏற்படுத்தல், இடைத் தரகர்களை அறிமுகம் செய்தல் ,இன்னொரன்ன வசதிகளை ஏற்படுத்தல் போன்ற பயிற்சிகள் ஒழுங்குசெய்யப்படும். இறுதியாக ஊழலில் ஈடுபடுத்தப்படும் அதிகாரி அல்லது அமைச்சருக்கான தரகுத் தொகை தீர்மானிக்கப்பட்ட பின்னர் அவர் அதிகாரத்தில் அமர்த்தப்படுவார்.

இந்த எல்லா வழிமுறைகளும் மு.கருணாநிதியால் மேற்கொள்ளப்பட்ட பின்னர் அந்திமுத்து ராஜா தொலைத் தொடர்பு அமைச்சராக நியமிக்கப்படுகிறார். அவர் அமைச்சராக நியமிக்கப்பட முன்பதாகவே ஊழலின் பெறுமானம் குறித்து அறிந்து வைத்திருந்தார். இதனால், ராஜா தன்னார்வ நிறுவனங்கள், குடும்ப நம்பிக்கை நிதி நிறுவனங்கள், ரியால் எஸ்டேட் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள், ஹவாலா நிறுவனங்கள் போன்றவற்றை உருவாக்கிக் கொண்டார். கருணாநிதியின் வியாபார அரசியலில் ஈடுபட்டிருக்கும் அவரது குடும்பத்தினருக்குத் தெரியாமலேயே மிகத் தந்திரமான வகையில் அ.ராஜா தனது சொந்த அரசியல் வியாபாரத்திற்கான சாம்ராஜ்யத்திற்கான அத்திவாரக் கற்களை நாட்டிக்கொண்டார். தவிர, கருணாநிதியின் மகளாண கனி மொழியுடனான தனிப்பட்ட உறவுகளும் பல வேறுபட்ட நம்பிக்கைகளை கருணாநிதியின் குடும்பத்தினருக்கு ஏற்படுத்தியிருந்தது.

மோசடியின் மூலகர்த்தாவான கருணாநிதிக்குச் சந்தேகம் ஏற்படாத வகையில் ராஜா மிகத் தந்திரமாக காய்களை நகர்த்திவந்தார். அ.ராஜா மீதான குற்றச்சாட்டுக்கள் எழும் போதெல்லாம் அவர் ஒரு தலித் என்பதனாலேயே அவதூறுகளுக்கு உள்ளாகிறார் என்று கருணாநிதி அவரை நியாயப்படுத்தி வந்தார். இந்த ஆண்டு மே மாதத்தில் ராஜாவை பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்த போது கருணாநிதி இதையே மறுபடியும் கூறிவந்ததார்.

ஆனால் ராஜாவின் நிறுவனங்கள் குறித்த விபரங்கள் மத்திய அரச உளவுத் துறைகளின் ஊடாக வெளியான போது நிலைமை முற்றாக மாறிவிட்டது. 2010 டிசம்பரில் கருணாநிதி ராஜா குற்றம் செய்திருந்தால் தண்டனலி அனுபவிக்க வேண்டியவரே எனக் கூறியுள்ளார். ஆக, ராஜாவின் சொத்து விபரங்கள் வெளியான போது மிகவும் விலையுயர்ந்த வியாபார சாம்ராஜ்யத்தைக் கருணாநிதி குடும்பத்திற்கு வெளியில் உருவாக்கியுள்ளார் என்ற தகவல் வெளியான பின்னரே லஞ்சம், காட்டிக்கொடுப்பு, ஊழல், மோசடி, போன்ற அனைத்து அயோக்கியத் தனங்களிலும் தனிக்காட்டு ராஜாவாகத் திகழ்ந்த கருணாநிதிக்குத் தானும் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பது தெரியவந்தது. இன்று ராஜாவை கட்சியிலிருந்து நீக்கவேண்டும், கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் அழகிரி மற்றும் ஸ்டாலின் போன்ற கருணாநிதியின் அரசியல் வியாபார சிம்மாசனத்தைச் சுற்றியிருக்கும் அவரது மகன்களிடமிருந்து எழுந்துள்ளது. ஏமாற்றப்பட்டதன் எதிரொலியே இது.

ராஜா தனது சொந்த வியாபாரச் அரசாட்சியைத் தனது உறவினர்களைக் கொண்டே உருவாக்கிக் கொண்டார். ராஜாவின் மனைவி, மூன்று சகோதரர்கள், நான்கு தங்கைகள், ஏனைய உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் ஆகியோரை உள்ளடக்கிய பல வியாபார நிறுவனங்கள் உலகிற்கு அறிமுகமாகின. வீடுவீடாகச் சென்று சேலைவியாபாரம் நடத்திக்கொண்டிருந்த ராஜாவிற்கு நெருக்கமான பாட்சா என்பவரின் பெயரில் சென்னையில் பல ரியல் எஸ்டேட் கம்பனிகள் உருவாக்கப்பட்டிருந்தன. பாட்சாவின் கம்பனிகளின் இன்றைய பெறுமதி 2000 கோடிகளாகும். 2004 ஆம் ஆண்டு ஒரு லட்சம் இந்திய ரூபாய்கள் செலவில் உருவான இவரின் கம்பனி சிங்கப்பூரில் தனது கிளையை 2006 இல் திறந்தது. 2007ம் ஆண்டு ராஜாவின் மனைவி பரமேஸ்வரி அதன் டைரக்ரர்களுள் ஒருவராக்கப்பட்டார்.

குறுகிய காலத்துள் கம்பனியின் பெறுமதி பல கோடி ரூபாய்களானது. 2009 ஆம் ஆண்டு சிங்கப்பூர் கிளை அந்த நாட்டின் நாணைய மாற்று நிர்வாகத்தை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டு மூடப்பட்டது. இவ்வாறு மேலும் பல சொத்து விபரங்களையும் டீல்களையும் சீ.பி.ஐ விசாரித்துள்ளது. கருணாநிதி குடும்பத்தாலும் கைவிடப்படும் நிலையிலுள்ள ராஜா அரசியல் வியாபாரத்தில் உறுதியான நண்பர்களற்ற நிலையில் காணப்படுகிறார். இதே வேளை ஊழலில் கருணாநிதி குடும்பத்திற்குள்ள தொடர்பைப் பயன்படுத்தி காங்கிரஸ் அவரோடு தேர்தல் பேரத்திற்கு விலை பேசிக்கொண்டிருக்கிறது. மறுபக்கத்தில் கருணாநிதி ராஜாவை மிரட்டிப் பங்குகளை தன்வசமாக்க கங்கிரஸ் செல்வாக்கைப் பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில் மக்கள் பணம் அரசியல் வியாபாரிகளின் சூதாட்டத்திற்குப் பயன்பட்டுக்கொண்டிருக்கிறது. தமிழ் நாட்டின் தலைமை ஊழல் தாதாக்களான ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் அதிகாரத்திற்கு வெளியில் ஒட்டுக் கட்சிகளுக்கு வெளியிலான சமூக ஜனநாயக எழுச்சியை மக்கள் அக்கறை கொண்டவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

==========================================================
http://netindian.in

http://www.tehelka.com

 http://www.vinavu.com

 http://www.savukku.net/

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

கொலைகளையும் சிறுவர் ஆட் சேர்ப்பையும் உடனடியாக நிறுத்தவேண்டும் : நோர்வே அரசு பிரபாகரனுக்கு

Comments 10

  1. vanniyan says:
    15 years ago

    எலி கொழுத்தா ..வளையிலிருந்து வந்து தானே ஆக வேண்டும். இந்தா வந்திரிச்சில்ல. யக்கம்மா சொல்லுறா கேளுங்கோ…கெட்டகாலம் ஆரம்பிச்சிரிச்சு… கருணாநிதிக்கு கெட்ட காலம் ஆரம்பிரிச்சிரிச்சு.

  2. naathi says:
    15 years ago

    எவ்வொளோ எல்லாம் பண்ணியிருக்கார் நம்ம கருணா தாத்தா? இதெல்லாம் ரொம்ப சிம்பிள்பா.

  3. THAMILMARAN says:
    15 years ago

    நதியினில் வெள்ளம் கடலினில் நெருப்பு இரண்டுக்கும் நடுவே இறவனின் சிரிப்பு கண்ணதாசனின் தீர்க்கதரிசனம் இப்போதுதான் பொருந்துகிறது.இதையும் தாண்டி கலைஞர் எழுந்து வருவார்.

  4. YOGA.S says:
    15 years ago

    அவர் எழுந்து வருவது இருக்கட்டும்!பிள்ளைகள்,பேரன்கள் கதி????????????

  5. k.pathi says:
    15 years ago

    koLLai koLLaiyaa munthirikkaa

  6. Er.L.C.NATHAN says:
    15 years ago

    பலநாள் திருடர்கள் [ கருநாகநிதியும், ராசாவும் ] அகப்பட்டு கொண்டார்கள்!!!!?????!!!காமராஜர் முன்பு கூறிய “” ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளான “”திமுகவும், அதிமுகவும் தமிழ்நாட்டிலிருந்து விரட்டி அடிக்கப்பட வேண்டும்!!

    • THAMILMARAN says:
      15 years ago

      விரட்டி அடித்து,

    • Arun says:
      15 years ago

      neengal sonnadhu 100% unmai!

  7. Velu says:
    15 years ago

     டிதெல்லாம் கொன்ஜ நாள் தான் பிறகு எல்லாரும் மறந்து விடுவர்கல்

  8. gururadhakrishnan says:
    14 years ago

    ஊழ்ல் செய்வதில்தமிழ்நாக்ட்டு கட்சி தலைவர்களில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை.அமரர் கமராஜர் சொன்னது போல இருவரும் கொள்ளிக்கட்டைகளே எந்தக் கொள்ளிநல்ல கொள்ளி.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...