Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

19வது சீர்திருத்தம் எவ்வகையிலும் மக்கள் ஜனநாயகத்திற்கு அடித்தளமிடாது.

இனியொரு... by இனியொரு...
04/10/2015
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

02மாற்று கருத்தாடலுக்கான அமையத்தின் ஏற்பாட்டில் கடந்த 04.04.2015 அன்று அரசியலமைப்புக்கான 19வது சீர்திருத்தம் மற்றும் தேர்தல்முறை மறுசீரமைப்பு தொடர்பான கருத்தரங்கும் கலந்துரையாடலும் வெள்ளவத்தையில் உள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிலையத்தில் இடம்பெற்றது. எஸ். சரவணபவானந்தன், எஸ். கோகுலன், இ.தம்பையா ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் எஸ். விஜயகுமார் ‘அரசியல் யாப்பிற்கான 19வது திருத்தமும் இலங்கை மக்களின் ஜனநாயக வாழ்வும்’ என்ற தலைப்பிலும் பேராதனை பல்கலைக்கழக அரசறிவியல் துறை விரிவுரையாளர் என். சிவகுமார் ‘அனைத்து இலங்கை மக்களினதும் பங்கேற்பு அரசியலுக்கான தேர்தல் மறுசீரமைப்பு’ என்ற தலைப்பிலும் விரிவுரைகளை நிகழ்த்தினர்.

அமையத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் எஸ். சரவணபவானந்தன் தனது தலைமையுரையில் மாற்று கருத்தாடலுக்கான அமையம் எந்த வகையிலும் ஒரு அரச சாரா நிறுவனம் அல்ல. இது ஒரு வெகுஜன அமைப்பு என்பதை வலியுறுத்தியதுடன் இது மக்களுக்கான மாற்றுக் கருத்துக்களை முன்வைத்து அவர்களை அணிதிட்டுவதனை நோக்காக கொண்டது. அந்த அடிப்படையிலேயே இக் கருத்தரங்கும் கலந்துரையாடலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

‘அரசியல் யாப்பிற்கான 19வது திருத்தமும் இலங்கை மக்களின் ஜனநாயக வாழ்வும்’ என்ற தலைப்பில் உரையாற்றிய சு. விஜயகுமார், 19வது திருத்தத்தில் சில ஜனநாயக அம்சங்கள் இருக்கின்ற போதும் அதில் இலங்கையில் நிலவும் நவதாராள பொருளாதாரத்தை மேலும் முறைமைப்படுத்தி மேற்கொள்வதற்கான நிறுவன கட்டமைப்புகளை தாபிப்பதற்கான நோக்கமே முதன்மையானது. ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் அதிகார எல்லைகள் தொடர்பில் முரண்பாடுகளை இத்திருத்தம் கொண்டிருக்கின்றது. அது தீர்க்கப்பட்டு நிறைவேற்றப்பட்டால் புதிய முறையில் நவதாராள பொருளாதார முறை தொடரும். மக்களின் ஜனநாயக போராட்டங்களின் விளைவாக ஆட்சியாளர்கள் 19வது திருத்தத்திற்கு தள்ளப்பட்ட போதும் அது மக்களின் ஜனநாயக உரிமையை வாழ்வை முழுமையாக உறுதிப்படுத்த முடியாதுள்ளது. ஏனெனில் நவதாராள பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்தும் அரசு அடக்கு முறை நோக்கங்களுக்காக அதிகாரம் கொண்டதாக இருக்க வேண்டியுள்ளது. மக்கள் ஜனநாய கூறுகளுக்கு ஆட்சியாளர்களுக்கு விருப்பம் இல்லை என்பது 19வது திருத்தம் மக்களுடன் எவ்வித கலந்துரையாடலும் இன்றி கொண்டு வந்த முறையில் இருந்து தெரியவருகிறது. ஜனநாயகத்திற்கும் நவதாராள பொருளாதாரத்திற்கும் இடையில் முரண்பாடே இதற்கு காரணம் என்றார்.

என். சிவகுமார் ‘அனைத்து இலங்கை மக்களினதும் பங்கேற்பு அரசியலுக்கான தேர்தல் மறுசீரமைப்பு’ என்ற தனதுரையில் தேர்தல் முறை அனைத்து மக்களின் பிரதிநிதித்துவத்தையும் அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உறுதி செய்வதாக இருப்பதே ஜனநாயகத்திற்கு ஏற்புடையது. எனினும் 20வது திருத்தம் ஊடாக கொண்டுவரப்பட இருப்பதாக சொல்லப்படும் கலப்பு தேர்தல் முறை விரிவாக ஆராயப்படாமல் நிறைவேற்றப்படுமாயின் அது சிறுபான்மை கட்சிகளுக்கும் சிறிய கட்சிகளுக்கும் பாதகமாக அமைவதுடன் அது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இன்மையையும் தோற்றுவிக்கும். ‘தினேஸ்குணவர்தன பாராளுமன்ற தொரிவு குழு’வின் முன்மொழிவுகள் தேர்தல் ஆணையாளரின் முன்மொழிவுகள் இன்று ஆராயப்பட்டு வருகின்றன. கலப்பு முறையில் எத்தனை உறுப்பினர்கள் எளிய பெரும்பான்மை முறையில் தெரிவு செய்யப்பட வேண்டும் விகிதாசார முறையில் எத்தனை பேர் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பவற்றில் உடன்பாடுகள் இன்னும் எட்டப்படவில்லை. எவ்வாறாயினும் சிறிய கட்சிகள், சிறுபான்மை கட்சிகள் தமது ஜனநாயக உரிமையை நிலை நிறுத்த தேர்தல் முறை தொடர்பில் அதிக விழிப்புடன் இருக்க வேண்டியுள்ளது என்றார்.

சபையோரின் கருத்துக்களின் பின் தொகுப்புரை வழங்கிய சட்டத்தரணி. இ. தம்பையா ஆட்சியாளர்கள் ஐக்கியப்படாமல் பிரிந்திருக்கும் நிலைமையே மக்களுக்கு சாதகமானது. எனினும் இன்று பிரிந்திருக்கும் ஆட்சியாளர்கள் ஒன்றாக சேரமாட்டார்கள் என்றில்லை. எனினும் மக்கள் ஒன்றுப்பட்டு செயற்பட வேண்டிய தேவையுள்ளது. மக்கள் ஜனநாயகத்திற்காக அணிதிரள வேண்டியுள்ளது. 19வது திருத்தம், தேர்தல் முறை மறுசீரமைப்புகள் ஆளுகை முறையில் செய்யப்படுவுள்ள கட்டமைப்பு மாற்றங்கள் தொடர்பில் மக்கள் சார்பாக நின்று கருத்துக்கள் முன்வைக்கப்பட வேண்டும். அது பாராளுமன்றத்திற்குள் இருப்பவர்களில் சாத்தியம் இல்லை என்பது எமக்கு தெரிந்தது. மக்கள் சார்பான அமைப்புகளே அதனை செய்ய வேண்டிய பொறுப்பை கொண்டுள்ளன என்றார்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
சுன்னாகம் நஞ்ச்சில் போலித் தேசியவாதிகள் ஈட்டி எறிந்து குத்திய புள்ளிகள்!

சுன்னாகம் நஞ்ச்சில் போலித் தேசியவாதிகள் ஈட்டி எறிந்து குத்திய புள்ளிகள்!

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...