Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

ரெலோ புளொட், ஈபீஆர்எல்எவ் உறுப்பினர்கள் முள்ளிவாய்க்காலில் பதவிப் பிரமாணம்

இனியொரு... by இனியொரு...
10/12/2013
in இன்றைய செய்திகள்
0 0
11
Home இன்றைய செய்திகள்

அண்மையில் வட மாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்ட ரெலோ புளொட், ஈபீஆர்எல்எவ் உறுப்பினர்கள் முள்ளிவாய்க்காலில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமைச்சுப் பதவி தெரிவு குறித்து ரெலோ புளொட், ஈபீஆர்எல்எவ் கட்சிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பதவிப் பிரமாண நிகழ்வுகளில் ரெலோ புளொட், ஈபீஆர்எல்எவ் உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது லட்சக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படும் முள்ளிவாய்க்காலில் ரெலோ புளொட், ஈபீஆர்எல்எவ் உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளத் தீர்மானித்துள்ளனர்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
முன்னை நாள் போராளிகளைக் குற்றவாளிகளாக்கி சமூகத்திலிருந்து அன்னியப்படுத்தும் விக்னேஸ்வரன்

முன்னை நாள் போராளிகளைக் குற்றவாளிகளாக்கி சமூகத்திலிருந்து அன்னியப்படுத்தும் விக்னேஸ்வரன்

Comments 11

  1. இவன் says:
    12 years ago

    டேய் பன்னாடைகளே(ரெலோ புளொட், ஈபீஆரெலெவ்) புலிகள் உங்களை கலைச்சு கலைச்சு சுட்டாங்கள் என்று சொல்லேக்க எனக்கும் அனுதாபம் இருந்த உண்மைதான். ஆனால் இப்ப முள்ளிவாய்க்கால் நாடகம் போடு ம் பச்சோந்திகளே நீங்கள் எப்பிடி தப்பினீங்கள் என்டு இப்ப விளங்குது.

    • Dr ArunnVincent says:
      12 years ago

      Sivajilingam wants to become a minister? What pity to the Tamils! These guys have  no basic common sense, no shame and what they all know is how to fool the people.

  2. venu says:
    12 years ago

    அமைச்சு பதவிக்காகவும் முள்ளிவாய்க்காலுக்கு செல்லும் முன்னாள் இராணுவ ஒட்டுக்குழுக்கள்

    தமக்கு அமைச்சு பதவிகள் தரவில்லை என்பதற்காக யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த சத்திய பிரமாண வைபவத்தில் கலந்து கொள்ளாத முன்னாள் இராணுவ ஒட்டுக்குழுக்கள் முள்ளிவாய்க்காலில் சத்திய பிரமாணம் செய்து கொள்ள உள்ளனர்.

    ரெலோ இயக்கம் யாழ்ப்பாணத்தில் நடந்த சத்தியபிரமாண வைபவத்தை புறக்கணிக்கவில்லை. அதன் தலைவரும் ஏனையவர்களும் அதில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் ரெலோ இயக்கத்தை சேர்ந்த மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தனக்கு மாகாண அமைச்சு பதவி தரவில்லை என கோரி இந்த சத்திய பிரமாண வைபவத்தை புறக்கணித்திருந்தார்.

    ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கமும் சுரேஷ் பிரேமச்சந்திரனின் தம்பிக்கு அமைச்சர் பதவி தரவில்லை என சத்திய பிரமாண வைபவத்தை புறக்கணித்திருந்தது. சித்தார்த்தனுக்கு அமைச்சு பதவி வழங்கவில்லை என புளொட் இயக்கம் இந்த சத்திய பிரமாண வைபவத்தை புறக்கணித்திருந்தது.

    புளொட் இயக்கம் முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடியும் வரை விடுதலைப்புலிகளுக்கு எதிராக இராணுவத்தினருடன் சேர்ந்து தாக்குதல்களை நடத்தி வந்தனர். இப்போதும் சிறிலங்கா இராணுவத்தினருடனான உறவை முறித்து கொள்ளவில்லை. சிறிலங்கா இராணுவ ஒட்டுக்குழுவாக இயங்கி வருகிறது.

    ரெலோவும் 2000ஆம் ஆண்டுவரை சிறிலங்கா இராணுவ ஒட்டுக்குழுவாக இயங்கி வந்ததுடன் விடுதலைப்புலிகள் மீது தாக்குல்களை நடத்தி வந்தது. ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கமும் அதே போன்று 2000ஆம் ஆண்டு வரை சிறிலங்கா இராணுவ ஒட்டுக்குழுவாக இயக்கி வந்தது.

    இவர்கள் எதிர்வரும் 14ம் திகதி திங்கட்கிழமை முள்ளிவாய்க்காலில் சத்தியப்பரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக எம்.கே.சிவாஜிங்கம் தெரிவித்தார்.

    ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தை சேர்ந்த ஐந்து உறுப்பினர்களும் புளொட்டைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்களும் ரெலோவைச் சேரந்‌த சிவாஜிலிங்கமும் வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்கவில்லை.
    இந்நிலையில் முன்னாள் இராணுவ ஒட்டுக்குழுக்களை சேர்ந்த எட்டு பேரும் முள்ளிவாய்க்காலில் சத்தியப் பிரமாணம் மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர்.

    முள்ளிவாய்க்காலில் வைத்து சிறிலங்கா அரசியல் யாப்பை கட்டி காப்போம் என்றும் சிறிலங்கா அரசியல்யாப்பிற்கும் அரசாங்கத்திற்கும் விசுவாசமாக செயற்படுவோம் என்றும் பிரிவினையை ஒரு போதும் கோர மாட்டோம் என்றும் சத்தியபிரமாணம் செய்ய உள்ளனர்.
    http://www.thinakkathir.com/?p=53092

    • Alex Eravi says:
      12 years ago

      முள்ளிவாய்க்காலில் சத்தியப் பிரமாணம்…???
      I think a wrong decision…!!!

  3. C.Senthilan says:
    12 years ago

    These are people who are power-hungry.  They are not interested in the well-being of Tamils.  They cannot fool Tamils by this gimmicks!  

  4. sakivara says:
    12 years ago

    “கலைச்சு கலைச்சு சுட்டாங்கள் என்று சொல்லேக்க எனக்கும் அனுதாபம் இருந்த உண்மைதான். ஆனால் இப்ப முள்ளிவாய்க்கால் நாடகம் போடு ம் பச்சோந்திகளே நீங்கள் எப்பிடி தப்பினீங்கள் என்டு இப்ப விளங்குது.”

    இயக்க உறுப்பினர்களின் படுகொலைகள் பிரபாகரனின் அரசியல். அதன் பரிணாமத்தை விளங்கிக் கொள்ள எல்லோராலும் முடியாது. படுகொலைகளை நியாயப்படுத்த தொடங்கினால் மீட்ச்சியே இல்லை. சுதந்திர மனிதர்களாக வாழ நினைக்கும் தகுதியும் இல்லை. எதை எதனுடன் கலந்தால் என்ன வரும் என்பதை விஞ்ஞானத்தில் சொல்லலாம். எந்தச் செயல் என்ன விளைவை தரும் என சமூகத்தில் கணிப்பிட்டு சொல்ல முடியாது. இயக்கங்களை அழித்தார்கள். கடைசியில் என்ன நடந்தது?

  5. இவன் says:
    12 years ago

    “இயக்கங்களை அழித்தார்கள். கடைசியில் என்ன நடந்தது?”
    மிஞ்சி இருந்தவர்கள் அமைச்சு பதவிக்காக காட்டிக் கொடுக்கிறார்கள். 

    “இயக்க உறுப்பினர்களின் படுகொலைகள் பிரபாகரனின் அரசியல்.”
    ஆயுதம் தூக்கிய எல்லோருமே படுகொலை அரசியலை ஏற்றுக்கொணடவர்களே. கொலையில் எல்லாம் புனிதமான கொலை புனிதமற்ற கொலை என்று இல்லை. 

    “எதை எதனுடன் கலந்தால் என்ன வரும் என்பதை விஞ்ஞானத்தில் சொல்லலாம்.”
    தக்கன பிழைக்கும் அல்லன மடியும். டாவினின் விஞ்ஞானம். தங்களையே காப்பாற்ற முடியாதவை அழிந்து போகும். இதுதான் நடந்தது.கொலை அரசியலை தொப்வு செய்தவர்கள் அதில் தான் போட்டி போட வேண்டும். (தயவு செய்து டாவினின் கூர்ப்பு கொள்கையை பார்க்க.)

    இப்பொழுது ஜனநாயக நீரோட்டத்தில் போட்டி போடுகிறார்கள். Let see…….

  6. allaipiddy mathi says:
    12 years ago

    எப்போதும் தமிழ் தேசிய கூட்டமைப்புத்தன் எங்கழ் சொந்தம்.உங்கட தேர்தல் வெட்ரியே கூட்டமைப்பு போட்ட பிச்சதான்டா!

  7. Kumar says:
    12 years ago

    எத்தனை வேறுபாடுகள்,முரண்பாடுகள் இருந்தாலும் சத்தியப்பிரமாண வைபவத்தில் கலந்துகொள்ளாதது மிகவும் கண்டிக்கத்தக்கதும் கவலைக்குரியதுமாகும்.
    சிவாயிலிங்கம் போன்றவா்களை அமைச்சா்களாக நியமிப்பதை விட்டு புதியவா்களை இளைஞா்களை புகுத்துவதே மிகச்சிறந்தது.இயக்கங்கள் என்று நாம் கூறிக்கொள்வது எதை????? அங்கு இயக்கங்களின் பெயா்களைத்தவிர அவைகளின் பின்னால் எதுவுமே இல்லை சொல்லப்போனால் ஆயுதப்பயிற்சி எடுத்தவா்கள்கூட அங்கில்லை சும்மா பெயரை வைத்து பித்தலாட்டம் காட்டுகின்றார்கள்.

    படுமோசமான விடயம் இங்கே சா்வசாதாரணமாக பேசப்படுகின்றது அதாவது சகோதரப்படுகொலைகளை இங்கே பொறுப்புணா்ச்சியற்ற பூசணிக்காய் தலைகள் நியாயப்படுத்தி எழுதுவதை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது அந்தக்கொலைகளே இன்று இந்த நிலைமைக்கெல்லாம் காரணம் என்பதை யாரும் மறக்கக்கூடாது.

    • இவன் says:
      12 years ago

      கொலைகளை தங்கள் அரசியல் நெறியாக ஏற்றுக்கொண்ட ஒரு சமூகத்தில் இளைஞர்கள் எவ்வாறு திறமையாக கொலை செய்வது என்பது பற்றி பயிற்சி பெறுகிறார்கள். அவர்களுக்கு எதிரிகள் என்ற சொல்லப்படுபவர்களை கொலை செய்யும் அதிகாரமும்  வழங்கப்படுகிறது அல்லது எடுத்துக்கொள்கிறார்கள்.

      அவர்கள் தங்கள் எதிரிகளை கொன்றார்கள். முதல்ல எதிரிகள் யார் யார கொன்றார்கள்.துரையப்பா பஸ்தியாம் பிள்ளை எண்டு பச்சை தமிழர்கள். சொந்த சகோதரர்கள் .அப்ப அந்த 17 வயசு பொடியான கூப்பிட்டு இஞ்ச வாடாப்பா இந்த கொலையல் வேண்டாம் என்று பொலிசில குடுக்கலையே.

      எதிரிகள் சகோதரர் என்றால் மன்னிக்க வேண்டும் என்றும் பிறத்தியார் என்றால் கொன்று விட வேண்டும் என்றும் தொடங்கவில்லையே.

      படுகொலைகளை( எங்கட ஆக்கள் மட்டும் கொல்லப்பட்டால்)கண்டிக்கும் யாவரும் தமிழர்களின் வன்முறை போராட்டம் தவறு என்றும் மனித பண்புகளுக்கு அப்பாற்பட்டதென்றும்  உறுதியாக சொல்லி விட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். 

      ஒரு மனிதாபிமானியாக எல்லா உயிரையும் நேசிப்பவன்  கொலை அரசியலை விரும்பவும் மாட்டான். துப்பாக்கி தூக்கவும் மாட்டான். 

      அடுத்து புலிகள் சகோதர படுகொலைகளை செய்தார்கள் என்பதற்காக ரெலோ புளொடி ஈபீஆரெலெவ் ஒன்றும் உத்தமர்கள் அல்ல. அவர்களும் தங்கள் பங்குக்கு செய்தார்கள். இவர்கள்  புலிகளை கொன்றதைவிட அப்பாவிகளை கொன்றதே அதிகம்.  

      எப்படியும் இந்த சண்டை நடந்திருக்கும் .ஒரு இயக்கமும் இருந்திருக்காது. புலிகள் இந்த சகோதர சண்டையில் முந்திகொண்டார்கள் அவ்வளவே. .

       இப்ப பாக்கிறம்லே நாடகத்த பிறகென்ன.  தமிழன்டா……………..

  8. sakivara says:
    12 years ago

    சகோதரப் படுகொலையை ஆரம்பித்து வைத்தவரே பிரபாகரன்தான். தானே எதிரிகளை உருவாக்கி விட்டு போராட்டத்தை சின்னாபின்னமாக்கினார். போராடும் சக்திகளிடையே குற்றங்கள் தவறுகள் நிகழும் போது அதை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல துப்பில்லை. மிகச் சுலபமாக சுட்டு கொன்று விட்டால் பிரச்சனை முடியும் என கணக்கு போட்டார். அவரின் அறிவு அவ்வளவு தான் வேலை செய்தது. தக்கன பிழைக்கும் அல்லன மடியும். டாவினின் விஞ்ஞானம். தங்களையே காப்பாற்ற முடியாதவை அழிந்து போகும். மாற்று இயக்கங்களை அழிக்கும் போது பிரபாகரன் தக்கனவாய் இருந்தார். ஆனால் அவரும் அழிந்து போனரே. அவரை அழித்த பேரினவாதிகள் இப்போது தக்கனவரா? அவர்களுக்கு அழிவில்லையா? தக்கன என்பது என்ன? அதிகாரத்தையும் ஆளணிகளையும் வைத்திருந்து மிலேச்சத்தனம் பண்ணுபவர்களா? இந்த உலகில் பலவீனர்கள் வாழத் தகுதியற்றவர்களா?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In