Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

ராஜபக்ச ஆதரவாளர்களை எதிர்கொள்ளலும் முன்னோக்கி நகர்தலும் : சபா நாவலன்

இனியொரு... by இனியொரு...
07/13/2011
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
34
Home பிரதான பதிவுகள் | Principle posts

தமிழ்ப் பேசும் மக்கள் இலங்கையில் வாழ முடியாத சூழலில் அங்கிருந்து வேற்று நாடுகளை நோக்கித் தஞ்சமடைகின்றனர். இலங்கை அரச பாசிசத்திற்கு எதிரான போராட்டம் ஏகத் தலைமை என்ற பெயரில் பன்முகத் தன்மையின்றி அழிந்து போன பின்னர், இலங்கை அரசின் வெளிப்படையான இனச் சுத்திகரிப்பிற்கு முகம்கொடுக்க முடியாமல் அங்கிருந்து வெளியேற வசதி கொண்வர்கள் வெளியேறுகின்றனர். பலர் இலங்கை அரச பாசிசத்தின் கோரப் பசிக்கு இரையாகின்றனர்.

வெளியேற இயலாமை காரணமாக அங்குள்ள மக்கள் தம்மாலான வழிகளில் போராடுகிறார்கள். திருகோணமலையில், மட்டு நகரில், கிளிநொச்சியில், யாழ்ப்பாணத்தில் என்று அனைத்துப் பிரதேசங்களும் இராணுவச் சிறைச்சாலைகள் போன்று மாற்றப்பட்ட நிலையிலும் அங்கு மக்கள் தமது வாழ்விற்காக, பேரினவாத ஆக்கிரமிப்பிற்கு எதிராகப் போராடுகின்றனர்.

இடது சாரியம் பேசிய சிறு குழுக்கள் ஈறாக அனைத்து விடுதலை இயக்கங்களும் மக்களை அணிதிரட்டுவதற்கும், அதன் அடிப்படையிலிருந்து போராடுவதற்குமான வேலைத் திட்டம் ஒன்றை முன்வைக்கவில்லை. ஏனைய இயக்கங்கள் புலிகளால் துவம்சம் செய்யப்பட்டு ஏகத்தலைமை என்ற தலையங்கத்தில் போராட்டம் இராணுவமயப்படுத்தப்பட்டது. பலமிழந்து, உதிரிகளாக ஆக்கப்பட்ட மக்கள் இதனால் போராடும் வலுவை இழந்தனர்.

காஷ்மீர் உரிமைப் போரையும், நாகாலாந்து விடுதலை முழக்கத்தையும், பழங்குடி மக்களின் வாழ்வாதரப் போரையும் அழிப்பதற்காக அங்கு மக்கள் இன்னும் போராடுகிறார்கள். வடக்கிலும் கிழக்கிலும் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினரின் தொகைக்கு அதிகமாகவே காஷ்மீரில் இந்திய இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கே மக்கள் தெருவில் இறங்கிப் போராடுகிறார்கள் என்றால், அங்கெல்லாம் மக்கள் ஒருங்கிணையும் அமைப்புக்கள் அழிக்கப்படவில்லை என்பது பிரதான காரணம்.

மக்களை ஏதாவது வழியில் அமைப்பாக்கவும், அவர்களின் போராட்டங்களை ஒருங்கிணைக்கவும் சந்தர்ப்பவாத, பாராளுமன்ற வாத அரசியல் தலைமைகள் எதுவும் தயாராகவில்லை. பாசிச சூழலில் மக்களை ஒருங்கிணைப்பதும், அமைப்பாக்குவதும் அவர்களின் போராட்டத்தை ஊக்குவிப்பதும் குறித்த வேலைத் திட்டங்கள் யாரிடமும் இல்லை. அவற்றை முன்னெடுக்க அரசியல் தலைமைகள் தயாரில்லை. ஒரு புறத்தில் இனப்படுகொலை அரசோடு இணைந்து மக்களை விலைபேசும் அரச துணைக்குழுக்கள், மறுபுறத்தில் இலங்கை அரசையும் இந்திய அரசையும் நம்பியிருக்கும் பாராளுமன்ற வாக்கு வியாபாரிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு; இந்த இரண்டுக்கும் அப்பால் புதிய தலைமையை உருவாக்குவது எவ்வாறு? மக்களை அணிதிரட்டுவது எவ்வாறு?? சிங்கள மக்களின் காத்திரமான பங்கு இவற்றில் எவ்வாறு அமையலாம்???

இவற்றிற்குக் குறைந்த பட்ச விடை காணப்படுமானால் அழிவுகளை மட்டுப்படுத்தலாம்.

இதற்கு விடை காண முற்படும் போதெல்லாம், பேரினவாத அரசின் நண்பர்கள் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ செயற்பட ஆரம்பித்துவிடுகிறார்கள்.

-கொல்லப்படுவதிலிருந்து மக்கள் அஞ்சியோடும் போதெல்லாம் அங்கே அபிவிருத்தி செய்கின்றோம் என்றோ, கே,பியும் டக்ளசும் பார்த்துக்கொள்வார்கள் என்றோ அரச ஆதரவாளர்கள் கூச்சலிடுகிறார்கள். அரசைத் திட்ட வேண்டாம் என்று குரூரமான நகைச்சுவையோடு கொக்கரிக்கிறார்கள்.

-எங்காவது மூலையிலிருந்து எதிர்ப்புக்குரல் எழும்போதெல்லாம் புலிகள் தான் அனைத்திற்கும் காரணம் என்று பேரினவாத அரசைப் பலப்படுத்தும் குழுவாதிகள் செயற்படுகிறார்கள்.

-இலங்கை அரசிற்கு எதிரான குரல்கள் சிங்கள மக்கள் மத்தியிலிருந்தும், முஸ்லீம்கள் மற்றும் மலையக மக்கள் மத்தியிலிருந்து எழும் போதெல்லாம் தமிழ் இனவாதிகள் அவற்றை நிராகரித்து மகிந்த அரசைப் பலப்படுத்துகின்றனர்.

-ஏனைய போராட்ட அமைப்புக்களும் ஜனநாயக முற்போக்கு சக்திகளும் மக்கள் மத்தியிலும் போராட்ட உணர்வையும், இனப்படுகொலைக்கு எதிரான நேர்மையான அரசியல் போராட்டங்களை முன்னெடுக்கும் போது அவற்றைப் புறக்கணிக்கின்றனர்.

உலகளாவிய அளவில் பரந்திருக்கும் தமிழ் இனவாதிகளின் ஆபத்தான மறுபக்கம் மாறுதலுக்க்கு உள்ளாக்கப்படுவதும், இலங்கை அரச ஆதரவுக் குழுக்கள் எதிர்கொள்ளப்பட வேண்டியதும் இன்றைய சமூக உணர்வுள்ள அனைவரதும் கடமை.

சிங்கள மக்கள் மத்தியிலிருந்து எழுகின்ற வாழ்வாதரத்திற்கான அனைத்துப் போராடங்களையும் ஊக்குவிப்பதும், ஆதரிப்பதும் பாசிச அரசை பலவீனப்படுத்தும் பிரதான வேலை முறைகளில் ஒன்று. மூன்று நூற்றாண்டுகளாக அடிமைகளாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட மலையக மக்கள் குறித்த உலகளாவிய ஜனநாயக முற்போக்கு சக்திகள் மத்தியிலான பிரச்சாரங்களும் அவர்களின் போராட்டங்களை ஆதரிப்பதும் மற்றொரு தார்மிக்கக் கடமை. தவிர, முஸ்லீம் மக்கள் மீதான அரச வன்முறைக்கு எதிரான பிரச்சாரங்களை முன்னெடுப்பதும் அவர்களின் எதிர்ப்புக்குரலை நியாயபூர்வமாக ஆதரிப்பதும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இலங்கை உற்பத்தியைப் புறக்கணித்தல், விளையாட்டு மைதானத்தில் புலிக் கொடியோடு ஓடுதல் போன்ற எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் அதிகமாக இலங்கைக்கு உள்ளிருந்து எழும் போராட்டங்களை உணர்வு பூர்வமாக ஆதரிப்பதும், அவற்றில் பங்களிப்பதும், ஊக்குவிப்பதும், இலங்கை அரசிற்கு எதிரான பெரும்பான்மையையும் அப் பெரும்பான்மை முன்னெடுக்கும் போராட்டங்களையும் வளர்ச்சியடையச் செய்யும்.

இனவாத அரசியலை முன்வைக்கும் வியாபாரிகளைச் சார்ந்த அளவில் சிங்கள் மக்களை தமிழ் மக்களின் எதிரிகளாக்குவதும், முஸ்லீம்களைத் துரோகிகளாக்குவதும், மலையக மக்களை அடிமைகளாக்குவதும் தமது இருப்பை உறுதிப்படுத்தப் பயன்படும். ஆனால் ராஜபக்ச அரசைப் பலவீனப்படுதப் பயன்படாது. இவர்கள் ஒரு வகையில் மகிந்த ராஜபக்ச பேரினவாத அரசைப் பலமடையச் செய்யும் செயற்பாட்டை மேற்கொள்கின்றனர்.

தமிழ் இனவாதிகளின் இலங்கை அரசு சார் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக சமூக உணர்வுமிக்க அரசியல் பொதுதளம் ஒன்று உருவாக வேண்டும். அத் தளத்தில் புதிய அரசியலின் பிரதான பகுதியாக இலன்கைப் பாசிச அரசைப் பலப்படுத்தும் அனைத்து நாவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறான செயற் திடங்களை நோக்கிய இணைவும் அதற்கான நகர்வும் அனைத்து மக்கள் பற்றுள்ளவர்களாலும் முன்னெடுக்கப்படுமானால், இலங்கையில் அழிவுகளை குறைந்த பட்சம் மட்டுப்படுத்தவும், குறைந்தபட்ச ஜனநாயக சூழலை ஏற்படுத்தவும் ஏதுவாக அமையும். பாசிச சூழலில் மக்களை ஒருங்கிணைப்பதற்கான ஆரம்பப் புள்ளியாக இவை அமையலாம்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

இலங்கைக்கு இந்தியக் குழுக்கள் - ஒரு நாடகம் நடக்குது! : திப்பு

Comments 34

  1. யோகராசா says:
    15 years ago

    தமிழினத்தின் குரல் வளையை நெரிக்க முனைந்து இறுதியில் சிங்கள இனத்தின் குரல் வளையை நெரித்த பின்னரே நிறுத்தப் போகிறார்கள். தமிழ்மொழி பேசுவதை தடுக்க நினைத்து இறுதியில் எல்லோரும் சீன மொழி பேச வேண்டிய நிலை உருவாகலாம். தமிழினத்தை போரில் வென்றதாக கொண்டாடுவோர் தாம் தினமும் அடிமைத்தளையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதை உணராதிருக்கிறார்கள். இலங்கையில் தமிழும் சிங்களமும் பேசப்பட வேண்டும். அது தவறின் சிங்களமும் பேசப்பட முடியாது போகலாம்.

    • செவ்வியன் says:
      15 years ago

      சிங்களப்பௌத்தப்பேரினவாத மூடர்களுக்கு சீனவல்லாதிக்கம் எங்கே புரியப்போகிறது?தேசியத்தலைவரை சிங்களரே ஏற்கும் கலம் விரைவில் வரப்போகிறது.அன்று இராசபக்சேவை சிங்களரே விரட்டியடிப்பர்.இது நிகழாது போனால் திபெத் கதைதான் இலங்கையிலும் நடக்கும்

  2. நிர்மலன் says:
    15 years ago

    //வடக்கிலும் கிழக்கிலும் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினரின் தொகைக்கு அதிகமாகவே காஷ்மீரில் இந்திய இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கே மக்கள் தெருவில் இறங்கிப் போராடுகிறார்கள் என்றால் அங்கெல்லாம் மக்கள் ஒருங்கிணையும் அமைப்புக்கள் அழிக்கப்படவில்லை என்பது பிரதான காரணம்//
    இங்கு இந்திய இராணுவ குவிப்பு என்பது தனியே காஷ்மீர் போராட்டத்திற்கெதிரானது மட்டுமல்ல என்றும் மோதல் வெடிக்கலாம் எனும் பாகிஸ்தானின் எல்லை கோட்டு பதட்டமும் காரணமே. ஆனால் தமிழர் தாயகத்திலுள்ள சிறிலங்கா அரசபயங்கரவாத படைகுவிப்பென்பது தமிழர்களை மாத்திரம் குறிவைத்தது. தமிழருக்கு பின்னால் எந்த நாட்டின் தார்மீக ஆதரவுமில்லை. பதிலாக மேற்குலகு- சீனா ரசியா. இந்தியா-பாகிஸ்தான். மற்றும் அனைத்து முஸ்லீம்நாடுகளின் ஆதரவுடன் சிறிலங்கா தனிப்பெரும் சக்தி.
    காஷ்மீர் போராட்டம் தனிய காஷ்மீரமக்களால் முன்னெடுக்கப்படவில்லை. பாகிஸ்தானின் நேரடி பின்புல ஆதரவும் அனைத்து முஸ்லீம்நாடுகளின் ஆதரவுடன். இறுக்கமான இஸ்லாமிய மதஅடிப்படைவாத இயல்பும்.காஷ்மீர் மாநிலஅரசு மற்றும் 16 கோடி இந்தியவாழ் முஸ்லீம்கள் இன்னமும் காஷ்மீர் உரிமைப் போரை தாங்கி நிற்கிறது. இவ்வளவும் இருந்தும் காஷ்மீர் விடுதலைபெற முடியாது தவிப்பது இந்திய இராணுவ குவிப்பு.
    மறுதலையாக போராட்டத்தை இந்தியாவால் முற்றாக ஒடுக்க முடியாதிருப்பது. மேற்குலகும் ஐநாவும் காஷ்மீர் விடயத்தில் இந்தியாவின்பக்கமில்லை. இந்நிலையில் ஒரு காஷ்மீரி கொல்லப்பட்டாலும் உலகெங்கும் கண்டனமெழும் எனும் நிலை. இந்தியாவை அடக்கி வாசிக்க நிர்பந்தித்துள்ளது. அதைவிட ஆப்கானிஸ்தானின் அமைதியின்மையே இன்றுவரை இந்தியாவின் பிடி காஷ்மீரத்திலிருக்க காரணம். என்று மேற்குலக படை ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுகிறதோ. இஸ்லாமிய மதஅடிப்படைவாதம் முழு பாகிஸ்தானை மட்டுமல்ல இந்தியகாஷ்மீரத்தையும் ஆக்கிரமிக்கும். ஆப்கானிஸ்தானின் அமைதியின்மையில் இன்றுவரை குளிர்காய்ந்த இந்தியா நாளை காஷ்மீரை இழப்பது உறுதி. அது காஷ்மீரிய மக்கள் போராட்டத்திடமல்ல. இஸ்லாமிய மதஅடிப்படைவாதத்திடம்.
    //நாகாலாந்து விடுதலை முழக்கத்தையும் பழங்குடி மக்களின் வாழ்வாதரப் போரையும் அழிப்பதற்காக அங்கு மக்கள் இன்னும் போராடுகிறார்கள். //
    இன்னமும் அங்கு முழுமையான இந்திய இராணுவ தலையீடு ஏற்படவில்லை மாறாக மத்திய மாநில காவல்துறையே நடவடிக்கையிலுள்ளது. பங்களாதேஸ் சீனா நேபாள் ஆதரவும் போராட்டகாரர்களிற்குண்டு.
    வடகிழக்கு மாநிலங்கள் மிசோராம் நாகலாந்து அருணச்சலபிரதேசமென பரவலாக இந்திய எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெறுவதாலும் இந்திய அரசு அடக்கி வாசிக்க நிர்பந்திக்கப்படுகிறது.
    ஈழத்தமிழர் போராடும் போது உதவி செய்யாது விட்டாலும் பாரவாயில்லை சிறிலங்கா முஸ்லீம்கள் சிங்களத்துடன் சேர்ந்து தமிழின அழிப்பையல்லவா செய்தனர் செய்கின்றனர்.
    //சிங்கள மக்கள் மத்தியிலிருந்து எழுகின்ற வாழ்வாதரத்திற்கான அனைத்துப் போராடங்களையும் ஊக்குவிப்பதும் ஆதரிப்பதும் பாசிச அரசை பலவீனப்படுத்தும் பிரதான வேலை முறைகளில் ஒன்று. மூன்று நூற்றாண்டுகளாக அடிமைகளாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட மலையக மக்கள் குறித்த உலகளாவிய ஜனநாயக முற்போக்கு சக்திகள் மத்தியிலான பிரச்சாரங்களும் அவர்களின் போராட்டங்களை ஆதரிப்பதும் மற்றொரு தார்மிக்கக் கடமை. தவிர முஸ்லீம் மக்கள் மீதான அரச வன்முறைக்கு எதிரான பிரச்சாரங்களை முன்னெடுப்பதும் அவர்களின் எதிர்ப்புக்குரலை நியாயபூர்வமாக ஆதரிப்பதும் மேற்கொள்ளப்பட வேண்டும்//
    சிங்களவருக்கு என்ன பிரச்சினையிருந்தாலும் தமிழர்களை அழிப்பதில் அவர்கள் ஒன்றுதான் ஐதேக சுதந்திரக்கட்சி ஜேவிபி கொம்முனிஸ்ட்டுக்கள் ஜாதிககெலஉறுமய …. என எதுவானாலும். சிங்கள மகாவம்ச போதனையால் மூளைச்சலவைக்குள்ளனவர்கள் சிங்களவர்.அண்மைகாலங்களில் ஜேவிபியையும் கொம்முனிஸ்ட்டுக்களையும் பார்த்தோமல்லவா! இனியென்ன புதிதாக பார்க்கவிருக்கு!
    மலையக மக்கள் ஏற்கனவே மலையக அரசியல் கட்சிகளாலும் தொழிற்சங்கங்களாலும் கூறுபோட்டு சிங்களத்திற்கு விற்கப்பட்டுவிட்டனர். அவர்களால் தொடர் போராட்டத்தை கூட்டாக முன்னெடுக்கும் வலுவற்றவர்கள். அதற்கு அவர்களது பொருளாதார நிலையும் காரணம்.
    என்ன! சிறிலங்கா முஸ்லீம் மக்கள் மீதான அரச வன்முறையா? ஏனையா இல்லாத ஒன்றை இருப்பதாக புனைகிறீர்கள்.99.99வீதமுஸ்லீம் அரசுடன் நகம் சதையுமாக இருக்கிறார்கள். அவர்களிற்கு தேவையானாது சலுகை மட்டுமே! தமது உரிமைகளை மட்டுமல்லது மற்ற இனங்களின் உரிமைகளையும் விற்று அபரிமித சலுகையுடன் உல்லாசமாக வாழ்பவர்களிற்கு போராட்டம் ஏன் தேவை வெள்ளி பிற்பகல் பொழுது போக்கு ஊர்வலம் செய்வார்கள் அதுவும் மேற்குலகு அல்லுது தமிழருக்கெதிராக. இன்றுதான் (வழமைக்குமாறாக புதன் பிற்பகல்) மகிந்தாவை ஆதரித்து சம்மாந்துறையில் ஊர்வலம் செய்கிறார்கள். சேர்ந்து நாமும் ஊர்வலம் போவோமா!
    எமது உரிமைக்கு நாமே போராட வேண்டும். அது இப்போ தாயகத்தில் சாத்தியமில்லை. வேண்டாத புலிக்கொடியெதிர்ப்பை கைவிட்டிட்டு எனியாவது புலம்பெயர் தேசங்களில் ஈழத்தமிழருடன் கைகோருங்கள்.

  3. Vasikaran says:
    15 years ago

    நிர்மலன்,
    அண்மையில் இலங்கை கிரிக்கட் அணியின் முன்னை நாள் தலைவர் இங்கிலாந்து வந்த போது, ராஜபக்ச அரசிற்கு எதிராக நேர்காணல் ஒன்றை வழங்கினார். இதைப் வெளிப்படுத்திய தமிழ் ஊடகங்களைக் கண்டித்து இனவாதப் தமிழ் இனவாத ஊடகங்களும் இனவாதிகளும் கைத்தொலை பேசிக் குறுஞ்செய்திகளை அனுப்பும் அளவிற்குப் பதை பதைத்துப் போனார்கள். தமது இனவாத வியாபாரம் எங்கே அழிக்கப்பட்டுவிடுமோ என பயந்தே போனார்கள்.
    இதே போலத்தான் சுதந்திர வர்த்தக வலையத் தொழிலாளர்கள் தாக்கப்பட்ட போதும் தமிழ் அமைப்புக்கள் அதனை ராஜபக்சவிற்கு எதிராகப் பயன்படுத்தக் கூட முன்வரவில்லை.
    தமிழ் இனவாத வியாபாரிகளைப் பொறுத்த வரை மேற்கும் இந்தியாவும் சொல்வது போல கஷ்மீர் மக்களின் போராட்டத்தை பாக்கிஸ்தானின் போராட்டமாக கொச்சைப்படுத்துகிறார்கள்
    பாகிஸ்தான் சார்ந்த சிறு குழுக்களும் அங்கே காணப்படுவது உண்மை. ஆனால் மக்கள் கற்களை எறிந்து கூடப் போராடுகிறார்கள். அமரிக்காவும் சட்டலைட் படங்களை வழங்குவதிலிருந்து அத்தனை உதவிகளையும் கஷ்மீர் தீவிரவாதிகளுக்கு எதிராக வழ்ங்குகிரது. பிரித்தானிய படை ஹுயுமினிட் உதவிகளை வழங்குகிறது.
    முள்ளிவாய்க்காலில் மொத்தப் போராட்டத்தையும் அழித்துவிட்டு இன்னும் போராடுகிறோம் என்று மார்தடிக்கொள்ளும் பச்சை வியாபாரிகள் இவர்கள். ராஜபக்ச அளவிற்கு பயங்ரமான மாபியாக்கள். இலங்கை அரசு எல்லம் இந்தக் கூட்டத்தின் பிரச்சனையே இல்லை. அவர்களது பிழைப்புத் தான் பிரச்சனையே. அதற்காக என்ன பொய்களையும் கூறுவார்கள்.
    இனவாதிகளுக்கு அவர்களது பிழைப்புக் கெட்டுவிடும் என்ற பயத்தில் இந்தியாவிற்கும் அமரிக்காவிற்கும் எதிராகப் பேசுவது கூடக் கிடையாது. ராஜபக்ச அரசைப் பலவீனப்படுத்துவது இவர்களது நோக்கம் கிடையாது. மக்கள் அழிவில் தான் இவர்கள் தமது வியாபார சாம்ராஜ்யத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள். கோவில் பிசினசிலிருந்து மாவீரர் பிசினஸ் வரை.. இதற்காக ஒரு மாபியாக் கூட்டமே இயங்குகிறது. ஆபத்தானவர்கள்.
    மேலே பாருங்கள் நிர்மலன் என்ற இனவாதியின் அப்பட்டமான பொய்யை. அதுவும் தகவல் தொழில்னுட்பம் வளர்ச்சியடைந்த இந்தக் காலத்தில்!
    ராஜபக்சவை எல்லாவழிகளிலும் பலப்படுத்தி ஒரு லட்சம் மக்கள் வரை அழிக்கத் துணை போன இந்த இனவாதிகள் சிங்கள முஸ்லீம் மக்கள் மத்தியிலிருந்தும் போராட்டங்கள் வருகிறது என்றால் பதைபதைத்துப் போவதைப் பாருங்கள். முஸ்லீம் மக்களோ, சிங்கள மக்களோ, மலையக மக்களோ போராடினால் அய்யோ அவர்களைச் சேர்த்துக்கொள்ளாதீர்கள் என்று பதைத்துப் போகிறார்கள். அவர்களுக்கு ராஜபக்ச பலவீனமடைந்துவிடுவார் என்று அவ்வளவு பயம்.
    தமிழ் மக்களின் போராட்டத்திற்கு முன்பே ஆரம்பித்து பல்வேறு கட்டங்களூடாகச் மிகப்பெரும் அரசியல் இராணுவ ஒடுக்குமுறைக்கு ஊடாகச் செல்லும் நாகா மக்களின் போராட்டத்தைக் கூட இப்படிக் கொச்ச்சைபடுத்தும் இனவாதிகள் மத்தியில் நிர்மலன் ஒரு குறியீடு மட்டும் தான்.
    -நிர்மலன் என்ற இனவாதியின் அப்படமான இன்னொரு பொய்:
    //
    மலையக மக்கள் ஏற்கனவே மலையக அரசியல் கட்சிகளாலும் தொழிற்சங்கங்களாலும் கூறுபோட்டு சிங்களத்திற்கு விற்கப்பட்டுவிட்டனர். அவர்களால் தொடர் போராட்டத்தை கூட்டாக முன்னெடுக்கும் வலுவற்றவர்கள். அதற்கு அவர்களது பொருளாதார நிலையும் காரணம்.
    என்ன! சிறிலங்கா முஸ்லீம் மக்கள் மீதான அரச வன்முறையா? ஏனையா இல்லாத ஒன்றை இருப்பதாக புனைகிறீர்கள்.99.99வீதமுஸ்லீம் அரசுடன் நகம் சதையுமாக இருக்கிறார்கள்.//
    இலங்கையில் இருக்கும் முஸ்லீம்களில் 60 வீதமானவர்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்பவர்கள். அவர்களில் 40 வீதமானவர்கள் வாக்களிப்பதில்லை. இன்னமும் உலகம் தெரியாமல் அரசால் அடக்கி வைக்கப்பட்டுள்ளார்கள். தவிர இங்கு எழுதிய தமிழ் இனவாதியைப் போலவே முஸ்லீம்களிலும் இனவாதிகள் உள்ளார்கள். அவர்களும் இந்த இனவாதியைப் போலவே ராஜபக்ச அரசிற்கும் மேற்கிற்கும் இந்தியாவிற்கும் எதிராக தமிழர்கள் போராடுவதில்லை அவர்கள் முஸ்லீம்களின் எதிரிகள் எனச் திருட்டுப் பிரச்சாரம் செய்கிறார்கள். இதனால் பிளவை ஏற்படுத்தி ராஜபக்ச அரசைப் பலப்படுத்துகிறார்கள். நிர்மலன் போன்ற தமிழ் இனவாதிகளும், சிங்கள இனவாதிகளும், முஸ்லீம் இனவாதிகளும் தான் மகிந்தவின் பெரிய பலம். இவற்றை உடைப்பதே இலங்கை அரசைப் பலவீனப்படுத்தும். ஆனால் ராஜபக்ச ஆதரவு மாபியாக்களின் வன்முறையையும் எதிர்கொள்ள வேண்டும்.

  4. நிர்மலன் says:
    15 years ago

    மகிந்தாவுடன் பிரச்சினைப்படும் சரத்பொன்சேகாவாக ரணிலாக இருக்கட்டும் வேறு பிரபலமானவர்களாக இருக்கட்டும் தமது சுயநலம் சார்ந்தே முரண்படுகிறார்கள். பேரினவாத நிலைப்பாட்டில் யாரவது குறைந்தவர்களா! ரணிலும் சிங்களபேரினவாதத்தை பாதுகாக்கத்தான் பான்கீன் மூனை சந்திக்கிறார். சிறையில் இருந்து கொண்டும் தமிழர் அதிகாரம் கோரக்கூடாது எனத்தான் எச்சரிக்கிறார். இவர்களிற்கு வக்காலத்து வாங்க சொல்கிறீர்கள்.
    மகிந்தாவிற்கு பிரித்தானியா உளவுச்சேவைக்கு அம்ஸாவும் அவனது கூட்டமிருக்கும்பொது தமிழர்கள் மகிந்தாவிற்கு செய்தி அனுப்பினர்களா ! கேபி ஈபி எல்லாம் தமிழர் கணக்காக.!
    சிங்களவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால்தான் ஒருவரின் இறப்பிற்கே பொலிஸ்மா அதிபர் பதவி விலகல் பொலிசார் நீதிமன்றில் நிறுத்தம். இதுவே தமிழர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டால் ஆயிரம் பேரை சுட்டுக்கொல்வார்கள். கொலைகார படையினருக்கு பதவியுவர்வு கிடைக்கும். தமிழன் அழிந்தது போதும். நன்றி கெட்ட சிங்களவருக்கும் முஸ்லீம்களிற்காக போராடி இன்னமும் அழியெனும் என ரொம்பத்தான் ஆசைப்படுகிறீர்கள். என்ன முஸ்லீம் ஸரியா சட்டத்தை இலங்கையில் அமுல்படுத்தச் சொல்லி தமிழர்களை போராடும்படி கேட்கிறீர்களா! காத்தான் குடியில் இணையம்பார்த்த முஸ்லீம்பெண்களை அடித்துதைக்கவும் தமிழ்சிறுமியை அடிமைபெண்ணாக 50 ஆயிரம் ரூபாவிற்கு வாங்கவும் ஸரியா சட்டம் தேவைப்படுகுதா!
    கல்லெறியாது ஒரு முஸ்லீம்போராட்டமா? அது காஸ்மீரா காத்தான்குடியா காபூலா காஸாவா கல்லெறிதான்.
    இந்தியா ஆக்கிரமிப்பு காஸ்மீர் ஆக இருந்தலென்ன பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஸ்மீர் ஆக இருந்தலென்ன காஸ்மீர் காஸ்மீரிகளிற்கே சொந்தம். இந்தியா ஆக்கிரமிப்பு மட்டுமல்ல பாகிஸ்தான் ஆக்கிரமிப்பும் அகற்றப்பட வேண்டும். அதைவிடுத்து காஸ்மீர் முஸ்லீம் அடிப்படைவாதிகளிடம் சிக்குவது காஸ்மீரின் விடுதலையல்ல.
    ஆமா இந்தியாவிடம் உளவுச்செயற்கோள் வசதிகள் இருக்கும் போது அமெரிக்கா செய்திமதிபடம் கொடுத்ததென சொல்வது எவ்வளவு புரட்டுத்தனம்!பாகிஸ்தானிற்கும் காஸ்மீர் போராட்ட அமைப்புக்களிற்கும் தொடர்பில்லையென தாங்கள் பொய்சொல்வதால் அது உண்மையாகி விடாது.
    என்ன சிறிலங்கா முஸ்லீம் மக்கள் மத்தியிலிருந்தும் போராட்டங்கள் வருகிறதா! ஐயோ அது என்ன போராட்டமென சொல்லுங்கள்! சிறிலங்கா முஸ்லீம்களிற்கு தெரிந்தது உரிமையை விற்று சிங்களத்திடம் சலுகை பெறுவதுதான் இதிலெங்கே போராட்டமிருக்கு?
    மலையகமக்களும் சிங்களவரும் ஊதிய உயர்விற்காவது போராடடுகிறார்கள். சிறிலங்கா முஸ்லீம்கள்! காட்டிக்கொடுப்பதற்குத்தான் முண்டியடிக்கிறார்கள்.
    //இலங்கையில் இருக்கும் முஸ்லீம்களில் 60 வீதமானவர்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்பவர்கள்//
    ஒருதனுக்கு 7 பெண்டாட்டிகள் அதற்கு 60 பிள்ளைகளென இருந்தால் வறுமை வரும்தானே! காட்டிகொடுப்பவர்களிற்கும் பஞ்சமா? என்ன வீட்டீற்கு 7 பென்ஸ்கார் 10 வேலையாட்களில்லையெனும் பஞ்சமாயிருக்கும்.
    //அவர்களில் 40 வீதமானவர்கள் வாக்களிப்பதில்லை//
    2010 ஜனாதிபதி தேர்தல்களில் முஸ்லீம்பிரதேசங்களில் அழிக்கப்பட்ட வாக்குவீதம்.
    சம்மாந்துறை- 68.33 கல்முனை- 66.58 அம்பாறை.- 74.67 பொத்துவில்- 66.67 மூதூர்-65.47. தகவல்மூலம் சிறிலங்கா தேர்தல் திணைக்களம்.
    முஸ்லீம் 19 எம்பிக்கள் அதில் 1-மூத்தஅமைச்சர் 3-காபினெட்அமைச்சர். 2-துணைஅமைச்சர். இவையெல்லாம் யாராலாம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்? உண்மை இப்படியிருக்க “இலங்கையில் இருக்கும் முஸ்லீம்களில் 60 வீதமானவர்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்பவர்கள். அவர்களில் 40 வீதமானவர்கள் வாக்களிப்பதில்லை”என இந்த படுபொய் சொல்பவர் வசீகரனெனும் தமிழ் அடையாளத்திலிருக்கும் ஒரு சிறிலங்கா முஸ்லீம் அடிப்படைவாதி என்பது நிட்சயம்.
    // இன்னமும் உலகம் தெரியாமல் அரசால் அடக்கி வைக்கப்பட்டுள்ளார்கள்.//
    யாரால்!சிறிலங்கா முஸ்லீம் அடிப்படைவாதிகளால். இது ஒன்றும் உலகிலுள்ள முஸ்லீம் சமுதாயத்திற்கு புதிதல்லவே! மொகமதுநபியின் புனித இறைகட்டளை அதுதானே!

  5. kokulan says:
    15 years ago

    விடுதலை உணர்வு என்பது அடிப்படையில் மானிட நேசிப்பில் இருந்தே உருவாகின்றது ஒரு சுதந்திரப் போராளி அல்லது விடுதலையை நேசிக்கின்ற சமூகம் ஆதிக்க சக்தியையும் அடக்குதலுக்கு உள்ளாக்கபடுவோரையும் அடக்குமுறை வடிவங்களையும் மெய்யுணர்ந்து கொள்ளல் மிக முக்கியமானது உண்மையில் சிங்கள மக்கள் மற்றும் இலங்கைத் தமிழர் ஆகியோர்களின் அதிகார பீடங்களால் மற்றும் மக்களின் புரையோடிப்போன தன்னினச்சார்பு நிலைப்பாட்டால் ஏனைய சிறுபான்மை இனமக்கள் பெரிதும் பின்தங்கி போனமை முக்கியமானது. இது தமிழ் மற்றும் சிங்கள தேசிய இனமுரண்பாடுகளுக்கு முன்பிருந்தே இடம்பெற்று வந்த வருகின்ற ஒன்று.

    இலங்கைப் பேரினவாத அரசாங்கங்கள் சிறுபான்மை சமூகங்களுக்கு இடையிலான பிளவுகளை உருவாக்கியது அல்லது சிறுபான்மைச் சமூகங்கள் ஏற்படுத்த முனைந்த பிளவுகளைப் பயன்படுத்திக் கொண்டது உதாரணமாக யாழ்பாணத்தில் இருந்து முஸ்லிம் சகோதர இனமக்களை வெளியேற்றியது வரலாற்றுத் தவறு என்று விடுதலைப்புலிகள் ஒப்புக்கொண்டிருந்த போதும் இலங்கை அரசாங்கம் யாழ்பாணத்தைக் கைப்பற்றி பதினாறு வருடமான பின்பும் புத்தளத்தில் இடம்பெயர்ந்திருக்கும் முஸ்லிம்களின்
    குடி அமர்த்த நடவடிக்கை எடுக்காதது ஏன்? சிறுபான்மை இனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வை பெரும்பான்மை இன அரசியலின் இருப்புக்கான அச்சுறுத்தலாகவே அது பார்கின்றது. அடக்கப்படுகின்ற ஓர் இனம் ஏனைய இனங்கள் தொடர்பான முற்சாய்வான கருத்துக்களை கொண்டிருப்பது மிக மிக ஆபத்தானது இது பேரினவாதத்துக்கு மிகவும் சாதகமானதும் கூட முஸ்லிம் மக்கள் தொடர்பில் வடபுலத்து தமிழ் மக்களுக்கும் கிழக்குவாழ் மக்களுக்கும் இடையிலான அபிப்பிராயம் வித்தியாசமானது இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்த போதும் புவி சார் இடைத்தொடர்பு முக்கியமானது. மட்டக்களப்பு மாவட்டத்தின் புவியியல் சார் இனப்பரம்பல் உண்மையில் அழகானது ஒரு தமிழ் கிராமம் ஒரு முஸ்லிம் கிராமம் ஒரு தமிழ் ……. இப்படி அம்மக்கள் மிகவும் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். அரசாங்கம் ஒட்டுக்குழுக்களின் உதவியால் இதனைக் குழப்ப முயற்சிக்கின்றமை அண்மைக்காலங்களாக நடந்துவருகின்றது.
    தன்னுடைய பண்பாட்டின் இருப்பை பற்றி சிந்திப்பவன் ஒருபோதும் ஏனைய பண்பாட்டை கொச்சைப் படுத்தமட்டான். நிர்மலன் என்பவர் இத்தகைய கருது நிலை கொண்டவர்களின் குறிகாட்டி இவர்களைப் போன்றவர்கள் புலம்பெயர் அரசியலையும் தாயக அரசியலையும் தலைமை தங்குவதால் முடிச்சுகள் அதிகரிக்குமே தவிர சிக்கல்கள் தீரப்போவதில்லை.

  6. நிர்மலன் says:
    15 years ago

    //உண்மையில் சிங்கள மக்கள் மற்றும் இலங்கைத் தமிழர் ஆகியோர்களின் அதிகார பீடங்களால் மற்றும் மக்களின் புரையோடிப்போன தன்னினச்சார்பு நிலைப்பாட்டால் ஏனைய சிறுபான்மை இனமக்கள் பெரிதும் பின்தங்கி போனமை முக்கியமானது. இது தமிழ் மற்றும் சிங்கள தேசிய இனமுரண்பாடுகளுக்கு முன்பிருந்தே இடம்பெற்று வந்த வருகின்ற ஒன்று.//
    இலங்கையில் இருந்தது மிகச்சிறிய வேடுவ சமுதாயமும் தமிழ் சிங்கள தேசீய இனங்கள் மட்டுமே முஸ்லீம் இனமொன்று ஒருபோதும் இருக்கவில்லை. அவர்கள் தமிழர்களில் ஒரு மதம் சார்ந்த ஒரு சமுதாயம் மட்டுமே. டொனமூர் அரசியல் யாப்புடன் தம்மை ஒரு கற்பனையினமாக வலிந்து ஆக்கி கொண்டனர். அந்த செயலுக்கு நன்றியாக சிங்கள பேரின வாதத்துடன் சேர்ந்து தாய் தமிழினத்தை அழிக்கிறார்கள். சிங்களம் “எள்” என்பதற்கிடையில் “எண்ணெய்யாக” முஸ்லீம்கள் தமிழின அழிப்பை தொடர்கிறார்கள்.
    தமிழரிடையே இருந்தது இந்துசமூகம் சார்ந்த சாதீய ஒடுக்கு முறை. இதற்கு பலியானாது வதைப்பட்டது வதைபட்டுக் கொண்டிருப்பது தமிழ்மக்கள். அரசியல் சார்ந்த அதிகாரம் ஜீஜீ யிடம் இந்தியநலன்பேண் ஈபிஆர்எல்எப் குறுகிய காலமிருந்தது. ஆனால் சிறிலங்கா முஸ்லீம்களிடம் எப்பவும் அரசியல் அதிகாரமிருந்தது. எந்த சிங்கள கட்சி ஆளும் பதவிக்கு வந்தாலும் அங்கு முஸ்லீம்கள் நிட்சயம் இருப்பார்கள்.டொனமூர் அரசியல்யாப்பு. மலையகமக்களின் குடியுரிமைபறிப்பு . பண்டாவின் சிங்களம் மட்டும் சட்டம் சிறிலங்கா குடியரசு அரசியல்யாப்பு இன்றைய அவசரகாலச்சட்டம் வரை. முஸ்லீம்கள் சிறிலங்கா அரசபயங்கரவாத அடக்கு முறையின் பங்காளார். உண்மைநிலை இப்படியிருக்க தமிழர்கள் சிறிலங்கா முஸ்லீம்களை எப்படி அடக்க முடியும்??? நீங்கள் சிறிலங்கா முஸ்லீம்களிற்கு முதுகு சொறிவது உங்கள் உரிமை. அதற்காக அழிந்து போன தமிழரில் கொத்தி குதறி உங்கள் சிறிலங்கா முஸ்லீம் விசுவாசம் காட்டினால் அதை தமிழர் வேடிக்கை பார்க்கணுமா!
    //இலங்கைப் பேரினவாத அரசாங்கங்கள் சிறுபான்மை சமூகங்களுக்கு இடையிலான பிளவுகளை உருவாக்கியது அல்லது சிறுபான்மைச் சமூகங்கள் ஏற்படுத்த முனைந்த பிளவுகளைப் பயன்படுத்திக் கொண்டது உதாரணமாக யாழ்பாணத்தில் இருந்து முஸ்லிம் சகோதர இனமக்களை வெளியேற்றியது வரலாற்றுத் தவறு என்று விடுதலைப்புலிகள் ஒப்புக்கொண்டிருந்த போதும் இலங்கை அரசாங்கம் யாழ்பாணத்தைக் கைப்பற்றி பதினாறு வருடமான பின்பும் புத்தளத்தில் இடம்பெயர்ந்திருக்கும் முஸ்லிம்களின்//
    ஆமா சிறிலங்கா முஸ்லீம்கள் ஒன்னும் தெரியாத பாப்பா பாருங்கள்! சிறிலங்கா முஸ்லீம்கள் தமிழரிலிருந்து தம்மை தனியினமாக ஆக்கினார்கள். ஒவ்வோரு ஆளும் அரசிலும் அமைச்சராக இருந்து கொண்டு சிங்கள பேரினவாத நலன் சார்ந்த எல்லாச் சட்டங்களிங்கு ஆதரவளித்தனர். சிறிலங்காபடையில் முஸ்லீம் அமைச்சர்கள் பள்ளிவாசல்கள் வழிகாட்டலுடன் அங்கம் வகித்து கிழக்கில் கொடூர தமிழின அழிப்பையும் கிராமங்கள் ஆக்கிரமிப்பு செய்தனர்.சிறிலங்கா படையில் புலானாய்வாளர்களாக நிறைந்துள்ளனர். இவையெல்லாம் சிறிலங்கா முஸ்லீம்கள் விரும்பி செய்தவைதானே! புலிகள் தமிழரிலிருந்த இந்திய/ சிறிலங்கா புலானாய்வாளார்களின் குடும்பங்களை எப்படி வெளியேற்றினார்களோ அதைதான் வடபகுதி முஸ்லீம்கள் விடயத்திலும் செய்தனர். ஆக இது ஒரு இனவாத நடவடிக்கையல்ல!யாழ் சிங்களபடைகளின் கட்டுப்பாட்டில் வந்தபின்னர் எந்த முஸ்லீம் அமைச்சரோ அமைப்போ யாழ் முஸ்லீம்களை மீள்குடியேற்றம் செய்ய கேட்டனரா?
    புலிகள் வடபகுதி முஸ்லீம் வெளியேற்றத்திற்கு “வரலாற்றுத் தவறு என்று ஒப்புக்கொண்டிருந்தனர்” இருந்தும் அவர்கள் கோசலுனுக்கு விரோதி. இன்றுவரை யாராவது ஒரு சிறிலங்கா முஸ்லீம் பிரதிநிதி தம்மினம் மலையக தமிழர்களிற்கு ஈழத்தமிழருக்கு செய்த பல தசசாப்த துரோகத்திற்கு மன்னிப்புக் கேட்டானா? இல்லையே! இந்நிலையிலும் கோசலனுக்கு சிறிலங்கா முஸ்லீம் உற்ற நண்பர்கள். அப்ப கோசலன் யார்?
    //முஸ்லிம் மக்கள் தொடர்பில் வடபுலத்து தமிழ் மக்களுக்கும் கிழக்குவாழ் மக்களுக்கும் இடையிலான அபிப்பிராயம் வித்தியாசமானது//
    ஆமா.ஈபி கருணா பிள்ளையானில்லை கிழக்கு தமிழர். வாய்திறக்க முடியாது மனதில் குமுறிக்கொண்டிருக்கும் கிழக்கு தமிழர் உங்கள் நண்பர் வட்டத்தில் இல்லை. இருக்கவும் முடியாது.
    //இப்படி அம்மக்கள் மிகவும் ஒற்றுமையாக வாழ்கிறார்கள்//
    லங்காபுவத் செய்தி கேட்கும் உணர்வு ஏற்படுகிறது.1977ல் தனிநாடு கோரிக்கையுடன் தமிழர்கள் ஒன்றினைந்த போது அதை எதிர்ததே 95 சதவீதத்திற்கு மேற்பட்ட வடகிழக்கு முஸ்லீம்கள் வாக்களித்தனர் என்பது தேர்தல் திணைக்கள முடிவுகளில் மிகத்தெளிவாக தெரிகிறது. வடகிழக்கு தமிழர்தாயக இணைப்பை முஸ்லீம்கள் முழுமையாக எதிர்க்கிறார்கள். உண்மை இவ்வளவு அப்பட்டமான பின்னரும் “ஒரு தமிழ் கிராமம் ஒரு முஸ்லிம் கிராமம் ஒரு தமிழ் ……. இப்படி அம்மக்கள் மிகவும் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். அரசாங்கம் ஒட்டுக்குழுக்களின் உதவியால் இதனைக் குழப்ப முயற்சிக்கின்றமை …” என்பது எவ்வளவு ஏமாற்றுத்தனமான தகவல். இதற்குபிறகும் முஸ்லீம்களிற்குவெள்ளையடிக்க “அரசாங்கம்” “ஒட்டுக்குழு” “தமிழர்தரப்பு” என பழியை போடுவது எந்தவகை நியாயம்!
    //நிர்மலன் என்பவர் இத்தகைய கருது நிலை கொண்டவர்களின் குறிகாட்டி இவர்களைப் போன்றவர்கள் புலம்பெயர் அரசியலையும் தாயக அரசியலையும் தலைமை தங்குவதால் முடிச்சுகள் அதிகரிக்குமே தவிர சிக்கல்கள் தீரப்போவதில்லை.//
    கலகம் வந்தால்தான் நியாயம் பிறக்கும். சிறிலங்கா முஸ்லீம்கள் செய்த தமிழின விரோத நடவடிக்கைகளை அவர்களிற்கு தெளிவாக உறைக்கும் படி சொல்லணும். அவர்களிற்கு மனச்சாட்சி என்று ஒன்றிருந்தால் அதற்காக மனம் வருந்தனும் இனியும் தமிழின அழிப்பிற்கு சிங்களத்துடன் கூட்டுசேராதிருக்கணும். இல்லையேல் எம்மிடமிருந்து முழுமையாக பிரிந்து போய்விடணும். கூடவிருந்து குழிபறித்தது போதும். அதைவிடுத்து முஸ்லீம்கள் செய்த தமிழின விரோத நடவடிக்கைகளை நியாயப்படுத்தி முஸ்லீம்களால் மோசமாக பாதிக்கப்பட்ட தமிழர் மீது அபாண்ட பழி சுமத்துவது.சிறிலங்கா முஸ்லீம்களின் நாசகார செயலை தட்டிக்கொடுத்து ஊக்குவிக்கும் செயல் இது தமிழின விரோதம். நான் செய்வது வலிமிகுந்த புண்ணை அற்ககோலிட்டு சுத்தப்படுத்துவது முடியாவிட்டால் சத்திரசிகிச்சை மூலம் அகற்றி விடுவது. கோசலனின் முயற்சி புண்ணுக்கு புனுகு பூசி நாற்றத்தை தவிர்பது மட்டுமே புண்பெருப்பதுடன் மிகுந்த வலி தமிழருக்கு அதனால் ஏற்படுவது பற்றி கிஞ்சித்தும் கோசலனுக்கு கவலையில்லை!

  7. யோகராசா says:
    15 years ago

    நிர்மலன், நீங்கள் தமிழின அழிப்பால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள். அனேகமான தமிழர்களை போல் அல்லது அதைவிட கூடுதலாக. அதனால் ஏற்பட்ட ஆழ்ந்த வேதனை உங்களை இப்படி சிந்திக்கத் தூண்டுகிறது. முஸ்லிம் மக்களில் பெரும்பகுதியினர் மதம் மாறிய இலங்கைத் தமிழர்கள்தான். இன்று சிங்களப் பெரும்பான்மை என்று சொல்கின்ற மக்களில் ஒரு பகுதியினர் மதம், மொழி மாறிய தமிழர்கள் போன்று. அன்று இனம் சத்தமின்றி அழிக்கப்பட்ட காலம். முஸ்லிம் மக்கள் எமது துயரத்தைப் பகிர்ந்து கொள்ளவில்லை என்பதால் அவர்களை வெறுப்பது தவறான கருத்து. அவர்கள் சிறுபான்மைத் தமிழினத்தினர்தான். சிங்கள மக்கள் எமக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை என்பதற்காக அல்லது இனப்படுகொலையை ஆதரித்தார்கள் என்பதற்காக அவர்கள் மேல் தீவிர வெறுப்புக் கொள்வது தவறாயின் முஸ்லிம் மக்களை வெறுப்பதும் தவறுதான். எமது இனம் விடுதலையடையும். ஆழமாக நம்புங்கள். அவ்வாறு இல்லாது நாம் அழிந்து போனாலும் சரியான வழியில் நின்று போராடி அழிந்து போன இனம் என்று எழுதப்படட்டும். இன்று சிங்களப் பெரும்பான்மை இனம் சுமக்கும், தமிழினப்படுகொலையை செய்த இனம் என்ற வரலாற்றுப்பழியை, இனி என்ன செய்தும் கழுவ முடியாத சாபக்கேட்டை நாம் சுமக்க வேண்டாம்.

    • நிர்மலன் says:
      15 years ago

      //நீங்கள் தமிழின அழிப்பால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள்.//

      நான் தமிழின அழிப்பால் பாதிக்கப்டதென்பது மற்றைய தமிழர்களுடன் ஒப்பிடும் போது மிகமிக குறைந்தளவே! எனது இளவயதில் இந்தியப்படையின் கொலை வெறியாட்டத்தில் அம்மாவை இழந்தேன். சிங்களபடையிடம் எனது பூர்வீக கிராம மண்ணையிழந்தேன். அவலமான இடப்பெயர்வையும் அவமதிப்புக்குள்ளானான அகதி வாழ்வையும் பெற்றேன். மறுதலையாக அகதியாக ஐரோப்பா வந்து வசதியானா வாழ்கை பெற்றேன். எனவே எனது கோபம்/ உணர்வு எனக்கு ஏற்பட்ட இழப்பால் மாத்திரமல்ல. எனெனில் சிறிலங்கா முஸ்லீமால் எனக்கு ஏற்பட்ட இழப்பு பூச்சியம். இந்த யதார்த்தை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.
      “முஸ்லிம் மக்களில் பெரும்பகுதியினர் மதம் மாறிய இலங்கைத் தமிழர்கள்தான் என்ற உண்மையை சிறிலங்கா முஸ்லிம் ஏற்கிறார்களா! தாமொரு தனி இனமென்று அல்லவா சொல்கிறார் நடக்கிறார்கள். முஸ்லீம்களிடம் ஈழத்தமிழினாக எதிர்பார்ப்பது உறவும் உதவியும் வேண்டாம் கூடவிருந்து குழிபறிக்கவும் வேண்டாம்.
      //முஸ்லிம் மக்கள் எமது துயரத்தைப் பகிர்ந்து கொள்ளவில்லை என்பதால் அவர்களை வெறுப்பது தவறான கருத்து.//
      மன்னிக்கணும். நானொரு போதும் முஸ்லிம் மக்கள் எமது துயரத்தைப் பகிர்ந்து கொள்ளனுமென்று எதிர்பார்க்கவில்லை. தமிழருக்கு சிங்களத்தால் இழைக்கப்பட்ட அத்தனை கொடுமைகளிலும் முஸ்லிம்களில் மிகமிக பெரும்பாலானவர்களின் பங்கிருக்கு. அதை நான் எனது கருத்தில் சுட்டிக்காட்டியுள்ளேன். “டொனமூர் அரசியல்யாப்பு. மலையகமக்களின் குடியுரிமைபறிப்பு . பண்டாவின் சிங்களம் மட்டும் சட்டம் சிறிலங்கா குடியரசு அரசியல்யாப்பு இன்றைய அவசரகாலச்சட்டம் வரை. முஸ்லீம்கள் சிறிலங்கா அரசபயங்கரவாத அடக்கு முறையின் பங்காளார்.”
      //சிங்கள மக்கள் எமக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை என்பதற்காக அல்லது இனப்படுகொலையை ஆதரித்தார்கள் என்பதற்காக அவர்கள் மேல் தீவிர வெறுப்புக் கொள்வது தவறாயின் //
      சிங்கள இனம் செய்தது செய்து கொண்டிருப்பது மிகமிக மோசமான தவறுகள். அவர்களை எனது முதன்மை எதிரியாகவே பார்க்கிறேன். சிங்கள பயங்கரவாதத்தின் பங்குதாரார்கள் யாரோ! அவர்களெல்லாம் தமிழின எதிரிகள்தான் அது டக்ளஸ்கும்பலாக ஆக இருந்தால் என்ன! முஸ்லீம்களாக இருந்தாலென்ன! எல்லாம் ஒன்றுதான். எல்லோருக்கும் ஓரே நியாயம்தான்.
      ஈழத்தமிழினம் முஸ்லீம்களிற்கு திட்டமிட்டு எந்த அநியாயமும் செய்யவில்லை அதனால் ஈழத்தமிழருக்கு எந்த பழியுமில்லை.
      எனியும் இந்த கூடவிருந்து குழிபறிக்கும் சிறிலங்கா முஸ்லீம்களை நம்பி அழியவேண்டாம். அழிந்தது பட்டது போதும்போதுமென போதும்

      • யோகராசா says:
        15 years ago

        நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பெரும் இழப்பைச் சந்தித்திருக்கிறீர்கள். அந்தக்காயம் ஆறாதது தான். எந்த இனத்திலும் அப்பாவி மக்கள் தான் பெரும்பான்மையினர். ஒரு சிலர் செய்யும் தவறிற்கு அந்த இனத்தை வெறுப்பது என்ன நியாயம் என்பதுதான் எனது கேள்வி. சிங்கள அரசியல்வாதிகள் வளர்த்த இனவாதம்தான் தமிழர்களின் மேல் சிங்கள அரசு செய்த பலியெடுப்பை மிகச்சர்வசாதாரணமாக கருதச்செய்துள்ளது. அதாவது மிருகங்களை விட கேவலமானவர்களான நிலைக்கு தமிழர்களை கருதும் அளவிற்கு இனவாதத்தை ஊட்டித்தான் செய்தார்கள். இனத்தின் மேல் வெறுப்பை ஊட்டி வளர்த்தால் அது அழிவில் தான் கொண்டு சென்று முடிக்கும். சிங்கள பேரினவாத்தின் அழிவிற்கு அதன் பேரினவாதக்கொள்கை தான் காரணமாகப்போகிறதென்பதை இனி வருங்காலம் காட்டப்போகிறது. அந்த அழிவுப்பாதையா தமிழினத்தின் பாதையும். அதுதான் எனது கேள்வி.

  8. ரகு says:
    15 years ago

    மலையகத் தமிழர் எல்லாரும் ஆங்கிலேயரால் இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்டவேர்களே தவிர களவாக வள்ளங்களில் வந்தவர்கள் அல்ல. உண்மையில் இவர்கள் கள்ளத்தோணிகளும் அல்ல
    கடந்த எண்ணூறு ஆண்டுகளுக்கு மேலாக கலிங்க படையெடுப்பில் தொடங்கி இருநூறு வருடங்களுக்கு முன் புகையிலை பயிரிட்டு பஞ்சம் போக்கவென வந்தவர்கள் வரை வடஇலங்கைக்கு களவாக ஆயிரக்கணக்கானோர் வள்ளங்களில் தமிழ்நாட்டில் இருந்து வந்தனர்.பின்னர் நூறு வருடத்திற்கு முன்னர் இவர்களில் ஒரு பகுதியினர் பர்மா(மியான்மார்) சிங்கப்பூர் மலேசியா என்றெல்லாம் பணம் தேட வள்ளங்களில் போனார்கள்.
    அறுபது வருடங்களுக்கு முன் இவர்களில் பலர் மீண்டும் இலங்கைக்கு திரும்பி வந்தனர். கடந்த முப்பது வருடங்களாக மத்திய கிழக்கு இங்கிலாந்து அமெரிக்கா அவுஸ்திரேலியா கனடா பிரான்ஸ் ஜெர்மனி நோர்வே சுவிஸ் டென்மார்க் ஒல்லாந்து இந்தியா என்று பல நாடுகளுக்கு பொருள் தேடி குடும்பமாக குடி பெயர்ந்தனர்.
    திரை கடல் ஓடி திரவியம் தேடுவதில் நாங்கள் வல்லவர்கள். வள்ளமும் தோணியும் எங்கள் வம்சமெல்லாம் இன்று உலகமெலாம் பரவ மிக முக்கியமானவை.
    வெளி மாவட்டங்களில் யாழ் அகற்றி சங்கங்கள் அமைத்த முந்தி வந்த யாழ்ப்பாணி பிந்தி வந்த யாழ்ப்பாணியை யாழ்ப்பாணி என்பது போல முந்தி தோணியில் வந்தவன் பிந்தி தோணியில் வந்தவனை கள்ளத்தோணி என்றது தான் உண்மையான எங்கள் வரலாறு. இதனால் தான் சொத்து மீதும் பணத்தின் மீது நாம் கொண்ட பற்று சக மனிதர் மீதும் இருக்கும் நாட்டின் மீதும் எமக்கு கிடையாது.
    எங்கள் முன்னோர் போலவே நாமும் நாடோடியாக எப்படியாவது திரவியம் தேடுவதில் வல்லவர்கள். ஆனால் வாழ்க்கையை அனுபவிக்கதான் எமக்கெல்லாம் தெரியாது.
    நாங்கள் எப்படி எல்லாம் நாடுவிட்டு நாடு ஓடினோம் என்பதற்கு பிரித்தானிய புள்ளிவிபர ஆதாரங்களை பாருங்கள். 160 வருடங்களுக்கு முன் 1834கும் 1870கும் இடையில் அதாவது 36 வருடகாலத்தில் மதராஸ் பகுதியில் இருந்து மட்டும் 14 லட்சம் பேர் வடஇலங்கைக்கு குடிபெயர்ந்தனர். அதே காலப்பகுதியில் 8 லட்சம் பேர் வடஇலங்கையில் இருந்து மதராஸ் பகுதிக்கு குடிபெயர்ந்தனர். ஆகவே இந்த 36 வருடங்களில் மட்டும் 6 லட்சம் பேர் மேலதிகமாக வடஇலங்கையில் குடியேறி உள்ளனர். இதில் கேரளா, திருநெல்வேலி, ராமநாதபுர பகுதிகளில் இருந்து வந்தவர்கள் உள்ளடங்கவில்லை. அவர்களையும் சேர்த்தால் குடியேறியவர்களின் தொகை பத்து லட்சத்தையும் தாண்டி விடும் .
    150 வருடங்களுக்கு முன் தென் கிழக்காசியாவில் உள்ள சகல பிரித்தானிய துறைமுகங்களிலும் தமிழர்தான் வேலை செய்தனர். பீஜீ, கயானா, ஜாவா, கம்போடியா, மொரீசியஸ், தென் ஆபிரிக்கா என்றெல்லாம் 150 வருடத்திற்கு முன் திரவியம் தேடி போனவர்கள் எம் முன்னவர்கள். ஜப்பான்காரனுக்கு ஜப்பான் சொந்தம் ஜேர்மன்காரனுக்கு ஜேர்மன் சொந்தம் பிரெஞ்சுகாரனுக்கு பிரான்ஸ் சொந்தம் சீனாக்காரனுக்கு சீனா சொந்தம் கொரியர்களுக்கு கொரியா சொந்தம்எங்களுக்கோ இந்த பூமியே சொந்தம் யாதும் ஊரே யாதும் கேளீர்.
    வேலுப்பிள்ளை (SJV)செல்வநாயகம் மலேசியாவில் பிறந்த மலேசியபிரஜை. பின்னர் இலங்கையில் குடியேறியவர்.காங்கேசர் (GG)பொன்னம்பலம் அல்வாயில் பிறந்தாலும் 1956ஆண்டு மலேசியாவுக்கு குடிபெயர்ந்து அங்கு சட்ட தொழில் புரிந்து ரப்பர் தோட்டங்களை வாங்கி மலேசிய பிரஜை ஆனவர்.சிதம்பரத்தில் பிறந்து வளர்ந்த திருவேங்கடம் என்ற இந்திய மலையாளித் தமிழனின் பேரன்தான் வேலுப்பிள்ளை பிரபாகரன்.
    நாங்கள் எல்லாரும் பெரும்பாலும் நாடோடிகள் தான். அந்த நாடோடிகளின் திரவியம் தேடும் சிந்தனையின் விளைவே எங்களுக்குள் இருக்க கூடிய அடிமைப் புத்தி. பூர்வீகம் பூர்வீகமாக ஒரே இடத்தில் இருந்து வாழ்ந்தவர்கள் பிரச்சனைகளை விட்டு தப்பி ஓடுவதை விட்டு பிரச்சனைகளை தீர்க்க சிந்திப்பதில் ஆர்வம் காட்டுவார்கள். 

    பிரபாகனுக்கு ராஜபக்சே கொடுத்த அறுபது கோடி ரூபாய்களும் இருநூறு வள்ளங்களும் தான் பிரபாகரனுக்கு ராஜபக்சே போட்ட வாய்க்கரிசி
    ஈழவெறியில் வெள்ளி பார்த்து கொண்டிருந்த எங்களால் முள்ளி வாய்க்காலில் நாங்கள் எப்படியும் தன்னை காப்பாற்றுவோம் வெள்ளி பார்த்து கொண்டிருந்த வெற்று தலைவனையும் இழந்து ஈழத்தையும் இழந்து நிற்கிறோம்.இன வெறியில் வீதியில் நின்று கூச்சல் போட்டால் முள்ளி வாய்க்காலில் வெள்ளி பார்த்துக்கொண்டிருந்த தலைவனை வெளியில் கொண்டு வரலாம் என்று வெற்று தலையர் நாங்கள் நம்பினோம்.எங்களை இன்னமும் வெள்ளி பார்க்க விடுங்கோ உள்ளதுகளை உண்மைகளை ஒருக்காலும் சொல்லவேண்டாம். எங்களுக்கும் உள்ளதுகள் தெரிய வேண்
    நாங்கள் எல்லோரும் இலங்கைதீவில் இருக்கிறோம். இதில் எத்தனை பேர் இலங்கைதீவை நேசித்தோம்??? கட்சியின் போக்குகள் எப்படியிருந்தாலும் இரு பெரியகட்சிகளான ஐக்கியதேசிய கட்சியும் சிறீலங்கா சுகந்திரகட்சியும் தமது கட்சியின் பெயருக்கு முன்னால் தமது இனத்தின் பெயரை சேர்த்ததுண்டா?
    கடந்தகால அரசியல் தமிழ்தலைமைகள். இலங்கைதீவில் எமது இனத்தின் பெயரை நாம்வைத்துக் கொண்டு நாமே பிரிவினைக்கு வித்திட்டுகொண்டு உரிமை தா? என்றால் என்றால் என்ன அர்த்தம்???ஆயிரம் வருடம் வாழ்ந்த தமிழ்மூஸ்லீங்களை சிங்கள பகுதிக்கு விரட்டிவிட்ட அனுபவமமல்லவா பதிவாகியிருக்கிறது.நாளைக்கு தமிழ் சிறுபான்மைத் தமிழரையும் மலையகத்தமிழரையும் துரத்திவிடமாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?
    புலியையும் பிரபாகரனையும் காப்பதற்கு லட்சக்கணக்கில் ஊர்வலம்போன நீங்கள் மூஸ்லீம் மக்களுக்காகவோ சிலபத்து வருடங்களுக்காகவே சிதைந்துபோன வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிற முப்பதினாயிரம் மீனவக் குடும்பத்திற்காக மலையக மக்களின் பொருளாதார வாழ்வுவை உயர்த்துவதற்காக ஊர்வலமோ அல்லது ஒருகூட்டத்தை நடத்தியதுண்டா?
    நான் திருந்தமாட்டேன் நான் அயல்சமூகத்தை நேசிக்கமாட்டேன். இலங்கைத்தீவில் பக்தி கொண்டிருக்க மாட்டேன். தமிழருக்கு உரியதை தா என்று கேட்டால் இது இனத்தில் கொண்ட பற்றால் அல்ல
    வெள்ளிபார்த்த வெங்காயதலையனுடன் இருப்பதை விட வெடிகுண்டை கட்டி கொண்டு தற்கொலை செய்வது மேல் என்றுதான் பல உண்மையான விடுதலைப் புலிகள் வீரமரணம் அடைந்தார்கள்
    முள்ளிவாய்க்காலில் வெள்ளிபார்த்த வெங்காயத்தலையன்உள்ளைவிட்டு வெளியைவிட்டு அடிப்பான் என்றுஇனவெறியில் வெங்கிணாந்திகள் நாங்கள் நம்பியிருக்கஎங்கள் இரத்த உறவுகள் எல்லாம் அத்தனையும் இழந்துஇறந்தவர்களை கூட அரையும்குறையுமாக புதைக்க கூடவழியே இல்லாமல் இரக்கம் கெட்ட நரபலிநரியர்களின்இரத்தவேள்வி திருவிழாவில் இரத்த ஆற்றில் மூழ்கிஇன்று முகாம்களில் மூச்சு விட்டு கொண்டிருக்கையில்நாங்களோ தமிழீழக் கனவு கலைந்ததால்தூக்கம் கெட்டு அரை தூக்கத்தில் இருக்கிறோம்

    • நிர்மலன் says:
      15 years ago

      நீங்கள் எப்படியெல்லாம் வாழ்ந்தீர்களோ வாழ்கிறீர்களோ அப்படியெல்லாம் ஈழத்தமிழர் எல்லோரும் இருப்பார்கள் என்று “கழிவு கிளறும் காகத்தின் நினைப்பில்” சிங்கள அரசபயங்கரவாத சார்பு ஊடகத்தில் எடுத்த பழைய வாந்தியை ரகுவெனும் அடையாளத்தில் இங்கு தொடர்பற்ற விதத்தில் கொட்டியுள்ளீர்கள். கருத்து தெரிவிக்கும் கட்டுரையின் தலைப்பு “விடுதலை போராட்டம் மக்கள் மயப்படுத்தப்படுவது” பற்றி இருக்கும் போது. அதனுடன் தொடர்பற்ற விதத்தில் “மலையகத் தமிழர் எல்லாரும் ஆங்கிலேயரால் இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்டவேர்களே தவிர களவாக வள்ளங்களில் வந்தவர்கள் அல்ல. உண்மையில் இவர்கள் கள்ளத்தோணிகளும் அல்ல. ……. ” என தொடங்கி தமிழ்தேசீய அழிப்பு புலியெதிர்ப்பு பணியை தொடர்ந்து நீங்களொரு “தமிழின கோடாரிகாம்பு” என தங்கள் தகுதி நிலையை நிறுவியுள்ளீர்கள்.
      புளொட்டெனும் பெயரில் தொடங்கப்பட்ட தமிழ்தேசீய முறியடிப்பு அமைப்பில் உமாவிற்கு பக்ககலமாகவிருந்து. அந்த அமைப்பு ஒரு போராட்ட அமைப்பென நம்பிவந்த போராளிகளை படுகொலை செய்து மிகப்பெரும்பாலான இளைஞர்களை போராட்டத்திலிருந்து வெற்றிகரமாக அந்நியப்படுத்திய பின் தீப்பொறிக்குள் நுழைந்து. கிட்டுவிற்கு கிரனைட் எறிந்து அவர் தப்பிவிட்ட நிலையில் உயிருக்கு பயந்து சிறிலங்கா அரசபயங்கரவாதத்தின் கூலிப்பணத்தில் கனடாவிற்கு போலியகதியாக வந்து. தமிழ்தேசீயத்திற்கெதிரான நாசகார இணையங்களை இயக்கி அதில் கொட்டப்பட்ட பிரச்சாரவாந்திகளை மீள இங்கு ரகுவெனும் அடையாளத்தில் கொட்டுகிறீர். உங்கள் இணையத்தில் சேமிக்கப்பட்டுள்ள பழைய வாந்திகளை இங்கு தொடராக கொட்டபோகிறீர். யாராவது கேள்வி கேட்டால் உங்களிடமிருந்து பதில் வராது. நீங்களொரு பேடி என்பது ஏற்கனவே நிருபணமான விடயம். புளொட்டிற்குள் நிக்கரவெட்டிய வங்கி கொள்ளை நாயகர்களாக ஊடுருவி. புளொட்டினுள்ளும் புளொட்டுடன் மற்றைய அமைப்புக்கள் சந்திப்புக்களை நடத்தி பேசப்பட்ட விடயங்களை ஒலிப்பதிவு செய்து உடனுக்குடன் சிங்களத்திற்கு கொடுத்து அந்த கூலிப்பணத்தில் ஐரோப்பாவிற்கு போலியகதியாக வந்து இன்றும் தமிழ் தேசீய நாசகாரசக்தியாக இயங்குபவர்கள் பற்றியும் நாமறிவோம். கனடாவிலுள்ள நாசகாரசக்திகளும் இவர்களும் ஒரே சங்கிலி தொடர்பில் இயங்கிக் கொண்டிருப்பதற்கான ஆதாரமும் உண்டு. இவர்களுடன் இயங்கிய பிரபல புளொட்டு பிரமுகரும் . கிட்டிவிற்கு கிரனைட் வீசியவரும். இப்போ பழைய கூட்டாளிகளுடன் குழம்புப்பட்டு கிட்டுவிற்கு கிரனைட் வீசிய சம்பவத்தில் ஆளையால் போட்டுக் கொடுத்து அம்மாணகி நிற்பவரையும் தெரியும். ரகு என்பவர் இந்த வாந்தி பின்னூட்டத்தின் உரித்தாளரா! இல்லை பழைய சகாக்களா என்பதை நிட்சயப்படுத்த முடியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம். கிட்டுவிற்கு கிரனைட் எறிந்தவர்களே அம்பலப்பட்டுள்ள போது இது ஒரு தூசு.

    • thurai says:
      15 years ago

      //நான் திருந்தமாட்டேன் நான் அயல்சமூகத்தை நேசிக்கமாட்டேன். இலங்கைத்தீவில் பக்தி கொண்டிருக்க மாட்டேன். தமிழருக்கு உரியதை தா என்று கேட்டால் இது இனத்தில் கொண்ட பற்றால் அல்ல
      //ரகு

      இதனைவிடவேறுவிளக்கம் தேவையேயில்லை. இங்கு கருத்து தெரிவிப்போரில் அநேகர் தனிமனிதர்கள். எந்த அமைப்பையும் சேர்ந்தவ்ர்களல்ல.. ஏதாவது ஒரு அமைப்பின் மீது (அதுவும் புலம்பெயர்நாட்டில் தமிழரின் பெயரால் உள்ள அமைப்பின்மீது) நம்பிக்கை கொண்டவ்ர்கள் அங்கத்தவ்ர்கள் இங்கு கருத்து தெரிவித்தால் அவ்ர்கள் இன்னுமொரு முள்ளிவாய்க்காலிற்கு வழிகாட்ட ஆயத்தப்படுத்துகின்றார்களென்பதே அதன் அர்த்தம்.-துரை

      • செவ்வியன் says:
        15 years ago

        தொரை எத்தனை பெயரில்தான் எழுதுவீர்?

        • thurai says:
          15 years ago

          புலிகளின் கொலைகளின் பயத்திலிருந்து தப்பி வாழ்பவர்கள் மாறு பெயர்களில் எழுதிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். தாங்கள்
          புலிகள் என்று சொல்பவ்ர்க்ழும் ஏன் மாறு பெயர்களில் எழுதுகின்றார்கள்?. இவர்கள் புலியாகவும் மாறுவார்கள் புலி எதிர்ப்பாளராகவும் கதைப்பார்கள். போராடி மாண்டவர்களை புலிகளாக ஏற்கலாம்.மாறு பெயர்க்ளில்புலிகளை ஆதரிப்பவர்களை விட இலங்கை அரசினை ஆத்ரிக்கும் தமிழர்கள் மேலானவ்ர்களே.-துரை

  9. யோகராசா says:
    15 years ago

    ராஜபக்சவின் ஆதரவாளர்களை எதிர்கொள்வதும் முன்னோக்கி நகர்வதும்தான் கட்டுரையின் தலைப்பு. என்ன செய்வது, தன் இனத்தைக் கொச்சைப்படுத்தி இழிவுபடுத்துபவர்களை என்ன சொல்லி அழைப்பது. தமிழில் ஏதாவது சொற்பிரயோகம் உண்டா?

  10. thurai says:
    15 years ago

    பட்த்திற்கு ஒரு வில்லன் வேண்டும்,நாடகங்களிற்கு ஒரு வில்லி வேண்டும்.புலம்பெயர் தமிழரின் அரசியலிற்கு இப்போ ராசபக்ச வேண்டும்.
    ஊடகங்களையும் தமிழரின் தொலைக்காட்சிகளையும் கவனியுங்கள் உண்மை விளங்கும். எல்லாமே பிழைப்புக்குத்தாண்டா. -துரை

  11. நிர்மலன் says:
    15 years ago

    ஐயா யோகராசா! நான் திரும்பவும் உங்களிற்கு தெளிவாகவும் உறுதியாகவும் சொல்கிறேன் எனது தனிப்பட்ட இழப்பிற்கும். எனது அரசியல் நிலைபாட்டிற்கும் சம்பந்தமில்லை! ஒட்டுமொத்த தமிழருக்கு காலகாலமாக சிங்கள- முஸ்லீம்- போலிதமிழ் கொம்முனிச கூட்டினால் செய்யப்பட்ட அநியாயங்களின் உரிமை மறுப்புக்களின் தார்மீக கோபம்தான் எனது அரசியல் நிலைபாட்டை உறுதிப்படுத்தியுள்ளது.
    செல்வா பண்டாவிடம் ஈழத்தமிழருக்கு முஸ்லீம்களிற்கு மலையகத்தமிழருக்கு தனித் தனியான பிரதேச சுயாட்சி ஒப்பந்தம் போட்ட போது முஸ்லீம்கள் ஆதரவளிக்கவில்லையே! சிறிலங்கா பேரினவாதத்தின் ஒற்றையாட்சிக்குதானே ஆதரவு அளித்தனர் இப்பவும் ஆதவளிக்கின்றனர். அவர்கள் சிங்களத்திடம் உரிமையை விற்று சலுகையை பெறுவதில் ஆர்வமாக இருக்கும் போது அதையேன் கெடுக்கிறீர்கள்?
    இலங்கையில் நாடளமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பது மக்கள்தான். தமிழின ஒடுக்கு முறைச்சட்டங்கள் நாடளமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடனேயே நிறைவேற்றப் படுகிறது. எனவே இதற்கு ஆதளிவளித்த நாடளமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்த மக்களையும் பொறுப்பு சேர்கிறது. இந்நிலையில் அந்த பொறுப்பற்ற இனவெறி பிடித்த மக்களை “அப்பாவி” என வெள்ளையடிக்க வேண்டாம். ஏமாந்தது போதும்.
    ஐயா தமிழர்கள் தாம்பிரிந்து போகத்தான் கேட்கிறார்கள். சிங்களத்திடமிருந்து மட்டுமல்ல நயவஞ்சக முஸ்லீம்களிடமிருந்தும்தான். கிழக்கு வாழ் முஸ்லீம்கள் தாரளமாக தமக்கென தனியான பிரதேசத்தை அமைத்து தனித்திருந்தாலும் இல்லை சிங்களத்துடன் கூடிவாழ்ந்தாலும் அதை தமிழர் தடுக்கவோ மறுக்கவோ இல்லையே இந்நிலையில் எப்படி அது தமிழினவாதமாகும். அது பரந்த மனதுடைய தமிழரின் ஐனநாயக பண்பல்லவா!
    மறுதலையாக ஈழத்தமிழர் முஸ்லீம்களை சேர்த்து வாழ வெளிக்கிட்டால்! வடகிழக்கு தாயக இணைப்பை சிங்களத்துடன் சேர்ந்து முறியடிப்பர் அத்துடன் கிழக்கு முஸ்லீம் சிங்களத்துடன் சேர்ந்து கிழக்கு தமிழர்களை இன ஒடுக்குமுறையை/ அழிப்தை தொடர்வார்கள். அதை நீங்கள் விரும்புகிறீர்களா!
    அவர்கள் ஸரியா சட்டப்படி அவர்களை தனித்து நிர்வகிக்கட்டும் தமிழர் தம்மை ஜனநாயக முறைக்குள்ளான சட்டப்படி தனித்து நிர்வகிக்கட்டும். இதனால் நன்மையே தவிர தீமையில்லையே. தமிழர் இம்மையில் நிம்மதியாக வாழ்வார்கள். முஸ்லீம்கள் மறுமையிலும் 60 முழ உயர பெண்களை சுகித்து அல்லா அருளிய சொர்க்க வாழ்வை பெறட்டும். ஏன்தான் முஸ்லீம்களின் சொர்க்க வாழ்வை தடுக்கிறீர்களோ தெரியவில்லை.

    • chandran.raja says:
      15 years ago

      தமிழனும் தமிழனின் உரிமைக்காகிய ஆகிய கோஷங்கள் வயிறு வளர்பதற்கான கூக்குரல்கள்.

      இங்குவருகிற தமிழன் மலையகமக்களையோ வடகிழக்கில்வாழ்ந்த முஸ்லீகளையோ தமிழனாக ஏற்றுக்கொண்டதில்லை.ஒரு பக்கத்தில் வாழ்வு வசதிகளை பெருக்குவதற்கு தாய்க்கூட வட்டிக்கு கொடுத்து அறவிடுபவர்கள்.

      இவர்களுக்கு தேவையானது யாரைக் கருவறுத்தும் பொருள் தேடுவதும் தமது சொந்த வாழ்கையை சுகிப்பதுமே. இதையே புலம்மண்ணில் இருபது வருடங்களுக்கு
      மேலாக கண்டுவருகிறோம்.

      வேலைசெய்வதில்லை. முடிந்தால் முளைக்க வசதியிருந்தால் ஒரு தாடி. ஈழத்தமிழ்மக்களுக்கு சோகம் நேர்ந்துவிட்டது அவர்களின் பெயரைச் சொல்லித் தானே நாம்வாழ்கிறோம். கொடுப்பது உங்கள் கடமை. இல்லாவிடால் தாய்நாட்டிற்கு நீங்கள் திரும்ப முடியாது என்கிற மிரட்டல்.
      ஈழத்தமிழர்கள் விடுதலைபெறுவது என்பது இலங்கையரசிடமல்ல. மாறாக இப்படி கருவருகிற புலம்பெயர்-குறிப்பாக யாழ்பாணத் தமிழர்களிடமிருந்தே! ஒரு உதாரணம்
      நிர்மலனனைத் தவிர வேறு யாரையும் தற்போதைக்கு இனம் காணவேண்டிய அவசியம் இல்லை

  12. நாடோடி says:
    15 years ago

    தமிழர்கள் தொடர்பில் சிங்கள பேரினவாதிகள் பரப்பிய கருத்துகளுக்கும் நிர்மலன் போன்ற குறுந்தேசிய மக்கள் விரோதிகளின் கருத்துகளுக்கும் கிஞ்சித்தும் வேறுபாடில்லை “முஸ்லிம் மக்களில் பெரும்பகுதியினர் மதம் மாறிய இலங்கைத் தமிழர்கள்தான் என்ற உண்மையை சிறிலங்கா முஸ்லிம் ஏற்கிறார்களா!” என இந்து அடிப்படை வாதம் பேசும் இவர் “காஸ்மீர் முஸ்லீம் அடிப்படைவாதிகளிடம் சிக்குவது காஸ்மீரின் விடுதலையல்ல” என சொல்வதற்கு, இனங்கள் தொடர்பான முற்சாய்வான குருத்துகளைக் கூறும் இந்த ‘முற்போக்கான’ மனிதருக்கு என்ன அருகதை இருக்கிறது? . இனங்களுக்கிடையில் விரிசல்களை ஏற்படுத்தக் கூடிய இத்தகைய கருத்துக்களைக் விதைப்பது சிங்கள பேரினவாத அரசாங்கங்களின் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்ற துடிப்பது போன்றது ஆகும் ‘சிங்களம் மட்டும் என்ற சட்டம் கொண்டுவரப்பட போது பாதிக்கப்பட்டவர்கள் இலங்கைத தமிழர்கள் மட்டுமா? மூன்று சிறுபான்மைத் தேசிய இனங்களினதும் தாய் மொழி தமிழ் சரி மொழி அடிப்படையிலான சிறுபான்மை அரசியலை ஏற்படுத்தாதது “செந்தமிழ்” (அவர்கள் கருத்து நிலையில்)
    தலைவர்களினதும் ஏனைய சிறுபான்மையோர் மீட்பர்களினதும் பிழை அல்லவா? வன்னியில் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்றழிக்கப் பட்ட போது வாய் மூடி மௌனித்து அயல் நாடுகளில் ஓடி ஒழித்துக் கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று தேர்தல் களத்தில் தமிழ் தேசியத்தையும், புலிகளையும், முள்ளி வாய்கால் பேரவலத்தையும் கூவிக் கூவி வித்துக் கொண்டிருப்பதையும் இந்திய மத்திய அரசின் கையாட்களாக தமிழ் மக்களின் மிகப் பலவீனமான அரசியல் தலைமைகளாக வலம் வருவதையும் எந்த துரோகப் பட்டியலில் சேர்ப்பது புலிகளின் கட்டுப்பாட்டுக்கு வெளியில் உள்ளுக்குள் வெகுண்டு கொண்டிருந்த மக்களை திரட்டி இன அழிப்புக்கு எதிராக போராட்டம் செய்ய முடிந்ததா? கடைசியில் மக்களும் போராளிகளும் மடிந்து போக அரசியல் வாதிகள் தானே பிழைத்துக் கொண்டார்கள் மக்களின் எண்ணங்களையும் தமது சுய லாபத்துக்காக அந்நிய மனோபாவத்தை தூண்டிவிடுகின்ற அரசியல் வாதிகளையும் அரசாங்ககளின் ஏவல் ஆட்களின் நோக்கையும் பகுத்து அறிந்து கொள்வது முக்கியமானது.

  13. "கோமாளி " நவநீதன் says:
    15 years ago

    தந்தை செல்வா ,ஜி. ஜி. பொன்னம்பலம் போன்ற தமிழ் “தலைகள் ” எல்லாம் மலேசியா பிரஜைகள்.தமிழர்கள் கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம்.
    நிர்மலன் எந்த நாட்டு பிரஜை ?
    நீர் என்ன தான் புரட்டி போட்டாலும் தமிழீழம் என்பது பிரபாகரன் தலைமையில் தோற்று போன சமாச்சாரம்.அதை விடுத்து புதிசாக சிந்தியும்.
    இல்லை என்றால் மீண்டும் ஒரு தோல்விக்கு தயாராய் இரும்.

  14. நிர்மலன் says:
    15 years ago

    //தமிழனும் தமிழனின் உரிமைக்காகிய ஆகிய கோஷங்கள் வயிறு வளர்பதற்கான கூக்குரல்கள்.இங்குவருகிற தமிழன் மலையகமக்களையோ வடகிழக்கில்வாழ்ந்த முஸ்லீகளையோ தமிழனாக ஏற்றுக்கொண்டதில்லை// chandran.raja

    சிறிலங்கா தேசபக்தரே! ஈழத்தமிழர் தமக்கு மறுக்கப்படும் உரிமைகளை கேட்டு /மீட்க கோசமெழுப்புவதோ போராடுவதோ அடிப்படை மனித உரிமைகளில் ஒன்று. உரிமை உங்களிற்கு தேவையில்லை வயிறும் வசதிவாய்புகளும் இலவசங்களும் உங்களிற்கு முக்கியமாக இருப்பதால் அடுத்தவரையும் அப்படி எண்ணுகிறீர்கள்.
    சிறிலங்கா அரசியல் யாப்பின் படியும் உளவியல் ரீதியிலும் முஸ்லீம்கள் மலையக தமிழர் (இந்தியவம்சாவழியினர்) தம்மை வேறு இனங்களாகவே அடையாளப்படுத்துகிறார்கள். இந்நிலையில் அவர்களின் விருப்பை மீறி இலங்கை தமிழர்களாக வலிந்து காட்டமுனைவது மனிதவுரிமை மறுப்பு! ஈழத்தமிழர் நாகரீகம் மிக்கவர்கள் அடுத்தவர்களின் மனிதவுரிமையை மதிப்பவர்கள். அதனால் அடுத்தவர்களின் விருப்பத்தை அடையாளத்தை மறுக்க மாட்டார்கள்.
    //தாய்க்கூட வட்டிக்கு கொடுத்து அறவிடுபவர்கள்//chandran.raja

    வட்டி வரி நாகரீக சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம்.ஈபிடிபி கொலை கொள்ளைக் கூட்டத்திற்கு கடத்தல் கப்பம் கொள்ளை கூலிக்கொலை .. இவைதானே தெரியும். நாகரீகம் ஐனநாயகம் மனிதவுரிமை என்றால் எப்படி தங்களிற்கு புரியும்!
    //இவர்களுக்கு தேவையானது யாரைக் கருவறுத்தும் பொருள் தேடுவதும் தமது சொந்த வாழ்கையை சுகிப்பதுமே//
    எது! கடத்தல் கப்பம் கொள்ளை கூலிக்கொலை ஊழல் லஞ்சம் …. வரும் வருமானம் போதாதென்று. மணல்கொள்ளை தமது நிலத்தடி குடிநீர் உவர் ஆகிறதென்று செய்தி வெளியிட்ட இளைஞனை கொலை. அடுத்தவரின் உயிரை பணத்தை பறித்ததும் ஆசையடங்காது குடிநீரையும் நாசம்செய்யும் நாசகார கூட்டத்தின் அங்கத்தவரிடமிருந்து எப்படி உண்மையை எதிர்பார்ப்பது!
    // “முஸ்லிம் மக்களில் பெரும்பகுதியினர் மதம் மாறிய இலங்கைத் தமிழர்கள்தான் என்ற உண்மையை சிறிலங்கா முஸ்லிம் ஏற்கிறார்களா!” என இந்து அடிப்படை வாதம் பேசும் இவர் “காஸ்மீர் முஸ்லீம் அடிப்படைவாதிகளிடம் சிக்குவது காஸ்மீரின் விடுதலையல்ல” என சொல்வதற்குஇ இனங்கள் தொடர்பான முற்சாய்வான குருத்துகளைக் கூறும் இந்த ‘முற்போக்கான’ மனிதருக்கு என்ன அருகதை இருக்கிறது?// நாடோடி

    உண்மையை சொன்னால் இந்து அடிப்படைவாதமோ! அட இதுவரை இந்துமதம் பிற்போக்கு தனங்கள் நிறைந்ததாகவே உணர்ந்தேன். இப்ப உங்கள் கருத்து. உண்மையை சொல்வதே இந்து அடிப்படைவாதமென்கிறது! ரொம்ப வேடிக்கைதான்!
    திரும்பவும் சொல்கிறேன். காஸ்மீர் காஸ்மீரிகளிற்கே சொந்தம் அது இந்துஅடிப்படைவாதத்திற்கும் அல்ல இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கும் அல்ல. காஸ்மீரை இந்தியா மட்டுமல்ல பாகிஸ்தானும் ஆக்கிரமித்துள்ளது. இரு ஆக்கிரமிப்பும் அகற்றப்பட வேண்டும். இந்த உண்மையை சொன்னால் தங்களிற்கு ஏனாம் கசக்கிறது! இதனூடு தாங்களொரு இஸ்லாமிய அடிப்படைவாதியென்பதை காட்டிவிட்டீர்கள்.
    எனது கருத்து உங்களிற்கு உவப்பில்லை என்பதால். நான் எனது கருத்துச் சுதந்திரத்தை முடக்க முடியாது.
    //இனங்களுக்கிடையில் விரிசல்களை ஏற்படுத்தக் கூடிய இத்தகைய கருத்துக்களைக் விதைப்பது சிங்கள பேரினவாத அரசாங்கங்களின் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்ற துடிப்பது போன்றது ஆகும் //நாடோடி

    ஆமா! தமிழருக்கும் – சிறிலங்காமுஸ்லீம்களிற்கும் இடையே கட்டிப்பிடித்து கொஞ்சாத குறையாய் உறவுகள் இருந்தது! இருக்கிறது! நான்தான் புதிதாய் விரிசலை உண்டாக்க வேணும். மகிந்தா சிந்தனாவின் மொத்த குத்தகைக்காரர்கள் சிறிலங்காமுஸ்லீம்கள் என்பது பரகசியம்.
    // ‘சிங்களம் மட்டும் என்ற சட்டம் கொண்டுவரப்பட போது பாதிக்கப்பட்டவர்கள் இலங்கைத தமிழர்கள் மட்டுமா? மூன்று சிறுபான்மைத் தேசிய இனங்களினதும் தாய் மொழி தமிழ் //நாடோடி

    அப்படியா! ஈழத்தமிழரும் மலையகத்தமிழரும் சிங்கள மட்டும் சட்டத்தை எதிர்த்து போராடும் போது ஏனாம் சிறிலங்காமுஸ்லீம்களில் மிகப்பெரும்பாலானோர் சிங்களத்திற்கு ஆதரவு கொடுத்தனர்! சிறிலங்காமுஸ்லீம் களிற்கு மதம்மும் சலுகைகளும் தான் முக்கியமே தவிர தாய்மொழியைபற்றி அவர்களிற்கென்ன கவலை. தமிழரிடையே வியாபாரம் செய்வதற்கு மட்டும்தான் அவர்களிற்கு தமிழ் தேவை.
    //வன்னியில் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்றழிக்கப் பட்ட போது வாய் மூடி மௌனித்து அயல் நாடுகளில் ஓடி ஒழித்துக் கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று தேர்தல் களத்தில் தமிழ் தேசியத்தையும்இ புலிகளையும்இ முள்ளி வாய்கால் பேரவலத்தையும் கூவிக் கூவி வித்துக் கொண்டிருப்பதையும் இந்திய மத்திய அரசின் கையாட்களாக தமிழ் மக்களின் மிகப் பலவீனமான அரசியல் தலைமைகளாக வலம் வருவதையும் எந்த துரோகப் பட்டியலில் சேர்ப்பது புலிகளின் கட்டுப்பாட்டுக்கு வெளியில் உள்ளுக்குள் வெகுண்டு கொண்டிருந்த மக்களை திரட்டி இன அழிப்புக்கு எதிராக போராட்டம் செய்ய முடிந்ததா? //நாடோடி

    சிறிலங்கா அரசபயங்கரவாதப்படை தாம் ஆக்கிரமித்திருந்த பிரதேநங்களில் ஈபிடிபி புனொட் கருணா … உதவியுடன் செய்த படுகொலைகள் எதை அடக்க மேற்கொள்ளப்பட்டது! 3 தமிழ்தேசீயகூட்டமைப்பு எம்பிக்கள் ஊடகவியலாளர்கள் எதற்காக படுகொலைசெய்யப்பட்டனர்! தமிழ்மக்களை மாணபீதியில் உறைய வைக்கத்தானே! அப்போது தங்களை பொன்றவர்கள் சொன்ன சப்புக்கட்டு நியாயம் . புலிப்பாசத்திற்கெதிரான யுத்தமே நடப்பதாக! இப்பவென்ன நீலிக்கண்ணீரா!
    புலம்பெயர் தேசங்களில் குளிரிலும் மழையிலும் இராப்பகலாக மக்கள் நடத்திய போராட்டம் ஏதுவாம்! உண்ணவிரதங்கள் தீக்குளிப்புக்கள் எதுவாம்! நீங்கள் எங்களிற்கு மக்கள் போராட்டத்தை பற்றி சொல்வது ரொம்ப வேடிக்கைதான்.
    விலைபோன சம்பந்தனும் மாவை சேனாதிராசாவுமில்லை ஈழத்தமிழர்!
    //தந்தை செல்வா இஜி. ஜி. பொன்னம்பலம் போன்ற தமிழ் “தலைகள் ” எல்லாம் மலேசியா பிரஜைகள்.தமிழர்கள் கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம்.//
    இலங்கை குடியுரிமையில்லாத ஒருவர் இலங்கை தேர்தலில் போட்டியிட முடியுமா! ஒருவர் எடுத்த வாந்தியை விழுங்கிவிட்டு மீண்டும் எடுக்கிறீர்கள். சொந்தப்புத்தி இருந்தால்தானே!
    //நீர் என்ன தான் புரட்டி போட்டாலும் தமிழீழம் என்பது பிரபாகரன் தலைமையில் தோற்று போன சமாச்சாரம்.அதை விடுத்து புதிசாக சிந்தியும்//
    கோமாளி ” நவநீதன்
    ஈழத்தமிழரின் உரிமைப் போராட்டம் ஈழத்தமிழர்களிடையது . அதற்கு தந்தை செல்வா தலைவர் பிரபாகரன் தலைமை ஏற்றனர். அவ்வளவும்தான் அவர்கள் இருந்தலென்ன இறந்தலென்ன விடுதலை பெறுமட்டும் போராட்டம் தொடரும். கோடாரிகாம்புகளின் “புதிசாக சிந்தியும்” எனும் குள்ளநரி போதனை தேவையில்லை.

  15. "கோமாளி " நவநீதன் says:
    15 years ago

    நிர்மலன்

    இப்போ யாழ்ப்பணத்தில் அமோகமாக திருவிழாக்கள் நடைபெறத் தொடங்கி விட்டன.புலிகளின் போராட்டத்தை யாழ்ப்பாண படித்த மக்கள் மக்கள் மறந்து விட்டார்கள்.வெளிநாடுகளிலிருந்து கொண்டு கிணற்று தவளை போல் கத்துவதில் எள்ளளவும் பயனில்லை.கருணா ,கே.பி போன்ற தலைவர் புகழ் பாடி தான் தலைவர் கவிழ்த்தார்கள்.
    இப்போ புலி குஞ்சுகள் உலகமெல்லாம் விற்கும் சனல் 4 காணொளியை வெளிக்கொண்டந்ததே சிங்கள ஊடகவியலார்கள் தான்.பிரபாகரன் செய்த ஊழ் வினையை இன்று தமிழ் மக்கள் அனுபவிக்கிறார்கள்.இங்கே இருந்து கொண்டு ஆக்கபூர்வமான காரியங்களை செய்யும்.
    தப்பி ஓடி ..தமிழன் என்று சொல்ல வெட்கி
    கப்பலேறி கனடாவில் நக்கட்டும்
    என்று ஒரு புலி கவி புலி கொடி விசுவாசிகளை திட்டியது ஞாபகம் வருகிறது.

    • நிர்மலன் says:
      15 years ago

      //இப்போ யாழ்ப்பணத்தில் அமோகமாக திருவிழாக்கள் நடைபெறத் தொடங்கி விட்டன.புலிகளின் போராட்டத்தை யாழ்ப்பாண படித்த மக்கள் மக்கள் மறந்து விட்டார்கள்.வெளிநாடுகளிலிருந்து கொண்டு கிணற்று தவளை போல் கத்துவதில் எள்ளளவும் பயனில்லை.//
      அது யாருங்கோ படித்த மக்கள்! எதைபடித்த மக்கள்! அமிர்தலிங்கம் நீலன் திருச்செல்வம் கதிர்காமர் உமா நாபா இமெல்டாசுகுமார் சண்முகலிங்கம் வசந்தி அரசரட்ணம் எல்லோரும் தாம் படித்தவர்களாக காட்டிக் கொண்டவர்கள்/ கொள்பவர்கள். ஆனால் செய்தது / செய்துகொண்டிருப்பது பதவிக்கும் பணத்திற்கும் விலைபோவது! இவர்கள் உங்களிற்கு படித்தவர்களாக தெரியலாம். ஈழத்தமிழர்களிற்கு இவர்கள் வெறும் அற்பர்கள். விபச்சாரியிடம் இருக்கும் மனுதர்மம் கூட உங்களிடமுமில்லை! நீங்கள் சொல்லும் படித்தவர்க(???)களிடமில்லை!
      இலங்கை குடியுரிமையில்லாதவர்கள் இலங்கையின் நாடளமன்ற தேர்தல்களில் போட்டியிட்டதாக சொன்ன/ வாந்தியெடுத்த அறிவாளியெல்லவா தாங்கள். நீங்கள் சொன்னால் எல்லாம் சரிதான்! திருப்தியா!
      //சனல் 4 காணொளியை வெளிக்கொண்டந்ததே சிங்கள ஊடகவியலார்கள் தான்.//
      சிங்களவர்கள் நல்ல விலைபோகக்கூடியவர்கள். தென்னிலங்கை கடற்கரையில் அரபுநாடுகளிற்கு விலைபோனவர்களிற்கு. யுத்தவெற்றி ஞாபக புகைப்படங்களை வீடீயோக்களை விற்று கரன்சி பார்ப்பது சிங்கள ஊடகவியலார்களிற்கு கசக்கவா செய்யும்! உங்களை போல் சொந்த இனத்தை காட்டிக்கொடுக்கும் கோடாரிகாம்புகள் எந்த இனமாகவிருந்தாலென்ன! உங்கள் பெருவிருப்பிற்குரியவர்கள்தான்.
      //ஒரு புலி கவி புலி கொடி விசுவாசிகளை திட்டியது ஞாபகம் வருகிறது.//
      கருணா கேபி மாத்தையா நிர்மலா இராகவனின் … வழிவந்தவராக இருக்ககூடும்!.

  16. புலிகுஞ்சு says:
    15 years ago

    எல்லோரும் வாய் மூடுங்கள்.நாங்கள் போராடி விரைவில் தமிழீழம் எடுத்து தருகிறோம்.நீங்கள் வழமை போல காசை மட்டும் தாருங்கள்.

    • நிர்மலன் says:
      15 years ago

      புலிபடுத்திட்டவுடன் மகிந்தாவின் நரிக்குஞ்சுகள் புலிக்குஞ்சுகளாகி தமிழரை மிரட்டுகின்றன!

      • thurai says:
        15 years ago

        புலியும்,நரியும் வெருட்டுவது தமிழரை மட்டும்தாந்-துரை

  17. நிர்மலன் says:
    15 years ago

    சிறிலங்கா முஸ்லிம்களின் மிரட்டல்.
    முஸ்லிம்களின் பங்களிப்பு இல்லாது இலங்கையில் தமிழர்கள் வாழ முடியாது என்று ஆளும்கட்சி எம்.பி. யான ஏ.எச்.எம். அஸ்வர் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

    பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கடன் இணக்க கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அஸ்வர் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.
    –
    வீரகேசரி இணையம்.

  18. புலிகுஞ்சு says:
    15 years ago

    எல்லோரும் ஒற்றுமையாக வாழ்வதே மேல் என்பதை “தேசிய தலை” போன பின்பாவது உணரத் தவறுவது சிறு பிள்ளைத்தனம்.
    இலங்கையில் எப்போதுமே “நடுநிலையான பத்திரிகைகள் “இருந்ததில்லை ,அது போன்ற பத்திரிகைகள் நிர்மலன் போன்ற நபர்களை பாதிப்பது வருந்ததக்கது.

    • நிர்மலன் says:
      15 years ago

      Posted by யாழ் முஸ்லிம் at 11:15 0 comments
      இலங்கை முஸ்லிம்களின் பங்களிப்பு இன்றி தமிழர்கள் வாழ முடியாது – அஸ்வர் http://yarlmuslim.blogspot.com/search?updated-max=2011-07-20T12%3A18%3A00%2B02%3A00&max-results=10

      • thurai says:
        15 years ago

        பெரும்பான்மை இந்துக்களைக் கொண்ட ஈழ்த்தமிழினம், கிறிஸ்தவ, முஸ்லிம்நாடுகளிற்குப் போகாமல் பணம் தேட முடியாது. அது மட்டுமல்ல எல்லா வரனும் அள்ளி வழங்கும் இந்துக்கோவில்களையும் கொண்டு போய் பிழைப்புநடாத்தவும்
        மற்க்கமாட்டார்கள். இந்த லட்சண்த்தில் தன்மானமுள்ள தமிழர் நாம் முஸ்லிம்களிற்கு மேலானவ்ர்கள் என்று எண்ணுவது
        போதும். -துரை

  19. புலி குஞ்சு says:
    15 years ago

    டக்கிளசும் ,கருணா ,பிள்ளையானும் தான் ராஜபக்சேயின் கீழ் வாழலாம் என்கிறார்கள்.இதையே தான் முஸ்லீம்களும் சொல்கிறார்கள் .இப்படியான்
    போக்கில்லாத கருத்துக்கள் நிர்மலனை பாதிப்பது அவரது அறியாமமையையே வெளிக்காட்டுகின்றது.இப்படி தான் முன்பு புலிகள் மக்களை பயம் காட்டி ஏமாற்றினார்கள்.
    ஐயோ பாவம் !!!!!

    • நிர்மலன் says:
      15 years ago

      “இலங்கை முஸ்லிம்களின் பங்களிப்பு இன்றி தமிழர்கள் வாழ முடியாது” எனும் வீரகேசரி இணைய செய்தியை பதிவிலிட்டபோது சொன்னீர்கள் வீரகேசரி ஒருபக்கசார்பானதென! ஒரு முஸ்லிம் இணைய ஆதாரத்தை இணைத்தவுடன் “டக்கிளசும் கருணா பிள்ளையானும் தான் ராஜபக்சேயின் கீழ் வாழலாம் என்கிறார்கள்.இதையே தான் முஸ்லீம்களும் சொல்கிறார்கள்” என பல்டி அடிக்கிறீர்களே பரிதாபத்திற்குரிய நரிக்குஞ்சுவே!
      1) தெளிவான சிந்தனையும் திடமான கருத்துநிலைப்பாடுமற்ற வெறும் ஈழத்தமிழர் காழ்புணர்வை காவும் மகிந்தாவின் நரிக்குஞ்சென்பது தெரிகிறது.
      2)டக்கிளசு கருணா பிள்ளையான் தமது மகிந்தா விசுவாசத்திற்கு “ராஜபக்சேயின் கீழ் வாழலாம் என்கிறார்கள்”. ஆனால் அஸ்வர் இன்னும் பலபடிகள் மேல போய் ஈழத்தமிழர் சிறிலங்கா முஸ்லிம்களிற்கு அடக்கி நடக்கணுமென்கிறார். அதை தாங்கள் நியாயப்படுத்துவதன் மூலம் தாங்களும் ஒரு சிறிலங்கா முஸ்லிம் என்பதை நிரூபித்துள்ளீர்!
      3) எப்படி டக்கிளசு கருணா பிள்ளையான் ஈழத்தமிழரின் நலன்களிற்கு எதிரியோ! அப்படிதான் சிறிலங்காமுஸ்லிம்களும் ஈழத்தமிழரின் நலன்களிற்கு எதிரிகள் என ஒத்துக்கொண்டுள்ளீர்கள். அதாவது எனது கருத்து நிலைப்பாட்டிற்கு வலுவூட்டியுள்ளீர். நன்றி.
      4)உங்களை போல நாலு வெற்றுக்கோம்பைகளின் கருத்துக்களே போதும் ஈழத்தமிழர் தமது எதிரிகளில் சிறிலங்காமுஸ்லிம்களும் முதன்மையானவர்கள் என்பதை மீண்டும் மீண்டும் தெளிவாக அறிந்துகொள்ள. சும்மாவா சொன்னார்கள் முட்டாளின் காலில் கழிவு பட்டால் “விரல் நாக்கு மூக்கு” என மேலும் மூன்று இடங்களில் புசிக்கொள்வானென!

  20. அரிச்சந்திரன் says:
    15 years ago

    முட்டாள்களுக்கும் மூடர்களுக்கும் நான் மீண்டும் நினைவூட்டுகின்றேன் எம் தலைவன் பாதுகாப்பாகவுள்ளான்,ஐந்து தொடங்கும் இந்த அவனி நடுங்கும்,

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...