மும்பையில் நடைபெறும் உலககோப்பை இறுதி போட்டியை காண வரும் ராஜபக்சேவை இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியா, இலங்கை நாடுகளுக்கிடையிலான உலகக் கோப்பை இறுதி கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியைப் பார்த்து ரசிப்பதற்கு சிங்கள இனவெறி அதிபர் ராஜபக்சே ஏப்ரல் 2ஆம் தேதி மும்பை வரவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த கொலைவெறியுடன் ராஜபக்சே இந்தியாவுக்கு வருகை தருவது தமிழ்ச் சமூகத்தை வேதனைப்படுத்துவதாகும். மேதகு பிரபாகரன் அவர்களின் தாயாரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள நான் சென்றபோது, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் என்ற நிலையிலும், இலங்கை நாட்டுக்குள்ளேயே அனுமதிக்க முடியாதெனத் தடை விதித்து இந்திய அரசை அவமதிக்கும் வகையில் திருப்பி அனுப்பிய ராஜபக்சே இப்போது எந்த முகத்தை வைத்துக்கொண்டு இந்தியா வருகிறார்.
இந்திய அரசைத் தொடர்ந்து அவமதித்து வருகிற ராஜபக்சேவை அவ்வப்போது சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கும் இந்திய அரசின் போக்கு வேதனைக்குரியதாகவும் வியப்புக்குரியதாகவும் உள்ளது.
சர்வதேசப் போர்க் குற்றவாளி என உலகின் பல நாடுகள் ராஜபக்சே மீது குற்றம்சாட்டுகிற நிலையில், இந்திய அரசு மட்டும் ராஜபக்சேவை வரவேற்று ஊக்கப்படுத்துவது தமிழினத்தை மேலும் மேலும் இந்திய அரசு வஞ்சிக்கிறது என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
இந்நிலையில், தமிழின உணர்வுகளைத் தொடர்ந்து அவமதிக்கிற இந்திய அரசின் போக்கையும் விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது. அதேவேளையில், இந்திய அரசுக்குள்ள கடமையைக்காட்டும் வகையில் சர்வதேசப் போர்க்குற்றவாளி ராஜபக்சேவை இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாதென விடுதலைச் சிறுத்தைகள் வற்புறுத்துகிறது.








ஈழ்த்தமிழர்களின் இரத்தத்தையும் சதையையும் விளம்பரமாக்கி, புலம்பெயர் நாடுகளில் சுருட்டிய பணத்தோடு தினம் தினம் தமிழகத்தில் வந்து முதலீடுகள் செய்யும் ஈழத்தமிழர்களை விடவா மகிந்தா தமிழர்களிற்கு தீங்கிழைத்தார்?
துரை
திருமாவளவன் என்கின்ற பச்சோந்தியை விமா்சிக்கலாம் ஈழத்தமிழா்களிடம் பணம் சுருட்டி சுகபோக வாழ்வு வாழும் கயவா்களை விமா்சிக்கலாம் ஆனால் மகிந்தா இவா்களைவிடவா தீங்கிழைத்தார் என்று கேட்பது அனியாயமாக தெரியவில்லையா துரை??
Let say the dog trying to get in to the building will not be allowed in because of the security. As they say politicians can manoeuvre the way in to anywhere they like.
இணையத்தளம் மாறி இணையத்தளம் தாவும் இந்த விக்கிரமாதித்தரின் ஒரே நோக்கம் போர் குற்றவாளி மகிந்தவை எப்பாடு பட்டும் காப்பதுதான். தமிழரின் பிணக்குவியல்மேல் ஏறிநின்று ஐயோ இவர்களைக் கொன்றவர்கள் புலிகளும் புலம்பெயர் தமிழரும்தான் என்று இன்றுவரை கத்தும் இந்த அநியாயம் நியாயம் எதுவென்ற வித்தியாசம் தெரியாத கீபோர்ட் விண்ணர்கள் குளத்தில் தண்ணீர் உள்ளவரைதான் கத்துவார்கள், அதன்பின் அடுத்த குளம் தேடித் போவார்கள். அப்போதும் அங்கு மஹிந்த குளித்துக் கொண்டுதான் இருப்பாரென்று இவர்கள் கனவு காண்கிறார்கள்.
அநியாயம்,நியாயம் மட்டுமல்ல தமிழர்களிற்கு
இப்படியான முடிவு வருமென்று முன் கூட்டியே குரல் கொடுதவ்ர்கள் பலர். அவர்களிற்கெல்லாம் மரணதண்டனை நிறைவேற்ரியது யார்? இன்னமும் புலிகளால்
ஏமாற்ரப்பட்ட தமிழர் தொகையே உண்மையை
அறிந்த தமிழர்களிலும் அதிகம். ஒன்றாக தலைவருடன் உட்கார்ந்து உணவரிந்தி
தற்கொலைபடையாகிவர்கள் எத்தனை பேர்?
அவ்ர்களின் சிதைந்த உடலை பார்த்து
கவலை கொள்ளாமல் ஆனந்தத்தில் கேக் வெட்டி
பரீஸ் நகரில் கொண்டாடிய தமிழர் எத்தனை பேர்?புலிகளிற்கு விளம்பரத்திற்கு தமிழர் அழியலாம் அதன் ஏற்றுக்கொள்ழுங்கள்.. புலிகளை காப்பாற்ராமல் தமிழர் அழிந்தால் சிங்கள்வன் கொலைகாரன். தமிழர் அழிந்து புலிகள் காப்பாற்ரப்பட்டிருந்தால் இன்று அழிந்ததமிழரெல்லாம் மாவீரர்கள்.-துரை
புலிகளால் தமிழர்கள் அழிக்கப்படவில்லையா? ரயர் போட்டு
உயிருடன் தமிழர் கொழுத்தப்படவில்லையா? இவற்ரினை யாராவது
திருப்பிகேட்டார்களா? இதன் பின்ணணியில் இருந்தோரை தண்டித்தார்களா? இப்போதும் இதன் பின்ணணியில் இருந்தோர்
இராசப்கசாவின் அரசுடனும், தமிழக அரசியல் வாதிகழுடனும்
வர்த்தகர்களாக கோடீஸ்வரர்களாக வலம் வருகின்றார்கள்.
எல்லாத்தமிழர்கழும் இழிச்சவாய்களாக இருக்க முடியாது.
யன்னல் கண்ணாடியை உடைக்க ஒருத்தன், கண்ணாடி விற்பதற்கு
ஒருத்தன். இதுவே மகிந்தாவை தமிழர்மீது பகைகொள்ள
புலியின்
ஒருசாராரும், அவருடன் சேர்ந்து வியாபார முதலீடுகள் செய்ய
இன்னொரு சாராரும் உள்ளனர். அழிவது தமிழர் வாழ்வது
புலிகளின்வாரிசுகள்.-துரை
துரை நீா் ஏதோ புதிதாக கண்டுபிடித்தமாதிரி புலம்பாதீா் தமிழனை தமிழன் அளித்தது ஒரு விடயம் அதற்காக சிங்கள பேரினவாதத்தை நியாயப்படுத்த முற்படுவது இன்னொரு விடயம், இவை யாவும் நடந்து முடிந்தும் சிங்கள பேரினவாதம் ஒரு தீா்விற்கு வர முயல்கின்றதா இல்லை பின்பு எதற்காக இப்படி மாய்கிறீா்கள்.
குமார்,சிங்கள அரசியல் வாதிகழுடனும், அரசுடனும் தமிழினத்தின் அழிவிற்கு காரணமாக இருந்தவர்களே முட்டி மோதிக்கொண்டு போய்
காலில் விழுந்து சேவை செய்கின்றார்கள். எல்லாவ்ற்ரிற்கும் ஆமா போடுகின்றார்கள். இவர்களின் சுக் போக் வாழ்வே தமிழனின்
உருமையாக அன்றும் இன்றும்
உள்ளது. தமிழரென்றால் இவர்கள் மட்டும்தான் என்பதே அன்றும் இன்றும் எல்லோருடைய கருத்தும்.
இலங்கையில் வாழும் தமிழ் பேசும் சகல சமூகங்கள், பிரதேசங்களையும் கருத்திற்கொண்டா தமிழரின் உருமை என கோசம் வைக்கப்படுகின்றது? ஆண்ட பரமப்பரை அதாவ்து தமிழனைத்தமிழன் ஆண்டவ்ர்கள்
இவர்களிற்கு சிங்கள அரசு பதவியும்பணமும் கொடுத்தால் போதுமென்பதே உருமைக்குரல்.-துரை
We are negative sometime but some people are negative all the time,get them to understand something it’s far more difficult. And it’s not easy to bring them to positive in life.
They repeat the same again and again
They don’t want to look other ways to find joy in life.
But I hope one day life will change them.
Thamil maran
யோவ்! சும்மா உதார் விடாதீங்க. ராஜயபக்ச இப்ப இந்தியாவில் தான் நிற்க்கின்றான். அவனது மாளிகைக்கு கனிமொழிக் கூட பொய் விருந்தெல்லாம் காப்பிட்டு விட்டு வந்தவன் நீ.
இப்ப என்ன எலெக்சன் வந்ததும் நல்லா நடிக்கிறாய் போய் வேலையை பாரு தமிழன் இளிச்சவாயனாக இனியும் இருக்கமாட்டான்
MR thousand times better than Tamilnadhu politicians. Thiruma, serve your community first. People in Northeast not care about you. All know you’re one of the best clown in Tamilnadhu. Please keep away from Sri Lankan politics
சரி திருமாவளவன் குரல் கொடுத்துவிட்டார். புலம் பெயர் தமிழர்களே உங்கள் பணத்தை வாரி இறையுங்கள்.