Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

முல்லைப் பெரியாறு அணை: வரலாறும், உண்மையும்

இனியொரு... by இனியொரு...
12/02/2011
in இன்றைய செய்திகள்
0 0
16
Home இன்றைய செய்திகள்

முல்லைப் பெரியாறு அணை: வரலாறும், உண்மையும் – வீடியோ!

முல்லைப் பெரியாறு அணை குறித்த கேரள அரசியல்வாதிகளின் பொய்ப் பிரச்சாரத்தை முறியடிக்கும் வண்ணமாக தமிழக பொதுப்பணித்துறை பொறியாளர்கள் இந்த ஆவணப்படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வந்த பிறகு நிலவுடைமையில் தனியுடமையை ஏற்படுத்தினாலும் அதற்கு முன் இருந்து வந்த அரசின் நீர்ப்பாசன – மராமத்து வேலைகளை புறக்கணிக்கிறார்கள். அதனால் 17-18 நூற்றாண்டுகளில் ஏராளமான பஞ்சங்கள் ஏற்பட்டு இலட்சக்கணக்கான மக்கள் இறந்து போகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் பிறந்து கேரளாவில் வீணே கலக்கும் முல்லைப் பெரியாறு நதியை தடுத்து தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு திருப்பி விடும் முயற்சி எடுக்கப்படுகிறது. அதன் வரலாறு இங்கே விரிவாக பதியப்பட்டுள்ளது. இங்கிலாந்து இராணுவத்தில் பொறியாளராக பணியாற்றிய கர்னல் பென்னி குயிக்கின் பெருமுயற்சியால் இந்த அணை திறமையாகவும், நுட்பமாகவும் கட்டப்பட்டிருக்கிறது.

ஒரு கட்டத்தில் இந்த அணை கட்டும் முயற்சியிலிருந்து இங்கிலாந்து பின்வாங்கிவிட பின்னர் பென்னி குயிக்கின் சொந்த முயற்சியால் அணை கட்டப்படுகிறது. கம்பம் குமுளிக்கு அருகே இருக்கும் இந்த அணையின் நீர் தேக்கடிக்கு திருப்பி விடப்பட்டு அங்கிருந்து குகை – டனல் வழியாக தமிழகத்திற்கு வந்து சேர்கிறது. அதன்படி தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களின் விவசாயத் தேவைக்கும், குடிநீர் ஆதாரத்திற்கும் இந்த நீர் பயன்படுகிறது. இலட்சக்கணக்கான மக்கள் பயனடைந்திருக்கின்றனர். இது குறித்த விரிவான தகவல்களை படத்தில் காணலாம்.

மேலும் அணை குறித்து அன்று போடப்பட்ட ஒப்பந்தகளையும், அதன் விதிகளையும், தமிழகத்தின் பங்கு குறித்தும் படம் விரிவாக பேசுகிறது.

இந்த அணை இருக்கும் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதாக மலையாள மனோரமா பத்திரிகை 1979ஆம் ஆண்டு ஒரு பீதியைக் கிளப்புகிறது. அன்றிலிருந்து கேரள அரசியல்வாதிகள் அணையை மூடுவதற்கு பெரும் பிரயத்தனம் செய்கின்றனர்.

அதன்பிறகு அணையை பலப்படுத்தும் வேலைகள் 90களிலிருந்து ஆரம்பித்து நடக்கின்றன. அது குறித்த அறிவியல் பூர்வமான விவரங்களை இந்த ஆவணப்படம் தெரிவிக்கிறது. மேலும் நில நடுக்கம் ஏற்பட்டாலும் அதைத் தாங்கும் விதமாக அணை எவ்வாறு பலப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதையும் விரிவாக தெரிவிக்கிறது.

அடுத்து அணை உடைந்து முழு நீர் வெளியேறினாலும் அது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இடுக்கி அணைக்கு போகும் என்பதையும் தர்க்க பூர்வமாக தெரிவிக்கிறது. தற்போது புதிய அணை கட்டப் போவதாக கேரளா தெரிவித்திருப்பது எப்படி ஒரு சதி என்பதையும் நிரூபிக்கிறது. அதன்படி புதிய அணையின் நீர் தமிழகத்திற்கு வந்து சேரவே முடியாது.

இந்தப் பிரச்சினையின் பால் உச்சநீதிமன்றம் அளித்த உத்திரவையும், தீர்ப்பையும் கேரள அரசு மதிக்காதது குறித்தும், உச்சநீதிமன்றமும் அதை தட்டிக் கேட்க முடியாத நிலைமை நீடிப்பதையும் படம் எடுத்துரைக்கிறது.

தொகுப்பாக இந்தப்படம் வரலாறு, அறிவியல் உண்மைகள், கேரள அரசின் சதிகள், தீர்வுகள் அனைத்தையும் எளிய முறையிலும், உண்மையாகவும் எடுத்தியம்புகிறது. இந்தப்படத்தை நாம் விரிவான முறையில் கொண்டு செல்ல வேண்டும். வாசகர்கள், தோழர்கள் இதை உரிய முறையில் மக்களிடையே கொண்டு செல்லுமாறு கோருகிறோம்.

அடுத்து கேரள அரசியல்வாதிகள் குறிப்பாக காங்கிரசு மற்றும் போலிக் கம்யூனிஸ்டுகள் இந்த அணை குறித்து பொய்யான தகவல்களை பரப்பி மக்களிடையே ஒரு பதட்டத்தை தோற்றுவிக்கிறார்கள். இந்த இருகட்சிகளை நாம் தனிமைப்படுத்தி அம்பலப்படுத்த வேண்டும்.

முல்லைப்பெரியாறு அணையில் தமிழகத்தின் கோரிக்கை என்பது நியாயமான ஒன்று. இது கேரள மக்களுக்கு எதிரானது என்ற வகையில் கேரள ஓட்டுப்பொறுக்கிகள் பிரச்சாரம் செய்வதில் துளியும் உண்மையில்லை.

இந்த ஆங்கில சப்டைட்டிலோடு வரும் தமிழ் ஆவணப்படத்தை தமிழறியாத பிற மாநில மக்களுக்கும், குறிப்பாக கேரள மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டிய கடமை நமக்கிருக்கிறது.

படத்தை பாருங்கள், பரப்புங்கள்!

நன்றி : வினவு

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

அமரிக்காவுடன் தொடர்புகளைப் பேண புலிகள் அதி விருப்புக்காட்டினர்

Comments 16

  1. வரதன் ( கஸ்ட்ரோ says:
    14 years ago

    இந்தப்படம் வரலாறு, அறிவியல் உண்மைகள், கேரள அரசின் சதிகள், தீர்வுகள் அனைத்தையும் எளிய முறையிலும், உண்மையாகவும் எடுத்தியம்புகிறது

  2. கடலூர் சித்தன்.ஆர் says:
    14 years ago

    சரியோ/தவறோ கேரளாவில் கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்று சேர்கின்றனர். . . மதம் வளர்க்க வந்த மா மனிதர் ஜி. யு. போப் ( வீரமாமுனிவர்/ பெஷ்கியார்)/கர்னல் பென்னி குவிக் அவர்களுக்கு உள்ள நன்றி உணர்வில் துளி கூட நம்முடன் ஒரு காலத்தில் ஒன்றாய் வாழ்ந்தவர்களுக்கும் /பலன் பெறுபவர்களுக்கும்/ தலை முறை, தலை முறையாய் இடம் பெயர்ந்து வாழும் சிலருக்கும் இல்லாதது பற்றி.. என்ன சொல்வது…சீ… இதுவும் ஒரு பொழப்பா?

  3. Augustin Raj says:
    14 years ago

    Tamilan is rooten worm.we will not unite for any cause.becasuse we are over smart.especially people settled outside tamilnadu,even they get kick from that place also ,they will go against the tamilan.whyy??????????????
    This is the time to unite.Otherwise we will easily destroy by our other indian brothers(already other indian brothers started in srilanka and succeeded).Please wake up.Differences will be there even in a house,but for common reason,everyone should forget the differences.TRUE??

  4. andy appan says:
    14 years ago

    TAMIL  TRAITERS
    KAMARAJ- NEHRU
    KARUNANITHY
    MGR
    JJ
    ASK  ALL TAMILNADU MPs TO RESIGN

  5. கடலூர் சித்தன்.ஆர் says:
    14 years ago

    தமிழர் வாழ்வியல் நடவடிக்கைகள்/ பிரச்சினைகள் ஆகியவற்றை-   வீட்டிலும், வெளியிலும், கனவிலும் /நனவிலும் தமிழ் பேசும் தமிழர்களே,  நமக்காக கையாள வேண்டும்.. இல்லாவிடில் பிற மாநிலத்தவர்களிடம் இருந்து முழுதாக ஒதுக்கப்படும்/ வெறுக்கப்படும் சூழ்நிலைக்கு ஆளாகுவோம். யாரும் நம்மை காப்பாத்த முடியாது. வீரம் வேறு- விவேகம் வேறு என்பதை உணரவும். தமிழர் முன்னேற்றம் விரும்புவோர் தயவு செய்து  இவற்றை சிந்திக்கவும். வாழ்க தேசியம்.

  6. கடலூர் சித்தன்.ஆர் says:
    14 years ago

    கேரளத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டது உண்மை—  உம்மன் சாண்டிக்கு கருணாநிதி பதில் கடிதம்.” கேரளநாட்டின்  இருபது விழக்காடு மக்களுக்கு தமிழகத்தில் சோறு தேவைப்படுகிறது. அறுபது விழுக்காடு மக்களின் உணவுத் தேவையை தமிழகத்திலிருந்து பெறுகிறார்கள். அவர்களிடம் இன்னுமா பேச்சு வார்த்தை.”—-பொறுத்தது போதும் பொங்கியெழு மனோகரா வசனத்தை  இந்த தருணத்தில் உங்களிடம் எதிர் பார்க்க முடியாது.  எரிகிறதை பிடுங்குங்கள் கொதிப்பது அடங்கி விடும். தானாகவே  தமிழர்களுக்கு நீதியும் கிடைக்கும்.

  7. கடலூர் சித்தன்.ஆர் says:
    14 years ago

    திராவிடம் என்ற சொல்லை உபயோகித்து அண்டைய  மாநில மொழி பேசுபவர்களே அதிகம் பயனடைந்து, நம்மை புறம் தள்ளி முன்னேறியுள்ளனர் .ஆதலால்  நெல்லுக்கும், புல்லுக்கும் வித்தியாசம் தெரியாத, பல முடத் தெங்குத் தமிழர்கள்/ வெகுளிகள் உருவாகி தமிழினம் முன்னேற தன்னை அறியாமலே, தமிழர் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். எனவே இனி  தமிழகம்/தமிழர்/ தமிழ் என்று முழங்க வேண்டிய காலக் கட்டத்தில் நாம் இருக்கிறோம்.வாழ்க தமிழ் உணர்வு. வாழ்க பகுத்தறிவு.

  8. கடலூர் சித்தன்.ஆர் says:
    14 years ago

    வாழ்க- யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று வாழ்ந்து கெட்ட தமிழகம்”“1979 எம்.ஜி.ஆர் – அச்சுதமேனன் ஒப்பந்தத்துக்கு முன்பு வரை 48 அடி நீர் தமிழகம் வசம் இருந்தது. அது மூன்றில் ஒரு பங்காக்கப்பட்டது. அணைப் பாதுகாப்பு, நம் காவல் துறையிடமிருந்து கேரள காவல் துறைக்குப் பிடுங்கித் தரப்பட்டது. அணையில் படகு விடும் உரிமை பறி போனது. மீன் பிடிக்கும் உரிமையும் போயிற்று. அணை வரையிலான சாலையும் பிடுங்கப்பட்டது. அணை தமிழகத்துக்குச் சொந்தமென்றாலும் அணைக்குச் செல்ல, பொறியாளர்கள் உட்பட எல்லாரும் கேரள அரசின் அனுமதி பெற வேண்டும். இவையெதுவும் 1979க்கு முன்னர் இல்லாதவை. கடைசியாக இப்போது அணையையே பறிக்க விரும்புகிறது. அணையின் பாதுகாப்பு மட்டும்தான் அசல் கவலையென்றால் புது அணையை தமிழகமே கட்டட்டுமென்றல்லவா சொல்ல வேண்டும்? தான் கட்டித் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள விரும்புவதாக ஏன் சொல்ல வேண்டும்?”இது தான் நம் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். மலையாளிகளுக்கு பெற்றுத் தந்த மண்ணின் பாச உணர்வு; அதன் பரிசாக மலையாள சகோதரர்கள் நமக்கு காட்டும் விசுவாசம்./. நம்பிக்கைத் துரோகம்..????தமிழா மண்ணின் மீதும் உனது மக்கள் மீதும் ஞாய உணர்வு கொள்!

  9. கடலூர் சித்தன்.ஆர் says:
    14 years ago

    “ஒருபக்கம் வடிகால் பயன்பாடு,இன்னொருபக்கம் பிச்சைபோடுவது  போன்ற செயல், நம்பக்கம் சோதனை ப்ராஜெக்ட்-  சபாஷ்…. பாருக்குள்ளே நல்ல நாடு- நம் பாரத நாடு!—–இது ஒரு நாடு. அதில் நாங்கள் மட்டும் அடிமைகள். .யாருக்கும்வெட்கமில்லை.மன்னைவாரிபோடும் நிலை நமக்கு.”—-இந்த சுனாமி மீண்டும் வந்து எங்களை கொண்டுபோகட்டும்.  

  10. கடலூர் சித்தன்.ஆர் says:
    14 years ago

    இந்த அண்டைமாநில கவர்ச்சி மோகம் நம்மைவிட்டு போகும் வரை, சத்தியமாக நாம் உருப்படப்போவதில்லை.

    செந்தமிழர்கள், கன்னித்தமிழ்/ தமிழருடன்???.. நடத்தும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை  ஆதரிக்கும் நமக்கு, இதுவும் வேணும் – இன்னமும் வேணும் ஏமாறுகிறவன் உள்ளவரை ஏமாற்றுபவன் இருந்துகொண்டே இருப்பான்.

  11. கடலூர் சித்தன்.ஆர் says:
    14 years ago

    கேரள மாநிலம் உடும்பஞ்சோலைப் பகுதியில் கேரளத்தினரால் தாக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டதாகக் கூறப்படும் தமிழ்க் குடும்பங்கள்.

    ” உங்கள் உழைப்பில் உடம்பை வளர்த்த சில ஜென்மங்களுக்கு புரிய வைக்கும்நிலையிலுள்ள பல  கேரள அரசியல் வியாதிகள் கட்டிபிடிவைத்தியமும், நம் அரசியல் வாதிகள் தங்களுக்குள்  குடிமி பிடி சண்டைபோட்டு கொண்டிருக்கிறார்களே ?” …
    என்ன  சொல்வது?….வேண்டிக்கொள்ளுங்கள் , வீட்டில் /வீட்டினருகில் இருக்கும் ஆண்டவனை!

  12. கடலூர் சித்தன்.ஆர் says:
    14 years ago

    ” கேரள மக்களைக் இருமாநில நலன் கருதி எந்தவொரு பிரிவினை சக்திகளுக்கும் இடம் தராமல் இருக்க வேண்டுமென்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்”தமிழர்கள்  நம்முடன் வாழும் அணைத்து மொழி பேசுபவர்களையும்  நல்லபடியாக தான் பார்க்கிறோம். இல்லாவிடில் 234 எம்.எல்.ஏ. மற்றும் மந்திரிகளில் 20% அண்டைமாநில மொழியை பேசுபவர்கள் சென்ற முறை பதவி வகித்திருக்க முடியுமா? /அண்டைமாநிலங்களில்  நம்மால் இப்படி நினைத்து பார்க்க  முடியுமா?  “யாதும் ஊரே யாவரும் கேளீர்”- என்று வாழ்ந்த  தமிழர்களை சீண்டிவிட்டது யார்? வினை அறுத்தவன் வினை அறுப்பான். எல்லாம் நன்மைக்கே!இப்போது புரிகிறதா நம் அரசியல்வாதிகள் கச்ச தீவு/காவிரி/  முல்லை/ சின்னத்திரை/பெரியதிரை /வணிகம்/தமிழுணர்வு ஆகியபல   அஸ்திரங்களை தரைவாரி கொடுத்ததற்கும்/ மழுங்கடிப்பதற்கான  நடவடிக்கைகள் பற்றி ?…  

  13. andy appan says:
    14 years ago

    MULLAI PERIYAR DAM, THEKKADY. KERALA
    MAIN DAM, BABY DAM, SHUTTERSWILL NEVER BE  TOUCHED / DISTURBEDMWL + 155 Ft    FRL + 152 Ft   SILL  + 136  Ft  100 % Field Test to Test the Strength of Dam at Site by Storing Water Upto + 155 Ft at U/S Side of Dam
    R C C . Water Wall Is Constructed 100 Ft  Away on U/S Side of Dam Upto + 155 Ft  Water Level .Water Is Stored Upto + 155 Ft  In between  Waterwall & Dam to Test the Strength of Dam at Site + 155  Feet  WL
    If The Dam Breaks during Test Flood Water will Flow to D/S.To Prevent this Flood, R C C . Water Wall Is Constructed 200 Ft Away on D/S Side of Dam Upto + 136 Feet  Water  Level
    Even If + 120 Feet Water Is Stored to Lower Flood Impact, Water will Raise upto 120+[155-120]/3=+120+36/3=+132 Ft Wl [4 Feet Short]Hence No water will Flow to Vallakadavu, even If Dam Breaks During TestSame for Baby Dam. If need be.
    “ Higher Leakage Leads to Higher Strength In   Masonry Dam “Higher Leakage Is Storage Loss only.
    Project Cost : 210+200+60 = 470 Crores 36 MonthsMachinery, Material, Labor &TransportM ANDIAPPAN, M E , Executive Engineer P W D [ Rtd]\HYDRAULIC  CALCULATIONS :
    To Strengthening  of  Dam:Force on Dam = H1^2/2 = 155^2/2 = 12,012  unitPush  from d/s = H2^2/2 = 136^2/2 = 9,248 unitNet =  H1^2/2 – H2^2/2 = 12012- 9248 = 2,764 unitRatio = 2764/12012= 23 %Hence a water wall upto +136 Feet is done,Store full WaterTo reduces the Force on Dam to 23 %, asTo increase strength for same + 155 MWL.To High Flood Discharge at + 155 MWLFlood  Discharge weir :NOWSill  now  + 136  Feet  Head = 155-136 = 19 ftCoefficient  of discharge = 0.7  for broad crested weirWidth       20 x 36  = 720 FeetDischarge = 86,000 c/sANDY DESIGN :Sill    + 136  Feet  Head = 147-136 = 11 ftCoefficient  of discharge = 1.0  for Free OgeeWidth           1200 Feet WATER WALL UPTO + 136 FEET IS ENOGH TO Discharge=0.6*1200/720*86,000*1.0/0.7 = 1,22,856 c/sIncrease = 122,856 – 86,000 = 36,856 c/sRatio 122,856/86,000 = 142,8 %CONCLUTION :A water wall upto + 136 feet on d/s of main Dam is enough to strengthen dam, to have high flood dischargeProject Cost   Rs 60 Crores  2 yrs

  14. andy appan says:
    14 years ago

    SITE  IS  GOOD  FOR  NOTHING
    NO CHANCE TO EDIT

    ALL JUMBLED,  JUMBLED, JUMBLED  
    NO PARA, NO SENTANCE, NO NOTHING
    ANDY

  15. கடலூர் சித்தன்.ஆர் says:
    14 years ago

    தமிழர்கள் அரசியலில் சம பங்கும், மலையாளி/தெலுங்கர்/கன்னடர் என இனத்தகுதி அடையும், இரட்டை கலையை கொஞ்சம் கற்று கொடுங்களேன்.???

    தமிழகப் பிரச்னைகளுக்காக மீண்டும் போராட்டம்: விஜயகாந்த்

    தமிழர்கள் நலன் காக்கும் இந்த விஷயத்தில் -உங்களுக்கு என்ன வேலை???

    ஹி… ஹி….ஹி… என்னங்க அண்டைமாநிலங்களில் நூற்றாண்டுகளாக வாழும் தமிழர்கள் தனது ஏழு அறிவை பயன்படுத்தி அரசியலில் சம பங்கும், மலையாளி/தெலுங்கர்/கன்னடர் என இனத்தகுதி அடையும், இரட்டை கலையை தமிழர்களுக்கு கொஞ்சம் கற்று கொடுங்களேன். வாழ்க தேசியம்.

  16. andy appan says:
    14 years ago

    1952  KAMARAJ, NEHRU  SPARED IDUKKI for  KANYAKUMARI  in which KERALITE- CRISTIAN=NADAR  are  LIVING
    1969   KANUNANITHY  GAVE   TO KERALA
    1  KUMULI-THEKKADI  ROAD
    2 BOATING RIGHT IN DAM
    3  FISHING RIGHT IN DAM
    1979   MGR  ENDORSED DAM TO KERALA
      REFUTED by then PWD MINISTER  NAINAR  MOHMAD of PERIYAKULAM ,THENI Dist
    1984  ALL WORKS ARE  DONE
    2006  SC VERDICT for + 142 Feet  ,  REFUTED BY KERALA.  JJ SLEPT 
    2006-2011  KARUNANITHY  EARED 30,000 Cr FOR HIS FAMILY
    2O11   TILL DATE  JJ IS SITTING
    WHEN WILL THEY GETUP?
    ALAS…
    ANDY APPAN

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...