Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

மீண்டும் ஒருங்கிணையும் விடுதலைப் புலிகள்- ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் 22)

இனியொரு... by இனியொரு...
08/10/2010
in பிரதான பதிவுகள் | Principle posts, வரலாற்றுப் பதிவுகள், அரசியல்
0 0
120
Home பிரதான பதிவுகள் | Principle posts

ஆதரவாளர்கள் தமது முயற்சியை கைவிடவில்லை. லண்டனிலிருந்து வந்திருந்த ராஜா மற்றும் குலம் ஆகியோர் இணைவுக்கான புதிய திட்டங்களோடு எமது உறுப்பினர்கள் அனைவரையும் சந்திக்கின்றனர். பிரபாகரன் குழுவிலிருந்த உறுப்பினர்களையும் பலதடவை தனித்தனியாகச் சந்திக்கின்றனர். இடைவிடாத இவர்களின் முயற்சியின் பலனாக அனைத்து உறுப்பினர்களும் சந்த்தித்து உள்ளக வாக்கெடுப்பு ஒன்றை நிகழ்த்த வேண்டும் என்று முடிவாகிறது. பிரபாகரன், நாகராஜா, பேபிசுப்பிரமணியம், நான் உட்பட ஏனைய அனைத்து உறுப்பினர்களையும் அழைத்து வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கான திகதியும் குறிக்கப்பட்டுவிட்டது.

ராஜாவின் வீடு ஊர்காவற்துறையை அண்மித்த பகுதியில் பாதுகாப்பான இடத்தில் அமைந்திருந்ததால் அனைத்து உறுப்பினர்களையும் ஒருங்கிணைப்பதற்குப் பொருத்தமான இடமாகத் தெரிவுசெய்து கொள்கின்றனர். தீவுப்பகுதியான ஊர்காவற் துறையில் அப்போதெல்லாம் பொலீஸ் இராணுவக் கெடுபிடிகள் பெரிதாக இருந்ததில்லை. ஒன்றுகூடலுக்கான பாதுகாப்பான பிரதேசமாக அமைந்திருந்தது. அன்று அதிகாலையே அனைவரும் மிகுந்த நம்பிக்கையோடு ஊர்காவற்துறையை நோக்கிப் பயணிக்கிறோம். வழி நெடுகிலும் எம்மைப் போன்ற இளைஞர்களைச் சந்திக்கிறோம். எந்தத் துரயமும் இன்றி நண்பர்களோடு உல்லாசமாய் தெருக்களில் கூடித்திரிந்த இளைஞர்களைக் கடந்து செல்கிறோம்.

பிரபாகரன் குழுவில் இருந்தவர்கள் கூட எங்கோ தொலைவில் தெரிந்த நம்பிக்கையோடே அங்கு வந்திருந்தனர்.

அங்கு வந்திருந்த அனைவரும் எதோ நோக்கத்திற்காகக் கூடியிருந்த இளைஞர்கள். எங்காவது ஒரு புள்ளியில் மரணித்துக் கூடப் போய்விடலாம் என்று தெரிந்திருந்தும் தாம் சார்ந்த மக்கள் கூட்டத்திற்காகப் போர்குரல் கொடுக்க வந்திருந்தவர்கள்.

நிண்ட நேர விவதங்களைக் கடந்து செல்கிறோம். நமது தேசத்தின் எதிர்காலம் குறித்த விவாதங்கள் அனைவரையும் மீண்டும் ஒரு புள்ளியில் இணைக்கிறது. போராடவென்று முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட நமது முன்னோக்கிய அசைவியக்கம் குறித்த அக்கறை அனைவரிடமும் காணப்பட்டது.

ஒரு சிலரைத் தவிர யாருக்கும் பிரிந்து சென்று தனித்தனிக் குழுவாக இயங்குவதில் விருப்பு இருக்கவில்லை. அனைவரும் ஒன்றிணைந்து ஏதாவது சாதித்துவிட வேண்டும் என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

அந்த விவாதங்களில் நடுவே பிரபாகரன் குறித்த விமர்சனங்கள் வந்து செல்கின்றன. ஆக, பன்முகத் தன்மை கொண்ட, ஜனநாயகத்தையும் மத்தியத்துவத்தையும் ஏற்றுக்கொள்கின்ற மத்திய குழு அமையுமானால், நிலவும் பிரச்சனைகளை முடிவிற்குக் கொண்டுவரலாம் என்ற கருத்து பெரும்பான்மையாகிறது.

அப்போதுதான் ஒரு மத்திய குழுவை வாக்கெடுப்பின் அடிப்படையில் தெரிவு செய்யலாம் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. வாக்கிடுப்பின் பின்னர் உருவாகும் மத்திய குழு பத்திரிகை வெளியிடுவது குறித்தும் தீர்மானிக்கும் என்ற கருத்தும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

விவாதங்கள் அனைத்தும் முடிவடைந்து மதியத்திற்குச் சற்றுப் பின்னதாக வாக்கெடுப்பு ஒன்று உறுப்பினர்களுக்கு மத்தியில் நடத்தப்படுகிறது. பிரபாகரன் எம்மோடு அங்கு விவாதத்தில் ஈடுபட்டிருந்தாலும் அவர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ள மறுத்துவிட்டார். அவர் தவிர நந்தனும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ள மறுத்துவிட்டார். இவர்கள் இருவருமே அதற்கான காரணத்தை முன்வைக்கவில்லை. பலரின் வேண்டுகோளையும் அவர்கள் புறக்கணிக்கின்றனர். இறுதியில் அவர்கள் இருவரும் இல்லாமலே வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

பிரபாகரன் குழுவைச் சார்ந்தவர்களும் எம்மைச் சார்ந்தவர்களுமாக 27 போராளிகள் அங்கு கூடியிருந்தனர். இந்த வாக்கெடுப்பு ஒரு இரகசிய வாக்கெடுபாகவே நடைபெறுகிறது. அங்கு வந்திருந்த ஒவ்வொருவரும் தாம் விரும்பியவர்களது பெயர்களை சிறிய காகிதத்தில் எழுதி வாக்களிப்பதாகத் தீர்மானிக்கப்படுகிறது. பத்து வாக்குகளுக்குக் குறைவாகப் பெற்றவர்களை விடுத்து ஏனையோரில் விருப்புக்கொண்ட ஆறு பேரைக் கொண்ட மத்திய குழு ஒன்று உருவாக்குவதாகத் தீர்மானிக்கப்படுகிறது.

தம்பி ,ராகவன்,பண்டிதர்,மனோ,மாத்தையா,அன்ரன்,தனி,ஆசீர், கலாபதி,சங்கர் ,குமரப்பா,காந்தன்,பீரீஸ்,நாகராஜா,குமணன்,சாந்தன், மாதி,நிர்மலன்,சுந்தரம்,நந்தன்,அழகன், நெப்போலியன்,சிவம் ஆகியோரோடு இன்னும் சில தோழர்களும் என்னோடு கலந்துகொண்டிருந்தனர்.

அந்த வாக்கெடுப்பின் போது, சாந்தன் 27 வாக்குகளை உறுப்பினர்கள் மத்தியிலிருந்து பெற்று அனைவரினதும் அபிமானம் பெற்ற போராளியாகிறார்.

சாந்தனுக்கு அடுத்ததாக எனக்கும் அன்டனுக்கும் 26 வாக்குகள் கிடைக்கின்றன. பிரபாகரன் 25 வாக்குகளைப் பெற்றுக்கொள்கிறார். தனி 21 வாக்குகளையும், மனோமாஸ்டர் 19 வாக்குகளையும், ராகவன் 16 வாக்குகளையும் பெற்றுக்கொள்கின்றனர் நாகராஜா, பேபி, குமணன் போன்ற கோடிட்டுக் காட்டக் கூடிய பலர் பத்துக்கும் குறைவான வாக்குகளையே பெற்றுக்கொண்டனர்.

மனோமாஸ்டர் மத்திய குழுவில் இணைந்துகொள்ள விருப்பம் தெரிவிக்காத காரணத்தால் அவருக்கு அடுத்ததாக வாக்குகளுக்கு அதிகமாகப் பெற்றுக்கொண்ட ராகவனை மத்திய குழுவில் இணைத்துக் கொள்கிறோம். ஆக, இப்போது பிரபாகரன்,நான், சாந்தன்,அன்டன்,தனி,ராகவன் என்ற ஆறுபேர் கொண்ட மத்திய குழு உருவாகிறது.

இவ்வாறு மத்திய குழு ஒன்று தெரிவு செய்யப்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்த பின்னர், பத்திரிகை வெளியிடுவதற்கான முடிவுககளை மேற்கொள்கிறோம்.

பத்திரிகையின் பெயர் தொடர்பான விவாதங்கள் எழுகின்றன. உணர்வு என்பது பிரபாகரன் குழுவினரின் சஞ்சிகையின் பெயராகவும், புதிய பாதை எமதாகவும் இருந்தது. வந்திருந்தவர்களின் எண்ணைக்கையில் இருபகுதியினருமே அரைவாசி அளவில் இருந்ததால், ஒரு முடிவிற்கு வரமுடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறோம். அவ்வேளையில் அங்கிருந்த குமரப்பா புதிய பாதை என்ற பெயரையே விரும்புவதாகத் தெரிவித்ததால், அப் பெயரையே இறுதியில் சஞ்சிகையின் பெயராக ஏற்றுக்கொள்கிறோம்.

தமிழீழ விடுதலை புலிகள் பிளவடைந்த வேளையில் விரக்தியுற்ற நிலையில் அரசியலிலிருந்து விலகிச் செல்வதாகத் தீர்மானித்த குமரப்பா, நாம் மீண்டும் இணைவதை அறிந்துகொண்டதும் கூட்டத்திற்கு வந்திருந்தார். இவரைத் தவிர செல்லக்கிளி போன்ற சில போராளிகள் எந்தத் தொடர்புமின்றி ஒதுங்கியிருந்தனர்.

மத்திய குழு தெரிவாகிவிட்டது. பத்திரிகைக்கான பெயரும் உருவாக்கப்பட்டுவிட்டது. மீண்டும் எதிர்காலம் குறித்த பேச்சுக்களை ஆரம்பிக்கிறோம். இணைவை ஏற்படுத்திய ராஜாவிற்கும் மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுத்தும் நாளாகவும் அது அமைந்திருந்தது. அனைவருடனும் தனித்தனியாகப் பேசுகிறார். இந்த சந்தர்ப்பத்தில் பிரபாகரன் தான் எந்த முடிவையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் பிரிந்து செல்லப்போவதாகவும் கூறுகிறார். அதற்கான காரணங்கள் எதையும் அவர் முன்வைக்கவில்லை எனினும் தனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறுகிறார். இப்போது அவர் பிரிந்து செல்வதாகக் கூறியதும் யாரும் தடுக்கவில்லை. பேபி சுப்பிரமணியமும் பிரபாகரனுடன் தானும் செல்வதாக எழுந்து செல்கிறார்.

இவ்வேளையில் சுந்தரம் பிரபாகரனை நோக்கி, கைத் துப்பாகியை ஒப்படைத்துவிட்டுச் செல்லுமாறு கோருகிறார். அதற்குப் பிரபாகரன் பதிலளிக்க முன்பதாகவே ஏனைய அனைவரும் துப்பாக்கியை அவர் தனது பாதுகாப்பிற்காக வைத்திருக்கட்டும் என ஒரு மனதாகக் கூறுகின்றனர்.

இணைவு முயற்சியை ஏற்பாடுசெய்த ராஜா கூட பிரபாகரனுட நீண்ட நேரம் உரையாடுகிறார். இணைந்து செயற்படும்படி கூறுகிறார். பிரபாகரன், பேபி சுப்பிரமணியம் ஆகிய இருவர் மட்டுமே பிரிந்து சென்று எதையும் சாதித்துவிட முடியாது என்றும் ஒற்றுமையாகச் செயற்படும்படியும் வலியுறுத்துகிறார். பிரபாகரன் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. பேபி சுப்பிரமணியத்தைப் பொறுத்தவரை பிரபாகரன் என்ன முடிவெடுக்கிறாரோ அது தான் அவரது முடிவும். நாங்கள் இணைந்திருந்த காலம் வரை பிரபாகரனுக்கு எதிராக அவர் எந்த சந்தர்ப்பத்திலும் நடந்து கொண்டதில்லை.

புதிதாக உருவான மத்திய குழுவில் பிரபாகரன் சார்ந்த நான்கு பேரும் எமது குழுவைச் சார்ந்த இரண்டு பேரும் உறுப்பினர்களாக தெரிவாகின்றனர். பிரபாகரன் பிரிந்து செல்வதாகக் கூறியதும் இந்தக் குழு ஐந்து பேராகச் சுருங்கிவிடுகிறது.

எது எவ்வாறாயினும் இரண்டு குழுக்களுக்கும் இடையிலான முரண்பாடு அரசியல் முரண்பாடாகவே அமைந்திருந்தது. எம்மைப் பொறுத்தவரை மக்கள் வேலைகளூடன தேசிய விடுதலை இயக்கத்தை உருவாக்குவதாகவும், தம்பியுடன் சார்ந்தோரைப் பொறுத்தவரை இராணுவத் தாக்குதல் நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்தும் காணப்பட்டது. எமது கருத்துக்களுக்கு உட்பட்டவர்களின் விட்டுக்கொடுப்பும், எதிர்க்கருத்துடையவர்களின் நெகிழ்ச்சியும் இணைவை ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையை மட்டுமே தளமாகக் கொண்டிருந்தது. பொதுவான அரசியல் தளம் ஒன்று அங்கு காணப்படவில்லை. அதற்கான முதிர்ச்சியும் எம்மிடம் இருந்திருக்கவில்லை.

இரு புறத்திலுமே இவ்வகையான முரண்பாடுகளை வெறுமனே தனி நபர் முரண்பாடுகளாக மாற்ற முற்பட்டவர்களும் தனி நபர் முரண்பாடாகக் கருதியவர்களும் உண்டு. சுந்தரம். கலாபதி, நந்தன், மனோ போன்றோரின் தனிநபர் சிக்கல்கள் ஆளுமை செலுத்துவனவாகவும் அமைந்திருந்தன என்பதையும் மறுக்க முடியாது.

இச்சம்பவம் நடந்து சில நாட்களில் புதிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக மத்திய குழுக் கூட்டம் ஒன்று நடைபெறுகிறது. யாழ்ப்பாணப்பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. முதல் கூட்டத்திற்கு பிரிந்து செல்வதாகச் சென்ற பிரபாகரன் மறுபடி சமூகம் தருகிறார். பிரபாகரன் வெளியேறுவதாகக் கூறுவிட்டுச் சென்றிருந்தாலும் அவர் மீண்டும் மத்திய குழுவிற்கு வந்ததும் யாரும் எதிர்ப்புத் தெரிவிக்காமல் அவரை ஏற்றுக்கொள்கிறோம்.

அவர் வந்ததுமே மீண்டும் விவாதங்கள் ஆரம்பமாகின்றன. மக்கள் வேலை பயனற்றது என்றும் இராணுவ நடவடிக்கைகளே அவசியமானது என்றும் உடனடியாக நாம் இராணுவம் ஒன்றைக் கட்டமைக்க வேண்டும் என்றும் பிரபாகரன் வாதம் புரிய ஆரம்பிக்கிறார்.

சாந்தனும் நானும் கடந்த காலத்தின் அந்த வழிமுறை தவறானது என்பதை திரும்பத் திரும்ப அரசியல் காரணங்களோடு முன்வைக்கிறோம். பிரபாகரன் அந்த விடயத்தில் விட்டுக்கொடுப்பதாய் இல்லை. ஒரு பலமான இராணுவமும் அதற்குரிய தலைமையும் மட்டும்தான் அவசியம் என்று வாதிடுகிறார். இராணுவத் தலைமை குறித்த விவாதங்களுக்கு அப்பால் மேலதிகமாக அவர் எங்கும் செல்லவில்லை. எம்மால் அப்போது புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், பிரபாகரனுக்கும் எமக்கும் இடையிலான முரண்பாடென்பது தெளிவான அரசியல் முரண்பாடாகவே அமைந்திருந்தது. ராகவன் இரண்டு பகுதியினருக்கும் இடையில் சமரசத்திற்கு முயற்சிக்கிறார். இந்த இழுபறிகளுக்கு மத்தியில் புதிய பாதையின் ஒரு பிரசுரமும் வெளியிடப்படுகிறது.

(இன்னும்வரும்..)

குறிப்பு: மேலதிக ஆவணங்களுடன் அச்சு நூலாக வெளிவரவரவிருக்கும் இத் தொடர்,இன்னும் சில பதிவுகளின் பின்னர் முடிவுறும். அந்தக் கால வெளிக்குள் கட்டுரையாளர் ஐயரின் நேர்காணல் ஒன்றை வெளியிட ஆலோசித்துள்ளோம். இந்த நேர்காணலின் ஒரு பகுதி அச்சுப்பதிவாகும்  நூலின் பின்னிணைப்பிலும்  இனியொருவிலும்  சில நாட்களில் பதியப்படும். இனியொரு வாசகர்கள், ஆர்வலர்கள், படைப்பாளிகள் இந்த நேர்காணலுக்கான வினாக்களை இங்கே பின்னூட்டமாகப் பதிவிடலாம்.

தொடரின்  முன்னைய பதிவுகள்…

பாகம் 21 பாகம் 20 பாகம் 19 பாகம் 18 பாகம் 17 பாகம்16 பாகம்15 பாகம்14
பாகம்13 பாகம்12 பாகம்11 பாகம்10 பாகம்9
பாகம்8 பாகம்7 பாகம்6 பாகம்5 பாகம்4
பாகம்3 பாகம்2 பாகம்1

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

கிராமவாசிகளை ஏமாற்றிப் பெளத்த விகாரை அமைக்கப்படுகிறது : தொடரும் இனச் சுத்திகரிப்பு

Comments 120

  1. Shan Nalliah,Gandhiyist Norway says:
    16 years ago

    There was no give & take policy! No respect for democratic decisions!No unity! No respect for valuable Tamil lives! No respect for peoples involvement or peoples political movements! No intl cooperation or sympathy! We shd respect each other!listen to each other! Debate & accept democratic choices/orgns! We shd include all Tamils! Listen to elders/inteligensias etc!

    • ponniah says:
      16 years ago

      i believe that TULF was on political work at that time. There was no need for political work. They should have worked with TULF without messing all of them. Young men should have formed only army under the order of the TULF without talking about communisim and socialism. These militant group wasted time and mss up evryhing.

      Now, we lose our country to Sinhalese with help of our people . What a shame .

  2. velavan says:
    16 years ago

    My dear Friend!

    You are right but it is too late to remember the past and talk about the past. Now let’s see what we can do today and what we have to do for tomorrow. We have already learned the longest and the most disgusting lession from the subject of “DISTRUCTION OF DISUNITY” now we have a new subject called ” SUCCESS OF UNITY OF THE LOST GENERATION”. So, let’s have the ” UNDERSTANDING, KNOWLEDGE & UNITY”.and we have to tell for each and every one of our friends those who are missing in their life. Every single day things are changing , the polictics, religions, the people, and their way of thinking, and you can see this change in every element. Why ?,even the sand , water , air and you name it anything in this world and there you will find little change.And the change happens every single day but we don’t look at it and we don’t care about those things. So, we also have to change our way of thinking.There are over 35000 widows in our lands and thos children who have no-one to take care of them, are taken by anti-cultural activitists and changed their way of life and destroyed their original identities. Those who constantly talked about our country in the past thirty years, completely stopped talking about it now because they don’t want to do anything for their country. We don’t want to talk about them but people know everything and now people are awken and they are really smart.It is very easy to write fabulous comments about the past but the fact is that the people don’t need those very sensitive comments about the past incidents. THE PAST WILL NEVER BECOME THE PRESENT BUT THE PRESENT WILL BECOME THE PAST AND TH E FUTURE WILL BECOME THE PRESENT. So let think about the future and write about it to the people and then people know what to do and how to do.

    • Shan Nalliah,Gandhiyist Norway says:
      16 years ago

      YOU ARE RIGHT! NOW WE NEED VERY URGENTLY…. UNITY AMONG PEOPLE & REASONABLE GROUPS UNDER TNA, POLITICAL TACTICS, DIPLOMATIC MOVES,ECONOMIC MANIPULATIONS BY GTF/TGTE, PEOPLES FORUMS IN EACH VILLAGES/TOWNS IN SL/ AS WELL AS EU,AU,NA,ME TO HELP EACH OTHER INCLUDING WIDOW&ORPHANS!
      EACH EMBASSIES SHD BE CONTACTED BY DIASPORA GET SOME IDEA ABOUT IC SUPPORT! LIKE HNB….EX. JAFFNA NATIONAL BANK CAN HELP TO UNITE TAMIL DIASPORA ECONOMY& SLTAMIL ECONOMY! KEEP FOREX UNDER OUR CONTROLL! LAST AMT OF INSURANCE FEE COULD BE SAVED IF JNB START ALL INSURANCE SCHEME FOR ALL TAMILS IN EU,NA,AU,ME ETC! WE CAN START TALKS WITH KOSOVA,ERITREA,CZECH,SLOVAK,BOSNIA ETC ABOUT THEIR EXP & GET ADVICE! I STARTED WTEF,
      WTTT,WTRF! IT MAY HELP TO SHARE OUR IDEAS!TALK & IMPLEMENT!
      http://worldtamilthinktank.blogspot.com

  3. வாதம் says:
    16 years ago

    “நாகராஜா, குமணன், நிர்மலன், சாந்தன், சுந்தரம், மாதி, கண்ணன், நந்தன், சிவம் அழகன், நெபோலியன் போன்ற தோழர்கள் எம்மோடு இருந்தனர். அதேவேளை மறுபக்கத்தில் பிரபாகரன், ராகவன், பண்டிதர், மனோமாஸ்டர், மாத்தையா, அன்ரன், தனி, ஆசிர், கலாபதி, சங்கர் போன்றோர் தனியாக இயங்க ஆரம்பித்தனர்.”

    புதிய பாதையின் தோற்றம் – ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்(பாகம்20) : ஐயர்

    “புதிதாக உருவான மத்திய குழுவில் பிரபாகரன் சார்ந்த நான்கு பேரும் எமது குழுவைச் சார்ந்த இரண்டு பேரும் உறுப்பினர்களாக தெரிவாகின்றனர்.”

    மீண்டும் ஒருங்கிணையும் விடுதலைப் புலிகள்- ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் 22)

    இயக்கத்திலிருந்து பிரிந்தவர்கள் பெரும்பான்மையாயின்,அவர்கள் மீண்டும் சேர்ந்த போது,2 க்கு 4 என எவ்வாறு மத்திய குழு உருவாகும்?

  4. ரூபன் says:
    16 years ago

    முரண்பாடுகளை விளக்க மறுக்கும் ‘ஐயரின்’ வரலாறு…..

    ஐயாவின் 20 ஆவது பதிவில்:

    பிரபாகரனால் வெயிடப்பட்ட, ‘தாயகத்தில்’ வெளியான துண்டுபக்பிரசுரத்தை ஐயாவின் பதிவு ஏற்றுக்கொண்டிருந்தது!

    (இதை இவர்கள் மீண்டும் மீண்டும் வாசிக்கவேண்டும்!)

    22வது பதிவில்…

    ”விவாதங்கள் அனைத்தும் முடிவடைந்து மதியத்திற்குச் சற்றுப் பின்னதாக வாக்கெடுப்பு ஒன்று உறுப்பினர்களுக்கு மத்தியில் நடத்தப்படுகிறது. பிரபாகரன் எம்மோடு அங்கு விவாதத்தில் ஈடுபட்டிருந்தாலும் அவர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ள மறுத்துவிட்டார். அவர் தவிர நந்தனும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ள மறுத்துவிட்டார். இவர்கள் இருவருமே அதற்கான காரணத்தை முன்வைக்கவில்லை. பலரின் வேண்டுகோளையும் அவர்கள் புறக்கணிக்கின்றனர். இறுதியில் அவர்கள் இருவரும் இல்லாமலே வாக்கெடுப்பு நடைபெறுகிறது.-”

    குறிப்பு: பிரபாகரன் வாக்கெடுப்பை விரும்பவில்லை!!

    மறுபக்கத்தில் ‘நந்தனும்’ வாக்கெடுப்பை மறுத்ததாக ஐயாவின் பதிவு. (இவற்றை ‘ஐயாவால்’ இன்றுவரை விளங்க முடியவில்லை!!)

    வாக்கெடுப்பின் படி—–

    சந்தன் , அன்ரன், ஐயருக்குப்பின்…

    ”எது எவ்வாறாயினும் இரண்டு குழுக்களுக்கும் இடையிலான முரண்பாடு அரசியல் முரண்பாடாகவே அமைந்திருந்தது. எம்மைப் பொறுத்தவரை மக்கள் வேலைகளூடன தேசிய விடுதலை இயக்கத்தை உருவாக்குவதாகவும், தம்பியுடன் சார்ந்தோரைப் பொறுத்தவரை இராணுவத் தாக்குதல் நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்தும் காணப்பட்டது. எமது கருத்துக்களுக்கு உட்பட்டவர்களின் விட்டுக்கொடுப்பும், எதிர்க்கருத்துடையவர்களின் நெகிழ்ச்சியும் இணைவை ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையை மட்டுமே தளமாகக் கொண்டிருந்தது. பொதுவான அரசியல் தளம் ஒன்று அங்கு காணப்படவில்லை. அதற்கான முதிர்ச்சியும் எம்மிடம் இருந்திருக்கவில்லை”.

    இடையில்….

    தேசிய விடுதலைப் போராட்டம் எவ்வாறு எமது நாட்டில் நடத்தப்படவேண்டும் என்று இதுவரை (ஐயாவால் தெளிவாகக் கூறப்படவுமில்லை!) இது ஆச்சரியம்!!!

    ”இச்சம்பவம் நடந்து சில நாட்களில் புதிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக மத்திய குழுக் கூட்டம் ஒன்று நடைபெறுகிறது. யாழ்ப்பாணப்பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. முதல் கூட்டத்திற்கு பிரிந்து செல்வதாகச் சென்ற பிரபாகரன் மறுபடி சமூகம் தருகிறார். பிரபாகரன் வெளியேறுவதாகக் கூறுவிட்டுச் சென்றிருந்தாலும் அவர் மீண்டும் மத்திய குழுவிற்கு வந்ததும் யாரும் எதிர்ப்புத் தெரிவிக்காமல் அவரை ஏற்றுக்கொள்கிறோம்.
    அவர் வந்ததுமே மீண்டும் விவாதங்கள் ஆரம்பமாகின்றன. மக்கள் வேலை பயனற்றது என்றும் இராணுவ நடவடிக்கைகளே அவசியமானது என்றும் உடனடியாக நாம் இராணுவம் ஒன்றைக் கட்டமைக்க வேண்டும் என்றும் பிரபாகரன் வாதம் புரிய ஆரம்பிக்கிறார்.”

    (மேல் பந்தியை வரலாற்றை விளங்கத் துடிப்பவர்கள் நிதானமாக வாசிக்கவேண்டும்)

    இறுதியாக…

    ”இந்த இழுபறிகளுக்கு மத்தியில் புதிய பாதையின் ஒரு பிரசுரமும் வெளியிடப்படுகிறது.”

    இதை ஐயா வெளியிடவேண்டும்!!!!!

    ஆதாரம்:–

    ”சாந்தனும் நானும் கடந்த காலத்தின் அந்த வழிமுறை தவறானது என்பதை திரும்பத் திரும்ப அரசியல் காரணங்களோடு முன்வைக்கிறோம். பிரபாகரன் அந்த விடயத்தில் விட்டுக்கொடுப்பதாய் இல்லை. ஒரு பலமான இராணுவமும் அதற்குரிய தலைமையும் மட்டும்தான் அவசியம் என்று வாதிடுகிறார். இராணுவத் தலைமை குறித்த விவாதங்களுக்கு அப்பால் மேலதிகமாக அவர் எங்கும் செல்லவில்லை. எம்மால் அப்போது புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், பிரபாகரனுக்கும் எமக்கும் இடையிலான முரண்பாடென்பது தெளிவான அரசியல் முரண்பாடாகவே அமைந்திருந்தது. ராகவன் இரண்டு பகுதியினருக்கும் இடையில் சமரசத்திற்கு முயற்சிக்கிறார். இந்த இழுபறிகளுக்கு மத்தியில் புதிய பாதையின் ஒரு பிரசுரமும் வெளியிடப்படுகிறது”

    ரூபன்
    26 07 2010.

  5. saravanan says:
    16 years ago

    அன்ரன் எனப்படுபவர் யார்? அவர் எந்த ஊரை சேர்ந்தவர்?சுளிபுரத்துக்கு அருகாமையில் உள்ள பண்ணாகமா அவருடைய சொந்த ஊர்? தயவு செய்து பதிலை தரவும் ஐயரே? நன்றி

  6. bhanu says:
    16 years ago

    ஐயா வணக்கம்
    பல கோளாறுகளுடன் ஆரம்பித்தாலும் இடையில் மாபெரும் இராணுவ வெற்றிகளையும் திரு பிரபாகரன் தலைமையிலான அமைப்பு கண்டுள்ளது.அரசியல ரீதியாக பெரியளவு சாதிக்கவில்லை என்பது யாவரும் அறிந்த்தே.பின்னர் திரு அன்ரன் பாலசிங்கம் அவர்கள் ஓரளவு சர்வதேச அளவில் தமிழர் பிரச்சனையை எடுத்து சென்றவர்.அவரை பற்றி உங்கள் கருத்து என்ன?
    நிற்க இன்றைய நிலையில் இனவிடுதலைப்போருக்காக நாம் இழந்தவை மிக மிக அதிகம்.உண்மையை சொல்வதானால் நமக்கு இன்று இராணுவரீதியாகவோ அரசியலரீதியாகவோ படுதோல்வி.நான் நினைக்கிறேன் தெழிவான ஒரு இடதுசாரி சிந்தனையுடன் கூடிய ஒரு அரசியல் அமைப்பே ஈழத்தமிழரின் உரிமைகளை வென்றெடுக்கும்.காலதாமதம் ஆகலாம்.ஆனால் நகர்வுகள் உறுதியாக இருக்கும்.அந்த அமைப்பிற்கு ,திரு பிரபாகரன் போன்று அதாவது தனது ராணுவ போராட்டத்தில் அசைக்க முடியாத நம்பிக்கையும் எவரிடமும் எக்காலத்திலும் விலைபோகத தன்மையும் செயல்வீரமும் உள்ள ஒரு தலைவர் தேவை.
    ஈழத்தமிழர்களின் எதிர்கால அரசியல் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் ஐயர்?

  7. rathan says:
    16 years ago

    அன்ரன் கொக்குவிலை சேர்ந்தவர் யாழ் இந்துக்கல்லூரி,யாழ் பல்கலை கழக பழைய மாணவர்.தற்போது சவுத் ஆபிரிக்காவில் இருகின்றார்.மிக அமைதியான சுபாவமுடயவர்.

    • saravanan says:
      16 years ago

      நன்றி சுழிபுரத்தில் இருந்தும் ஒரு அன்ரன் புலிகள் அமைப்பில் ஆரம்ப உறுப்பினராக இருந்துள்ளார்.அதுதான் கேட்டேன்

    • saravanan says:
      16 years ago

      கே பி என்பவர் நேற்று ஒரு அறிக்கை விட்டிருந்தார் 76 களில் அல்பிரேட் துரையப்பாவை கொலை செய்ததால் பிரபாகரன் புலிகள் அமைப்பில் இருந்து அவ் அமைப்பின் தலைவர்களால் நீக்கப்பட்டார் என்று.

  8. mamani says:
    16 years ago

    மொத்தம் 27 போராளிகள் கூடியிருந்தனர் அவர்களில் பிரபா,நந்தன் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை அப்படியாயின் எப்படி சாந்தன் 27 வாக்குகளையும் அன்ரன், ஐயர் 26 வாக்குகளையும் பெற முடிந்தது. சுந்தரம்,காத்தான் வாக்கெடுப்பில் கலந்து கொண்டனரா? நீங்கள் குறிப்பிடும் காந்தன், ஜான் ரஃமானா?

    • கடவுள் says:
      16 years ago

      காந்தன் , மட்டக்களப்பை சேர்ந்தவர், ஜான் திருகோணாமலை
      சேர்ந்தவர்

      • OORAAN says:
        16 years ago

        பின்பு காந்தன் எந்த இயக்கத்தில் இருந்தார். அவரது இயக்கப்பெயர் என்ன?

        • kathiravan says:
          16 years ago

          காந்தன் 90 களின் இறுதிவரை புலிகள் அமைப்பில் வன்னியிலே இருந்தார் , அதன் பின்னர் என்ன ஆனார் எண்டு தெரியவில்லை 

          • yo says:
            16 years ago

            80 ஆண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த பின்வரும்
            நபர்கள் உறுப்பினர்களாக இருந்தனர் . யோகன் ,டானியல்,யோகபதி ,இந்திரன் ,காந்தன்,
            சயந்தன்,நவம் ,வடிவேல் ,சுதா,ராஜா
            யோகன் – முள்ளிவாய்க்கள் வரை இருந்தார்
            காந்தன் -1998 இறுதி இருந்துள்ளார் தற்போது தெரியாது
            டானியல் -கனடாவில்
            யோகபதி -ஜெர்மனி
            இந்திரன் .தெரியாது
            சயந்தன்-தெரியாது
            சுதா- சுவிஸ்
            ராஜா-இறந்துவிட்டார்

  9. ஊர்மிளா says:
    16 years ago

    // இந்த சந்தர்ப்பத்தில் பிரபாகரன் தான் எந்த முடிவையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் பிரிந்து செல்லப்போவதாகவும் கூறுகிறார். அதற்கான காரணங்கள் எதையும் அவர் முன்வைக்கவில்லை// அலவாங்கு ..அண்டைக்கு போட்டிருந்தா  உருப்பட்டிருக்கும் தமிழ் இனம்…..

    • Suresh says:
      16 years ago

      Yep, He made lot of mistakes. first he shd have identified and killed u first befr he died. Stupid.

  10. குமரன் says:
    16 years ago

    இழந்த தாயக மீட்பில் 35 வருடகாலம் ஆக்கிரமிப்புக்கெதிராக ஆயுதமேந்தி

    போராடி தாயகத்தின் சில பகுதிகளை மீட்டெடுத்து தமிழர்களுக்கான ஒரு நாட்டை உருவாக்கி உலகுக்கு காட்டிய பெருந்தலைவன் தமிழ் தேசியத்தின் தலைவன் பிரபாகரன் அவர்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட தமிழர்களின் வரலாற்று மாவீரன் .

    • soba says:
      16 years ago

      After 35 years he surrendered for his life. He ignored all the people fighting for this purpose.

      • Ponnambalam says:
        16 years ago

        Sir, he did not surrender. 

    • mamani says:
      16 years ago

      பிரபாகரன் 35 வருடமாக நடத்தியது சண்டை, போராட்டமல்ல அதனால்தான் அவன் போன பின் சண்டை ஓய்ந்து போனது. போராட்டம் இனிமேல்தான் ஆரம்பிக்க வேண்டும். அங்குள்ள மக்கள் விரும்பினால்.

      • Soorya says:
        16 years ago

        மாமணி,நீங்கள் யார்? ஏதோ பெரிதாக தவகல் தெரிந்தவர்போல் எழுதும் வீரன் யார் நீங்கள்? ஒரு இறந்துபோன மனிதனை அவன், இவன் என்று அழைப்பது யாருக்கு அழகு? இதனால் உங்களின் தரம் எப்படியென்று நீங்களே அளவிட்டுக் காட்டுகிறீர்கள். வதந்திகளை வைத்து தொடர்ந்து காழ்ப்புணர்வில் கருத்தெழுதும் நீங்கள் போதகாக்குறைக்கு மருதமடு முகாமில் உள்ள கைதிகளை சாட்சிக்கு அழைக்கிறீர்கள்.

        பிரபாகரனோடு கடைசிமட்டும் சண்டையிட்டு தப்பியவர் ஒருவரும் இல்லையென்பதால் கண்ணால் காணாமல், காதால் மட்டும் கேட்டதை வைத்து உண்மைக்குப் புறம்பாக வதந்திகளைப் பரப்புவது ஆரோகியமானதல்ல.

        போராட்டம் தொடங்கும் போது இலங்கையிலுள்ள தமிழரிடம் முதலில் கேட்டுவிட்டுத் தொடங்குங்கள்!

        • mamani says:
          16 years ago

          சூர்யாவிற்கு கோபம் வருவதில் நியாயமிருக்கிறது ஏனெனில் இது வரை நீங்கள் கூறியதை அப்படியே கேட்டுவிட்டு கோயில்மாடு மாதிரி தலையாட்டி விட்டு நீங்கள் கேட் கும் பணத்தை அப்படியே வாரிக்கொடுக்கும் அப்பாவிகளைதான் சந்தித்திருப்பீர்கள் கேள்வி கேட்பவர்களையும் துரோகியென்பீர்கள் இப்பொழுது யார் துரோகி யார் தியாகி என்று தெரியாதநிலை . உங்களால் முடியுமா புலம்பெயர்ந்த தமிழரில் இவர் சிறந்தவர் என்று ஒருவர் பெயயரையாவது குறிப்பிட அல்லது இறுதி யுத்தத்தில் இந்த தளபதிநேர்மையானவர் என்று குறிப்பிட்டு சொல்ல!

          • Soorya says:
            16 years ago

            புலி முத்திரை குத்துவதில் எவ்வளவு வேகம் இருக்கிறதோ அதேபோல்தான் உஙகள் வதந்தி பரப்பும் ஆர்வமும் இருக்கிறது.

            சிங்கள மோப்பநாயிகள் உஙளைத் தேடி வந்துவிட்டர்களா?

        • mamani says:
          16 years ago

          உண்மையை சொல்லுங்கள் சரவணனன் பிரபாகரன் களத்தில் இல்லையென்பது நிதர்சனம் ஆனால் அவர் எந்த வகையில் களத்தில் அன்னியமானார் என்பதுதான் பிரச்சனை.
          பிரபாகரன் சரணடைந்து இறந்தான் என்று சொல்வதில் எந்த தமிழனும் பெருமையடைய போவதில்லை.
          மேற்குறிப்பிட்ட பின்னூட்டங்களில் நான் ஏக சொற்களை பிரயோகித்திருப்பது ஆதங்கபட்ட பகுதிகளில்தான் உங்கள் மனதை புண்படுத்தியிருந்தால் மன்னித்து கொள்ளுங்கள். அது வேண்டுமென்று எழுதப்பட்ட ஒன்று அல்ல.

      • saravanan says:
        16 years ago

        சரி அந்த 300000 புலிகளும் எங்கிருந்து தோன்றினார்கள் வானத்தில் இருந்து குதித்தார்களா? மக்களால் தான் புலிகள் 30 வருடங்கள் சிங்களத்தை எதிர்த்து மாபெரும் வெற்றிகளை குவிக்க முடிந்தது. இறுதியில் நச்சு குண்டுகளையும் கொத்துகுண்டுகளையும் போட்டு தான் புலிகளை அழிக்க முடிந்தது. இனி மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தலைமை ஒன்று இல்லாமல் போராட புறப்பட மாட்டார்கள்.யார் தலைமையில் போராடுவது தேவானந்தா சித்தார்த்தன் தலைமயிலா ,அல்லது மாமணி துரை தலைமயிலா? இவர்கள் எல்லோரும் வாயால் புடுங்குவார்கள்

        • mamani says:
          16 years ago

          அந்த 30,000 போராளிகளையும் எப்படி வீணாக்கினார்கள் என்பதுதான் கேள்வி . சரவணா போராட்டம்தான் தலைவனை உருவாக்கும். தலைவருக்காக யுத்தம் புரிந்ததுதான் வினை. யுத்த வெற்றிகள் அரசியல் வெற்றிகளாக மாற்ற முடியாத வகையிலேயே புலிகள் மாபெரும் தவறிழைத்தார்கள். அந்த வகையிலேயே இதை போராட்டமில்லை என்று வாதிடுகிறோம். மன்னிக்கவும் சரவணனன் உங்களுக்கு அரசியல் பாலர் வகுப்பெடுக்க எனக்கு நேரமில்லை

        • mamani says:
          16 years ago

          மக்கள் தலைமையில் போராடுவார்கள்.

          • saravanan says:
            16 years ago

            அந்த யுத்த வெற்றிகளை வைத்துதான் பேச்சு வார்த்தை மேசையில் சரிக்கு சமனாக உட்கார்ந்தார்கள்.இல்லை என்றால் சிங்களம் பேச வந்திருக்குமா?

          • saravanan says:
            16 years ago

            நீர் சொன்ன அதே மக்கள் தான் புலியாகி போராடினார்கள்.சரி நீர் சொன்னது போல இனி மக்கள் போராட்டம் ஆரம்பித்தாலும் நீரும் உம்மை போன்றவர்களும் அதை வைத்து இங்கே வந்து உங்கள் விஷமத்தை பரப்பிக்கொண்டு இருப்பீர்கள்.நீங்களும் எதுவும் செய்ய மாட்டீர்கள் மற்றவன் செய்வதையும் விட்டு வைக்க மாட்டீர்கள்.அனால் வாயால் மட்டும் எல்லாத்தையும் வெட்டி வீழ்த்துவீர்கள்

    • ஊர்மிளா பிரபா says:
      16 years ago

      குமரன் குஞ்சு , மக்களை துப்பாக்கி முனைல் பிடித்து வைத்து ..அவர்களின் பிழைகளையும் பிடித்துக்கொண்டு பை தற்கொலைதாரிகள் ஆகி..மிஞ்சின சனத்திடம் கப்பம் வாங்கி ..உரித்து உப்பு திராவிய கொள்ளை கூட்டம் ..அவர்களிடம் இருந்து இலங்கை அரசு மக்களை மீடிருகிறது என்பது தான் உண்மை…விமர்சனம் செய்ய அவன் செய்த ஒரு நன்மை சொல்க..யாரை வாழவைத்தான்..

      • saravanan says:
        16 years ago

        சும்மா இருந்த மக்களை மீட்க போகிறோம் என்று சொல்லி அவர்களை கொன்று அங்கவீனராக்கி சொத்துக்களை அழித்து முகாம்களிலே அடைத்து வைத்திருக்கிறது.இது உமக்கு சிங்களம் “தமிழ் மக்களை மீட்டது” போலவா தெரிகிறது

        • ckumar says:
          16 years ago

          தம்பி சரவணா
          தமது உயிரை காப்பாற்ற தமிழ் மக்களை பணயக்கைதியாக வைத்திருந்து பலி கொடுத்துவிட்டு பின்னர் வெள்ளைக்கொடியுடன் சிங்கள் இராணுவத்திடமும் முன்னாள் புலிகளிடமும் (கருணாகுழு) சரணடைந்தது உங்கள் புலிகள் தானே.

      • ckumar says:
        16 years ago

        இன்று பல இராணுவத்தினரையும் புலம்பெயர்ந்த சில தமிழர்களையும் பணக்காரர்களாக வாழ வைத்தான்.

  11. Virumandi says:
    16 years ago

    சோபாவும் மாமணியும்தான் தலைவர் சரணடைகின்ற போது பக்கத்தில் இருந்தவர்கள். 

    • Suresh says:
      16 years ago

      They can only think within their capacity. That s y our tamils situation came to here.

    • mamani says:
      16 years ago

      இல்லீங்க விருமாண்டி அவங்க தப்பியோடும்போது படகோட்டினேன்.

      • saravanan says:
        16 years ago

        இவங்களுக்கு எப்படியாவது பிரபாகரன் சரணடைந்து விட்டான் என்று மக்களை நம்பவைக்க வேண்டும் என்று வெறியுடன் அலைகிறார்கள்.மாமணியின் ஒவ்வொரு கருத்தை பார்த்தாலே உங்களுக்கு விளங்கும்.கூட இருந்து காட்டி கொடுத்தவர்களுக்கு தானே உண்மை தெரியும் .நம்புங்க மக்களே

        • mamani says:
          16 years ago

          உண்மையை சொல்லுங்கள் சரவணனன் பிரபாகரன் களத்தில் இல்லையென்பது நிதர்சனம் ஆனால் அவர் எந்த வகையில் களத்தில் அன்னியமானார் என்பதுதான் பிரச்சனை. மருதமடு முகாமில் இருக்கும் அரசியல் கைதிகளின் தகவல் மூலம்தான் பிரபாகரனின் இறுதி முடிவு பற்றி எனது நம்பிக்கை இருக்கிறது இல்லையென்றால் நிருபியுங்கள். உங்களின் முட்டாள் தனமான ஆதரவும் உசுப்பேத்தலும் இன்னும் சில புலம் பெயர் பணக்காரர்களை உருவாக்குமே தவிர உண்மையான போராட்டத்திற்கோ அல்லது முகாம் மக்களை மீட்வோ உதவாது. பிரபாகரன் சரணடைந்து இறந்தான் என்று சொல்வதில் எந்த தமிழனும் பெருமையடைய போவதில்லை.

        • mamani says:
          16 years ago

          நாங்க கூட இருந்து காட்டி கொடுந்தவங்கென்னா நீங்க கூட இருந்து தப்பியோடிய பயலுங்களா?

        • chandran.raja says:
          16 years ago

          வெள்ளைகொடி காட்ட “அதற்கு ஒரு காட்டிக்கொடுப்பு” என்ற பெயரும் வேறையா?

      • Virumandi says:
        16 years ago

        மாமணி அண்ணா! உங்க பிரச்சன என்னண்ணா!நீங்க தமிழன்றத மறந்துராதீங்கண்ணா. 

        • saravanan says:
          16 years ago

          சிங்களம் காப்பற்ற பட வேண்டும்

    • Garammasala says:
      16 years ago

      “புறநானூற்று மறத் தமிழன் புறமுதுகிடான்” என்கிற பேய்க் கதைகளை விட்டுப் போட்டு யதார்த்தமாகப் பிரச்சனைகளைப் பார்ப்போம்.
      கடைசிவரை ஏதோ திட்டத்தோடை போராடி இனி முடியாது என்ற நிலையில் சரணடைகிறதிலை பிழை இல்லையே!
      சயனைட் திண்டு செத்திருந்தால் இப்ப ஏசுகிறவை மெச்சுவினமோ?
      சரணடைஞ்சு உசிரோடை இருந்து என்ன செய்திருந்தாலும் ஆதரிக்கிறவை ஏசுவினமோ?
      எவ்வளவு மன உறுதியிருந்தாலும் சடுதியாக நெருங்கி வருகிற தோல்வியும் உயிராபத்தும் ஒருவருக்கு அதிகம் தெரிவுகளை விட்டு வையாது. சில முடிவுகள் சூழ்நிலையின் நிர்ப்பந்தங்கள் தான்.

      பிரபாகரன் அதிமானுடனுமில்லை, அரக்கனுமில்லை.
      ஆளைத் தாக்குகிறதையும் துதி பாடுகிறதையும் விட்டு விட்டு என்ன பிழையாகப் போனது எண்டு விசாரிப்போமா?

      அரசாங்கம் உசிரோடை விடாமல் ஏன் கொண்டது எண்டு விசாரிப்போமா?

      • thamilmaran says:
        16 years ago

        பிரபாகரனது நிலையில் நின்றூ யோசித்தால்தான் வலி தெரியும்.சாப்பாடில்லை,நித்திரையில்லை,கூடவே வந்த போராளீகளீல்லை,போரை வெல்வோம் எனும் நம்பிக்கையில்லை இனி எதுவுமே முடியாது எனும்போது சரணடைவதை தவிர வேறூ வழி இருந்திருக்க முடியாது.பிள்ளகளோடும் மனைவியோடும் அவர்கள் நிலமையை எண்ணீப்பாருங்கள்.ஆனால் இதையே புலிகளூம் மாற்றூ இயக்கத்தினர்க்கு செய்திருக்கிறார்கள் சொந்த இயக்க்த்துள்ளூம் செய்துருக்கிறார்கள் அதற்காக இலங்கை அரசு செய்தது சரியாகி விடாது.

      • mamani says:
        16 years ago

        உங்களைப்போல் 50% மான புலம்பெயர் தமிழர் சிந்தித்தாலே ராஜபக்ஸ குரூப்பை கழுவேற்ற முடியும். இவங்க கூற்றுப்படி சாகாத ஒரு மனிதனை கொன்றதாக எப்படி வழக்கு தொடர முடியும் அதுவும் நீங்க வேற சரணடைந்தா சொல்றீங்க ( நானும்தான்) அதுலேயே நாங்க பலரிடமிருந்து அன்னியராகி விடுகிறோம், இலங்கை அரசிற்கு எதிராக வழக்கு போடப்போகிறோம் என்று ஆதரவு கேட்டு பாருங்கள் பலர் சிங்களவராகி விடுவர்.

        • saravanan says:
          16 years ago

          சரணடைந்தார் சரணடைந்தார் என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லுகிறீரே உமக்கு எவ்வாறு தெரியும் சரணடைந்தார் என்று.பிணங்களை நிர்வாணமாக்கி படமெடுத்து தங்கள் சாதனையை வெளியிடும் சிங்களம் பிரபாகரன் சரணடைந்ததை வீடியோ எடுத்து வெளியிட்டு தங்கள் வீர தீரத்தை வெளியிட்டிருக்குமே.பிரபாகரன் இறந்தார் என்பதற்கு மேலாக அவரை சரணடைந்தார் என்று சொல்லி நம்பவைப்பதன் மூலம் அவரின் வீரத்தை கொச்சை படுத்துவது தானே உங்கள் நோக்கம் மாமணி

          • mamani says:
            16 years ago

            சரணடைவு வீடியோவை வெளியிட்டு சரணடைந்தவர்களை போட்டு தள்ளிய போர்க்குற்றத்தை ஒப்பு கொள்ள அவ்வளவு மரமண்டையனா ராஜபக்ச?

          • saravanan says:
            16 years ago

            நடேசன் புலித்தேவன் போன்றோர் சரணடையும் போதே சுட்டு கொல்லப்பட்டார்கள் என்று சொன்ன இலங்கை அரசு மரமண்டை இல்லையா? கொல்லப்பட்டவர்களை நிர்வாணமாய் போட்டு விளம்பரப்படுத்திய சிங்களம் மரமண்டை இல்லையா? இப்படி ஒரு மாற மண்டை தனத்தை ஏன் செய்யவில்லை

  12. velavan says:
    16 years ago

    Hello Friends

    Prabhakaran was Prabhakaran and still Prabhakaran is Prabhakaran and also Prabhakaran will always be the same Prhabhakaran. He lost the war not because he was weak in the war but he was cheated by his own political business guys.Trillions Tamils would been born in the past, millions are being born today and even so many millions will be born tomorrow but who is going to be like Prabhakaran.Prabhakaran was the only LION in the battle field. Why we don’t say that we lost the war because we know it was Prabhakaran’s war. It was one man army and one man war and to fight agaist that one man there were more seven countries got together and fought to defeat that man. So, it is really great and real history and it is going to be a historical subject for the students in future. But you guys don’t like to hear such thins in your life because it seems like a dream and un unblievable stories for some of you. so you are unable digest his leadership, publicity ,courage, name, victories, stories,and all these things. So these things make you to writie some stupid things about such a great leader and you feel some sort of happiness.Other wise you dont need to write like this for this article.There is nothing in this article to write or discuss or for any kind of comments. Meeting and discuss their problems and ideas are very common things in such a situation.,Today, we are living in many countries with some identity. The identity was given to each and every tamils by Prabhakaran. Not only today, even after many hundreds and hundreds of years , our future and future generations will have that identity and by that time, even the children of those who hate Prabhakaran, will treat him as a real divine hero. Not only this Iyer but no one can write the whole story about this war because everyone knows little part of this war. So it will be really absurd if you keep on saying anything against to such great leader bu if you want , let’s discuss about the past and try to do things for the future. If we really want to have future for next generation , if we want to some kind of understanding, knowledge, and unity to be implemented in our community, and if we are really intrested in doing something good for our people, first of all we have to learn to respect the great leader. If you know respect , show your respect to others, then you will have double of the respect. So, please don’t write anything against such a great leader.

  13. Tamizhmani says:
    16 years ago

    Dear Bro & Sistrs I am someone who has born in 1970 and brought up in tamil nadu. All these years, I used to learn through media only about your struggles. I fully agree with Mr. Velevan. The thing is Bro Prabha has done oneside excellently and the other side he has committed so many mistakes like undemocratic way of functioning and killing those who are opposing his rule. Whatever happened, all over we cannot bring it back. What remain is there that we can cultivate/develop. I hope whatever written about that war is more enough to realise our mistakes and good things. Now, urgent requirement is to develop a united group which immediately undertake or extend the support to those who affected in SL and support them in this crucial period. I/We know there are so many affected peoples in SL in very dilapitated condition which cannot be described here. Why not they may be helped by all our affection and love. Instead of thinking about Transnational Governance for Tamils in world, we can first thing of affected people and rescue them and help them to settle. Step by Step later have a democratic setup and start a new way of things to achieve your rights. The world is moving/changing very fast and we too should realise and accept the reality that Bro Prabha vehementally opposed when Bro Karuna explained to him. This forum may be utilised for better realisation of our past mistakes and plan for a better future accepted by all.
    BUT NEVER GIVE UP YOUR HOPE. WORLD HISTORY HAS TAUGHT US SO MANY GOOD AND BAD HISTORY, WE WILL CHOOSE GOOD AND GET BETTER LIFE FOR OUR GENERATION. Thank you.

  14. maaran says:
    16 years ago

    துரையப்பாவை பிரபாகரன் கொலை செய்தபடியால்தான் இந்த 27பேரும் விடுதலைப்புலிகள் அமைப்பில் வந்து இணைந்தார்கள். பிரபாகரனின் ஆயுதபோராட்டம் பிடிக்காதவர்கள் ஏன் அவரிடம் கைத்துப்பாக்கியை கொடுக்க்கும்படி கேட்டார்கள்.

    • xxx says:
      16 years ago

      ஆயுதப் போராட்டமில்லைப் பிரச்சினை — ஆயுதம், போராட்டம், இயக்கம் எல்லாமே ஒரு ஆளாகப் போகிறது தான் பிரச்சினை.
      சனநாயகம் விளங்காதவைக்கு இதெல்லாம் விளங்காது.

      • saravanan says:
        16 years ago

        சரி பிரிந்து சென்றவர்கள் மக்கள் புரட்சியை ஏற்படுத்த முடிந்ததா? புளட் இயக்கத்தை பற்றி முன்னாள் அதன் உறுப்பினர் எழுதியதை படியும்

  15. Nitharsanan says:
    16 years ago

    ஐயர் அவர்கட்கு,

    உங்கள் தொடரை தொடர்ச்சியாக வாசித்து வருகின்றேன்.இயக்க வரலாற்ரை எழுதுவதற்கு நீங்கள் எடுத்துக் கொண்ட முயற்சியானது வரவேற்க வேண்டியதே.ஆயுத போராட்டம் ஆரம்பபான போது இயக்க உறுப்பினர்களுக்கு இடையே இருந்த கருத்த வேறுபாடுகள் பின்னர் பல இயக்கங்கள் உருவாகுவதற்கு வழி வகுத்ததோடு, இயக்க தலைவர்கள் மீதான தனி நபர் வளிபாட்டினையும் தோற்றுவித்து சென்றது. ஈழ தமிழ் இளைர்களது ஆயுத போராட்டத்தின் ஆரம்பத்தினையும், அதன் வரலாற்றினையும் எழுதும் வரலாற்று ஆசிரியன் தனிநபர் வளிபாட்டிற்கு அப்பால் பட்டவராக இருக்க வேண்டியது அவசியமாகும். அப்பொழுதுதான் எமது அடுத்த சந்ததியினருக்கு போராட்ட வரலாறு குறித்த உண்மையினை கூறி சென்றோம் என்ற திருப்தி வரலாற்று ஆசிரியருக்கு கிடைக்கும்.
    நன்மைக்கும் உண்மைக்கும் ஒருவன் அன்புடன் எழுதினால் அது என்றும் நிலைக்கும் என்றான் பாரதிதாசன். ஊருக்கு நல்லது சொல்வேன் எனக்கு உண்மை தெரிந்து சொல்வேன் என்றான் கவிஞரும்,பத்திரிகையாளனுமான சுப்பிரமணியபாரதி.இத்தகைய ஒரு நேர்மையும், உண்மையும் உங்களிடம் இருக்க வேண்டும் , இருக்கும் என நம்புகின்றேன்.
    உங்களுடை இந்த தொடரில் இயக்க உறுப்பினர்களை மீண்டும் இணைக்கும் முயற்சியாக இடம் பேற்ற சந்திப்புக்கள், உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல்கள் கூறித்து எழுதியிருந்தீர்கள். அதில் பிரபாகரன் அவர்கள் சின்ன பேபியோடு வெறியேறி செல்ல முற்படுகையில் பிரபாகரன் அவர்களிடம் இருந்த கைத்துப்பாகியை ஒப்படைத்துவிட்டு செல்லுமாறு சுந்தரம் கூறியதாகவும், ஆனால் அவரின் பாதுகாப்பிற்காக அவர் அதனை வைத்திருக்கலாம் என்று பெரும்பானானோர் ஒப்புக்கொண்டு அவரை கைத்துப்பாக்கியுடன் செல்லுவதற்கு அனுமதித்தாகவும் எழுதியுள்ளீர்கள்.
    அன்று சுந்தரம் பிரபாகரனிடம் இருந்த கைத்துப்பாக்கியை ஒப்படைக்குமாறு கோருகையில் நீங்கள் எல்லோரும் அதற்கு உடன்பட்டு இருந்தால். இன்று ஈழத்தமிழ் இனம் இந்த நிலைக்கு வந்திருக்காது என்பதினை உணருகின்றீர்களா? ஈழத் தமிழ் இனம் என்றும் இல்லாத அளவிற்கு சகல தரப்பிலும் பலவீனம் அடைந்திருப்பதற்கு யார் காரணம். அரசியல் தலைமையில் இருந்து ஆயுத தலமைகள் வரைக்கும் இல்லாது செய்ததோடு, புத்திஜீவிகளையும், கல்விமான் களையும் கூட அவர் விரும்பியது இல்லை. தமிழர் பிரதேசங்களிள் ஆயிர கணக்காக இருந்த அரச படைகளின் எண்ணிக்கையை லட்சங்களா மாற்றிவிட்டு, லட்சக்கணக்கான மங்களை அகதிகளாக்கிவிட்டு, 30 ஆயிரத்திற்கும் அதிகமான தனது இயக்க போராளிகளை மாவீரர்களாக்கிவிட்டு, மாற்று இயக்க போராளிகளில் ஆயிரக்கணக்கானோரை துரோகிகளாகிவிட்டு, இறுதி நேர யுத்தத்தின் போது தன்னை பாதுகாப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்களை மனித கேடையங்களாக பாவித்து சுமார் 7 ஆயிரம் மக்களை பலி கொடுத்துவிட்டு, ஆயிரக்கணக்கான போராளிகளை முடங்களாக்கிவிட்டு, எமக்கு இருந்த ஒரு நாட்டினை எதிரிக்கு நண்பனாக்கிவிட்டு , அப்பாவி மக்களையும், அரசியல் தலைவர்களையும் இலக்குவைத்து தற்கொலை தாக்குதல்களை மேற்கொண்டு விடுதலை போராளிகளை பயங்கரவாதிளாக்கிவிட்டு , இப்படியாக அடுத்த கட்ட போராட்டத்தினை முன்னெடுக்க முடியாத அளவிற்கு ஈழத் தமிழ் இனத்தினை பலவீனமாக்கிவிட்டு சென்ற பிரபாகரனை ஈழ தமிழர்களின் விடுதலை போராட்ட காவிய நாயகனாக காட்ட முடியுமா?
    வரலாற்று ஆசிரியரே சிந்தியுங்கள்!

    நன்றி
    நிதர்சனன்

    • saravanan says:
      16 years ago

      எல்லாவற்றையும் தூக்கி பிரபாகரனின் தலையில் கட்டிவிட்டு நீங்கள் தப்பிக்கலாம் என்று பார்க்கிறீர்களா? மக்களுக்காக போராட ஆரம்பித்த இயக்கங்கள் யாரை எதிர்த்து போராடினார்களோ அவர்களுடன் இணைந்து கொண்ட கொள்கையை விட்டெறிந்து சோரம் போனார்களே.அவ்வவ் இயக்கங்களில் மக்களுக்காக போராடி மடிந்த வீரர்கள் மன்னிப்பார்களா? புலிகள் தவிர்ந்த மாற்று இயக்கங்களால் ஒருமையாக இருக்க முடிந்ததா? மக்களுக்கான வேலைத்திட்டத்தை கொண்டு நடத்த முடிந்ததா? மாற்றார் விட்ட தவறுகளை எல்லாம் புலிகள் மீது சுமத்தி நீங்கள் தப்பிப்பது எந்த விதத்தில் நியாயம்.

      • MURUGESU says:
        16 years ago

        WORLD VIEW KEEP ON CHANGING EVERY WAY IN EVERY DAY LIFE IT HAS MORE PROBLEMS THAN BEFORE BUT SOME OF US STULL LIVES IN OLD DAYS ALL THE TIME,THIS IS, THIS IS THAT KIND WHY?

  16. Nitharsanan says:
    16 years ago

    கரம்மசால அண்ணா,
    பிரபாகரன் சரண் அடைச்சதில் ஒரு பிரசனையும் இல்லை, அவர் வேலுப்பிள்ளை யினுடைய மகனாக இருந்து சரண் அடைஞ்சிருந்தால் ஒருவருக்கும் பிரட்சனையும் இல்லை. ஆனால் அரசியல் தலமையில் இருந்து ஆயுத தலமைகள் அனைத்தையும் கொன்றொளித்துவிட்டு, தானே ஈழ தமிழர்களின் ஏகப்பிரதிநிதி என்று கூறிக்கொண்டு போராட்டத்தினை முன்னெடுத்து, கடைசியில தன்ரை உயிரை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக முழங்காளில் மண்டியிட்டு மண்டையில கோடாரியினால் கொத்து வாங்கியதைதான் ஜீரணிக்க முடியவில்லை.
    அனைத்து இயக்கங்களையும் தடைசெய்து தமிழர்களின் தலமையினை வலுக்கட்டாயமாக தன்னுடை கைகளில் பிரபாகரன் எடுக்கும் பொழுது , தன்னால் இது முடியுமா என்று சிந்தித்து இருக்கவேண்டும். ஈழ தமிழர்களின் பிரட்சனை ஒன்றும் பிரபாகரனின் வீட்டு பிரட்சனை அல்ல. அது ஒட்டு மொத்தமான இனப்பிரட்சனை. ஈழ தமிழர்களுக்காக பேசும் உரிமை தனக்கு மட்டுமே உண்டு என்று கூறிக்கொண்டு ஏனைய தலமைகளை இல்லாது செய்து விட்டு , இறுதியில் தானும் சரண் அடைந்த பிரபாகரனை ஈழ தமிழ் இனம் எப்படி மன்னிக்கும்?

    • thamilmaran says:
      16 years ago

      கரம் மசாலா புதிதாக சிந்திக்கிறார். இது புதிய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

    • saravanan says:
      16 years ago

      என்றோ அந்த அனைத்து இயக்கங்களும் சிங்கள இனவாதத்திற்கு சோரம் போனதை நினைவில் வைத்துக்கொண்டு எழுதினால் நன்றாக இருக்கும்

    • Garammasala says:
      16 years ago

      பிரபாகரனதும் விடுதலைப் புலிகளதும் செயல்களை விமர்சிப்பதற்கும் பிரபாகரனது சாவு, சரண் என்பன பற்றி விமர்சிப்பதும் ஒன்றோடொன்று குழப்ப ஏற்றவையல்ல என்பதே என் வாதம்.
      பிரபாகரன் எவ்வாறு கருதப்பட்டாலும், அவரும் ஒரு மனிதர்.
      போட்டிருந்த திட்டங்கள் எல்லாமே பிழைத்துப் போய், நிர்க்கதியான நிலையில் ஒருவர் எடுக்கக் கூடிய முடிவைப் பற்றி நாம் பேசுகிறோம், அவருடைய நிலையில் நம்மில் எவரும் இருந்திருந்தால் என்ன செய்திருப்போமென்று நம்மால்நிச்சயமாகக் கூற முடியுமா?
      வித்தியாசமாக நடந்தோர் உள்ளனர்.

      சாவின் சூழ\ல்களை விமர்சிப்பது என்றால், மிக முக்கியமானது, சரணடைந்தவர்களை கொன்ற கொடுமை.
      பிரபாகரனின் அரசியலை ஒரு இயக்கத் தலைவர் என்ற வகையில் மதிப்பிடுவது பொருந்தும். அங்கு, முழுத் தலைமையும் ஆலோசகர்களும் பொறுப்பேற்க வேண்டியோராவர். பிற தமிழ்த் தேசியவாதிகளும் பதில் கூறவேண்டியவை உண்டு.

      • ckumar says:
        16 years ago

        கடவுள் (சூரியத்தேவன்) எமனிடம் (ராஜபக்ஸ) சரணடைந்து மண்டையை போட்டது.

  17. vanniyan says:
    16 years ago

    30 வருசமாய் புலிகள் சண்டைகளில் வென்றபோது..அவர்களின் முதுகுக்குப் பின்னாலே ஒளீந்து விட்டு, இன்று அவெர்கள் இல்லை என்ற போது.என்ன பேச்சுப் பேசுகிறார்கள். வென்றால் சரித்திரம்.தோற்றால் சம்பவம்..தலைவர் சும்மா வா சொன்னார்.

    வெற்றி பெற்றவர்கள் வரலாறு எழுதுகிறார்கள்..( ஜயர் உட்படத்தான்) தோற்றவர்கள் நாம் மவுனமாக இருப்போம் நண்பர்களே….

    • a voter says:
      16 years ago

      தோற்றிருப்பது ஒரு தனிமனிதனோ இயக்கமோ அல்ல.ஒரு போராட்டம் தோற்றிருக்கிறது. வெல்வோம் என்ற மக்களின் நம்பிக்கை தற்காலிகமாகவேனும் தோற்றிருக்கிறது. ஒரு இனம் தோற்றிருக்கிறது. 
      ஏன் போற்றோம் என்று ஆராய்வது மட்டும் தான் இப்போது நடக்கிறது. 
      30 வருசமாய் புலிகள் சண்டைகளில் வென்றபோதும் ஏன் போராடடத்தில் தோற்றுப்போனார்கள்? வெறுமனே எதிரியின் பலம் மட்டுமா காரணம். எமது பலவீனங்கள் தவறுகள் என்ன என்று திரும்பிப் பார்ப்போமா?

      • ஊர்மிளா பிரபா says:
        16 years ago

        தோற்று போய் இருப்பது “நான்” என்ற கொலை வெறியல் ஒஉர் இனத்தை ஆட்டி வைத்த ஒரு தனி மனிதனின் (?) கட்டேரி தாகம். ஐயரின் கட்டுரயில் எத்தனை தடவைகள் எத்தனை பேர் எடுத்து சொல்லி இருக்கிறார்கள். கேட்டானா  பாவி. கவலை படாதீர்கள் தமிழ் சமுதாயம் சுதந்திரம் அடைந்தது நிமதியாக சாதாரணமாக ஒரு சமுதாயத்தில் நடக்கும் கோவில் திருவிழா பண்டிகைகள்..திருமண விழாக்கள் ..விடுமுறைகள் என்று சந்தோசமாக வாழ ஆரம்பித்திருகிறது. உங்களுக்கும் காப்பம் கொடுத்து மனித உயர்களை பலி வாங்கிய பாவம் மிச்சம் 

        • mamani says:
          16 years ago

          இல்லை ஊர்மிளா பிரபா , இதுவல்ல சுதந்திரம் இது ஒரு நவீன அடிமைத்தனம். புலிகளை விமர்சனம் செய்வதாக எண்ணி எதிரியிடம் விலை போகாதீர்.

          • ஊர்மிளா says:
            16 years ago

            கட்டாய கப்பம்  ,பாடசாலைக்கு போகும் குழந்தைகளை கடத்தி கொலை காலத்துக்கு அனுப்புதல்..கல்வி அறிவை மறுத்தல்..விவசாயம் வர்த்தகம் தொழில் முறைகளை தனியார் செய்ய மறுத்தல்…சொல்லிக்கிடே போகலாம்..இப்ப சொல்லுங்கோ எது அடிமைத்தனம்..

        • vanniyan says:
          16 years ago

          ஊர்மிளா , நீங்கள் இந்திய அமைச்சர் ப.சிதம்பரம் குடுத்த பேட்டி படிக்கலியோ……?நான் சொன்னதை தலைவர் பிராபாகரன் கேட்டிருந்தால் அவெர் இன்று அப்படி இருந்திருப்பார் இப்படி இருந்திருப்பார் என்று பிதற்றி இருக்கார்.அவெர் மட்டுமோ ,வந்தவன் ,நிண்டவன் , போனவன் எல்லாம் இததான் சொல்லித் திரியினம். தலைவர் என்ன உங்களைப் போல பட்டம், பதவி, பணம் எல்லாத்துக்கும் ஆசப்பட்டவரோ. அப்படி ஆசப்பட்டு இருந்தால், அவெரும் இன்று பத்தோடு பதினொன்றாய் அலரிமாளிகையை அலங்கரித்து இருப்பார். தமிழீழக்கொள்கையை கைவிட்டால் தனது மெய்ப்பாதுகாவலர்களே தன்னைச் சுடுவார்கள் என்று அன்றே சொல்லிப் போட்டார். என்று தன்னால் அதைச் செய்யமுடியாது என்று உணந்தாரோ, அப்போதே அவெர் உயிர்விடத் துணிந்துவிட்டார். தலைவர் என்ன, உங்கள் முன்னாள் பாசத்துக்குரியவர் அமரர் திரு.உமாமகேஸ்வரர் கூடப் போராட்டத்தைத் தொடர்ந்து இருந்திருந்தால் , அவெருக்கும் இதேநிலமைதான் ஏற்பட்டிருக்கும்.அவெருக்கும் ஒரு முள்ளிவாய்க்காலோ, முசல்குத்தியோ காத்து இருந்திருக்கும். தமிழன், போராடினாலும் அழிவான், போராடாட்டியும் அழிவான். ஆனால் , போராடினால் என்ன தப்ப வாய்ப்பு இருக்கும். தலைவர் தமிழ் இனத்தை தப்ப வைக்கும் வாய்ப்பைதான் தேடிப் பாத்தவர். அதைச் செய்யமுடியாமல்தான்நீங்கள் எல்லாரும் சேர்ந்து அழித்துவிட்டிர்களே

          • ஊர்மிளா says:
            16 years ago

            கண்ணா , சிதம்பரம் மட்டுமில உலகத்தில் சமாதானம் பேச வந்த எலோரும் கல்வி உணவு உறைவிடம்  இல்லாமல் பிரபாகரனால் துப்பாக்கி முனையல் பிடிகப்படிருந்த மக்களுக்காவது வடக்கையும் கிழக்கையும் சேர்த்து  தருகிறோம் என்றார்கள் ..கேட்டானா ..குறுக்கால போனவன் ..எல்லாம் சரி கடைசியாக படு கேவலமாக எல்லோரையும் சாவுக்கு அனுப்பிவிட்டு தான் மட்டும் வெள்ளை கோடி பிடிச்சதுதான் ஆத்திரமாக இருக்கிறது..ஆரம்பத்திலேயே ஐயரின் அரசியல் தழுவிய போராடத்தை கற்றிருந்தால் இவ்வளவு அழிவு வந்திருக்காது  என்று நம்புகிறேன்.(தானும் படிக்காது , படிச்சவனையும் பிடிக்காது ) கெடுவான் கேடு நினைப்பான் என்று சும்மாவா சொனார்கள்..

          • saravanan says:
            16 years ago

            வெள்ளை கொடி பிடித்ததற்கு தானே ஆதாரம் கேட்கிறோம்.சும்மா பிதட்டாமல் ஆதாரத்துடன் முன்வையும் உமது கருத்துக்களை

          • mamani says:
            16 years ago

            அழிச்சது நாங்களல்ல நீங்கள்தான். எங்கட தலைவர் தமிழீழத்தை தவிர வேறெதையும் தர மாட்டார் . தலைவற்றை காலத்திலேயே தமிழீழம் இல்லையேல் சுடுகாடு, 50,000 மக்கள் இறந்தால்தான் ஐ. நா தலையிடும் இப்படி எத்தனை இப்படி எத்தனை கதைவிட்டு அந்தாளை சகதிக்கிள்ளை மாட்டினியள் இப்ப டக்ளசையும், கருணாவையும் கை காட்டுறீயள். ஏன் உங்களால கே.பியையும் ,பானுவையும் கை காட்ட முடியல.

          • thurai says:
            16 years ago

            யாரிற்கு யார் தலைவர்? கையிலை தம்பியிடம் துப்பாக்கியில்லாவிட்டால் தம்பி
            எப்பவோ தும்பியாகியிருப்பார்.

            புலம்பெயர் தமிழர்களால் தலைவராக்கப்பட்டு அவர்களாலேயே அழிக்கப்பட்டவர்தான் பிரபாகரனும்
            புலிகள் இயக்கமும்.

            இதில் இடையில் அகப்ப்ட்டு துன்பமுற்ரது ஈழ்த்தமிழர்.பு
            லி
            கள் அழிந்த பின்னர்தான் தமிழர் வடக்கு கிழக்கிலை நிம்மதியாக் வாழ்கின்றார்கள்.

            ப்
            ண்
            ம் பிடுங்கிகளிற்கும் பிண்ம்
            தேடுவோர்க்கும்தான் இதுவரை தலமை இருந்த்து..

            மக்களின் ஆக்கத்தினை வழிந்தடத்துபவனே
            தலைவன். அழிவுக்கு வழிகாட்டியவ்ர்களை யார் தலவென்று ஏற்பார்கள்.

            த்மிழரின் விடுதலையா? தமிழர் முதலில்தாம் ஓர் இன்மென் வாழட்டும், வாழ்ந்து காட்டட்டும்..துரை

      • vanniyan says:
        16 years ago

        வோட்டர் ; வரலாறை படித்து எந்த மனிதக் கூட்டம் திருந்தியிருக்கிறது சொல்லுங்கள்: அப்படி என்றால் இன்று உலகம் திருந்தி எவ்வளவோ நாள் ஆகி இருக்குமே. நாம் விடுதலை அடைய வேண்டும், எமது இனம் சுதந்திரம் அடைய வேண்டும் என்பது, யாரும் சொல்லியோ அல்லது படித்தோ வருவதில்லை. இயல்பாகவே அது எமக்கு இருக்க வேண்டும். தெளிவாகச் சொன்னால், பிறக்கும் போதே அது கூடப்பிறக்க வேண்டும். அந்த உணர்வு இல்லாதவர்களோடு வாதிடுவதில் எந்த அர்த்தமும் இல்லை. மாமணி, மாயி ஊர்மிளா போன்றவர்கள் , எமது இனத்தில் பிறக்கவெ இல்லை , அதனால் அந்த உணர்வும் இல்லை. பலமானது வாழும், பலவீனமானது அழியும். தலைவன் இல்லாத் தமிழர்கள் இனி நாம் என்ன செய்யப் போறோமோ…….மேய்ப்பன் இல்லாத ஆடுக

        • mamani says:
          16 years ago

          வன்னியன் உம்மைபோல் பேசிய பலரை நான் பார்த்திருக்கிறேன். நீங்கள்தான் கடைசியில் எதிரிக்கு ஆல வட்டம் பிடிப்பவர்கள். சிங்களவனுக்கு பிறந்தவன் ,துரோகி போன்ற உசுபேற்றல்கள் நன்றாக செய்வீர்கள் பின்பு ராஜதந்திரம் என்ற பெயரில் எதிரிக்கு பாதம் நக்குவீர்கள். சும்மா புலம்புவதை விடுத்து உங்களிடமிருக்கும் எதிர்ப்புணர்வை முடிந்தவரை எதிரியிடம் காட்டுங்கள். உங்களுக்கு நீங்கள்தான் மேய்ப்பன். மேய்ப்பன் என்ற பெயரில் மந்தைகளின் பின் அலையாதீர்

          • sabesan says:
            16 years ago

            மாமணி வணக்கம், நாலு வரியிலை புலிவாலுகளின் கெட்டித்தனததை வெளிப்படுத்தியதற்கு என்பாரட்டுக்கள்.

          • vanniyan says:
            16 years ago

            மாமணி , உம்முடைய பேச்சைப் பார்த்தால்,இதற்கு முதல்,நீர் நிச்சயம், என்னைப்போன்றவர்களை சந்திக்கவில்லை என்று தெரிகிறது.அப்படி சந்தித்து இருந்தால், கீதையைக் கேட்டு , மனம் மாறிய அர்ஜ்சுனன் போல்நீரும் மனம் மாறி இருப்பீர்.இந்தியாவின் விடுதலைக்காக காந்தியும், சுபாஸ்சந்திரபோசும் கிட்லருடன் உறவு வைத்துஇருந்த்தவர்கள் தானே. ராஜதந்திரத்தைப் பற்றிநீர் பேசாதேயும்.வீட்டுக்கு, ஊருக்கு,நாட்டுக்கு, ஒரு இனத்துக்கு எண்டு, நிச்சயம் ஒரு தலைமையும், தலைவரும் வேண்டும்.தலைமை இல்லாத தமிழினமும், தமிழர்தேசமும் படும் பாட்டை இன்று 1 வருசமாய் நாமும் பாக்கிறோம்தானே. வடக்கில், டக்கிளசையும், கிழக்கில் கருணாவையும் வைச்சு,தேனும், பாலையும்நீங்கள் ஓடவைக்கலாம்தானே.

          • mamani says:
            16 years ago

            உடனே டக்ளஸ் பட்டியலில் போட்டு தப்பி விடுவீர்களே புலிவாலுகளே!
            ராகவன்,மாத்தையா,கருணா,கே.பி
            இவர்கள் நால்வரும் யார்? யாருடைய பாசறையில் வளர்க்கப்பட்டார்கள்? மாத்தையாவை தவிர மற்ற மூவரும் இப்போ என்ன செய்கிறார்கள்?
            பானு செய்த துரோகத்தை விட டக்ளசால் ஏதாவது பெரிதாக செய்து விட முடியுமா? ஏன் அவர்கள் செயல் அம்பலப்படுத்தப்படாமல் இருக்கிறது அவர்கள் புலி வீரர் என்ற ஒரே காரணமா?

          • mamani says:
            16 years ago

            எப்போ வன்னியன் வெள்ளை கொடியுடன் வந்தவர்களை அரசு சுட்டு கொன்றதாக கூறியது. எல்லோருக்கும் சரத் அறிக்கை தெரியாத உமக்கு கிருஸ்ண பரமாத்மா என்றநினைப்பு வேறு

          • mamani says:
            16 years ago

            காந்தி ,கிட்லருடன் உறவு வைதிருந்தாரா? அப்போ கே.பி ராஜதந்திரமா பண்ணுகிறார் வன்னியன்.
            தலக்கு விழுந்த அடி தலையால மருவி வன்னியனுக்கும் ஆங்காங்கே பட்டுவிடதோ?

      • mamani says:
        16 years ago

        இது ஆரோக்கியமான பின்னூட்டு.

  18. velavan says:
    16 years ago

    Hi Friends. Let it be a small comment for Urumila.

    Here, you have mentioned that Prbhakaran could have listened to this Iyar. Here is my question. Could this Iyar write even a single article without the name of the hero of all these articles.You see! In each and every article, Iyar has published Prabhakaran’s phot and name. Why? Then it won’t look like even an article without the name of the hero.If you are really a tamil , you will not able to write continously against to such a great hero.You think know of things. But in reality, you are very poor in all what you are trying to write about.Do you know in 1971, Mrs Srimavo Bandaranayake killed more than one hundred and twenty thousands young sinhales girls and boys, still the parents of those victims didn’t never and ever hate the leader of JVP Mr. RohanaWeera and also again R.Premadasa govt killed more sixty five thousans young sinhalese girls and boys and their leader too. Still the sinhalese people never write any article like you. And also they don’t run any western countries like tamils.The Sri lankan armies never looked for these tamils who living in all these western countries, they always looked for those fighting forces so called L.T.,T.E and their leader Prabhakaran. For ten to twenty thousands were killed in the final war, you cannot blame the great leader. He sacrified his wife, daughter, sons and himself. You think prabhakan sent his son as a peace messanger to protect him and his family that is your mentality. That is all you can imagine. He has come down to that level on request of those who were arond him at that time. it may be a request from very high level from some other country. As I wrote befor in some other comments. Mr .Raja Paksa said,” The L.T.T.E had three forth of the land under their control, they had army, Air force, navy , Sea Tiger, Courts, Lawers. Police and every thing what a country should have but only one thing they didn’t have that was parliament. Mr. Prabhakaran did only one mistake that the assassination of Rjeev Gandhi.And also Mr. RajaPaksa said,”IF THE WAR CONTINUES FOR ANOTHER SIX MONTH, PRABHAKARAN WOULD HAVE FULFILLED HIS DREAM” Now tell me Urumial! Do you think, if Prabhakaran listened these comedians in those days, today the president of Sri Lanka would have made such a speech in the public.? Today, the north and the east in Srilanka,look like Ayotiya without Ram. Did any one look for these Iyar in the last thirty years? or even today, is there any one in Sri lanka talking about these people? No.Today, the Sinhalese breath in peace but still they will remember Prabhakaran on the 18thof may of every year, and his name will be written in their history like other historical kings like Ellalan, Maha Parapakramapahu and Vijepahu and all other great kings. So, relax, don’t get jealous and lose your knowledge by listening little knowledge people. if you like you can read for the time being. If you wish , you also can use the identity of courage which the great leader has left for each and every one of us. Thank you.

    • ஊர்மிளா பிரபா says:
      16 years ago

      Hi Velavan,Mr. Iyar made this article to tell the story of the group which could have done well to the Tamil people. But he is pointing out who really had only believed in killing by. So he has to tell the Villain who captured the leadership of Common struggle. Prabakaran was that man messed up the people revolution for his own ego.  Let me explain about Mr. RohanaWeera. He was living with young Sinhala students and did not kidnapped kids from school . He never did great action like your leader did to Tamil speaking Muslims. (Killed the innocent Muslims in mosque or chased hundred thousand Muslims from his controlled area.) Also he never TAXed or KAPPAM from poor Sinhalese. He did not kill Sinhala youth saying “THUROKIKAL”. (Remember SAKOTHARA KOLAIKAL etc.) Can you understand why Sinhalese may still has respect for him?Lets come to other matter, //ten to twenty thousands were killed in the final war// what about 45,000+  MAVEERARKAL Prabakaran send to kill them self. For what? When he had no guts to kill himself but SURRENDER to SL army? (Leader ?) , NOW …Kids are going to schools peacefully, Temples and churches are opened after 20 years. Paddy fields are Open to cultivation. (You may know this season harvest in east is more than expected..). Finally My Friend , read the history, Elaalan never surrendered with white flag, He fought till the death. Please do not insult Elaalan by comparing with a Coward

  19. rathan says:
    16 years ago

    இங்கு பலருக்கு ஜயரின் பதிவை விட தங்கள் பின்னோட்டத்தை பலர் படிப்பதாக நினைப்பு .ஜயரின் பதிவு இல்லாவிடில் உங்களுக்கு எழுதவே தளமிருக்காது என நினைவு வைத்துக் கொள்ளுங்கள்.

  20. velavan says:
    16 years ago

    Hi Friends

    Some of you look like a newly born baby in your writing. A few of those who have little time to spend in front of their computer, might happen to read what iyar is writing about Prabhakaran’s war but billions and billions were waiting and watching the whole life time of Prabhakaran. The difference between Prabhakaran and Iyar is”ONE IS PURE ACTION AND THE SECOND IS JUST PHILOSOPHY OF THE ACTION OF THE GREAT HERO” Please try to understand the difference of both.

    • thamilmaran says:
      16 years ago

      thank you sir, so kind of you.

    • xxx says:
      16 years ago

      Really, “billions and billions” waiting and watching … Prabhakaran?
      Wow! That makes it only the whole world!
      Why not make it trillions and trillions? There may have been others in other parts of the universe with nothing else to do but “waiting and watching the whole life time of Prabhakaran”!

    • ஊர்மிளா பிரபா says:
      16 years ago

      The difference between Prabhakaran and Iyar is Iyar want people struggle by and with people. Prabakaran is ME and ME only..forget the struggle..

  21. யோகன் says:
    16 years ago

    ஐயர் என்பது படித்து வாங்கிய பட்டமா ? லண்டனில் ஒருவர் திரியிறார் பத்மநாத ஐயர் .என்ன கொடுமை சார் .

  22. vinothan says:
    16 years ago

    ஊர்மிளா பிரபா, வெட் க்கம் வரவில்லையா ? சிங்கள ரவுடிக்கு முன்னாலே கூனி குறுகி நிற்பதற்க்கு, அல்லது தமிழனை ஆட்சி செய்வதை **

    • ஊர்மிளா பிரபா says:
      16 years ago

      வினோதன் நீங்கள், முழங்க காலில் நின்று  வெள்ளைக்கொடி பிடித்து உயருக்கு சிங்களவனிடம் கூனிகுருகி நின்ற என்னை  கேக்குறீங்க ?

      • saravanan says:
        16 years ago

        ஒரு குடியானவன் தன்னோட ஆட்டை விற்பதற்கு, பக்கத்து நகரத்துக்கு அதை தோழில் வைத்து சுமந்து சென்றான். இதை பாத்த மூன்று திருடர்கள் ( மாமணி , பிரபா ஊர்மிளா , துரை ) அதை எப்படியாவது அபகரிக்க திட்டமிட்டனர். முதலாவது திருடன் காட்டு வழியால், தனியே சென்ற குடியானவனை இடைமறித்து, என்ன ஜ்யா நரியை தோழில வைச்சு சுமக்குறீர் , உமக்கு என்ன பைத்தியமோ எண்டு கேட்டான். உடனே குடியானவன் சொன்னான், உணக்கு தான் பைத்தியம் , வடிவா பார் அது ஆடு எண்டு சொல்லிவிட்டுநடக்க ஆரம்பித்தான். சற்றுத்தொலைவில் மீண்டும் இடைமறித்த இரண்டாவது திருடன்..என்ன ஜ்யா உமக்கு பயம் எண்டதே கிடையாதா, நரியை தோழில் வைச்சு சுமக்குறீரே எண்டு. உடனே குடியானவனுக்கு தன்மீதே தனக்கு சந்தேகம் வந்துவிடுகிறது.இருந்தாலும் ஆட்டை ஒருமுறை பாத்துவிட்டு, இல்லை அது ஆடுதான் என்று சொல்லிவிட்டுநடக்க ஆரம்பித்தான். மீண்டும் திட்டமிட்டபடி மூன்றாவது திருடன் குடியாவனை இடைமறித்து, என்ன ஜ்யா உமக்கு மண்டை கழண்டுபோட்டுதோ நரியை தோளிலவைச்சு சுமக்குறிரே..அதைதூக்கி வீசிவிட்டு தப்பிறவழியைப்பாறும் எண்டு.அப்பாவிக்குடியாவனும், தான் ஆட்டை இதுவரைச்சுமக்கவில்லை,நரியைத்தான் சுமந்துவந்துவிடேன் எண்டுநம்பி, ஆட்டைத் தூக்கி எறிந்துவிட்டு ஊரைநோக்கி ஓடினான் . இந்தக்கதைமாதுரித்தான் இருக்கு தலைவர் சரணடைந்த கதையும். மாமணி, பிரபாஊர்மிளா,துரை மூன்று பேரும் திரும்பத் திரும்ப ,தலைவர் சரணடைந்தவர் எண்டு சொன்னால் அதைநம்புவதற்குநாங்கள் ஒன்றும் “குடி”காரர் இல்லை. எல்லாரும் ஏறிப்பாத்த குதிரையில, ஆறுமுகத்தார் தானும் ஏறிப்போகநினைச்சாராம்.

  23. velavan says:
    16 years ago

    Hi Mr. xxx Today, the world populations is 6.6 billions. In india itself, there are more than 1.25billions. And the China has other more than 1.3 billions. There are more than three thousnds five hundred languages in the world. So, My dear mr. xxx. if you go any part of the world and pick up their news paper, there you would have happened to read about prabhakaran with his photo. So, At least , more than three billions would have read about to find out how one Prabhakaran was fighting against the Govt.. And almost more than 4 billions would have talked about Prabhakaran when he was fighing his war.. My dear Mr.xxx do you know the power of medias. you name it there you will find him and his stories. T.V.s, Websites, books, newspaper, radios,political magazines, in the debate of all countries parliaments, in the planes, trains, cars, wedings, funerals, birthday parties, shopping malls,on the road, in the jungles, in the temples and everywhere the people have talked about the great leader. So please don’t try to teach me the difference between the billions and trillions.

    • xxx says:
      16 years ago

      Dear V
      So the whole of India plus plus the whole of China, including babies, plus a multiplying factor!
      They were probably missing their meals and waiting on the all powerful media to know what was going on in this potty little island of ours!
      First check what perecentage of our population is sufficiently aware of what you think is the most pressing problem in the world (of course excluding what happened to the LTTE or VP).
      Use that as a criterion and you will arrive at sensible figures for the highest possible number interested in the Sri Lankan problem. The number that cares to know who VP was or what the LTTE is/was will be a small fraction of it. The number caring to know what happened to either will be even smaller.
      Do not plunge into fantasy. It may be good for daydreaming but not serious comment on real life situations.

  24. velavan says:
    16 years ago

    Dear xxx.

    It is my second attempt to make to understand what I wrote in my comments.

    Ok let,s start from the kindergarten.

    A) If more than 10 million people knew who was M.G.R .

    B) If more than 20 million people know who is Srilankan cricker Murali.

    C) If more than 40 million people know who is Rajini Kanth.

    D) If more than 80 million people know who is A.R.Rahuman.

    E) If more than 100 million people know who is Abdul Kalam.

    F) If more than 500 million people knew who was Bruce Lee.

    G) If more than one billion people knew who was Micheal Jackson.

    Why can’t you agree when I say more than three billion people read and talked about the great leader?

    So just take it easy and learn to accept the truth. You are not going to lose anything when you realize your mistake. Let’s discuss the matter for sake of the truth , let’s learn what is good for our community, let’s unite together, let’s work together for the future of our people, Let’s build up the strongest bridge for the untiy of the Tamils from all part of the world. Here it is not the question who is right or who is wrong or who is big or who is small or who is rich or who is poor but the question is ,can we do something good for our future generation. If I continue my writing for your question, then I feel that I am going out of the way ,So that is all. Thank you.

    • ஊர்மிளா பிரபா says:
      16 years ago

      Dear Velavan, Anybody can read any language knows who is HILTOR . It does not make him hero or leader. குண்டு சட்டிக்குள் குதிரை எவ்வளவு காலம் ஓட போறிங்களோ ?

    • xxx says:
      16 years ago

      Dear V
      I would like to agree with you, but commonsense stands in the way.

      You forgot a few names that billions really knew: Jesus Christ, Prophet Muhammad, Moses.
      Perhaps VP is in their ranks. Of course he too has worshippers too.

    • mamani says:
      16 years ago

      H) If more than two billon people knew who was Bin Ladan

  25. velavan says:
    16 years ago

    Vanakkam Urumila Praba. I said, ” Vannakam” because you touching little front portion of the great leader’s name. Any way ,if I am coming to the point. Let’s it be a small answer for both of you and dear xxx. because both are determined to fight with me. Anyhow I like it because teaching for thos who are hungry for knowledge is my duty. You see, when I was very small , even my faterher “Lord Shive” sureender to me to learn the most powerful Mandra. So ,both of you don’t need to feel shy or worry about anything to learn from my comments. I am only the answer for your unanswered questions. Both of you are seemed to be born billions and billons unaswerable lost questions. And I know it certain that both of you would have done Phd in the great subject so called “UNANSWERED LOST QUESTIONS” Here is the meaning of the word ” HERO” the one who sacrifice his own pleasures , seflishness, happiness, peace, and even own life for the sake of others. It may be for his family, village, community, religion, language, country but not for his own intrest. For example, I have seen some of my friends , over fifty years old but not married yet, still sending money to their family members(in srilanka) , they are the heros for their family members.They don’t want to go to any holy places to do their worship because the living God is alive in front of them. How many of you know this type of people? Next,there are people even if they have the opportunity to leave the country, they want to stay in their village and help those poor people and do all kind of help for those poor and repairing those old lakes, lending some of the poor for farming and do small small business keep their village people without leaving the village and stopping anti-tamils entering the village as well.So, these people are called the hero of the village. The poor people these heros are worshipable and respectable. How of you know them? When Bristish tried to destroy the hindu religions in most of the Asians countries, there were Yogis, Gurus, Swamiji, Monks, who sacrificed their life to prove them what a true religions is Hindusim. And some of them taught thos English and made them to convice in their teaching of the oldest hindu methology.Some of the hindu swamijis have been tortured by muslim kings and christian creazy fundamentalist but still our swamiji, guru, yogis didn’t give up and they continued as the resulf of that , now you can see the entire westerner practising Yoga and meditation. Now the western people practice the yoga and meditation and living in peace. so, these Swamijis, Guru, Yogis are treated as their God. Because in our philoshopy , the god in the forth place. Amma,Appa, Guru, and the God. So they are religious heros. How many of you know thos hero? In India , the great hero,kING BHARAT who was son of Thusiandan and Shakundala, found his own nine children were not good enough for the rule, so he handed ove the kingdom to one of his minister.so that unselfisheness decision, still the country”India, carrying his name “Bharat”. So how of you know the king? Same Way, a little boy at the age of 14 gave up his own future, and came foward to fight for the sake of his own tamil community and spent all his life in the jungle with his comrades and fianlly laid their own lifes. So the people who with them and enjoyed their freedom , started lookign at their leader as a divind worshipable warrior. what is wrong with that?Here is not the question how many millions have know these people but the question is purpose of their war, action, speech, thoughts and ending of their life are for the sake of their own or for the sake of Urumila Praba and xxx and others who are leading luxurious life in all western counties. I can write millions and millions pages but still it will be a unending stories of our tamil communities so what is the point of writing long comments.So Please , be backward from your thoughts, speeck and writing and let’s come together do something good for our tmail communities. Good luck may god bless you.

  26. vanniyan says:
    16 years ago

    ஒரு குடியானவன் தன்னோட ஆட்டை விற்பதற்கு, பக்கத்து நகரத்துக்கு அதை தோழில் வைத்து சுமந்து சென்றான். இதை பாத்த மூன்று திருடர்கள் ( மாமணி , பிரபா ஊர்மிளா , துரை ) அதை எப்படியாவது அபகரிக்க திட்டமிட்டனர். முதலாவது திருடன் காட்டு வழியால், தனியே சென்ற குடியானவனை இடைமறித்து, என்ன ஜ்யா நரியை தோழில வைச்சு சுமக்குறீர் , உமக்கு என்ன பைத்தியமோ எண்டு கேட்டான். உடனே குடியானவன் சொன்னான், உணக்கு தான் பைத்தியம் , வடிவா பார் அது ஆடு எண்டு சொல்லிவிட்டுநடக்க ஆரம்பித்தான். சற்றுத்தொலைவில் மீண்டும் இடைமறித்த இரண்டாவது திருடன்..என்ன ஜ்யா உமக்கு பயம் எண்டதே கிடையாதா, நரியை தோழில் வைச்சு சுமக்குறீரே எண்டு. உடனே குடியானவனுக்கு தன்மீதே தனக்கு சந்தேகம் வந்துவிடுகிறது.இருந்தாலும் ஆட்டை ஒருமுறை பாத்துவிட்டு, இல்லை அது ஆடுதான் என்று சொல்லிவிட்டுநடக்க ஆரம்பித்தான். மீண்டும் திட்டமிட்டபடி மூன்றாவது திருடன் குடியாவனை இடைமறித்து, என்ன ஜ்யா உமக்கு மண்டை கழண்டுபோட்டுதோ நரியை தோளிலவைச்சு சுமக்குறிரே..அதைதூக்கி வீசிவிட்டு தப்பிறவழியைப்பாறும் எண்டு.அப்பாவிக்குடியாவனும், தான் ஆட்டை இதுவரைச்சுமக்கவில்லை,நரியைத்தான் சுமந்துவந்துவிடேன் எண்டுநம்பி, ஆட்டைத் தூக்கி எறிந்துவிட்டு ஊரைநோக்கி ஓடினான் . இந்தக்கதைமாதுரித்தான் இருக்கு தலைவர் சரணடைந்த கதையும். மாமணி, பிரபாஊர்மிளா,துரை மூன்று பேரும் திரும்பத் திரும்ப ,தலைவர் சரணடைந்தவர் எண்டு சொன்னால் அதைநம்புவதற்குநாங்கள் ஒன்றும் “குடி”காரர் இல்லை. எல்லாரும் ஏறிப்பாத்த குதிரையில, ஆறுமுகத்தார் தானும் ஏறிப்போகநினைச்சாராம்.

    • THAMILMARAN says:
      16 years ago

      எல்லாம் சரிதான், அவரது மனைவி பிள்ளகள் எப்படி அங் கு வந்தார்கள்?இவர்கள் குடும்பமாக கொல்லப்பட்டிருப்பது எப்படி?

      • saravanan says:
        16 years ago

        சிங்களம் எல்லவா அப்படி சொல்கிறது. பிரபாகரின் உடலை கூட அவர்களால் ஒழுங்காக உறுதிப்படுத்த முடியவில்லையே .மூன்று விதமான உடல்களை அல்லவா காட்டினார்கள்.

        • mamani says:
          16 years ago

          1) இறந்து விட்டார்
          2) இறக்கவில்லை
          3) சரணடைந்து பின் கொல்லப்பட்டார்
          என்று மூன்று பிரிவாக நாம் பிரிந்து நின்று எமக்குள் அடி படுகிறோம் அல்லவா ? இதற்குதான் பார்ப்பானிய மூளை உதவியிருகிறது. இறந்து விட்டார் என்றால் அதை முறையாக அறிவித்திருக்க வேண்டும். இறக்கவில்லையென்றால் அதையும் நிரூபிதிருக்கலாம். இவை ஒழுங்காக செய்யப்பட்டிருந்தால் மூன்றாவது கேள்வி எழுந்திருக்காது அது உண்மையா இருந்தால் கூட!

          • saravanan says:
            16 years ago

            அந்த மூன்றாவது கேள்வியை உருவாக்கிய அளிவாளிகள் நீங்கள் தானே. சற்று பொறுத்திரும் விடை கிடைக்கும் அப்பொழுது இங்கே பெயரை மாற்றி வந்து எழுதலாம்

          • mamani says:
            16 years ago

            ஏங்க சரவணனன் அண்ணன் உயிரோட இருந்தா அதை சொல்லுறதில என்ன பாதிப்பு வந்திட போவுது. சிறிலங்கா அரசுக்கு மறைக்க எண்டு பகிடி மட்டும் விடாதீங்க

          • mayilu says:
            16 years ago

            “எங்க அண்ணன்” அண்ணனுக்கெல்லாம் அண்ணன் தம்பிகளுக்கெல்லாம் தம்பி. தங்கக்கம்பி வல்வை பெற்ற மாவீரன்

        • mamani says:
          16 years ago

          வெள்ளை கொடிக்கு ஆதாரமா ? வேட்டியை உருவி வெள்ளை பிடித்ததால்தான் கோவணம் ………….

    • saravanan says:
      16 years ago

      அருமையான பதில் நண்பரே ஒரு கருத்தை திரும்ப திரும்ப சொல்வதால் உண்மையாகிவிடாது. ஆதாரத்துடன் கருத்தை முன்வைத்துவிட்டு பிதட்டினால் நல்லது மாமணி, துரை

      • mamani says:
        16 years ago

        பிதற்றுவது யாரென்று சரவணனன் சற்று மாதங்களில் புரிந்து கொள்வார். அடிக்கடி பெயர் மாற்றுபருக்குதான் அனுபவம் பேசும்.
        உண்மை தெரியவரும்போது உங்களுக்கு எப்பவோ தெரியும் நீங்கள்தானே ஆட்டுவித்தவர்கள் மக்களுக்கு உண்மை தெரியவரும்போது இறந்த மாட்டில் உண்ணி கழர்வதைபோல் இந்த வலை பக்கமே வரமாட்டீர்கள்.

    • mamani says:
      16 years ago

      ஓ சரவணனனும் , வன்னியனும் அந்த பணம் புடுங்கி ஆசாமிங்களா? கே.பி வாரிசுகளா? அடிச்சது போதும் செற்றிலாகிற வழியை பாருங்க.

    • mamani says:
      16 years ago

      நம்பிக்கைதான் வாழ்க்கை உங்க தலைவர் கே.பி சொல்லி இருக்கார்.

      • Virumandi says:
        16 years ago

        மாவீரன் தலைவர் பிரபாகரன் தமிழைகளைப் பெருமைப் படுத்திய உன்னதத் தலைவர். கொண்ட கொள்கையை உயிரினும் மேலாக மதித்த அற்புதத் தலைவர். பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என்ற பொய் செய்தியை இலங்கை அரசு திட்டமிட்டு பரப்பிய போது தமிழ்நாட்டுத் தமிழர்கள அத்தனை பேரும், ஆண் பெண் பேதமின்றி, முள் தைத்தது போல் உணர்ந்தார்கள்.

        • mamani says:
          16 years ago

          நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் இமயமலையில ஒளிச்சிருக்காரு வயசு 100 க்கு மேலாகுது. என்ன நம்மாளுக்கு 100 வயசாகும்போது நாம உசிரோட இருக்க மாட்டம். நீங்க நீடிச்ச ஆயுசோட இருந்து அண்ணாச்சியை வாழ்த்துங்க என்ன.

  27. velavan says:
    16 years ago

    Dear Urumila, Thurai and xxx

    You guys ,are always using the word “SURRENDER” Ok, let me give you guys a small comments for your word,”SURRENDER”. Of course, you would have read about lot leaders, warriors, like the Great Alexandra, Nepolian, Akabar, Hitler, Musolini, Lenin, Mao she tung, Fedel Castro, Idi Amin, Sadam Husein, Gadaffi, Che Guevara, Rohana Wijeyaweera, Prabhakaran and so many , so many others. Here what you can see in common ,any one of those never surrendered to their enemy, even Sadam Husein did not surrender to Americans but he was captured and killed by the American Army. Indi Amin ran to Saudi Arabia and from there he fought for his country and died in Saudi Arabia. and Wijeweera also was caputred and killed by the srilankan army while he was taking his child to the hospital for treatment. Why Prabhakaran should take more than 30 years to surrender to Sinhala Army because he did not know how surrender to his enemy in last thrity years. Don’t you read before you sending your comments to this articles?

    • mamani says:
      16 years ago

      He was misled by international governtments.

  28. xxx says:
    16 years ago

    Dear Velavan
    I do not attach much significance to the idea of surrender. To me it is not an act of betrayal, but one of inevitability under a set of physical and emotional circumstances.
    I do not think that VP should have committed suicide, and that it was wicked of the armed forces to kill VP in the way they did.
    I doubt if you are doing a favour to VP by drawing parallels to Idi Amin.

    Please stop insulting people because they disagree with you– not that I care for what you have to say about me, but I think that it brings down the tone of the discussion,
    By the way I do not ‘love’ VP to the extent that Urumila, Thurai et al. do, nor am I a blind admirer of the man.

  29. velavan says:
    16 years ago

    Oh dear xxx

    Misunderstandings and doubts are the worst diseases in human history. The last comment of purpose is not to compare the greate leader Prabhakaran to Idni Amin but I just put his name also to show you guys and make to understand that in case of war or even in case of the most dangerous time, those who were in power , never thought of surrendering to their enemies. Because those who came to such a powerful level , should have very strong will power , so they won’t easily fall to the ground to surrender to anyone in their life. That is all.

  30. velavan says:
    16 years ago

    Dear xxx , Sorry for I left the comments incomplete. The things, I missed to put it in the same comments are, if you think that I hate anyone of you ,there you make your mistake, because , I never hate your writing or even Urumila Praba or Thurai or anyone. Acutally I have to be grateful to them because if they don’t write their comments, I will not happen to write my comments.They are my gurus. I always respect them. These comments are just to clear our doubts and misundetandings. These comments are just to be mere the pocessing time of building our unity and a strong community of the future. Comments are the just the mirror of the many different oppinions and concepts of readers of this articles.

  31. karnan says:
    15 years ago

    வாய் சொன்லெ வீரர்களே , பிரபாகரனை குற்றம் சொல்லும் நீங்கள் என்ன தான் உருப்படியாக செய்து புடுங்க போகிறீர்கள் பார்ப்போம்

  32. அரிச்சந்திரன் says:
    14 years ago

    காந்தன் அவர்கள் தற்போது சுவிசில் வாழ்கின்றார். அண்டங்காகங்களும் பாடினால்தான் கானக்குயில்களின் குரல் இனிமை தெரியும், தமிழீழத்தேசியத்தலைவர் நலம்,

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...