Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

மட்டக்களப்பு வரலாறு – எங்கிருந்து தொடங்குவது?: விஜய்

இனியொரு... by இனியொரு...
12/23/2009
in பிரதான பதிவுகள் | Principle posts, இலக்கியம்/சினிமா
0 0
3
Home பிரதான பதிவுகள் | Principle posts

தமிழில் பல வரலாற்று நூல்கள் எழுதப்பட்டிருப்பினும் வரலாறு எழுதும் முறை பற்றி தமிழில் அதிகம் யாரும் பேசவில்லை. வரலாற்றை அறிந்து கொள்ள உதவும் மூலங்கள் பற்றியும் யாரும் பேசவில்லை. இந்த நிலையால் வரலாற்று மூலங்களுடன் தொடர்பு கொண்டுள்ளோர் அவை பற்றிய விழிப்புர்ணர்வின்றி இருப்பதையும், அவற்றை தெரியப்படுத்தவோ, பாதுகாக்கவே முற்படாது அழித்துவிடும் நிலையையும் காணமுடிகிறது.

இலங்கையின் சரித்திரம் முழுமையாக தொடர்ச்சியாக எழுதப்பட்டுள்ளது. இலங்கையின் வரலாற்றைக் கூறுகின்ற பழைய வரலாற்றேடுகள், தமக்குள் பல முரண்பாடான செய்திகளைக் கொண்டிருப்பினும், வரலாற்று முரண்பாடுகளைக் கொண்டிருப்பினும், வரலாற்றெழுத்தியல் முறையில் தவறுகளைக் கொண்டிருப்பினும் இலங்கையின் வரலாற்றை முழுமையாகவும் பெருமளவுக்குத் தொடர்சியானதாகவும் முன்வைத்திருக்கிறது. மீண்டும் மீண்டும் அவ்வரலாறுகளில் மீளாய்வுகள் செய்யப்படினும் முழுமையான ஒரு வரலாறு முன்வைக்கப்பட்டுள்ளது.

மகாவம்சத்தில் கூறப்படுகின்ற குவேனி பற்றிய செய்திகள் தீபவம்சத்தில் குறிக்கப்படவில்லை என “இலங்கையின் சுருக்க வரலாறு” எழுதிய எச்.டபிள்யு. கொடிறின்றன் குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது. அத்துடன் இலங்கை பற்றிய வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்புகளுக்கும் இலங்கை வரலாற்றேடுகள் கூறும் செய்திகளுக்கும் இடையில் பல முரண்பாடுகளும் இருக்கின்றன.

இலங்கைத் தமிழர்களின் வரலாற்றைக் கூறும் நூல்கள், வடக்கில் வாழும் தமிழர்களின் வரலாற்றையே கூறியுள்ளன. அது மட்டக்களப்புத் தொடர்பான செய்திகளை திரட்டிக்கொள்வதில் உள்ள இடர்பாடுகளால் ஏற்பட்டதே. ஆயினும் வடக்கில் வாழும் தமிழர்களின் வரலாறு, தர்க்கவியலடிப்படையிலாவது முழுமையாக முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஏதாவது ஒரு முறையில் தொடர்ச்சியான, முழுமையான வரலாற்றை முன்வைப்பதன் மூலமே சரியான வரலாற்றை அறிய வாய்ப்புக்கிட்டும் போல் தென்படுகிறது.

மட்டக்களப்பின் முழமையான, தொடர்ச்சியான வரலாறு ஊக அடிப்படையிலாவது இன்னமும் முன்வைக்கப் படவில்லை என்ற குறைபாடு நிலவி வந்தது. அதற்கான முதல் முய்றசியை வெல்லவூர்க்கோபால், “மட்டக்களப்பு வரலாறு-ஒரு அறிமுகம்” என்ற நூல் வாயிலாக மேற்கொண்டிருக்கிறார்.

மட்டக்களப்பின் வரலாற்றைப் பற்றிக் கூறும் டி. சிவராம், (“மட்டக்களப்பு பூர்வ சரித்திரம்” நூலின் வரலாற்று அறிமுகக் குறிப்பில்) மட்டக்களப்பின் வரலாற்றை விபரிக்கக்கூடிய அடிப்படை மூலங்களை மூன்று பகுதிகளாகப் பிரித்து,

பழைய வரலாற்றுக் காலப்பகுதி,

சோழர் காலப்பகுதிப் பின் போர்த்துக்கேயரின் வருகை வரையான, அதாவது 16ம்
நூற்றாண்டு வரையான நடுக்காலப்குதி,

காலணியாதிக்கக் காலப்பகுதி என வகைப்படுத்தியுள்ளார்.

முதல் கால கட்டம் தொடர்பான அதாவது சோழர் காலத்திற்கு முற்பட்ட காலம் தொடர்பான திட்டவட்டமான வரலாற்றுச் சான்றுகள் எதுவும் இதுவரை கிடைத்தில எனக்கூறும் சிவராம், கிடைக்கின்ற பழைய சான்றுகள் கி;.பி. 16ம் 17ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும் எனச்சுட்டிக்காட்டியிருக்கிறார். இதன்மூலம் மட்டக்களப்பின் பண்டைய வரலாற்றை எடுத்துரைக்கக் கூடிய சான்றுகளின் போதாமையை நாம் நன்குணரலாம்.

ஆயினும் மட்டக்களப்பின் இடைக்காலத்திற்கு முற்பட்ட மட்டக்களப்பு வரலாற்றை அறிந்து கொள்ள அடிப்படையாக இருப்பது “மட்டக்களப்பு மாண்மியம்” (எப்.எக்ஸ்;.சி.நடராசா அவர்களால் 1962ல் வெளியிடப்பட்டது) எனக்குறிப்பிட்டுள்ளார். இனி சிவராமுடன் இது குறித்து கதைக்கும் சந்தர்ப்பம் நமக்கில்லை என்பது துயரமானதே.

“மட்டக்களப்பு மாண்மியம்” மட்டக்களப்பின் வரலாற்றை ஆய்வுக்குட்படுத்தி வெளியிடப்பட்ட வரலாற்று நூலல்ல என்பதே உண்மை. அது ஏற்கனவே இருந்த ஏடுகளின் தொகுப்பாகும். அந்நூலில் கூறப்பட்டுள்ள செய்திகளை ஆராய்ந்தும் மற்றும் அதில் கூறப்பட்டுள்ள செய்திகளையும் இலங்கையின் பிற வரலாற்றுச் செய்திகளையும் ஒப்பீட்டாராய்ந்தால்தான் மட்டக்களப்பின் வரலாற்றை அறிய முடியும். அந்நூலில் கூறப்படும் செய்திகளில் மட்டக்களப்பின் பிற்பட்ட கால வரலாற்றுச் செய்திகளே ஒப்பிட்டு நோக்கத்தக்கன.

மட்டக்களப்பு மாண்மியத்தின் “நூல் வரலாற்றில்”, மட்டக்களப்பு மாண்மியம் பலரால் பலகாலத்தில் எழுதப்பட்டதாகக் கூறுப்பட்டுள்ளது. பண்டைச் சரித்திரத்தையும் அதே வேளை ஒல்லாந்தர் வரையான சரித்திரமும் இந்நூலில் காணப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. இந்நூல், குறிப்பாக 17ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுந்தது எனவும் சிலவேளை பழைய காலத்திற்குரிய ஏட்டுப்பிரதிகள் அதில் இருந்திருக்கலாம் எனவும் கருதமுடியும்.

எவ்வாறெனினும்; மட்டக்களப்பில் – அம்பாறையில் இன்று வாழ்கின்ற தமிழர்களின் தொன்மை வரலாறு யாது ? என்ற வினாவிற்கும் இப்பிரதேசம் பண்டை நாட்களில் எம்மக்களும் குடியேறி வாழத பகுதியாகவே விளங்கியதா ? என்ற வினாவிற்கும் விடையை நாம் கண்டறிய வேண்டும்.

இலங்கையின் வரலாற்றுடன் தொடர்பு படுத்தி மட்டக்களப்பின் வரலாற்றை அறிய முற்படுவதே தற்போதைக்கு சாத்தியமானதாக அமையும் போல் தெரிகிறது. அத்துடன் மட்டக்களப்பில் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியதும் அவசியமானதாகும். அதிலும் அதற்கான ஆரம்பப் பணிகளையே செய்ய வேண்டியிருக்கிறது. அதற்கு, முதலில் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட விடயமான வரலாறு எழுதும் முறை பற்றியும், வரலாற்றதாரங்கள் பற்றியும் நாம் பேசவேண்டும்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

நாசிக்கள் காலத்தில் போப்பாக இருந்த 12 ஆவது பயஸ் அவர்களுக்கு ரோமன் கத்தோலிக்க புனிதர் பட்டம்!

Comments 3

  1. knr says:
    16 years ago

    we are all confusing where we can start our history. from KAVERY or GANGA. . I think so, everyone biosed . even Kosambi and Rambila Thaber also. We will start from Tamil Chavainist! or Karuna!

    • vijey says:
      16 years ago

      Knr?????

      vijey

  2. Siva Kuna says:
    16 years ago

    மட்டக்களப்பு …………….மன்னன் பிள்ளையானிடமிருந்தும் தொடங்கலாம். அவரும் இது குறித்து மகிந்தரிடம் பேசி உதவுவார். மேலதிக விபரங்களுக்கு பிரான்சில் பிள்ளையான் பெயரை தினம் உச்சரித்து பலன் பெறும் விஐpயை நாடுங்கள்

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...