கீரிமலை பகுதியில் கடந்த 21வருடங்களாக மூடப்பட்டிருந்த செம்மண்காடு இந்து மயானம் பிரதேச மக்களின் கடுமையான போராட்டத்தையடுத்து நேற்று முதல் மக்கள் பாவனைக்காக கடற்படையினரால் திறந்து விடப்பட்டிருக்கின்றது.
கடந்த 21வருடங்களாக இந்தப் பகுதி உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வைக்குள் அடக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 6மாதகாலத்திற்கு முன்னர் இந்த பகுதி விடுவிக்கப்பட்டிருந்தது.
எனினும் பிரதேச மக்களின் பயன்பாட்டில் இருந்து வந்த குறித்த மயானம் மக்களிடம் கையளிக்கப்படாத நிலையில் தொடர்ந்தும் இந்தப் பகுதியில் கடற்படையினர் தமது நடமாட்டத்தை தொடர்ந்திருந்தனர்.
இதனால் மக்களுக்கு மயானம் இல்லாமல் இருந்து வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை குறித்த பகுதியில் முதியவரொருவர் காலமாகியுள்ளார். இவரது இறுதிச் சடங்குகளை குறித்த மயானத்தில் நடத்த அனுமதியளிக்குமாறு மக்கள் கடற்படையை கோரியிருந்தனர்.
எனினும் இதற்கு கடற்படை உடன்பட்டிராத நிலையில் இறந்தவரின் சடலத்துடன் வீதியில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக மக்கள் அச்சுறுத்தல் விடுத்தனர். இந்த நிலையில் மாற்று நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் கடற்படை குறித்த மயானத்தை பொதுமக்களிடம் கையளிக்க முன்வந்திருக்கின்றது.
எனினும் குறித்த மயானத்திற்குச் செல்லும் வீதி தொடர்ந்தும் கடற்படையினரின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகின்றது. இதனால் தற்போது கடற்கரையை சுற்றியே பொதுமக்கள் சென்று வருகின்றனர்.
பகுதியில் கடந்த 21வருடங்களாக மூடப்பட்டிருந்த செம்மண்காடு இந்து மயானம் பிரதேச மக்களின் கடுமையான போராட்டத்தையடுத்து நேற்று முதல் மக்கள் பாவனைக்காக கடற்படையினரால் திறந்து விடப்பட்டிருக்கின்றது.
கடந்த 21வருடங்களாக இந்தப் பகுதி உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வைக்குள் அடக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 6மாதகாலத்திற்கு முன்னர் இந்த பகுதி விடுவிக்கப்பட்டிருந்தது.
எனினும் பிரதேச மக்களின் பயன்பாட்டில் இருந்து வந்த குறித்த மயானம் மக்களிடம் கையளிக்கப்படாத நிலையில் தொடர்ந்தும் இந்தப் பகுதியில் கடற்படையினர் தமது நடமாட்டத்தை தொடர்ந்திருந்தனர்.
இதனால் மக்களுக்கு மயானம் இல்லாமல் இருந்து வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை குறித்த பகுதியில் முதியவரொருவர் காலமாகியுள்ளார். இவரது இறுதிச் சடங்குகளை குறித்த மயானத்தில் நடத்த அனுமதியளிக்குமாறு மக்கள் கடற்படையை கோரியிருந்தனர்.
எனினும் இதற்கு கடற்படை உடன்பட்டிராத நிலையில் இறந்தவரின் சடலத்துடன் வீதியில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக மக்கள் அச்சுறுத்தல் விடுத்தனர். இந்த நிலையில் மாற்று நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் கடற்படை குறித்த மயானத்தை பொதுமக்களிடம் கையளிக்க முன்வந்திருக்கின்றது.
எனினும் குறித்த மயானத்திற்குச் செல்லும் வீதி தொடர்ந்தும் கடற்படையினரின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகின்றது. இதனால் தற்போது கடற்கரையை சுற்றியே பொதுமக்கள் சென்று வருகின்றனர்.