Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

பொதுபல சேனை என்ற பிரிவினைவாத அமைப்புதான் நாட்டு மக்களிடம் பொது மன்னிப்பு கோரவேண்டும் : மனோ கணேசன்

இனியொரு... by இனியொரு...
11/20/2013
in இன்றைய செய்திகள்
0 0
3
Home இன்றைய செய்திகள்

GOTA_BBSபொதுபல சேனை என்ற தீவிரவாத அமைப்பிடம் ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தயா கமகே ஆகியோர் மன்னிப்பு கேட்டமைக்கும் எமக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. இந்நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் இன மற்றும் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மத சிறுபான்மையினரை குறிவைத்து தாக்கும் பொதுபல சேனை என்ற இன-மதவாத அமைப்பிடம், நாம் ஒருபோதும் மன்னிப்பு கேட்கவுமில்லை. அதற்கு எமக்கு எந்தவித தேவையுமில்லை. இந்நாட்டில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டி பிரிவினையை வளர்க்கும் பொதுபல சேனையின் பொது செயலாளர் கலபொட ஞானசார தேரர்தான் நாட்டு மக்களிடம் பொது மன்னிப்பு கோர வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

அதிகாரத்தை பிரித்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று கொழும்பில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, நண்பர்கள் விக்கிரமபாகு கருணாரத்ன, அசாத் சாலி ஆகியோர் தலைமையிலான கட்சிகள், ஐக்கிய தேசிய கட்சி ஆகிய கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் இடம்பெறும் சமகி என்ற ஐக்கியத்துக்கான மக்கள் சக்தி அமைப்பு, பொதுநலவாய மாநாட்டு வேளையில் கொழும்பு சிறிகோத்த நிலையத்தில் ஒரு மனித உரிமை மாநாட்டினை நடத்தியது. அவ்வேளையில் அந்த மாநாட்டு மண்டபத்தை நோக்கி வந்த பொதுபல செனை அமைப்பினர் அம்மாநாட்டை குழப்ப முயன்றனர். அதனால் அங்கு வன்முறை இடம்பெற்றது.

இந்த சம்பவம் தொடர்பில் நேற்று, சிறிகோத்த மண்டப பகுதியில், குறித்த பொதுபல சேனையினரிடமும், அதன் பொது செயலாளர் கலபொட ஞானசார தேரரிடமும், ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட எம்பி ரவி கருணாநாயக்க தலைமையிலான குழுவினர் மன்னிப்பு கோரியுள்ளனர். இந்த நடவடிக்கை மன்னிப்பு கோரிய நபர்களின் தனிப்பட்டநடவடிக்கையாகும். இது எந்த விதத்திலும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து நாம் ஏற்படுத்தியுள்ள சமகி இயக்கம், எதிர்கட்சிகளின் எதிர்ப்பு இயக்கம் ஆகிய அமைப்புகளை கட்டுப்படுத்தாது.

உண்மையில் அமைதியாக நடைபெற்ற மாநாட்டை குழப்ப வந்தவர்களே, மாநாட்டை நடத்திவர்களிடம் மன்னிப்பு கோரவேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும். குழப்பம் விளைவிக்க வந்த நபர்களிடம், இந்த ஐக்கிய தேசிய கட்சி அரசியல்வாதிகள் மன்னிப்பு கோரியுள்ளது தவறானதாகும். இதையிட்டு நாம் ஆச்சரியப்படுகின்றோம். இவர்கள் எதற்காக மன்னிப்பு கேட்டார்கள் என எமக்கு தெரியாது. இதன் மூலம் இவர்கள் சிங்கள மக்களை சந்தோசப்படுத்த நினைத்தார்களோ தெரியாது. ஆனால், இதன்மூலம் சிங்கள மக்கள் சந்தோசமடைவார்கள் என நான் நினைக்கவில்லை. ஆனால், தமிழ், முஸ்லிம் மக்கள் வெறுப்படைந்துள்ளார்கள்.

இந்த நாட்டில் தமிழ், முஸ்லிம் மக்களின் இன, மத, மொழி சுதந்திரங்களுக்கு ஊறுவிளைவிக்கும் நடவடிக்கைகளில் பொதுபல சேனை தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. சிறுபான்மையினரின் வர்த்தக, தொழில் நடவடிக்கைகளும் இடையூறு செய்கிறது. தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பிலும் இனவாத கருத்துகளை பரப்பி வருகிறது. இவையே உண்மையான பிரிவினைவாத, குழப்பவாத, வன்முறை பயங்கரவாதத்திற்கு அடித்தாளமிடும் செயற்பாடுகள் ஆகும். அதிகாரத்தை பிரித்து நாட்டை ஐக்கியப்படுத்துவது முற்போக்கான செயற்பாடுகள் ஆகும்.

நாம் இந்நாட்டில் ஐக்கியவாதிகள் ஆகும். பொதுபல சேனை, இந்நாட்டில் பிரிவினைவாதிகள் ஆகும். ஆகவே பொதுபல சேனை என்ற பிரிவினைவாத அமைப்பிடமும், அந்த அமைப்பின் பொது செயலாளர் கலபொட ஞானசார தேரரிடமும் இந்நாட்டின் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடம் பொது மன்னிப்பு கோரும்படி நாம் கோருகிறோம்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
பொதுநலவாய  மாநாட்டில் இலங்கையின் இலவச மருத்துவத்திற்கும் ஆப்பு வைக்கபட்டது : புதிய ஒப்பந்தம் அம்பலம்

பொதுநலவாய மாநாட்டில் இலங்கையின் இலவச மருத்துவத்திற்கும் ஆப்பு வைக்கபட்டது : புதிய ஒப்பந்தம் அம்பலம்

Comments 3

  1. Dr. Sri S. Sriskanda says:
    12 years ago

    I think that the honourable Mr. Mano Ganeshan do not have the correct understanding of the Bodu Bala Sena.

    • Dr. Sri S. Sriskanda says:
      12 years ago

      My man. Colonel Gothapaya Rajapakse. New York is the name of a City, County and a State in USA. Hugh Downs and Barbara Walters. American Broadcasting Corporation. Twenty Twenty Program. We will be in touch and so you also be in touch.

      • Sutharsan says:
        12 years ago

        Is Inioru getting paid to post this nonesense ? It is pure lunacy to continue with this madness.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...