Friday, March 6, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

பின்-காலனிய இலக்கியம் : ஏகாதிபத்தியற்கெதிரான பண்பாட்டு வெடிகுண்டு-ஜிவ்ரி

இனியொரு... by இனியொரு...
08/12/2008
in இலக்கியம்/சினிமா
0 0
0
Home இலக்கியம்/சினிமா

அதிகாரம் பல்வேறு தளங்களில் பல்வேறு வடிவங்களில் தொழிற்படும் யுகம் இது. இதனால் அதிகாரம் பற்றிய பல்வேறு, மதிப்பீடுகள்,சிந்தனைகள் முன்வைக்கப்படும் காலமாகவும் இது மாறியுள்ளது. அதிகாரத்தை கேள்விக்குட்படுத்தும் சிந்தனைகளோடு கடந்த நூற்றாண்டில் அறிமுகமாயிருக்கும் பின்-நவீனத்துவம் சர்வதேச அளவில் புலமையாளர்களின் கவனத்தையீர்த்த கோட்பாடாகும் அதிகாரம் தொழிற்படும் நுண்களங்களைக் கூட நுட்பமாக தோலுரித்துக் காட்டியதில் பின்-நவீனத்துவத்தின் பங்கை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது எனும் கருத்து விமர்சனபூர்வமாக அணுகப்பட வேண்டும் என்பதே எமது கணிப்பு.

புpன்காலனிய இலக்கியமும் பின்-நவீனத்துவத்தின் அதிகாரம் பற்றிய பார்வையின் பின்னணியிலேயே வைத்து விளக்கப்படுகிறது. மேற்கு தமது காலனித்துவத்தின் ஊடாக மூன்றாம் உலக நாடுகள் மீது மிக மோசமான சுரண்டல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதோடு மட்டுமன்றி அவர்களின் தனித்துவ சமூக, பொருளாதார, அரசியல், கலாசாரப் பாரம்பரியங்களையும் பெறுமனங்களையும் சிதைத்து தனது கலாசாரக் கூறுகளை திணித்ததே காலனித்துவ யுகத்தின் வரலாறாகும். இந்த காலனித்துவ காலத்தில் தங்களின் இறந்த காலத்தை பறிகொடுத்த மூன்றாம் உலக மக்கள் அதனை மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கினர். அவர்களின் இலக்கியங்களிலும் இம்முயற்சிகள் பிரதிபலிக்கத் தொடங்கின.

மேற்கினால் தங்கள் மீது திணிக்கப்பட்ட அந்நிய சமூகப் பொருளாதார, அரசியல் மாதிரிகளை அதற்குள் தொழிற்படும் அதிகாரத்தினை முன்றாம் உலக எழுத்தாளர்கள் தமது படைப்புகளின் மூலம் பெரிதும் கேள்விக்குற்படுத்திவருகின்றனர். இவர்கள் தங்கள் படைப்புக்களில் காலணித்துவ கால அதிகார மையங்களின் செயற்பாடுகளை, அவ்வதிகார மையங்கள் மேற்கொண்ட பண்பாட்டு ஏகாதிபத்தியத்தை மிக நுட்பமாக வெளி;படுத்தியுள்ளனர். ஆவர்கள் தங்களின் வரலாற்றுத் தொன்மங்களை, கலாசார அடையாளங்களை மீட்டுருவாக்கம் செய்கின்றனர்.

சுருங்கக் கூறின் மேற்கின் காலனித்துவ கால அதிகாரங்களுக்கு எதிரான எதிர்ப்புக் குரலாக அவர்களின் இலக்கியங்கள் வெளிப்படுகின்றன. மூன்றாம் உலகப் படைப்பாளிகளின் இத்தகைய எழுத்துக்கள் பின்-காலனிய இலக்கியமாகக் கொள்ளப் படுகின்றன. பின்-நவீனத்துவ இலக்கியத்தின் ஒரு பகுதியாகவே பின் காலனிய இயக்கியமும் கொள்ளப்படுகிறது.

புpன்-காலனிய இலக்கியத்தை அடியொட்டி அறிமுகமாகிய பின்-காலனியக் கோட்பாடு 1970களில் உலக அரங்கில் முக்கிய விவாதப்பொருளாக மாறியது. 1978ல் வெளிவந்த எட்வெர்ட் ஸெய்தின் ‘orientalism’ எனும் நூலே இக்கோட்பாட்டை விவாதப்பொருளாக மாற்றிய ஆரம்பப் பணியாக கருதப்படுகிறது.இக்கோட்பாடு பொதுவாக காலனியத்திற்குட்பட்ட மக்களின் இலக்கியங்களில், தத்துவங்களில் காணப்பட்ட கோட்பாடுகளைத்தான் குறிக்கிறது. அதே நேரம் இது குடியேற்ற நாடுகளில் உருவான இலக்கியங்களுடன் நெருங்கிய தொடர்புகளையும் ஏற்பத்தியுள்ளது.

பின்-காலனிய இலக்கியத்தை சரியாக வரையறுப்பதில் அறிவுஜீவிகள் மத்தியில் மாறுபட்ட கருத்துகள் காணப்படுகின்றன. இந்த விவாதங்களில் பின்காலனிய கோட்பாடும் முக்கிய பங்கு வகிக்கிறது. பின்காலனிய கோட்பாட்டு வாதிகள் “பின்காலனிய இலக்கியம் என்பது காலனித்துவ ஆதிக்கத்துக்குற்பட்டிருந்த நாடுகளில் வாழுகின்ற மக்களால் அது குறித்து எழுதப்படும் இலக்கியங்களேயாகும்’ எனும் வாதத்தை முன்வைக்கின்றனர். இன்னும் பல புலமையாளர்கள் பின் காலனிய இலக்கியமென்பது காலனிய மயமாக்கத்துக்கு பின்னரான இலக்கியங்களைக் குறிப்பதாகக் கூறுகின்றனர்.

இன்னும் சிலர் சுதந்திரத்துக்குப் பின்னர் எழுதப்பட்ட இலக்கியமாகக் கொள்கின்றனர். இத்துறையில் உழைக்கின்ற சில புலமையாளர்களைத் தவிர ஏராளமானவர்கள் பின்காலனிய இலக்கியத்தை மூன்றாவது சொல்லப்பட்ட அர்த்தத்தில்தான் விளங்கி வைத்துள்ளனா.;; அதே நேரம் பின்காலனியக் கோட்பாடு பின்காலனிய இலக்கியத்தை பின்வருமாறு வரையறுக்கிறது. ‘குடியேற்ற நாடுகளை அல்லது அதன் மக்களைப் பற்றி குடியேற்ற நாடொன்றின் குடிமகனால்எழுதப்படும் இலக்கியங்களே பின்காலனிய இலக்கியமாகும்.’

புpன்காலனிய இலக்கியத்தின் முக்கிய படைப்பாளிகளாக சினுவா ஆச்சுபே, கூகி வா தியாங்கோ, மரியாமா பா, மிஷேல் கிளிஃப், அதொல் புகாட், அகமத் நுக்குறுமா, ஹனிஃப் குறைஷி, அனிதா தேசாய், சல்மான் ருஷ்தி, வீ.எஸ்.நைபால், காப்ரியேல் கார்ஸியா மார்குவேஸ், முகார்ஜி, கமலாதாஸ் சுரைய்யா, ஏன் ரணசிங்க, அருந்ததி ரோய்,பாரதி, போன்றோர் அடையாளப்படுத்தப்படுகின்றனர்.

அதே நேரம் பின்காலனிய இலக்கியம் அதன் வரலாற்று இயங்கியல், கோட்பாட்டுருவாக்கம் போன்ற விடயங்களில் மாபெரும் பங்காற்றிய அறிவு ஜீவியாக மறைந்த பேராசிரியர் எட்வேர்ட் ஸெயிதே விளங்குகிறார் இந்தவகையில் இவரது ‘orientalism’, ‘culture and imperialism’ போன்ற படைப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன. ‘orientalism’ உலக அறிவியல் அரங்கில் பாரிய அதிர்வுகளை ஏற்படுத்திய நூலாகும். இதில் கீழைத்தேயம் பற்றிய மேற்குலகின் தவறான கட்டமைப்புகளையும், வக்கிரமான பார்வைகளையும் ஸெயித் விளக்கியுள்ளார். அவரது மற்றொரு நூலான ‘culture and imperialism’ எனும் நூல் கீழைத்தேய நாடுகள் மீது மேற்கு திணிக்கும் கலாசார அடக்குமுறை குறித்தும், அதில் நாவல்களின் பங்கு குறித்தும் பேசுகிறார். பின்காலனிய இலக்கியத்திற்கான சிந்தனை ரீதியான பங்களிப்பாக இந்நூலைக் கருத முடியும் எனினும் எட்வேர்ட் ஸெயிதின் சிந்தனைகளை பின்காலனிய வாதிகள் தவறான அர்த்தங்களில் பிரயோகித்து வருகிறார்கள் எனும் குரல்களும் இப்போது ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

புpன்காலனிய இலக்கியங்கள் புவியியல் அடிப்படையில் மூன்று வேறுபட்ட பிராந்தியங்களிலுள்ள நாடுகளைத் தளமாகக் கொண்டவை. ஆபிரிக்க, ஆசிய. இலத்தீன் அமெரிக்க நாடுகளே அவை. இப்பிராந்தியங்களிலுள்ள நாடுகளே ஐரோப்பிய- மேற்கு ஆதிக்க சக்திகளின் கலனித்துவப் பசிக்கு இரையாகின பின்காலனியஇலக்கியங்களுள் ஆபிரிக்க இலக்கியத்திற்கு முக்கிய இடம் வழங்கப்படுகிறது. காலனித்துவத்திற்குட்பட்ட ஆபிரிக்க மக்களின் தேசிய அடையாளத்தை, வாழ்வியலை,பண்பாட்டு அம்சங்களை அவை பிரதிபலிக்கின்றன. பின்காலனிய ஆபிரிக்க இலக்கிய வரிசையில் சினுவா ஆச்சுபேயின் ‘சிதைவுகள்’ எனும் நாவல முக்கியமானதாகும். இந்நாவல் ஆபிரிக்க மக்களின் சொந்தப் பண்பாடுகள். மரபுகள், நம்பிக்கைகள் அதனோடு கலந்த அவர்களின் இயல்பான வாழ்;க்கை குறித்துபேசுகிறது.காலனித்துவ காலத்தில்; மேற்கின் கெடுபிடிகளால் ஆபிரிக்க மக்களின் பண்பாட்டுத்தனித்துவங்கள் உட்பட அவர்களின் அனைத்து வாழ்வியல் அம்சங்களும் சின்னா பின்னப்படுத்தப்படுகின்றன. மேற்கு தனது ஆதிக்கத்தை தொடர்ந்து நிலைநிறுத்திக்கொள்ளும் வகையில் அம் மக்களின் சிந்தனையை,அறிவை,நடவடிக்கைளை தமக்கு சாதகமானதாக வடிவமைக்கிறது. இதனால் மேற்கத்தேய பெறுமானங்கள் அவர்களின் வாழ்க்கையை ஆக்கிரமிதிதுக்கொள்கிறது. சுருங்கக் கூறின் அவர்கள் தமது சொந்த உலகத்திலிருந்தும் வாழ்விலிருந்தும் விரட்டப்பட்டுவிட்டார்கள் போன்ற காலனித்துவ யுகத்கின் வரலாற்று யதார்த்தங்களை சினுவா ஆச்சுபே ‘சிதைவுகள்;’ மூலம் உலகுக்குத்தெரிவிக்கிறார்.இது தவிர சினுவா ஆச்சுபNo longer at ease(1960), Arrow of got(1964), A man of the people(1966), Anthills of the sawannah(1907) போன்ற நாவல்களையும் எழுதியிருப்பது நமது கவனிப்புக்குரியதாகும்.

புpன்-காலனிய இலக்கியத்தின் மற்றொரு அடையாளம் கூகி வா தியாங்கோ ஆவார் காலனிய ஆபிரிக்க மக்களின், மற்றும் நாடுகளின் இழப்புகளை,சோகங்களை உலகறியச்செய்ததில் இவரது பங்களிப்பு மகத்தானதாகும். இவரது சிலுவையில் தொங்கும் சாத்தான் எனும் நாவல் குரலற்ற ஆபிரிக்க மக்களின் குரலாக மதிப்பிடப்படகின்றது. இவர் இது தவிர Weep not child (1964), The river between(1965) போன்ற நாவல்களையும் எழுதிள்ளார்.

சுதந்திரத்திற்குப் பிற்பட்ட ஆபிரிக்க அரசியல் சூழலும் அவ்வளவு ஆரோக்கியமானதாக இருந்ததில்லை. சுதந்திரத்தின் பின்நாட்டுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்ட தலைவர்கள் காலப்போக்கில் மேற்கு நாடுகளின் கைப்பொம்மைகளாக மாறிப்போயினர். ஆபிரிக்க மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளத் தவறிய அவர்கள், நாட்டு முன்னேற்றத்திலும் அக்கறை கொள்ளவில்லை. உள்ளுர் மக்களை விழிப்புணர்ச்சி அடையச் செய்ய முயற்சித்த படைப்பாளிகளும் மிகமோசமாக அடக்கப்பட்டனர். இவர்களைக் கொண்டு சிறைகளும் நிரப்பப்பட்டன. சினுவா ஆச்சுவே, கூகி வா தியாங்கோ, அஹ்மத் குரூமா போன்ற படைப்பாளிகள் பாதிக்கப்பட்டனர். இதனால் வேறு நாடுகளுக்கு இடம்பெயர வேண்டிய தேவையும் ஏற்பட்டது. 1977 கூகி எழுதிய ‘I will marry when i wand’ (நான்விரும்பும்போது மணப்பேன்) எனும் நாடகமொன்றுக்காக அவர் சிறையில் அடைக்கப்பட்டாh.; இச்சிறைவாச காலப்பகுதியில் அவருக்கு வழங்கப்பட்ட மலம் துடைக்கும் பேப்பரில் கிக்கியு மொழியில் அவர் எழுதிய நாவலே சிலுவையில் தொங்கும் சாத்தான் ஆகும். மற்றொரு பின்காலனிய ஆபிரிக்க எழுத்தாளரான அஹமத் நுக்குருமாவுக்கு நடந்ததும் இதுதான் இவரது சொந்த நாடு ஐவரிகோஸ்ட் என்பதாகும்.சுதந்திரத்தின் பின் அங்கு இடம்பெற்ற Felix houphouet- Boigny அரசாங்கத்தின் மோசமான ஆட்சியை எதிர்த்தமைக்காக இவர் சிறைக்கு அனுப்பப்பட்டார். எனினும் பின் காலனிய ஆபிரிக்க ஆட்சியாளர்களின் அடாவடித்தனங்களை இவரது நாவல்களான ‘The suns of independence (1970), Outrages it defis,Waiting for the wild Beasts to vote novel (1994), Allah doesn’t have to (2000) போன்றவற்றில் தைரியமாகப் பதிவு செய்துள்ளார்.

பின் காலனிய இலக்கியஙகளுள் இலத்தீன் அமெரிக்க இலக்கியங்களும் கவனப்படுத்தப்படுகின்றன. காலனித்துவ காலத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகள் மீது புரியப்பட்ட கொடுமைகளை, சுரண்டல்களை மிக அழகாக லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள் தமது படைப்களில் சித்தரித்துள்ளனர்.

பின் காலனிய இலக்கியங்களில் ஆசிய இலக்கியங்களும் இன்று உலகின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. பின்காலனிய ஆசியப் படைப்பளிகளின் வரிசையில் வீ.எஸ். நைபால், ஆர்.கே.நாரயணன், ஹ{ஸைனி, அருந்ததி ரோய், சல்மான் ருஷ்தி மற்றும் பலர் முக்கியமானவர்களாக கருதப்படுகின்றனர். ஆனால் இதில் விசித்திரம் என்னவென்றால் ஆசியாவில் பின் காலனிய எழுத்தாளர்களாக அறியப்பட்ட பலர்(குறிப்பாக வீ.எஸ்.நைபால், சல்மான் ருஷ்தி) இன்று மேற்குலக சக்திகளின் கைப்பொம்மைகளாக மாறிப்போயுள்ளனர். மேற்குலக மதிப்பீடுகளை , ஆதிக்கத்தை எதிர்த்து நிற்கும் சக்திகளை கேள்வி கேற்கத் தொடங்கியுள்ளனர் மூன்றாம் உலகில் இன்று விடுதலை இலக்கியங்களாக இவர்களது படைப்புகள் பார்க்கப்படவில்லை மாறாக மேற்குலகை திருப்திப்படுத்தும் வெறும் புனைவுகளாகவே கண்டுகொள்ளப்படுகின்றன எனினும் குஸ்வத் சிங்கின்Train to Pakistan அருந்ததி ரோயின் God of small things போன்ற நாவல்கள் வித்தியாசமான முயற்சிகளாகக் கருதப்படுகின்றன.

பொதுவாக நோக்குமபோது பின்காலனிய இலக்கியங்கள் அதிகாரத்தை, நடவடிக்கையை முற்றாக மறுக்கின்றன. தங்களது உண்மைகளை அந்த அதிகாரத்திடம் சொல்ல முயல்கின்றன, எழுத்தின் பலத்தை உணர்த்துகின்றன. ஒரு கலாசார ஆயுதமாக, எதிர்ப்புக்குரல்களாக அவை உருவெடுத்துள்ளன. அடக்குமுறைக்கு சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்தியுள்ளன. இன்று அடக்கு முறையை அனுபவித்து வரும் நமது அனுபவங்களோடும் ஒத்துப்போகின்றன. எனவே, அடக்குமுறைக்குள்ளாகும் ஒரு மக்கள் சமூகம் தங்களது பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்துவதற்கு இதுபோன்ற இலக்கியங்களைப் படைப்பது பயனுள்ளதாகவே அமையும்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

30 சுயாதீன தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நடத்தும் தேசிய எதிர்ப்பு தினம்!

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In