முதிய வயதில் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட பார்வதியம்மாளை தமிழகத்திற்குள் அனுமதிக்க மறுத்து விட்ட கருணாநிதி ஏராளமான மனம் நோகும் படியான பல நிபந்தனைகளை பார்வதியம்மாளுக்கு வித்திதார். இதை ஏற்றுக் கொள்ளாத பார்வதியம்மாள் தமிழகம் வர விரும்பவில்லை என்பதோடு ஈவிரக்கமற்ற கருணாநிதியின் கோரிக்கையையும் நிராகரித்து விட்டார். வல்வெட்டித்துறையில் சிகிச்சை பெற்று வந்த பார்வவதியம்மாளின் உடல் நிலை மேலும் மோசமானத்தொடர்ந்து அவர் யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இப்போது அவர் உடல் நிலை மேலும் மோசமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.