Friday, March 6, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

இனியொரு... by இனியொரு...
04/23/2013
in பிரதான பதிவுகள் | Principle posts, வரலாற்றுப் பதிவுகள், அரசியல்
0 0
165
Home பிரதான பதிவுகள் | Principle posts

கனகரத்தினம் கொலை முயற்சி நடைபெற்ற சில நாட்களின் பின்னதாக கணேஸ் வாத்தி கொழும்பில் பொலீசாரால் கைது செய்யப்படுகிறார்.வழமைபோல அவரும் பஸ்தியாம்பிள்ளை என்ற காவல்துறை அதிகாரியால் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார். பஸ்தியாம்பிள்ளையின் சித்திரவதை தொடர்பாக நாம் அனைவரும் அறிந்திருந்தோம் கணேஸ் வாத்தி கைதானது தொலைத் தொடர்புகள் அரிதான அந்தக் காலப்பகுதியில் எமக்குத் தெரிந்திருக்கவில்லை.

bastisampillai11978 பெப்ரவரி இறுதி அல்லது மார்ச் மாத ஆரம்பமாக இருக்கலாம். அப்போது தான் கணேஸ் வாத்தி கைது செய்யப்பட்டிருக்க வேண்டும்.அவர் எமது மத்திய குழு உறுப்பினர் என்பது தவிர முழு நேரமாக வேலை செய்து கொண்டிருந்தார். வார இறுதிகளில் கொழும்பு சென்று மேலதிக வேலைகளில் ஈடுபடுவதும் உண்டு. இதனால் எமக்கு அவர் கைதுசெய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழவில்லை.

கணேஸ் வாத்தி சித்திரவதைகளின் கோரத்தில் எம்மைப்பற்றி தகவல்களைச் சொல்லிவிடுகிறார். பொலிசார் எமது பலம், நாம் வைத்திருந்த ஆயுதங்கள், உறுப்பினர்கள் போன்ற அடிப்படைத் தகவல்களைச் சேகரித்துக்கொள்கின்றனர்.

தேடப்பட்டவர்கள்,முக்கிய உறுப்பினர்கள் அனைவரும் மடுப் பண்ணையிலேயே வாழ்ந்தார்கள். அங்குதான் எமது முக்கிய முடிவுகளும், பிரதான தொடர்புகளும் பேணப்பட்டன.

நான் நிரந்தரமாக ஒரு குறித்த பண்ணையில் தங்குவதில்லை. பண்ணைகளின் நிர்வாகம் எனது பொறுப்பிற்கு உட்பட்டிருந்ததால் நான் நிரந்தரத் தங்குமிடம் ஒன்றை வைத்துக் கொள்ளவில்லை. சந்தர்ப்பவசமாக அன்று நானும் மடுப்பண்ணையில் தங்கவேண்டியதாயிற்று.

பொழுது இன்னும் முழுதாகப் புலராத நேரம். அதிகாலை ஐந்து மணியிருக்கும். அடர்ந்த காட்டில் சேவல் கூவவில்லை. பறவைகள் மட்டும் அங்கும் இங்குமாய் சோம்பல் முறித்து மெல்லிய மொழியில் பேசிக்கொண்டன.

பண்ணையின் அமைப்பு முறை ஓரளவு பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் கூடியதாகவே அமைந்திருந்தது. மரங்களுக்கு மேலே நான்கு பேர் தங்கியிருக்கக் கூடிய வகையிலான பரண் அமைக்கப்பட்டிருந்தது. தவிர ஒரு குடிசையும் அமைத்திருந்தோம். பரணில் நானும், உமாமகேஸ்வரனும், நாகராஜாவும் உறங்கிக் கொண்டிருந்தோம். நான் அப்போது சற்று கண்விழித்திருந்தேன்.

கீழே கொட்டிலில் செல்லக்கிளி, ராகவன், நிர்மலன்,ரவி, சித்தப்பா,யோன் ஆகியோர் இருந்தனர். பரணுக்கும் கொட்டிலுக்கும் இடையே அரைக் கிலோமீட்டர் இடைவெளி இருந்தது. இதே வேளை அந்தக் காலை நேரத்தில் பொலீஸ் வாகனத்தில் அதன் சாரதியோடு கைது செய்யப்பட்ட கணேஸ் வாத்தியையும் சற்றுத் தூரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு பஸ்தியாம்பிள்ளை தனது உதவியாளர்களுடன் குடிசையை நோக்கி நடந்துவருகிறார்.

அவரோடு இன்னும் இரு முக்கிய அதிகாரிகள் இருந்தனர். பேரம்பலம், பாலசிங்கம் ஆகிய அந்த இருவரும் கூட தமிழ் இளைஞர்களின் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக அறியப்பட்டவர்கள் தான்.

மூவரும் குடிசைக்கு வந்தவுடன் உறக்கத்திலிருந்த அனைவரையும் சுற்றிவளைத்துக் கொள்கின்றனர். பொலீசாரின் சந்தடியில் விழித்துக்கொண்ட அனைவரும் செய்வதறியாது திகைக்கின்றனர். அதிர்ச்சியில் எழுந்த அவர்கள் பஸ்தியாம்பிள்ளை குழுவினருடன் பேச்சுக்கொடுக்க ஆரம்பிக்கின்றனர்.

பஸ்தியாம்பிள்ளை திறமைமிக்க அதிகாரி. அந்த நேரத்தில் தீவிரவாத அரசியலில் ஈடுப்படுள்ளவர்களின் தரவுகள் பல அவரின் மூளைக்குள்ளேயே பதியப்பட்டிருந்தது. ஆக செல்லக்கிளி போன்ற தேடப்படுகின்றவர்களை அவர் அடையாளம் கண்டுகொண்டிருப்பார் என்பது எமது எல்லோரதும் ஊகம்.

அங்கிருந்த போராளிகள் தாம் வந்திருப்பது விவசாயம் செய்வதற்காகத் தான் என்று பொலீசாருக்குச் சொல்கின்றனர். அக்காலப்பகுதியில் இளைஞர்கள் காடுகளைச் சுத்திகரித்து விவசாயம் செய்வது வழமையன நிகழ்வு என்பதால் அவர்கள் அவ்வாறு கூறுகிறார்கள். பஸ்தியாம் பிள்ளை குழுவினர் இவர்கள் கூறியதை நம்பினார்களோ என்னவோ நம்புவது போல் நடித்துக்கொண்டிருந்தார்கள்.

நான் ஏனைய பண்ணைகளுக்குச் சென்று வேலைகளை கவனிக்க வேண்டும் என்பதால் வழமையாகவே நேரத்துடன் எழுந்துவிடுவேன். அன்றும் பாதி உறக்கத்தில் என்னோடு பரணில் இருந்த உமாமகேஸ்வரன்,நாகராஜா ஆகியோரிடம் விடைபெற்றுக்கொண்டு மற்றப்பண்ணைகளுக்குச் செல்லும் வழியில் குடிசையை நோக்கி நடக்கிறேன். அங்கு நிலைமைகள் வழமைக்கு மாறானவையாக இருப்பதை சற்று அண்மித்ததும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

அதிகாலையில் அமைதியாக இருக்கும் பண்ணையில் ஆள் அரவமும் பேச்சுக்குரல்களும் கேட்டன. இவற்றை அவதானித்த நான் ஏதோ அசம்பாவிதம் நடந்திருப்பதாக எண்ணி மிக அவதானமாக ஓசை படாமல் அருகே சென்ற போது அன்னியர்களின் பேச்சுக் குரல்களை அவதானிக்கின்றேன். உடனே பரணுக்குத் திரும்பிச் சென்று உமாமகேஸ்வரனையும், நாகராஜாவையும் உசார்படுத்துகிறேன்.

உறக்கம் கலைந்த அவர்கள், பரணைவிட்டு இறங்கி மூவருமாக குடிசையை நோக்கிச் செல்கிறோம்.

நாங்கள் மூவரும் மெதுவாக அடர்ந்த காட்டு வழியில் வேறு வேறு திசைகளில் சென்று குடிசையைச் சுற்றி வளைத்துக்கொள்கிறோம். நாகராஜவிடம் ஒரு குறிசுடும் துப்பாக்கியும் உமாவிடமும்,என்னிடமும் ஒவ்வொரு கைத்துப்பாக்கியும் இருந்தது. அருகே சென்றதும் அங்கிருப்பது பொலீஸ் என்பது எமக்குத் தெரியவருகிறது. நாம் மூவரும் நகரவில்லை நடப்பதை மறைவிலிருந்தே அவதானிக்கிறோம்.
இதற்கிடையில் குடிசையிலிருந்த எம்மவர்கள் பஸ்தியாம் பிள்ளை குழுவினருடன் சாதரணமாக பேச்சுக்கொடுத்துக் கொண்டிருந்தனர்.

பஸ்தியாபிள்ளை குழுவினருக்கு அவர்கள் அனைவரையும் பொலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் நோக்கமும் இருந்தது.

பொலீஸ் அதிகாரிகளைத் தேனீர் தயாரித்து அருந்த அழைத்ததும் அவர்களும் ஒத்துக்கொள்கிறார்கள். அவ்வேளையில் அங்கே இருந்த குறி சுடும் துப்பாக்கியைக் கண்ட பஸ்தியாம்பிள்ளை அது எதற்காக எனக் கேள்வியெழுப்புகிறார். யானைகள் அதிகமான காடு என்பதால் பாதுகாப்பிற்காக வைத்திருக்கிறோம் எனக் கூறி எம்மவர்கள் தப்பித்துக்கொள்ள முனைகின்றனர்.

தேனிர் தயாரித்தாயிற்று. குடிசையைச் சூழ மரக் குற்றிகள் இருந்தன. அவற்றின் மேல் அமர்ந்து இளைப்பாறியபடியே தேனீர் அருந்துகின்றனர்.

பரணிலிருந்து இறங்கிவந்து குடிசையைச் சுற்றி மறைவிடங்களிலிருந்து அவதானித்துக் கொண்டிருந்த எமக்கு அங்கு என்ன நடக்கிறது என்பது குறித்துக் குழப்பமடைந்திருந்தோம்.

மரக் குற்றிகளில் அமர்ந்திருந்த போது பஸ்தியாம்பிள்ளை கொண்டு வந்திருந்த இயந்திரத் துப்பாகியை தனக்கு அருகில் வைத்துவிட்டு பேசிக்கொண்டிருந்தார். எம்மில் அனைவரும் இயந்திரத் துப்பாக்கி பற்றி அறிந்திருந்தோம் ஆனால் யாரும் தொட்டுக்கூடப் பார்த்ததில்லை.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி துப்பாக்கியக் கைப்பற்றினால் தப்பித்துவிடலாம் என அங்கிருந்த எம்மவர் மௌனமாகத் திட்டமிட்டுக்கொண்டனர். அதற்கு முதலில் பொலீஸ் அதிகாரிகள் ஒவ்வொருவரையும் தனிமைப்படுத்த வேண்டும் என்பதையும் திட்டமிடுகிறார்கள்.

இவ்வேளையில் பேரம்பலம் முகம் கழுவிக்கொள்ள கிணற்றுக்கு அருகே அழைத்துச் செல்லப்படுகிறார். கிணறும் கூப்பிடு தொலைவில் இருந்தாலும் குடிசைக்கு மறைவாகவே இருந்தது.

யோனும், சித்தப்பாவும் பேரம்பலத்தைக் கிணற்றிற்குக் கூட்டிச் செல்கின்றனர். அவர் போக மற்றைய இருவரும் இன்னும் உரையாடலில் இருந்தனர். ஆக இரண்டு பொலீசார் நான்கு போராளிகள் அங்கு எஞ்சியிருந்தனர்.

நாகராஜாவும் தொலைவிலிருந்தே என்ன நடக்கப் போகிறது என்பதை ஊகித்துக்கொண்டதால் குறிசுடும் துப்பாகியோடு குடிசையை மேலும் அண்மிக்கிறார்.

இவ்வேளையில் தான் திகில் சம்பவம் ஒன்று நிகழ்கிறது. ரவி பஸ்தியாம்பிள்ளையின் இயந்திரத்துப்பாகியை எடுத்துவிடுகிறார். பதட்டம் பரபப்பு எல்லாம் ஒருங்கு சேர ரவிக்கு அதனை இயக்கத் தெரியவில்லை. அங்கும் இங்குமாக பல தடவை இயக்குவதற்கு முனைகிறார்.

ரவி துப்பாகியைக் கைப்பற்றிய அதே கணத்தில் விரைந்து செய்ற்பட்ட ராகவன் பஸ்தியாம்பிள்ளையை மடக்கிக் கட்டிப் புரள்கிறார். மறுபுறத்தில் பாலசிங்கத்தை மடக்கிய கறுப்பி என்ற நிர்மலன் அவரோடு குறிசுடும் துப்பாகியொன்றைக் கைப்பற்றுவதற்காக மல்யுத்தம் நடத்திக்கொண்டிருந்தார். இவ்வாறு இரு முனை யுத்தம் நடக்க திகில் நிறைந்த திரைப்படக் காட்சிபோல அனைத்தையும் நாம் அவதானித்துக்கொண்டிருந்தோம்.

இதே வேளை பாலசிங்கத்தை நோக்கி மறைவிலிருந்த நாகராஜா தன்னிடமிருந்த துப்பாக்கியால் சுடுகிறார். இதனால் நிர்மலனது கையில் கூட ஒரு காயம் ஏற்படுகிறது.

ரவி இயந்திரத் துப்பாகியை இயக்க முனைந்து கொண்டிருந்த வேளையில் விரைந்து செய்ற்பட்ட செல்லக்கிளி பஸ்தியாம் பிள்ளையின் தலையில் குறிசுடும் துப்பாக்கியால் அடித்துவிடுகிறார். அடிவிழுந்ததும் பஸ்தியாம்பிள்ளை நினைவு குலைந்த நிலையிலேயே ராகவனோடு கட்டிப்புரழ்கிறார்.

இது நடந்துகொண்டிருந்த வேளையில் பேரம்பலம் என்பவர் கிணற்றுக்கு முகம்கழுவச் சென்றவரை அவரோடு சென்ற யோனும் சித்தப்பாவும் கிணற்றுகுள் தள்ளிவிடுகின்றனர். இவ்வேளை ஒரு எதிர்பாராத சம்பவமும் நிகழ்ந்தது. அவரைத் தள்ளி விழுத்தும் போது யோனும் சேர்ந்து கிணற்றினுள் விழுந்துவிடுகிறார். அதிஷ்டவசமாக யோனுக்கு நீச்சல் தெரிந்திருந்ததால் அவர் நீந்திக்கொண்டிருக்க பேரம்பலம் தண்ணீரில் தத்தளித்துக்கொண்டுருந்தார்.

அனைத்துமே திகில் நிறைந்த திரைப்பட்ம் போல் ஒன்றன்பின் ஒன்றாக நிகழ்கின்றன. கண்ணிமைக்கும் நேரத்துள் அனைத்தும் தலை கீழ் நிகழ்வுகளாகிவிடுகின்றன. ஆரம்பத்திலிருந்தே எம்மவர்கள் யாரும் சரணடைவதற்கோ விட்டுக்கொடுப்பதற்கோ தயாராக இருக்கவில்லை. இறுதிவரை போராடுவதாகவே தீர்மானித்திருந்தனர்.

ரவியிடமிருந்து இயந்திரத் துப்பாக்கியை வாங்கிக்கொண்ட செல்லக்கிளி சில கணங்களுள் அதனை எவ்வாறு இயக்குவது என்று கற்றுக்கொள்கிறார். உற்சாகமாகிவிட்ட அவர் விழுந்துகிடந்த பஸ்தியாம்பிள்ளையைச் சுட்டுக்கொல்கிறார். உடனடியாகவே கிணறு இருந்த திசையை நோக்கி ஓடிய செல்லக்கிளி அங்கு கிணற்றினுள் தத்தளித்துக் கொண்டிருந்த பேரம்பலத்தையும் சுட்டுக்கொல்கிறார்.

மூன்று பொலீசாரும் திகில் நிறைந்த சில கண நேரத்துள் மரணித்து விடுகின்றனர்.

ஆர்ப்பாட்டமில்லாத இராணுவ வெற்றி நிலைநாட்டப்படுகிறது. இலங்கையில் தமிழர்கள் எங்கிருந்தாலும் பஸ்தியாம்பிள்ளையை அறிந்திருந்தனர். இலங்கையில் இருதயப்பகுதியில்,பலத்த காவல் துறை பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் நிகழ்ந்த கனகரத்தினம் கொலை முயற்சி ஜெயவர்தன அரசை உலுக்கியிருந்ததது.

அதன் பின்னர் இலங்கையின் உளவுத்துறையில் பஸ்தியாம்பிள்ளையின் செல்வாக்கு உச்சமடைந்திருந்தது. அவர் இப்போது எமது குடிசைக்கு முன்னால் உயிரற்ற உடலாக… எல்லாம் ஒரு கனவுபோல நடந்து முடிந்தது.

செல்லக்கிளி ஒரு உணர்ச்சிப் பிழம்புபோல. எதையும் உணர்வுபூர்வமாக மட்டுமல்ல உணர்ச்சி பூர்வமாகவும் ஈடுபாட்டோடு செய்யவல்லவர். இயந்திரத் துப்பாக்கியை இயக்கி பஸ்தியாம்பிள்ளையைச் சுட்டதும் உரத்த குரலில் ‘வாழ்க தமிழீழம்’ எனச் சத்தமிட்டது காடுமுழுவதும் மறுபடி மறுபடி எதிரொலித்தது. செல்லக்கிளியின் குதூகலத்தோடு மறைந்திருந்த நான்,உமாமகேஸ்வரன். நாகராஜா ஆகியோரும் கலந்து கொள்கிறோம். எம்மையே எம்மால் நம்ப முடியவில்லை. இளைஞர்களுக்கும், தமிழ்த் தேசியக் குரலுக்கும் சிம்ம சொப்பனமாக இருந்த பஸ்தியாம் பிள்ளையை அவரது துப்பாக்கியாலேயே சுட்டுக் கொலை செய்த சம்பவம் எமக்கெல்லாம் ஒரு பெரும் சாதனை.

07ம் திகதி ஏப்பிரல் மாதம் 1978 ஆம் ஆண்டு இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகப் பல குறிப்புகள் பதியப்பட்டிருக்கின்றன.

அந்த இராணுவ வெற்றியின் அரசியல் பலாபலன்களை எடை போடவும் அதன் பின்னரான அரசியலை வழி நடத்தவும் நாம் திட்டமிடவில்லை. அதற்கான கட்டமைப்பும் மக்கள் திரளமைப்புக்களும் இருந்ததில்லை. எமது நோக்கம் பலமான இராணுவத்தைக் கட்டியமைப்பதாக மட்டும் தான் அமைந்தது. அதற்கு மேல் எதுவும் இல்லை. அந்தப் பலமான இராணுவத்தை நோக்கிய பயணத்தில் இந்தக் கொலைகள் ஒரு மைற்கல்லாகவே எமக்குத் தெரிந்தன.
அன்று மட்டுமல்ல முள்ளிவாய்க்கால் வரை யாருமே அரசியல் எதிர்விளைவுகள் குறித்துச் சிந்தித்ததில்லை. எத்தனை மனித் உயிர்கள் எத்தனை இராணுவ வெற்றிகள் !

இதன் பின்னர்தான் இவர்கள் வந்த வாகனம் பற்றியும் அதில் வேறு யராவது இருக்கலாம் என்ற நினைவும் வருகிறது.செல்லகிளியும் வேறு இருவரும் பாதை வழியே பதுங்கியபடி செல்கின்றனர். இவர்கள் காரை நோக்கி ஒடிச்செல்லும் போது சாரதி காரிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இறங்கி ஓட முனைகிறார். அவரை சிறிது தூரம் துரத்திச் சென்ற செல்லக்கிளி இறுதியில் சுட்டுக் கொலை செய்துவிடுகிறார்.

சிறிவெர்தன என்ற அந்தச் சாரதியைக் கொலை செய்வதைத் தவிர அவர்களுக்கு வேறெந்த மாற்றும் இருக்கவில்லை. அவர் அங்கேயே கொலை செய்யப்படுகிறார்.

கொலைகளின் பின்னால்,அது எந்த வடிவில் அமைந்திருந்தாலும்,தனிமனித வக்கிர உணர்வுகள் மட்டும் தான் காரணம் என்பது வரட்டுத்தனமான வாதம். அதன் பின்புலமாக அமைந்த அரசியல் தான் மாற்று வழிமுறையற்ற கொலைகளை ஏற்றுக்கொள்ளுமாறு நிர்ப்பந்தித்தது. நாம் மக்கள் என்ற கடலில் மீன்கள் போல வாழ்ந்த கெரில்லாப் போராளிகளல்ல, மக்களிலிருந்து அன்னியமாக வாழ்ந்த வெறும் தலைமறைவுப் போராளிகள் தான்.

நிலைமையை புரிந்துகொண்ட கணேஸ் வாத்தி கையை மேலே தூக்கிக் கொண்டு இறங்கி வருகிறார். பின் அவரையும் ஏற்றிக் கொண்டு குடிசையை நோக்கி வாகனத்தை செல்லக்கிளி ஓட்டி வருகிறார்.

எமக்கு அதன் பின்னர்தான் இவை அனைத்துமே கணேஸ் வாத்தி வழங்கிய தகவல்களின் அடிப்படையில் தான் நிகழ்ந்தது என்பது தெரியவருகிறது. அதிர்ச்சிக்கு மேலாக அனைவருக்கும் அவர் மீதான ஆத்திர உணர்வு மேலிடுகிறது. அப்போது ராகவன் கணேஸ் வாத்தியைச் சுடவேண்டும் என்று துரத்திக்கொண்டு வரும் போது கணேஸ் வாத்தி எனக்குப் பின்னால் பதுங்கிக் கொண்டு உயிர்ப்பிச்சை கேட்கிறார். நான் தவறு செய்துவிட்டேன் மன்னித்துவிடுங்கள் என்று கெஞ்சுகிறார். அப்படியிருந்தும் ராகவன் ரவி ஆகியோர் அவரை தாக்கிவிட்டார்கள். கணேஸ் வாத்தியோ எனக்குப்பின்னால் ஒரு குழந்தை போல பயத்தில் பதுங்கிக் கொண்டார்.
இப்போது சூடு பட்டடதில் நிர்மலனுக்கு கையிலிருந்து இரத்தம் வடிந்துகொண்டிருந்தது. முதலில் நாம் அனைவரும் அங்கிருந்து தப்பித்துகொள்ள வேண்டும். அதுதான் எமது அடுத்த திட்டம். எங்கே போவது என்பதெல்லாம் பின்னர் முடிவெடுக்க வேண்டும் ஆனால் தப்பித்தாக வேண்டும்.அது தான் பிரதான நோக்கம்.

கிணற்றினுள் இறந்து கிடந்த பேரம்பலத்தை வெளியே எடுத்து எரிப்பதற்கு எமக்கு நேரமிருக்கவில்லை. அவரை அப்படியே விட்டுவிடுகிறோம். பாலசிங்கத்தினதும் பஸ்தியாம் பிள்ளையினதும் உடல்களைத் தூக்கி குடிசைக்குள் போட்டுவிட்டு, கிடைத்த காய்ந்த மரங்களையும் சருகுகளையும் அவற்றின் மீது போட்டுவிட்டு தீவைத்து விடுகிறோம்.

அவ்வேளையில் அங்கே தண்ணீர் இறைக்கும் இயந்திரம், சைக்கிள் போன்றன இருந்தன. அவற்றையும் அங்கேயே வைத்து எரிக்கிறோம்.
ஆக, தடயங்களையும் உடல்களையும் அழிப்பதற்கான வேலையை ஓரளவு செய்து முடித்து விடுகிறோம்.

இப்போது எவ்வளவு விரைவாகத் தப்பிச் செல்ல முடியுமோ அவ்வளவு விரைவாகச் செல்லவேண்டும் என்பது தான் அடுத்த நோக்கம். அதற்கு முன்பதாக நிர்மலனின் கையிலிருந்து இரத்தப்பெருக்கு அதிகமாக, அவரை மன்னாருக்குக் கூட்டிச் சென்று சிகிச்சையளிப்பது என்பதும் முடிவாகிறது. அப்போது எமக்கு பொலிசார் வந்த கார் கைவசம் இருந்ததால் அதே காரில் மன்னாரை நோக்கிச் செல்ல முடிவெடுத்து, நாகராஜாவும், ராகவனும், நிர்மலனும் செல்ல செல்லக்கிளி காரைச் செலுத்துகிறார். அவர் ஒரு திறமையான வாகன ஓட்டுனரும் கூட.

மன்னாருக்குச் சென்று அங்கிருந்த தெரிந்த வைத்தியரின் உதவியோடு நிர்மலனுக்கு மருத்துவம் சிகிச்சை மேற்கொள்ளப் படுகிறது. ராகவனும்,நிர்மலனும் அங்கேயே தங்கி விடுகிறார்கள்.

செல்லக்கிளி திரும்பி வந்து சேர்வதற்குள் நாங்கள் எம்மால் முடிந்த அளவிற்குத் தடயங்களை அழித்துவிட்டோம். அந்த இடைவெளியில் கணேஸ் வாத்திக்கு மரண தண்டனை வழங்குவதில்லை எனவும் முடிவெடுக்கிறோம். ஆனாலும் அவர் தொடர்ந்தும் இயக்கத்தில் இணைந்து இயங்குவதற்கு அனுமதிப்பதில்லை எனவும் கூடவே மற்;றொரு முடிவையும் அங்கிருந்த அனைவரும் சேர்ந்தே மேற்கொள்கிறோம்.

பின்னர் முகாமிலிருந்து புறப்பட்ட அனைவரும் வவுனியா வரை பஸ்தியாம்பிள்ளை குழுவினர் பயன்படுத்திய காரிலேயே வருகிறோம். செல்லக்கிளி தான் காரின் சாரதி. எங்களை எல்லாம் பொலீசார் எப்போதும் கைது செய்யலாம், சித்திரவதைக்கு உட்படலாம் என்று எண்ணியிருந்தோம். ஆனால் பொலீஸ் வாகனமொன்றில் முழுச் சுதந்திரத்தோடு பிரயாணம் செய்வோம் என நாம் எதிர்பார்த்ததில்லை.
எல்லோரும் வெற்றியின் பெருமிதத்தில் இருந்தோம். கணேஸ் வாத்தியைத் தவிர. கணேஸ் வாத்தியை வவுனியாவில் இறக்கிவிட்டு இனிமேல் இயக்கத்தோடு தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என்று எச்சரிக்கிறோம். அவர் அங்கு இறங்கி எம்மோடு எதுவும் பேசாமலே சென்றுவிடுகிறார்.

இன்று உச்சமடைந்திருக்கும் இனப்படுகொலையின் கோரம் அப்போதும் பண்பியல் மாற்றமின்றி இருந்தது. அப்போது கூட நட்பு சக்திகளுக்கும், எதிரிகளுக்கும் இடையேயான இடைவெளி கூட மிக நெருக்கமானதாகத் தான் இருந்தது. சில மணி நேரங்களில் கணேஸ் வாத்தி என்ற மத்திய குழு உறுப்பினர் துரோகியாகிப் போய் மயிரிழையில் உயிர் பிழைத்த நிகழ்வு, ஆயுதப் போராட்டத்தில் ஆய்வுகளினதும் அரசியலினதும் தேவையை உணர்த்தி நிற்கிறது.

எம்மால் உருவாக்கப்பட்ட துரோகிகளை அழிக்கும் செயன்முறை மறுபடி மறுபடி வேறு வேறு வடிவங்களில் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. மக்கள் திரள் அமைப்புக்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் போராட்டங்களிலெல்லாம் நீதிக்கும் தீர்ப்பு வழங்கலுக்கும் புதிய வடிவங்களைக் காண்கிறோம். மக்களின் பிரதிநிதிகள் மக்கள் மன்றத்தில் வழங்கிய தீர்ப்புக்கள் குறித்தும் அவற்றின் நடைமுறை குறித்தும் நாம் அப்போது அறிந்திருக்கவில்லை. தனிமனிதர்களின் முடிவுகளே தீர்ப்புகளாயிருந்தன. அதிலும் ஆயுத பலம் கொண்ட மனிதர்கள் சிலர், தாம் சரி அல்லது தவறு என்று முடிவு செய்வதற்கு தமக்குத் தாமே அதிகாரத்தை வழங்கியிருந்தனர். புலிகளுக்கு மட்டுமல்ல சிறுகச் சிறுக ஈழத்தின் ஒவ்வொரு மூலைகளிலும் உருவான இயக்கங்கள் அனைத்திற்கு இது பொருந்தும்
கணேஸ் வாத்தியை கொலை செய்வதற்கு என்னோடு இணைந்து எதிர்ப்புத் தெரிவித்தவர்களுள் உமாமகேஸ்வரனும் ஒருவர். அவர் மற்றவர்களோடு வாத்தியை மன்னித்து விடவேண்டும் என்று விவாதித்தார்.

இந்தச் சம்பவங்கள் எதுவுமே பிரபாகரனுக்குத் தெரியாது. அவர் அவ்வேளையில் யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருந்தார்.

இப்போது எனது வேலைகள் கடினமானவையாக அமைகின்றன. நான் ஏனைய பண்ணைகளுக்குச் செல்லவேண்டும். அவர்களின் இடங்களை மாற்ற வேண்டும். இலங்கை அரசின் உளவுப்படை அவை குறித்தெல்லாம் தகவல்கள் வைத்திருக்கின்றனவா என்பதெல்லாம் எமக்கு உறுதிப்படுத்தப்படாமல் இருந்தது. ஆக, நான் பண்ணைகளை மீழமைப்புச் செய்யவேண்டிய நிலையில் இருந்தேன்.

இதனால் நான் புளியங்குளம் பண்ணைக்கு அருகாமையில் இறங்கிக் கொள்கிறேன். ரவி, நாகராஜா போன்றோர் ஏனைய பண்ணைகளை நோக்கி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனிக்க விரைகிறார்கள்.

உமாமகேஸ்வரனும் செல்லக்கிளியும் முறிகண்டிக் காட்டினுள் சென்று காரை எரித்துவிட்டு கைப்பற்றப்பட்ட இயந்திரத் துப்பாக்கியையும் மறைத்து வைத்துவிட்டு பிரபாகரனிடம் தகவல் சொல்வதற்காக யாழ்ப்பாணம் நோக்கி விரைகிறார்கள் .எல்லாவற்றிற்கும் மேலாக ஆயுதங்கள் மட்டுமே விடுதலை பெற்றுத்தரும் என முழுமையாக நம்பியிருந்த எம் வசம் இப்போது ஒரு இயந்திரத் துப்பாக்கி இருக்கிறது. போராட்டம் என்பது அடுத்த நிலையை நோக்கி வளர்ச்சியடைந்து விட்டதான பிரமையில் அனைவரும் உற்சாகத்திலிருக்க அந்த மக்ழ்ச்சியைப் பிரபாகரனோடு பகிர்ந்துகொள்ள உமாமகேஸ்வரனும் செல்லக்கிளியும் யாழ்ப்பாணம் நோக்கிச் செல்கின்றனர்.

இன்னும் வரும்…

 ———————————————————————————————–

இன்னும் சிலரின் இனிய நினைவுகள்..

நந்தன் : வடமராட்சியைச் சேர்ந்த இவர். அரசியல் ஆர்வம்மிக்க ஒரு போராளி.மார்க்சிய,லெனிய, மாவோயிசக் கருத்துக்களோடு பரிட்சயமான நந்தன்,மனோ மாஸ்டரோடு காரசாரமான விவாதங்களில் ஈடுபடுவார். ஏனைய போராளிகளோடு இணைந்து பண்ணைகளில் வாழ்ந்த நந்தன் அதிகமாகப் புத்தகங்களையும் அரசியல் தேடலையும் நேசித்தவர். பின்னாளில் தமிழீழ தேசிய விடுதலை முன்னணி(NLFT)யின் மத்தியகுழு உறுப்பினராகவும் இருந்தவர்.

டானியல்: கிழக்கைச் சேர்ந்த இவர், உற்சாகமான உணர்வுபூர்வமான போராளி. கிழக்கின் கோரமான இராணுவ ஒடுக்குமுறை இவர்களின் உணர்வுகளில் தேசிய இரத்தத்தைப் பாய்ச்சியிருந்தது. மிக நிதானமான பண்பு கொண்ட இவர், நேர்மையானவரும் கூட. டானியல் கிழக்குப் பண்ணைகளுக்கும் பொறுப்பாக நியமிக்கப்பட்டார்.

பொன்னம்மான் : யோகரத்தினம் குகன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் கலட்டி என்ற யாழ்ப்பாணப் புறநகர்ப்பகுதியைச் சேர்ந்தவர். இராணுவத் தாக்குதல் தயாரிப்புச் சம்பவம் ஒன்றில் மரணித்துப் போன பொன்னம்மான், பண்ணைகளில் வாழ்ந்திராவிட்டாலும், யாழ்ப்பாணத்திலிருந்தே பல முக்கிய பணிகளில் ஈடுபட்டார். உயர் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த இவர், உறுதிமிக்க போராளி. பின்னாளில் இவரின் சகோதரரும் கூட தமிழீழ விடுதலைப் புலிகளில் இணைந்து செயற்பட்டார். பொன்னம்மான் யாழ்ப்பாணப்பகுதியில் பல தொடர்புகளைப் பேணுவதில் பிரதான பாத்திரம் வகித்தவர்.

கே.பீ : இன்று இலங்கையிலிருக்கும் இவர், எம்மிடம் முதலில் இருந்த விசைப்படகுக்குப் பொறுப்பாக இருந்தார். பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும் வேளையிலேயே இயக்கப் பணிகளையும் மேற்கொண்டார்.

லாலா ரஞ்சன் : ஞானேந்திரமோகன் கனகநாயகம் என்ற இயற்பெயரைக் கொண்ட ரஞ்சன், பருத்தித்துறையைச் சேர்ந்த இளம் போராளி. இராணுவப் பயிற்சிகளிலும் பண்ணை வேலைகளிலும் ஆர்வமுடைய இவர் இலங்கை அரச படைகளுடன் ஏற்பட்ட மோதலில் 1984 ஆம் ஆண்டு தொண்டமனாறில் கொலை செய்யப்பட்டார்.

அன்ரன்: இன்னுமொரு பல்கலைக்கழக மாணவன். எம்மோடு உறுதியான தொடர்புகளைக் கொண்டிருந்தவர். பேரினவாத அடக்குமுறைக்கு எதிரான போர்க்குணம் மிக்க போராளி.

கணேஸ் வாத்தி : எமது மத்திய குழு உறுப்பினர்களில் ஒருவர். ஆரம்பத்திலிருந்தே புலிகளில் பங்களித்த போராளி. பகுதி நேரமாக மட்டும் தான் எம்மோடு இணைந்திருந்தார். பண்ணைகளை உருவாக்கத்தில், அதன் ஆரம்பப் பணிகளில் பங்களித்தவர்.

பாகம்  ஒன்பதை வாசிக்க..

பாகம் எட்டை வாசிக்க..

பாகம்  ஏழை வாசிக்க..

பகுதி  ஆறை  வாசிக்க…

பகுதி ஐந்தை  வாசிக்க…

பகுதி நான்கை வாசிக்க..

பகுதி மூன்றை வாசிக்க..

பகுதி இரண்டை வாசிக்க..

பகுதி ஒன்றை வாசிக்க..

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

இக்பால் அத்தாஸ் எழுதும் செய்திகளை இராணுவப் புலனாய்வுப் பிரிவுத் தலைவரே தீர்மானிகிறார்!

Comments 165

  1. அயலவன் says:
    16 years ago

    அய்யா உஙகளது ஒன்பதாவது பாகத்தில் ராகவன் மிகுந்த மனிதாபிமானி? என்று எழுதியிருந்தீர்கள். ராகவன் கணேஸ் வாத்தியைச் சுடவேண்டும் என்று துரத்திக்கொண்டு வந்தார் என்கிறீர்கள் இப்போது! எங்கேயோ உதைக்கின்றதே. பாண்டி பஜாரிலும் மனிதாபிமானத்தை ஜோதீஸ்வரனை நோக்கி கையிலெடுத்த கதையயும் அய்யா எழுதுவீர்கள் என எதிர்? பார்க்கின்றேன் ஒபரோய் தேவன் ,சுந்தரம்,கலாவதி,பட்டண்ணா பற்றி ஏன் இன்னும் பதியப்படவில்லை

    • Soorya says:
      16 years ago

      கணெஷ் தனது உயிருக்கு ஆபத்தை உண்டாகிவிட்டார் என்பதால்தான் மனிதாபிமானி ராகவன் அப்படிநடந்து கொண்டுளார்.

    • kuddy says:
      16 years ago

      hi aiya neengal eluthuvathu 100 veetham unmai innum thodanthu eluthyngal ungal pani thodaraddum

  2. JAMES FEREDRIC says:
    16 years ago

    தலைவர் “ராகவன்” வாழ்க!,ரிலீஸ் தினமன இன்று,..உய்..உய்…வாருங்கள்,இனிப்புகளை அள்ளி வீசுங்கள்!,தலைவர் வழி நடப்போம்!,சொந்த வேலையாக இந்தியா சென்றாலும்,ஐரோப்பா ஜீ டிவி நேயர்களின் வசூல் பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்று,”கதவை திறந்தால் காத்து வரும்….இந்தியாவுக்கு சென்று கதவை திறந்தால் மேற்குலகம் வரும் என்று” வீர முழக்கமிட்டு,நடைப்போடுவோம்!.
    இந்தியர்களுடன் பழகி கூட இருந்தே குழிபறிப்போம்!,வன்னிக் களமுனைகளில் இருந்து தப்பி இந்தியாவில் தஞ்சடைந்துள்ள போராளிகளை இரகசியமாகக் கடத்திச் செல்லும் கைங்காரியத்தை இந்தியா செய்துகொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.இந்தியாவை எப்படிக் கையாளுவது என்று நாம் சிங்களவர்களிடம்தான் கற்றுக்கொள்ளவேண்டும்.’ஈழத் தமிழினம் இந்தியாவை கையாளவேண்டிய அவசியம் இல்லை. ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் இந்தியா ஒரு மிக மோசமான எதிரி. மேற்குலகை மாத்திரம் நாம் நட்பாக்கிக்கொண்டு எமது காரியத்தை நாம் வெற்றிகரமாகச் சாதித்துவிடமுடியும்’ என்று எம்மில் சிலர் கருத்துத் தெரிவித்து வருகின்றார்கள்.மேற்குலகம் ஈழத் தமிழர் பிரச்சனையில் ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டு எங்களுக்கு எதையாவது பெற்றுக்கொடுக்கவேண்டும் என்று நாம் நினைப்போமேயானால், ஆசியாவிற்கான மேற்குலகின் வாசலாக இன்று இருக்கின்ற இந்தியாவை நாம் சரியான முறையில் கையாள வேண்டும். எமக்குச் சாதகமாக மேற்குலகம் இலங்கையில் நுழைவதற்கு இந்தியா என்கின்ற வாசலை எம்மில் யாராவது திறந்து வைத்திருக்கவேண்டும். அந்தக் காரியத்தை ஈழத் தமிழ் இனத்தின் ஒரு பிரிவு செய்துதான் ஆகவேண்டும்.ஈழத் தமிழினத்தின் ஒரு பகுதி மேற்குலகுடன் இராஜதந்திரம் பேச, எம்மில் மற்றொரு பகுதியினர் தனிநாடுவேண்டிப் போராட, மற்றொரு பகுதியினர் சிங்கள தேசத்தை பொருளாதார ரீதியாக முற்றுகையிட, ஒரு பகுதியினர் இந்தியா என்கின்ற வாசல் கதவை மேற்குலகிற்காகத் திறந்துவைக்கும் காரியத்தைச் செய்வதை ஒரு சிறந்த இராஜதந்திரமாகவே நான் கருதுகின்றேன். அமெரிக்காவின் ஒரு முக்கிய கொள்கை வகுப்பாளரான ஹென்றி கீலிங்கர்?( Nixon?) என்பவர் இந்தியா தொடர்பாக அமெரிக்காவின் புதிய கொள்கையை வகுத்திருந்தார். இந்தியா தொடர்பாக அமெரிக்காவால் கடைப்பிடிக்கப்பட்டு வரும் அந்த கொள்கையை ஆராய்ச்சியாளர்கள் -Benign Neglect Policy- என்று குறிப்பிடுகின்றார்கள். அதாவது, இந்தியாவுடன் நேரடியாக கோபதாபம் கொள்ளாமல் சிரித்துப் பேசி உதாசீனம் செய்துகொள்ளுதல் என்பதாகும். 1971 இற்குப் பின்னர் அமெரிக்கா இந்தியாவிற்கு எதிராக எந்தவொரு நேரடி எதிர் நகர்வுகளிலும் இறங்கவில்லை என்பது நோக்கத்தக்கது. அந்த காலம் முதல் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் பொதுவானதொரு முரண்பாட்டுத் தோற்றப்பாடும், அதேவேளை குறிப்பிட்ட அளவு ஐக்கியமும் நிலவ ஆரம்பித்தது. இந்த நிலையை ஆராய்ச்சியாளர்கள் -Unity and Struggle of Opposites-என்று குறிப்பிடுகின்றார்கள்.Niraj David.

    • கத்துக்குட்டி says:
      16 years ago

      என்ன இருந்தாலும் சாருக்கு “ராகவன்” மேல ரொம்ப? அன்பு ? இருக்கு. விடமாட்டேன் எண்டு முரண்டு? பிடிக்கிறார்.

    • Anj says:
      16 years ago

      James ஒன்றும் புரியவில்லையே எழுத்துப் பிழையா அல்லது கருத்துப் பிழையா

      • JAMES FEREDRIC says:
        16 years ago

        அன்ஞ்!,ஒரே உரைச் சேர்ந்தவர்கள்(குண்டுசட்டி),ஒருவர் இந்தியாவுடன்(சுரேஸ் பிரேமசந்திரன்) டெல்லியில் அலுவலகம் திறந்து வைத்துக் கொண்டிருக்கிறார்.ஒருவர் அரலி மாளிகையில்(கேபி) அலுவலகம் திறந்து வத்துள்ளார்(அவர் யாழ்ப்பாணம்,இவர் வல்வெட்டித்துறை இரண்டுக்கும் 20மைல் வித்தியாசம் என்று கூறாதீர்கள்!,வெளி உலகத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு மட்டகளப்புவரை ஒரே ஊர்தான்).ஒருவர் அமெரிக்காவில் நாடுகடந்த தமிழீழம் என்கிறார்!, ஒருவர் வட்டுக்கோட்டை தீர்மானம் என்று லண்டனில் கத்தோலிக்க ஃபாதரை வைத்து “சிலுவைப் போர்” நடத்துகிறா!.இது பொருள் குற்றமா(பொருள் தாகமா?) அல்லது சொல் குற்றமா?.இவர்களுக்கு என்ன மண்டை பிழையா? அல்லது நிர்வாண உலகில் கோவணம் கட்டியிருக்கிறேனா?.இது கருத்து வேறுபாட்டு ஜனநாயகம் அல்ல!,விஷயம் வேறு திசையில் நகருகிறது.எல்லா குப்பைகளையும் ஒரே கூடையில் போடுகிறேன் அவ்வளவுதான்!.

        • Sundaram says:
          16 years ago

          நீங்கள் ஏனய்யா இதைப்பற்றியெல்லாம் கவலைப்படுகிறியள் உங்களுக்குத்தான் ஈழத்தமிழரைப் பிடிக்காதே.

        • Jeevan says:
          16 years ago

          ஈழவிடுதலை நிச்சயம் சாத்தியம் என்பதே இன்றைய அரசியல் அறிஞர்களின் கருத்தாகும். தமிழர்களே நம்பிக்கை இழந்து விடாதீர்கள்.

          • Anj says:
            16 years ago

            உண்மை. வெற்றி நிச்சயம்

          • Naren says:
            16 years ago

            ///ஈழவிடுதலை நிச்சயம் சாத்தியம் என்பதே இன்றைய அரசியல் அறிஞர்களின் கருத்தாகும்/// யாரப்பா!… அந்த அரசியல் அறிஞ்ஞர்கள்?…எனக்கு தெரிய ஈழத்தமிழர் பிரச்சனைகள் பற்றி தீர்க்கதிரிசனமாக பேசக்கூடிய தமிழறிஞ்ஞர்கள் யாருமே இப்போ இல்லை. இருந்தவர்களையும் எங்கள் வங்கர் தலைவரே போட்டுத்தள்ளிவிட்டார். அதில் முதன்மையானவர் “பற்குணம்” என்றும் சொல்லலாம். நான் மறுபடியும் கேட்கின்றேன் யாரப்ப!! அந்த அரசியல் அறிஞ்ஞர்கள்?… சம்ந்தர்?.. டக்கிளஸ் கூட்டம்?.. உங்கள்
            பாசைகளில் கருணாவும் ஒரு அரசியல் அறிஞர்தான் அவரா?… இல்லை சிவாஜிலிங்கமா?.. ஏன் ஆனந்தசங்கரி ஐயாவும் இருக்கிறார் அவரா?.. இல்லை கறுவாக்காட்டு கஜேந்திரன் கும்பலா?… புளட்டு தலைவர் சித்தார்த்தன்?… அல்லது அரச பாதுகாப்பில் சகல செளகரியங்களுடனும் கோத்தபாயவுடன் கைகோர்த்து ஓர் புதிய கூட்டணியை உருவாக்கியிருக்கின்றாரே உங்கள் கே.பி சார்ர்!! அவரா?.. அல்லது
            அமெரிக்காவிலிருந்து நாடுகடந்த தமிழீழ அரசை நிறுவப்போவதாக ஒருவர் கயிறுவிட்டுக்
            கொண்டிருக்கின்றாரே அவரா? அல்லது வட்டுக்கோட்டை தீர்மானத்தை நிறைவேற்றப்போவதாக கூறி
            கொத்துரொட்டி வித்துக் கொண்டு கொஞ்ச புலன் பெயர்ந்த கூட்டத்தினர் திரிகின்றனரே அவர்களைச்
            சொல்லுகின்றீரா?.. ஹி!… ஹி!… ஹி!.. சொல்ல மறந்துட்டேனே!… ஒருவேளை!…வெளிநாட்டில் ஒளிந்து நின்று கொண்டு ஊரவன் பணத்தை கொள்ளையடித்து அதிலே வயிறு முட்டதிண்டு போட்டு ஏப்பம்விட்டுக் கொண்டு வீரப்பிரதாபம் பேசும் ” ………” போன்ற மாவீரர்களைப்பற்றி போசுகின்றீர்களோ?….. யாரப்பா அந்த
            அரசியல் அறிஞ்ஞர்கள்?…..

          • thurai says:
            16 years ago

            போராட்டம் தொடங்கு முன்பே ஈழத்தமிழர் என்றால் பல பிரிவுகள். ஈழ்விடுதலைப்போராட்டம்
            போய், இப்போது வட்டுக்கோட்டைத் தீர்மானம். அடுத்தது நாடு கடந்த தமிழீழ அரசு. அத்ன் பின் ஒவ்வொரு
            நாட்டிற்கும் ஒவ்வொரு அரசு. அதன் பின்
            ஒவ்வொரு நகரங்க்ளிலும் சிற்ரரசர். இவர்களிற்கு புலத்தில் வாழும் தமிழர்

            வரிப்பண்ம் மாதாமாதம் கொடுக்கவேண்டும்.

            காரண்ம் த்மிழீழ அரசின் நிர்வாகச் செலவிற்கு.

            மறுத்து யாராவது பேசினால் அவர்கள்
            தமிழரின்
            துரோகிகள். தமிழர்களே நம்பிக்கை இழந்து விடாதீர்கள். துரை

          • appu says:
            16 years ago

            தம்பி ராசா நரேன், ஏன் ராசா நீ எல்லாத்துக்கும் அவசரப்படுகிறாய். யாரும் சிங்கள ஆக்களும் சொல்லியிருக்கலாம் தானே அப்பு. ஏன் இந்தியாவில் எவ்வளவு பெரிய ஆக்கள் இருக்கினம். சீனாவில் இருக்கினம். யாராயும் இருக்கட்டும். நல்லதைத்தானே சொல்லுகினம். நீ ஏன் ராசா உணர்ச்சி வசப்படுகிறாய். அது சரி ராசா உன்னை எப்படி கவனிக்கினம் உன்ரை ஆக்கள். தாய் தகப்பனையும் மறந்திடாதை ராசா

        • thamilmaran says:
          16 years ago

          ஜேம்ஸ் தமிழ் சினிமாவிற்கு நிரைய கதைகள் , ரசனியை வைத்து படமெடுக்கலாம். அசல் அஜித் நிச்சயம் கை கொடுப்பார்.தமிழருக்கு விதிக்கப்பட்ட வரங்கள் டைட்டில் ரெடி.

          • Anj says:
            16 years ago

            James நீங்கள் “தமிழ் படம்” பாகம் 2 தயாரிக்கலாம் “நிதி” ரெடி

        • எதிர்வு says:
          16 years ago

          அய்யர் காலத்தில கூட்டணிதான் எசமான்,அப்புறமா நம்ம காலத்தில நாம நம்மளுக்கு எசமான்,அதுவும் கொஞ்ச காலம்.பின்னாடி வந்தவுக இந்தியா எசமான்,பிரிட்டிஷ் எசமான்,அமெரிக்கா எசமானெல்லா எசமானையும் சமாளிச்சு துப்பாக்கி வைச்சு ஒற்றுமை காட்டினம்.ஆன இப்பெல்லாம் “முகில் கிழித்து வெளிக்கிளம்பும் முழுமதியாய்” அவனவன் எசமானர் கிட்ட டிரெக்ட் லிங் வைச்சுட்டானுக நாதாரிப் பயலுக.இப்ப புரியுதுங்களா நம்ம நெலம.சும்மா நீ வேறை வவுத்தெரிச்சல கொட்டிகினு.,

          • thanilmaran says:
            16 years ago

            எதிர்வு நல்ல தமிழோடு எழுதுகிறார் அவரே முழுக்கட்டுரையும் எழுதினால் நாமெல்லாம் நிச்சயம் ரசிப்பொம்.

        • Anj says:
          16 years ago

          அமெரிக்காவில் இருப்பபரை தவிர்த்து மற்ற எல்லோருக்கும் மண்டைப் பிழை என்பது எப்போதோ தெரிந்த விடயம். நிராஜ் டேவிட் சொல்லும் விடயம் 83 இல் புளொட் இயக்கம் வெளியிட்ட “வங்கம் தந்த பாடம்” என்ற புத்தகத்தில் வெளிவந்தவைதான்.

        • thanilmaran says:
          16 years ago

          ஜேம்ஸ் நீங்கள் சிலவேலை சிவனேசச்சந்திரன் போன்றூ எழுதுகிறீர்கள் சிலநேரம் சோ வை போன்றூ குழப்புகிறீர்கள்.

        • Prince says:
          16 years ago

          நண்பரே நாங்கள் செய்தால் சீட்டு நீங்கள் செய்தால் Sheet fund இரண்டுக்கும் ஒரு வித்தியாசம் தான் எங்களுக்கு போட்டவை திரும்ப கிடைக்கும்.நண்பரே உமது சக தமிழனை இந்தியாவுக்குள் வர வேண்டாம் என்று சொல்லிய வீரம் உமது முப்பாட்டனுக்கு இருந்திருக்குமேயானால் உமது பெயர் என்னவாக இருந்திருக்கும் ? குப்பனா சுப்பனா ? Enjoy now

  3. நெருஞ்சி says:
    16 years ago

    “நாகராஜவிடம் ஒரு குறிசுடும் துப்பாக்கியும் உமாவிடமும்,என்னிடமும் ஒவ்வொரு கைத்துப்பாக்கியும் இருந்தது.

    …………………
    இதே வேளை பாலசிங்கத்தை நோக்கி மறைவிலிருந்த நாகராஜா தன்னிடமிருந்த துப்பாக்கியால் சுடுகிறார். இதனால் நிர்மலனது கையில் கூட ஒரு காயம் ஏற்படுகிறது.

    ……………..இவ்வாறு இரு முனை யுத்தம் நடக்க திகில் நிறைந்த திரைப்படக் காட்சிபோல அனைத்தையும் நாம் அவதானித்துக்கொண்டிருந்தோம்.”

    ‘
    இருந்த ஆயுதத்தை பாவிக்கவில்லை.

    வைத்திருந்தவனுக்கு வடிவாக சுடத்தெரியவில்லை.

    அனைத்தையும் அவதானித்துக் கொண்டிருந்தோம்.’

    இறுதிவரை இந்தப் போராட்டம் இவ்வாறாக நடந்து முடிந்தது. சுபம்.

    • alex.eravi@gmail.com says:
      16 years ago

      நன்றாகச் சொன்னீர்கள். கடைசியில் படம் முடிந்து நந்திக்கடலில் சுபம்!

      30வருடமாக எடுத்த படத்திற்கு பொருட்செலவு மட்டுமல்ல, பல செட்டுகள் போட்டு stunt இல்லாமல் எடுத்து மனிதப் பேரழிவல்லவா கூட, அதுமட்டுமா டைரக்டர் பாலசிங்கம் இடையிலேயே படத்தை கைவிடுகிறார், கதாநாயகனும் அப்படியே முடிவில் காணாமல் போகிறார். ஆனால், புலம் பெயர்ந்த புலன் பெயர்ந்த்வரை குஷிப்படுத்த எடுத்த படம் வசூல் ராஜா! வசூல் ராஜா! என்று வசூல் மட்டும் நல்லா நடந்தது. இப்பவும் “எல்லாளன்” உலக அரங்கில் நல்லா வசூல் போடுகிறார் என்று கேள்வி. அதன் விளம்பரத்தை பாருங்கள். எம் உடன்பிறப்புக்களின்…… உடன்பிறவாஉறவுகளின் இறப்பில் இன்றும் எப்படி வசூல் நடத்தலாம் என்று தேடுகிறார்கள்….கேவலம்.

      இன்னும் நிதர்சனம் வீடியோ இல்லாவிட்டாலும் edit பண்ணி வெவ்வேறு பெயர்களில் பிரதிகள் எடுத்து ஓடும்.

      நிஜமாகவே இது புலம்பெயர்ந்தவர்களை குஷிப்படுத்தியதாகவே முடிந்தது. இதற்க்கு புலன் பெயர்ந்த ஊடகங்களே சாட்சி, அவர்களின் கற்பனை விமர்சனங்கள்….எத்தனை…..எத்தனை….அதிலும் வியாபாரப் போட்டியில் 50 இராணுவம் இறந்தால் 500 ஆக்குவது, இதை வாசிக்கும் அடுத்த மந்தைக் கூட்டம், அவர்களுக்கு ஏதோ MGR ,ரஜனி படம் என்ற நினைப்பில் black இல் டிக்கெட் வாங்கிப் பார்பதுபோல் வாரி வாரி பணம் இறைத்தார்கள். இப்போ அதே மந்தைக் கூட்டம் நந்திக்கடலுடன் எல்லாம் சங்கமமாக, இதற்குத்தானா இவ்வளவும் கொடுத்தனான்கள் என்று படம் முடிய வெளியில் வந்த மாதிரி ஏங்களைக்கிறார்கள் கதாநாயகனை திட்டுகிறார்கள்.

      கடைசியில் எல்லாம் ஓர் உணர்ச்சிகரமான படமாகப் போனது மட்டும் என்றால் பறுவாயில்லை. அங்கு நடித்தவர்களும், அப்பாவி சனக்கூட்டமும் இந்த நிலையில்…….., புலன் பெயர்ந்த மந்தைக் கூட்டத்திர்க்கோ இதில் ஓர் இழப்பும் இல்லை. பணம் தான் கொடுத்தார்கள். (இவர்களின் உறவுகளும் படத்தில் பாத்திரங்கள் ஏற்றிருக்காவிடத்து) படம் முடிந்துவிட்டது. ஊடகங்கள் இனி வேறொரு படத்திற்கு விமர்சனம் எழுதத் தொடங்குவார்கள், அதுவும் கிடைக்காவிடின் தாமே உருவாக்கிக் கொள்ளுவார்கள் (இந்த நிலைக்கு எம்மக்களை கொண்டுவந்தவர்கட்கு நாம் சொல்லிக் கொடுக்க வேண்டுமா?)

      ஆனால் இந்த ஊடகங்களின் பிழைப்பினால் நாம் கொடுத்த…. கொடுக்கும் விலை ரொம்பக் கூட…… … ….

      • சருகு says:
        16 years ago

        ஒரு தமிழனால்தான்  தன்னுடைய தாயின் இழவைக்கூட , சொந்த வீட்டில் நடக்கும் அவலத்தை அடுத்தவீட்டுக்காரன் வீட்டில் நடக்கும் படம் போல பார்க்கமுடியும்.
        தங்கையை கற்பழித்தவிடயத்திலும்  மிகனடுனிலையாக  நடக்கமுடியும். 
        ஒரு குடும்பத்தில் நான்கு அண்ணன்மார் ஒரு தங்கை.ஆனால் தமிழர்கள்.அண்ணன்மார்கள் தங்களுக்குள் போட்டி  பூசல்.
        வெளியார்  தாயைக் கொன்று  தங்கையை கற்பழித்துவிடுகிறார்கள்.
        இந்த தமையன்கள் என்ன செய்வார்கள்.

        ஒருதமையன் ஆக்ரொஷமானவன் அவன் இதற்கு நியாயம் கிடைக்கும் வரை  போராடுகிறான்.மற்றவன் படித்தவன். சிக்கல்கள் வேண்டாம் நான் நடுனிலை என்றுவிடுகிறான். கொலை, கற்பழிப்பு தத்துவஙளையும் அது ஒருவகையில் மனித் உணர்வின் வெளிப்பாடு என்றெல்லாம் ஆய்வுக்கட்டுரை எழுதிக்கொண்டு தான் ஒரு அறிவு ஜீவி என்பதை காட்ட முயற்சிக்கிறான்.அவனுடைய நடுனிலைக்கு சிலர் பட்டமும் அளிக்கிறார்கள்.
        மூன்றமவன் குடும்பத்தின் குட்டிச்சுவர்.சாராயம் கண்ட இடமே சொர்க்கம் .தாயைக்கொன்றவர்கள் தங்கையை கொன்றவர்கள் அவனை   மடக்கிவிட்டார்கள்.
        அவன் தாயைக்கொன்றது ஆக்ரோஷ அண்ணன் என்றும் அந்த பழியை அப்பாவிகள் மீது போடுகிறான் என்றும், தங்கை விரும்பித்தான் போனாள் கற்பழிப்பு நாடகம் என்றும் சொல்லுகிறான்.
        கடைசி  அண்ணன் அப்பாவி அவனும் தங்கையும் ஆக்ரோஷ அண்ணனோடு நிற்கிறார்கள்.
        உலகத்துகு அந்த குடும்பசிக்கல் ஒரு குழப்பத்தை தருகிறது. ஆக்ரோஷ அண்ணன் பலமானவ்னாக இருந்தான். அவ்னுடைய நிலைப்பாடுதான் காரணம் என்று உலகம் அவனை தீர்த்துக்கட்டிவிட்டது.
        னான்  அப்பவே சொன்னேன் என்கிறான் இந்த நுடுனிலை அண்ணன். கூட்டுச்சேர்ந்தவன் தன்னைப்போல் அண்டிப்பிழைக்கசொல்லுகிறான்.கெடுத்த்வனின் வைப்பாட்டியாய் இரு தப்பில்லை வாழ அதுதான் ஒரே வழி என்கிறான் தங்கையிடம்.

        அப்பாவி அண்ணனும் தங்கையும் அழுதுகொண்டிருக்கிறார்கள்.

        அவலக்கதை  தமிழ்சினிமாக்கதைததான்.  தமிழ்ச்சமுகத்தை அதன் இயல்புகளை சொல்லுகிற எல்லா- ந்ல்ல சினிமாவுக்குள்ளும் எங்கள் அவலம் ஒழிந்து கொண்டிருக்கிறது.
        பிளவுபட்ட குடும்பம்போலத்தான்  எங்கள் இனம் இருக்கிறது.

        • JAMES FEREDRIC says:
          16 years ago

          உங்கள் உணர்வுகள் சரி!.ஐயர்,ராகவன் போன்றோர்,சினிமா ஹீரோ தனத்தால் 1970 களில் பாதிக்கப்பட்டு?(பேரினவாத ஒடுக்கு முறைகள்),பஸ்தியாம்பிள்ளை மீது பாய்ந்த உணர்வுகளை மதிக்கிறோம்.பிறகு பிரபாகரனை உசுப்பேத்திவிட்டு,ஒதுங்கிக் கொண்டதை என்னவென்று சொல்வது?.தற்போது பிரபாகரன் அழிக்கப்பட்டதால்,புலம்பெயர்ந்த நாடுகளில் பலவகைகளில்,”சொத்துக்கள் குவிந்துள்ளன?”.இந்த சொத்துக்களைப் பாதுகாக்க,மகிந்தவுடனும்,சோனியாவுடனும்,”கொன்றால் பாவம்(வன்னிமக்கள்) தின்றால் போச்சு,”மிச்சமிருக்கிற எங்களுக்கு” செய்தால் போதும் என்று கூறுவது சணக்கியமா?,இரஜதந்திரமா?.அது சரி,இதன் மூலம் கதவை திறந்து வைக்கிறேன் பேர்வழி என்று,இவர்கள் கூறும் புதிய ஜனநாயக,”தலித்தியத்தின்” மூலம்,திருமாவளவன் போன்ற தங்களுக்கு சாதகமானவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும்(கைப்பொடிகள்),மற்ற பிரதான கட்சிகள் ஒழிய வேண்டுமென்ற பேராசை,(இதைப் பற்றி விவரங்கள் இன்னும் சரியாக வெளிவரவில்லை) என்பது எந்த உளவு நிறுவனத்தின் சதி?.பணத்தை அமுக்கியவர்கள்,அரசியல் தெரியாமல்,பலவற்றை யோசித்து,”விடுதலைப் புலிகள்” கதையை போஸ்ட் மார்டம செய்து,அதிலிருந்து ஒரு தலைமையை உருவாக்க முயலுகிறார்கள் என்று கொள்ளலாமா?.

          • thamilmaran says:
            16 years ago

            தலமையை உருவாக்க இந்தியா இருபது ஆண்டுகளூக்கு விடப்போவதில்லை.தலைவர் இருக்கிறாரா இல்லையா என்றூ தொடரும் விவாதம் அத்தனை எளீதில் முடியப்போவதில்லை இதுவே எந்த தலைமையும் தோன்றாமல் தடை செய்து விடும்.ஆக தமிழர் இலங்கையில் எழுந்து கொள்வது அத்தனை எளீதாக இருக்கப் போவதில்லை.

        • நீதிபதி says:
          16 years ago

          தமிழினத்தின் யாதார்த்த நிலையை தெளிவாக எழுதியிருக்கிறீர்கள். அவரவர் தங்களின் ** சந்தனமும் பட்டு வேட்டியும் கட்டதான் வெளிக்கிட்டவைகள் தவிர தமிழினத்திற்கு விடிவு தேடுவதற்கு இல்லை. ஆரம்பத்தில் எல்லா இயக்கங்களும் ஆயுத போராட்டத்தை வலியுறுத்தி செயற்பட்டன. ஏன் ஒரு குடையின் கீழ் நிற்க வில்லை. தமிழர் பொது உணர்வில் இல்லாமல் தனிப்பட்ட அல்லது ஒவ்வொருவரும் தாமே பட்டு வேட்டி கட்ட வேண்டும் என்ற அற்ப ஆசையினால் எங்கள் தமிழினத்தை இந்த நிலைக்கு கொண்டுவந்துள்ளீர்கள்.இன்றும் அதையே செய்கிறீர்கள். நடந்தவை எல்லாம் இனி மாயை, இந்த கணம் மட்டும் உண்மை. ஏன் எல்லாரும் சேர்ந்து ஒரு தமிழர் படையை உருவாக்க முடியாது???? ம்ம்ம்ம்ம்ம் என்னென்று உருவாக்கிறது?????யார் பட்டு வேட்டி கட்டுறது என்ற பிரச்சனை??

  4. rathan says:
    16 years ago

    தொடர்ந்து எழுதுங்கள்.ஒன்றுமே செய்யாமல் இடைகிடை குரைப்பவர்களையோ,முட்டையில் மயிர் புடுங்குபவர்களையோ கண்டுகொள்ள வேண்டாம்.தமிழன் எதில் கெட்டிக்காரன் என்று எல்லோரும் அறிந்த ஒன்றுதானே.

    • Anj says:
      16 years ago

      முழங்காலுக்கும் மொட்டை தலைக்கும் முடிச்சு போடும் James போன்றவர்களை அப்படியே விடவேண்டியது தான்

      • Prince says:
        16 years ago

        He is latest Subramaniya sநண்பரே நாங்கள் செய்தால் சீட்டு நீங்கள் செய்தால் Sheet fund இரண்டுக்கும் ஒரு வித்தியாசம் தான் எங்களுக்கு போட்டவை திரும்ப கிடைக்கும்.நண்பரே உமது சக தமிழனை இந்தியாவுக்குள் வர வேண்டாம் என்று சொல்லிய வீரம் உமது முப்பாட்டனுக்கு இருந்திருக்குமேயானால் உமது பெயர் என்னவாக இருந்திருக்கும் ? குப்பனா சுப்பனா ? Enjoy now.

  5. moorthy says:
    16 years ago

    சபஸ்தியானின் நடவடிக்கை வெற்றிபெற்றிருந்தால் 
    தமிழனுக்கு இவழவு மோசமான நிலமை வந்துஇருக்காது.

    • ragu says:
      16 years ago

      ///சபஸ்தியானின் நடவடிக்கை வெற்றிபெற்றிருந்தால்
      தமிழனுக்கு இவழவு மோசமான நிலமை வந்துஇருக்காது./// 100 வீத உண்மையும் இதுதான்

    • mamani says:
      16 years ago

      ஐயா, உங்களிடமும் உமாவிடமும் கைத்துப்பாக்கியும் நாகராஜாவிடம் குறிசுடும் துப்பாக்கியும் இருந்தது உங்கள் தோழர்கள் சுற்றி வளைக்கப்பட்டதை உணர்ந்த நீங்கள் அதை பயன்படுத்தாமையின் நிலைபற்றி சற்று விளக்கமாக எழுதுங்கள். அந்தநேரத்தில் உமா லெபனான் பயிற்சி முடித்திருக்கவிலையா? அவருக்கும் இயந்திர துப்பாக்கி பற்றி தெரிந்திருக்கவில்லையா?

    • mamani says:
      16 years ago

      லாலா ரன்சன் எம்.பி கனகரத்தினத்தின் மகனா?

      • OORAAN says:
        16 years ago

        MP கனகரட்ணத்தின் மகன் ரஞ்சனின் இயக்கபபெயர் சைமன். சைமன் கொக்கிளாய் இராணுவ முகாம் தாக்குதலில் மரணமடைய்ந்தவர். ரஞ்சன் லாலா வடமாராட்சியை சேர்ந்தவர்.

        • aruna says:
          16 years ago

          OORAAN நீங்கள் மட்டக்களப்பை சேர்ந்தவரா . உங்கள் இயக்கபபெயர் என்ன e.mail தருவீர்களா ?

  6. alex.eravi@gmail.com says:
    16 years ago

    “அந்த இராணுவ வெற்றியின் அரசியல் பலாபலன்களை எடை போடவும் அதன் பின்னரான அரசியலை வழி நடத்தவும் நாம் திட்டமிடவில்லை. அதற்கான கட்டமைப்பும் மக்கள் திரளமைப்புக்களும் இருந்ததில்லை. எமது நோக்கம் பலமான இராணுவத்தைக் கட்டியமைப்பதாக மட்டும் தான் அமைந்தது”.

    ‘அதற்கு மேல் எதுவும் இல்லை. அந்தப் பலமான இராணுவத்தை நோக்கிய பயணத்தில் இந்தக் கொலைகள் ஒரு மைற்கல்லாகவே எமக்குத் தெரிந்தன”.

    “அன்று மட்டுமல்ல முள்ளிவாய்க்கால் வரை யாருமே அரசியல் எதிர்விளைவுகள் குறித்துச் சிந்தித்ததில்லை. எத்தனை மனித் உயிர்கள்? எத்தனை இராணுவ வெற்றிகள்!!!”

    ஐயரே! சரியாகச் சொன்னீர்கள். “முள்ளிவாய்க்கால் வரை யாருமே அரசியல் எதிர்விளைவுகள் குறித்துச் சிந்தித்ததில்லை”, அன்று மட்டுமல்ல, இன்றும்… இனியும் சரியான பாதையை தெரிந்தெடுத்து சிந்திப்போமா அல்லது சிந்தித்தாலும் தொடர்ந்து எம்மை…. எம் இனத்தை பிரித்தாளும் சக்திகளிடம் சிக்குப்பட்டு எம்மையும் … எம்மினத்தையும் அழிக்கப்போகிறோமா?

    எத்தனை மனித் உயிர்கள்? எத்தனை இராணுவ வெற்றிகள்!!! ஆனால் கடைசியில் என்னத்தைக் கண்டோம்? அர்த்தமில்லா உயிரிழப்புகள்… அவ்வுயிர்களின் துயிலும் இல்லங்கள் அழிப்பு… இராணுவ வெற்றிகளூடாக எதிரியின் இராணுவத்தை வளர்த்து விட்டது…. மட்டுமல்லாமல், இன்று எல்லாம் சமாதியில்லாமல் சமாதியாகிவிட்டது.

    “இன்று உச்சமடைந்திருக்கும் இனப்படுகொலையின் கோரம் அப்போதும் பண்பியல் மாற்றமின்றி இருந்தது. அப்போது கூட நட்பு சக்திகளுக்கும், எதிரிகளுக்கும் இடையேயான இடைவெளி கூட மிக நெருக்கமானதாகத் தான் இருந்தது. சில மணி நேரங்களில் கணேஸ் வாத்தி என்ற மத்திய குழு உறுப்பினர் துரோகியாகிப் போய் மயிரிழையில் உயிர் பிழைத்த நிகழ்வு, ஆயுதப் போராட்டத்தில் ஆய்வுகளினதும் அரசியலினதும் தேவையை உணர்த்தி நிற்கிறது”.

    இன்றோ நட்பு சக்திகள் என்றால் அது என்னவென்று கேட்கும் நிலைமை. அதை விட யார் எதிரி, யார் நண்பன் என்று அறியமுடியாத நிலையில், எதிரிக்கு எதிரி நண்பனாகவும், நண்பனுக்கு எதிரி நண்பனாகவும் ஓர் குழிபறிக்கும் நிகழ்வாகவே நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

    “எம்மால் உருவாக்கப்பட்ட துரோகிகளை அழிக்கும் செயன்முறை மறுபடி மறுபடி வேறு வேறு வடிவங்களில் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது”.

    சரியாகச் சொன்னீர்கள். ஆனால் ஓர் சிறு திருத்தம். அப்போ எமக்கு எதிரி (பொது எதிரி) என்று ஒருவனே, இன்று எதிரி (பொது எதிரி) என்ற நிலை மாறி… எம்நிலையை தக்க வைக்கும் எதிரிக்கு எதிரியை தெரிவு செய்யும் நிலையில் உள்ளோம்.

    “மக்களின் பிரதிநிதிகள் மக்கள் மன்றத்தில் வழங்கிய தீர்ப்புக்கள் குறித்தும் அவற்றின் நடைமுறை குறித்தும் நாம் அப்போது அறிந்திருக்கவில்லை”.

    இப்போதும் நாமோ, எமது அரசாங்கமோ, எம்மை ஆட்டிப்படைக்கும் வெளிச்சக்க்திகளோ மக்கள் மன்றத்தில் மக்கள் வழங்கும்… வழங்கிய தீர்ப்புக்கள் குறித்தோ அவர்களின் அபிலாஷைகளையோ அவற்றின் நடைமுறை குறித்தோ அறிந்திருக்கவில்லை.

    “தனிமனிதர்களின் முடிவுகளே தீர்ப்புகளாயிருந்தன. அதிலும் ஆயுத பலம் கொண்ட மனிதர்கள் சிலர், தாம் சரி அல்லது தவறு என்று முடிவு செய்வதற்கு தமக்குத் தாமே அதிகாரத்தை வழங்கியிருந்தனர். புலிகளுக்கு மட்டுமல்ல சிறுகச் சிறுக ஈழத்தின் ஒவ்வொரு மூலைகளிலும் உருவான இயக்கங்கள் அனைத்திற்கு இது பொருந்தும்”

    இது அன்று மட்டுமல்ல, இன்றும் சகல தரப்பிலும் தொடர்கிறது. இதற்க்கு, புலிகளோ, தமிழ் விடுதலை இயக்கங்களோ விதிவிலக்கல்ல. இன்று எமது அரசாங்கத்திலும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னால் இராணுவ அதிகாரியின் அரச கவிழ்ப்பு முயற்சி, இன்றைய அரசாங்கத்தின் ஊடக சுதந்திர நிலை. மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களின் உயிர்கள் பறிக்கப்பட்டமை, July 25, 1975 துரையப்பா தொடக்கம்….. மண்ணெண்ணெய் மகேஸ்வரன் வரை தொடர்ந்துகொண்டே உள்ளது. இதில் தமிழ் சிங்களவர், முஸ்லிம் என்ற பாகுபாடு இல்லாமல் தொடர்கிறது. இதையும் சற்று வெளியில் பார்தோமென்றால், இன்று இராக்கில் நடக்கும் போர்…போரின் தொடரும் அழிவு, ஆப்கானில் நடக்கும் போர்…போரின் பின் தொடரும் அழிவு, எல்லாம் தனிமனிதர்களின் முடிவுகளிலான தீர்ப்புகளாலும், அதிலும் ஆயுத பலம் கொண்ட மனிதர்கள் சிலர், தாம் சரி அல்லது தவறு என்று முடிவு செய்வதற்கு தமக்குத் தாமே அதிகாரத்தை வழங்கியிருந்தனதமையாலுமே நடைபெறுகிறது…..தொடர்கிறது. எமது நாட்டின் தொடரும் தனிமனித ஆதிக்கங்களின் முடிவுகளால் நடைபெற்ற….. நடைபெறும் கொலைகளுக்கு இவ்விணைப்பை அழுத்திப் பாருங்கள். http://www.nation.lk/2008/03/16/newsfe1.htm

    அன்று கரம்பொன் பஸ்தியாம்பிள்ளையிடம் இருந்த இயந்திரத் துப்பாக்கியை எடுத்து அதாலையே சுட்டுக் கொன்றது மட்டுமல்லாமல், முதல் இயந்திரத்துப்பாகியை இயக்க கற்றுக்கொண்டதுடன் அதையும் தம் வசப்படுத்திக் கொண்டநிலையில் அதையும் முறிகண்டி காட்டுப் பகுதியில் பாதுகாப்பாக புதைத்து வாய்த்த நிலையில், இன்று புலம் பெயர் மக்கள் வேர்வை சிந்தி உழைத்த பணத்தில் வாங்கிய இராணுவத் தளபாடங்கள் அதே காட்டுப் பகுதியில் தோண்டித் தோண்டி எடுக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், அன்று ஓர் பேரம்பலத்தின் பிணம் கிணற்றில் விடப்பட்டது…..இன்று எத்தனை பிணங்கள்….எத்தனை உயிர்களுடனான உடல்கள் எத்தனை கிணறுகளில்…..வன்னியில் எத்தனை கிணறுகளில்!

    அன்று ஓர் கரம்பொன் பஸ்தியாம்பிள்ளை, பாலசிங்கம் சயிக்கிளுடனும், நீர் இறைக்கும் இயந்திரத்துடனும் சேர்த்து குடிசையுனுள் எரிக்கப்பட்டார்கள், இன்று பல பிள்ளைகள்… பாலர்கள்…..சிங்கங்கள்….அடையாளமில்லாமல் பல இராணுவ தளபாடம் செய்யும் இயந்திரங்களுடன்… இராணுவ டாங்கிகளுடன்….விமானத்தை சுடும் சுடுகலங்களுடனும் சேர்த்து திறந்த வெளியில் எரிக்கப்பட்டார்கள்……எரிக்கப்படும் முடிவு என்ன?

    ஐயர் அவர்கள் சொல்வது போல, “அந்த இராணுவ வெற்றியின் அரசியல் பலாபலன்களை எடை போடவும் அதன் பின்னரான அரசியலை வழி நடத்தவும் நாம் திட்டமிடவில்லை. அதற்கான கட்டமைப்பும் மக்கள் திரளமைப்புக்களும் இருந்ததில்லை. எமது நோக்கம் பலமான இராணுவத்தைக் கட்டியமைப்பதாக மட்டும் தான் அமைந்தது” என்ற கூற்றும் சரியா?

    பலமான இராணுவக் கட்டமைப்பையும் கட்டிப் பாதுகாக்க முடியவில்லையே???

  7. unmai says:
    16 years ago

    அய்யாவுக்கு வணக்கம். விரைவில் பதிவு செய்யுங்கள், தமிழனை நம்பவேண்டாம்.

    1. http://www.tamilwin.org/view.php?2a36QVH4b43Z98We4b46IP5ce2bf1GU2cd2OipD3e0dJZLucce02g2FP0cd3tjoCd0 2.http://www.tamilwin.org/view.php?2aSIPJe0dbjoM0ecGG1h4b4Z988cd2g2F3dc2Dpi3b436QV2e22ZLu30 3.http://www.tamilwin.org/view.php?2aSIPJe0dvjoM0ecGG1V4b4Z98Mcd2g2F3dc2Dpi3b436QV2e22ZLu30

  8. ரூபன் says:
    16 years ago

    ஐயாவுடன் மகிழும் நேரம்

    கிட்டத்தட்ட 32 வருடங்களின் பின்னர், பஸ்தியாம்பிள்ளையின் கொலை தொடர்பான ‘நிதர்சனம்’ வெளியாகியுள்ளது.

    ஐயாவுக்கு இது தொடர்பாக மகிழ்ச்சியுடன் நன்றியைத் தெரிவிக்க வேண்டும்! முதன் முறையாக அந்தப் பண்ணையை எரித்தது தாம்தாம் என ஒரு பலமான சட்சியை ஐயா வெளிப்படுத்தி இருக்கிறார். முன்னர் ‘தாயகத்தில்’ இதுபற்றிய சில குறிப்புக்கள் வந்திருப்பினும், பலமான ‘புலிஎதிர்ப்பு’ என்ற சாயத்தால் மூடிமறைத்த வரலாறுகளும் உண்டு!

    ‘ரவி’ என்பவர் பிந்நாளில் ‘புளட்’ உறுப்பினரா? சந்தியாரின் காலத்துக்குப் பின், இவர் ‘ தீப்பொறிக்கு ‘ வெளியில் ஓர் அணியுடன் தொடர்பில் இருந்தாரா?

    ஐயாவுடன் நட்புடன் கேட்கும் ஒரு வெளிப்படையான கேள்வி. இத்தொடரில் வரும் கணேஸ் வாத்திக்கு ‘கண்ணுடி பதமநாதனின்’ கொலை முன்கூட்டியே (கைதுக்கு முன்) தெரியுமா?

    ஐயாவின் மூன்றாம் பாகத்துப் பதிவில்:

    ”அந்த மத்திய குழுவில், பேபி சுப்பிரமணியம், நாகராஜா, கணேஸ் வாத்தி, தங்கா, விச்சு, நான், பிரபாகரன், , குலம், பின்னதாக இந்தியாவிலிருந்து வந்து திரும்பி வந்த பற்குணம் ஆகியோர் அங்கம் வகிக்கிறோம். இந்த மத்திய குழுவில் தான் புதிய புலிகள்(TNT) என்ற அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகள்(LTTE) என்று ” உத்தியோக பூர்வமாக” பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. 1976 இறுதிப்பகுதிதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பமாகவும் அமைகிறது. இந்த மத்திய குழுத் தெரிவுக் கூட்டம் வவுனியா பூந்தோட்டம் பண்ணையில் தான் நடைபெறுகிறது. இங்கு கூடியிருக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெயரை முன்மொழிகிறோம். நானும் கூடத் தான். எமது இயக்கத்தின் புதிய பெயரைத் தெரிவு செய்வதில் அனைத்து உறுப்பினர்களும் ஆர்வம் கொண்டு விவாதிக்கிறோம். வெவ்வேறு பெயர்கள் சொல்லப்பட்டு இறுதியாக பல்வேறு தெரிவுகளின் கூட்டாக “தமிழ் ஈழ விடுதலைப் புலிகள்” என்ற பெயர் உருவாகிறது.”

    என்று பதியப்பட்டுள்ளதால் இக்கேள்வி விளங்கிக் கொள்ள தவிர்க்க முடியாதாகிறது. அத்துடன் பற்குணத்தின் கொலை ‘வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் பின்னர்’ நடைபெற்ற கொலை என்று தங்களின் பதிவு கூறுவதையும் வரவேற்கிறேன். ‘லங்காராணியில்’ , ‘பற்குணத்தின்’ பாத்திரம் வந்து போனதாகவும் ஞாபகம். அருளர்தான் இதை உறுதிப்டுத்த வேண்டும்.

    ஆனாலும், எனக்கு ஒன்று விளங்கவில்லை. சம்பவங்களை காலத்துக்கு முன் பின்னாக ஏன் பதிகிறீர்கள்?

    உதாரணமாக, இரத்மலானை விமானக் குண்டுத் தாக்குதல் இச் சம்பவங்களுக்குப் பின்னர் வந்திருக்க வேணும்.

    இன்னும் ஒன்று…

    கனகரத்தினம் எப்பொழுது சுடப்பட்டார்? ஏனெனில் அவர் மூன்று மாதங்களின் பின்னரெ இறந்தார். இக் கொலைமுயற்சி தொடர்பாக முதலில் நாகராஜா கைது செய்யப்பட்டதாகவும்,

    உமாமகேஸ்வரின் வறுத்தளைவிளான் (கட்டுவன்) வீட்டுக்கு அடையாளம் காட்ட அழைத்துச் சென்றவேளை…

    ”வழி நெடுக பஸ்தியாம்பிள்ளையுடன் பேசிக்கொண்டு வந்த நாகராஜாவிற்கு உமா மகேஸ்வரன் வீட்டில் தங்கியிருக்க மாட்டார் என்பதும் தெரியும். அங்கே கட்டுவனை அடைந்ததும், பொலீசைக் கண்டால் உமா மகேஸ்வரன் தப்பி ஓடிவிடுவார் என்றும், பஸ்தியாம் பிள்ளையை வெளியே நிற்குமாறும், தான் உள்ளே சென்று அவரைத் தந்திரமாக அழைத்து வருவதாகவும் பஸ்தியாம்பிள்ளையிடம் கூறி அவரையும் சம்மதிக்க வைக்கிறார்.
    இதற்கு பஸ்தியாம்பிள்ளை சம்மதம் தெரிவிக்கவே நாகராஜா உமா மகேஸ்வரன் வீட்டினுள் சென்று, வீட்டின் பின்பகுதியால் தப்பியோடிவிடுகிறார். இந்தத் துணிகரமான நடவடிக்கையால் அங்கிருந்து தப்பிய நாகராஜா, பண்ணைகளிலிருந்த எம்மை நோக்கி வந்து எம்மோடு மீண்டும் இணைந்து கொள்கிறார். இந்தச் சம்பவத்தின் பின்னர், நாகராஜாவும் தேடப்படுபவர்கள் பட்டியலில் இணைந்து கொள்கிறார்கள்.”

    (மேற்படி தகவல் ஐயாவால் பாகம் ஏழில் பதியப்பட்டுள்ளது)

    இப்பொழுது மேலும் ஒரு கேள்வி: நாகராஜாவுக்கு ‘கண்ணாடி’ கொல்லப்பட்டது ஏற்கனவே தெரிந்திருந்ததா?

    இக்கேள்விகளை ஐயாவைத் தவிர வேறு எவரிடமும் தொரிந்து கொள்ள முடியாது என்பதாலேயே இதைப் பதிவிடுகிறேன்….

    ரூபன்
    160310

  9. எதிர்வு says:
    16 years ago

    பாகம் 7 இல் நான் குறிப்பிட்டது “……..தமிழ் தலைமைகளின் இரண்டக நிலையையும்,அன்று தமிழ் இளஞர்கள் எடுபிடியாக்கப்பட்ட நியாங்களையும் அறிந்த அதிகாரியாக இருந்திருக்கிறார்.நாகராசவை தப்பியோட விட்டது ஒரு நம்பிக்கையுடன் கூடிய மனிதாபிமானந்தான்.துப்பாகிகளை சாய்த்து விட்டு, சந்தேக நபர்களான இளஞர்களுடன் தேநீர் அருந்த முற்பட்டு,தன்னைப் பலி கொடுத்ததும் தமிழ்ப் பண்பாடுதான்.Tண்T தலைவர் செட்டியுடன் உறவுகளை பேணியது அவரது உளவுப் பணியின் உயர் நிலைகள்.அவர் தேடிக் கொல்லப்பட்டவர் அல்ல,தன் அதீத நம்பிக்கையால் அழிந்து போனவர்.அப்போதைய புலிகளின் முக்கிய விபரங்களை அவர் மட்டுமே அறிந்திருந்ததால், அவர் அழிவுதான் புலிகளின் வளர்ச்சியானது.அவர் கொலை ஒரு தற்செயல் நிகழ்வே.”

    அப்பாவியாகக் காட்டும் தனது இயல்பான நடிப்புத் திறமையால் அவர்களை’ நம்ப வைத்து,உபசரிப்பதாக கனம் பண்ணி, வீழ்த்திய செல்லக்கிளியின் தனித்திறமை ,புலிகளின் வீக்கத்திற்கு வழி செய்தது. மீண்டும் அதே செல்லக்கிளி,தலைமை தாங்கி, கடைசியாகத் தன்னைப் பறிகொடுத்த இராணுவத் தாக்குதல்தான்,’பாண் வாங்கப் புறப்பட்டோர் படகேறிப் போன’ விடுதலைப் போரினை உப்பிப் பொரும வைத்தது.

    அய்யரே!

    மேல்தட்டு- பரணிலும்,கீழ்த்தட்டு- குடிசையிலும்……

    கீழ்த்தட்டு- போராட,மேல்தட்டு- திரைப்படமாய் அவதானிக்க……

    முதலடி நல்லதாய்……….ஆரம்பமே அற்புதமாய்…ஆகா…..ஒகோ….

    • Nathan Thurairajah says:
      16 years ago

      Mr. Mickey Mouse (Athirvu)

      Do you think that Mr. Bastiumpillai is a humanitarian? Well, for your information your working for a underground government organization only for money. When they killed Mr. Bastiumpillai and his people, all the Tamils’ were so happy, even the Tamil police. In my knowledge, after Mr. Bastiumpillai became a policeman, the only person who beat him and too him down was Ragavan! You can’t even stand up beside the Tiger movement! Then how could you write all these things that a Mickey Mouse would write?

  10. nila says:
    16 years ago

    தமிழீழப் போர் நூற்றுக்கணக்கில் அப்பாவிகளைப் பலியெடுத்துள்ளது. பல பணக்காரர்களை உருவாக்கியுள்ளது. சோபாசக்தி ஞானா போன்ற துரோகிகளையும், ரயாகரன் போன்ற கோமாளிகளையும் வளர்த்துள்ளது. ஏன்? ஐயா, உங்கள் அரசியல் விளக்கம் என்ன..? புலிகளைப் போஸ்மோட்டம் பண்ணி புதிய தலைமையை உருவாக்கும் வழிமுறையை வயசான காலத்தில் நீங்கள் தருவதாகத் தெரிகிறது. இன்று நடப்பில் உள்ள நபர்களைப் பற்றியும் சொல்லுங்கள்.

    • thamilmaran says:
      16 years ago

      சோபா சக்தி போன்ற மனனோயாளீகலையும் லண்டனில் முருகானந்தன், ஐ.தி.சம்பந்தர் போன்ற கோமாளீகலையும் உருவாக்கியுள்ளதோடு திருச்செல்வம் போன்ற பச்சோந்திகலையும் உருவாக்கியுள்ளது.

  11. sayithan says:
    16 years ago

    பஸ்தியாம்பிள்ளையை கொலைசெய்து விட்டு அவரின் ஆண்குறியை வெட்டி வாய்க்குள் திணித்தாக பெருமைபேசும் கதை ஒன்றும் உலாவிவவிந்தது. இது எப்போ நடந்தது? யார் செய்தார்கள்? அல்லது கட்டுக்கதையா? அல்லது ஒழுக்கம்கருதி தணிக்கையா?

    • Soorya says:
      16 years ago

      இப்படி பல கேள்விகள். ஐயர் எப்பொது பதில் தருவார்? உடனுக்குடன் பதிலை எழுதினால் நல்லது.

  12. thurai says:
    16 years ago

    தமிழரின் விடுதலைப் போரில் பஸ்ரியாம்பில்ளையின் கொலை ஓர் முக்கிய அம்சம்.

    பண்ணையை அமைக்கும் போது தமிழரின் விடுதலையை கருத்தாக்க் கொண்டு
    அமைத்தார்களா?
    அல்லது போராளிகள் பொலிசாரிடமிருந்து தப்பி வாழ்வதற்காக மட்டும் அமைத்தார்களா?

    பஸ்ரியாம்பிள்ளையின் கொலைக்கு முன்பே உட் கொலைகழும் தற்பாதுகாப்பிற்காக
    நடந்திருக்கின்றன.. இதிலிருந்து நீண்ட தூர, தீர்க்கதரிசின்முள்ள சிந்தனை யாரிடமும் இருந்திருக்கவில்லை என்பதே வெளியாகின்றது..

    அன்று பஸ்ரியாம்பிள்ளையை

    தமது சொந்த
    பண்ணையில் (மண்ணில்) தீ மூட்டிவிட்டு தப்பியவர்களின் பரம்பரையே இன்று வ்ன்னியில்
    த்மிழரின் சொந்த ம்ண்ணில் வாழ்ந்தோரை சிங்கள்வரின் அழிவிற்குள் தள்ளிவிட்டு தப்பி
    ஓடியுள்ளனர். துரை

    • Soorya says:
      16 years ago

      தோட்டாவைக் காணவில்லை? இப்படி மிக அறிவான கேள்வி உம்மைப் போல் மனிதரை சுட்டுத்தள்ள! சும்மா பகிடி:

      • THOTTA says:
        16 years ago

        சூரியா… இதுகள் எல்லாம் ” சோற்றில் ” உப்பு போட்டு சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு. அதுதான் மானம் , ரோசம் , சூடு ,சொரனை கெட்டு அலையுதுகள். அரிசியை விட , உப்பு விலை ரொம்பக் குறைவுதான். ஆனாலும் வேண்டிப் போட்டு சாப்பிடவில்லை பாத்திங்களோ. ஆனையிறவு ” உப்பளத்தில” முங்கிக் குளிச்சாலும் இதுகளுக்கு, இதில எதுவும் வரப்போறதில்லை.
        நாய் வாலை நிமித்த முடியாது எண்டும் தெரிந்துகொண்டும் பிறகு ஏன் இதில மெனக்கெடுவான்.

        சூரியா… ஒரு விசயம் தெரியுமோ….. வீட்டுமுற்றத்தில, வீதியில, கோவில்ல. பள்ளிக்கூடத்தில, காட்டில , மேட்டில , இப்படி எல்லா இடத்திலையும் ஒரெ குப்பையும் , கூளமும், அசிங்கமாய் கிடக்கும். ஆனால் ஒரு இரவு “மழை” சும்மா அடிச்சுப்பொழியும் பாத்தியளோ..பிறகு என்னவெண்டால், விடிய எழும்பிப்பாத்தால், சும்ம சொல்லக் கூடாது, எல்லா இடமும் கூட்டித்துடைச்சு விட்ட மாதிரி, சுத்தமாய், பளபளப்பாய் , பாக்க அழகாயும், மனசுக்கு சந்தோசமாயும் இருக்கும் கண்டியளோ!

        அதே போலதான் சூரியா, மீண்டும் தமிழ்மக்களுக்கான விடுதலைப்போர் ஆரம்பிக்கும்போது, அதன் வேகத்தில் இந்த அசிங்கங்கள் ( நரேன் ,துரை, மாமணி) எல்லாம் அடித்துச்செல்லப்படுவார்கள்.அதுவரை இந்த அசிங்கங்களை நாம் ஏன் கஸ்ரப்பட்டு வார்த்தையால் அகற்ற முற்படுவான்.

        • Naren says:
          16 years ago

          வந்துட்டார்யா!! வந்துட்டார்!! என்னடா அறிவுக்கொழுந்தைக் காணவில்லையே என்று யோசித்தேன். ஏனுங்கோ!.. தோட்டா!! மாவிலாற்றில் தொடங்கி முள்ளிவாய்க்கால் ஊடாக நந்திக்கடல் வரைக்கும் பெய்த அடைமழையில் நீங்கள் ஏன் அள்ளுப்படாமல் போனீர்கள்? அன்று பெய்த மழையில்தான் எல்லாம் கழுவுப்பட்டுப் போய்விட்டதே. இன்னுமா மழைவேண்டும் போதுமய்யா போதும் மழை ஆரம்பிக்க நீங்கள் வன்னிமக்களை வெளியேறவிடாமல் புடிச்சு வைச்சுக் கொண்டு அந்த மக்களின் நடுவே நின்று கொண்டு ஆட்லறி அடிக்க பேந்து திருப்பி ஆமிஅடிக்க அதிலே கொட்டுண்ட பிணங்களை காட்டி வெளிநாட்டில் வியாபரம் செய் இங்கே இருக்குறதுகள் உணர்ச்சி வசப்பட்டடு கொடிபிடிக்க தேவையா இவையெல்லாம் ?வன்னி மக்கங் தாங்க மாட்டார்கள்

          • Anj says:
            16 years ago

            பின்பக்கம் வெந்த வேதனையில் குப்புற படுத்துக்கொண்டு முனக தோட்டாவின் திண்ணையா கிடைத்தது. தோட்டா கவனம் குடிலையும் பிடுங்கிக் கொண்டு போகக்கூடியதுகள்

        • thurai says:
          16 years ago

          தோட்டாவிற்குத் தேவை துப்பாக்கி. துப்பாக்கியைத் தூக்கிய

          தம்பியும் தம்பியை நமபிய தமிழரும் பட்ட பாடு போதுமையா.
          உலகை அறிவினால் வெல்பவர்கள் மனிதர்கள்.
          புலிகளிற்கும்
          அறிவிற்கும் மடுவும் மலையும் போன்றது.

          விடுதலைப்
          புலிகள் பேரில்மட்டும். நடத்தைகள் காட்டுமிராண்டிப் புலிகள்தான். தமிழரில் மிகுதியாக் உள்ளோரும் அழிய வேண்டுமென்றால் திரும்பவும் தலைவரும் புலிகழும்
          வரத்தான் வேண்டும். இதனால் கொள்ளையடித்த கூட்டமும்
          கூடியே வருவார்கள். தாயகத்தில் புலிக்கு

          தமிழீழதாக்ம் தாகம் தீர்க்க தாருங்கள் பண்மென்று..

          இப்போ துரோகிகள் சிஙக்ள அரசுடன் இல்லைத் தோட்டா. புலிகளே அதிகமாக காலிலை விழுந்திருக்கினம்.

          இதுவும் தலைவரின்ரை உள்ளுக்க விட்டு குடுகின்ற
          தந்திரமோ தோட்டா.

          துரை

        • Anj says:
          16 years ago

          தோட்ட உங்களிடம் ஒரு தாழ்மையான வேண்டுகோள். நிச்சயம் செய்வீர்கள் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன். தயவு செய்து “மழை” என்ற சொல்லை இனிமேல் பாவிக்காதீர்கள். நீங்கள் குறிபிட்ட அந்த “மூன்றுக்கும்” இந்தச் சொல் சன்னியை கிளப்பி விட்டிடும். ஒதுங்க முடியாமல் போன கவலை அதுகளுக்கு.

    • sivaram says:
      16 years ago

      உங்களின் இனப்பற்று புரிகிறது. ஆனாலும் உங்கள் எழுத்துக்கள் மனச்சோர்வைத்தான் வரவைக்கிறது. பேரழிவிலிருந்து வெளியே வருவதற்கு புலம்புவது வழியல்ல. தமிழர் நீண்ட நாள் அடிமைகளாக வாழ்வதா இல்லையா என்பது எமது சிந்தனையில் தான் உள்ளது. புலம்பெயர்ந்த தமிழரைத் தூற்றுகிறீர்கள் தொடர்ந்து. எதிரிகளிடம் சேர்ந்து சொந்த இனத்தைக்கொல்வதிலும், நாட்டை விட்டு வெளியேறுவது மேலானது தான். ஆயிரமாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த நாட்டை விட்டு வெளியேறுவது ஒரு மனிதனுக்கு இலகுவானதெனில் இருக்கும் நாட்டை விட்டு திரும்பி வருவதும் இலகுவானது தான்.

  13. இனியொரு.. says:
    16 years ago

    ஐயரிடம் வினவப்படவைகள் அனைத்தும் கேள்வி பதில் வடிவில் தொடர் முடிவில் பதியப்படும்.

    • Anj says:
      16 years ago

      ஐயர் அவர்களிடம் சில கேள்விகள்
      1 . தோழர் சுந்தரம் தினமும் தெல்லிப்பளை , சுன்னாகம் ஊடாக சைக்கிளில் சித்ரா அச்ச்சகம் செல்வார். ஏன் அச்சகத்தில் வைத்து படுகொலை செயப்பட்டார்?
      2 டேவிட் ஐயா , வைத்தியர் சோமசுந்தரம் போன்றவர்கள் கைது செய்யப்பட்டதன் பின்னணி என்ன? (சித்திரா அச்சகத்தில் இருந்த ஆவணங்களா)
      3 “வங்கம் தந்த பாடம்” என்ற புத்தகத்தை ரோ(RAW) இடம் காட்டிக் கொடுத்தது யார்? (தேசத்தின் குரலா)

      நன்றி

    • mamani says:
      16 years ago

      காயப்பட்ட நிர்மலனுக்கு மருத்துவ உதவி செய்த அடம்பன் பங்கு தந்தை மாம்பழம் பாஃதர் இப்போ உயிருடன் உள்ளாரா?

      • Johnson says:
        16 years ago

        காயப்பட்ட நிர்மலனுக்கு மாம்பழச்சாமி மருத்துவ உதவி செய்தாரா? ஆச்சரியமாக இருக்கிறது! வேடிக்கை என்னவென்றால்,அடம்பன் வண. பிதா .மாம்பழம் அவர்களுக்கும் ராகவனின் தந்தைக்கும் அதிகார போட்டியும் பகைமையும் அக்காலத்தில் இருந்தது.

        alxjohn62@yahoo.com

        • mamani says:
          16 years ago

          சின்னையா மாஸ்ரருக்கும் வண. பிதா மாம்பழம் அவர்களுக்கும் ஏதாவது பிரச்சனை இருந்ததா என்பது எனக்கு தெரியாது. அப்படி பிரச்சனை இருந்திருந்தாலும் ஒரு போராளிக்கு உதவி செய்வதற்கு அந்த போராளியின் தோழனின் தந்தை தனது எதிரி என்று சிந்திக்ககூடிய சிறுபுத்தி உள்ளவரா மதிப்பிற்குரிய வண பிதா அவர்கள்?

          • Nathan Thurairajah says:
            16 years ago

            Father Devathasan, (Mambalam)

            He refused to help them, but Settu Kulam, school head teacher Mr. Rajah Master ,and VVT famous doctor helped Ragavan and Nirmalan. But, the father is acting as if he was a Tiger supporter. Mr. Rajah is former plot important leader Ramanathan’s father.

      • ANTONY says:
        16 years ago

        மாம்பழம் பாதிரியார் உயிருடன் இல்லை இந்துப்பெண்ணை? மணமுடித்து இரு பிள்ளைகளும் இருக்கின்றார்கள்.http://www.thedipaar.com/news/news.php?id=4463

        • kavithai says:
          16 years ago

          இவரது தம்பியார் ரொரண்ரோவில் ரி.வி.ஜ தொலைக் காட்சி மற்றும் வானொலிகளின் அதிபர் என அறிகிறேன்.

      • johnson says:
        16 years ago

        பாதிரியாராக இருந்து பல அட்டகாசம் செய்து தலைமை ஆசிரியர் சின்னயா மாஸ்ரரால் பாடாசாலையில் இருந்துகலைக்கப்பட்டு பின்னர் இந்து பெண்ணை திருமணம் செய்து புலிக்கு வால் பிடித்தவர் தான் முன்னாள் வண. பிதா மாம்பழம்.http://www.tamileelamnews.com/news/publish/tns_10629.shtml

        • செபமாலை says:
          16 years ago

          முன்னாள் வண. பிதா தேவதாசன் அ
          வர்கள் இந்து சாமிமார் போல வேடம் போடாமல் தனக்குப் பிடித்தவரை முறைப்படி மணம் செய்தவர். அவரின் மரணக்கிரிகைகளும் இந்து முறைப்படி நடந்தது இதில் விவகாரம் இல்லை ஆனால், தனது மதத்திற்க்காக தீவிரமாக செயற்பட்டவர் அதுவும் ஒரு பாதிரியார் திடீரென மாறியது ஆச்சரியம்.இவருக்கும் சின்னையா மாஸ்ரருக்கும் அதிகாரப் போட்டியேதும் இருக்கவில்லை.பாதர் தேவதாசன் தேவாலயத்திற்க்கு ஞாயிற்றுக்கிழமைகளில்நடக்கும் வழிபாட்டிற்க்கு சமூகமளிக்காத மாணவர்களின் விபரங்களைப் பதிவு செய்து பின்னர் அதனை அடம்பன் மகாவித்தியாலயத்திற்கு எடுத்துச்சென்று மாணவர்களுக்கு பிரம்படி கொடுப்பதுண்டு.இது காலங்காலமாக நடந்துவந்தது. ஆனால் சின்னையா மாஸ்ரர் அதிபராக பொறுப்பேற்ற பின்னர் இதனை அனுமதிக்கவில்லை.இதனால்த்தான் மனஸ்தாபம் ஏற்பட்டது என நினைக்கின்றேன்.மற்றப்படி மாம்பழம் பாதிரியார் அப்படியொன்றும் அட்டகாசம் செய்யவில்லை.விடுதலைப்புலிகள் இயக்கத்திற்க்கு மன்னாரில் இருந்து பல படித்த வசதிபடைத்த இளைஞர்கள் இணைந்ததிற்கு காரணமாகவிருந்தவர். புலியின் வாலைப்பிடிக்கவேண்டிய அவசியம் அவரிற்கு இருக்கவில்லை.அடம்பனிலும் அயற்க்கிராமங்களிலும் மிகவும் பிரபல்யம் பெற்றிருந்தார்.

  14. Vadivelu says:
    16 years ago

    “இதற்கு பஸ்தியாம்பிள்ளை சம்மதம் தெரிவிக்கவே நாகராஜா உமா மகேஸ்வரன் வீட்டினுள் சென்று, வீட்டின் பின்பகுதியால் தப்பியோடிவிடுகிறார். ”
    Tamil cinema copied this scene from our ltte guys 🙂 so funny

  15. Jey says:
    16 years ago

    ஐயர் எப்பொது பதில் தருவார்?

  16. xxxxxx says:
    16 years ago

    1974 பங்குனி கண்ணாடி பத்மநாதன் கொல்லப்பட்டாரா?
    பற்றிக் என்ற பற்குணத்தை 1979 ஆண்டு படுக்கையில் தூங்குவது போல நடித்து பிரபா படுக்கையில் வைத்து கொலை செய்தாரா?1978 மட்டுநகரில் கழுகுப்படையைச் சேர்ந்த உடும்பிராய் குலசேகரன் கொலைசெய்யப்பட்டு ஏரியில் வீசப்பட்டது பற்றி சரியான தகவல் எழுதமுடியுமா? குட்டிமணி தங்கத்துரை போன்றவர்கள் கைதுசெய்யப்பட்ட வேலையில் பிரபா ரொலோவில் இருந்தாரா? பிரபா இருந்தார் எனில் சிறிசபா எவ்வாறு தலைவராக நியமிக்கப்பட்டார்??

  17. Gnanam says:
    16 years ago

    ஐயா இதுவரை வந்துள்ள தங்கள் பதிவில், வல்வெட்டி துறை போராளிகளின் பங்கக்ளிப்புகளை ஏன் எழுதவில்லை? ஆரம்பகாலத்திலிருந்து, இன்றுவரை நம்மஊர் மக்களின் பங்களுப்பு சொல்லில் அடங்க்கா.

    • mamani says:
      16 years ago

      பிரபா, மாத்தையா, குட்டிமணி, பண்டிதர் வ.வெ. துறைதானே?

      • Nathan Thurairajah says:
        16 years ago

        Panditar from Kambarmalai PANDITAR is the first ltte inkambarmalai 2nd is Panchalingam

  18. Thanikasalam.Sevlanathan says:
    16 years ago

    PROFILE
    Prabhakaran’s timekeeping

    Memories of a much-mythologised rebel leader by a former LTTE fighter.

    By Ragavan

    “Those who bear arms acquire and wield an extreme measure of power. We believe that if this power is abused, it will inevitably lead to dictatorship.”
    – Prabhakaran, from an interview with N Ram, 1986

    The LTTE’s supreme leader and commander, Velupillai Prabhakaran, along with his wife, children and the entire leadership of the LTTE, have been completely wiped out by the Sri Lankan military. The LTTE began as a guerrilla unit during the 1970s; at its peak, it controlled vast territory and built up a conventional army consisting of an army, navy and air force. The group won many battles against the Sri Lankan Army, crushed all Tamil opposition groups functioning in Sri Lanka, and was seen as a deadly, brutal and disciplined organisation. In recent years, however, the myth of the rebels’ invincibility began to crumble, and within two years they were cornered into a small area, where they were brutally eliminated by the Sri Lankan armed forces.

    Since the LTTE came into existence in 1976, more than 27,000 of its members have perished. The brutal war resulted in the loss of tens of thousands of civilian lives, and hundreds of thousands more displaced. Many civilians were disabled due to bombing and shelling. Although I blame the LTTE leadership for their suicidal politics, militarism and intolerance of criticism, I believe that the root cause of the problem was the Sri Lankan state’s failure to accommodate minorities within the democratic constitutional framework of Sri Lanka. The LTTE was a by-product of the majoritarian political landscape of Sri Lanka. However, the internal dynamics within the LTTE later developed as an authoritarian structure, and loyalty to the leader was the foremost precondition. The leader and the organisation had become synonymous.

    Prabhakaran was not a natural born killer with evil qualities. It was the social and political conditions that created a hierarchical organisation and, in that juncture, Prabhakaran took a lead role. Yet in this process, he became a charismatic leader and a cult figure, and this in turn changed his personality. He began to believe that he was the supreme controller of the entire Tamil population, and had the right to punish or kill those who disobeyed his orders. He was there to decide what was right and wrong, what was good and evil. He was there to liberate the Tamil nation – and he would carry out his duty until the nation was liberated. All those who opposed his methods, meanwhile, he believed should be eliminated. It was this mindset that led to the escalation and continuation of the nightmare of civil war and untold suffering for a people and a country.

    New tiger
    It was 1974, and I was 18 years old. As a Jaffna Tamil middle-class youth and immature idealist, I was influenced by the Tamil nationalist ideology and armed struggle, and was able to make contacts with a few of those who were already committed to this approach. One day, a short young man came to visit me with another man named Chetti, who briefly introduced the first man as Thambi, which means younger brother. That was my first encounter with Prabhakaran. I did not meet him again for a while, during which time Chetti had been caught and detained by the police.

    On 27 July 1975, Jaffna Mayor Alfred Duraiappa was shot and killed. Duraiappa was portrayed as a traitor to the Tamil cause by the TULF, a Tamil political party, because he had taken the side of the Sri Lankan government in the escalating unrest. I later came to know that Duraiappa had been assassinated by Prabhakaran. At that time, I was happy that a ‘traitor’ had been eliminated. After this incident, around August 1975, Prabhakaran came to my grandmother’s house, in my village. (I would normally stay at my grandmother’s house, as she was very fond of me.) At that time, I knew that he was a ‘wanted’ person, but Prabhakaran said that he wished to stay at my grandmother’s house for a while. Without any hesitation, I said yes.

    During that time I was tutoring students, which offered the pretext by which I could ask Prabhakaran to stay at my grandmother’s house. My father was a very strict man, and he noticed that while other students went home, this young man continued to stay at my grandmother’s house. I was more scared of my father than of the police. Eventually, he called to ask why this boy was staying there. I told him that he had some problems with his parents, to which he responded: “You should not allow him to stay, as it is not in the interests of that boy. I will take him to his parents’ house.” I had no choice but to tell my father that he was a wanted man. My father was taken aback, and told me that if he was a wanted man, we needed to inform the police. I explained that this young man was a liberation fighter, fighting for the Tamil cause. I suddenly became courageous, and told my father, “One day the same thing could happen to your son, and then what would be your reaction?” My father had no choice but to accept my argument. This was the beginning of my contact with Prabhakaran and a few members of what was then called the Tamil New Tigers. This was eventually changed to the Liberation Tigers of Tamil Eelam on 5 May 1976.

    I was inspired by Prabhakaran’s dedication and discipline. He was always thinking of action, and he was a meticulous planner, efficient organiser and a perfectionist. He was extremely careful about his own safety and that of others. His knowledge was also very wide-ranging, even though his formal education was minimal (he had failed the GCE examinations on two attempts). He would talk for hours as to how we could build up an underground network, citing examples of Bhagat Singh and other Indian liberation fighters such as Netaji. He would say that the armed struggle was the only way forward, and that there was no point in engaging in peaceful protests. He read Captain Clive, who came as a clerk in the East India Company and was eventually able to lead the British army. He would talk about the Irish struggle. He was also fond of Tamil historical novels, which romanticised the valour of Tamil kings and warriors. He would talk about Israel, and how the Jews were able to establish a powerful country.

    As he talked about such things he would also say that we were oppressed by the Sinhalese rulers, because the Tamils did not have a homeland. Our duty, he said, was to fight and liberate our country, and that for this reason we needed to give up family ties, and not indulge in love affairs or marriage. All of these desires, Prabhakaran told us, would be a hindrance to the cause. If you were prepared to fight for the country, he would say, you needed to have total dedication, which such desires would only undermine.

    A few years later, the two of us went to see an English movie. It was a World War II story, in which the mission was to assassinate a Nazi commander in Czechoslovakia. A Czech family provided a safe house for the young men on the mission. After the commander was assassinated, the Nazis managed to capture the man of this family, and told him that if he cooperated with them, his family would be safe. The man decided to tell the truth. At that point, Prabhakaran turned to me and said, “This is why I insisted that family life is not suitable for the cause.”

    Paranoia and philosophy
    Prabhakaran’s timekeeping was perfect, though there was a reason for this. If another did not turn up at the arranged time, he would not wait, because he would sense some sort of danger. He would ask people to come to a station or bus stop, but he would not be there; instead, he would be waiting a short distance away, to see whether the individual had been followed. If he had the slightest doubt, he would simply leave. Due to his security-conscious mind, he was able to dodge the police, military and other dangers for more than 36 years. He became a wanted man in 1972, at which point he destroyed all photographs of himself save for his school identity card; he did not allow anyone to take his photo until 1982. He would leave no trace of himself; if he received a letter from another member, he would read and then burn the letter. I suppose he learned the skill of survival through the experiences of others who were caught due to their lack of security.

    Prabhakaran’s ideology was derived from the Bhagavad Gita, the Indian national struggle, the history of the ancient Tamil kingdoms, the situation surrounding Jewish statehood and Adolph Hitler’s authoritarianism. His motto was, ‘Do your duty, but do not expect any benefit from it.’ He also believed that the soul is immortal, whereas the physical body is temporal. Any ‘death’ on the battlefield would thus involve only detaching the body, while the soul remains eternal. He believed that in order to fight against evil and establish dharma, it is essential to eliminate one’s enemies. On one occasion, in 1976, Prabhakaran and another LTTE member assassinated a police intelligence officer who was accused of spying on Tamil youths. After the assassination, he cycled to one of the hideouts and, coincidently, a song from a Tamil film called Karna (a figure from the epic Mahabharata) was playing on the radio. This song was about the discourse between Arjuna and Krishna, which explained the notion of dharma and the right to kill the enemy. He was very excited, and felt that his actions were thus justified.

    He felt very strongly that the Tamil cause needed to be united behind one single organisation. His justification was that the Tamils’ ancient kingdoms were lost because the then kings of the Chera, Chola and Pandian kingdoms were not united. He therefore believed that all the other organisations should disband and should come together as one organisation. He also used the Darwinian concept of survival of the fittest to show how we should never allow other related organisations to grow in strength.

    In the late 1970s, the organisation was tiny, and consisted of just 15 to 20 young men. During this time, Prabhakaran was influential in decision-making and organising. Although a central committee was selected, he continued to be the charismatic leader, and without his approval, no decision was made. Although he was not an authoritarian figure at that time, due to his dedication and experience, others inevitably looked for his approval. I also remember that he was very caring of the organisation’s members at that time, and looked after them well. If someone was ill, he would make sure that person was looked after properly, and he would become angry if anyone neglected a sick member. However, if the same person whom he looked after crossed some line in the future, he would not hesitate to kill him.

    In the early days, the organisation carried out attacks on police intelligence officers and those portrayed as traitors. We also looted banks, and used the money to buy weapons and to organise camps. Each rupee a member spent was accounted for. Prabhakaran was also required to submit his expenses, and there was thus a strict equality maintained with regard to personal expenditure. The food cooked at the camps was the same for everyone. On one item, however, this equality was not maintained: the allocation of bullets. Prabhakaran would expend several rounds during practice, but allocated the rest of us only a few. His justification was that because he was wanted by the police, he had to practice more than the rest of us. At that time, he always carried a Smith & Wesson .38 revolver; it was his pet. Other than this, we had few weapons at that time, just some shotguns and three or four revolvers. Yet he would treat these weapons as sacred items – cleaning and oiling them every day, and making sure that they stayed in working order.

    On such issues, Prabhakaran was puritanical, and believed the organisation to be sacred. Whoever defied its rules was seen as impure, and therefore needed to be kicked out – or killed, if he resisted. When the LTTE chairman, Umamaheswaran, was found to have been involved in a sexual relationship with a woman cadre, Prabhakaran became furious, and accused them both of having damaged the organisation’s sacredness. They were both forced to leave.

    One-man leadership
    In 1980, there was a split in the organisation, as a majority of the members had begun criticising Prabhakaran for being a dictator, particularly due to his alleged involvement in the killing of two cadres. His critics said that he needed to be removed from the central committee, and that the organisation should be reformed with democratic principles. Pure militarism should not be welcomed, they continued, and his methods were wrong; instead, what needed to happen was the organisation’s leadership needed to go to the Tamil people, to hear what they had to say before taking any military action. Prabhakaran was hurt by this criticism, but refused to accept that he had made even a single mistake. As a result, the organisation split into two factions, and a majority of those who left later founded the People’s Liberation Organisation of Tamil Eelam (PLOTE).

    Prabhakaran was very angry and disappointed at this turn of events, and accused those who left of having stabbed him in the back. He claimed there was no point in having a central committee, and instead wanted to be the supreme leader of the organisation. Many of the members, including myself, refused to accept this proposal, and he instead decided to leave. We tried to persuade him to reconsider, but he was adamant, saying that he would not agree to anything but a one-man leadership. Thereafter, he went to stay at his uncle’s house, where he met with two leaders of another militant group called the Tamil Eelam Liberation Organisation (TELO), Thangathurai and Kuttimani. (These two were later massacred in the Wellikada Prison massacre of July 1983.) Both were from Prabhakaran’s village, and they knew him well. Prabhakaran subsequently agreed to work for them under Thangathurai’s leadership, and after a while he managed to convince the other LTTE members to join him.

    After Kuttimani and Thangathurai were caught by the Sri Lankan Army in 1981, Prabhakaran was able to re-emerge as the group’s supreme leader. He refused to accept pluralism and difference of opinion, and saw those as a hindrance to the cause. He mercilessly ordered that opponents be killed, and continued to have loyal followers who carried out his orders without any question or hesitation. It was after Kuttimani and Thangathurai were caught, tortured and forced to reveal information to the security forces, that Prabhakaran introduced the suicidal cyanide capsule, which became the symbol of the LTTE’s dedication.

    After the July 1983 riots and the mushrooming of other Tamil militant groups, the Indian state provided training and support to the Tamil militant groups, including the LTTE. I left and re-joined the LTTE a few times during the early 1980s as a result of the LTTE’s structure and the urgencies of the situation. Eventually, however, I left the organisation in 1984, as the internal repression within the LTTE had become intolerable. The rest is history.
    THANKS -HIMALSUTHAsiaN

    • JAMES FEREDRIC says:
      16 years ago

      /The chandiyan(VIRUMANDI?) and his followers took away all the belongings of the Dalits. It was a long time before they could return and resettle. No one challenged that eviction and this had a lasting impact on me, although I was from a Vellala middle class family./–RAGAVAN member of Anti-Liberation FOX of caste system.
      /He believed that in order to fight against evil and establish dharma, it is essential to eliminate one’s enemies./– RAGAVAN.
      —- THIS IS NOT SAID IN BHAGAVAD GITA!.It is catholic interpretation of HiNDUTUVA!.
      If any body research,howmuch Lands his family members “gained” during that feud between the “chandiyan and Dalits”,in his village pretending like Gandhist!.Also must take the statistics of how many of his nearest relatives starting from his Family,perished for the last 30 years,in this so called “PERINAVATHA PADUKOLAIKAL?” and how much “PULAMPEYARNTHA THAMIZHARKAL?”.This analyse may reveal who is behind Mulliyavaaikkal and why they support “SAIVA’s” backing of “DALITH? NANDAN” with the help of Naxalites? “Makkal kalai illakiya kazhagam” and N.G.O.’s behind it!.

  19. thanilmaran says:
    16 years ago

    மகா நாடுகள் வைத்து தங்களூக்கு சால்வை போட்டு தங்களூக்கு தாங்கலே பட்டங்கள் தந்து போஉஸ் கொடுத்து தங்கலையே ஏமாற்றூம் மனிதரிடையே மரணத்துள் வாழ்ந்து மரணீத்த போராளீகள் வரலாறூகலே.

  20. எதிர்வு says:
    16 years ago

    அய்யர்,

    சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட புலிகளுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு,
    நன்கு பயன்படுத்தப்பட்ட ராகவனின் வாக்குமூலம் (Mein Kampf பற்றியது) ,
    தயான் ஜெயதிலகவினால்(அன்றைய இலங்கைக்கான ஐ.நா.துதுவர் ) அணிசேரா நாடுகளை தம்வசப்படுத்த,
    புலிகளுக்கெதிராக பாவிக்கப்பட்ட பிரச்சாரம்.

    தலைப்பு இப்படி இருந்தது.

    Prabhakaran inspired by Hitler…

    Prabha started “Tamil new Tigers’’ with me…
    http://www.lankamission.org/content/view/1630/49/

    நீங்களும் தொடர்ந்து இவ்வாறாக எழுதியுள்ளீர்கள்.

    ‘சுபாஸ் சந்திரபோஸ், வாஞ்சிநாதன் போன்றவர்களை வாசிக்கும் இவர் அவர்கள் மீது மிகுந்த அனுதாபத்தைக் கொண்டிருந்தார்.
    தவிர ஹிட்லர் மீது கூட பிரபாகரன் மிகுந்த மதிப்பு வைத்திருந்தார்.”

    இந்தக் கருத்தானது புலிகளின் சர்வதேச எதிர்ப்பை சம்பாதிக்க பெரும் பங்கு வகித்தது.

    இதற்கு உங்களது ஆதாரம் என்ன?

    அப்போது Mein Kampf புத்தகம் இருந்ததா?

    யாரால் தம்பி’க்கு வாசித்து காட்டப்பட்டது?

    அல்லது யாரால் மொழி பெயர்க்கப்பட்டது?

    இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குற்றச் சாட்டை ஐயம் திரிபற நிருபியுங்கள்.

    அல்லது கதிர்காமர்,நிர்மலா,ராகவன் முக் கூட்டுச் சதியின் எச்ச சொச்சம் என் எழுத்து என ஒத்துக் கொள்ளுங்கள்.

    இது உங்களது வரலாற்றுப் பணி மட்டுமல்ல,

    உங்கள் எழுத்துகளின் நம்பகத் தன்மை கூட.

    • Garammasala says:
      16 years ago

      (தமிழகத்தின் திராவிட இயக்கத்தோர் சிலரின் எழுத்துக்களிற் கூட ஒரு காலத்தில் ஹிற்லர் மீது அபிமானம் காணப்பட்டது. அது வேறு விடயம்)

      நிச்சயமாக பிரபாகரன் கம்யூனிச அனுதாபியல்ல.
      முதலாளிய ஜனநாயகத்திலும் பெரிய ஈடுபாடுடையவரல்ல.
      ராகவன் சொன்னதை வைத்து முடிவுகட்கு வர அவசியமில்லை.
      ஆனால் பிரபாகரன் உலகின் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பேசியவரல்ல.
      அவ் வகையில் அவர் “தந்தை” செல்வாவுக்கும் “அண்ணன்” அமிருக்கும் ஏற்ற வாரிசு தான்.

      • Soorya says:
        16 years ago

        உலகின் எந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பிரபாகரன் போராடவில்லை என்று சொல்லுங்க பார்க்கலாம். பிரபாகரன் இலங்கைத் தமழருக்காகத்தான் போராட வெளிக்கிட்டார் என்று கேள்விப்பட்டேன். ராகவன் தமிழரின் பெரும் அழிவிற்கு தனது முக்கிய பங்கை ஆற்றியுள்ளார் என்பது மட்டும் உண்மை.

        • aathavan says:
          16 years ago

          இந்த முக்கிய பங்கை ஒரு 25 வருசத்திற்கு முன்னாடி செய்திருக்கக்கூடாதா? எத்தனை நம் உறவுகள் உயிருடன் மின்ச்சியிருக்கும்.எத்தனை நம் உறவுகள் கை காலுடன் மின்ச்சியிருக்கும். ராஜிவும் தப்பியிருப்பார் இந்தியாவுடன் பகைமை ஏற்பட்டிருக்காது.வடக்கு கிழக்கு பகைமை அதி தீவிரமடைந்திராது.சொல்லிக்கொண்டே போகலாம்………………

          • சருகு says:
            16 years ago

            25 வருஷத்துக்கு முன்னர் செய்திருந்தா..
            இந்தியா பிளக்கை பிடுங்கி சுவிச்சையும் நிப்பாட்டிப்பாத்தது.சுவிச்சை நிப்பாட்ட எல்லா இயக்கத்தினதும் தமிழீழ இலட்சியம் அணைந்து போனது.பிரபாகரனுடைய பிளக் மத்திரம் தன்னிடம் இல்லை என்பது தெரிந்தது.
            ஈழப்போராட்டம் இரத்தக்களரியானது இந்தியாவின் பிளக்/சுவிச் ஆசையினால்தான்.
            இன்னும் சுவிச் இந்தியாவின் கைக்கு போகவில்லை.
            என்ன பிரபாகரன் என்றொருவர் இல்லையாயிருந்தால்  

             வெளினாட்டிலை இருந்து பின்னூட்டம் போட்டுக்க்கொண்டிருக்கமாட்டீர்கள்.
            ஊரிலை இருந்து வெத்திலை போட்டுக்கொண்டு
            தோட்டத்திலை பொயிலை போடுறதா வெங்காயம் போடுறதா என்று பேசிக்கொண்டிருப்பீர்கள்.
            உமாமகேஸ்வரன், சிறீ சபாரத்தினம் டக்ளஸ்மாணிக்கதாசன் இப்படி எல்லொருக்கும் பொயிலை வித்த காசிலை கொஞ்சம், கொஞ்சம் கொடுக்கவேண்டியிருந்திருக்கும்.

      • Anj says:
        16 years ago

        விடிய விடிய ராமர் கதை, விடிஞ்சு பார்த்தல் ராமருக்கு சீதை என்ன முறை?

      • எதிர்வு says:
        16 years ago

        கரம் மசாலாவிற்கு!

        உங்களுக்கு வார்த்தைகளைக் கோர்க்கத் தெரிந்த அளவிற்கு,அதனதன் அர்த்தம் புரியாது நிற்கிறீர்கள்.வார்த்தைப் பிரயோகங்கள் என்பது உரிய காலத்தில் அது விளைவிக்கின்ற தாக்கங்களைப் பொறுத்தது.புலிகளை அழிக்கின்றோம் என்று ஒரு இனத்தையே படுகுழியில் தள்ளியவர்கள்,தம்மிடம் துப்பாக்கி இல்லாததால்,துப்பலால் படுகொலைக்கு தயாராகி விட்டார்கள்.

        அடிமைகளே!
        எழுந்து வருக. உங்களுக்கான வானம், துப்பல்களால் வர்ணஜாலம் காட்டுகிறது.

    • Thangathurai says:
      16 years ago

      நீங்கள் எவ்வாறு உறுதிப்படுத்துகிறீர்கள் இந்தப்பேட்டி அணிசேரா நாடுகிளிடம் பிரசாரத்திற்காக பயன்படுத்தப்பட்டதென்பதனை. தவிர இந்தப்பேட்டி தவறானதாக இருந்தாலும் இந்தப்பேட்டி மட்டும் போதிய காரணமா இந்தப்பெரிய நாடுகள் எல்லாம் பேரினவாத இனப்படுகொலைக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு. அவர்களுக்கு அப்பாவி மக்களைக் காப்பாற்ற வேண்டிய தார்மீகக் கடமை என்பது இல்லையா. உலக மனித வரலாற்றில் இலங்கை இனப்படுகொலை கறை படிந்த அத்தியாயம். பல நாடுகளின் கவுரவங்கள் குழி தோண்டி புதைக்கப்பட்ட இடம் முள்ளிவாய்க்கால்.

    • Nathan Thurairajah says:
      16 years ago

      Mr. Athirvu,

      Mein Kampf book or any doubt about this matter. If you need to know about this why don’t you just go to Ragavan’s low office in London, England and talk to him face to face? Be a man, don’t be a Mickey Mouse! Prove that you’re a tamil man or ?????????????????????????????????????????????

      • எதிர்வு says:
        16 years ago

        Nathan Thurairajah!

        சுண்டெலி(Mickey Mouse) அற்று,

        மனிதனாவதற்கு(man) மட்டுமல்ல,

        அதிலும் தமிழ் மனிதனாக(tamil man ) நிருபிக்க(Prove) ,
        ராகவனின் கிழ்த்தரமான (low office )பணியகத்திற்கு சென்று,
        முகத்திற்கு(face to face) நேரே கேட்டு அறிய வேண்டுமோ?

        ராகவனால் தமிழ் மனிதனாக நிருபிக்கப்பட்ட நாதா!

        உன் கையெழுத்துக்கு இப்படி ஒரு தலை எழுத்தா?

        • JAMES FRIEDRICH says:
          16 years ago

          பலர் தவறாக புரிந்துள்ள ஒன்றின் சிறு விளக்கம்.”தரப்படுதல் பிரச்சனையினாலேயே” இலங்கைத் தமிழர்கள்,குறிப்பாக “ராகவன் போன்ற சமூகத்தினர்” தமிழீழ கோறிக்கைக்கு தோபம் போட்டனர்.ஆகையல் “தமிழ்நாட்டிற்குள்” இலங்கைத் தமிழர் வரக்க்கூடாது,அவர்கள் அங்கு சொத்துக்கள் வாங்கக் கூடாது என்று “பொறாமைப் போல்”,”தரப்படுதல் போல்” கூறுவது சரியில்லை.ஆனால் இது தமிழ்நாட்டிற்குள் நடக்கும் பிரத்தியேக பிரச்சனைகளில் சேர்ந்து இன்னும் ஒரு களேபரம்,என்ற கோணத்தில்தான் எதிர்க்கப்படுகிறது.தமிழ் நாட்டுக் காரர்களே சென்னையில் சொத்தை வைத்துவிட்டு,வெளிநாட்டில் சிறிது கலம் வாழ்ந்தாலே,சொந்தக்காரர்களே பிடுங்கிக் கொள்கிறார்கள் (தற்போது யாழ்ப்பாணத்தில் நடப்பது மாதிரி).இந்த சொத்துக்களை பாதுகாக்க,சென்னையில் “மாஃபியாக்களை” பணம் கொடுத்து “மெய்ண்டேய்ன்” செய்ய வேண்டியுள்ளது.இங்கேயே அரசியல் என்பது துவங்குகிறது.எந்தவித “இனப்பிரச்சனைக்கான தீர்வு அரசியலும்” இல்லமல்,வெறும் சொத்தை பாதுகாக்க மட்டும்,ஒரு அரசியலை இந்திய தரப்புடன் நிர்வகித்தால்,அதன் பரிணாமம் வேறு மாதிரி உருவாகும்.இதை “ஆராய” “இலங்கைத் தமிழரை” வைத்து குழப்பிக் கொள்ளாமல்,”மலையாளிகளை” வைத்து ஆரய்வது நல்லது.சொத்துப் பதுகாக்கும் “ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள்” எல்லோருக்கும் ஒரே மாதிரியாகத்தான் செயல்படுகிறார்கள்.இதில் மலையாளிகள் முன்னோடி!.சென்னையிலும் திருச்சியிலும் மட்டுமே இந்தப் பிரச்சனை. சென்னையை சுற்றியுள்ள நில உடைமையாலர்களில்,”முதலியர்கள்”(பச்சையப்பன்,எத்திராஜ்,ஏ.ஸி.சண்முகம்..)போன்றவர்கள் முக்கியமானவர்கள் என்றாலும்,அவர்களின் பாரிய சொத்துக்களும் அவர்களின் “டிரஸ்டுக்களை” நிர்வகிப்பவர்களால்,”பிளாட் போட்டு” விற்கப்படுகின்றன.அடுத்து பாதிக்கப்பட்டது முதலியார்,மற்றும் தெலுங்கு சமூக நடுத்தர விவசாயிகள்.1970 களில்,மத்திய கிழக்குகளுக்கு சென்று பொருளீட்டியவர்களின் பணத்தால்,மனை விலை ஏறியபோது,நிலங்களை விற்றுவிட்டு மேலும் உள்ளார்ந்த கிராமங்களுக்கு இடம் பெயர்ந்தனர்.சமூக செல்வாக்கும்,சிறிது படித்த இந்திய வேலை வாய்ப்புகளில் உள்ளவர்களை விட,படிக்காத மாடுமாதிரி கைத்தொழில் வெளிநாடு வேலைகளில்(எக்சேஞ் ரேட்டால்) அதிக பொருளீட்டி,தங்கள் வாழ்விடங்களையே அப்புரப்படுத்தும் ,”தோடுடைய செவியன்களை” கண்டு ஒரு “சமூக அதிர்ச்சியை” “பொறாமை என்று” கொள்ளளாமா?.நேரம் போதாது…… இன்னும் விரிவாக …சரியான ஆதாரங்களுடன் ஆராயப்பட வேண்டு…….இதை தீர்க்கப்படாத “வன்முறை அரசியலுடன்”,”சைவ – வைணவ?!!” முரண்பாடுகளாக கலக்கும் நிலை ஏற்ப்படுவதப் பற்றியும்…..நோக்க வேண்டும்……..”கேரளாவில்” இப்படிதான்,வெளிநாடு சென்று(1970 கள்) பொருளீட்டியவர்களின் குழந்தைகள் காசை வைத்து தெருவில் விளையாட அதை பார்த்து ஏங்கிய “கேரள கிராமங்களிலிருந்து” திருவனந்தப்புரம்,கொச்சி,போன்ற நகரங்களுக்கு அரசு உத்தியோகத்தின் “ரிட்டைர்ட் பணத்தில்” வீடு வாங்கிய நடுத்தரவர்கத்தினர்,பணம் கொஞ்சம் கூட கிடைத்தவுடன் அதை விற்று விட்டு தங்கள் குக்கிராமங்களுக்கே உள்வாங்கிவிட்டனர்!.கேராளவில்தான், இந்தியாவிலேயே!,”கிராமங்களுக்கும், நகரங்களுக்கும்” “பொருளாதார ரீதியில்” அதிக வித்தியாசம்!.

        • Nathan Thurairajah says:
          16 years ago

          You are real mickey mouse

          • JAMES FRIEDRICH says:
            16 years ago

            இந்த கட்டுரை எழுதும் “ஐயர்” என்பவருக்கு!, “இந்தியாவுடனான ஈழத்தமிழரின் முரண்படு எந்தப் புள்ளியில் எழுந்தது என்பதை விரிவாக விளக்க வேண்டும்.மேலும் கீழ்காணும் வரிகளில்,”கப்பல் ஓட்டிய தமிழர்கள் இறுதியில் கப்பலிற்காக காத்திருக்க வைக்கப்பட்டு மோசமாக அழிக்கப்பட்டமைக்கு புலிகளிற்கு நம்பிக்கையான ஒரு தரப்பும் காரணமாக இருந்திருக்க வேண்டும். அது எந்த நாடு ? எந்தக் கழகம்? எந்த முகமற்ற வில்லன்? போன்றவையே இன்று நம் முன் எழுந்து நிற்கும் கேள்விகளாகும்.”வரும் “எந்தக் கழகம்?” என்ற கேள்விக்கு,ஜூன் 2010 ல் நடைபெறும்,”உலக? செந்தமிழ்? ஆராய்ச்சி மாநட்டில்”,மாமனிதர்.கார்த்திகேசு சிவத்தம்பியும்,தமிழக முதல்வர் கலைஞர் மு கருணாநிதியும்,”அண்ணா தி.மு.கழகம்தான்” அது! என்று ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பித்தார்கள் என்றால்,”அதற்கான தகுந்த ஆதாரத்தை முன் வைக்க வேண்டும்!”.
            /பல்லாயிரக் கணக்கான போராளிகளின் தியாகங்களையும் வீர தீரங்களையும் யாரும் கொச்சைப்படுத்த இயலாது. ஆனால் அதே தரப்பில் வெளி நாடுகளில் நிதி சேகரிப்புத் துறையினரது மோசடிகளையும், அரசியல் துறையில் செயற்பட்டவர்கள் அவர்களை கப்பலிற்காக கடற்கரையில் காக்க வைத்து மோதலின்றி மொத்தமாக அழிபட வைத்துள்ளமையை யாரால் மன்னிக்க முடியும்?

            இதுவே இறுதி நேரத்தில் போராளிகள் பலரும் தமது உறவினரிற்கு தெரிவித்த கருத்தாக இருக்கிறது. காட்டுக்குள் இருந்த நாங்கள் ஏன் தான் கடற்கரைக்கு போகும்படி கட்டளையிடப் பட்டோமோ தெரியாது என்றும் அவர்கள் அங்கலாய்த்திருப்பதாகவும் தெரிகிறது.யாருமே எதிர்பாராத மிகப் பெரிய மோசடியும் ஏமாற்றும் அங்கே இறுதி நேரத்தில் அரங்கேற்றப்படடுள்ளது.

            எனவே ஆயுதப் போராட்டமானது மற்றத் துறைகளின் சமாந்தர வளரச்சியும் பக்குவமும் இன்றி துரிதமாக வளர்ந்திருந்திருக்கிறது. குறிப்பாக புலிகளின் அரசியற் துறை வெளிநாடுகளில் மிகவும் பேதமைமிக்கதாக இருந்திருக்கிறது புலனாகிறது.அன்று ஆனந்தபுரத்தில் தீபன், விதுஜா, கீர்த்தி , நாகேஷ் , குட்டி, கடாபி , அமுதன் , மணிவண்ணன் எனப் பலரும் வீழ்த்தப்பட்டது புலிகள் தரப்பின் மோசமான வீழச்சியாகும். இத்துடன் வழி நடாத்தும் ஆற்றலை புலிகள் பெருமளவு இழந்து விட்டிருந்தனர். இந்த பின்னடைவிற்கான காரணம் காட்டிக் கொடுப்பா அல்லது செய்மதி அவதானிப்பா என்று தெரியவில்லை.

            பின்னர் கடற்கரைக்கு புலிப் படைகளைப் போகும்படி கட்டளை பிறப்பிக்கப்பட்டமை தெரியவருகின்றது. எல்லோரையும் ஏற்றிச் செல்ல ஒரு கப்பல் வரும் போன்ற ஒரு நிலையை நம்பி அவர்கள் அனைவரும் சென்றிருக்கிறார்கள். காட்டிற்குள் தோன்றி, காட்டிற்குள் வளர்ந்து, காட்டிற்குள்ளே பாதுகாப்பாக இருந்த புலிகளை பலிக்களமாகிய கடற்கரைக்கு கொண்டு வந்தது யார்? அதில் புலிகள் தரப்பை சரணடையத் தூண்டியவர்கள் யார்? அந்தத் தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்படவில்லையா? அப்படியாயின் அவை ஏன் வெளியிடப்படவில்லை? .புலிகளின் அழிக்க இயலாத பல படையணிகளில் எதுவும் மோதலில் ஈடுபடாத நிலையில் குறிப்பாக கடற்புலிகள் அணிகள் அலம்பலில் பின்னடிக்கப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டமை அவதானிப்பிற்குரியது. இவற்றை நிட்சயம் வேண்டிய தகவலின்றியோ அன்றில் நீண்ட நாள் திட்டம் இன்றியோ செய்திருக்க இயலாது.கப்பல் ஓட்டிய தமிழர்கள் இறுதியில் கப்பலிற்காக காத்திருக்க வைக்கப்பட்டு மோசமாக அழிக்கப்பட்டமைக்கு புலிகளிற்கு நம்பிக்கையான ஒரு தரப்பும் காரணமாக இருந்திருக்க வேண்டும். அது எந்த நாடு ? எந்தக் கழகம்? எந்த முகமற்ற வில்லன்? போன்றவையே இன்று நம் முன் எழுந்து நிற்கும் கேள்விகளாகும். /— கப்பலிற்காக காக்க வைக்கப்பட்டு மோதலின்றி அழிக்கப்பட்ட போராட்டம் : பூநகரான் – கனடா.

        • Allaveddy SRI says:
          16 years ago

          எதிர்வுஅவர்களே! பாராளுமன்றத்தில் Lower House,Upper House என்று தாங்க்கள் அறிந்திருக்கவிலையா ? நீதி மன்றத்தில் Upper courts , Lower Courts என்று அறிந்திருக்கவிலையா? இவற்றின் அர்த்தம் மேல் தரம் கீழ்த்தரம் என்பதா??? ராகவனுக்கும் தங்களுக்கும் தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல் பிரச்சனை என்றால் அதனை தனிப்பட்ட முறையில் பைசல் செய்து கொள்வது நல்லது.அரசியல் குற்றச்சாட்டுக்கள் இருக்குமாயின் தாராளமாக முன்னுக்கு நின்று ஆதாரத்துடன் எழுதுங்க்கள் வாசிக்க நாம தயார். இதைவிடுத்து பின்னுக்கு நின்று குரைக்கும் தங்க்கள் செயலானது சந்திரனைப்பார்த்து ………. ஒப்பானதாக தெரிகிறது.இனியொரு இணையதளம் இதுவரையில் எதிலும் பதியப்படாத வரலாற்று உண்மைகளை ஐயர் மூலம் வெளிக்கொணரும் இவ்வேளையில் இவை தேவை தானா? தனிப்பட்ட முறையிலோ ,அரசியல் ரீதியிலோ எதிர்கொள்ள முடியாத கையாலாகாத கோழையின் வேலை இது சீய் சீய்
          .மாணவப்பருவத்தில் வாத்தியார் அடித்தமைக்கு ஆத்திரத்தில் கக்குசு சுவரில் கிறுக்கும் சிறு பிள்ளைத்தனம்

        • Nathan Thurairajah says:
          16 years ago

          Why the dog stop barking, because he’s scared of the moon.
          Ijar when started number 11 i hope he will bark again.
          athiviu became a dog and after he became a mickey mouse, now is he a saruku or under the saruku.

    • Nathan Thurairajah says:
      16 years ago

      Mr. Mickey Mouse,

      You should go to some English classes and learn some proper English, then you’ll understand what other people are writing.

      • thamilmaran says:
        16 years ago

        தாய்மொழி தமிழே ஒழுங்காக எழுதப் பழகத் தெரியவில்லை ஆங்கில மொழிக்காக குரல் கொடுக்க வந்து விட்டீர்.முதலில் தாயைத் தெரிந்து கொள்ளூங்கள்.

  21. ரூபன் says:
    16 years ago

    இது ஐயாவுக்கு அல்ல!

    ‘ சூரியா ‘ என்கிற ஆங்கிலேயருக்கு – அந்நியருக்கு – (இது கொஞ்சம் ஓவராக இருக்கலாம்) ,

    ”பிரபாகரன் உலகிலுள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடினாரா…” கீ– கீ–.

    இந்திராகாந்தியின் கொலைக்கு அஞ்கலி செலுத்தி பிரபாகரன் எழுதிய கடடிதத்தை இவர் பார்க்கவேண்டும். இது அவர்களின் உத்தியோகபூர்வ ”விடுதலைப் புலிகளில்” உள்ளது.

    இதற்கு, பிறகு இந்த முகத்தை எங்கே வைப்பார்!!!

    • Soorya says:
      16 years ago

      எழுதியதை சரியாக விளங்காமல் ஏன் இந்த அவசரம்? பிரபாகரன் உலக மக்களுக்காக போராட வெளிக்கிடவில்லை. தமிழ் மக்களுக்காக மட்டும்தான் புறப்பட்டார். இந்திரா காந்திக்கு அஞ்சலி செலுத்தினால் என்ன செலுத்தாமல் விட்டாலென்ன. சூர்யா என்ற பெயர் அந்நியன் என்றால் சுப்பிரமணி என்று எடுத்துக்கொள்ளலாம். முகத்தை வைக்க எனக்கு பல இடம் இருக்கு, ஆனால் உங்கள் வீட்டுப்பக்கமில்லை.

      • ரூபன் says:
        16 years ago

        முக்கி ஓதிய மந்திரங்கள் போதும் கொஞ்சம் திரும்பிப் பாருங்கள்: ” Soorya
        Posted on 03/19/2010 at 7:02 pm
        உலகின் எந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பிரபாகரன் போராடவில்லை என்று சொல்லுங்க பார்க்கலாம். …”

        இதற்குத்தான் பதில்….

        இந்த விண்ணானங்கள் உமது பிரச்சினை, ”சுப்பிரமணி” எனக்குப் புரியவில்லை, சிலவேளை ‘சினிமா வசனமோ?’
        என்ன செய்ய எல்லாம் ‘சீனீ, மா’ (சினிமா) வாகவே இருக்கிறது…

        • Soorya (xyz) says:
          16 years ago

          விளங்கினால் எழுதிக் கிழிப்பார்கள், விளங்காவிட்டால் உமது பிரச்சினை என்பார்கள். பாவம். இது எனது புனைப் பெயரல்ல. சூர்யா எப்போது ஆங்கிலேயராக அல்லது அந்நியனாக மாறினார் என்பதுதான் எனக்கு விளங்கவில்லை. கருத்து எழுதுவதென்றால் கண்டதையும் எழுதக்கூடாது.

          • ரூபன் says:
            16 years ago

            சூரியா மன்னித்து விடுங்கள்…
            உங்களின் மனவலி என்னை வாட்டுகிறது.
            தமிழின் வார்த்தைகள் தவறுக்கு வழிவகுத்து விட்டது!
            தயவு செய்து மன்னிக்கவும்.

          • Soorya says:
            16 years ago

            நல்லது. பாதிகப்பட்டவனுக்குத்தான் தெரியும் இப்போது உங்களின் வார்த்தை எவ்வளவு இதமாக இருக்கிறதென்று. ரூபன் நீங்கள் வென்று விட்டீர்கள்.

    • Anj says:
      16 years ago

      வட்டுகோட்டைக்கு எப்படி போகலாம்?
      துட்டுக்கு எட்டு கொட்டப் பாக்கு
      புரிஞ்சால் சரி

      • ரூபன் says:
        16 years ago

        இது ‘பண்டிதமல்ல’ , இதற்கு விளக்கம் எழுத நான் பண்டிதனுமல்ல: விளங்காவிட்டால், தழிழ் மொழியின் சூத்திரத்தைப் பார்க்கவும்—

        • Anj says:
          16 years ago

          ஒப்பு கொண்டதுக்கு நன்றி.
          “படித்தால் மட்டும் போதுமா” படப் பாடல் மாதிரி இருக்கே.
          அது என்ன சூத்திரம் “திருவிளையாடல்” தருமியா

    • Anj says:
      16 years ago

      Naren & thurai

      ஊர் கிணத்தில் தண்ணி இறைக்கும் சூத்திரத்தில் கட்டப்படுபவை ஆள் இருந்தாலும் சுத்தும் இல்லாவிட்டாலும் சுத்தும்.
      பழக்க தோஷம். மாற்ற முடியுமா. சுத்திக்கொண்டே இருங்கோ ……………..

      • thurai says:
        16 years ago

        ஊரில் கள்வர் இருந்தாலென்ன இல்லாவிடாலென்னெ பொலிஸ் நிலையம்
        அவசியம்தானே.

        துரை

        • Anj says:
          16 years ago

          காகம் கனவிலும் ஏதோ தின்னுமாமே. அது என்ன?
          செய் தொழிலே தெய்வம்.
          மழையே பெய்யாத ஊரில் குடி இருந்தால் இப்படித்தான் ஆஹும்.
          புரிஞ்சுதா…… புரியல்லையா ……………

    • thamilmaran says:
      16 years ago

      சூர்யா, சுப்பிரமணீ எல்லாம் சமஸ்கிருதப் பெயர்கள்.நமது முருகக் கடவுளூக்கு வைக்கப்பட்ட பெயர்கள்.தமிழாலே வழிபட் நம்து வாழ்க்கையில் அன்னியம் நுழைந்து நாம் நம் ஆண்டவனுக்கே அன்னியமாய் போனொம். நல்லூர் முருகன் கோயிலில் எங்கள் திலிபன் உண்ணாவிரதம் இருந்தான் பொட்டு வைத்து மங்கலமாய் அவன் பயணம் தொடங்கியது.

      அமவாசைக்கும் அப்துல் காதருக்கும் தொடர்பு எப்படி இல்லையோ அவ்வாரே ஜேம்ஸ்ஸீற்கும் இருக்கமுடியாது.வர்ணாச்சிரமம் என்பதும் நமது சமய் நெறீக்கு இன்னொரு பெயர் கீதையின் வழியே என்ற ராகவன் கூற்றீலேயே குற்றமா?

  22. Manimaran says:
    16 years ago

    வந்த்தவரை வாழவைக்கும் பூமி தமிழகம் அங்கே மார்வாடி,கன்னடக்காரன்,மலையாளி,தெலுங்கன் என எனைய மாநிலத்தவர்கள் வியாபாரம்,சினிமாத்துறை,அரச உத்தியோகத்தில் காலாகாலமாக இருக்கிரார்கள் இவர்களுடைய பேச்சு,எழுத்து மொழி த்மிழ்.சோறு போடுவது தமிழகம்.தமிழகத்தினர் தண்ணீர் தரும்படி போராட்டம்நடத்தினாலோ,ஈழத்தமிழர் படுகொலையை நிறுத்தும்படி போராட்டம்நடத்தினாலோ மலையாளம் தெரியாத தமிழக மலையாளி மலையாளியாகவும்.தெலுங்கு தெரியாத தமிழக தெலுங்கன் தெலுங்கனாகவும் மாறிவிடுவார்கள். இது தமிழன் பிரச்சன நாம்க் கென்ன வந்தது என்பார்கள்.(முக்கியமாக சினிமாத்துறை)
    ஈழத்த்மிழ் அகதி என்று அய்ரோப்பாவில் தமிழ், ஆங்கிலம் மட்டும் தெரிந்த தெலுங்கரும் மலையாளியும் கன்னடரும் பொய்சொல்லி வாழ்வது மட்டும் இன்றி த்மிழக த்மிழருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஈழத்த்மிழ் போராட்டத்தை கொச்சைப்படுத்தி கட்டுரைகள்,பின்னூட்டங்கங்கள் எழுதுவது கண்டிக்கப்பட வேண்டியது இவர்களை அடையாளப்படுத்தும் காலம் வெகுதொலைவில் இலலை

    • கங்கா says:
      16 years ago

      நம்ம தேசத்திலை டெமோகிரசி இருக்கின்றது அவை மட்டுமல்ல இன்னும் சில… ஜேம்சை விட்டிடுங்க சார்.

    • thamilmaran says:
      16 years ago

      ஜேம்ஸ் என்பது கிறீஸ்தவ பெயராக இருக்கிறதெ சைவம் அவருக்கு தெரியுமா என்பதெ எனது கருத்து.

      • JAMES FEREDRIC says:
        16 years ago

        Frederick II (German: Friedrich II.; 24 January 1712 – 17 August 1786) was a King of Prussia (1740–1786) from the Hohenzollern dynasty.He became known as Frederick the Great (Friedrich der Große) Frederick was born in Berlin the son of King Frederick William I of Prussia and Sophia Dorothea of Hanover. The so-called “Soldier-King”, Frederick William had developed a formidable army and encouraged centralization, but was also known for his authoritarianism and temper. He would strike men in the face with his cane and kick women in the street, justifying his outbursts as religious righteousness. In contrast, Sophia was well-mannered and well-educated. Her father, George, Elector of Hanover, was the heir of Queen Anne of Great Britain. George succeeded as King George I of Great Britain in 1714.

        • Soorya says:
          16 years ago

          and James Fredric(Friedrich or Feredric) is the grand grand grand grand son of ?

    • thamilmaran says:
      16 years ago

      மணீமாறன் ஈழத்தமிழரிற்காக தெலுங்குத்தமிழர் தீக்குளீத்து உள்ளார்கள்,தமிழ்கத்தின் மக்கலெல்லோரும் தமிழர்கலே,தமிழகம் இந்தியாவில் இருக்கிறது பினாங்கு மலேசியாவில் இருக்கிறது லண்டன் இங்கிலாந்தில் இருக்கிறது ஆனால் நாமெல்லோரும் தமிழர்களாய் இருக்கிறோம்.சினிமாக்காரர் அஜித் நக்கித் தின்றாலும் தன்னை நாயில்லை என்பார் பிராமணீ என்பதால் தமிழன் மீது ஈட்டி எறீந்தும் விகடனும்,எக்ஸ்பிரசும் தூக்கிக் கொண்டாடுகின்றன.நாமெல்லாம் சகோதரர்கள் தமிழர்.சீனா,தென்னாபிரிக்கா என்றூ எங்கு போனாலும் நாமெல்லாம் அங்கே வேற்றூ மனிதர்கள் இந்தியாவில்தான் எமது மண்னென்ற உணர்வை அடைகிரொம்.தமிழகம் தாய்ப்பால் என்ற உணர்வைத்தருவதாம் நாம் பிரித்து பார்க்க முடியாத உணர்வில் பிரிக்கமுடியாத உறவில் தாய் நாடென்ற பெருமை பெறூகிறோம்.

    • thurai says:
      16 years ago

      இலங்கையிலை தமிழர் சிங்களவரென தொடங்கி கண்டது போதும். இனி தமிழகத்திற்கு
      கால் அடி வைத்தாச்சு. இந்தத் தமிழனைப் போல் தன் மொழியில் உயிரையே வைத்திருப்ப்வன்
      ஒருவ்ரும்
      உலகிலில்லை. காரண்ம் பிற்ந்தநாட்டிலோ, புகுந்த நாட்டிலோ விசுவாசமென்பதில்லாமையே. துரை

      • thamilmaran says:
        16 years ago

        நான் ஒரு கனேடியன் என கதைது லண்டனில் சண்டையிட்ட தமிழர் ஒருவரின் விசா இங்கிலாந்தில் அவரது பழக்கம் சரியிலை என மறூக்கப்பட்டதை அறீவீர்கலோ தெரியாது.லண்டனில்தான் பிறந்தோம் எனும் தமிழரையும் அரிவீரொ தெரியாது.தமிழனிடம் ஆங்கிலத்திலும் வெள்லையிடம் தமிழிலும் பேசும் தமிழரை அறீவீரோ தெரியாது.இரண்டு தமிழரிற்கு நான் கு போலீஸ் ஸ்ரேசன் தேவை என்பதை அறீவீரோ தெரியாது.

  23. JAMES FEREDRIC says:
    16 years ago

    Georg Wilhelm Friedrich Hegel (August 27, 1770 – November 14, 1831) was a German philosopher, one of the creators of German Idealism. His historicist and idealist account of the total reality as a whole revolutionized European philosophy and was an important precursor to continental philosophy and Marxism.
    (தமிழகத்தின் திராவிட இயக்கத்தோர் சிலரின் எழுத்துக்களிற் கூட ஒரு காலத்தில் ஹிற்லர் மீது அபிமானம் காணப்பட்டது. அது வேறு விடயம்)— கரம் மசாலா.
    ஹிட்லரையும் திராவிட இயக்கங்களையும் பற்றி,முறிந்தபனை கருத்து.ரஜினி திரனகம,யதார்த்தங்களை வெளிப்படுத்தியது தனிச் சிறப்பு.”மைன் ஃகாம்ப்” என்ற ஹிட்லரின் சுயசரிதை,1980 களில் இந்தியாவில்,திராவிட இயக்கங்களுக்கு “எதிரான” பெரும்பாலும் பிராமண இளைஞர்களின் கைகளில் இருந்தது.அந்த இளைஞர்கள் தற்போது பெரும் செல்வச் செழிப்புடன்,மேற்குலக அதிகார வர்கங்களே பொறாமைப்படும்,இந்திய அதிகார வர்கத்தில்(இராணுவம் உட்பட),நவீன சக்கரவர்த்திகளாக இருக்கிறார்கள்!.(உடனேயே ஓடிப்போய் அலுவலகம் திறந்து விடாதீர்கள்!).
    ஹிட்லர் காலத்திற்கு முன்பு,”இரண்டாம் வில்கெல்ம்” என்ற அரசர் ஆட்சி செய்தார்.அவருடைய சகோதரரின் உதவியுடன்,”பிரிட்டிஷுக்கு எதிராக” ,சீக்கியர்கள்,பெங்காலிகள்,தமிழர்கள் கொண்ட படை துவங்கப்பட்டது.ஹிட்லர் தன் காலத்தில்,இதை “எஸ்.எஸ்.படையணியின் கீழ்” கொண்டு வந்தார்.தற்போதைய “இந்துத்துவ அமைப்பான ஆர்.எஸ்.எஸ் சின்” ஆதரவு அதற்கு இருந்தது(வாஞ்சிநாதன் போன்றோர்).ஏனென்றால்,ஹிட்லர் தன்னுடைய “நாசிக் கொள்கையையே” இந்திய “தத்துவங்களின் ஜெர்மனிய – கிரேக்க திரிபுகளிலிருந்தே” உருவாக்கினார்.பிரடெரிக் ஹேகலின் தத்துவம் இதில் முக்கியமானது.”நேதாஜி சுபாஸ் சந்திர போஸ்” இதில் உள்வாங்கப்பட்டார். ஜெர்மன் என்பது பல இனங்கள் குடியேறிய நாடு.இங்கிலாந்தின் “ஆங்கிலோசாக்ஸன்” என்பவர்களும் ஜெமனியிலிருந்து குடியேறினவர்களே!.நாலாம் நூற்றாண்டில் சீன -ரஷிய எல்லையிலிருந்து ஜெர்மனிக்கு குடியேறிய “ஹூனர்கள்” “இந்திய தத்துவ அடிப்படையிலான தாவோயிஸத்தை” கொண்டுவந்தனர்,இது கிரேக்கத்துடன் கலந்தது!.ஹிட்லர் ஒரு உலகலாவிய தத்துவத்தை,தன்னுடைய சுயநல “தேசியத்திற்காக” திரிபுபடுத்தி,தன்தலையில் தானே மண்ணைவாரி போட்டுக் கொண்டார்!.

    • JAMES FEREDRIC says:
      16 years ago

      …மேலே கூறியுள்ளதில் “ரஜினிதிரனகம” என்ற வார்த்தியின் கீழ் உள்ளதை “முறிந்த பனையில்” ரஜினிதிரனகம,கூறவில்லை.அதற்கு மேலே உள்ளதைதான் கூறியுள்ளார்.திராவிட இயக்கங்களுக்கும்,ஹிட்லருக்கும் முடிச்சு போடுவதுதான் “அமாவாசைக்கும்,அப்துல் காதருக்கும்” உள்ள தொடர்பு.ஆனால் ஒருவர் வெளிப்படுத்தும் வார்த்தைப் பிரயோகங்கள்,அவர்களின் தனிப்பட்ட விருப்பு,வெருப்பின் பாலும் அல்லது அவர் வெளிப்படுத்தும் பிரச்சனையின் “சூழல்(கன்டக்ஸ்ட்)” பாலும் புரிந்துக் கொள்ளப்ப்டுகிறது.”முறிந்த பனை”நூலில்,ரஜினி திரனகம,”விடுதலைப் புலிகள் மீதும்,இந்திய அமைதிகாக்கும் படையினரின் மீதும்(இந்திய வெறுப்புணர்வு?)” தன்னுடைய கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தியிருப்பார்.இந்தியா என்றால் தமிழ்நாடு என்று பெரும்பாலான “புலன் பெயர்ந்த” தமிழர்களின்? வெளிப்பாடு,ஆகையால் கண்ணுக்கு தெரிந்த இந்தியாவான திராவிட இயக்கங்களுகும்,புலிகளுக்கும் ஒரே வண்ணத்தில் முத்திரை!.

  24. rathan says:
    16 years ago

    இனியொரு, தயவு செய்து இந்த ஆக்கத்திற்கு மட்டும் பின்னோட்டம் வேண்டாம்.நடந்து முடிந்ததை ஒருவர் எழுதினால் அதை வாசிப்பதை விட்டு என்னவோ எல்லாம் எழுதுறாங்கள்.பத்தாததற்கு ஒரு கொஞ்சமாவது நடந்தது என்னவென தெரிந்திருக்க வேணும்.குருடன் யானை பார்த்த கதையாய்.
    வேற சைட்டில போய் என்ன தேவையோ அதை கொட்டிக்கொள்ளுங்கள். தயவுசெய்து அய்யரை எழுதவிடுங்க்ள். சரி பிழை அதில் இருந்தவர்களுக்கு தெரியும்

    • Soorya says:
      16 years ago

      இயக்கத்தில் இருந்தவர்களுக்கு மாதிரம் இல்லை தமிழரின் சரித்திரம். தெரியாதவர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும், தெரிந்தும் திரித்து எழுதுபவர்களுக்கும் பாதிக்கப்பட்டு பழயதை மறந்து, மன்னித்து மனத்தில் இருக்கும் கவலைகளைக் உதறிப் புதியதைத் தொடர இது ஒரு பாதை. கருதுக்களை வாசிக்காமல் விடலாம் கஷ்டமாக இருந்தால். ஆனால் கட்டுப்பாடு வேண்டாம்.

    • mamani says:
      16 years ago

      கட்டாயம் பின்னூட்டம் தேவை ஏனெனில் ஐயர் காலத்து போராளிகளில் 5-6 பேர்தான் உயுருடன் இருக்கின்றனர். இந்த வரலாறு நிச்சயம் நூல் வடிவில் வரவேண்டும் அதற்கு பல பின்னூட்டங்கள் உதவியாகவிருக்கும் .நீங்கள் குற்ப்பிடுவது போல் சிலரின் ஐயரை எரிச்சலூட்டும் ஆனால் ஐயர் சளைத்தவர் அல்ல.

  25. Naren says:
    16 years ago

    – “அப்பு” ரொம்ப சந்தோசமாயிருக்கின்றேன்-
    விடுதலைப்புலிகளின் அழுங்குப்பிடியிலிருந்து விடுதலை பெற்ற

    வன்னிமக்களின் சந்;தோசத்தில் நானும் பங்கு கொண்டு ரொம்ப

    சந்தோசமாய் இருக்கின்றேன். “அப்பு சொன்னால் நம்பவே மாட்டீங்கோ..

    இப்போவெல்லாம் ஒரே பாட்டு.. பாட்டாய் வருகுதப்பு!…

    வேண்டுமென்றால் ஒருதடவை பாடட்டுமா?.. ஆஹ்!..ஆஹ்!.. நீங்கள்

    வேண்டாம் என்றுதான் சொல்லுவீங்க. இருந்தாலும் நான் பாடாமல்

    விடப்போவதில்லை. “பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டதாம்

    கருடா செளக்கியமா?…அப்பு!.. சொக்கியமா? அ..ப்..பு..! செளக்கியமா?..

    அப்பாவி வன்னி மக்களை வைத்துக் கொண்டு கொஞ்சக்காலம்

    என்னமாய் “மஜிக்” காட்டினீங்க?.. அப்பு செளக்கியமா?.. தமிழீழ பீதி

    மன்றம் மன்னிக்கவும் நீதிமன்றம்?. தமிழீழ சட்டத்துறை – தமிழீழ

    கப்பத்துறை மன்னிக்கவும் தமிழீழ வரித்துறை எல்லாம் செளக்கியமா?..

    தமிழீழ பிள்ளைகள் கடத்தல்துறை… கல்வித்துறை எல்லாம்

    சொக்கியமா?…. இதற்கு ‘அப்பு’ பாவம் அழாக்குறையாக பதில்

    சொன்னாராம் “நானும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம்

    சொக்கியமே கருடன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது.

    கருடனுகள் குந்தியிருந்து கொண்டு கேள்வி கேட்ட காலம் எல்லாம்

    போச்சு!.. போச்சு!!.. இனி நாங்கள் கேள்வி கேட்போம். பணிவாய்

    பதில் சொல்லவேண்டும். “கருடா” செளக்கியமா?.. ஏதாவது

    புரிஞ்சுதாப்பு?.. புரியாவிட்டால் முள்ளிவாய்க்காலுக்கு வாங்கோப்பு

    ஆறுதலாய் விளங்கப்படுத்திவிடுகின்றோம். ஆனால் கறுப்புத்துண்டு

    கட்டவேண்டிவரும் றெடியா?..

    ஆமாh!!.. நான் என்னப்பு தப்பாய் கேட்டேன்?.. யாரப்பா அந்த

    அறிஞ்ஞர்கள் என்றுதானே கேட்டேன் அதிலே உங்களுக்கு அப்படி

    என்னதான் உணர்ச்சிவசப்பட்டமாதிரி தோன்றியது என்றே எனக்கு

    புரியவில்லை. இருந்தாலும் ஓகே! உணர்ச்சிவசப்பட்டுத்தான் போனேன்

    அதுக்கு என்ன இப்போ?.. அதுசரி… யாரும் சிங்கள அறிஞ்ஞர்களும்

    சொல்லியிருக்கலாம் என்று சொன்னீர்களே?.. சிங்கள அறிஞ்ஞர்கள்

    என்று பார்த்தால் எனக்கு தெரிய இரண்டே இரண்டு பேரறிஞ்ஞர்களும்

    அரசியல் சாணக்கியர்களும் இருக்கின்றார்கள் அவர்களின் பெயரைச்

    சொன்னால் நீங்கள்தான் உணர்ச்சிவசப்பட்டுவிடுவீர்கள் இருந்தாலும்

    சொல்லுகின்றேன். அது நம்ப “மகின்டவும்- கோட்டேபாயவும்” தான்.

    மத்தபடி இந்தியாவில் இருக்கும் அறிஞ்ஞர்களாகவும் இருக்கலாம்

    என்று குறிப்பிட்டிருந்தீர்களே…. எனக்குத் தெரிய இந்தியாவில்

    இருக்கக்கூடிய உங்களுக்கு தெரிந்த அறிஞ்ஞர்களென்றால் அதுவும்

    உங்க “கோப்பாலுச்சசாமி பாவம் உங்க மேல்தாவித்தனங்களுக்கு

    வாக்காளத்து வாங்கப்போய் தனது சொந்தத் தொகுதியிலேயே சீட்டுக்

    கிளிக்கப்பட்டு அந்த மக்கள் அவரை வீட்டுக்கனுப்பியது வேறு

    விடையம். அதை விட ஐயா நெடுமாறன் மற்றும் மகிந்த அரசைப்பற்றி

    வாய்கிழிய பேசிவிட்டு கொழும்பில் வைத்து அவருக்கு பொன்னாடை

    போர்த்திய வீரமறவன் உங்கள் திருமா(வா)ல்வளவன்.” இவர்கள்தானே

    நீங்கள் குறிப்பிடும் அறிஞ்ஞர்கள். மத்தபடி சீனாவில் இருக்கும்

    அறிஞ்ஞர்களும் ஐரோப்பிவில் இருக்கும் அறிஞ்ஞர்களும் என்ன

    சொல்லுவார்கள்? சொல்லிச் சொல்லி இதுவரையில் என்ன

    செய்தார்கள்? என்ன செய்யப்போகின்றார்கள்? என்பதுபற்றி

    உங்களைவிட எங்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே அதை

    இப்போதைக்கு விட்டுவிடுவோம்.. மேலும் ஏதாவது தகவல்கள்

    தேவையானால் நீங்கள் என்னுடன் இதேபோல் அப்பப்போ தொடர்பு

    கொள்ளுங்கோப்பு… அ..ப்..போ.. வர்ட்டுமா?..

    • appu says:
      16 years ago

      தம்பி ராசா நரேன், எப்படி உன்னால் ஆடிப்பாட முடிகிறது. புலியைப் பிடிக்கிறேன் எண்டு நீங்கள் வன்னியில சாகடிச்ச சனங்கள் அம்பதினாயிரத்துக்கும் மேல . வன்னி வதைமுகாங்களில் வாடுகிற சனங்களைப்பற்றி நினச்சுப் பாத்தனீயே ராசா. உங்கட சிரிப்புக்காக ராசா இது வர செத்த தமிழ் சனங்கள் மூண்டு லட்சத்திற்கு மேல ராசா. உனக்கு இது விளங்குதோ தெரியாது இதை வாசிக்கிற உன்ர பெரிய ஆக்களுக்கு விளங்கும் ராசா. ராசா நாங்களும் எங்கட பாடுமெண்டு தான் ராசா நாங்களும் இருந்தனாங்க இதுவரயில. அதுதான் ராசா எங்கட சனத்தை கேப்பார் ஒருத்தருமில்ல எண்டு நீங்களெல்லாம் உயிரோட புதைச்சுப் போட்டியள். தமிழனெண்டு பார்க்காட்டிலும் மனிசனெண்டாவது பாருங்கோ ராசா. நாங்க பெரியாக்கள் எண்டு சொல்ல கூடாது ராசா. எங்களுக்கு மேல இன்னும் பெரிய ஆக்கள் இருப்பினம். எல்லாருக்கும் தமிழனுக்கு வந்த நிலம வரலாம் ராசா. உனக்கு தெரியுமோ தெரியாது இப்ப தமிழர கொல்லிற சிங்களவரில அரவாசிப்பேர் பூர்விக தமிழர் ராசா. அத விடு ராசா இந்தியாவில கூட பூர்விகமாய் இருந்த சனம் தமிழ் சனம் தான் ராசா. நான் இன வாதி இல்ல ராசா. தமிழனுக்கு வந்த நில கண்டு பாதிக்கப்பட்ட மனிசனப்பு.

    • Anj says:
      16 years ago

      கண்ணா, காகம் கனவில தின்னுறத எல்லாம் மனுஷன் தின்ன கூடாது. திண்டால் இப்படித்தான் அருவியா கொட்டும்.

      டிங்கிரி சிவகுரு நாடகத்தில் இருந்து சிறு பகுதி

      அடிக்கடி அடிச்சா பரியாரியார் என்ன செய்யச் சொன்னவர்?
      அரக்கி அரக்கி இருக்கச் சொன்னவர்

      அதையும் மீறி அடிச்சா?
      சொந்தக் காரருக்குச் சொல்லி அனுப்பச் சொன்னவர்.

      இப்ப புரிச்சிருக்குமே அடுத்த கட்டம் என்னெண்டு.

      • Naren says:
        16 years ago

        அன்ச்!… சார்!.. சும்மா பஞ்ச்!.. வைச்சு “டிங்கிரி சிவகுரு” நாடகம் பற்றி பேசுறீங்கோங்கோங்… அடிக்கிறதைப்பற்றி பேச “டிங்கிரி” நாடகத்தைத்தான் உதாரணத்துக்கு எடுப்பீங்களோ?.. முள்ளிவாய்க்காலில் வாங்கிய அடியைப் பற்றியும் நிறைய பேசலாமே சார்!… மாவிலாத்தில் தொடங்கிய அடி!.. இதோ உள்ளே.. விட்டு அடிக்குறோம்!.. உள்ளே விட்டு அடிக்கிறோம் என்று கிளிநொச்சி வரையிலும் நுளையவிட்டீங்க? அதன் பின்புதானே தெரிந்தது நீங்கள் உள்ளே விட்டு அடிக்கப்போவதாய் எதைச் சொன்னீங்கள் என்று!.. காகம் தின்னுறதைப் பற்றி காகத்தின்டையை தின்னுறவங்களே பேசினால் எப்படி சார்?…

        • Anj says:
          16 years ago

          பின் பக்கம் எல்லாம் வெந்து போச்சு போல. முன் பக்கம் ஆவது தப்பிச்சே. மழைக்குக்கூட அந்த பக்கம் ஒதுங்கேல போல. ஒரு முறையாவது ஒதுங்கி இருந்தால் இந்த நிலை வந்திருக்காது.

          கண்ணா இனிமேலாவது செமிக்கக் கூடியதை மட்டும் தின்ன வேணும், நல்ல பிள்ளை மாதிரி.

          • Naren says:
            16 years ago

            அன்ச் சார்!! எனக்கு தெரியும். அது நீங்க பேசலை!!! பழைய கசிப்பு பேசுதென்று அதனாலதான் உங்கள் “ஈழத்தின் குரல்” பாலாண்ணனின் வாயில் வருவதெல்லாம் உங்கள் வாயில் வருகுதாக்கும். அதுசரி படிச்சபள்ளிக்கூடம் ஒரே இடமென்றால் கள்ளென்ன?.. கசிப்பென்ன?.. எல்லாம் ஒன்றுதான்

  26. ரூபன் says:
    16 years ago

    பொதுவான பின்னூட்டம்…

    தலைகள்

    (ஒரு கன்னட கவிதை)

    மெரீனா பீச்சில்
    யாருடைய பேச்சையோ
    வாய்மூடிக் கேட்டபடி
    ஆயிரக்கணக்கில் தலைகள்.
    குளிர்ந்த கடல் காற்றில்
    சிரிக்கும் நட்ச்திரங்களின் கீழ்
    கவிழ்ந்த சட்டிகள் போல
    வெறுந் தலைகள்.
    நான் தொலைவில் நின்றதனால்
    கண்களோ, காதுகளோ
    மூக்குகளோ, வாய்களோ
    காண இயலவில்லை.
    வெறுந்தலைகள். வெட்டப்பட்ட
    காட்டுமரங்களின் கடைச்சல்கள்.
    நான் நினைத்தேன்: உடனடியாக
    விசால நகரத்தின் எல்லா சுவர்களும்
    கட்டிடக் கூரைகளும் மறையுமென்றால்
    இதுபோல் தலைகளை எங்கும் காணலாம் –
    தொப்பி, டர்பன், காட் மூடிய தலைகள்,
    வழித்த தலைகள்,
    நடனமாடும், உட்காரும்,
    நிற்கும், அலையும் தலைகள்,
    ஆட்டும் தலைகள், உடலற்ற தலைகள்,
    தலை கனத்த தலைகள்,
    தலைவலியால் அவதியுறும் தலைகள்,
    மாமாக்கள், சிகை அலங்காரிகள், உபதேசிகன்,
    சூரியன், காற்று, மழை
    சுகம், வலி, வேதனைப்படும்
    தலைகள், கூடவே
    அடிக்க சில தலைகள்,
    எப்படி, நீ அறிவாய்?
    எங்கள் தெருவில் சில நாள் முன்னே
    தடியன் உதைத்தான் தலையை ஜோராய்.
    உரக்கச் சிரித்த தலை
    பலூன் போல மிதந்தது: மறைந்தது.
    பிறகு, அதே இடத்தில்
    ராவணன் போலப்
    பத்துதலைகள் பிறந்தன.
    திடீரென தடியன் தலையும் மறைந்தது.
    முன்னொரு நாளில், ஒருதலை
    முடிவே இல்லாமல் பேசிச் சென்றதாம்.
    அதைக் காணவும் கேட்கவும்,
    எண்ணற்ற தலைகள் கூடின.
    வார்த்தை உச்சரிக்க கற்றன,
    அதற்குப் பிறகு பேசத் தெரியாத
    தலைகள் எதுவுமே இல்லை.
    ‘லைஃப்’, பழைய இதழ் புகைப்படம்
    ஒன்றில் ஆயிரக்கணக்கில் தலைகள்.
    இரண்டாம் உலகப் போரில்
    இறந்தவர்கள்
    கேலியாய் சிரிப்பது போல.
    அவர்களை அந்நிலைக்கு
    ஆக்கியவர்களைப் பார்த்து.
    பிறகு யுத்தத்துக்கான தலைகள்
    யுத்த வெறியர்களின்
    தலைகளை வாங்க.

    (மூல ஆசிரியரின் உதவியுடன் தமிழாக்கம்: ஆர். சுவாமிநாதன்.)

    – எஸ். திவாகர்
    யூன் 1971-

    (நன்றி: ‘கணையாழி கவிதைகள்’ தொகுப்பு – முதல் பத்து – )

  27. எதிர்வு says:
    16 years ago

    காயப்பட்டவனை பாதிரியிடம் ஏன் எடுத்துச் சென்றார்கள்? இறுதிக் கிரிகைகள் செய்யவா? ராகவன்,நிர்மலன் ஏன் இதில் கருத்துகளைப் பதிய முடியாது? கேட்டெழுதி,கதை விடும் எடுபிடிகள் விடயங்களைக் குழப்பி விடுவார்கள்.மாம்பழம் சுவாமி இந்துப் பெண்ணயா கல்யாணம் செய்தார்? அது சரியான தரவா? இந்துப் பெண்ணைக் கல்யாணம் செய்திருந்தால் அதில் என்ன விவகாரம் தெரிகிறது?

    சின்னையரை வலிந்து இதற்குள் இழுத்து யார் யார் வரலாறு காட்ட முயல்கிறார்கள்?

    அய்யரின் வார்த்தைகளில்,’காலத்திற்குக் காலம் இயக்கத்திலிருந்து விலகியிருந்து பின்னர் இணைந்து கொள்வதுமாக இருந்த இவரும்’ TNT பிரபாகரனோடு தொடக்கி,போன வருசத்திலிருந்து கிட்லர் கதை விடுவது,எந்த யூதப் பணச்சேகரிப்பிற்கு என்று சொன்னால் நல்லாயிருக்கும்.அதென்ன இலங்கையில் க.பொ.த. பரிட்சை சித்தியடையாதவர்களுக்கு இங்கிலாந்தில் “LOW OFFICE ” வேலை?

    ஆங்கிலத்தில் அரையும் குறையுமாய் எழுதி “SIR PON .” விளையாட்டு யாருக்கு விடுகிறார்கள்?

  28. Alaveddy SRI says:
    16 years ago

    எதிர்வுஅவர்களே! பாராளுமன்றத்தில் லோவர் கவுஸ் ,அப்பர் கவுஸ் என்று தாங்க்கள் அறிந்திருக்கவிலையா ? நீதி மன்றத்தில் லோவர் கோர்ட் அப்பர் கோர்ட் , என்று அறிந்திருக்கவிலையா? இவற்றின் அர்த்தம் மேல் தரமான கீழ்த்தரமான என்பதா??? ராகவனுக்கும் தங்களுக்கும் தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல் பிரச்சனை என்றால் அதனை தனிப்பட்ட முறையில் பைசல் செய்து கொள்வது நல்லது.
    அரசியல் குற்றச்சாட்டுக்கள் இருக்குமாயின்
    தாராளமாக முன்னுக்கு நின்று ஆதாரத்துடன் எழுதுங்க்கள் வாசிக்க நாம தயார். இதைவிடுத்து பின்னுக்கு நின்று குரைக்கும் தங்க்கள் செயலானது சந்திரனைப்பார்த்து ………. ஒப்பானதாக தெரிகிறது.
    இனியொரு இணையதளம் இதுவரையில் எதிலும் பதியப்படாத வரலாற்று உண்மைகளை ஐயர் மூலம் வெளிக்கொணரும் இவ்வேளையில் இவை தேவை தானா? தனிப்பட்ட முறையிலோ ,அரசியல் ரீதியிலோ எதிர்கொள்ள முடியாத
    கையாலாகாத கோழையின் வேலை இது சீய் சீய்
    .மாணவப்பருவத்தில் வாத்தியார் அடித்தமைக்கு ஆத்திரத்தில் கக்குசு சுவரில் கிறுக்கும் சிறு பிள்ளைத்தனம்

    • aruna says:
      16 years ago

      எதிர்வு ஆரம்பத்தில் இருந்தே குட்டையை குழப்பும் முயற்சியில் உள்ளார். ஒன்றுமே தெரியாதவருக்கு சில விடயங்களை கூறலாம். தெரியாதது போல் நடிப்பவருக்கு……..சந்திரனைப்பார்த்து……………சரியான வார்த்தைகளே..

    • சருகு says:
      16 years ago

      ஆளவெட்டி சிறி,  பெயருக்கேற்றாற்போல பின்னூட்டத்தையும் வெட்டி…. ஒட்டிக்கொண்டிருக்கிறார்.
      ஓரு கேள்வி ஐயர் எழுதுவதுக்கு என்ன ஆதாரஙளை சமர்ப்பிக்கிறார்? 
      இனியொரு தள்ம் வரலாற்று உண்மைகளை ஐயர் மூலம் வெளிக்கொணரும் வேளையில் …..இதெல்லாம் தேவையா என்று……இது என்ன சிறுபிள்ளைத்தனம்  ஐயர் அரசியல் ரீதியாக அப்போது தான் முதிர்ச்சியடைந்திருக்கவில்லை என்று வருத்தப்படுவதிலிருந்து இப்போது முதிர்ச்சியடைந்திருப்பதாக கருதுகிறார் என்பது புலப்படுகிறது. அதனால் பின்னூட்டங்களை அவர் ஊக்குவிப்பார் என்றுநினைக்கிறேன்.

      ராகவனுக்காக ஏன்  நீர் இங்கு வக்காலத்து வாங்குகிறீர்? தனிப்பட்ட கடன் கிடன் ? கொடுக்கல் வாங்கல்?
      ராகவன் சந்திரனில்லை.
      தமிழர் போராட்டம் ஒரு பயங்கரவாதப்போராட்டம் என்ற கருத்துருவாக்கத்தைப்பரப்பி பெரும்படுகொலையை அதனுள் மறைக்க  அவருடைய கருத்தும் ஆய்தமாக பயன்பட்டது.
      தமிழர் தரப்பிலிருந்து வருகிற குரல்கள் சாட்சியங்களாக்கப்பட்டன.முள்ளிவாய்க்காலில் எழுந்த ஓலங்கள்  பயங்கரவாத அழிப்பு என்ற கோஷத்தில் வெளியுலகுக்கு கேக்கவேயில்லை.
      மனிதாபிமானம் என்பது        நடிப்பல்ல.   ஒரு மனிதாபிமானி ஒரு தூக்குத்தண்டனைக்கைதிக்காகவும்  பேசுவான்.
      பிழைப்புவாதம் தான்.  ராகவன்  ஒரு கருத்தியல்  பயஙரவாதி.  அவருடைய கருத்தும் 50000 மக்களின் படுகொலையில் ஒரு ஆயுதமாக உப்யோகப்பட்டது. அதுவும் ஒரு வரலாற்று உண்மை.

      • Gnanam says:
        16 years ago

        கொஞ்சம் ஏமாந்தால் ராகவன்தான் முள்ளி வாய்காலில் மக்களை கேடயமா வைத்து ஒரு மாதிரி இழுத்தடியுங்கோ அதுக்கிடேலை நான் வெளி நாட்டுடன் பேசி கப்பல் அனுப்பிறேன் கரையிலை வந்து நில்லுங்கோ என்று சொன்னவர் என்று சொல்லுவியள் போல இருக்கு.பாருங்கோ.சீனாவும் ,இந்தியாவும் அரபு நாடுகளும் அப்ப என்ன வெள்ளி பார்த்துக்கொண்டோ இருந்தது? கருணாவையும் கருனாநிதியைவிடவும விட பெரிய கொம்போ ராகவன்? பேயன் ஆக்கலாம் பேய் ………………. ஆக்கப்படாது பாருங்கோ
        அது சரி ஐயர் இன்னும் எழுபத்தெட்டை தாண்டேலை ( பஸ்தியம்பில்லை) நீர் இரண்டாயிரத்து ஒன்பதுக்கு ( முள்ளிவாய்க்கால்) ஓடிவந்துட்டீர். நாட்ட விட்டு எப்ப ஓடி வந்தீக?
        உண்ணா விரதத்தில் மக்டொனால்ஸ், கொத்து ரொட்டி சாப்பிடீரா?

        • சருகு says:
          16 years ago

          கருணாவையும் கருணானிதியையும் விட பெரிய கொம்போ ராகவன் …இப்படி சொல்லியதன் மூலம் ராகவனையும் அவர்கள் பக்கம் சேர்த்து விட்டீர்கள்.
          மல்லாந்து படுத்து துப்புவதில் தமிழர்கள் கெட்டிக்காரர்கள்.

          தமிழர் போராட்ட்த்தை  பயங்கரவாதமாக சித்தரிப்பது அமெரிக்கத்தாக்குதலின் பின்னர் ஒரு சிறந்த தந்திரம்.அதற்கு சில படித்த சில த்மிழர்கள் துணை போனார்கள்.
          அதன் மூலம் எதை அவர்கள் பெற்றுக்கொண்டார்கள் என்பதை காலம்தான் பதில் சொல்லும்.

          குழந்தையின் இறப்புக்காக காத்திருந்த பிணந்தின்னிக்கழுகை படம் பிடித்த படப்பிடிப்பாளருக்கு முதலில் பாராட்டுக்கிடைத்தது.
          பின்னர் மனச்சாட்சி கொன்றுவிட்டது.

          புலியின் அழிவை மட்டும் சிந்தித்து  மக்களை மறந்த மனிதனேயவாதிகள் 

  29. kaanthi mathi says:
    16 years ago

    அளவெட்டி நீக்கள் கக்காவில் எழுதினதை லீக் பன்னீட்டியள். மற்றவை அப்பிடி என்றுநினக்காதையுங்கோ.

    தான் கள்ளன் பிறரைநம்பான் அதாவது களவெடுத்து சீவிக்கிறவை மற்றவையும் அப்பிடி என்றுதான்நினைப்பினம்.

    • Gnanam says:
      16 years ago

      தான் கள்ளன் பிறரைநம்பான் அதாவது களவெடுத்து சீவிக்கிறவை மற்றவையும் அப்பிடி என்றுதான்நினைப்பினம்.)

      நீங்கள் எதிர்வுக்கு சப்போர்ட் பண்ணிறன் என்று எதிர்வை சங்கடத்தில் மாட்டிவிடுட்டிர்கள்.எங்ககப்பன் குதிருக்கள் இல்லை என்று இப்படி கையும் களவுமா பிடித்து குடுத்திருக்கப்படாது பாருங்கோ. பிடிபட்ட கள்ளன் முழிக்கிறான். சேம் சைட் கோல் அடிக்கப்படாது

  30. santiago Bernabeu says:
    16 years ago

    மீண்டும் ஒரு யாழ் மைய்ய வாததின் குரல் தான் ஐயர், ஈழ விடுதலைப் போராட்டத்தில் யாழ் இளைஞர்கள் மட்டுமே ஈடு பட்டார்கள் என்று ஐயர் நிறுவ முயல்கின்றார். ஈழப்போராட்டதுக்கு யாழ் இளைஞர்கள் வழி காட்டுதலாய் இருந்தார்கள் என்பதை மறுப்பதற்கில்லை, இருப்பினும் மற்றையவர்களின் தியாகமும் குறைத்து மதிப்பிட முடியாதது. மலையக தமிழரான கணபதி, மன்னார் ஜெயராஜா, விக்டர்,நிதி, ரவீந்த்திரதாஸ் போன்றவர்களை ஐயர் இருட்டடிப்பு செய்வதில் இருந்தே தெரிகிறது “ஐயர்” மீண்டும் ஒரு யாழ் மைய்ய வாததின் குரல்.

    • mamani says:
      16 years ago

      ஐயா எழுபதுகளில்தான் நிற்கிறார் நீங்கள் குறிப்பிடும் விக்ரர் போன்றவர்கள் எண்பதுகளில் இணைந்தவர்கள். இன்னும் விரிவாக சொல்வதானால் பாகம் 10 காலத்தில் விக்ரருக்கு 12 வயது.

    • mamani says:
      16 years ago

      புலிகள் நடத்தியது குறுந்தேசிய , குட்டி முதளாளித்துவ போராட்டம் அதில் விவசாயிகள் , தொழிளாலாளர்கள் அடி பட்டுதான் போவார்கள். ஏன் சற்று இடதுசாரி போக்கு கொண்ட இயக்கங்களையும் ஓரம்கட்டியது நாம்தானே . ஐயர்நடந்ததை எழுதுகிறார் அவர் எத்திசையிலும் எம்மை அழைத்து செல்லவில்லை. இப்போது கூட வட்டுகோட்டை,நாடு கடந்த தமிழீழம் யார் தலைமை தாங்குகிறார்கள் யாழ் ஆதிக்கவாதிகள் தானே

      • சருகு says:
        16 years ago

        பிரபாகரன் சோசலிசப்பாதையை தேர்ந்தெடுத்து வர்க்கவிடுதலை என்று பேசியிருந்த்தால் போராட்டம் ஆரம்பத்திலேயே தோல்வியடைந்திருக்கும்.இவ்வளவு காலம் தாக்குப்பிட்த்திருக்கமாட்டாது.இராணுவ வலிமை கட்டியெழுப்புதல் பிரதேசஙளை விடுவித்தல் விடுவிக்கப்பட்ட பிரதெசத்தில் ஒரு ஆட்ட்சியமைப்பை கட்டியெழுப்புதல் இதுதான் புலியின் சூத்திரம். தொழிலாளியும் விவசாயியும்நடுத்தர வர்க்கமும் எல்ல வர்க்கமும் அதில் இணைந்த்தார்கள்.
        சோசலிசம் மார்க்சிசம் பேசுகிறவர்களுக்கும் , ஆன்மீகவாதிகளும் இன்றைய உலகில் சுவாமிநித்தியானந்தாவின் பாதியில்தான் சென்றுகொண்டிருக்கிறார்கள்.
        பிழைப்புவாதம் சோசலிசம் ஆன்மிகத்தினூடாக வெளிப்படுகிறது.

        • namirvu says:
          16 years ago

          1. சுவாமி நித்தியானந்தாவின் பிழைப்பு வாத்த்துக்கும் சோசலிசம் தான் காரணம்?
          2. இவ்வளவு காலம் தாக்குப்பிடித்து என்ன பயன்? தமிழ் தேசியம் பாதளத்தில் – தமிழ் பகுதிகளில் சிங்களக் குடியிருப்புக்கள்- தமிழ் மக்கள் தொகை 80 வீத்தால் வீழச்சி—–செல்லிக் கொண்டே போகலாம்/
          3. மார்க்சியவாதிகள் சந்தோசப்படும் விடயம் பிரபா இடதுசாரியல்ல என்பதே

          • சருகு says:
            16 years ago

            ஆன்மிகத்தைச்சொல்லி யும் பிழைக்கலாம். மாக்சியம் பேசியும் பிழைக்கலாம்.விடுதலை பேசியும் பிழைக்கலாம்.
            மாக்சியவாதிகள் சந்தோஷப்பட்டால் என்ன துக்கப்பட்டால் என்ன ஒருநூற்றாண்டாக மாக்சியம் முதலாளித்துவமாக மாற்றமடைந்து கொண்டேயிருக்கிறது.
            இலங்கையின் இடதுசாரிகளும் இந்திய இடதுசாரிகளும் எனக்கு சுவாமிநித்தியானந்தாவை நினைவு படுத்துகிறார்கள். உலகுக்கு மாக்சிசம் உள்ளே முதலாளித்துவம். வெளிக்கு ப்ரமச்சாரியம்.உள்ளும் வெளியும் ஒன்றாய் இருக்கிற சர்வாதிகாரமும் முதலாளித்துவமும் மேலோ என்று தோன்றுகிறது.

             தத்துவங்கள் சிறந்தவை  பேசுபவர்கள் முதலாளித்துவ உலகில் தான் தொழிற்படவேண்டியிருக்கிறது.

            இடதுசார்பு  அன்றைய உலக ஒழுங்கில் பனிப்போர்காலத்தில் சார்புத்தன்மையை உருவாக்கி பனிப்போர்முடிய அழிந்து போயிருக்கும்

            30 வருடப்போராட்டம்     என்பதற்கும் 03 வருடப்போராட்டம் என்பதற்கும் என்னவேறுபாடு என்றால்   தமிழர்கள் 30 வருட அனுபவமும் துன்பமும் 03 தலைமுறைகளை தூங்கவிடாது என்பதுதான்
            இன்னொரு விளைவு  இந்த புலம்பெயர் தமிழர்களும் அவர்களுடைய அடையாளப்பிரச்சினையும்    அவர்களை தூங்கவிடாது.பின்னூட்டங்களை பாருங்கள் இனம் புரியாத கோபம் ஒவ்வொருவரின் எழுத்திலும் தொனிக்கிறது.

      • nanthu says:
        16 years ago

        மாசற்ற மணியே!
        யாழ்வாதம், யாழ்வாதம் யாழ்வாதம் பேசிப் பேசியெ கருனாகக்ளை உருவாக்குங்கோ. அவனுக காட்டிலை மழைதான்.

  31. எதிர்வு says:
    16 years ago

    அய்யரிடம் கேள்விகள்.

    கணேஷ் வாத்தியை மன்னித்ததின் காரணம் என்ன?

    மத்திய குழு என்ற முதலாளித்துவ வர்க்க சிந்தனையா?

    எடுபிடிகள் கொலை வெறியுடன் தாக்கப் பார்த்திருந்தது,உங்களிடமிருந்த சோஷலிச நோக்கா?

    மொத்தமாக ஒன்பது பேரில் மூவரை (ஒரு கொலை வெறியில் இருந்தவன் உட்பட) அந்த இடத்தை விட்டு அகற்றி,முடிவெடுத்தது ராஜதந்திர நகர்வா?

    உமாவும்,நீங்களும் மன்னிப்பளிப்பில் முன் நின்றதாக எழுதியுள்ளீர்கள்.மற்றைய மத்திய குழு உறுப்பினராகிய நாகராசா வாத்தியின் முடிவை தனியாக ஏன் இங்கே குறிப்பிடவில்லை?
    கொல்லப்படவேண்டும் அல்லது கொள்ளப்படக் கூடாது என்பதற்கு காரணங்கள் ஏதாவது வைக்கப்பட்டதா,துரோகி என்ற சொல்லைத் தவிர?
    ஒரு பண்ணையை இழந்து போகிறீர்கள்.அதன் உரிமையாளருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறீர்கள்
    .அந்த அனைத்து விபரங்கள் அறிந்த,இயக்க உறப்பினர்களை தெரிந்த மத்திய இயக்க உறுப்பினரை மன்னித்து எவ்வாறு எச்சரித்து மட்டும், தனித்து விடும் முடிவு எடுக்கப்பட்டது?
    தனித்து விடப்படும் போது பின்விளைவு மோசமானதாகும் என ஏன் சிந்திக்கவில்லை? அவரை,அதுவும் மத்திய குழு உறுப்பினரை , உங்களோடு வைத்து செழுமைப்படுத்தவோ அல்லது அவரை நாட்டை விட்டு அகற்றவோ முடியாமல் போனது ஏன்?

    அல்லது எதிர்கால எண்ணத்தில், நாங்களும் மத்திய குழு உறுப்பினர்கள்,தவறுகள் செய்தாலும் மன்னிக்கப்படவேண்டும், என்ற முன்னுதாரண நிலைப்பாடா?

    அதில் வேறு “இந்த சம்பவங்கள் பிரபாகரனுக்கு தெரியாது” என்றெழுதி நீங்கள்,உங்களையே
    மகாத்மாவாக காட்ட முனைகிறீர்களா?

    இப்போது கணேஷ் வாத்தி எங்கே?

    • Kannan says:
      16 years ago

      Mர் எதிர்வு சும்ம எங்கலைக் கேள்வி கேட் க வேண்டாம் உம்மை யாரென்று எமக்குத் தெரியும்.நீர் ராகவன் தான்.நீர் லோயர் எண்டு டூப் விடுறது எமக்குத் தெரியும்.நீர் படு லொவரான ஆள்

    • namirvu says:
      16 years ago

      கணேஷ் வாத்தியை மன்னித்ததின் காரணம் என்ன?
      எதிர்வின் கேள்வி ஏன் மண்டையில் போடவில்லை என்பது? அட பாவிகளே என்னமும் திருந்தவில்லையா?

      எடுபிடிகள் கொலை வெறியுடன் தாக்கப் பார்த்திருந்ததுஇஉங்களிடமிருந்த சோஷலிச நோக்கா?
      மார்க்சினதும் எங்களிசினதும் மூன்றாவது சிந்தனைக் கோட்பாட்டில் முதலாவது பந்தியை எதிhவு பிரதி பண்ணியுள்ளார்/ அற்புதான தத்துவம். மேறகுலகில் கலாநிதிப் பட்டம் பெற மிகவும் உதவியாக இருக்கும்.

      இப்போது கணேஷ் வாத்தி எங்கே? இலங்கை அரசிடம் ஒப்படைக்கும் முயற்சியா?

    • Anj says:
      16 years ago

      வணக்கம் எதிர்வு
      தங்களின் பின்னூட்டம் கண்ணில் பட்டது. உடனடியாக எழுதவேண்டுமே என்ற உற்சாகத்தில் இதை எழுதுகிறேன். தங்களின் கேள்விக் கொத்தை வாசித்தவுடன் எனக்குள் ஏற்பட்ட உணர்ச்சி பிரவாகத்தை எழுத்தில் வடிக்க முடியாது. அப்படி ஒரு கிளர்ச்சி புல்லரிப்பு எல்லாம் சேர்ந்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான். தங்களைப் போன்ற ஒரு அறிவு ஜீவியை புத்திசாலியை எம்மினத்தின் மத்தியில் இல்லை என்றே கூறலாம். உண்மையில் எம்மினம் இப்படி ஒருவரை இதுவரை காலமும் அடையாளம் காண முடியாமல் போனதற்கு வெட்கி தலை குனிய வேண்டும்.

      விடயத்துக்கு வருவோம். ஐயர் அவர்கள் தனது பத்து பதிவிலும் மிக மிக விளக்கமாக தனது கடமை பங்களிப்பு என்று எல்லாவற்றையும் விரிவாக எழுதி உள்ளார். விளங்கவில்லை என்றால் பிரபாகரனின் முறையை கையாண்டிருக்கலாம். அதை விட்டுவிட்டு இங்கு வந்து அந்த “லிஷம்” இந்த “லிஷம்” எல்லாம் எழுதுகிறீர்கள். கொஞ்சம் எழுத வாசிக்க தெரிந்தவுடன் மற்றவர்களை முட்டாள் என்று நினைக்கக் கூடாது. ஐயர் அவர்களும் அவருடன் இருந்தவர்களும் ஏதோ குளிரூட்டப்பட்ட அறையில் காப்பி குடித்துக்கொண்டு எடுத்த முடிவுகளை பரிசீலனை செய்வது போல் உள்ளது தங்களின் கேள்விகள்.

      மரணப்பயம் என்றால் என்னவென்று தெரியுமா. அதை அனுபவித்தவனுக்குத்தான் தெரியும் அதன் வலியும் சுமையும் . கேள்வி கேட்பது சுலபம் ஆனால் அவை நடைமுறையில் சாத்தியமா என்பதை சிந்திக்க வேண்டும். தாங்கள் யார் என்பது தெரிந்த விடயம். வெளியில் வந்து சொந்த பெயரில் எழுத வேண்டியதுதானே. தங்களைப் போன்றவர்களுக்கு குப்பை கொட்ட நிறைய இடங்கள் உண்டு.

      தங்களுக்கு ஐயர் அவர்களுடன் தனிப்பட்ட விரோதம் இருந்தால் அதை நேரடியாக சொல்ல வேண்டியது தானே ஏன் சுற்றி வளைப்பான். தயவு செய்து இன விடுதலைக்காக தங்களை அற்பனித்தவர்களை இழிவு செய்ய வேண்டாம்.

      • எதிர்வு says:
        16 years ago

        ‘கண்ணில் பட்டதும்’, ‘உணர்ச்சி பிரவாகத்தில்’ எழுதிய முதல் வஞ்சப் புகழ்ச்சி,என் கருத்துகளை விளங்கி எழுதவில்லை எனப் புரிகிறது.

        இந்தத் தனிமனித வால்பிடிகளின் வேலைகள், எழுதுகிற கருத்துகளை நிறுத்தவும்,
        விமர்சனங்களை கருவறுக்கவும் முயல்வதுதான்.

        ‘சொந்த பெயரில் எழுது’ என்ற மிரட்டலும்,’தனிப்பட்ட விரோதம்’ என்ற பிரட்டலும் இந்த எடுபிடிகளின் இயலாமைதான்.

        கேள்விகள் கேட்கப்பட்டது கட்டுரை வரைஞரிடம், என்பதைக் கூடவா இவர்களால் அறிய முடிவதில்லை.

        • Anj says:
          16 years ago

          வணக்கம் எதிர்வு
          இதில் எந்தவிதமான வஞ்சக புகழ்ச்சியும் கிடையாது . உம்மையைத்தான் கூறி இருந்தேன். ஏன் எல்லாவற்றையும் எதிர் மறையாகவே சிந்திக்கிறீர்கள். மிரட்டல், கருவறுப்பு என்று அதில் எதுவுமே இல்லையே. நீங்கள் ஏன் வீணாக எதையோ சிந்தித்து குழம்பி போகீறீர்கள். அது என்ன வால்பிடிகள், ராமாயணத்தில் மட்டும்தான் வால் உள்ள மனிதர்கள் இருந்ததாக உள்ளது.
          சொந்த பெயரில் எழுதச் சொல்லி கேட்டதில் அப்படி என்ன தவறு. துணிவிருந்தால் செய்யலாமே.
          நீங்கள் எழுதும் விடயங்கள் தனிப்பட்ட விரோதம் தான் என்பதை இதற்கு முன் பலர் சுட்டிக் காட்டி உள்ளார்களே. நீங்கள் கேள்விகளா கேட்டிருந்தீர்கள் திரும்பவும் வாசித்து பாருங்களேன் உண்மை புரியும்.

          நன்றி

  32. Akilan says:
    16 years ago

    Ayiah is a doing a great job by sharing about what happened in the past. If we are open to learn from past mistakes, we will surely be able to achieve our goals. Unfortunately there is a curse on our race that we are not prepared to learn.

  33. Anj says:
    16 years ago

    Naren

    அந்த பக்கம் ஒரு முறை கூட ஒதுங்கவில்லை என்று ஒத்துக்கொண்டதுக்கு நன்றி. தொப்பி சரியான அளவா இருக்கே.
    ஆயிரக்கணக்கானவர்கள் வாசிக்கும் “இனிஒரு” போன்ற நல்லதொரு இணையத்தில் இப்படியெல்லாம் குடிச்சதையும் குடிச்சுக்கொண்டு இருப்பதையெல்லாம் எழுதுவது நாகரிகமல்ல. குடிக்க வேண்டாம் என்று தடுக்க முடியுமா என்ன. விளைவு முன் பக்கமும் வெந்து போகும். இன்னொருவர் தனது தொழில் “கள்வர்” என்கிறார். என்ன கொடுமை இது.
    அது என்ன “சார்” என்ற அடைமொழி. இணையத்தில் பெண்கள் எழுதத் தடையா.
    .
    பாலாவுக்கு இன்னொரு பெயர் “தேசத்தின் குரல்” என்பதாவது தெரியுமா.
    “இனிஒரு” இடம் நான் கேட்ட கேள்வியை வாசித்தாலே புரியுமே

    கண்ணா, தப்ப தப்பு தப்பா செய்யவும் கூடாது எழுதவும் கூடாது.

  34. நெருஞ்சி says:
    16 years ago

    யாருமிங்கே மீண்டும் குழந்தைப் போராளிகளை முன் நிறுத்திப் போரிட வேண்டாம்.மாம்பழம் சுவாமியின் விவகாரம்,ராஜா மாஸ்டர் செய்திகளை அவிழ்த்து விட,அதைப் பொறுக்கி எடுத்து,தான்தோன்றித்தனமாக எழுதத் தூண்டுவது ஆரோக்கியமற்றது. ராகவனின் நாத’க்குரல் நாராசமாகப் படுகிறது. எதிர்வு அதை ஒவ்வொரு சொல்லாக மொழி பெயர்த்தது மோசமான நையாண்டித்தனம். தமிழ் எழுதத் தெரியாத,அதை வாசித்து விளங்கத் தெரியாத கருத்தாடல்காரர்கள் பெருகிப் போவது சமூகக் கோளாறு. எனினும் விடுப்புப் புடுங்க, அய்யரின் தொடர் ‘சிந்துபாத்தின் சரிதமாக’ விரிய வாழ்த்துகள்.

  35. சருகு says:
    16 years ago

    இணைய வெளியில் ஒருவகையான மனப்பிறழ்வு அளவுக்குச் சென்று பிறரை வசைபாடும் மனிதர்கள் அதிகம் உலவுகிறார்கள். இவர்களுக்கு கருத்துக்கள் எவையும் முக்கியமில்லை. எதையாவது ஒன்றை தங்கள் தரப்பாக வகுத்துக்கொண்டு வசையை கொட்டவேண்டியதுதான் இலக்கு. இணையம் அவர்களுக்கு ஓர் இடத்தை அளிக்கிறது. அவர்கள் ஒளிந்து கொள்ள வாய்ப்பும் அளிக்கிறது. தங்கள் ஆழ்மனதில் உள்ள காழ்ப்புகளை எல்லாம் இணையத்தில் கொட்டுகிறார்கள்.
     பொதுவாக இணையவசைகளின் பாணியை கவனித்தால் ஒன்று புரியும். எந்தவகையிலும் பொருட்படுத்தத்தக்க எதையுமே எழுதும் திராணி இல்லாதவர்கள்தான் அதிகமும் தீவிரமான விமரிசனங்களில் ஈடுபடுகிறார்கள். குறிப்பிடத்தக்க விஷயங்களை எழுதிப் புகழ்பெற்றவர்கள்தான் இவர்களின் இலக்கு. இது ஒருவகை ஆற்றாமையினி தாழ்வுணர்ச்சியின் வெளிப்பாடு மட்டுமே. ஆனால் இத்தகைய மனச்சிக்கல்கள் இணையம் அளிக்கும் அற்புதமான விவாத வாய்ப்பை பயன்படுத்தமுடியாமல் செய்கின்றன.இணையத்தில் பிறரை கீழ்த்தரமாக வசைபாடுவதுஇ அவர்களின் அந்தரங்கங்களை தோண்டி எடுத்து திரித்து வெளியிடுவதுஇ எழுதவரும் பெண்களை அவமதிப்பது என்பது ஓர் இயக்கமாகவே நெடுநாள் நடைபெற்றது. இன்றும் பெண்கள் இணைய வெளிக்கு வர அச்சப்படும் நிலை உருவாகியது. இவையெல்லாம் பெரியார் பெயராலிதமிழியத்தின் பெயரால் சிலரால் செய்யப்பட்டன. பெரியாரியம் பேசும் கணிசமானவர்கள் இவற்றை ஆதரிக்கவும் செய்திருக்கிறார்கள். அவை தங்களை திருப்பித்தாக்கியபின்னர்தான் அவர்கள் விபரீதத்தை உணர்ந்தார்கள்.
     அவ்வகையில் இணையம் தமிழ்ச்சூழலில் கருத்துப்பரிமாற்றத்துக்கான சாத்தியங்களை இல்லாமலாக்கி நம் பொதுவெளியை சீரழித்தது என்றே சொல்ல வேண்டும். இன்றும் தமிழில் இணையத்தில் ஓர் பொது உரையாடல் சாத்தியம் என நான் நம்பவில்லை.இணையத்தில்  தமிழில் வரும் எதையுமே நான் நம்புவதில்லை. இந்நிலைக்கு முன்னோடி இணையப்பதிவாளர்கள்தான் பொறுப்பு.
     இன்று இணையத்தில் நமக்கு வாசிக்கக் கிடைப்பவற்றில் தொண்ணூறு விழுக்காடு குப்பையே. ஒன்று அவதூறுகளும் வசைகளும் கலந்த விஷமயமான குப்பைகள். அல்லது எந்தவிதமான பொருளும் இல்லாமல் போகிறபோக்கில் எதையாவது எழுதித்தள்ளும் சருகுக் குப்பைகள்.   எந்த ஒரு தலைப்பிலும் இணையத்தில் தமிழில் தேடினால் ஒன்று அல்லது இரண்டு பதிவுகளே பொருட்படுத்தக்கூடியவையாக இருக்கும். பெரும்பாலானவை அரட்டையோ வசையோ ஆகவே இருக்கும். சந்தேகமிருந்தால் தேடிப்பாருங்கள்.
     தமிழ்ச்சமூகத்தின் குப்பைக்கூடையாக இணையத்தை ஆக்கியவர்கள் படித்த இ பதவிகளில் இருக்கும் உயர்நடுத்தர வற்கத்தினரே என்பது நாம் வெட்கி தலைகுனியவேண்டிய விஷயம். இன்று ஒருவர் தமிழ் இணையத்தை மட்டும் பலவருடங்கள் வாசித்தார் என்றால் அவர் எந்தவகையான பொது அறிவும் இலக்கிய அறிவும் இல்லாத பாமரராகவே இருப்பார். தமிழில் உள்ள பல மூத்த வலைப்பதிவர்களின் வலைப்பூக்களை பார்த்தால் இது தெரியுமி ஒரு பொதுப்புத்தி கொண்ட வாசகன் மதிக்கும் ஒரே ஒரு பதிவுகூட இல்லாமல் பல வருடங்களாக அவை செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன! இத்தனை வருடங்கள் அவர் குமுதம் போன்ற ஒரு வணிக அச்சிதழை வாசித்தால்கூட அடுத்தகட்டத்தை நோக்கி நகர முடியும்
    -ஜெயமோகன்.-

    • Anj says:
      16 years ago

      ஜெயமோகன் கொட்டிக்கொண்டு இருக்கும் குப்பைகளில் இதுவும் ஓன்று. இவரின் முழு முதல் நோக்கமே ஈழத் தமிழர்களை இழிவுபடுத்துவதுதான். இவரின் ஆக்கங்களை தொடர்ந்து வாசித்தாலே விடயம் புரியும். மிக முக்கியமாக இவர் ஈழ தமிழ் பெண்களை மிக மிக கேவலமா எழுதிக்கொண்டு இருக்கிறார். சில வாரங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் காவல் துறையின் அத்து மீறலால் ஈழத்து பெண் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்தது கூட இவர் போன்றவர்களின் ஆக்கங்களால்தான். “உலோகம்” என்ற ஆக்கத்தில் ஈழத்து பெண்களை தமிழ்நாடு காவல் துறை எப்படி கையாள வேண்டும் என்பதை விரிவாக எழுதி உள்ளார்.

      இவர் கூறும் மனப்பிறழ்வு என்பது இவருக்குத்தானே ஒழிய மற்றவர்களுக்கு அல்ல. இவர் கூறும் உயர் நடுத்தர வர்க்கம் என்பதற்க்கு இவரின் அளவுகோல் என்ன. மற்றவர்கள் என்ன எழுதவேண்டும் என்ன எழுதக்கூடாது என்று கூற இவர் யார். இவருக்கு என்ன அதிகாரம் உள்ளது. பெண்களின் கண்ணியம் பற்றி பேச இவருக்கு எந்த அருகதையும் கிடையாது இவரின் ஆக்கங்களை வாசித்தாலே விடயம் புரியும். மூன்று வயதில் முன் வீட்டு அன்ரியின் மார்பகங்களை ரசித்ததை எல்லாம் எழுதியவர் தானே இவர்.

      ஈழத்தமிழர்களால் பல இணைய தளங்கள் இயக்கப்படுவது இவர் போன்றவர்களின் பிழைப்பில் மண்ணை போடுவதால் இப்படி உளறிக்கொன்று இருக்கிறார். கடந்த வருடம் சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் புலமைபித்தன் கூறியதுபோல் தமிழ் எழுத்தாளர்கள் முன்பை விட பொருளாதாரத்தில் மிகவும் மேலோங்கிய நிலையில் இருப்பதுக்கு ஈழத் தமிழர்தான் காரணம் இதையே பாடகர் மனோ கூட தனது செவ்வி ஒன்றில் இதை கூறி இருந்தார் (குமுதம் என்று நினைக்கிறேன்) . ஜெயமோகன் தனது ஆக்கங்கள் எல்லாவற்றிலும் தமிழ்நாடு மக்கள் அறிவில்லாதவர்கள், முட்டாள் கூட்டம் என்றும் கேரளா மக்கள் அறிவானவர்கள் என்றும் எழுதுவார். ஆனால் ராஜீவ் காந்தி கொலை விடயத்தில் மட்டும் தமிழ்நாடு மக்கள் அறிவாளிகள் என்று எழுதுவார். இதே ஜெயமோகன் இரண்டு வருடங்களுக்கு முன்பு குமதம் online இல் ஏகலைவனுக்கு கொடுத்த செவ்வியில் கூட ஈழத் தமிழர்களை இழிவு படுத்தி இருந்தார்.

      ஈழ மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்படும்போது ஆஸ்திரேலியாவில் சுற்றி விட்டு வந்து நடந்தது எல்லாம் சரிதான் என்று எழுதியவர் இந்த மஹா வித்துவான். இவர்களை எல்லாம் கணக்கில் எடுக்க வேண்டிய அவசியமே இல்லை. இவருக்கு எங்கள் பணம் மட்டும்தான் குறி. எங்கள் மக்கள் மத்தியில் இருக்கும் முட்டாள்கள் முதலில் திருந்த வேண்டும். இது என்ன நோய் என்பது இப்போது புரிந்திருக்கும். தயவு செய்து இப்படிப்பட்ட மனப்பிறழ்வு உள்ளவர்களை எந்த விடயத்துக்கும் உதாரணமாக எடுக்கவேண்டாம்.

      • சருகு says:
        16 years ago

          நன்றி   தகவல்களுக்கு    நானும் அறிவேன்.  ஆனால்  அவர்  இந்தக்கருத்து சரியாகப்படுகிறது.

        இந்திய இராணுவ காலத்தில் அன்புவழிநிகழ்ச்சியில் எழுத்தாளர் ஜெயகாந்தன்  பேசினார்.அவ்ரின் எழுத்துக்களில் பெருமதிப்பிருந்தநேரம். இந்திய ராணுவத்தின் கொடுமையோ  தாங்க முடியாத்தாக இருந்தநேரம்.
        மனுஷனின் பேச்சு வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சுவது போல் இருந்தது.அதற்கு பிறகு அவரின் மீது வெறுப்பாகவிருந்தது.

        ஜெயமோகனின் எழுத்துக்களை    நீங்கள் ஒன்று விடாமல் படிகிறீர்கள் என்று புரிகிறது.
        ஏன் அவரின் எழுத்துக்களை படிக்கிறீர்கள்  குப்பை என்று சொல்லிக்கொண்டு.
         “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்  மெய்ப்பொருள் காண்பதறிவு :

        ‘உலகில் அறிவுக் குறையின்றி வளர்ந்து நிறைவு பெற்று வாழ விரும்புவோர் எந்த ஒரு பொருளைப் பற்றி யார் சொல்லக் கேட்டாலும், யார் எழுதக் கண்ணுற்றாலும் அந்தப் பொருளின்கண் உண்மையுள்ளதா என்று ஆராய்ந்து தெளிதல் வேண்டும். இவ்வாறு ஆய்வதன் மூலமே செம்பொருள் – மெய்ப்பொருள் கிடைக்கும். நூல்வல்லார் எழுதிய அகராதி, நிகண்டுகளாயினும் அவை கூறும் சொற்பொருள் சரிதானா என்று சிந்தித்தல் நலம் பயக்கும். ஆராயாது ஏற்றுக் கொள்வது அறிவுடைமைக்கு அழகன்று. ஏனெனில் இயற்கை அறிவும் நூலறிவும் ஒருங்கே அமையப்பெற்ற சான்றோர்களும் சிலபோது முறை மறந்து எழுதுதல் – பேசுதல் உண்டு ‘என்பதனை மறத்தல் கூடாது. -அவ்வைகண்ணண்

        பின்னூட்டம் பற்றி  ஜெயமோகன் சொன்னகருத்தை ஆராயலாம்  அவர் வாயை விட்டுவிடலாம்.இந்த்க்கருதுக்காக  அவர்  எல்லாக் கருத்தும்  சரியென்ன்பதாகாது.

        • Anj says:
          16 years ago

          வணக்கம் சருகு
          உங்கள் பதிலுக்கு நன்றி. ஜெயமோகன் பற்றி ஆராய்வதற்கு இது இடமல்ல. இருந்தாலும் ஒரு சில வரிகள் எழுதலாம் என்று நினைக்கிறேன். நான் இவருடயதை மட்டுமல்ல எல்லோருடைய ஆக்கங்களையும் வாசிப்பதுண்டு. அதற்கு காரணம் இவர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ளத்தானே ஒழிய வேறொன்றுமில்லை. அத்துடன் மற்றவர்கள் போல் கண்ணை மூடி கொண்டு இப்படி பட்டவர்கள் பின்னால் செல்லாமல் இருக்கவும் முடிகிறது. இப்படிபட்ட எழுத்தாளர்கள் எம் உழைப்பில் வாழ்ந்து கொண்டு எங்களையே இழிவு படுத்துகிறார்கள். இது புரியாமல் எம்மவர்கள் இவர்களை வெளிநாடுகளுக்கு அழைத்து சென்று இலக்கிய கூட்டம் நடத்துகிறார்கள்.

          நீங்கள் குறிப்பிட்ட அந்த ஆக்கத்தை இவர் எழுத காரணமே ஸாரு நிவேதிதா என்ற எழுத்தாளர் மேல் உள்ள தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி தானே ஒழிய வேறொன்றுமில்லை. இருவருடைய இணையதளங்களையும் பாருங்கள் இந்த ஆக்கம் வந்த திகதியையும் பாருங்கள் விடயம் புரியும். இருவருக்கும் இடையில் அப்படி ஒரு பாசப் பிணைப்பு. எந்த விடயத்துக்கும் இவர்களை உதாரணமாக எடுக்க முடியாது.
          தனிப்பட்ட விடயங்களை பொதுப்படை ஆக்கி அதிலேயே பிழைப்பு நடத்துவார்கள். எம்மினத்தை மிகக் கேவலமாக எழுதுகிறார் தாங்க முடியவில்லை. இலங்கையில் இருந்து வந்த புத்த பிக்கு தனது குருவை மனம் மாற்றினாராம் அதனால் தானும் மனம் மாறி விட்டேனாம்.
          மற்ற தொழில்களுக்கு இருப்பது போன்று தொழில் நியதி (Professional ethics) என்ற ஓன்று எழுத்தாளர்களுக்கு கிடையாது அதனால் எதை வேண்டுமானாலும் எழுதலாம்.
          இதற்கு மேல் இந்த விடயம் பற்றி எழுத விரும்பவில்லை.
          நன்றி சருகு. மீண்டும் ஒரு பின்னூட்டத்தில் சந்திப்போம்.
          Have a good day. Bye Bye.

          • சருகு says:
            16 years ago

              நன்றி  வாசிப்பும்  ம்றுவாசிப்பும் சிந்தனையும் தான்… தேர்ந்தெடுத்து வாசிப்பதை விட     வாசித்து வாசித்து தேர்ந்தெடுப்பதுதான்  எனக்கும் பிடிக்கிறது.
                    நீங்கள்நல்லதொரு வாசகனாக இருப்பது  தொடரட்டும்
            வணக்கம்

        • Anj says:
          16 years ago

          வணக்கம் சருகு
          மீண்டும் வந்ததற்கு மன்னிக்கவும். சாரு நிவேதிதாவை எழுத்தாளர் என்று கூறியதற்கு இன்னுமொரு மன்னிப்பு. அவர் எழுத்தாளரா இல்லையா என்பதை அவரின் இணைய தளத்தை பார்த்து நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். vinavu.com இல் இவர்களை பற்றி நிறைய ஆக்கங்கள் உண்டு. நேரம் கிடைத்தால் வாசித்து பாருங்கள். இருவருக்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்னவென்றல் சாரு நிவேதிதா எம்மக்களை ஜெயமோகன் அளவுக்கு கேவலப்படுத்தவில்லை.

          நன்றி மீண்டும் சந்திப்போம்
          Take care. Bye Bye.

          • சருகு says:
            16 years ago

              நிறைய வாசிக்கும்போது  ஒரு பிரச்சனை  பற்றிய பல்வேறு பார்வைகள்  கிடைக்கின்றன.மனிதர்கள்  உலகத்தை அதன்நிகழ்வுகளை த்ங்கள் அனுபவங்களினூடாவே பார்க்கிறார்கள்.

            எழுத்துக்கள் என்பவை உலகு பற்றிய பல்வேறு பார்வைகளே
            நீங்கள் வணிக எழுத்தையும் வணிக எழுத்தாளர்களையும்  படைப்பாளிகளோடு போட்டுக்கலக்குகிறீர்கள்.
            வணிக எழுத்தாளர்கள் பார்வைகளை ப்ற்றி அவ்வளவு யோசிப்பதிலை.அவ்ர்கள்  விற்கக்கூடியதை எழுதுவார்கள்
            இப்போது ஈழச்சமாச்சாரம் விற்பனைப்பெறுமதி கூடியது என்பதால் இந்த வணிக எழுத்தாளர்கள் ஈழ ஆதர்வு எடுப்பார்கள்.
             நீங்கள்  இவர் எம்மை ஆதரிக்கிறாரா  எதிர்க்கிறாரா என்ற கண்ணாடியினூடாக மாத்திரம் அவர்களை எடை போட்டால் அது ஏமாற்றமாகத்தான் இருக்கும்.
            எதிராய்ப்பேசுவதற்கும்நிதி கிடைக்கும். ஆதரவாய் இருந்தாலும்நன்மை கிடைக்கும்.

            எழுத்துலகில்   இலக்கிய உலகிற்கு ஒரு அரசியல் இருக்கிறது.

            எழுத்துலகின்  நிரந்தர விவாதம்   எழுத்தைப்பார்ப்பதா எழுத்தாளனைப் பார்ப்பாதா?
            கலை கலைக்காகவா   கலை மக்களுக்காகவா ?

            கருத்து வேறு படைப்பு வேறு. இன்றைய உலகில் கருத்துக்களில் பலர் சமரசம் செய்து கொண்டுதான் வாழவேண்டியிருக்கிறது.
            ஆனால் உள்ளுர இருக்கின்ற மனச்சாட்சியின் வழியே ஒரு உண்மையான படைப்பு தோன்றலாம்
            அப்போது அந்த படைப்பைநிராகரிக்க முடியுமா?

            வினவு தளமும்  இன்னுமொரு பார்வைதான். வணிகநோக்கற்றுப்போகிறபோதுதான் எழுத்துக்கள் உண்மையைநெருங்குகிறது.

            கவனம் ஈர்ப்பதற்காகவும்  சிலர் எழுத்துக்களில் கலகம் செய்வதுண்டு .
            ஆக   எப்பொருள்  யார் வாய் கேட்பினும்..

              வணக்கம்

  36. THAMILMARAN says:
    16 years ago

    இராணூவம் முகாம்களூக்குள் முடங்கிக் கிடந்த காலம் எங்கள் வகுப்பரைகளூக்கு போராளீகள் வருவார்கள் விதம்,விதமாகப பேசுவார்கள் அந்த நாட் களீல் அடிகளூம் உதைகளூம் என்றூ புலொட் வானொலியில் வரும் பாடலும் அந்த வானொலியும் பிரபலம்.உமா மகேஸ்வரன் கடவுளாக இருந்த காலம் அது மான் யு யுனைடெட் போன்றூ புலிகள் வீச்சோடு எழுந்து , செல்ஸீ போல டெலோ வந்தார்கள். கிரிக்கெட் கோலாகலமாக இருந்தது.போராட்டம் வலியாக இல்லாத காலம். எல்லா வ்லியுமாக முள்ளீவாய்க்கால் அமைந்து போயிற்றூ.

  37. Ravi says:
    16 years ago

    அதென்ன இலங்கையில் க.பொ.த. பரிட்சை சித்தியடையாதவர்களுக்கு இங்கிலாந்தில் “ லோ” ஆபிஸில் வேலை? அதில் என்ன விவகாரம் தெரிகிறது? இலங்கையில் க.பொ.த. பரிட்சை சித்தியடையாதவர் இங்கிலாந்தில் படித்து பட்டம் பெறமுடியாதா? இங்கிலாந்து என்ன இலங்கையா அல்லது இந்தியாவா லஞ்சம் கொடுத்து பட்டம் பதவி வாங்க.இணைய வெளியில் ஒருவகையான மனநோய்பிடித்த பிறரை வசைபாடும் மனிதர்கள் அதிகம் உலவுகிறார்கள். இவர்களுக்கு கருத்துக்கள் எவையும் முக்கியமில்லை. தங்கள் ஆழ்மனதில் உள்ள காழ்ப்புகளை எல்லாம் இணையத்தில் கொட்டுகிறார்கள்.இது ஒருவகை ஆற்றாமையின் தாழ்வுணர்ச்சியின் வெளிப்பாடு மட்டுமே.

    • DR.Gangatharan says:
      16 years ago

      மன அழுத்தம் என்பது ஒன்றும் பெரிய வியாதி இல்லை.இது எவருக்கும் வரலாம் War Hero Prime Minister வின்சன் சேர்சில் கூட இதனால் அவதிப்பட்டார்.மனோ தத்துவ டாக்டரை உடனடியாக அணுகி சிகிச்சை பெறாமல் முத்தவிட்டால் பின்னர் சாதாரன நிலைக்கு கொண்டு வர பல நாட்கள் பிடிக்கும்.Pessimistic personality. People who have low self-esteem and a negative outlook are at higher risk of becoming depressed. These traits may actually be caused by low-level depression (called dysthymia).

      • Ravi says:
        16 years ago

        டாக்குத்தரே,”முள்ளி வாய்க்காலிலை கோவணத்தையும் உருவிவிட்டான்”, “மருந்தடிக்கிற விமானத்தைக்கொண்டு வந்து நமக்கு றீல் விட்டவை” .இப்படியான விமர்சனம் செய்யும் தமிழர்களுக்கு என்ன வியாதி?.அதற்க்கு என்ன மருந்து?.அந்த வியாதியை தீர்க்கலாமா?முத்த விட்டால் என்ன பிரச்சனை?பாதிக்கப்பட்டவர்களை பொதுசனத்துடன் பேச பழக விடலாமா? இதனால் சமுதாயத்த்ற்க்கு ஏற்படும் பாதிப்பு என்ன? தயவு செய்து பஞ்சியைப் பார்க்காமல் பதில் தரவும்.நான் கேட்க மறந்த கேள்விகளுக்கும் தாரளமாக பதில் தரலாம்.

        • Anj says:
          16 years ago

          மன அழுத்தம் என்பது பெரிய நோய் அல்ல ஆனால் கவனிக்காது விட்டால் மன நோய் ஆக மாறலாம்.

          “யார் சொல்லியிருந்தாலும் எங்கு படித்திருந்தாலும்

          நானே சொன்னாலும்

          உனது புத்திக்கும் பொது அறிவுக்கும்

          பொருந்தாத எதையும் நம்பாதே” புத்தர்.

          • Soorya says:
            16 years ago

            புத்தியும் பொதுஅறிவும் இல்லாதவர்களை என்ன செய்வது? இப்படியானவர்களுக்கு மனச்சாட்சியும் மங்கிப்போய் விட்டதா?

          • Anj says:
            16 years ago

            மனட்சாட்சி மங்கிப்போய் இருந்தால் கூட பரவாய் இல்லை சிலருக்கு அது செத்தே போய்விட்டது.

        • அயலவன் says:
          16 years ago

          கருத்துக்கூறும் சிலருக்கு புலிகள் உப்பு தடவி காச்சி எடுத்து இருக்கிறார்கள் என்று மட்டும் புரிகிறது. இல்லாவிட்டில் உந்த வாயால் உப்பிடி வசை வரவே வராது. அயலவன்

    • iravu says:
      16 years ago

      இணையத்தில் மட்டும் என்ற மட்டம் தட்டும் வேலை…….பத்திரிகைகளை பிரட்டிப்பாருங்கள்…..பழைய புதிய பக்கங்களில் பல மனநோய்களை காணலாம்.

  38. shan naran Norway says:
    16 years ago

    ஈழம், புலி, புலம்
    ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த 1977, வெடித்த 1983 காலகட்டத்தைவிட மிகவும் மோசமான நிலையில், ஈடு செய்ய முடியாத இழப்புகளுடன் தமிழ்மக்கள் இன்று (கை)விடப்பட்டுள்ளனர்.

    பாராளுமன்ற சொகுசுகளுக்காக தமிழ்மக்களை விற்ற தமிழர்விடுதலைக்கூட்டணி, இந்தியாவுக்குச் சோரம் போன ரெலோ தலைமை, தொடர்ந்த ஈ.பி.ஆர்.எல் எவ் தலைமை, ஈ.என்.டி.எல்.எவ் தலைமை, இலங்கை அரசுக்கு சோரம் போன புளொட் தலைமை, ஈ.பி.டி.பி தலைமை, ரி.எம்.வி.பி தலைமை, புலிகளைச் சரணடைந்த ஈரோஸ் தலைமை, யாரோ ஒரு தரப்பினரிடம் சரணடைய முயற்சித்த/ சரணடைந்த புலித் தலைமை….. என்று தமிழ்மக்களின் இன்றைய அவலத்துக்கு அனைத்துத் தலைமைகளும் காரணமாயின. இதில் புலிகள் மீது மட்டும் குற்றத்தைச் சுமத்திவிட்டு மற்றையவர்கள் தப்பிவிட முடியாது.

    ஆனால், விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் ஏமாற்றப்படுவது தெரியாமல், இந்தத் தலைமகளை நம்பி தமது சொந்த சுகங்களைத் தூக்கி எறிந்து போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்டவர்கள் தியாகமும், வீரமும், சமூகப் பொறுப்பும் கொண்ட போராளிகளே. ரெலோ தொடங்கி புலிகள் வரை எல்லா இயக்கங்களிலும் இருந்த இவர்களின் அர்ப்பணிப்புக்கும், பங்களிப்புக்கும் முன்னால் தொடர்ந்து எழுத்தோடு நிறுத்திவிட்டுத் தூங்கிவிடும் நான் என்னைத் வெறும் தூசாக உணர்ந்து கூசிக் குறுகுகிறேன். இதுவரை மரணமடைந்த போராளிகள் தவிர, சிறையில் வதைபடுகின்ற போராளிகள், அங்கவீனர்களாகிப் போன போராளிகள், சராசரி வாழ்வை இழந்து நடைபிணமாய் திரியும் போராளிகள், மனச்சிதைவடைந்துள்ள போராளிகள் என்று…. இவர்களைச் சந்திக்கும்போதும், கேள்விப்படும்போதும், பார்க்கும்போதும் குற்றவுணர்வு என்னைக் கொத்திக் குதறுகிறது. என் மீதே எனக்குக் கோபம் வருகிறது.

    போராளிகளினதும், பொதுமக்களினதும் அழிவிலும்/ இழப்பிலும் வாழ்ந்து கொண்டிருக்கும்/ வாழ்ந்துவிட்டுப் போய்விட்ட தலைமைகள் மீதும் கோபம் வருகிறது.

    இது குறித்த எந்த பொறுப்பும் ஏற்க மறுப்பது மட்டுமல்லாமல், போராளிகளையும், மக்களையும் கறிக்கு கருவேப்பிலை போல பாவித்துவிட்டு, தலைமையை சத்யசாயிபாபாவாக்கி, வெறும் கையில் தங்கச்சங்கிலி வரும் என்று வித்தை காட்டிக் கொண்டிருக்கும் புலம்பெயர்ந்த சாவுவியாபாரிகள் மீது கோபம் வருகிறது.

    30 வருடங்களுக்கு மேலாக அனுபவித்த துன்பங்களுக்கும், இழப்புகளுக்கும் இன்று கிடைத்திருக்கும் பதில் என்ன? இன்னும் கொடுமையான துன்பங்களும், இழப்புகளுமே. இவற்றுக்கு அடிப்படைக் காரணமான / இயக்கங்களின் தோற்றத்துக்கு வழிவகுத்த / தமிழ்மக்களிடம் ஆயுதத்தைத் திணித்த சிங்கள இனவாத அரசோ ஒரு இனத்தைச் சின்னாபின்னமாக்கி சிதறடித்த தனது வெற்றியை தேசியத் திருநாளாகக் கொண்டாடுகிறது.

    இந்த வெற்றிக்குக் கைகொடுத்தவர்கள் யார்? ஐ.நா.வா? உலக வங்கியா? இந்தியாவும், சீனாவும், பாகிஸ்தானுமா? நோர்வேயும், அமெரிக்காவுமா? அல்லது சிறீலங்கா முப்படைகளின் பலமா?

    இந்தப் புறக்காரணிகளைவிட முதன்மையானது ஆயுதப் போராட்டத் தலைமைகளின் காட்டிக் கொடுப்பும், சோரம் போதலும். விடுதலைப் போராட்டத்திற்கான களம் இருந்தது. மக்களின் உணர்வு இருந்தது. பங்களிப்பு இருந்தது. போராளிகளின் அர்ப்பணிப்பு/தியாகம் இருந்தது. இவை யாவும் ஆயுதப் போராட்டத்தின் தலைமைகளின் சுயநலத்துக்குப் பயன்படுத்தப்பட்டு, விடுதலைப் போராட்டம் சீரழிக்கப்பட்டு கடைசியில் புலிகளின் இராணுவப் போராட்டமாகச் சுருங்கி இன்று தமிழ்மக்களை சிங்களப் படைகளின் சப்பாத்துகளின் கீழ் மிதிபடவும், மின்சாரம் பாயும் முட்கம்பி வேலிக்குள் அடைபடவும், ஒரு வேளை சோற்றுக்கு எதிரிகளிடம் கையேந்தவும் வைத்திருக்கிறது.

    தமது முகாம்களுக்குள்ளேயே தமது போராளிகளுக்கு புளொட் சமாதி கட்டியது. இந்திய இராணுவத்துடன் சேர்ந்து போராளிகளையும், அவர்களுக்கு ஆதரவானவர்களையும் ஈ.பி.ஆர்.எல்.எவ் வேட்டையாடியது. இதையேதான் மற்றைய ஆயுதக்குழுக்களும் செய்தன.

    சிறீலங்கா அரசின் இராணுவ வெற்றியின் பின் இன்று அடுத்த நகர்வுக்குப் போகமுடியாமல் ஒரு சூனிய வெளியில் தள்ளப்பட்டமையில் அனைத்து ஆயுதக்குழுக்களுடன் புலித் தலைமையின் பங்கு மிக முக்கியமானது. தனது இருப்பு குறித்த அச்சம், அதிகாரப் பகிர்வுக்குத் தயாரின்மை, மக்களை நம்பாமை, தனிநபர் வழிபாடு, அரசியல் நீக்கம் போன்ற பிரபாகர/புலிச் சிந்தனை விடுதலைப் போராட்டத்துக்கு எதிராக இருந்தது. சிறீலங்கா அரசு அழித்த விடுதலைப் போராளிகளைவிட புலிகள் அழித்த போராளிகள் எண்ணிக்கையில் அதிகம். திட்டமிட்டும், நுட்பமாகவும் புலிகளுக்கு அப்பால் விடுதலையை நேசித்த சுதந்திர உணர்வாளர்கள், மக்களுடன் நின்று வேலை செய்த போராளிகள் புலித்தலைமையால் அழிக்கப்பட்டார்கள். புதியதோர் உலகம் கோவிந்தன், யாழ் பல்கலைக்கழக மாணவன் விமலேஸ்வரன் என்று உதாரணங்கள் தொடர்கின்றன. அரசியலுக்கு முன்னுரிமை கொடுத்த ஆயுதம் தரித்த இயக்கங்கள் கருவோடு அழிக்கப்பட்டன. ஆயுதப்போராட்டம்/இயக்கம் இவற்றுக்கு அடுத்த நிலையில் சிந்தித்தவர்களைக் கூட புலித்தலைமை விட்டுவைக்கவில்லை. கவிதை எழுதியோர், மேதினம் ஒழுங்கு செய்தோர் என்று எல்லோரையும் போட்டுத் தள்ளிவிட்டு, இலங்கை அரசுடனான பேச்சுவார்த்தைகளின்பின் புலிகள் இப்படிக் கூறினர். “பீரிஸ் போன்ற படித்த கெட்டிக்காரர்களை சிங்களவர்கள் பேச்சுவார்த்தைக்கு கூட்டி வருகிறார்கள். எங்களிடம் இந்த இடம் வெற்றிடமாக உள்ளது”

    புலிக்கு வெளியில் மட்டுமல்ல, புலிகளுக்கு உள்ளேயும் பிரபாகரன் தவிர்ந்த இன்னொரு தலைமைக்கு இடமிருக்கவில்லை. இதற்காக தம்மை நம்பி வந்தவர்களைப் பலிகொடுக்கவும் தலைமை தயங்கவில்லை.

    சாதாரண வெகுசன செயற்பாடுகளைக் கூட மறுத்து அனைத்தையும் புலிக்கொடியின் கீழ் கொண்டுவந்த புலிச்சித்தாந்தத்தின் அரசியல் நீக்க செயற்பாடு இன்று அவர்களது அழிவுடன் தமிழ்மக்களுக்கு விட்டுச் சென்றது ஒரு அரசியல் சூனியத்தையும், சிங்கள இனவாத அரசின் தமிழ் சேவகர்கள் டக்ளஸ், கருணா, சங்கரி, த.தே.கூ போன்றவர்களையும்தான்.

    தமது புலிச்சித்தாந்தம் ஏற்படுத்தும் எதிர்நிலைகள், தமது அழிவுக்கே வழிவகுப்பதை புலித்தலைமை சிறிதளவேனும் உணர்ந்துகொள்ள முடியாதபடி அவர்களைத் தொடர்ந்து உருவேற்றிக்கொண்டிருந்தவர்கள் புலம்பெயர்ந்த தமிழ்சாவு வியாபாரிகள். ஈழத்தில சுயசிந்தனை, கருத்துப் பகிர்வுகள் ஆயுதங்கொண்டு அடக்கப்பட்டபோது, புலத்தில் இருந்து இவை முன்னெடுக்கப்பட்டன. ஆனால் புலிச்சித்தாந்தத்தின் புலம்பெயர் பிரதிநிதிகள் புலத்திலும் வன்முறை மூலம் அடக்க முயன்றனர். முடியாதபோது விமர்சிப்பவர்களை துரோகியாக்கி தனிமைப்படுத்தினர். அரசின் கூலிகளாக்கினர். தமக்கிருந்த ஆட்பலம், பணபலத்தைப் பயன்படுத்தி சர்வதேச ரீதியில் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பதற்குப் பதில் முழு வளத்தையும் பயன்படுத்தி புலிச்சித்தாந்தத்தை கட்டிக்காத்து புலிகளையும், போராட்டத்தையும் முட்டுச் சந்திக்கு கொண்டுவந்தனர்.

    புத்திசீவிகள் மட்டத்தில் கூட நாங்கள் தப்பி வந்துவிட்டோம், அவர்கள் அங்கே உயிரைக் கொடுத்துப் போராடுகிறார்கள், ஆகவே வாயை மூடிக்கொண்டு பேசாமலிருப்போம் என்ற கருத்தே இருந்தது. தமது “அறிவை”ப் பயன்படுத்தி இவர்களும் புலிகளின் சித்தாந்தத்தை விமர்சித்தவர்களை தனிமைப்படுத்தியும், எழுத்துப் புரட்சியாளர்கள் என்று கேலிசெய்தும் வந்தனர்.

    தலைமையின் “கொள்கை”யாலும், புலம் பெயர் சாவு வியாபாரிகளாலும் இன்று புலிகள் நயவஞ்சமாகக் காட்டிக் கொடுக்கப்பட்டு அழிக்கப்பட்டனர். தலைமையுடன் சேர்ந்து அவர்களை கடைசிவரை நம்பிப் போராடிய போராளிகள் கொல்லப்பட்டனர். மக்கள் திறந்த வெளியில் கைதிகளாக்கப்பட்டுள்ளனர்.

    ஈழத்தில் புலிகளின் தலைமை அழிக்கப்பட்டாலும், புலிகளையும் போராட்டத்தையும் இந்த நிலைமைக்குக் கொண்டு வந்ததில் பெரும்பங்காற்றிய புலம்பெயர்ந்த புலிச்சித்தாந்தம் இன்னும் பலமாகதான் இருக்கிறது. தாங்கள் கடவுளாக்கிய தலைவர் நயவஞ்சமாக ஏமாற்றப்பட்டு, தனது குடும்பத்துடன் சித்திரவதை செய்யப்பட்டு, மிருகத்தனமாக கொல்லப்பட்டதை எந்த உணர்ச்சியுமின்றி இதிகாகாசம் எழுதி மறைத்துக் கொண்டிருக்கும்/ கறுப்பு வெள்ளையாக புலி-துரோகி என்று இன்னமும் கன்னை பிரித்துக்கொண்டிருக்கின்ற புலி ஆதரவாளர்களிடம் இந்த சித்தாந்தம் இன்னும் அதே வீரியத்துடன் இருக்கிறது.

    தாம் கைப்பற்றிய சிங்களப் படைகளின் உடல்களை இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்த அல்லது இராணுவத்திடம் கையளித்த புலிகள் இன்று சரணடைந்த நிலையில் அதே சிங்களப்படைகளால் காட்டுமிராண்டித்தனமாக கொல்லப்படும்போதும், அவர்களது குடும்பங்கள் சின்னப் பிள்ளைகளுடன் கொல்லப்படும்போதும், இறந்த உடல்கள் கூட சிங்கள இனவெறியில் அவமானப்படுத்தப்படும்போதும், பெண் போராளிகளின் உடல்கள் நிர்வாணப்படுத்தப்படும்போதும் போரில் இது சாதாரணம் என்றும், அழிவது புலிகள்தானே என்றும் தமது மிருகத்தனத்தைக் காட்டும் புலி எதிர்ப்பாளர்களிடம் இந்தப் புலிச்சித்தந்தம் ஓங்கி நிற்கிறது.

    20000க்கும் மேற்பட்ட மக்கள் ஒரு சில நாட்களில் கொன்றுகுவிக்கப்பட்டபோதும், சரணடைந்த போராளிகள் கொல்லப்பட்ட யுத்த மீறல்களின்போதும், புலிகளின் குடும்பத்தினர், குழந்தைகள் கொல்லப்பட்டபோதும் புலிகளின் பயங்கரவாதம் ஓங்கும் போதெல்லாம் ஓடியோடி குரல் கொடுக்கும் சனனாயகவாதிகள்/ மனிதாபிமானவாதிகள் காணாமல் போனதும் அல்லது கண்டும்காணாமலிருந்ததும் இவர்களிடமும் இருக்கும் இதே புலிச்சித்தந்தம் அல்லாமல் வேறென்ன.

    இயக்கங்களின் தோற்றத்துக்கு காரணம் சிங்கள இனவாத அரசு. ஆனால் பல இயக்கங்கள் அழிக்கப்பட்டவும், முஸ்லீம்கள் வெளியேற்றபடவும், ஏனைய சிறுபான்மையினர் ஒடுக்கப்படவும் புலிகள் தனித்த இயக்கமாவதற்கும், தமது மக்களுக்கு எதிராகவே துப்பாக்கி தூக்கவும், இறுதியில் இன்று அழிந்து போகவும் காரணம் எங்களிடம் இருக்கின்ற “புலிச்” சித்தாந்தமும்தான். இதிலிருந்து முறித்துக்கொள்ளாதவரை, இந்தச் சித்தாந்தத்தினால் ஏற்பட்ட விளைவுகளுக்குப் பொறுப்பெடுக்காதவரை இப்போதிருக்கின்ற சூனியத்தைக் கடப்பதும், அடுத்த நகர்வுக்கும் போவதும் பற்றிப் பேசுவது……….

    Read more: http://porukki.weblogs.us/2009/06/12/eelam_puli_pulam/#ixzz0jIjNMDjx

    • THAMILMARAN says:
      16 years ago

      1977 இல் பிறந்த தாங்கள் ஏன் பாவாவை இழுக்கிறீர்கள்? கள்ள மட்டையில் காரும் தூள் காசில் கோயிலும் கட்டவும்,காசு என்றதும் கடவுலைக் கண்ட மாதிரி கையை குலுக்குவதும் புலம் பெயர்ந்த மண்ணீல்தானே நடக்கிறது. இங்குள்ள ஏழரைகலை நம்பி வாழ்விழந்த போராளீகலும் அவர்கள் குடும்பமும் அவர்களது சாபமும் இங்குள்லோரை விடாது.

      • Anj says:
        16 years ago

        நெல்லுக்கு இறைக்கும் நீர் வாய்க்கால் வழி ஓடி புல்லுக்கும் சேருமாம்

  39. uma says:
    16 years ago

    புலிகளின் தவறுகளுக்கெல்லாம் இன்றுவரை தேசியகீதம் பாடி அவர்களை வேறு பக்கம் திரும்பிப் பார்க்காமல் தடுத்தவர்களும், கூட இருந்தவர்களும் இப்போது பிரபாகரனே அனைத்துக்கும் காரணம் என்று எழுதுகிறார்கள்

    அந்தப் பணயத்தில் சில தவறுகளைச் செய்யும் சூழ்நிலைக்குள் வரலாறு அவரை நிர்ப்பந்தித்தவிட்டத
    தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் விடுதலை என்ற அதியுயர் இலக்கு நோக்கிய ஒரு மிகப் பிரமாண்டமான போராட்டத்தை நகர்த்திச் செல்லும் போது – அந்த இலக்கு மட்டுமே அவரது கண்களுக்குத் தெரிந்ததால், ஏனைய சில விடயங்களை அவர் பார்க்கத் தவறிவிட்டார் என்பது உண்மை தான்.

    சரியோ தவறோ – அந்த மனிதர் மட்டுமே தொடர்ந்து நடந்தார்.

    புதினத்திலிருந்து:

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...