Thursday, March 19, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வு-வரும் ஆனால் வராது : நிவேதா நேசன்

இனியொரு... by இனியொரு...
06/30/2013
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
1
Home பிரதான பதிவுகள் | Principle posts

Accord_indo_slஇலங்கையில் தமிழ்ப் பேசும் மக்கள் மீதான ஒடுக்கு முறை பிரயோகிக்கப்படுவது போன்றே உலகம் முழுவதும் மக்கள் கூட்டங்கள் மீதான ஒடுக்குமுறை தேசிய இனங்கள், இனக்குழுக்கள், நாடுகள் என்ற, வர்கங்கள் அடிப்படையில் பிரயோகிக்கப்படுகின்றன. பலர் கொல்லப்படுகின்றனர். கூட்டம் கூட்டமாக மக்கள் இனப்படுகொலை செய்யப்படுகின்றனர். இவற்றை நடைமுறைப்படுத்தும் பாசிச அரசுகளுக்கு எதிரான போராட்டங்கள் மக்களால் வெவ்வேறு அளவுகளில், வெவ்வெறு பரிணாமங்களில் முன்னெடுக்கப்படுகின்றன.

இவற்றை அழிக்கும் பாசிச அரசுகள் மக்கள் மீதான ஒடுக்கு முறைக்குத் தீர்வுகளையும் திட்டங்களை முன்வைப்பதாகக் கூறிக்கொண்டே அழிப்பைத் தொடர்கின்றன.
இந்த அழிப்பை ஆழமாகத் குடைந்து பார்த்தால் பல் தேசிய நிறுவனங்களின் பங்கும், நிதி மூலதனத்தின் பூதம் போல வெளியேறும்.

அழிப்பிற்கு எதிராக மக்களின் போராட்டத்தைப் பிந்தள்ளுவதற்காகவும் எதிர்பை எதிர்கொள்ளவும் நாடுகள் ஒன்றிணைந்து கொள்கின்றன. நபர்களும், அமைப்புகளும் முடுக்கிவிடப்படுகின்றன. இவர்களிடையே ஒருவகையான ஒழுங்கமைப்பு உருவாக்கப்பட்டுவிடுகின்றது. இந்த ஒழுங்கமைப்பின் பிரதான நோக்கமாக எதிர்ப்பு சக்திகளை அழிப்பதும் போராட்டத்தைத் முளையிலேயே சிதைப்பதுமே காணப்படுகின்றது.

சிலர் விபரம் புரியாமல் முட்டாள்தனமாகவும் பலர் தமது சொந்த வியாபார நோக்கங்களுக்காகவும் இந்த வலைப்பின்னல்களுள் இணைந்து கொள்கிறார்கள்.

இவர்கள் முன்வைக்கும் பிரதான வேலைத் திட்டங்களில் ஒன்று ‘தீர்வு’ என்பது. தீர்வு என்பது அழிக்கும் பாசிச அரசுகளுக்கு எதிரான எதிர்ப்பு சக்திகளை ஒன்றிணைப்பதற்குப் பதிலாக அவர்களுடன் பேசித் தீர்த்துக்கொள்வது என்பதாகும்.

திட்டமிட்டு தெரிந்தே அழிவுகளை நிகழ்த்தும் பாசிச இனப்படுகொலை அரசுகளிடம் தீர்வு குறித்துப் பேசுவதற்கு என்ன இருக்கிறது. நீங்கள் குறைவாக அழிப்பை நடத்துங்கள் என்றா? அல்லது அழிப்பதை அழித்துவிட்டு கிடைப்பதில் எங்களுக்கும் கொடுஙகள் என்றா?

அனைத்து அதிகாரத்தையும் கைகளில் வைத்திருக்கும் அழிக்கும் எதிரியோடு பேசுவதற்கு என்ன இருக்கிறது.

இன்று பேச்சுவார்த்தை என்று முழுச் சமூகத்தையும் மந்தைகளாக்கும் கூட்டங்கள் தெரிந்துகொண்டே தமிழ்ப் பேசும் மக்களின்ம் மீதான ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டங்களை கொச்சைப்படுத்துபவர்கள் மட்டுமல்ல அழிப்பதற்கு ஆதரவளிப்பவர்களுமாகும்.

சுய நிர்ணய உரிமைக்கான கோரிக்கையை அழிக்கும் நோக்கில் 1987 ஆம் ஆண்டு இந்திய அரசால் தயாரிக்கப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தம் பின்னதாக 13 வது திருத்தச்சட்டமாக இலங்கை அரசியல் சாசனத்தில் திருத்ததிற்கு உட்படுத்தப்படுகிறது.

இன்று 13 வது திருத்தச்சட்டம் என்பதை நிறைவேற்றுவதே தீர்வுக்கான வழி என்று கூறும் அரசியல் பிழைப்புவாதிகள் அது தீர்வல்ல என்பதையும் ஒத்துக்கொள்கிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து 13 வது திருத்தச்சட்டம் வேண்டும் ஆனால் அது தீர்வல்ல என தவிர்க்க முடியாமல் ஒப்பித்திருக்கிறார்கள்.

கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்ட குடியேற்றங்களூடாக தமிழர்கள் மூன்றில் ஒரு பகுதியாக்கப்பட்டுள்ளனர். வடக்குக் கிழக்கு இணைப்புக் குறித்து கிழக்கில் வாக்கெடுப்பு நடத்திய பின்பே தீர்மானிக்கப்பட வேண்டும் என்ற இந்தத் திருத்தச்சட்டம் இது குறித்து எந்த வலுவும் அற்றதாகிவிட்டது.
கிழக்கைப் போன்று இராணுவ ஆட்சி அதிகாரத்திற்கு உட்பட்ட வடக்கிலும் இலங்கை அரச பாசிஸ்டுக்களும் அதன் அடிவருடிகளுமே பெரும்பான்மையாக ஆட்சியைக் கையகப்படுத்துவார்கள். காணி மற்றும் போலிஸ் அதிகாரம் வழங்கப்பட்ட மாகாண சபையில் சிங்களக் குடியேற்றங்களும், பல்தேசிய நிறுவனனக்களின் நிலப்பறிப்பும் தங்கு தடையின்றி நடைபெறும். பாசிச ஆட்சி அதிகாரத்திலிருந்து வேறு எதனை எதிர்பார்க்க முடியும்?

தமிழீழம் பிடிக்கிறோம் என்று தமிழ் நாட்டின் எல்லைக்குள்ளேயே பிழைப்பு நடத்தும் ஒரு கூட்டத்தைப் போன்றே தீர்வு பிடிக்கிறோம் என்று இன்னொரு கூட்டம் உருவாகியுள்ளது. அதுவும் செத்துப்போய் புதைக்கப்பட்டுள்ள 13 வது திருத்தச்சட்டத்தை தோண்டியெடுத்து தீர்வு பிடிக்கிறார்களாம்.

இன்று இலங்கையில் தங்குதடையின்றி நிகழ்த்தப்படும் நிலப்பறிப்புக்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டங்கள் எழும் என்றெல்லாம் இலங்கை இந்திய அரசுகள் அச்சமடையத் தேவையில்லை.
நிலப்பறிப்பை உலகம் முழுவதும் நடத்தும் அமரிக்க அரசோடு ஒரு கூட்டமும், இந்திய அரசோடு இன்னொரு கூட்டமும் இணைந்து தமிழர்களுக்கு தலைமை தாங்குகிறோம் என்று ராஜபக்ச அரசின் நிகழ்ச்சி நிரலுக்குத் துணைபோகின்றனர்.

கேட்டால் தமிழ்ப் பேசும் மக்கள் பலவீனமானவர்கள் என்கிறார்கள்.

தமிழ்ப் பேசும் மக்கள் பலவீனமானவர்கள் அல்ல. அவர்களின் பலம் ஒருங்கிணைக்கப்படவில்லை. பலத்தைப் பிழைப்புவாதிகளே கூறுபோட்டு அழிப்பவர்களிடம் மக்களை அழைத்துச் செல்கிறார்கள்.

தமிழ்ப் பேசும் மக்கள் போன்றே உலகம் முழுவதும் ஒடுக்கப்படுகின்றவர்கள் வாழ்கிறார்கள். சிங்கள மக்கள் மத்தியில் ஒடுக்கப்பட்டு அழிக்கப்படுகின்றவர்கள் வாழ்கிறார்கள். தமிழ் நாட்டில் முற்போக்கு ஜனநாயாக சக்திகள் போராடுவதை முன்னுதாரணமாகக் காட்டியிருக்கிறார்கள். இவை அனைத்தையும் ஒன்றிணைத்து புதிய போராட்ட தந்திரோபாயத்தை வகுத்துக்கொள்ளும் போது மட்டுமே தமிழ்ப் பேசும் மக்களின் உறைந்துகிடக்கும் பலம் மேலெழும். இந்த ஒருங்கிணைவின் அழுத்தம் ஈழத்தில் ஜனநாயக இடைவெளியை ஒரு குறித்த எல்லைவரையாவது ஏற்படுத்தும். அந்த ஜனநாயக இடைவெளி மட்டுமே ஈழத் தமிழர்கள் தமது உரிமைக்காகப் போராடும் புதிய உத்வேகத்தை வழங்கும். கனவான்களின் கனவுகல அரசியல் அல்ல.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
ஆளில்லா விமானத்தால் ஸ்நோடன் கொல்லப்படலாம் : ரொன் போல்

சிநோடென் வேட்டையில் அமரிக்க அரசு தீவிரம்

Comments 1

  1. malar says:
    13 years ago

    விடுதலைப்புலிகள் அமைப்பைவிட இலங்கை அரசாங்கம் தான் இனவாத அரச பயங்கரவாதம் என்பதனை இந்த உலகம் ஏற்கத்தவறி உள்ளது ஆனால் அதனை நிரூபிக்கும் நேரம் இதுவாக பார்கப்படுவதனை விட அதற்கான காலத்தை நோக்கிநகர்தப்படும் தமிழினத்தின் நகர்வில் நம்பிக்கை இல்லாது விட்டாலும் யதார்தம் வலுவாக சித்தரிக்கும் இலங்கை அரசாங்கத்தினது இனவாதத்தை இனியும் இந்தியாவால் பாது காக்க முடியாது.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...