Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

‘துரோகி’களுக்கு எதிராக வங்காளிப் புலியும் ரஷ்யன் ஏ.கே யும் : சோளன்

இனியொரு... by இனியொரு...
05/22/2014
in பிரதான பதிவுகள் | Principle posts, இலக்கியம்/சினிமா
0 0
3
Home பிரதான பதிவுகள் | Principle posts
வங்காளிப் புலிப்படம் போட்ட கொடி
வங்காளிப் புலிப்படம் போட்ட கொடி

மேற்குலகமும் இந்தியாவும் சேர்ந்துதான் எம்மை அழித்தது என்று புலம்பிக்கொண்டிருந்தார்கள் புலம்பெயர்ந்து களம்கண்டவர்கள். அதைச் சுத்தியே மயிர்கூர்ச்செறியும் விவாதங்கள் ஐந்தாம் ஈழப் போராட்டம் போல உச்சக்கட்டத்தில் நடந்துகொண்டிருந்தது. அழித்துப்போட்ட ஐரோப்பாவுக்கும் இந்தியாவுக்கும் ‘விதானைக்கு லஞ்சம் குடுத்த மாதிரி’ வாழைக்குலையும் சாராயப் போத்திலும் குடுத்து எங்கட பக்கம் இழுத்துப் போடவேணும் என்று கோட்டு சூட்டுப் போட்ட ஒரு அன்பர் கோப்ரா பியர் மீசையில் முட்டி சிந்தனைச் செதுக்கிச் செதுக்கிப் பேசலானார். இன்னொரு அன்பரோ துரோகிகள் அழிச்சுப் போட்டாங்கள் என மீசை முறுக்கேற கொந்தளிக்கலானார்.

விவாதம் சூடேறச் சூடேற லஞ்சம் குடுப்பதா இல்லையா என்பது விவாதப் பொருளாக மாறியது. லண்டன் புறநகர்ப் பகுதி உணவகத்தில் ஈழத் தமிழர்களின் தலைவிதியைக் கையிலெடுத்த கனவான்களின் விவாதம் பற்பல தத்துவ முத்துக்களை உதிர்த்து உலர்த்தியது.

மேற்குலலம் துரோகிகள், இவர்களை நம்பக்கூடாது என்பவர்களுக்கும் லஞ்சமே தஞ்சம் என்பவர்களுக்கும் ஒரு ஒற்றுமை இருந்தது. இரண்டு குழுவுமே ஊடறுத்துத் தாக்கிய தத்தமது பஞ் டயலாக்குகளுக்கு ஊடாக ஒன்றை மட்டும் மறைத்தது. நாங்கள் விட்ட எல்லாத் தவறுகளையும் மறைத்து மேற்கு உலக மட்டுமே தவறு என்று ரெஸ்ரன்ட் இரவல் மேசையில் அடித்து அடித்து விவாதித்தது.

சோளனுக்கு கோப்ரா மேல் கோபம் இருந்தமையால். லயன் லாகர் மீது லைப்பு இல்லாமையால், பதப்படுத்தப்பட்ட பனங்கள்ளு அருந்தி அமைதியாக அவதானித்தான்.

திறந்தவீட்டுக்குள் நுளைந்த நாய் போல விவாதத்திற்குள் நுளைய வேண்டும் என்று இசக்குப் பிசக்காகச் சிந்தனை சிதறி ஓடியது.

ஏதோ தனக்குள் சொல்லிக்கொண்டான்;

மேற்குலகமும் இந்தியாவும் சேர்ந்து தான் அழித்தது என்பதில் என்ன சந்தேகம். ஆனால் ஐரோப்பியனுக்கு ஒரு வழிமுறை எப்பவுமே இருக்கும். பிரபாகரனையும் மற்ற முக்கியமானவர்களையும் சரணடைய வைத்து காந்திக்குக் கட்டிவைத்த மாதிரி ஒரு வெள்ளைத் துண்டைக் கட்டிவைத்து நவ நாகரீக அகிம்சாவாதியாக பிரபாகரனை மாற்ற வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருந்திருக்கும்.
உவன் மகிந்தனைப் போல கொலை செய்வதைவிட துண்டுகட்டி அகிம்சாவாதி ஆக்குவது பலமடங்கு பலன் தரும் என்பது ஐரோப்பியனுக்குத் தெரியும். ரவுடியாகவே வளர்ந்த மகிந்தனுக்கு போட்டுத் தள்ளுவதைத் தவிர வேற எதுவும் தெரியாது.

இப்படியான சூழலில் தான் புலம்பெயர் நாடுகளில் பணம் கறந்து களம் காணாத போராளிகளுக்கு வன்னியைக் கூண்டோடு அழிக்க ஆசை வந்தது. கறந்த பணத்தை சாட்சி இல்லாமல் சுருட்ட கைலாயம் அனுப்புவதே ஒரே வழி என்பதை கச்சிதமாக கணக்குப் போட்டனர்.

பிரான்சிஸ் ஹரிசன்(BBC) எழுதிவைத்ததைப் போல பிரபாகரனையும் குழுவினரையும் நந்திக்கடலில் குந்தியிருக்குமாறு அறிவுரை கூறி அழித்து முடித்தனர். அமெரிக்கா வரும் ஐரோப்பா ஆளனுப்பும் என்று இவர்கள் அடித்த லூட்டிகளுக்கு அளவே இல்லை.

சாட்சி இல்லாமல் மகிந்தன் நடத்திய அழிப்புக்கும், சாட்சியில்லாமல் புலம்பெயர் புலிகள் சுருட்டிய பணத்துக்கும் நெருங்கிய உறவு உண்டு.

சரி கொன்று போட்டாப் பிறகும் தலைவர் வந்தால் தான் கணக்குக் காட்டுவம் என்று காசானந்தர்கள் நடத்தும் காவடியாட்டம் இன்னும் தொடர்கிறது.

சோளன் சிந்தனையை ஓடவிட்டுக்கொண்டிருக்க புலம்பெயர் சிந்தனைச் சிப்பிகளின் மூளைக்குள் இருந்து உதிர்ந்த முத்துக்களைக் கவனிக்கத் தவறிவிட்டான்.

இப்போது விவாதம் கொடியை நோக்கி திரும்பியிருந்தது. இஸ்லாமுக்கு ஒரு கொடி இருக்கிறது. அதற்கு அவர்கள் விளக்கம் வைத்திருக்கிறார்கள். சிங்களவன் ஒரு கொடி வைத்திருக்கிறான். பௌத்த பாசிசம் என்று அதுக்கு விளக்கம் சொல்லலாம். கம்யூனிஸ்ட்டுக்கு ஒரு கொடி இருக்கு அதுக்குப் பின்னாலையும் தத்துவம் இருக்கு. கொடியைப் போட்டுட்டு அதுக்கு தத்துவம் தேடிக்கொண்டிருக்கும் ‘மகான்கள்’ புலன் பெயர்ந்த தமிழர்களாக மட்டுமே இருக்கிறார்கள்.

அதாலதான் மொள்ள மாறியளும், முடிச்சவுக்கியளும், கொடியோடை அலையுறாங்கள்.

ஈ பி ஆர் எல் எப், ஈரோஸ், புளட், டெலோ என்று நூற்றுக்கணக்கான இயக்கங்களிலிருந்து லட்சக்கணக்கானவர்கள் செத்துப் போனார்கள். சரி முடிஞ்சது முடிஞ்சு போச்சு இப்பவாவது எல்லாரையும் இணைத்து ஒரு அரசியலையும் அடையாளத்தையும் கொண்டுவருவம் என்றால், வங்கோளிப் புலியைக் காட்டி ஈழத் தமிழர்களை வெருட்டுகிறார்கள்.

வங்கோளிப் புலியையும், ரஷ்யன்ட ஏ.கே 47 ஐயும் ரத்தைக் கறையையும் போட்டு ஒரு படத்தை உருவாக்கிப் போட்டு இதுதான் தேசியக் கொடியென்றாங்கள். சொந்த நாட்டில எதுவும் இல்லையா என்று கேட்டால் தேசியத்தின் பேரால் துரோகி என்கிறாங்கள். வங்கதேசத்துப் புலியை கூட்டுவந்து கடிக்க விடுவதா உங்கடை நோக்கம் என்றால் மூச்சு விடுறாங்கள் இல்லை.

cabbage_caterpillarசிங்களவன் சிங்கத்தை வைத்தால் நாங்களும் சரிக்குச் சரி ஒரு மிருகத்தை வைக்க வேணும் என்கிறார்கள். அப்ப, யாழ்ப்பாணம் மட்டும் தான் தமிழீழம் என்ற நிலைக்கு வந்தப் பிறகு அங்க என்ன மிருகம் இருக்கென்று தேடிப்பார்த்தால். மசிர்க்குட்டியைத் தவிர வேறு எதுவும் தென்படவில்லை. ஏதாவது ஒரு மிருகத்தை போட்டுத்தான் கொடி போடவேணும் என்றால் மசிர்க்குட்டியும் பூவரசம் இலையும் தான் தேசியக் கொடியாகும்.

வங்கோளிப் புலி போட்டு கொடி பிடித்தால் ராஜபக்சவுக்கு தேசிய பிஸ்னசுக்கு மேடை கிடைக்கும். இது தான் பலபேருக்கு விருப்பம். கூட்டிக் களித்துக் கணக்குப் போட்டால், வங்கோளிப் புலிப்படம் போட்ட கொடி பிடிக்கவேணும் என்று குரல்வளை கிழியக் கத்தும் யாராவது ஒருவர், இலங்கை அரசாங்கத்தோட வேலை செய்யவில்லை, இந்திய அரசாங்கத்தோடு வேலை செய்யவில்லை, காசுசேர்த்துப் பணம் சுருட்டவில்லை, கோயில் போட்டு பணம் சுருட்டவில்லை என்று முகம் காட்டிச் சொன்னால் சோளன் டொங் என்று காலில் விழவும் தயார்.

தேசியக் கொடி, தேசியத் தலவர்.. என்று ஜிகாதிகள் வேதம் ஓத உணவு விடுதியில் விவாதம் வெடித்துச் சிதற சோளன் சிந்தனையோடு வெளியேறினான்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
வெளிநாட்டவர்களுக்கு எதிரான நிறவெறிக்கட்சி பிரித்தானியாவில் பெரும்பான்மை:கேள்விக்குள்ளாகும் புதிய தலைமுறை

வெளிநாட்டவர்களுக்கு எதிரான நிறவெறிக்கட்சி பிரித்தானியாவில் பெரும்பான்மை:கேள்விக்குள்ளாகும் புதிய தலைமுறை

Comments 3

  1. Kumar says:
    12 years ago

    இப்போதய செய்தி என்னவென்றால்,புலி இயக்கம் ஏழைகளுடய இயக்கமாம் அதை படித்த சட்டத்தரணிகளும் கணக்காளா்களும் கையிலெடுத்து வளிநடத்த தாம் விடப்போவதில்லை என்று படிக்காத மட்டம் ஐரோப்பா எங்கும் கொடிதூக்க தொடங்கிவிட்டாா்கள்.
    ஏழை மக்கள் இரத்தம் சிந்திய போராட்டத்தை கழுத்துப்பட்டி கட்டிய புலம்பெயா் வித்துவான்கள் தலைமை ஏற்க ஒருபோதும் விடப்போவதில்லை என்று குமுறுகிறாா்கள்.ஆகவே புலிக்கொடிக்கு இப்போதைக்கு ஓய்வு கிடைக்க சாத்தியம் இல்லை என்றே தொிகிறது.

  2. suthan says:
    12 years ago

    yo majir naaikala ltte maddum than kadaisivarai poradijathu neenka ellam veli nadila irunnthu nalla kathaiunko

    • K shanmugam says:
      12 years ago

      Plesae translate to understand

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...