Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

சுய நிர்ணைய உரிமை வேண்டாம் : சுரேஷ் பிரேமச்சந்திரனின் பொய் அம்பலமானது

இனியொரு... by இனியொரு...
10/12/2014
in இன்றைய செய்திகள்
0 0
6
Home இன்றைய செய்திகள்

Amend2வடக்கு கிழக்­கினை இணைத்து தனி தமிழர் தாய­க­மாக்கும் நோக்கம் எமக்கு ஒரு­போ­து­மில்லை என்று என தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் ஊடக பேச்­சாளர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தெரி­வித்தார். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, முஸ்லிம் காங்­கி­ரஸின் புதிய கூட்­டணி பிரி­வி­னைக்­கான அடித்­த­ள­மென அரச பங்­கா­ளிக்­கட்­சி­யான ஹெல உறு­மய குற்றம் சுமத்­தி­யுள்ள நிலையில் அது­தொ­டர்பில் கூட்­ட­மைப்­பி­ன­ரிடம் வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார் எனப் புலம் பெயட் இணையம் ஒன்று தெரிவித்துள்ளது.

இதே கருத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட வட மாகாண சபையின் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் தெரிவித்திருந்தார். மேலும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும் இதே கருத்தை தெரிவித்திருந்தார்.

இலங்கையில் சுய நிர்ணைய உரிமைக்கான சதி அரசியல் ஒன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து நடத்தப்படுகிறது என்பதற்கான முன்னறிவிப்பே இக்கருத்துக்கள். அழகான மொழியில் அரச எதிர்ப்புப் போன்று வெளியிடப்படும் இந்த நச்சுக் கருத்துகள் குறித்து ஈழம் பிடித்துத்தருகிறோம் பேர்வளிகள் என்று கூறும் புலம்பெயர் மற்றும் இந்திய தேசியப் பிழைப்புவாதிகள் இதுவரை எதிர்கொள்ளவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழரசுக் கட்சி ஆகியவற்றின் வாதங்களின் அடிப்படையில், பிரிவினைக்கு எதிரான இலங்கை அரசின் சட்டமூலத்தின் அடிப்படையில் கட்சி தடைசெய்யப்படலாம் என்பதாலேயே தாம் இவ்வாறு கருத்துத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது என்கிறார்கள்.

இலங்கை அரசின் பிரிவினைக்கு எதிரான சட்டம் சொல்வது என்ன?

சட்டப் பிரிவி 157 A இன் அடிப்படையில்,

‘அரசியல் கட்சிகளோ, வேறு நிறுவனங்களோ அல்லது அமைப்புக்களோ இலங்கைக்குள்ளோ அல்லது வெளியிலோ, நேரடியாகவோ மறைமுகமாகவோ இலங்கையின் எல்லைக்குள் தனியான அரசு அமைப்பதற்கு பிரச்சாரம் செய்வதோ, ஆதரவு வழங்குவதோ, நிதி வழங்குவதோ, ஊக்கமளிப்பதோ அன்றி நியாயப்படுத்துவதோ கூடாது’ என்று கூறப்படுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழரசுக் கட்சியும் சுய நிர்ணைய உரிமையை நிராகரிப்பதற்கு இச்சட்டமூலமே காரணம் என்று கூறுகிறார்கள். விக்கி தேர்தலில் பிரச்சரம் மேற்கொள்ளும் போது மிகப் பிரதானமாக முன்வைத்த விடயமெ சட்டம் தொடர்பானதாகும் தனக்குச் சட்டம் தெரியும் என்றும் சட்ட அடிப்படையில் உரிமைகளை நிலை நாட்டுவேன் என்றும் விக்கி ஆட்சியைப் பிடித்தார்.

இலங்கையின் சட்ட அடிப்படையில் சுய நிர்ணைய உரிமை தடை செய்யப்படவில்லை. சர்வதேசச் சட்டங்களதும், ஐ,நாவிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ள சுய நிர்ணைய உரிமையை இலங்கையில் தடை செய்வது இயலாத ஒன்று. அதன் அடிப்படை இதுதான்: ஒரு தேசிய இனம் தான் விரும்பினால் பிரிந்து சென்று தனியரசு அமைப்பதற்கான உரிமை உண்டு. அவ்வாறான மக்களின் ஜனநாயக உரிமையைக் கோருவது இலங்கை அரசியல் சட்டத்தில் தடைசெய்யப்படவில்லை.

அவ்வாறு பிரிந்து செல்லும் உரிமை வழங்கப்பட்டால் அதுவே பெரும்பான்மைத் தேசிய இனத்தின் மீது சந்தேகங்களற்று இணைந்து வாழ்வதற்கான ஆதாரமாக அமையும்.
ஆக, நாம் பிரிவினை கோரவில்லை ஆனால் பிரிந்து செல்லும் உரிமையைக் கோருகிறோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நீதிமன்றத்தில் வாதாடியிருக்க முடியும். அதுவும் சட்டம்படித்துக் கரைத்துக்குடித்த விக்கி போன்ற மலைகளை வைத்துக்கொண்டு இந்த வாதத்தை நீதிமன்றத்தில் கூட்டமைப்பு முன்வைத்திருக்கலாம். கூட்டமைப்பின் கொழும்பு உயர்குடிச் சட்ட மேதை சுமந்திரன் பாதிரிக்கு இது ஒன்றும் தெரியாததல்ல.

அமைதிகாக்கும் படை என்ற பெயரில் இலங்கையை ஆகிரமித்த இந்திய கொலைகருவியான இந்திய இராணுவத்தின் துணைப்படைத் தலைவராகச் செயற்பட்ட சுரேஷ் பிரமச்சந்திரன் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்துப் பிழைப்புவாதிகளும் மக்களின் கருத்தைப் பிரதிபலிக்கவில்லை. சுட நிர்ணைய உரிமையை எதிர்ப்பதற்கு அவர்கள் ஒரு சமூதத்தை இந்திய மேற்கு மற்றும் இலங்கைப் பெரினவாத அரசுகளின் சார்பாகத் தாயார் செய்ய முனைகின்றனர்.

இரண்டாவதாக நாம் பிரிந்து செல்லவில்லை இணைந்து வாழவே விரும்புகிறோம் என்றும் அதற்கான ஆரம்பம் சிங்கள மக்கள் பிரிந்து செல்லும் உரிமையைத் தமிழ்ப் பேசும் மக்களுக்கு வழங்குவதற்காகக் குரல்கொடுக்க வேண்டும் என்று சிங்கள் மக்கள் மத்தியில் பிரச்சரம் மேற்கொண்டு ஆதரவு திரட்டுவதும் கூட சாத்தியமான ஒன்றே. இன்று சிங்கள மக்கள் மத்தியில் ராஜபக்ச பாசிசத்திற்கு எதிராக ஏற்பட்டிருக்கும் வெறுப்புணர்வைப் பயன்படுத்தி இப்பிரச்சாரத்தை மேற்கொள்வததற்கு இன்று பொருத்தமான நேரம் தோன்றியுள்ளது.

மக்களின் பிரதிநிதியாக அல்லாமல் இந்திய அரசினதும் மேற்கு ஏகாதிபத்தியங்களதும் பிரதிநிதியாகச் செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவர்களின் நலன்களுக்காகவே செயற்படுகின்றது. இன்னும் சில வருடங்களில் வடக்கிலும் கிழக்கிலும் சிங்கள பௌத்தக் குடியேற்றங்கள் பாரம்பரிய நிலங்களை நிரப்பிவிட தமிழ்த் தேசிய இனம் என்ற ஒன்று இல்லை என்பதால் சுய நிர்ணைய உரிமை கேட்க முடியாது என்ற முடிவை தேசியக் கூட்டமைப்பு இலங்கை அரசுடன் இணந்து அறிவிக்கும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் காட்டிக்கொடுப்பிற்கும் வாக்குப் பொறுக்கும் அரசியலுக்கும் எதிரான சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் இலங்கையின் இன்றைய பிரதான அரசியல் தேவை.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
வெற்றி பெறுவதற்கு ரஜனியை நம்பியிருக்கிறோம் : கூச்சமின்றி ஒப்புக்கொள்ளும் ப.ஜ.க

வெற்றி பெறுவதற்கு ரஜனியை நம்பியிருக்கிறோம் : கூச்சமின்றி ஒப்புக்கொள்ளும் ப.ஜ.க

Comments 6

  1. தயா says:
    11 years ago

    காட்டிக்கொடுப்பிற்கும் வாக்குப் பொறுக்கும் அரசியலுக்கும் எதிரான சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் இலங்கையின் இன்றைய பிரதான அரசியல் தேவை.என்பதனை   தமிழினம் ஒன்றுபட்டு கூற வேண்டியது   சுயநிர்ணய உரிமைகளை வலியுறுத்தும் என்பதற்கான போராட்டத்தை யாரிடம் யார் எதிர்பார்பது? . தமிழ் தேசியக் கூட்டமைப்பை விமர்சிப்பதிலோ ஆதரிப்பதிலோ மட்டும் எமது விடுதலைப்பாதையை முழுமையடைய முடியாது புலம் பெயர் தேசம் தம்மை தமிழர்களாகவும் அதர்ம ஊடங்களாக இருக்கும் ஊடகங்கள் ஒரு சரியான பாதையில் சமூகத்தை வழிநடத்த முன்வராதவரை    இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பு என விமர்சிக்கும் தகுதியை புலம் பெயர் சமூகம் இழக்கின்றது. 

  2. தயா says:
    11 years ago

    தமிழர்கள் வடமாகாண சபை    அத்தனை உரிமைகளையும் பெற வேண்டுமானால் தமிழர்களை தமிழர்கள் மதிக்க வேண்டும் சிங்கக் கொடி ஏற்றும் போது சிங்கள தேசத்தை மதித்த தமிழினம் தமிழர்களினது   போராட்டத்தை மதிப்பது இல்லை. 

    இன்று வடமாகாண சபைக்கு ஏற்பட்டுள்ள சவால்களை அவர்கள்  முறியடித்து பகிரங்கப்படுத்தும் போது அவர்களில் மட்டும் தவறுகளை  ஆராயும் புலம் பெயர் தேசமும் ஊடகங்களும் புலம் பெயர் தமிழினத்தின் ஒன்றுபட்ட செயல்பாடுகளை வளர்த்து அரசியல்  உரிமைக்கான  சந்தற்பங்களுக்கு    தமிழர்கள் என்ற சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட  எமது உரிமைப் போருக்கான ஒரு நிலைப்பாட்டை எட்டாதவரை எதிரியை குறை சொல்வதோடு எம்மவர்களை விமர்சிப்பதில் காட்டும் அக்கறை  எதிரிக்கு சாதகாமாகிவிடும் என்பதனை அறிந்தும் அறியாது செயல்படுவதால் யாருக்கு நன்மை என்பதனை முதலில் நாம் அறிய முற்பட வேண்டும். 

  3. Dr. Sri S. Sriskanda says:
    11 years ago

    Homurable Suresh Premachndran is one of the four Tamil Parliamentarians invited by Americans to visit them. That is for four different reasons. 

    • Sutharsan says:
      11 years ago

      What are they? Why don’t you elaborate??

    • Alex Eravi says:
      11 years ago

      May we know, Dr.

      • Dr. Sri S.Sriskanda says:
        11 years ago

        Sutharsan and Alex Ravi.  Suresh Premachandran did not evacuate with the Indian Army. Mavai Senathirajah, Old guard Federal Party. Mavidapuram. Kankesanthurai Electorate of S. J. V. Chelvanayagam. R. Sampanthan.  Tincomalee. 1965. Architect of the TNA. Tamil National Alliance. Sumanthiran. Lawyer. Royal College, Colombo-07.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...