Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

குரூர மனச் சிந்தனையாளர்கள் : எம்.ரிஷான் ஷெரீப்

இனியொரு... by இனியொரு...
08/29/2013
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
12
Home பிரதான பதிவுகள் | Principle posts

torture-drawingஒரு மனிதனை எப்படியெல்லாம் நாம் துன்புறுத்தலாம்? சொற்களால், வார்த்தைகளால், செய்கைகளால், எமது நடத்தைகள் மற்றும் நடவடிக்கைகள் எல்லாவற்றாலும் ஒரு மனிதனை இலகுவாகத் துன்புறுத்தி விடலாம். ஆனால் அத் துன்புறுத்தல்களை எல்லோராலும் இலகுவில் தாங்கிக் கொள்ளமுடியாது. துன்புறுத்தலுக்குள்ளாகும் மனிதனின் உணர்வுகளும், உடலும் ஒரே நேரத்தில் சீண்டப்படுகின்றன. அவற்றின் விளைவுகள் பாரதூரமானவை. நீச்சலை அறியாதவன் ஒருவனை நடுக் கடலில் தள்ளிவிடுவதைப் போல குரூரமானவை அவை. ஆனால் அதைச் செய்பவனும் இன்னுமொரு சக மனிதனே. துன்புறுத்தலுக்குள்ளாக்கப்படுபவனைப் போன்றே குருதியும், நரம்புகளும், அவயவங்களும் கொண்டவனே துன்புறுத்துபவனும். அவனுக்கு மட்டும் அம் மனநிலை எப்படி வாய்க்கிறது? அதிகாரமும், ஆணவமும், பழி வாங்கலுமே இவ்வாறான துன்புறுத்தலுக்கு ஒரு மனிதனைத் தூண்டுகின்றன. இவ்வாறான துன்புறுத்தல்களை ‘சித்திரவதை’ எனப் பொதுப் பெயர் கொண்டு அழைக்கலாம்.

இச் சித்திரவதைகள், தமது இருப்பிடங்கள், பணியிடங்கள் போன்றவற்றில் சக மனிதர்களாலும் கூட சர்வ சாதாரணமாக நடைபெற்று வருவதோடு அரசியல் ரீதியாகவும், அதிகார வர்க்கத்தாலும் கூட மனிதனைத் துன்புறுத்தல் எனும் இம் மனித உரிமை மீறலானது, எவ்விதக் கேள்விகளுக்கும் உட்படாதவண்ணம் நடைபெற்று வருகின்றது. உலகம் முழுதும் இது பொருந்தும். ஆதி காலத்திலும், சாம்ராஜ்யங்களின் ஆட்சியின் போதும், தற்கால உலக அரசியலிலும் தமது ஆட்சிக்கு எதிராக இருப்பவற்றைக் கட்டுப்படுத்துவதற்காகவும் அடக்கி வைப்பதற்காகவும் சித்திரவதை பிரயோகிப்பட்டு வந்திருக்கிறது. அதிகார வர்க்கத்தால் கைது செய்யப்படுபவர்களையும் யுத்தக் கைதிகளையும் பாதுகாப்பதற்காக அனேக சட்டங்கள் இருந்தபோதிலும், இந்த அதிகார வர்க்கங்கள் இச் சட்டங்களைக் கண்டுகொள்ளாமலிருப்பதை அண்மைய காலங்களில் பெருமளவில் காணக் கிடைக்கிறது.

அத்தோடு அமெரிக்க இராணுவமானது, பாலஸ்தீனர்களைக் கைது செய்து மிகக் கொடூரமாகச் சித்திரவதை செய்வதையும், இன்னும் பல நாடுகளில் அதிகார வர்க்கமானது பொதுமக்களை சர்வ சாதாரணமாக சித்திரவதைக்குள்ளாக்குவதையும் இணைய ஊடகங்கள் பலவற்றிலும் பரவலாகக் காணக் கிடைக்கிறது. அமெரிக்காவை முன்னிலைப்படுத்தியிருக்கும் ஏனைய பலம் வாய்ந்த உலக நாடுகளும் சித்திரவதையைப் பிரயோகிப்பதை மிகவும் விருப்பத்தோடு செய்து வருகின்றன. இவ்வாறாக, சித்திரவதையை சர்வ சாதாரணமாக பிரயோகித்து வரும் நாடுகளுக்கு பெரும் தடையாக இருப்பது சித்திரவதைக்கு எதிரான தற்போதைய சட்டங்களே. எனவே உலகம் முழுவதற்குமான சட்டங்களை இயற்றக் கூடிய வல்லமை பெற்றிருக்கும் அமெரிக்காவுக்கும், ஏனைய நாடுகளுக்கும், எவராலும் எதிர்த்துக் கேள்வி கேட்க முடியா வண்ணம், சித்திரவதையை சட்டபூர்வமான நிலையிலிருந்து செய்வதற்கான அனுமதியே தேவையாக இருக்கிறது.

இதில் அபாயமானது என்னவெனில், ‘சந்தேக நபர்களிடமிருந்து சில தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக சித்திரவதையைப் பாவிப்பது நியாயமானதே’ என்ற கருத்தை பொதுமக்களிடம் பரப்புவதன் மூலம் சித்திரவதையை சட்டபூர்வமாக்குவது. அமெரிக்காவிலும் இன்னும் சில நாடுகளிலும் சித்திரவதையை சட்டபூர்வமாக்க வேண்டும் என பொது மக்கள் கருத்துத் தெரிவிக்கும் அளவுக்கு இப் பயங்கர எண்ணக் கரு வளர்ச்சியடைந்திருக்கிறது. 2002 ஏப்ரல் மாதத்தில் அல்கைதா இயக்கத் தலைவர்களில் ஒருவரான அபூ சுபைதா கைது செய்யப்பட்ட பிற்பாடு அவர் சித்திரவதைக்குள்ளாக்கப்பட வேண்டுமா வேண்டாமா என்பது பற்றி மேற்கு ஊடகங்களில் வெளிப்படையாகக் கலந்துரையாடப்பட்டன. நாளை இந் நிலைமை எமது நாடுகளிலும் வரலாம். இது இன்னும் முன்னேற்றமடையுமானால் எதிர்காலத்தில் சித்திரவதையும் சட்டபூர்வமான ஒரு நடவடிக்கையாக மாறிவிடும். இதனை நாம் தடுக்க வேண்டும்.

இதன் காரணமாகவே ஒவ்வொரு வருடமும் ஜூன் 26 ஆம் திகதியை சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாளாகவும், சித்திரவதைக்கு எதிரான நாளாகவும் உலகம் முழுவதும் கொண்டாடப்படுவதை நான் வரவேற்கிறேன். அதிகாரத் தரப்பிலிருந்து பல சிக்கல்கள் வரக் கூடும் என்ற போதிலும் மனித உரிமை மீறல்களும், சித்திரவதைகளும் சர்வ சாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இலங்கையிலும் கூட இத் தினமானது அனுஷ்டிக்கப்படவிருக்கின்றது. இவ்வாறான செயற்பாடுகளின் போது, இதற்கு முன்பும் பல தடவைகள் பொதுமக்கள் மீதான மனித உரிமை மீறல்களும் சித்திரவதைகளும் பகிரங்கமாக நடைபெற்ற போதிலும் எவரிடமிருந்தும் எந்த நீதியும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை.

மனிதர்களை சித்திரவதைக்குள்ளாக்குவதுவும், காணாமல் போகச் செய்வதுவும், சட்டவிரோதமான முறையில் படுகொலை செய்வதுவும் ஆட்சியில் நிலைத்திருக்க அவசியமானவை எனக் கருதுவதால் ஆட்சியிலிருக்கும் எல்லா அரசுகளுமே தமது ஆட்சியை எவர் தொந்தரவின்றியும் கொண்டு செல்வதற்காக இவற்றை பிரதானமாகப் பயன்படுத்துகின்றன. தாம் எதிர்க்கட்சியாக இருக்கும்போது இவற்றுக்கெதிராகக் குரல் கொடுக்கும் எல்லாக் கட்சிகளும், தாம் ஆட்சியைக் கைப்பற்றிய பின்பு, இவற்றையே தாமும் செய்கின்றன. இலங்கையில் கடந்த ஒவ்வொரு தசாப்த காலங்களிலும் மேற்சொன்ன நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்துக் கொண்டு வந்திருக்கிறதே ஒழிய குறையவில்லை.

பொதுமக்கள், தமக்கொரு அநீதி நேருமிடத்து ஆதரவு தேடி காவல்துறையை நாடும் நிலைமை இன்று இலங்கையில் மிகவும் குறுகி வருகிறது. நான் முன்பொரு கட்டுரையில் சொன்னது போல, தற்போது இலங்கையில் அதிகளவான சித்திரவதைகள், சிறைக் கைதிகள் மேலேயே நிகழ்த்தப்படுகின்றன. சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுபவர்களிடமிருந்து உண்மையை வரவழைக்க அனேகமான நாடுகளில் பின்பற்றப்படும் சித்திரவதையற்ற நடைமுறைகளில் எதுவுமே இலங்கையில் பின்பற்றப்படுவதில்லை. இலங்கைக் காவல்துறை அறிந்த ஒரே செயன்முறை சித்திரவதைதான். சிறைச்சாலைப் படுகொலைகள் நிகழாத ஒரு காவல்நிலையத்தை இலங்கையில் தேடிக் கண்டுபிடிப்பதென்பது கடற்கரையில் சிந்திய கடுகுமணிகளைத் தேடிக் கண்டுபிடிப்பது போல கடினமான ஒரு காரியம்.

ஒருவர் ஒரு குற்றம் செய்தால், அதனை விசாரித்து தக்க தண்டனை வழங்க நீதிமன்றத்தாலேயே முடியும். ஆனால் அதற்கு முன்பாக அந்த அதிகாரத்தை, வேறு நபர்கள் தம் கரங்களில் எடுத்துக் கொள்வதாலேயே குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான மனித உரிமை மீறல்களும் சித்திரவதைகளும் ஆரம்பிக்கின்றன. எனவே பொது மக்களைக் காக்க வேண்டிய காவல்துறையை, தமக்குப் பாதுகாப்பும் நியாயமும் தேடி நாடுவதற்குத் தயங்குகின்றனர் மக்கள். எனினும், இலங்கையில் ஆதரவு தேடி நாடிச் செல்ல காவல்துறையைத் தவிர வேறு இடங்களும் இல்லை. பொதுமக்களுக்கு காவல்துறை மூலம் கிடைக்கப்பெறும் மோசமான அனுபவங்களுக்கு என்ன செய்வதெனத் தெரியாமல் தவிக்கும் அனேக மக்கள் இலங்கையில் உள்ளனர். சிலர் மனித உரிமைகளைக் காக்கும் ஒருங்கமைப்புக்களை நாடுகின்றனர்.

இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுமிடத்து, முறைப்பாடுகளைப் பதிவு செய்வதில் உள்ள சிக்கல்கள், காவல்துறைக்கு எதிரான வழக்குகளுக்காக வாதாட துணிச்சலும் நம்பிக்கையுமுள்ள சட்டத்தரணிகளை தேடிக் கண்டுபிடிப்பதில் உள்ள சிக்கல்கள், முறையிடுபவரினதும் சாட்சிகளினதும் பாதுகாப்பு குறித்த சிக்கல்கள் ஆகியனவே பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஒருங்கமைப்புக்களுக்கும் பிரதானமான சிக்கல்களாக இதுவரை இருந்தன. தற்போது இவற்றோடு இன்னுமொரு சிக்கலும் புதிதாகச் சேர்ந்திருக்கிறது. அதாவது இவ்வளவு சிக்கல்களைத் தாண்டி ஒருவர் காவல்துறைக்கு எதிராக முறையிட்டு, அவ் வழக்கு விசாரணை, நீதிமன்றத்துக்கு வருமிடத்து, நீதிபதியால் அவ் வழக்கு தள்ளுபடி செய்யப்படுவது எனும் புதிய சிக்கல் பாதிக்கப்பட்டவருக்கு எதிராக எழுந்து நிற்கிறது.

நான் இப்படிச் சொல்ல ஒரு வலுவான காரணம் இருக்கிறது. இலங்கையில் கடந்த காலங்களில் ஊழல்களையும், படுகொலைகளையும், கொள்ளைகளையும், பாலியல் வன்முறைகளையும் செய்து மாட்டிக் கொண்ட அரசியல்வாதிகளுக்கெதிராக இருந்த அனேக வழக்குகள் நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டு, குற்றவாளிகள் வழக்குகளிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டார்கள். அத்தோடு சித்திரவதைகள் சம்பந்தமாகக் குற்றஞ்சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கெதிரான அனேக வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டு, தொடர்ந்தும் குற்றவாளிகள் நீதிபதியால் விடுதலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே சித்திரவதைக்கு எதிராக எவ்வளவுதான் சட்டங்கள் இயற்றப்பட்டாலும், அதிகாரத் தரப்பும், காவல்துறையும் தாம் பொதுமக்களுக்கு இழைக்கும் அநீதங்களைத் தாமாக உணரும் வரையில் இலங்கையிலிருந்து சித்திரவதையை ஒழிக்கவே முடியாது. இந் நிலை தொடருமிடத்து, சித்திரவதை உள்ளிட்ட அனைத்து மனித உரிமை மீறல்களும் இலங்கையில் மென்மேலும் வளர்ச்சியடையும் என்பதோடு, இலங்கையிலுள்ள மனித உரிமைத் திணைக்களங்களும் ஒருங்கமைப்புக்களும் தமது பெயரில் மட்டுமே மனித உரிமையை வைத்திருப்பதுவும் தொடரும். எனவே மனித உரிமைகள் மீறப்படுவது தொடர்ந்தும் சர்வ சாதாரணமாக நிகழும். துரதிஷ்டவசமான இந் நிலைக்கு நாளை நானும், நீங்களும் ஆளாகலாம். அந் நாளில் எமக்காகப் பேசவும் எவருமிருக்க மாட்டார்கள்.

– எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

mrishanshareef@gmail.com

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
பிரான்சில் தொடர்ச்சியாக அதிகரிக்கும் வேலையின்மை

பிரான்சில் தொடர்ச்சியாக அதிகரிக்கும் வேலையின்மை

Comments 12

  1. சி.சந்திரமெளலிசன் says:
    13 years ago

    ///////////ஒரு மனிதனை எப்படியெல்லாம் நாம் துன்புறுத்தலாம்? சொற்களால், வார்த்தைகளால், செய்கைகளால், எமது நடத்தைகள் மற்றும் நடவடிக்கைகள் எல்லாவற்றாலும் ஒரு மனிதனை இலகுவாகத் துன்புறுத்தி விடலாம். ஆனால் அத் துன்புறுத்தல்களை எல்லோராலும் இலகுவில் தாங்கிக் கொள்ளமுடியாது. துன்புறுத்தலுக்குள்ளாகும் மனிதனின் உணர்வுகளும், உடலும் ஒரே நேரத்தில் சீண்டப்படுகின்றன. அவற்றின் விளைவுகள் பாரதூரமானவை. நீச்சலை அறியாதவன் ஒருவனை நடுக் கடலில் தள்ளிவிடுவதைப் போல குரூரமானவை அவை. ஆனால் அதைச் செய்பவனும் இன்னுமொரு சக மனிதனே. துன்புறுத்தலுக்குள்ளாக்கப்படுபவனைப் போன்றே குருதியும், நரம்புகளும், அவயவங்களும் கொண்டவனே துன்புறுத்துபவனும். அவனுக்கு மட்டும் அம் மனநிலை எப்படி வாய்க்கிறது? அதிகாரமும், ஆணவமும், பழி வாங்கலுமே இவ்வாறான துன்புறுத்தலுக்கு ஒரு மனிதனைத் தூண்டுகின்றன. இவ்வாறான துன்புறுத்தல்களை ‘சித்திரவதை’ எனப் பொதுப் பெயர் கொண்டு அழைக்கலாம்.
    /////////// when I read this I fealt like sitting in the “some kind of church leacture” —————-This is absolutute nonsense in a war situation or for a rebel —here is my thought =====>>>>>Think millions and millions of times before going to war whether the war is necessary. Once decision is made with reason for war . Once the war is on there there should not be any second thought about the cry of the decided enemy until enemy is tottaly defeted and victory is ensured “—-This is the basis of Bhavathgeetha–Tamils are very weak on this.=============

    • jayachandran says:
      13 years ago

        Dear mouly,  ‘ the mahabharatha’ the ethic tels us how to prevail dharma from the clutches of adharma  it was war fought  between bravery and cruelty, the ‘srimath bhagavath geetha’  the essence of mahabharatha teach us how to tackle adharma on its own way to prevail ‘dharma’ in this world even though the op penance are close blood related, ( its branch stories connected with main story clearly narrated every-once end according to their karma ). Mr Sharif is right on his view but sees american terrorism against his Islam / Muslims brotherhood  and he took the support of tamils to strength his cause, but he forgotten on his convenient how children  women and op penance are brutally   torched  and killed by so called jihads  in Pakistan, Afghanistan,  iron, iroq,  India and   almost rest of the world. and it does not mean u r right, its not a war in-between singales and tamils as u think deep in ur mind its a war between bhudis  and Hindus called tamils, (as it was raised against rituals and customs of Hinduism inserted one after another as its thosands of years old ), they killed humanity by killing innocence women and children, at the end of brutality in 2009 hole north Indians celebrated this as  Ar-ions win-over against Dravidian ( see tims of india weekly of the Hindi edition). After this incident i come to know about north feeling about south indians, at-least  they dont have pitty or witty of buitaly killed one  and u proved too, and here ur advice / opinion seems pouring salt over wound. 
      jayachendran.
      chennai.

      • சி.சந்திரமெளலிசன் says:
        13 years ago

        ///////here ur advice / opinion seems pouring salt over wound.
        ////// this is what I observed we are very week in war theory compare to Aryans . whe got very soft heart . we feel sad when there is a cry . what we must remeber is when you give blow to enemey he is ought to cry . give another blow. do not stop . that is the way to win .

        Once the war is on cry of the enemy shout not change anything .
        if there is a change in facts or original cause of the war then …..I am busy now I will respond to you in 10 hours time.

        • Dr. Sri S. Sriskanda says:
          13 years ago

          Mouleesan, the war ended in Sri Lanka on May 18, 2009. The majority community and the security apparatus is not reconciliatory here yet. Sinhalese are Aryans. The Tamils are indeed Dravidians. Dr. T. Jayasingham once said that America became a better country after the Civil War in 1864. ijayasingham@gmail.com

      • Dr. Sri S. Sriskanda says:
        13 years ago

        Jeyachandran, Mahabaratha and Ramanaya were the epitomy of the Sanskrit based civilizations. Those are contributions of the Arayans in the North India. They went dead like Latin and the Roman Empire. Tamil did not die. Then Tamil Nadu is only 55,000 square miles. There was no planar expansion. Then the tribulations and interactions gave rise to variety that the Indian Sub Continent is now today.

  2. Dr. Sri S. Sriskanda says:
    13 years ago

    The inaugural speach of President John F. Kennedy in 1960. A generation tempered by war. The security apparatus in Sri Lanka must have a long way by now.

  3. Alex Eravi says:
    13 years ago

    Few words from President John F. Kennedy’s Friday, January 20, 1961 Inaugural Address…

    “My fellow Americans: ask not what your country can do for you–ask what you can do for your country”.
    “My fellow citizens of the world: ask not what America will do for you, but what together we can do for the freedom of man.”

    Now… after 50 yrs (my age)… same question…
    “Ask not what your country can do for you–ask what you can do for your country”.
    “What together we can do for the freedom of man.”
    And he said “The world is very different now” still after 50yrs Obama also will say the same thing…

    Read the full speech… still after 50 yrs it’ll suite for all…not only for Americans… it’s for all…!!!
    http://www.presidency.ucsb.edu/ws/?pid=8032

    But Kennedy lived for a for a short life (May 29, 1917 – November 22, 1963) and served as the 35th President of the United States for only 2 yrs (1961 – death in 1963) until his assassination on November 22, 1963, in Dallas, Texas..

    To know more about John F. Kennedy…
    http://en.wikipedia.org/wiki/John_F._Kennedy

    • Senthuran says:
      13 years ago

      He also did it with MM and several other women that well managed by the SS !

      • Dr. Sriskanda says:
        13 years ago

        Senthuran, why do you want to talk about the Monkey Buisiness. I did my doctorates in it. There are Four Doctor Bills in Indiana, USA. Colorado Senator and Democratic Presidential hopeful Gary Hart did come to Terre Haute, Indiana, USA, in 1984. I picked up the e-mail address of the reporter Rachel Hartman who wants to dig up the pretty twenty year old – then – Monika Lewinsky. Slick Willy is following the foot steps of scared Jimmy Carter of Americuas Georgia, USA,after leaving the White House. Did you read what the Chicago Republican HiIary Rodham saw? Long fingers and witty intelligence.

        • Senthuran says:
          13 years ago

          HRC is going to be the Dem’s nominee in 2016 !

          • Dr. Sri S. Sriskanda says:
            13 years ago

            HRC – HIlary Rodham Clinton – Human Rights Commission. I am more focusse d Geneva now than anything else. She had the decency to leave after four years. Joe Biden should have given way to Evan Bayh of Indiana, USA.

    • Dr. Sriskanda says:
      13 years ago

      Alex SS – Secret Service – is still with the Treasury Department. It was first formed to catch counterfeiters. Now they provide security to VIP – Very Important Person. Their interaction with the First Family in the White House is very interesting and intriguing.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...