Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

எஸ்.ஜே.வி.செல்வநாயகம் சிலை உடைப்பு : தமிழ்க் கட்சிகள் கண்டனம்

இனியொரு... by இனியொரு...
11/01/2011
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

இனக் கொலையாளி மகிந்த ராஜபக்சவின் குடும்ப அரசு இனவாதத்தைத் தூண்டுவதனூடாகவே தனது ஆட்சியைத் தக்கவைத்துக்க்கொள்ளலாம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் இனவாதத்தைத் தூண்டும் இலங்கை அரசின் இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மறைந்த தமிழரசுக் கட்சியின் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் சிலை உடைக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசின் திட்டமிட்ட நடவடிக்கையாகவே இது கருதப்படுகின்றது. இதனைக் கண்டித்து ரெலோ, ஜனநாயக மக்கள் முன்னணி, புளட் ஆகிய அமைப்புக்கள் அறிக்கை வெளியிட்டுள்ளன.
ரெலோ:
தமிழரசுத் தந்தை செல்வா அவர்களின் உருவச்சிலை நேற்று நள்ளிரவு திருகோணமலை சிவன் கோவிலடியில் துண்டிக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளதையிட்டு நாம் எமது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.
காவல் அரணுக்கு பக்கத்தில் இருந்த தந்தை செல்வாவின் சிலை சேதமாக்கப்பட்டது. சிங்கள இனவெறி நடவடிக்கை அரச ஆதரவுடன் செயற்படுத்தப்பட்டுள்ளது.
சர்வதேசத்திற்கு தமிழ் இனத்தின் பிரச்சினைகளை கொண்டுச்சென்றதால் சகிக்க முடியாத இனவெறிச் சக்திகள் இந்தக் கோழைத்தணமான ஈணச் செயலைச் செய்துள்ளது.
இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் தமிழ் இனத்தை அச்சுறுத்த முடியாது.
தமிழரசு தந்தையின் வழியில் தமிழ் தேசியம், தாயகம், சுயநிர்ணய உரிமை என்பவற்றை வென்றெடுத்து சுயாட்சித் தமிழத் தரப்பை நிறுவுவதற்கு தமிழ் மக்களை கடுமையாக உழைக்க வேண்டும் என்ற செய்தியையே இந்த இனவெறி நடவடிக்கை காட்டி நிற்கின்றது.
சிலையாக நிற்பதற்கு கூட தமிழருக்கு உரிமை இல்லை என்பதை சர்வதேசத்திற்கு திருகோணமலை சிலைத் தகர்ப்பு காட்டி நிற்கின்றது.
எம்.கே சிவாஜிலிங்கம
அரசியல் தலைவர்,
தமிழ் ஈழ விடுதலை இயக்கம்(ரெலோ),
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்.
மனோ கணேசன்:
திருகோணமலையில் அமைக்கப்பட்டிருந்த தந்தை செல்வாவின் சிலையின் தலைப்பகுதி உடைத்து சேதமாக்கப்பட்டிருப்பதாக திருகோணமலையிலிருந்து வருகின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்தின் முழுமையான நிர்வாகத்திற்கு உள்ளிருக்கும் நகரில் நடத்தப்பட்டுள்ள இந்த காட்டுமிராண்டித்தனமான செயல் எம்மை வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களிலிருக்கின்ற தமிழர்களின் அரசியல் சமூக, கலாசார, பொருளாதார அடையாளங்கள் அனைத்தையும் அழிக்கும் பேரினவாத நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெவித்துள்ளார்.
தந்தை செல்வா தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட ஒடுக்கு முறைகளுக்கு எதிராக சாத்வீகப் போராட்டத்தை முன்னெடுத்த பெருந்தலைவராவார். மலையக தமிழர்களின் குடியுரிமை பறிப்பிற்கு எதிராக கிளர்ந்து எழுந்தவர் ‘ஈழத்து காந்தி’ என்று போற்றப்படும் தந்தை செல்வா அவர்களை இலங்கையில் வாழ்கின்ற எல்லாத் தரப்பு தமிழ் மக்களும் தேசிய தலைவராக ஏற்றுக் கொண்டு போற்றி வணங்குகின்றார்கள்.
இன்று ஒட்டுமொத்த இனத்திற்கும் எதிராக நிகழ்த்தப்படும் பல்வேறு பேனவாத அனர்த்தங்களைப் பற்றி தந்தை செல்வா அன்றே தீர்க்கதரிசனமாக எடுத்துக் கூறியிருக்கின்றார். இத்தகைய உன்னதமான தலைவன் சிலை இன்று திருகோணமலையிலே உடைக்கப்பட்டிருக்கின்றது. இது தமிழ் மக்களின் சாத்வீக சிந்தனைகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டுள்ளதாகவே நாங்கள் கருது கின்றோம்.
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கி ன்ற வடகிழக்கில் சமீபகாலமாக திட்டமிட்ட வன்முறை சம்பவங்கள் நடைபெறுகின்றன. தமிழினத்தின் அனைத்து பரிமாணங்களையும் அழிக்கும் முயற்சிகளை இந்த அரசாங்கம் நேரடியாகவும் மறைமுகமாகவும் தூண்டிவிடுகின்றது. இத்தகைய பேரினவாதப் போக்கின் கடைசி வெளிப்பாடுதான் இந்த காட்டுமிராண்டி செயலாகும். இத்தகைய பேரினவாத ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழ் மக்கள் தங்களது சாத்வீகப் போராட்டத்தை தந்தை செல்வா வழியில் உறுதியுடன் முன்னெடுக்க வேண்டும் என்பதையே இத்தகைய சம்பவங்கள் வலியுறுத்தி நிற்கின்றன எனவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
புளொட்:
தந்தை செல்வாவின் சிலை திருமலையில் சிதைக்கப்பட்ட செய்தி தமிழ்மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சாத்வீகத்தின் தந்தையென்றும், ஈழத்துக் காந்தியென்றும் அழைக்கப்பட்ட தந்தை செல்வா அவர்கள், உண்மையிலேயே தமிழ்பேசும் மக்களின் உரிமைகளை நிலைநாட்டவென சாத்வீக முறையிலே நேர்மையாக போராட்டங்களை முன்னெடுத்தவர்.
ஆயுதப்போராட்டம் உக்கிரமாயிருந்த காலப்பகுதியில், தந்தை செல்வாவின் நேர்மையையும் தீர்க்கதரிசனங்களையும் தியாகங்களையும் நினைவுகளையும் பலரும் மறந்திருந்தவேளையில் அன்று அரச கட்டுப்பாட்டிலிருந்த திருமலை, மன்னார் நகர்களில்; தந்தை செல்வாவின் உருவச்சிலையை நிறுவி அவரின் நினைவுகளை எப்போதும் மக்கள் மனங்கொள்ள முயற்சித்தோம். அந்தவகையில் 1995ம் ஆண்டு ஜூலை 16ம்திகதி எமது கழகத்தின் செயலதிபர் அமரர் க.உமாமகேஸ்வரன் அவர்களின் ஆறாவது நினைவுதினமான வீரமக்கள்தின நிகழ்வுகளின்போது அன்றைய எமது திருமலை மாவட்ட அமைப்பாளர் திரு. வ.விஜயரட்ணம் (செல்லக்கிளி மாஸ்டர்) அவர்களினால் திருமலை நகரில் தந்தை செல்வாவின் சிலை திறந்துவைக்கப்பட்டது.

அன்று 35 லட்சம் தமிழ்பேசும் மக்களின் உரிமைக்குரலாக திகழ்ந்த தந்தை செல்வா எந்தவொரு சந்தர்ப்பத்திலும், எந்தவொரு மனிதருக்கும் தீங்கு விளைவித்தவருமல்ல, விளைவிக்க நினைத்தவருமல்ல. அப்படியான ஒரு மாபெரும் தலைவரின் சிலையை, அமைதியும் சமாதானமும் நிலவுவதாக அரசும் பேரினவாதிகளும் நாடகமாடும் இன்றையநிலையில், அடித்து நொருக்கி சிதைத்திருக்கின்றார்கள். இழிவான இச்செயலின் மூலம் இந்த நாட்டில் பேரினவாதம் எவ்வளவு தூரம் புரையோடியுள்ளதென்பதை உலகம் அறிந்து கொள்ளும்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

சொத்துக் குவிப்பு வழக்கு - நீதிமன்றம் போகமாட்டேன் : ஜெயலலிதா

Comments 1

  1. விமலன் says:
    14 years ago

    எல்லாம் சரிதான் அமுதலிங்கம் ஆட்டம் போட விட்டு ரசித்தவர் தான் இந்த “தந்தை”.தந்தை ஆரபித்தது தம்பி முள்ளி வாய்க்காலில் முடித்து வைத்தார்.தந்தை,அண்ணா .தம்பிமார் எல்லோரும் நல்லவர்கள் தான் .அவர்கள் முன் வைத்த அரசியல் தான் இன்றும் சீர்தூக்கி பார்க்க வேண்டிய பரிதாபத்தில் உள்ளது.
    சிலை உடைப்பு கண்டிக்க தக்கதே.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...