Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

உலகம் முழுவதும் தமிழ் அகதிகள் அவலத்தில்:புலம்பெயர் அமைப்புக்களுக்கு பகிரங்க வேண்டுகோள்

இனியொரு... by இனியொரு...
05/27/2014
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்

SRI LANKA CONFLICTவன்னி இனப்படுகொலையின் பின்னர் உலகம் முழுவதும் தமிழ் அகதிகள் அனாதைகள் போல விதைக்கப்பட்டுள்ளனர். அவலங்களுக்கு மத்தியில் இவர்கள் வாழ்க்கை துயர் மிகுந்த தொடர்கதையாக நீள்கிறது. மலேசியாவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட அகதிகள் இலங்கை இனப்படுகொலை அரசின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தன்சானியா, டோகோ, பெனின்,தென்னாபிரிக்கா போன்ற பல ஆபிரிக்க நாடுகள், வியட்னாம் கம்போடியா போன்ற கிழக்காசிய நாடுகள், இந்தியா,இந்தோனேசியா,பங்களாதேஷ்,பாகிஸ்தான் போன்ற நாடுகள் ஆகியவற்றில் அகதிகள் எப்போதும் திருப்பி அனுப்பப்படலாம் என்ற அச்சத்தில் அடிப்படைவச்திகள் கூட இல்லாமல் வாழ்க்கை நடத்துகின்றனர். இவர்களில் முன்னை நாள் போராளிகள் மற்றும் வன்னியில் இறுதிவரை வாழ்ந்தவர்கள் போன்றோர் அடங்குவர்.

அகதிகளுக்கான ஐ.நா அமைப்பின் முகவர் நிறுவனத்தில் (UNHCR)தம்மை அகதிகளாகப் பதிந்துகொண்ட அகதிகளுக்கு அந்த நிறுவனம் பாதுகாப்பு வழங்குவதாகக் கூறிவருகிறது.
மறுபக்கத்தில் இலங்கையில் போர்க்குற்றம் மற்றும் சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கு எதிரான வன்முறைகளை அரச நிறுவனங்களே திட்டமிட்டு நடத்தி வருவதாக ஐ.நா மனித உரிமை ஆணையகம் பல்வேறு சந்தர்ப்பங்களில் கூறியுள்ளது.

இந்த அடிப்படையில் அகதிகளுக்கான ஐ.நா அமைப்பு இலங்கை அரசினால் உயிராபத்திற்கு உள்ளாக்கப்படலாம் என்று தெரிவிக்கும் அகதிகளைப் பாதுகாக்கும் கடப்பாட்டை வரித்துக்கொண்டுள்ளது.
ஆக, அகதிகள் பாதுகாப்பாக வாழ்வதற்கு இந்த நிறுவனம் பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாட்டில் உள்ளது. இந்த வகையில் நிறுவனத்தின் லண்டன் கிளயைத் தொடர்புகொண்ட போது அதற்கான உறுதியான பதில்கள் எதனையும் தர மறுத்துவிட்டனர்.

இந்தவகையில் புலம் பெயர் நாடுகளில் ஈழப் போராட்டத்தின் தொடர்ச்சியைத் தமது தலையில் சுமப்பதாகக்கூறும் தமிழ் அமைப்புக்கள் UNHCR ஐ தொடர்ப்புகொண்டு அவர்களிடமிருந்து உறுதியான பதிலைப் பெற்றுக்கொள்வது அவசியம்.

போர்க்குற்றம் நிகழும் நாடு என ஐ.நா இனால் தெரிவிக்கப்படும் நாட்டிற்கு அகதிகள் அனுப்பப்படுவதைத் தடுப்பது தொடர்பான தெளிவான நடவடிக்கைகளை அந்த நிறுவனம் முன்வைக்கவேண்டும்.

அவ்வாறு முன்வைக்கத் தவறும் பட்சத்தில் அகதிகளைப் பாதுகாப்பதாகக் கூறும் பொறுப்பிலிருந்து விலகிகொண்டு மக்கள் சார்ந்த மனித உரிமை அமைப்புக்கள் உருவாகுவதை அனுமதிக்க வேண்டும்.

இந்த அடிப்படைகளை முன்வைத்து, அகதிகளுக்கான ஐ.நா முகவர் நிறுவனத்தின் அலுவலகம் முன்பான கவனயீர்ய்ப்பு ஆர்ப்பாட்டத்தில் புலம்பெயர் அமைப்புக்கள் ஈடுபட வேண்டும்.

தவிர, உலகம் முழுவதுமுள்ள அகதிகளின் எண்ணிக்கை அவர்களின் அன்றாட வாழ்க்கை தொடர்பான புள்ளிவிபரங்களை மக்கள் முன் இந்த அமைப்புக்கள் வைக்க வேண்டும். இன்றும் வர்த்தக நிலையங்கள் உண்டியல் ஊடகப் பணம் சேர்க்கும் இப் புலம்பெயர் அமைப்புக்களின் நிதி வளம், நிகழ்வுகளினூடாகத் திரட்டப்படும் பணம் போன்றன அகதிகளுக்காக எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை வெளிப்படையாக முன்வைக்க வேண்டும்.

இவை அனைத்துனதும் ஆரம்பமாக UNHCR அலுவலகங்களின் முன்பாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட வேண்டும். இதனைப் பகிரங்க வேண்டுகோளாக புலம்பெயர் மற்றும் தென்னிந்திய அமைப்புக்களிடம் இனியொரு சார்பில் முன்வைக்கிறோம்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
இலங்கை வரலாற்றில் மாற்றி எழுதப்பட்ட சுதந்திர வீரன் சரதியல் ஒரு சகாப்தம்:எஸ்.கிங்ஸ்லி கோமஸ்

இலங்கை வரலாற்றில் மாற்றி எழுதப்பட்ட சுதந்திர வீரன் சரதியல் ஒரு சகாப்தம்:எஸ்.கிங்ஸ்லி கோமஸ்

Comments 2

  1. yokarasa.makinthan says:
    11 years ago

    எமக்கு  உதவி செய்யுங்கள்

  2. yokarasa.makinthan says:
    11 years ago

    நான் இலங்கயைிலும் அகதியா இருந்து இப்போது மலேசியாவில் அகதியாக உள்ளேன்

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...