Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

இலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் மறைமுகத்திட்டத்துடன் இந்தியா!:ஜே.வி.பி. குற்றச்சாட்டு!!

இனியொரு... by இனியொரு...
08/06/2008
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

06.08.2008.
எம்.ஏ.எம்.நிலாம் .

இந்தியா அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் இலங்கையை அடிமைப்படுத்தும் மறைமுகச் செயற்பாடுகளிலிறங்கியிருப்பதாக கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியிருக்கும் ஜே.வி.பி. நாட்டின் பொருளாதார வளத்தைச் சூறையாடும் இந்தியாவின் சதித் திட்டத்துக்கு மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் துணைபோய்க் கொண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருக்கின்றது.

இலங்கை இந்திய மின்சார பரிமாற்றத் திட்டமான நாட்டின் இறைமைக்கும் சுயாதிபத்தியத்துக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துமெனவும் ஜே.வி.பி. எச்சரித்துள்ளது.

தேசிய நூலக சேவைகள் ஆவணவாக்கல் நிலையக் கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஜே.வி.பி. செய்தியாளர் மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;

இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் கடலினூடாக 200 மைல் தூர கேபிள் வழியாக மின்சாரப் பரிமாற்றத் திட்டத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 450 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இத்திட்டத்துக்காக செலவிடப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டின் மதுரையில் உற்பத்தியாகும் மின்சாரத்தை தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாருக்கு கடல் வழியாக கேபிள் மூலம் பெற்றுக்கொள்ள விருப்பதாகவும் இந்த மின்சாரத்தை அநுராதபுரத்தை மையமாகக் கொண்டு அப்பிரதேசங்களின் கிராமப்புறங்களுக்குப் பெற்றுக்கொடுக்க திட்டம் வகுக்கப்பட்டிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.

இந்த மின்சாரப் பரிமாற்றத்தின் கீழ் ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை கொண்டுவரக்கூடிய கேபிள் கம்பி இணைப்பு ஏற்படுத்தப்படவிருக்கின்றது.

இந்த மின்சாரப் பரிமாற்றம் காரணமாக இலங்கையின் சக்தி வளத்துறை இறைமைக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இந்தியா அதன் அண்டைய நாடுகளான நேபாளம், பூட்டான், பங்களாதேஷ் போன்ற நாடுகளுடன் இதுபோன்ற உடன்படிக்கைகளைச் செய்து கொண்டதன் மூலம் அந்த நாடுகளை தனது ஆதிபத்தியத்துக்குள் வைத்துக்கொண்டுள்ளது. அந்த நாடுகள் இன்று தனது சக்தி வளத்துறை இறைமையை இழந்து இந்தியாவில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆயிரம் மெகாவாட் என்பது இலங்கை மின்சார உற்பத்தியில் 40 சதவீதமானதாகும். 2007 ஆம் ஆண்டில் இலங்கையில் பல மின் உற்பத்தி நிலைகளிலுமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட மின்சாரம் 2429 மெகாவாட்டாகும். திருகோணமலை மாவட்டத்தில் சம்பூரில் இந்தியா அமைக்கவிருக்கும் அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மூலம் முதற் கட்டமாக 500 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. படிப்படியாக இதனை ஆயிரம் மெகா வாட் வரை அதிகரிக்கவும் உடன்பாடு காணப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து ஆயிரம் மெகா வாட் கொண்டுவரப்படுவதோடு சம்பூரில் உற்பத்தியாகும் ஆயிரம் மெகா வாட்டும் சேரும்போது உள்நாட்டு மின்சக்தியின் சரி பாதியை இந்தியாவிடமிருந்தே பெறவேண்டிய நிலை ஏற்படலாம். இதனை வைத்து இந்தியா சக்தி வளத்துறையில் இலங்கையில் ஏகபோக உரிமை பெற்றுக் கொள்ள வழிபிறக்கும். இதன் மூலமே எமது நாட்டின் இறைமைக்குப் பங்கம் ஏற்படுவதைத் தடுத்து நிறுத்த முடியாது போகலாம்.

ஆயிரம் மெகா வாட் மின்சாரம் தொடர்பில் அவசர மாற்று வழியை இலங்கையால் ஏற்படுத்த முடியாதென்பதால் இந்த விடயத்தில் இலங்கை அரசு இந்தியாவுக்கு எந்தவித அழுத்தங்களையோ நிபந்தனைகளையோ பிரயோகிக்க முடியாது. உடன்படிக்கையை இரத்துச் செய்யவும் முடியாது.

கேபிள் மின்சார இணைப்பானது தலை மன்னாரூடாக ஏற்படுத்தபபடுவதால் அப்பகுதி கடற்றொழிலாளர்களும் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரலாம். இதனையும் மிக ஆழமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த மின்சாரப் பரிமாற்றத்தின் மூலம் இந்தியாவிடமிருந்து மின்சாரத்தைப் பெற்றுக் கொள்வது போன்று இலங்கையிலிருந்து இந்தியாவுக்கும் மின்சாரத்தை வழங்க முடியும் என மின்சக்தி அமைச்சர் தெரிவித்திருக்கிறார். இந்தியாவுக்கு மின்சாரத்தை வழங்கக்கூடிய அளவுக்கு இலங்கை மின்சாரத்தில் தன்னிறைவு காணவில்லை. சிலவேளை இந்தியா இங்கு உற்பத்தி செய்யும் மின்சாரத்தை தனது நாட்டுக்குக் கொண்டு செல்லும் நிலைமை ஏற்படலாம். இதன் மூலம் எமது நாடு இன்னொரு சவாலுக்கு முகம் கொடுக்க நேரிடலாம்.

இந்தியா எமது நாட்டின் வளங்களை சூறையாடுவதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றதாக இலங்கை அரசு இதற்குச் சாதகமான சமிக்ஞையை காட்டி வருகின்றது. சீபா உடன்படிக்கையை மறைமுகமாக செய்து கொள்ள முயற்சிப்பதும் இதற்காகவே ஆகும். இந்த உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டால் மிகக்குறுகிய காலத்துக்குள் அனைத்து விடயங்களிலும் இலங்கை இந்தியாவின் தயவிலேயே தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

இலங்கையின் அரசில், பொருளாதாரம் என்பவற்றில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு மறைமுகத்திட்டத்துடன் இந்தியா செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. மகிந்த ராஜபக்ஷவின் அரசு அதற்கான பாதையை சீர்ப்படுத்திக் கொடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்ன?யக்கா தெரிவித்தார்

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

அணுசக்தி திட்டம் -பேச்சுவார்த்தைக்கு தயார்: ஈரான் அறிவிப்பு!

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In