Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

இந்திய இராணுவத்தின் போர்க்குறங்கள் தொடர்பாகக் கருத்தில்லை:மண்டையன் குழு சுரேஷ் பிரேமச்சந்திரன்

இனியொரு... by இனியொரு...
03/02/2014
in இன்றைய செய்திகள்
0 0
4
Home இன்றைய செய்திகள்

SURESH_PREMACHANDRanஇந்திய அமைதி காக்கும் படையினர் தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் வெளியிடப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்திய அமைதிகாக்கும் படையினர் என்ற பெயரில் வடகிழக்கை ஆக்கிரமித்த இந்திய இராணுவம் பல்வேறு கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. பலர் கொல்லப்பட்டனர். பெண்கள் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தபட்டனர். தமிழ் தேசிய இராணும் என்ற உள்ளூர் இராணுவக் கூலிக் குழுவை இந்திய இராணுவம் உருவாக்கியது.

அப்பாவி இளைஞர்களைப் பலவந்தமாகப் கடத்திய இந்திய இராணுவத் துணைக்குழுவான ஈ.பி.ஆர்.எல்.எப் என்ற ஆயுதக் குழு தமிழ் தேசிய இராணுவத்தை உருவாக்குவதற்குத் துணை சென்றது. இவ்வாறு பலவந்தமாக இளைஞர்களைச் சேர்த்துக்கொவதற்கு தலைமை வகித்தவர் சுரேஷ் பிரேமச்சந்திரன். யாழ்ப்பாணத்தில் அசோக் விடுதியில் தலைமையகத்தைக் கொண்டிருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் கைதான இளைஞர்களை அங்கு அடைத்துவைத்தது. பயிற்சிக்கு அனுப்புவதற்கு முன்னர் பிரேமசந்திரனின் நேரடி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இணைந்துகொள்ள மறுத்தவர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டனர். சிலர் கொலை செய்யப்பட்டனர்.

தமிழ்த் தேசிய இராணுவத்தை அனாதரவாகக் கைவிட்டு பிரேமச்சந்திரன் குழு இந்திய இராணுவத்துடன் தப்பிச் சென்றதும், அப்பாவி இளைஞர்களைப் புலிகள் கைது செய்தனர். கைதான பலர் பல்வேறு முகாம்களில் புலிகளால் சாரி சாரியாக் கொலை செய்யப்பட்டனர். யாழ்ப்பாணத்தில் புலிகளின் கந்தன் கருணை முகாமில் மட்டும் ஒரு சில மணி நேரங்களுக்குள் 54 அப்பாவி இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கிழக்கில் மட்டும் 300 இளைஞர்கள் வரை கொல்லப்பட்டனர். பொதுவாகக் கிழக்கு மாகாண இளைஞர்களே இவ்வாறான பாதிப்பிற்கு உள்ளாகினர்.

தவிர, புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பல அப்பாவிகளை சுரேஷ் பிரேமச் சந்திரன் தலைமை வகித்த கிரிமினல் இராணுவமான மண்டையன் குழு கொலை செய்திருந்தது.
பின்னதாக மகிந்த ராஜபக்ச மீன்பிடி அமைச்சராகவிருந்த வேளையில் அந்த அமைச்சின் முக்கிய பொறுப்பிலிருந்த பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்ட போது பிரபாகரனின் ஆசி பெற்று அதன் முக்கிய உறுப்பினரானார்.

மகிந்த ராஜபக்ச போன்ற இனக்கொலையாளிகள் தண்டிக்கப்படாவிட்டால் அது மனிதகுலத்தின் அவமானமாகும். மகிந்த ராஜபக்ச போன்று பலர் இலங்கையில் மட்டுமல்ல உலகின் ஏனைய நாடுகளிலும் அச்சமின்றிக் கொலைகள் நடத்துவார்கள். வன்னிக் கொலைகளின் சூத்திரதாரிகளான மகிந்த குடும்பம் உலகின் கோரமான கொலையாளிகளுகு முன்னுதாரணத்தை வழங்கியிருக்கின்றது. அவர்களை ஊக்கப்படுத்துகின்றது. இனக்கொலையில் நேரடியாகப் பங்காற்றிய கோதாபய ராஜபக்ச மேற்கு ஏகாதிபத்தியங்களின் துணையோடு தனியார் இராணுவத்தை உருவாக்கியுள்ளார்.ஆனால் மகிந்த ராஜபக்சவின் குற்றங்களின் பின்னால் இந்திய ஆக்கிரமிப்பிற்குத் துணைசென்ற பல கிரிமினல்கள் மறைந்துகொள்வது நியாயமில்லை.

NN

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

ஏகாதிபத்திய உலகில் மக்களை ஒன்றுதிரட்டுதலும் போராடுதலும் : அருந்ததி ராய்

Comments 4

  1. S.G.Ragavan (Canada) says:
    12 years ago

    கந்தன் கருணை படுகொலை 1987 களின் நடுப்பகுதியில் நடந்தது அதில் EPRLF மற்றும் அமைப்புகளால் உருவாக்கப் பட்ட தமிழ் தேசிய ராணுவம் (TNA) சார் உறுப்பினர்கள் கொல்லப்படவில்லை. அது உண்மையில் புலிகளின் அதிகாரத் தலைமைக்கு கிட்டு சவாலாக எழுந்த காலப் பகுதியில் கிட்டுவை அதிகாரப் போட்டியில் இருந்து அகற்ற புலிகள் கிட்டுவை ஒழித்து கட்டும் முகமாக தாக்குதலை நடாத்தியபோது, அருணா என்கின்ற புலிகளின் மூத்த உறுப்பினர் கிட்டுவை மாற்று இயக்கங்களே தாக்கியதாக கருதி கந்தன் கருணை முகாமில் புலிகளால் தடுத்து வைக்கப் பட்ட மாற்று உறுப்பினர்களை பழிவாங்கு முகமாக கொன்றொழித்தார்.

    கிட்டுவுக்கும் புலிகளின் தலைமைக்கும் முரண்பாடுகளை உருவாக்கும் திரைமறைவு புலனாய்வு வேலையை இலங்கை புலனாய்வுத் துறை தமது புலனாய்வு முகவர் அல்லது உறுப்பினரான புலிகளின் உறுப்பினரும் கிட்டுவின் மொழிபெயர்ப்பாளருமாக இருந்த ரஹீம் ஊடாக செய்து வந்தது.

    இங்கும் கந்தன் கருணை படுகொலையில் பாதிக்கப் பட்டவர்கள் சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்றோரின் தவறான வழி நடத்தல்களால் புலிகளினால் தோற்கடிக்கப்பட்ட EPRLF உறுப்பினர்களே அதிகம்.

    இந்திய ராணுவ காலத்தில் உருவாக்கப் பட்ட TNA யை கூட சுரேஷ் புலிகளினதும் இலங்கைப் படைகளினதும் கொலை கரங்களில் சிக்கவைத்துவிட்டு சந்தர்ப்பவாத சுரேஷ் கூட்டணி தப்பியோடியது.
    இன்றும் தமிழ் மக்களை, ஒடுக்கப் படும் மக்களின் புரட்சிகர செயல் பாட்டாளர்களை ஒன்றிணைக்கும் செயல் திட்டத்தில் எத்தகைய காத்திரமான பங்களிப்பும் இன்றி அல்லது தடை கற்களை ஏற்படுத்தி கொண்டு வெத்துவேட்டு அரசியல் அறிக்கைப்போர் மாத்திரம் நடத்திக் கொண்டு அரசியல் மலடுகளாக உலாவருகிறார்கள்.

    EPRLF புலிகள் உடனடி மோதல் உருவாக சுரேஷின் விவேகமற்ற மோதல் போக்கும் வெறும் அறிக்கை போருமே காரணமாகும். இதனால் கொல்லப் பட்டது வெறும் அப்பாவி EPRLF உறுப்பினர்களே. மோதலை உருவாக்கிவிட்டு இந்தியா தப்பிச் செல்ல முதலில் படகில் குந்திய சீமான்.

    MP பதவி இல்லாவிட்டால் தமிழ் தேசியமும் மண்ணாங்கட்டியும் என்பதே சுரேஷின் செயலாக இருந்திருக்கும். தான் சார்ந்த EPRLF உறுப்பினர்களையும் தமது கட்சி நீக்கத்திலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நீக்கம் செய்வதிலும் உறுதியாக இருக்கும் சீமான்.

    EPRLF ராசிக் மக்கள் விரோத மனிதனாக மாற உருகொடுத்த பெருமகன் இவர். இன்றும் அதே கோணல் மாணலாய் தான் வலம் வருகிறார். கால ஓட்டத்தில் ஆவது மனிதர்கள் மாறவேண்டும். இவர்கள்???…………….

    • Alex Eravi says:
      12 years ago

      “புலிகளின் அதிகாரத் தலைமைக்கு கிட்டு சவாலாக எழுந்த காலப் பகுதியில் கிட்டுவை அதிகாரப் போட்டியில் இருந்து அகற்ற புலிகள் கிட்டுவை ஒழித்து கட்டும் முகமாக தாக்குதலை நடாத்தியபோது…”
      – பின்புதான் தெரிய வந்தது… கிட்டுவிற்கு கால் போக கிரனைட் தாக்குதல் நடாத்தியவர்… தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் (PLOTE) இருந்து பிரிந்தவர் என்றும்… தற்போது கனடாவில் வசிக்கிறார் என்றும்…

      “திரைமறைவு புலனாய்வு வேலையை இலங்கை புலனாய்வுத் துறை தமது புலனாய்வு முகவர் அல்லது உறுப்பினரான புலிகளின் உறுப்பினரும் கிட்டுவின் மொழிபெயர்ப்பாளருமாக இருந்த ரஹீம்…”
      – இவரும் தற்போது கனடாவில் வசிக்கிறார்…

  2. luli says:
    12 years ago

    மகிந்தா அரசு செயல்பாடே இந்தியைராணுவ போர்குற்ற விசாரனை.
    இதை கிழறி விட்டுவிட்டு தாங்கள் தப்பிக்கப்பார்க்கிறார்கள்

    • S.G.Ragavan (Canada) says:
      12 years ago

      இந்தியாவும் மகிந்தவுடன் கூட்டுச் சேர்ந்து……….

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...