Friday, March 6, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

இசை பிழியப்பட்ட வீணை : சில குறிப்புக்கள் – சுமதி சிவமோகன்

இனியொரு... by இனியொரு...
07/24/2008
in இலக்கியம்/சினிமா
0 0
0
Home இலக்கியம்/சினிமா

இசை பிழியப்பட்ட வீணை பற்றி இங்கு சில குறிப்புகளை நான் தரலாம் என்று நினைக்கிறேன். அவை அத் தொகுதியின் மூலம் எழும் அரசியல்களைப்பற்றியும் முக்கியமாக பெண் அடையாளங்களைப் பற்றியும் மலையகத்தைப் பற்றி உருவாகிக் கொண்டிருக்கும் அரசியல் அடையாளங்களைப பற்றியும் ஆனவை. இங்கு காணப்படும் 47 கவிஞர்களின் கவிதைகள் ஊடாக மலையகப் பெண்களின் கவிதைத்; தொகுதி என்ற பேரில் தனிப்பட்டகவிதைகளும் அந்நூலும் என்ன சொல்ல எத்தனிக்கின்றன என்பதிலான ஒரு ஆரம்ப ஆராய்ச்சியே இது. ஒரு சில கவிதைகளைப் பற்றி கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கையில், எழுத்தாக்கங்களுக்கும் படைப்பாக்கங்களுக்கும் பின்னால் உள்ள அரசியல்களைப் பற்றியான கட்டுரையே இது.
மலையகத்தை மையமாக வைத்து அதன் சரித்திரத்துடன் தங்களை அடையாளப்படுத்தி அதன் மூலமாக வௌ;வேறு அடையாளங்களை ஏற்படுத்திக் கொண்டுள்ள பெண்களின் கவிதைகள் இங்கு தரப்பட்டிருக்கின்றன. இத் தொகுப்பையும், இங்கு காணப்படும் கவிதைகளையும,; வரலாற்று நோக்கில் அணுகினால், அவை, வேறுபட்ட அரசியல் கண்ணோட்டங்கள், போக்குகள், எழுச்சிகள், இயக்கங்கள் இரண்டினை ஒன்றோடொன்று பின்னிப் பிணைகின்ற ஆக்கங்களாக வெளிப்படுகின்றன எனக் கூறலாம். மலையக மக்களின் வரலாறை அதன் ‘ஆதியிலிருந்து’ எடுத்து பார்க்காமல் இன்றைய கணத்துக்குப் பாய்வோமானால், இன்று, மலையகம் என்ற அயவநசயைடளைவ-கருத்தாக்கம் தனது வரலாற்றில் ஒரு சந்தி முனையில் உள்ளது எனக் கூறலாம். முதலாவதாக, மலையகம் என்ற அடையாளம் இன்றைய வரலாற்று சந்தியில் புதிய பரிணாமங்களுடன் எழுகின்றது அதே நேரத்தில், இன்னொரு வகையில், பெண்கள் என்ற அடையாளக் கூறுக்கூடாக பெண் என்ற எழுச்சி ஏற்படுகின்றது.

இங்கு, பெண்ணியத்தையும், பெண் என்றால் யார் என்ற கருத்தையும் முதலில் எடுப்போம். ஓரு உலக நோக்கில், ஜனரஞ்சக பெண்ணியங்களினாலும், சந்தைமயமாக்களினால் பிரபலமாக்கப்பட்ட பெண் அடையாளங்களும் ஒரு ஏற்றத்தாழ்வுள்ள பெண்ணியத்தையே முன்வைக்கின்றன எனப் பல்வேறுமாதிரி பெண்ணியல்வாதிகள் குறிப்பிட்டிருக்கிறார்கள். பெண் என்ற கருத்தாக்கம், அதன் உத்தியோகப் பூர்வமான கோலங்களில் மத்தியதர விழுமியங்களால் தான் ஒரு கட்டுக்கோப்புக்குள் கொண்டுவரப்படுகின்றன. இவ்வாறான நிலையில இப் பெண்களின் கவிதைகளிலும், இக் கவிதைத் தொகுப்பிலும் பெண் என்ற உருவகமைப்பு என்ன மாதிரியான அரசியல்களுக்கூடாக எழுகின்றது, என்ற கேள்வியே எனக்கு இக்கவிதைகளைப் படிக்கும்போது முக்கியமானதொன்றாக விளங்குகிறது.

உலகளாவிய பேரில், எழுந்துள்ள பெண் என்ற கட்டுக்கோப்புடன் இக் கவிதைகளும், இத் தொகுதியும் ஒருவித சம்பாஷணையை ஏற்படுத்திப்கொள்கின்றன எனலாம். அந்த சம்பாஷணையில் பெண் என்றவளுக்கு ஒரு பிரத்தியேக, சரித்திரம் வாய்ந்த, சரித்திரத்துடன் ஒன்றிய, சரித்திர உணர்வு கொண்ட அர்த்தத்தை அளிக்கும் முயற்சியாக இது அமைகிறது.. இந்த சரித்திர பிரக்ஞை ஒரு பிரதேச பிரக்ஞையாகவும், வர்க்க இன கூறுகளை உள்ளடக்கிய அடையாளக் குறியாகவும் விளங்குகின்றது. இன்று மலையக அடையாளம், பெருந்தோட்டத்தின் அரசியல் பொருளாதாரத்தை அண்டியும், அதே நேரத்தில் அதனைத் தாண்டிய நிலையை நோக்கி நகரும் முயற்சிகளை அண்டியும் எழுந்துள்ளது. அப்படிப் பார்க்கையில் பெண் என்ற உருவாக்கமும் கூட இவ்விரண்டு போக்குகளுக்கிடையிலான சிக்கல்கள், மிரண்டல்கள், சம்பாஷணைகள் என்பவற்றுக்கூடாகவும் உண்டாகின்றது எனக் கூறலாம்.. இதனை நான் அரசியல் சமூக போக்குகளின் பரிமாறல்கள் எனவும், அதனூடாக எழும் கருத்தாக்கங்களின் பரிமாறல்கள் என கொள்கிறேன்.

இந்த கசயஅநறழசம ற்கூடாக இத் தொகுப்பை நான் அணுகிறேன். அவ்வாறு செய்யும்போது இங்குள்ள கவிதைகளில் தோன்றும் பெண் எத்தகையவள், எவ்வாறு கூறுபட்டிருக்கிறாள், எவ்வாறு உருவாக்கப்பட்டிருக்கிறாள் என்றெல்லாம் பார்ப்பதுதான் எனது விமர்சன நோக்கு. அத்துடன் பெண்ணின் அகநிலை சார்ந்த இயக்குநிலை (யபநnஉல) ஒன்றும் எழுகின்றது. ‘நான் ஒரு பெண’; என்ற உணர்ச்சியும் உந்துசக்தியும் ஏற்படுகின்றது. (யபநnஉலஐ உந்துசக்தி என்று மொழிபெயர்க்கலாமோ என்றும் எனக்குத் தோன்றுகிறது) இந்த உந்து சக்தி மூலம், ஒட்டுமொத்தமாக உண்டாகிறது என்னவென்றால் எழுதும் பெண் என்ற கருத்தும், அதனோடு சேர்ந்த அடையாளமும தான்.

என்னைப் பொறுத்தவரையில் எழுத்தாளி; என்ற பதம், எழுத்தாளி;யின் தனித்துவம் என்ற போக்குகள் நவீனமயமாக்கலின் கூறுகளே. இவ்வெழுச்சி அழனநசnவைல யின் (அழனநசnவைலஸ்ரீ 1500களிலிருந்து ஐரோப்பாவில் எழுந்த சமூக அரசியல் போக்குகள், கட்டுக்கோப்புக்கள், சித்தாத்தங்கள் ஆகியவை) போக்குகளுடனும், எழுச்சிகளுடனும் சேர்த்து கதைக்கப்படுகின்ற ஒன்றாகும். அத்துடன், இப் பதம் மத்தியதரவர்க்கத்கின் எழுச்சியுடன் சார்ந்து உள்ளது. அதன் பேரில்;, எழுத்தாளி; என்று பார்க்கையில், தொழிலாளி என்ற புறநிலையிலிருந்து அவள் வேறுபடுத்தப்படுகின்றாள். எழுத்தாளி படைப்பாளியாகின்றாள். வர்க்கப் பார்வையில், எழுத்தாளியின் ஏக்கங்கள், அபிலாசைகள், ‘படைப்பாளி’ என்ற திசை நோக்கி நகர்கின்றன. அத்தனித்துவங்களால் வழிநடத்தப்படுகின்றன.
இவை ஒட்டுமொத்தமாக என்னமாதிரியான மலையக அடையாளங்களை உருவாக்கின்றன என்று பார்ப்பது முக்கியம். இங்குள்ள கவிதைகள் மத்தியதர வர்க்கத்தின் கூறான பெண் அல்லது எழுதும் பெண் என்ற அடையாளத்துடனும் மலையக அடையாளத்தின் மையம் எனக் கருதப்படும் தோட்டப்பெண், தோட்டத்தொழிளாளி என்ற தொhழிளாள வர்க்க பெண் அடையாளங்களுடனும் இடையில் ஏற்படும் பரிமாறல்களின் வெளிப்பாடாகத் தான் ஒருவகையில் அமைகின்றன. மலையகப் பெண் என்றால் தோட்டத்தொழி;ளாளிப் பெண்தான் என்று நாம் ஏற்தனவே, வரலாற்று ரீதியாக, அரசியல் ரீதியாக கணித்துக ;கொண்டு;;ள்ளோம். அந்நிலையில் இங்கு காணப்படும் கவிதைகளும், கவிதைத் தொகுப்பின் நியாயமும் அவ்வாறான பரிமாறல்களுக்கூடாகத்தான் வெளிவருகின்றன. அப்பரிமாறலின் வெளிப்பாடாகவும் உள்ளது.

‘எழுதும் பெண்’ என்ன தளத்தில் இருந்து பேசுகின்றாள் என்றும், என்னமாதிரியான அரசியலை ஏற்படுத்துகிறாள் என்றும பார்த்தால், மலையகம் என்ற சடப் பொருளுக்கும், அங்கு கூலி வேலை பார்க்கும் பெண்களுக்கும், எழுதும் பெண்களுக்கும் இடையில் பிளவுகளை ஏற்படுத்தி, பின் அப் பிளவுகளுர்டாக கவிதைக்கும், கவிஞருக்கும் ஒரு போராட்ட சூழ்நிலையை எழுத்தின் மூலம் ஏற்படுத்துகின்றன. இப் போராட்ட சூழ்நிலை எப்படிப்பட்டது என்று பார்ப்பது முக்கியம். ‘எழுதும் பெண்’ என்பதை மேலும் ஆராய்ந்தால்–. ‘எழுதும் பெண’; என்பவள் யார்? அவளும் தொழிலாளப் பெண்ணும் ஒன்றுதானா? அல்லது வேறையா? அதே நேரத்தில் தொழிலாளப் பெண் எழுதும் பெண்ணாகும் போது அவளின் அடையாளம் மாறுபடுகின்றதா? எழுதும் பெண் தோட்டத்தில் தொழில் புரியும்போது அவளின் அடையாளம் என்னவாகின்றது?

ஒருவகையில் அவ்வேறுபாட்டை உடைக்க முயல்கிறார்கள் இசை பிழியப்பட்ட வீணை தொகுப்பின் ஆசிரியர்களும், கவிஞர்களும.; எழுத்தாளிக்கும் தொழிலாளிக்கும் இடையிலான பிரிவை ஃ பிளவை மாற்றியமைக்க முயல்கிறார்கள். அத்துடன், இன்றைய கணத்தில் எழுந்துள்ள, மலையகத்தைப் பற்றிய அரசியல் கேள்விகளுக்கு, பெண் என்ற அடையாளத்துக்கூடாக ஒரு பரிசீலனையை கொண்டுவா முயற்சிக்கிறார்கள். அரசியல் என்கின்ற போது பொதுமயமாக்கப்பட்;ட, ஆண்மயமாக்கப்பட்ட செயற்பாடுகளே அரசியல் தளத்தைச் சார்ந்தது எனப் பொதுவாகக் கொள்ளப்படுகின்றது. பெண் என்ற பேரில் உருவாகும் அடையாளங்கள் இத்தகைய ஆண்மயமாக்கப்பட்ட அரசியல் தளங்களுக்குள் புகுந்து வித்தியாசமான கேள்விகளை எழுப்புகின்றன. அக் கேள்விகள் என்ன? எழுத்தில் சிதைக்கப்பட்ட இந்த 46 அல்லது 47 கவிதைகளும் மலையகத்தை எமக்கு உருவகித்து தருகையி;ல் (ஆண்) தலைமைத்துவங்கள், பேரின கொடுமைகள், பற்றிப் பேசி, அதனூடாக, வர்க்கப் பிளவுகளைப் பற்றியும், இனப் பிளவுகளைப் பற்றியும், பாலியல் பிளவுகளைப் பற்றியும் பேசுகின்றன.

போராட்டம் என்பதில் பெண் எவ்வாறு உரு எடுக்கிறாள்? போராட்ட பாணி ஆக்கங்கள் போராளிக்கும் பகைவனுக்கும் இடையில் உள்ள வித்தியாசங்களை வைத்து இருக்கின்றன. பல கவிதைகள் பகைவநன புறநிலையில் வைத்து, மலையகத்துக்கு அப்பால் பட்ட புறநிலையில் வைத்து, அதன் பேரில் ஒரு முழுமையான மலையக அடையாளத்தை வெளிப்படுத்துகின்றன. அவ் வெளிப்பாடுகள் போராட்ட கவிதைகளுக்கு உரித்து எனக் கருதப்படும் மரபுகள் மூலமாக கவிதைப் பாணியைக் கையாளுகின்றன. இத்தகைய கையாளுதல்களில் ஒருவித நடளைழைn (ஒருவித தவிர்த்தல்) காணப்படுகின்றது போலத் தெரிகின்றது. மலையகத்தின் அகநிலைகளையும், எழுதும் பெண்ணின் அகநிலைகளையும் தவிர்த்து கவிதை எழுதும் மரபுகளிலும், கவிதைக்குரியன எனப்படும் கட்டுக்கோப்புகளுக்கும் ஊடாக சவால்களை விடுகின்றனவாக இருக்கின்றன. அப்படி இருக்கக்கூடாது என நான் கூறவில்லை. கவிதையின் புறநிலை நேர்த்தியில் மலையகத்துக்கு ஒரு நேர்த்;தியான அடையாளம் தேடப்படுகின்றது, அத் தேடல் ‘எழுதும் பெண்’ என்று இன்று மலையகத்தில் உருவாகிக்கொண்டீருக்கும் பெண்ணுக்குரிய சிக்கலான அடையாள வார்ப்புகளை இருட்டடிப்பு செய்வது போல இருக்கின்றன எனக்கு. ஆனால் இச் சிக்கல்களையும், மலையகத்தின் பல்வேறுபட்ட கூறுகளையும் ஓருமித்து கொள்ளும் ஒரு டைனாமிக் ஆன பெண் நிலைப்பாடுகள் பல கவிதைகளில் காணப்படுகின்றன. அம் மாதிரியான கவிதைகளில் சிலதையே இங்கு குறிப்பிட்டு காட்டுகிறேன்.

ஓரு பலம் வாய்ந்த பேசும் குரல், ‘எங்கள் எம் பி,’ ‘சமனற்ற சட்டங்கள்,’ ‘வல்லமை,’ ‘எரியுட்டப்பட்ட தலைப்பு,’ ‘சவால்’; போன்ற கவிதைகளிலும் வேறு பல கவிதைகளிலும் காணப்படுகின்றன. இக்கவிதைகள் பெண் என்ற அகநிலை போக்கை மீள அமைக்கின்றன. இவற்றினுள் ஒரு புறநிலை-அகநிலை பரிமாறல்கள் நடைபெறுகின்றன. அப்பரிமாறல்கள் தற்போதைய அரசியல்கள், அனுதாபங்கள், அடையாளங்கள், கருத்தாக்கங்கள் இடையே உண்டாகியுள்ள உரையாடல்கள் மூலமாக எழுந்துள்ள எழுத்துக்களாகும். போராளிப் பெண்ணுக்கு ஓரு அகநிலை உண்டாகின்றது.

பெண்ணின் அகநிலை வெளிப்பாடுகளை உணர்ச்சிபூhர்வமாக மலையக அடையாளத்துடன் பின்னிப்பிணைத்;து காட்டுகிறது ‘ஏனெனில்’ என்ற கவிதை. இலங்கையின் 60 வருட சுதந்திரத்தையும், மறைமுகமாக மலையகத்தின் சுதந்திரம் அற்ற தன்மையையும் ஒரு பெண்ணின் மணவாழ்க்கையுடன் ஒப்பிட்டு எழுதுவது ஒருவிதத்தில் நான் சொன்ன கருத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். ‘ஏனெனில்ஃ நான் ஒரு பெண’; என முடிவடையும் இக் கவிதை பெண்ணையும் அதன் அக நிலைகளையும் ஒருமித்து, மலையகத்தின் அத்திவாரத்துடன் ஒன்றுபடுத்துகின்றது.

மலையகத்தின் அடையாள ஏக்கங்கங்கள் பன்முகமானவை. இதனில் தாய் என்ற உருவகம் ஒரு பலம் வாய்ந்ததொன்றாக உள்ளது. பல்வகை எழுச்சிகளில், முக்கியமாக தேசியவாத எழுச்சிகளில், தாய் என்ற பதத்தின் ஊடாக மண்ணுக்கும் மகனுக்கும் இடையிலான உறவுகள் வெளிக்கொண்டு வரப்படுகின்றன. போராளி கலாச்சாரத்திலிருந்து எழும் தத்துவாக்கங்;கள் இவ்வுறவுகளை முதன்முதலில் ஆண்மயமாக்குகின்றது. அதுமட்டு;;;
மல்லாது மண்ணையும் தாயையும் ஒரு அதிகாரமற்ற நிலைக்குத் தள்ளுகின்றன. போராளி ஃ மண், மகன் ஃ தாய் என்ற பிளவுகள் ஏற்படுகின்றன.. இச்சூசூழலில் எழுதும் பெண் என்ன செய்வாள்? நான் மேலே கூறிய பிளவுகளின் அதிகார சமனிலையை மாற்றியமைப்பாளா? மலைமதியின் நான் ‘தாயா? கூலியா?,’ மீனாள் செல்வனின் ‘பாவசங்கீர்த்தனம்’ என்ற கவிதைகள் என்ன செய்கின்றன? மலைமதியின் கவிதை பெண் என்ற நோக்கில் ஒரு சவாலை ஏவிவிடுகிறதென்றால், அச்சவால் பெண்ணையும், கூலியையும், மண்ணையும் ஒருவித ஒப்பீடல்களுக்குள் கொண்டுவருகின்றது. இதன் மூலம் மலையக அடையாளத்தை பெண் அடையாளமாக்கின்றது. எழுதும் பெண், உழைக்கும் பெண்: இவை இரண்டுக்கும் இடையில் ஒரு வித்தியாசமான ஆளுமையான உறவு ஏற்படுகின்றது. ‘பாவசங்கீர்த்தனம’; கவிதையைப் பற்றி எனது தனிப்பட்ட கருத்து: இந்த ஆளுமை மிக்க, தன் விமர்சன மிக்க கவிதையின் கடைசி ஏழு வரிகள் ஒருவித ஏமாற்றத்தையே அளித்தன. மைய எழுத்துக்களில் தேறிப் போய் இருக்கும் ‘சென்ட்டீமென்டாலிடீ’ இங்கும் தன்னைத் துருத்திக் கொண்டு கடைசியில் வந்து நிற்கின்றது என நினைக்கின்றேன். ஆனால் இதனை வேறு மாதிரி பார்ப்பவர்களும் இருப்பார்கள். ‘தொழிளாளிப் பெண்ணின் சோக கீதம்’ தாய் என்ற உழைக்கும் பெண்ணுக்கும், எழுதும் பெண்ணுக்கும் இடையிலான இடைவெளியை
தன்னையறியாமலே ஸ்திரப்படுத்துகின்றது. ஒரு விதத்தில் மலையகப் பெண்ணின் பலத்தை மழுங்கலடிக்கின்றதோ இக் கவிதை எனக் கூடத்; தோன்றுகின்றது.

கவிதைத் தொகுப்பின் முதல் கவிதை எனக்குள் ஒரு நட்புறவு உணர்ச்சியைத்
தட்டிவிட்ட கவிதை. இப்படி கூறுகையில் இக்கவிதை ஏனையவையை விட சிறந்ததென நான் சொல்லவில்லை. நான் முதன்முதலில் கூறிய பரிமாறலுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது என்ற காரணத்துக்காக மட்டுமே இப்படிக் கூறுகிறேன். ஓரு ‘அதிகாலைப் பொழுதின் ரம்ய மூச்சு’ என்ற தலைப்பில் உள்ள இந்தக் கவிதை மலையகத்தின் இயற்கை ஊடாக ஒரு ‘ரம்யமான’ அடையாளத்தை தேடுகின்றது. ஆனால் கவிதையின் கடைசி வரிகளில் அந்த ரம்யத்துக்கும் பெண் என்ற எழுத்தாளிக்கும் இடையில் ஒரு சின்ன கீறலை ஏற்படுத்தி விடுகின்றது. அந்த நிலையில் பெண் என்பவள் எழுத்தாளி-படைப்பாளி என்ற அங்கலாயிப்புகள் ஊடாக எழுகிறாள். அவ்வுருவம் தோட்டத் தொழிளாளி என்ற உருவக அமைப்பிலிருந்து விடுபட்டு உள்ளது. அதே நேரம் மலையகத்தின் ‘இயற்கையை’ ‘விலைக்கு’ வாங்கும் வழரசளைவ அபகரிப்பிலிருந்தும் வேறுபட்டு உள்ளது.

இன்று ‘எழுதும் பெண்’ என்பவள் மலையக அடையாளத்துக்கூடாக எழுகையில், பெண்ணியங்களுக்கு ஒரு சவால் விடுகிறாளர்? அத்துடன், மயைலயக அடையாளத்தினை
பெண்மயமாக்கி, அரசுக்கும், ஆண்ஆதிக்கங்களுக்கும் ஒன்றிணைந்த ஒரு சவாலாக இருக்கிறாளா என நாம் ஆராய்கையில், இசை பிழியப்பட்ட வீணை .அதற்கு என்ன பங்கு செய்கிறது என நாம் பார்க்க வேண்டும். இக் கவிதைத் தொகுப்பு இவ்வாராய்தலுக்கான
முதற் கட்டத்தை தளத்தை அமைத்துத் தந்துள்ளது.

தகவல் : ரஞ்சி

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

பேச்சு மூலம் தீர்வுக்கான வாய்ப்புகள் தென்படவில்லை : கொழும்பு மறைமாவட்ட ஆயர்

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In