Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

அரசியல் கைதிகள் : அரசு காலத்தைக் கடத்துகிறது

இனியொரு... by இனியொரு...
06/18/2012
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

இலங்கையில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அரசியல்கைதிகளை விசாரிப்பதற்கென தனியான சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கும் அரசின் அண்மைய அறிவிப்பு வெறும் காலத்தைக் கடத்தும் நடவடிக்கை என்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அரசியல்கைதிகளை விடுதலை செய்வதற்கான இயக்கத்தில் மற்ற தேசியக் கட்சிகளையும் அமைப்புகளையும் ஒன்றிணைத்து போராட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான போராட்டத்தை விரிவுபடுத்துவதற்கான போராட்டத்தில் ஜனநாயக மக்கள் முன்னணி, நவ சமசமாஜ கட்சி, ஐக்கிய சமவுடைமைக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் முன்னிலை சோசலிஸக் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் சிவில் அமைப்புகளும் இணைந்துகொண்டுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

இந்த போராட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட தேசிய கட்சிகளுடன் சரத் பொன்சேகா தலைமையிலான கட்சியையும் இணைத்துக்கொண்டு கைதிகள் விவகாரத்தை தேசியப் பிரச்சனையாக முன்னெடுத்து அரசுக்கு அழுத்தம் கொடுக்கவுள்ளதாக மனோ கணேசன் மேலும் சுட்டிக்காட்டினார்.

விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருந்தது என்ற சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு, அரசியல் காரணங்களுக்காக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து கைதிகளுக்கும் பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை அளிக்கப்பட வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கவுள்ளதாகவும் மனோ கணேசன் தெரிவித்தார்.

கைதிகள் விவகாரத்தை ஐநாவின் பொறிமுறைக்குள் கொண்டுசெல்வது,
ஏனைய தேசியக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி கைதிகள் பிரச்சனையை தேசியப் பிரச்சினையாக அணுகுவது,
இலங்கையிலுள்ள சகல வெளிநாட்டு தூதுவர்களிடமும் கைதிகள் விவகாரத்தை கொண்டுசெல்வது,
கைதிகளின் விடுதலை தொடர்பான போராட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது,
கைதிகளுக்கு சட்ட ரீதியான உதவிகளை அளிப்பது

என ஐந்து அம்ச வேலைத்திட்டத்தின் கீழ் தமது நடவடிக்கைகள் அமையும் என்றும் மனோ கணேசன் கூறினார்.

விடுதலைப் புலிச் சந்தேகநபர்களை விசாரிப்பதற்கென தனியான சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கும் அரசின் அண்மைய அறிவிப்பு வெறும் காலத்தைக் கடத்தும் நடவடிக்கை என்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இறுதிக்கட்டப் போரில் அரச படைகளிடம் சரணடைந்து புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஆயிரக்கணக்கான முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்குப் புறம்பாக, அதற்கு முன்னைய காலங்களில் இருந்தே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பலர் பல ஆண்டுகளாக சிறைச்சாலைகளில் வாடுவதாக அரசியல் கைதிகளின் விடுதலைக்கான அமைப்பினர் கூறிவருகின்றனர்.

இவ்வறான கைதிகள் சுமார் 850பேர் கொழும்பு தடுப்புக்காவல் சிறை, கொழும்பு மகசீன் சிறை, யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, வவுனியா ஆகிய சிறைச்சாலைகள் மற்றும் களுத்துறை பூசா தடுப்புக்கூடம் என நாட்டின் பல பாகங்களிலும் சிறைவைக்கப்பட்டுள்ளதாக மனோ கணேசன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

எல்லை தாண்டி மீன் பிடித்த ராமேசுவர மீனவர்கள் விரட்டியடிப்பு

Comments 1

  1. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    Nobody seems to be realising the seriousness of the this matter. Geneva Conventions came into being in 1939. They are all covered by that convention and the relief granted there in for prisoners of war. The thing is here they have only PTA (Prevention of Terrorism Act) in the books. Minister Rauf Hakeem who is also a lawyer is trying to diver the attention away from this matter.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In