Monday, March 9, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

அப்பிள் ஐ போன் 6 வெளியானது : தொலைபேசி ஊடாகக் கேட்காத அவலம்

இனியொரு... by இனியொரு...
09/22/2014
in பிரதான பதிவுகள் | Principle posts, இன்றைய செய்திகள்
0 0
1
Home பிரதான பதிவுகள் | Principle posts
11 நாட்கள் முகாமிட்டு அப்பிள் ஐ போனைப் பெற்றுக்கொண்டவர் கௌரவிக்கப்படுகிறார்
11 நாட்கள் முகாமிட்டு அப்பிள் ஐ போனைப் பெற்றுக்கொண்டவர் கௌரவிக்கப்படுகிறார்

அப்பிள் ஐ போன் 6 விற்பனைக்கு விடப்பட்டதைத் தொடர்ந்து அதனைப் பெற்றுக்க்கொள்வதற்காக நீண்ட நேரம் காத்திருக்கும் வரிசைகளை லண்டன் மற்றும் பிரித்தானியாவின் நகரங்களில் காணக்கூடியதாகவிருந்தது. தொலைபேசிக் கருவியின் அதி உச்ச விலை 789 பவுண்ட்ஸ்கள். கருவியைப் பெற்றுக்கொள்வதற்காக பத்து நாட்களுக்கும் மேல் லண்டனின் மையப்பகுதியான கொவன்ட் கார்டனிலிருந்த அப்பிள் கடைக்கு முன்னால் முகாமிட்டு காத்திருந்திருக்கிறார்கள். 11 நாட்கள் முகாமிட்டிருந்த ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஸோல்டன் என்பவர் அப்பிள் ஐ போன் 6 ஐ முதல் ஆளாகப் பெற்றுக்கொண்டு ஐபோன் கடையிலிருந்து மகிழ்ச்சி ததும்ப வெளியேறினார்.

ரீஜென்ட் தெருவில் அமைந்துள்ள இந்தக் கடையிலிருந்து இரண்டு மைல்கள் தொலைவில் வீடற்றவர்களும், சமூகத்தில் நாளாந்த உணவிற்கு ஏங்கும் மனிதர்களும் மூன்று வருடங்களின் முன் முகாமிட்டுப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்தனர். டெமோகிரசி விலேஜ் என்று அழைக்கப்பட்ட இந்தப் போராட்டதைத் தடை செய்த அரசு லண்டனை அசுத்தப்படுத்தியதாக போராட்டக்காரர்களிடம் தண்டப்பணம் கோரியது. சிலரது தண்டப்பணம் ஒரு மில்லியன் வரை சென்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வாழ்நாளில் லண்டனை மையமாகக்கொண்டு எந்தச்செயற்பாடுகளிலும் ஈடுபட முடியாத அளவிற்கு முடக்கப்பட்டுவிட்டார்கள். உரிமைக்காகப் போராடியவர்கள் துரோகிகள் ஆக்கப்பட அப்பிளின் கொள்ளைக்கு முகவரியிட்டவர் சாதனையாளராக ஊடகங்களில் உலாவருகிறார்.

ஐபோனை உற்பத்தி செய்வதற்கு அதன் இறுதி விலையிலிருந்து 1.1 வீதமே செலவாகிறது. ஒவ்வொரு ஐ போன் கருவியையும் விற்பனை செய்யும் போது 60 வீதமான பணத்தை இலாபமாக ஐ போன் நிறுவனம் பெற்றுகொள்கிறது.

உலகின் ஏனைய நிறுவனங்கள் எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு ஐ போன் நிறுவனம் கொள்ளப்பணத்தைப் பதுக்கி வைத்திருக்கிறது.
பழபழக்கும் தொலைபேசிக் கருவி சீனத் தொழிலாளர்களின் இரத்ததை உறிஞ்சியே தயாரிக்கப்படுகின்றது.
ஐ போன் சீனாவிலேயே தயாரிக்கப்படுகின்றது, முன்னை நாள் சோசலிச நாடான சீனாவில் தொழிலாளர்கள் சிறைவைக்கப்பட்டு அந்தச் சிறையிலேயே ஐ போன் தயாரிக்கப்படுகின்றது. சீனாவில் பெரிய தொழிற்சாலைகளை நடத்தி வரும் பாக்ஸ்கான் என்ற தாய்வான் நிறுவனம் பெரும்பகுதி உற்பத்தியை செய்கிறது.

அமெரிக்கப் பல்தேசிய நிறுவனத்திற்கு சீனா வழங்கும் மானியம், சட்ட இலகுபடுத்தல்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி தொழிலாலர்கள் தொழிற்சாலையிலேயே தங்கவைக்கப்பட்டு ஐ போன் உற்பத்தி நடைபெறுகிறது. சீனப் பத்திரிகையான ஈவினின் போஸ்ட் இன் ஊடகவியலாளர் யங் வூ பத்து நாட்கள் ஐ போன் தொழிற்சாலையில் வாழ்ந்து அத் தொழிலாளர்கள் சுரண்டப்படும் முறை குறித்த அதிர்ச்சியான தகவல்களை வெளியிட்டார். எட்டு மணி நேர வேலை என்ற தொழிலாளர்களின் அடிப்படை உரிமைக்கு அங்கு இடம் கிடையாது. 2012 ஆம் ஆண்டின் இறுதியில் 20 ஆயிரம் புதிய தொழிலாளர்களை இணைந்துக்கொண்ட நிறுவனம் ஒவ்வொரு பத்து மணி நேர வேலைக்கும் 3000 புதிய ஐ போன்களை உற்பத்தி செய்தது. பல தொழிலாளர்கள் தற்கொலை செய்து செத்துப் போயுள்ளார்கள்.

ஐபோன் 6 ஐ வாங்குவதற்காக லண்டனில் அலைமோதும் அடிமைகள்
ஐபோன் 6 ஐ வாங்குவதற்காக லண்டனில் அலைமோதும் அடிமைகள்

பெரும்பாலானவர்கள் தொழிற்சாலையின் மேற் தளத்திலிருந்து கீழே குதித்துச் செத்துப்போகிறார்கள். 2010 ஆம் ஆண்டில் மட்டும் 18 பேர் தற்கொலைக்கு முயற்சித்து 14 பேர் தற்கொலை செய்துகொண்டார்கள். 2013 ஆம் ஆண்டில் ஒரு ஆணு,ம் ஒரு பெண்ணும் தற்கொலை செய்துகொண்டார்கள். வேலைப்பழுவும் சிறை வாழ்க்கையுமே தற்கொலைக்கான காரணம் எனக் குறிப்பிடப்படுகின்றது.

மிருகங்கள் போல நடத்தப்படும் தொழிலாலர்கள் களைத்துப்போய் சில நிமிடங்கள் ஓய்வெடுத்தால் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. நிறுவனத்தின் தொழிலாளர்கள் வாரத்திற்கு 85 மணி நேரம் வரை வேலை வாங்கப்படுகின்றனர்.

தொழிலாளர்கள் ஐ போன் தயாரிப்பு நிறுவனத்திலேயே தங்க வேண்டும். அவர்கள் ஒரு சிறிய அறைக்குள் 8 பேரும், பெரியவற்றினுள் 20 பேரும் தங்கவைக்கப்படுகின்றனர். அனைவரும் படுக்கைக்குப் போனால் அறைகளின் நடமாடுவதற்கு இடைவெளி கிடைக்காத அளவிற்கு நெருக்கமான அறைகள். உறங்கி எழுந்ததும் படுக்கையைப் பூட்டி வைப்பதற்கு சிறிய பெட்டிகள் வழங்கப்படுகின்றன. ஓய்வு நாளில் போதிய அளவிற்கு மதுபானம் வழங்கப்படும். வெளியில் செல்வதற்கோ வேறு வேலைகளைப் பற்றிச் சிந்திப்பதற்கோ தொழிலாளர்களுக்கு நேரம் கிடைக்காது.

பிரித்தானியாவிலுள்ள லைக்கா நிறுவனத்தில் கூட இதற்கு ஒப்பான வேலை வாங்கும் முறை கையாளப்படுவதாக அண்மைக்கால சாட்சிகள் தெரிவிக்கின்றன.

அப்பிள் நிறுவனம் உலகம் முழுவதும் மக்கள் போராட்டங்களைத் தடுப்பதற்கான தன்னார்வ நிறுவனங்களை உருவாக்கியுள்ளது. வரிகட்டாமல் தப்பித்துக்கொள்வதற்காக ஏகாதிபத்திய நாடுகளால் உருவாக்கப்பட்டுள்ள சட்டமான கோப்ரட் சமூகப் பொறுப்ப்ச்சட்டம் என்பதன் அடிப்படையில் அப்பிள் தன்னார்வ நிறுவனங்களை நடத்தி வருகிறது.

இதன் மறுபுறத்தில், அப்பிள் வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ள பிரதேசங்களில் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளது. அப்பிள் பதுக்கிய பணம் முழு உலகத்தினதும் வறுமையை நிறுத்துவதற்கு போதுமானது என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. பதுக்கிய பணத்தின் தொலை 100 பில்லியன் டொலர்கள்.
பிரித்தானியாவின் பிரபல நகைச்சுவையாளர் ரஸல் பிரண்ட் அப்பிள் தொடர்பாக அவரது யூ ரியூப் சனலில் பதிந்துள்ள வீடியோ அப்பிளை கடித்துத் துப்புகிறது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
கருணாவையும் பிள்ளையானையும் விசாரணை செய்யவேண்டும் : நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம்

வடக்கு - கிழக்கு இணையக்கூடாது - பிள்ளையான் கூச்சல்

Comments 1

  1. Sutharsan says:
    11 years ago

    No one is forcing anyone to buy iPhone 6. Depending on your economic circumstances you can buy a phone even for $10 and be happy. The very same iPhone in a few years will get sold for about $50. You make it sound like it is Apple’s fault thy invented the iPhone. If anyone would use your business model the world will still be using the humongous black phone on the land line. May be they are making huge profits and spending some of that money on R&D developing iPhone10. Please tell me what kind of phone you use. I am sure it is not the Motorola that was introduced 20yrs back. Similarly are you still using a DOS PC, or sending mail by post only, travelling by bullock cart and so on. To be honest I don’t buy the latest gizmos ever. I don’t buy extended warranties on electronics that that get outdates even before the manufacturer’s warranty expires. It is up to the consumer to decide what they want and definitely it is not your job to tell them what they should desire.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...