Tuesday, May 5, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

வேதாந்தாவின் வெறிக்கு எதிராக பறை ஒலித்த PARAI – Voice Of Freedom

இனியொரு... by இனியொரு...
08/02/2014
in பிரதான பதிவுகள் | Principle posts, இன்றைய செய்திகள்
0 0
10
Home பிரதான பதிவுகள் | Principle posts

parai1மன்னார் கடற்பரப்பு உட்பட உலகம் முழுவதும் இயற்கை வளங்களைச் சுரண்டுவதற்காகவே போர்களும் மனிதப்படுகொலைகளும் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இவற்றின் பின்புலத்தில் பல்தேசிய நிறுவனங்களின் பண வெறியே காணப்படுகின்றது. இலங்கையில் டாட்டா, வேதாந்தா உட்பட நூறு வரையான இந்திய நிறுவனங்கள் 400 மில்லியன் டொலர்கள் வரை 2009 ஆம் ஆண்டு இனப்படுகொலைக்குப் பின்னர் முதலிட்டுள்ளன. இலங்கையில் பல்தேசிய வியாபார நிறுவனங்களின் சட்டரீதியாகவும் சட்டத்திற்கு உட்படாமலும் தமது முதலீடுகளை மேற்கொள்கின்றன.

புலிகள் மீண்டும் உயிர்கின்றன என்று ராஜபக்சவும் புலிகள் இன்னும் இருக்கிறார்கள் என்று புலம்பெயர் பிழைப்புவாதிகளும் ஒருவருக்கு ஒருவர் தீனிபோட்டு வளர்த்துக்கொள்கின்றனர். ஒருபுறத்தில் ராஜபக்ச தன்னைத் தண்டிக்கப் போகிறார்கள் என்று அனுதாபத்தைப் பெற, மறுபுறத்தில் ராஜபக்சவைத் தண்டிப்பது மட்டுமே தமிழ் மக்களின் தேவை என்று புலம்பெயர் வியாபாரிகள் தொடைகளைத் தட்டிக்கொள்ள பல்தேசிய வியாபாரச் சுரண்டல் யாருக்கும் தெரியாமல் நடந்தேறுகிறது.

இந்திய பிரித்தானிய நிறுவனங்கள் இலங்கையைச் சுரண்டிக்கொழுப்பதில் முதலாவது மற்றும் இரண்டாவது இடங்களைப் பெற்றுள்ளன. வேதாந்தாவின் இந்திய நிறுவனமான ‘கேயரின் இந்தியாவின்’ கிளையாகவே இலங்கையில் வளங்கள் சுரண்டப்படுகின்றன. ஒரிசாவின் நியாம்கிரி மலையில் இயற்கையின் அரவணைப்போடு வாழ்ந்துவரும் மக்களை அவர்களது நிலங்களை விட்டு வெளியேற்றிவிட்டு 600 ஏக்கர் நிலத்தைப் பறித்து வேதாந்தா வெறியாட்டம் நடத்தியது. வேதாந்த அலுமீனியம் என்ற அதன் மற்றொரு கிளை பழங்குடி மக்களின் இரத்தத்தில் அலுமீனியத்தை அகழ்வதற்கு எதிராக அந்த மக்கள் வீரம்செறிந்த போராட்டம் நடத்திவருகிறார்கள்.

இந்தியாவில் ஏழு பிரதேசங்களில், தென்னாபிரிக்கா மற்றும் இலங்கையின் மன்னாரிலும் வேதாந்தா எண்ணை அகழ்வில் ஈடுபட்டுள்ளது.

இந்தியாவில் 30 வீதமான பெற்றோலை ‘கேரின் இந்தியா’ நிறுவனமே வழங்கி வருகிறது. இலங்கையில் மன்னார் கடற்படுக்கையில் எண்ணையையும் இயற்கை வாயுவையும் கண்டுபிடித்துள்ள வேதாந்தா அதனை அகழ்ந்தெடுப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளது. இலங்கையில் வன்னி இனப்படுகொலை நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் பிரித்தானிய அரசு ஆயுதங்களையும் ஆலோசனைகளையும் மட்டும் இலங்கைக்கு வழங்கவில்லை. வேதாந்தாவின் இணை நிறுவனமான கேயரின் இந்தியா என்ற நிறுவனத்திற்கு மன்னாரில் பெற்றோலிய அகழ்வு வேலைகளுக்கான அனுமதியையும் இலங்கை அரசிடமிருந்து பெற்றுக்கொடுத்தது.

மன்னார் கடற்படுக்கையில் 74 மில்லியன் பரல்களுக்கு இணையான பெற்றோலிய வளத்தை கேயரின் கண்டுபிடித்துள்ளது. 2017/18 ஆம் ஆண்டுகளில் இலங்கையிலிருந்து எண்ணை அகழ்வு விற்பனைக்கு வரும் என்கிறது வேதாந்தா நிறுவனம்.

இலங்கை அரசிற்கு எதிரான அழுத்தக்குழுவாகப் புலிகளைப் பயன்படுத்திக்கொண்ட பிரித்தானிய அரசிற்கு இலங்கை அரசைத் தனது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த பின்னர் புலிகளின் தேவை அற்றுப்போனது. இதனால் புலிகளையும் மக்களையும் அழித்து ராஜபக்ச என்ற குரூரமான சர்வாதிகரியை ஆட்சியில் அமர்த்தியது. இன்று ராஜபக்ச தனது மூச்சுவிட்டால்கூட போர்க்குற்ற விசாரணை செய்வோம் என மிரட்டி தனது பல்தேசிய வியாபார நிறுவனங்களைச் சுரண்ட அனுமதித்துள்ளது. வேதாந்தா மட்டுமல்ல, இலங்கையில் கல்வியைத் தனியார் மயப்படுத்தும் வியாபாரத்தை பிரித்தானிய நிறுவனங்கள் முதலிடம் வகிக்கின்றன. மருத்துவத்தைத் தனியார் மயப்படுத்த பிரித்தானியாவும் இந்தியாவும் முதலிடம் வகிக்கின்றன.

இயற்கை வளங்களைச் சுரண்டுவதில் இந்திய பிரித்தானிய நிறுவனங்கள் முன்னணியில் திகழ்கின்றன. இலங்கையில் போரை நடத்தியதன் பின்னணியில் உலக நாடுகள் பங்களித்திருப்பதை யாரும் நிராகரிக்கவில்லை. உலக நாடுகளின் அதிகாரவர்க்கத்தை ‘சர்வதேச சமூகம்’ என விழிக்கும் தமிழ்த் தலைமைகள், அந்த சர்வதேச சமூகம் மக்களை அல்ல பல்தேசியப் பண முதலைகளையே காப்பாற்றும் என்பதை இப்போது அறிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்தியாவின் அரசியல் செயற்பாட்டாளரான அருந்ததி ராய் கூறுவது போல இலங்கையில் நடைபெற்ற அழிப்பு பல்தேசிய வியாபார நிறுவனங்களுக்கானது.

இலங்கையை மையமாகக் கொண்ட மற்றொரு பல்தேசிய வியாபார நிறுவனமான ஹேலிஸ் இற்காக வெலிவேரிய என்ற சிங்களக் கிராமத்தில் அப்பாவி மக்கள் மீது போலிஸ் தாக்குதல் நடத்தப்பட்டது நினைவிருக்கலாம். மன்னாரில் பெற்றோலிய அகழ்விற்கு ஹேலிஸ் கேயரின் உடன் இணைந்து செயற்படுகிறது.

நேற்று-01.07.2014- பிரித்தானியாவில் பறை- சுதந்திரத்திற்கான குரல் இளைஞர்கள் வேதாந்தா நிறுவனத்தின் முன்னால் போயில்-வேதாந்தா அமைப்புடன் இணைந்து எதிர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தினார்கள்.

மன்னாரில் சூறையாடப்படும் நமது வளங்களுக்காகவும் மக்களுக்காகவும் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பல்தேசிய வியாபார வெறியர்களால் பாதிக்கப்படும் மக்களுக்காகவும் சிங்கள மக்களுக்காகவும் பறை முழங்கியது. இவர்களோடு மேலும் சில தமிழர்களும் இணைந்து கொண்டார்கள்.

ஏகாதிபத்தியங்கள் தொடர்பாகவும் பல்தேசிய நிறுவனங்கள் தொடர்பாகவும் புதிய சந்ததியிடம் ஏற்படும் விழிப்புணர்வின் எதிரொலியாகப் பறை ஒலித்தது. வேதாந்தாவிற்கு எதிராக மட்டுமல்ல மக்களைச் சூறையாடி போர்களைகளதும், இனப்படுகொலைகளதும் பின்புலத்தில் செயற்படும் ஏனைய பல்தேசிய கோப்ரட் வியாபார நிறுவனங்களுக்கு எதிராகவும் தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டம் விரிவடையும்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி வெலிவேரியப் படுகொலைகளின் முதலாமாண்டு நிறைவு

ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி வெலிவேரியப் படுகொலைகளின் முதலாமாண்டு நிறைவு

Comments 10

  1. தமிழ் மூடன் says:
    12 years ago

    “Green Peace” என்ற இயக்கம் உலக நன்மைக்காக  பல போராட்டங்களை நடத்துவதுபோல் நமது “பறை” உலக மக்களின்  நன்மைக்காக  உலகின்  மூலை முடுக்குகளில் உரக்க ஒலிக்க வேண்டும்.
    பாரதி கனவுகண்ட புதியதோர் உலகம்செய்ய இந்தப் பறையை நாம் முழக்க வேண்டும்
    வெகுவிரைவில் இப்பறை உலகின் தலை நகரங்களில் 
    இல்லாத இயலாத  சுரண்டப்படும் அப்பாவிகளுக்காக  ஒலிக்கும் என்பது இந்த மூடனின் திடமான நம்பிக்கை

    விரைவில் B B C, C N N Aljazeera போன்ற  உலகின் முன்னணி  செய்தி  நிறுவனங்களின்  முக்கிய  செய்திகளில் நமது”பறை”  ஒலியை நாம் கேட்கலாம்   

  2. mannan says:
    12 years ago

    இந்திய மற்றும்  மேற்குலக  நாடுகளின்  உளவுத்துறைகள்   புலிகளை
    அழிப்பதற்கும் , தமிழரின்  உருமைக்கான  போராட்டத்தை  தடுப்பதற்குமாக
    இலங்கைத்தமிழர்களின்  பெயரில்  சர்வதேச  நிறுவ்னங்களை  உருவாக்குயுள்ளதாக  சந்தேகப்படவேண்டியுள்ளது.

    • Kumar says:
      12 years ago

      நீங்கள் யாருக்கு எதிராகப் போராடுகிறீர்கள், அல்லது யாருக்கு எதிராகப் போராடாமல் தவிர்க்கின்றீர்கள் என்பதுதான், நீங்கள் யார் என்பதையும், எவரின் ஏவலாளி என்பதையும் தீர்மானிக்கும்.’ வேதாந்தா’ என்ற பல்தேசிய கம்பனிக்கு எதிராக போராடினால் , அவர்கள் சரியான சக்திதான் .

  3. Thirumalan says:
    12 years ago

    பறை  உலகம்  முழுவதும்  ஓங்கி  ஒலிக்கட்டும்.  லண்டன்  வீதிகளில்  பறை ஒலிக்கும்  என்று  யாரும்  எதிர்பார்த்தார்களா?

    • Sutharsan says:
      12 years ago

      It is London, you can play anything you want. If you can try to better the lives of Parayars in SL than trying these gymics. 

      • Alex Eravi says:
        12 years ago

        Yes, Sutharshan
        Who ever talking Communisam & Socialisam living only in capitalist countries… 
        Not in China, Russia or Cuba…

        Global politics…. Hmm…

      • mannan says:
        12 years ago

        புலம்பெயர்நாடுகளில்  நூற்றுக்கணக்கான  தமிழ்  அமைப்புகள்
        ஆரம்பிக்கப்பட்டது  இலங்கையில் வாழும்  தமிழ் பேசும் மக்களிற்காகவா
        அல்லது   குறிப்பிட்ட  ஓர் சமூகத்தினரது  நலன்களிற்காகவா?

        • Sutharsan says:
          12 years ago

          Mentioning the Parayars was in a generic sense to include all low caste communities. BTW will these progressives play the Parai at their weddings too instead of the Nadaswaram ? Makes me wonder ??

          • Parai player says:
            12 years ago

            Sutharsan ,

            Out your wedding forward? remarry to give us an opportunity?

            Reforming the repressed Tamil community is the issues here. Trust me – not the parai players who’d play anywhere as needed as long as its not hurting the sensitivites of the Paraiyar or doing something stupid like welcoming some genocidaire

          • Sutharsan says:
            12 years ago

            Thank you for your offer but I don’t have any idea of getting married any sooner.  I am talking about the oppressed amongst the oppressed. Not the gymics of playing Parai in the streets of London.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
விஜய் vs சீமான்  vs பொடெமோஸ்  வரை: அரசியல் எதிர்பார்ப்புகள் தேர்தல் யதார்த்தத்தை மீறும்போது…

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ்  வரை: அரசியல் எதிர்பார்ப்புகள் தேர்தல் யதார்த்தத்தை மீறும்போது…

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...