வடக்கில் கடைசியாக எஞ்சியிருந்த ஒரேயொரு செஞ்சிலுவைச் சங்க அலுவலகமான வவுனியா அலுவலகமே இன்றுடன் மூடப்பட்டுள்ளது. செஞ்சிலுவைச் சங்கத்தின் அலுவல்களை கொழும்பில் இருந்து மேற்கொள்ளுமாறு அரசாங்கம் விடுத்திருந்த வேண்டுகோளுக்கு அமைவாகவே அதன் கிளை அலுவலகங்கள் படிப்படியாக மூடப்பட்டு வந்தன.
கடந்த பெப்ரவரி மாதத்தின் கடைசிப் பகுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்த அதன் அலுவலகமும் மூடப்பட்டிருந்தது. அதனையடுத்து தற்போது வவுனியா அலுவலகம் மூடப்பட்டுள்ளது.
மக்கள் சேவை மேற்கொள்வதாகக் கூறும் தன்னார்வ நிறுவனங்கள், பாசிச அரசுகளின் நிகழ்ச்சிநிரலுக்கு அமையவே செயற்படுகின்றன. உலக வல்லரசுகளின் பின்பலத்தில் செயற்படுகின்ற இந்த நிறுவனங்கள் அரச அதிகாரங்களுக்கு எதிரானவை என்ற மாயையை உருவாகுகின்ற போதிலும் அடிப்படையில் அரசுகளுக்கு ஆதரவாகவே செயற்படுகின்றன.







