Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

லண்டன் ஓவல் மைதானத்தில் அமைதியான ஆர்ப்பாட்டத்தின் மீது இலங்கை அரச குண்டர்படை தாக்குதல்

இனியொரு... by இனியொரு...
06/19/2013
in இன்றைய செய்திகள்
0 0
10
Home இன்றைய செய்திகள்

ovel-clashலண்டன் ஓவல் மைதானத்தில், இலங்கை – அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையில் ஐசிசி கோப்பைக்கான துடுப்பாட்டப் போட்டியின் காலிறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது.

இதன் போது இலங்கையைப் புறக்கணிகக் கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றை தமிழர்கள் நடத்தினர். அமைதியாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியவர்கள் மீது சிங்கக் கொடி ஏந்திய காடையர் கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது. பிரித்தானிய போலிசாரின் தலையீட்டின் பின்னர் காடையர் கும்பல் கலைக்கப்பட்டது. உதைபந்தாட்டம், துடுப்பாட்டம் போன்றவற்றால் வெறியூட்டப்பட்ட குழுக்கள் மோதிக்கொள்வது வழமை. அதிலும் அதிகாரவர்க்கத்தின் அரசியல் இணைந்துவிட்டால் மோதல்கள் கோர வடிவத்தை எடுக்கின்றன.

இலங்கை அரசின் நோக்கம் தெளிவானது. சிங்கள மக்கள்மத்தியில் இனவெறியைத் தூண்டி அதனை ஆயுதமாகப் பயன்படுத்தி அடுத்த தேர்தலில் வெற்றிகொள்வது தான். சிங்கள மக்கள் மத்தியில் பேரினவாத வெறியைத் தூண்ட வேண்டுமாயின் தமிழ் மக்கள் மத்தியில் இனவெறிகொண்ட கூட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும், அவர்கள் சிங்கள மக்களை அழிப்போம் என்று வெறிகொள்ளும் போது சிங்கள மக்களை அதனைப் பயன்படுத்தி அணித்திரட்டிக்கொண்டு ஆட்சி நாற்காலிகளில் அமர்ந்து கொள்வார்கள்.

இவ்வாறு சிங்கள மக்களில் ஒரு பகுதியினரை வெறி கொண்டவர்களாக மாற்றுவதற்கு எவ்வாறு அரச ஆதரவுக் காடையர்கள் துணை போகின்றனரோ அவ்வாறே தமிழ்ப் பேசும் மக்களின் மத்தியிலுள்ள சில பிழைப்புவாதிகளும் துணை போகின்றனர். அவர்களுக்கு இனவாதம் பல வழிகளில் தமது பிழைப்புக்கு அவசியமாகின்றது. முழுச் சிங்கள மக்களையும் ராஜபக்ச பேரினவாத அரசிற்கு ஆதரவாக மாற்றும் வகையில் சிங்கள மக்கள் மீது வெறுக்கத்தக்க இனவாத வெறுப்பை திணிக்கின்றனர். ஓவல் மைதான சம்பவத்தின் பின்னர் தமிழ் மக்கள் மத்தியிலுள்ள பிழைப்புவாதக் கும்பல்கள் இணையங்களின் ஊடாகவும், குறுஞ்செய்திகள் ஊடாகவும் இனவாதத்தைத் தூண்ட ஆரம்பித்துவிட்டனர்.

தமிழ் இனவாதம் என்பது சிங்கள மக்களை ராஜபக்சவிற்கு ஆதரவாக ஓரணியில் திரட்டும்  என்பதையெல்லாம் இவர்கள் கண்டுகொள்வதில்லை. ராஜபக்ச அரசின் தமிழ் அடியாட் கும்பல்களுக்கு இவர்கள் நியாயம் சேர்த்துக்கொடுக்கிறார்கள் என்பதையும் புறக்கணித்துவிடுகிறார்கள். இடதுசாரி எழுச்சிகளைக் கூட இனவாதமாக மாற்றுவதற்குத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள ஜே.வி.பி மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சி போன்றவற்றின் வளர்ச்சிக்கும் இவர்கள் துணைபோகின்றனர்.

இந்த நிலையில் தமிழ்வின் போன்ற சில  செய்தி இணையங்கள் பொறுப்புணர்வுடன் செய்திகளை வெளியிட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டிய மாற்றம்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

வடக்கில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட வேண்டும் : கோத்தாபய

Comments 10

  1. velu says:
    13 years ago

    அப்ப புலி ஆதரவாளர்களுக்கு அவர்களது சொந்த சாப்பாடு கொடுக்கபட்டது, இதனை தானெ புலி மறறவர்களுக்கு செய்த்தது, இப்ப அது திரும்ப கிடைகிரது 

    • Subbu Nathan says:
      13 years ago

      அத லண்டனுல யாரு செய்தா, எப்ப செய்தான்னு சொல்லமுடியுமா ?

  2. veeran says:
    13 years ago

    இவர்கள் ஏன் தடை செய்யபட்ட பயங்கரவாதிகளின் கொடியை பிடித்து கொண்டு, இல்லாதநாட்டு வரை படத்தை டி சர்ட்டில் போட்டுள்ளனர், எனவெ தாஇன்ந்த வம்பெல்லாம்

    • Subbu Nathan says:
      13 years ago

      பிரியல்லியே, அங்கு, அந்தநாட்டில் அந்தக்கொடி பிடிப்பது தடை செய்யப்பட்டது என்றால் அதை அந்தநாட்டு போலிசல்லவோ அதை அமுல்படுத்துவதும் தண்டிப்பதுவும். சிறிலங்காவிலிருந்து போன அடிதடிக்கெல்லாம் யாரிந்த அதிகாரத்தை கொடுத்தாங்க ? சாருக்கு மேலைநாட்டு சுதந்திரம் இன்னமும் பிரியல்லபோல, அடிமையாய் பிறந்து அடிமையாய் வாழ்ந்து, அடிமையாய் சிந்தித்து அடிமையாய் அழிவதண்டே அடம்பிடிச்சா அதற்கு மற்றவங்களும் ஜால்ரா போடணுமா ?

      • veeran says:
        13 years ago

        இந்த புலியின், சாகசம் , தமிழ்நாட்டில் , சினிமா பார்பது போல், த்ரில்லாக தான் இருக்கும் , ஆனால், இவர்கள்ளால், இலங்கையில் தமிழர்களுக்கு, விடுதலை கிடைக்கும் எனநிங்கள்நம்பினால், உங்களை பார்த்துநான் பரிதாபம் தான் பட வென்டும், அந்த கொடியே அவமான சின்னம், கொலைகாரர்களின் கொடி, மக்களை. அடிமயாகநினைத்தவர்களின் கொடி, 

        • Sinnappu Rajah says:
          13 years ago

          அது எப்படியோ இருக்கட்டும், அவன் சட்டத்தை மீறுனதாக  னீரே அதை கையுல எடுக்கலாமோ. எதை எதை.நியாயப்படுத்துவதெண்டு ஒரு வெவஸ்த வாண்டாம்? 

          • veeran says:
            13 years ago

            புலிக்கொடி பற்றி தொலைக்காட்சியில் விமர்சித்த குட்ட தோழருக்கு கடையில் வைத்து அடி போட்டது சரியென்றால் ஓவலில் கொடி பிடித்தவர்களுக்கு அட போடுவது சரியில்லையா?

    • Praveen says:
      13 years ago

      Unnudaya Pera mudalla matthada panni

  3. வண்ணன் says:
    13 years ago

    புலிக்கொடி பற்றி தொலைக்காட்சியில் விமர்சித்த குட்ட தோழருக்கு கடையில் வைத்து அடி போட்டது சரியென்றால் ஓவலில் கொடி பிடித்தவர்களுக்கு அட போடுவது சரியில்லையா?

    • veeran says:
      13 years ago

      இதனை எல்லாம் இவர்களுக்கு சொல்லி விளங்குமா

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...