Monday, April 27, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

ராஜீவ் சொற்படி கேட்டிருந்தால் பிரபாகரன் முடி சூடா மன்னனாக இருந்திருப்பார். ப.சிதம்பரம்.

இனியொரு... by இனியொரு...
07/19/2010
in இன்றைய செய்திகள்
0 0
31
Home இன்றைய செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் நடந்த காமரஜார் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமே இத்தகவலை வெளியிட்டுள்ளார். ’’ஒரு நாடு முன்னேற வேண்டுமென்றால் அந்த நாட்டில் கலவரமோ, வன்முறையோ இருக்கக் கூடாது. நமக்கு பிரபாகரன் எதிரானவர் அல்ல. அவர் சென்ற பாதைதான் எதிரானது. நான் பிரபாகரனை நன்கு அறிந்தவன். இரவு 12 மணிக்கு எனது காரை நானே ஓட்டிச்சென்று அவர் இருந்த இடத்தில் அவருடன் பல மணி நேரம் பேசியிருக்கிறேன். அவர் ராஜீவ்காந்தி கூறியபடி இலங்கை–இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டிருந்தால் இன்று இலங்கையில் 2 மாநிலங்களில் அவர் முடிசூடா மன்னனாக இருந்திருப்பார். ஆனால் நிலைமை வேறாகிவிட்டது. இலங்கையில் எத்தனை பேருக்கு பேரிழப்பு. எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர்’’ ” என்று உயிரிழப்பு ஏதோ இயர்க்கைப் பேரிடரைப் போலப் பேசியுள்ளார். இலங்கையின் குற்றச் செயல்களில் இந்தியாவுக்கும் குறிப்பாக ப.சிதம்பரத்திற்கும் தொடர்புண்டு என்பது குறிப்பிடத் தக்கது.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

ஆயுதம் கடத்திய புலிகளைக் கைது செய்யக்கோரியுள்ளது- இண்டர்போல்.

Comments 31

  1. Mahendra says:
    16 years ago

    ராஜீவ்காந்தி கூறியபடி இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும்படி உண்ணாநோன்பு மேற்கொண்ட தியாகி திலீபனை இந்தியா சாகடித்த வரலாறு எந்தமொழியில் எழுதப்பட்டது. சிதம்பரத்தைப் போன்றோருக்கு தெரிந்த மொழியில் எழுதப்படவில்லையா….

  2. TAMILAN says:
    16 years ago

    yes mr sithamparam, tamil tiger leader perapaharan if not killed rajev, tamil peoples get tamil eelam , but rajev make mistake tamil tiger killed rajev, tamils life is bad………………………………..this is polictical;;;;;;;;;;;;;;;;;you know last war time how many sri lankan tamils killed from sri lankan army, more than 1,50,000.thousand civilion, indian soneya and rasapatha to gather make war in sri lan ka , if you konw this?

  3. rammy says:
    16 years ago

    //ராஜீவ் சொற்படி கேட்டிருந்தால் பிரபாகரன் முடி சூடா மன்னனாக இருந்திருப்பார்.//

    கசப்பான உண்மை!
    யார் சொன்னபடி அவர்கள் கேட்டார்கள்!?
    மற்றவரைக் குற்றம் சொல்லி, தான் சாதித்தது என்ன?
    தன்னை நம்பிய மக்களை இனப்பலி இட்டதுதான் வேதனை!
    சகோதர தலைகொய்வு, நண்பர்களே இல்லாதது, சர்வாதிகாரம், மமதை,வன்முறையை மட்டுமே நம்பியது,உட்சண்டை(கருணா) – ஈழம் கருக காரணங்கள்!
    துன்பியல் சம்பவத்தால், இந்தியத் தமிழர்களின் ஆதரவை இழந்தது – வரலாற்றுப் பிழை!
    வன்முறை என்றுமே ஜெயித்தது இல்லை!
    ஒரு கால கட்டத்தில், வன்முறையைக் கைவிட்டு, ஜனநாயகப் பாதைக்கு வந்திருந்தால், ஈழத்துயரம் இருந்திருக்காது!

    • premraj says:
      16 years ago

      I agree with you my friend

      • K.R.Athiyaman says:
        16 years ago

        http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=39363

        Lost opportunities for the Tamils

        • K.R.Athiyaman says:
          16 years ago

          Two other opportunities were given by Presidents Ranasinghe Premadasa and Chandrika Kumaratunga for the Tamil leaders to rule over their own community through peace talks. Even the LTTE’s ideologue Anton Balasingham at the opening of the LTTE courts complex in Kilinochchi in 2003 said they could have accepted the famous “package” offered by President Kumaratunga. But it was too late……..

  4. thamilmaran says:
    16 years ago

    இந்தியா இந்த அளவில் சிந்திப்பதால்தான் அமெரிக்கா சிதம்பரம் தலையில் மிளகாய் அரைக்கிறது சீனாவோடு கையைக் கட்டிக் கொண்டு பேசுகிறது.சாதிகளூம் அதற்கு உள்ளான் சாதிகளூமாய் கலாச்சாரப் பிரச்சனைகள் கொண்ட் இந்தியாவை மாற்ற சிதம்பரம் போல சிந்தித்தால் முடியாது.

  5. Nada Manivannan says:
    16 years ago

    Hi

    Sithamparam Iaya may be right. But it is Thamil’s Fate thing should be done by the way it has been done. Past is past; we (Thamils) need to be very carefully understand national politics, regional politics, international politics and move accordingly. Divine grace is important for thamils to do this. End of the day everything is in the hand of Divine, We are just tools. we have to realize this very fact. Eelam is every Thamil’s wish.
    Thanks.

  6. JAMES FRIEDRICH says:
    16 years ago

    ’’ஒரு நாடு முன்னேற வேண்டுமென்றால் அந்த நாட்டில் கலவரமோ, வன்முறையோ இருக்கக் கூடாது.- ப.சிதம்பரம்.
    சாதிகளூம் அதற்கு உள்ளான் சாதிகளூமாய் கலாச்சாரப் பிரச்சனைகள் கொண்ட் இந்தியா – இலங்கையை மாற்ற சிதம்பரம் போல சிந்தித்தால் முடியாது.- தமிழ் மாறன்.
    தமிழ் மாறன் தற்போது,நவீன ஆராய்ச்சி முடிவுகளுக்கு அமைய சிந்திப்பது போலுள்ளது!.

    “முள்ளிய வாய்க்காலை” பல அறிஞர்கள் ஆராய்ச்சி செய்கிறார்கள்.கடைசியில்,”பிரபாகரனின் ஆட்களும்,வன்னி மக்களும்” மட்டுமே போராட்டத்தில் தனித்து விடப்பட்டனர்!.இது “சாதி அமைப்பின் கோர முகத்தைக் காட்டுகிறது”!.
    இந்தியாவில் ப.சிதம்பரம் போன்றவர்கள்,”எச்சில் கையால் காக்காய் ஓட்டாதவர்கள்”. பண்ம சம்பாதிப்பது மட்டுமே தம்முடைய சமூகக் கடைமையாக எண்ணுபவர்கள்(புலூடோகரஸி).ஒரு சமூகமாக செயல்படும் போது,இவர்களின் சொத்துக்களுக்கு(இறையாண்மை) ஆபத்து வரும் போது,”இரத்தம் சிந்துவதையே” சமூக கடைமையாக கொண்ட,இராணுவ இனத்தின்(சாதியின்) பின்னால் ஒளிந்துக் கொள்வார்கள்.ஆனால் அரசியல் முடிவை எடுப்பது இரத்தம் சிந்தாதவர்கள்தான்!.”சாதி அமைப்பற்ற சமுதாயங்களில்” இந்த மேற்கத்திய “தேசிய நாடு முறை” பெரிய தவறுகளை ஏற்ப்படுத்தாது!.பெரும்பாலும்,சிவில் முடிவுகளுக்கும்,இராணுவ முடிவுகளுக்கும் ஒரு மரபியல் இணக்கப்பாடு இருந்திருக்கிறது!.ஜாதி அமைப்பு சமுதாயத்தில் இனி,சமூகத்திற்காக,இறையண்மைக்காக ஆயுதம் தாங்க முன் வரும் நபர்கள்,தாங்கள் இந்த முயற்சியில் கரையேற வேண்டுமென்றால் ,முதலில் மற்ற ஜாதியினர் அனைவரையும் கொன்று விடவேண்டும்!.இல்லாவிட்டால் ஆயுதங்கள் இருக்கும் பக்கம்கூட தலைவைத்து படுக்காமல் இருப்பது நல்லது!.

    • xxx says:
      16 years ago

      இன்னுமொரு துட்டுக்கு இரண்டு கொட்டைப்பக்கு இடுகை

    • Shiva says:
      16 years ago

      People who prescribe the 1987 Accord fail to talk about the clauses that look after the interestrs of Indian hegemony.
      The Accord was thoroughly inadequate to address the national question: the LTTE was correct to a large degree in opposing it. In fact it was the failure of the Indian government to fulfil its pledges that led to that situation.
      India’s intention was to have a loyal client in the NE and an intimidated slave state in the South. But to push the Sri Lankan state beyond a point would blow in the face of the Indian hegemonists. So they decided to placate the Sri Lankan state. The JVP protestwent beyond Indian expectations.
      A serious mistake that the LTTE made was to let the EROS MPs who were elected with its backing to vote with the government to give the President the power to dissolve the NE PC.

      In all, the Indian establishment used the plight of the Tamils to its advantage and, having achieved its purpose, dropped them like a hot brick.

      As for trusting Chithamparam, the latest reminder is the cold blooded murder of Azad (CPI Maoist spokesperson) who was negotiating with Swami Agnivesh about peace talks between the Indian state and the Maoists, and covering it up as ‘encounter killing’.

  7. செழியன் says:
    16 years ago

    இதைவிட பிரபாகரன் இந்தயாவில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து,ஏதாவது கோஷ்டியில் சேர்ந்து,எவன் காலையாவது நக்கி எம் எல் எ,எம்பி யாக்கூட ஆகி இருக்கலாம்.காங்கிரஸ் பாரம்பரியப்படி லோன் வாங்கி கொடுத்து பிழைப்பை ஓட்டியிருக்கலாம்.அரசு நிலத்தை வளைத்துப் போட்டு கோடிகளில் மாடிகட்டி அதன்மீதும் ஒரு காங்கிரஸ் காங்கிரஸ் கொடியை பறக்கவிட்டு வாழ்ந்திருக்காலாம்.உழைக்காதமேதை பா.சி தண்டச்சோறுண்ணும் தன் மகன் கா.சியைப்போல் தன் மகனையும் அதிகார அரசியலுக்கு அழைத்து வந்திருக்கலாம் .ஆனால் நேதாஜி வழியில் போராட வந்த தலைவர் பிரபாகரனுக்கு இந்த சாணக்கியத்தனமெல்லாம் தெரியவில்லை.அவர் சுதந்திரத் தமிழீழத்தை மட்டுமே தரிசிக்க விரும்பினார்.அதுசரி இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் கனிம வளங்களை பன்நாட்டு முதலாளிகளுக்கு தாரைவார்த்துத் தரும் புரோக்கராகவும், இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும் மாஃபியாக்களின் இந்திய முகவராகவும் இருக்கும் ப.சிதம்பரம் கோடம்பாக்கத்தில் தன் பியட்காரில் அழைத்துச்சென்றது எந்த பிரபாகரனை?ஒரு வேளை அது நம்ம கேப்டன் பிரபாகரனாக இருக்குமோ?

    • thamilmaran says:
      16 years ago

      செழியன் மிகவும் என்னை சிரிக்க வைத்தீர்கள்.நன்றீ.திரு சிதம்பரம் அவர்கள் சும்மா இருக்க நேரமில்லை என்பதே உண்மை.அவர் பரம்பரைப் பண்க்காரர் அரசிய்ல் அவ்ருக்கு வெறூம் பொழுது போக்கோ பணம் சம்பாதிப்பதோ அல்ல்.அவர் அதை தனது கடமையாகச் செய்கிறார் அவ்வப்போது காமடி பண்ணூகிறார் அவ்வளவே.

      • அமுதன் says:
        16 years ago

        பரம்பரை பணக்கார் என்பதை பா.சியின் நேர்மைக்கு ஆதாரமாக நீங்கள் காட்ட முனைவது ஒரு அபத்தம்.அப்பாவித்தனம்.இப்படித்தான் ரெம்ப காலமாய் காங்கிரஸ் காரர்களுக்கு ‘அவரு பண்ணையார் அவருக்கு எதுக்கு நம்ம பணம்’ என்று சொல்லிக்கொண்டே நம்மக்கள் ஒட்டு போட்டார்கள்.இன்னமும் இப்படித்தான் பலரும் நாட்டை விழுங்கி ஏப்பம் விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.ராஜிவ் கூட பரம்பரை பணக்காரர்தான்.அப்படியென்றால் போபர்ஸ் பீரங்கி அவரைப்பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்தது ஏன்?இன்னும் இரண்டு தலைமுறைத் தள்ளிப்போனால் திருக்குவளை குடும்ப வாரீசுகள் உலகப்பணக்காரர்கள் வரிசையில் வரிசையாய் இருப்பார்கள்.அவர்கள் நேர்மையானவர்களா?இன்னொரு விசயம் பரம்பரை பணக்காரன் எனபவர்கள் யார்,,?அவர்கள் எந்த காலத்திலிருந்து பரம்பரை பணக்காரர்களானார்கள்.அப்படியென்றால் எங்கள் பாட்டன் என் எங்களை பரம்பரை பணக்காரன் ஆக்கவில்லை.?(அதை உங்கள் தாத்தாவிடமே போய் கேளுங்கள் என்று மழுப்பக்கூடாது!)நேருவை பரம்பரை பணக்காரர் என்றுதான் சொல்கிறார்கள்(கே.என் நேருவையல்ல ஆனால் அவரையும் சில பேர் அப்படித்தான் சொல்கிறார்கள்.நான் சொல்வது பண்டிட் ஜவகர்லால் நேருவை?) .காந்தியும் பணக்காரர்தான் தங்க கடுக்கன்களை விற்று ‘அலம்பல்’ பண்ணியதை நினைத்து பின்னர் அண்ணலே வருந்தியதை அறிந்திருப்பீர்கள்.காந்தியும் கொட்டும் சூட்டும் அணிந்து மைனராக துள்ளித்திரிந்தவர்தான் .ஆனால் பின்னாளில் சுதந்திர சுடரேந்தி தேசமெங்கும் சுற்றி வந்த போது மதுரையில் அரையாடை ஏழைகளை பார்த்து மனம் மாறி அன்று முதல் தன் ஆடைகளை துறந்து எளிய வாழ்க்கையின் இருப்பிடமாகி ஒரு தூய தறவியைப்போல் வாழ்ந்தவர்தான் காந்தி.காந்தியின் சித்தாந்தங்களில் எனக்கும் முரண்பாடுகள் உண்டு.ஆனால் கந்தல் துணிகூட இன்றி லட்சோப லட்சம் மக்கள் தவிக்கும் இந்த ஏழை நாட்டில் கோட்டு அணிந்து அதன் மேல் ஒரு ரோஜா பூவையும் சூடிக்கொண்டு ‘ரோஜாவின் ராஜா’ என்று வெட்கமின்றி வலம் வந்தவர் நேரு.(அவரை மாமா என்று அழைப்பதற்கு வேறு பெயர் காரணங்களும் இருக்கலாம்!). ஆனால் அந்த உத்தம புத்திரனின் வாரீசுகள்தான் இன்னமும் இந்தியாவை ஆளுகிறார்கள்.பா.சி மாதிரியான இந்த பரம்பரைகள்தான் நம் தேசத்தில் உண்மையான குற்ற பரம்பரைகள். வாழ்க பசியறியா பண்பாளன் பாசி !

    • rammy says:
      16 years ago

      புலிகளால், தமிழ் முச்லீம்களோடே ஒத்துப் போகவில்லை! அவர்களை எதீரியாகத்தானே பாவித்தார்கள்!? யாரோடும் ஒவவாத தன்மை! இதில் இந்தியர்களைத் திட்டி பயனில்லை!

  8. mathivanan says:
    16 years ago

    சிதம்பரம் அவர்கலெ தமிழன் என்னற உணர்வு தங்களுக்கு எப்போடகு வ்ரும்

    • thamilmaran says:
      16 years ago

      அது மருமகளீன் நாட்டியத்தை ரசிக்கும் போது வரலாம்.

  9. செழியன் says:
    16 years ago

    இதைவிட பிரபாகரன் இந்தயாவில் காங்கிரஸ் கட்சியில் ஏதாவது ஒரு கோஷ்டியில் சேர்ந்து,பாசி மாதிரி ஒட்டி,எவன் காலையாவது நக்கி ஒரு எம் எல் எ,யாகவோ எம்பியாகவோ ஆகி காங்கிரஸ் கலாச்சாரப்படி ப.சிக்கே கூட ஒரு ஆப்பு வைத்திருக்கலாம்.இன்னும் சொல்லப்போனால் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் (காங்கிரஸ் பாரம்பரியப்படி) லோன்களை வாங்கி பிழைப்பை ஓட்டியிருக்கலாம்.அரசு நிலத்தை வளைத்துப் போட்டு கோடிகளில் மாடிகட்டி அதன்மீதும் ஒரு காங்கிரஸ் கொடியை பறக்கவிட்டு ஒரு தேசபக்தனாய் வாழ்ந்திருக்காலாம்.உழைக்காதமேதை பா.சி தண்டச்சோறுண்ணும் தன் மகன் கா.சியை கொண்டுவருவதுபோல தன் மகனையும் அதிகார அரசியலுக்கு அழைத்து வந்திருக்கலாம் .ஆனால் நேதாஜி வழியில் போராட வந்த தலைவர் பிரபாகரனுக்கு இந்த சாணக்கியத்தனமெல்லாம் தெரியவில்லை.அவர் சுதந்திரத் தமிழீழத்தை மட்டுமே தரிசிக்க விரும்பினார்.

    அதுசரி இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் கனிம வளங்களை பன்நாட்டு முதலாளிகளுக்கு தாரைவார்த்துத் தரும் புரோக்கராகவும், இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும் மாஃபியாக்களின் இந்திய முகவராகவும் செயல்படும் ப.சி கோடம்பாக்கத்தில் தன் பியட்காரில் அழைத்துச்சென்றது எந்த பிரபாகரனை?ஒரு வேளை சினாமா சூட்டிங் முடித்து கிளம்பிய நம்ம கேப்டன் பிரபாகரனையாக இருக்குமோ?

  10. parthi says:
    16 years ago

    ஏன்? ஒரு அடிமை இன்னோர் அடிமைக்கு எப்படி உதவுவது என்று சொல்லுவதற்கு ஒர் துணைக்க! ஏன் சிதம்பரம் உங்கள் “ரா” வின் செயல்கள் உங்களுக்கு தெரியாத

  11. premraj says:
    16 years ago

    I totaly agree with Mr Sithambaram, I am from Sri Lanka but comes from south, Sri Lanka would have been better place for tamils had we accepted 87 accord. Any who says no say so and live abroad.

    • Shiva says:
      16 years ago

      Any who says no say so and live abroad.
      What makes you so sure?

    • Shiva says:
      16 years ago

      CORRECTION
      “Any who says no say so and live abroad.”
      What makes you say so? Who put you in charge of Tamil Affairs in the country? MR? GR? WW?

      • premraj says:
        16 years ago

        No body put me in any position, Not certainly MR, being a tamil, who had lived through all these, I certainly and many more like me, who live in Sri Lanka, beleives , from deep down our heart, that Sri lanka would have been a better place for tamils, had we accepted the accord,

      • Shiva says:
        16 years ago

        Is this not a command?: “Any who says no say so and live abroad.”
        What right do one have to tell people who disagree with one to go abroad?
        That was my question.
        I do not care who put anyone in charge or not. But people should avoid such offensive commands.

        • velu says:
          16 years ago

          தமிழ் மக்களின் அழிவிற்கு புலம்பெயர் தமிழரின் செயற்பாடே காரணம். எரிக் சொல்கைம்

    • thamilmaran says:
      16 years ago

      dont say yes when you want to say no, am i correct or not?

  12. பு.மணி says:
    16 years ago

    பிரபாகரனை கருணாநிதி மாதிரியான ஒரு ஆளென்று நினைத்து பேசியிருக்கிறார் பா.சிதம்பரம்

  13. velu says:
    16 years ago

    தமிழ் மக்களின் அழிவிற்கு புலம்பெயர் தமிழரின் செயற்பாடே காரணம். எரிக் சொல்கைம்
    17 யூலை 2010 23:42:22

    இலங்கை யுத்தத்தம் மற்றும் சமாதான பேச்சுக்களின்போது மிகவும் பிரபல்யாமாக பேசப்பட்டவரும் இலங்கை அரசு – புலிகளுக்கிடையேயான பேச்சுவார்த்தைகளின் போது பிரதான மத்தியஸ்தராகவும் செயற்பட்டுவந்த நோர்வே அமைச்சர் எரிக் சொல்கைம் அவர்கள் இலங்கையிலுள்ள தமிழ் பேசும் மக்களுக்கு அதிக அவலங்களை ஏற்படுத்துவதன் மூலம் தாம் நேசித்த தலைமையை பாதுகாத்துக்கொள்ள முடியுமென நம்பி புலம்பெயர் தமிழர்கள் அம்மக்களின் அழிவுகளில் பங்ககெடுத்துக்கொண்டுள்ளார்கள் என்ற பொருள்பட கடந்தவாரம் சண்டே ரைம்ஸ் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

    அவர் மேலும் கூறுகையில், தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைந்து இருந்தால் ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கும் என தெரிவித்துள்ளார். அத்துடன் எல்ரிரிஈ இறுதிநேரத்தில் சரணடையும் முடிவை எடுத்தபோது அது மிகவும் காலம் தாழ்த்திய முடிவாகி இருந்தது என்று கவலை தெரிவிக்கின்றார்.

    எல்ரிரிஈ சரணடைவதன் மூலமே மனித அவலத்தை முடிவுக்கு கொண்டு வர முடியும் எனவும் தங்கள் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைய வேண்டும் எனவும் கோரிக்கை உலகின் பல பாகங்களிலுமிருந்து முன்வைக்கப்பட்டிருந்தது. 2009 பெப்ரவரி அளவில் 2000க்கு உட்பட்டவர்களே கொல்லப்பட்டனர். ஆனால் அதற்குப் பின்னைய நாட்களில் பல்லாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டு எல்ரிரிஈ இன் தலைமை கொல்லப்படுகின்ற இறுதி நேரத்திலேயே அவர்கள் சரணடைய முன்வந்திருந்தனர்.

    எரிக் சொல்ஹைம் தனது நேர்காணலில் ‘நாங்கள் எல்ரிரிஈ யை ஒழுங்குமுறையில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும்படி (சரணடையும்படி) கேட்டிருந்தோம். அப்படி நடந்திருந்தால் ஆயிரக்கணக்காண உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கும். இந்த யுத்தம் ஐக்கிய நாடுகள் சபை இந்தியா அமெரிக்கா மற்றும் சிலரின் கண்காணிப்புடன் நடைபெற்று இருக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.

    தான் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் தொடர்ந்தும் தொடர்பில் இருந்ததாகவும் ஐநா பிரதிநிதிகள் வே பிரபாகரனுடக் தொடர்பில் இருந்ததாகவும் அனால் இரு தரப்பும் வேறு வேறு காரணங்களுக்காக யுத்தத்தை தொடர்ந்தனர் என்றும் எரிக் சோல்ஹைம் குறிப்பிட்டுள்ளார்.

    அவர் மேலும் குறிப்பிடுகையில் மே 17 2009ல் புலிகளுடைய தலைவர்கள் பா நடேசன் எஸ் புலித்தேவன் ஆகியோரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் அவர்கள் சரணடைவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி தன்னிடம் கேட்டதாகவும் தெரிவித்தார். எல்ரிரிஈ சரணடைவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு ஐசிஆர்சி ஐநா ஆகிய அமைப்புகளையும் கேட்டிருந்ததாகவும் எரிக் சொல்ஹைம் தெரிவித்தார்.

    ‘(எல்ரிரிஈ இன் வேண்டுகோளை) நாங்கள் இலங்கை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தினோம். எல்ரிரிக்கு அவர்களுடைய (சரணடையும்) கோரிக்கை மிகத் தாமதமாக வந்ததைத் தெரியப்படுத்தினேன். அவர்கள் சரணடைவதாக இருந்தால் வெள்ளைக்கொடியைத் தூக்கிக் கொண்டு சென்று சரணடையும்படி கூறினேன். ஆனால் சிறிது நேரத்தின் பின் அவர்கள் இறந்துவிட்ட செய்தியைக் கேள்விப்பட்டேன்’ என எரிக் சொல்ஹைம் எல்ரிரிஈ, க்கும் தனக்குமான கடைசி உரையாடல்கள் பற்றிக் குறிப்பிட்டார்.
    மேலும் இந்த சரணடையும் பேச்சுவார்த்தையில் வேறு சிலரும் தொடர்புபட்டு இருந்ததாகவும் கூறியுள்ள சொல்ஹைம் அவர்களின் பெயரையும் வெளியிட மறுத்துள்ளார்.

    ‘யுத்தத்தை மீள ஆரம்பிப்பதற்கு சர்வதேச சமூகம் ஆதரவளிக்காது. யுத்தத்தில் விருப்பம் இல்லை என்பதை புலம்பெயர் தமிழர்களுக்கு சொல்கிறேன். ஆனால் தமிழர்களின் உரிமைக்கு சர்வதேச சமூகத்திடம் பாரிய ஆதரவு உண்டு’ எனவும் எரிக் சொல்ஹைம் தெரிவித்தார். இலங்கை ஊடகங்கள் தன்மீது பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளை வைத்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

    ‘இந்தியா இந்தோனேசியா மலேசியா நாடுகளில் உள்ள சிறுபான்மையினருக்கான உரிமைகளை இலங்கையும் வழங்க முன்வர வேண்டும்’ என்றவகையிலும் எரிக் சொல்ஹைம் கருத்து வெளியிட்டு இருந்தார். ‘தென்னிந்திய மாநிலத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அவர்களுக்குப் பல உரிமைகள் உள்ளது. அரசியல் உரிமைகளுக்குப் பலமான ஆதரவு உள்ளது. ஆனால் யுத்தத்தை மீள ஆரம்பிக்க ஆதரவு இல்லை. இதுவே நோர்வேயின் நிலைப்பாடு. இதுவே உலகில் உள்ள பெரும்பாலான அரசுகளின் நிலைப்பாடும்’ எனவும் சொல்ஹைம் தெரிவித்தார்.

    தற்போது ஜநா வினால் உருவாக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவையும் வரவேற்று எரிக் சொல்ஹைம் கருத்து வெளியிட்டார்.

    இலங்கைத் தமிழர்களின் வரலாறு காணாத இந்த அழிவையும் அவலத்தையும் நிறுத்தியிருக்கக் கூடிய மட்டுப்படுத்தி இருக்கக் கூடிய வாய்ப்புகள் தமிழ் அரசியல் தலைமைகளிடமும் புலம்பெயர்ந்த தமிழ் தலைமைகளிடமும் இருந்தது. ஆனால் இவர்கள் தமிழ் மக்களின் அவலத்தை இன்னமும் தூண்டி விடுவதன் மூலம் சர்வதேச கவனத்தை திருப்பலாம் என்று வன்னி மக்கள் கொல்லப்படுவதற்கு துணை போயினர்.

    இப்போது எந்த அரசாங்கத்திற்கு எதிராக இத்தலைமைகள் கடந்த 30 வருடமாக ஆயுதம் ஏந்திப் போராடினார்களோ அந்த அரசாங்கம் மனித உரிமைகளை மீறிவிட்டதாக கோசமிடுகின்றனர். ஆனால் அம்மக்களுக்கு வலிந்து தம் தலைமையைத் திணித்து இந்த அழிவை ஏற்படுத்தியதில் தமக்குள்ள பங்கு பற்றி மௌனமாகவே உள்ளனர்.

    கடந்த 30 ஆண்டுகாலம் (சுதந்திரம் அடைந்தது முதல்) எதிரியாக கருதப்பட்ட வந்த அரசிடம் நியாயம் கேட்கும் தமிழ் தலைமைகள் தங்கள் தலைமைத்துவத்தின் வக்கற்ற அரசியலை தொடர்ந்தும் செய்வதற்காக தங்கள் தலைமையை தொடர்ந்தும் தக்க வைக்க இலங்கை அரசு மீது முழுப்பழியையும் போட்டுவிட்டு தாங்கள் தப்பிக்க இலங்கை அரசின் மனித உரிமை மீறலுக்குப் பின் தாங்கள் பதுங்கிக் கொள்கின்றனர்.

    வெள்ளம் வருமுன் அணைகட்டப்பட வேண்டும். மனித உரிமைகள் மீறப்படமுன் அதனை தடுப்பதற்கான சூழலை உருவாக்க வேண்டும். கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் அர்த்தமற்றது.

    • Garammasala says:
      16 years ago

      எரிக் ஸொல்ஹைம் சொல்வதில் ஒரு முக்கிய உண்மை உண்டு. அதை அவர் வெளிப்படையாகச் சொல்லமாட்டார்.
      மேற்கு நாடுகளைப் புலம் பெயர் தமிழர் நம்பியதும் புலிகளை நம்பச் செய்த்ததும் அழிவிற்கு ஒரு மிக முக்கிய காரணம்.
      இதில் எரிக் ஸொல்ஹைமின் பங்கென்ன?

      (உள்ளூரில் இந்தியத் தரகர்களாகச் செயற்பட்டு இன்னமும் செயற்பட்டு வரும் தமிழ் அரசியல் தலைவர்களின் பங்கையும் சேர்க்கலாம்),

  14. JAMES FRIEDRICH says:
    16 years ago

    /ஆனால் அம்மக்களுக்கு வலிந்து தம் தலைமையைத் திணித்து இந்த அழிவை ஏற்படுத்தியதில் தமக்குள்ள பங்கு பற்றி மௌனமாகவே உள்ளனர்./– இதன் மூலம் திரு.வேலு அவர்கள் உண்மைகளை புட்டு,புட்டு வைக்கிறார்!.
    தமிழர்கள் என்ற ஒரு இனக்குழு தனித்து இயங்குகிறாதா?(ENTITY),அல்லது அது “ஜாதி அமைப்புகளின் கூட்டா”?(FEDERATION OF ENTITIES?).வன்னிமக்கள் ஒரு”ENTITY”,அவர்கள் மீது படுகொலைக்கு வித்திட்ட “இலங்கைத்தமிழ் தலைமைக்கும்” வன்னிமக்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று தோன்றுகிறது!.தமிழர்களிடையே உள்ள உட்பிரிவுகள் இதை கவனத்தில் கொண்டு,தங்கள் தலைகளை காப்பாற்றிக் கொள்ளவேண்டும்!.அல்லது தமிழ்தலைமைகள் என்று “படுகொலைகளை கொண்டுவருபவர்களை”, ஆபத்துக்கு பாவமில்லை என்று(தற்காப்பு),தமிழர்கள் என்று பார்க்காமல்,கொலை செய்துவிடுவதை,பரிசீலிக்க வேண்டும்!.தமிழர்களின் அவலங்களை உலகம் முழுவதும் பிரச்சாரம் செய்கிறேன் பேர்வழி என்று,சாவுகளின் மூலம் பிரபலம் தேடிக் கொண்டு,அமெரிக்க லாஸ்சேஞ்சல்ஸில்,பண்க்காரர்கள் மட்டுமே வசிக்கும் இடங்களில்,வில்லாக்கள் வாங்கி கூத்தடிப்பவர்களையும் கவனத்தில் எடுக்க வேண்டும்!.ப.சிதம்பரம் அவர்களுக்கு,பிரபாகரன் மீது உள்ள அக்கறைக் கூட??,பிரபாகரன் பசியோடு இருந்தபோது,சாப்பாடு கொடுத்து,தம்பி என்று தட்டிக்கொடுத்து,வீரத்தின் விளை நிலமே,போய் வெட்டி விட்டு வா…என்று உசுப்பேத்தியவர்களுக்கு இல்லை என்று நினைகிறேன்!.இதைப் பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது மற்றவர்களின் கவனத்திற்கு விட்டு விடுகிறேன்!.
    மறுபடியும் வெள்ளம் வராமல் தடுக்கப்பட வேண்டும்,அப்படி தடுக்கப்படுவதாக தெரியவில்லை,அதனால்தான் இத்தகைய கடுமையான எச்சரிக்கை!.

  15. chandro says:
    16 years ago

    புலிகளின் அழிவுக்கு காரணம்.
    20 யூலை 2010 17:26:52

    2002 ஆம் ஆண்டு புரிந்துணர்வு உடன்பாட்டையும் அதன் ஊடாக puli எதிர்பார்த்ததைப் போன்று இக் காலப்பகுதியில் அரசியல் ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் தமது கரையார தலைமைத்துவ இயக்கத்தைப் பலப்படுத்தும் முயற்சி வெற்றியளிக்கவில்லை. 2002இல் கரையார் எடுத்துக் கொண்ட உத்தியானது உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியினைத் தழுவும் போது வெளியக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழீழ மக்களpன் பேரில் இலங்கைத்தீவில் தமக்கெனத் தனியரசினை அமைத்துக் கொள்ளும் தெரிவினைத் தவிர வேறு தெரிவுகள் ஏதுமில்லை என்பதனை நிறுவும் முயற்சியாகத்தான் அமைந்தது.

    இதன் தொடர்ச்சியாக ஒஸ்லோ ‘பிரகடனம்’ என்ற பெயரில் சர்ச்சைக்குள்ளான பேச்சுவார்த்தை முடிவுகள் அறிக்கை வடிவத்தில் நோர்வே அரசதரப்பால் வெளியிடப்பட்டது. உண்மையில் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபையினை முன்மொழியும் திட்டம் தொடர்பாக விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் கரவெட்டி பாலசிங்கம் மாறுபட்ட கருத்துக்களையே கொண்டிருந்தார். இம் மாறுபட்ட கருத்துக்களை அவர் பிரபாகரனுக்கும் தெரிவித்து இருவரும் இவ் விடயம் தொடர்பாக நேரடியாகக் கலந்துரையாடியுமிருந்தனர். இக் கலந்துரையாடல் 2003 ஆம் ஆண்டு மே மாதம் முற்பகுதியில் வன்னியில் இடம்பெறுகிறது. பாலசிங்கத்தினைப் பொறுத்தவரை சமாதானப்பாதையில் இருந்து சண்டைப் பாதைக்குப் போகக்கூடிய நிலைமைகள் தோற்றம் பெறுவதனைத் தவிர்க்க வேண்டும் என்ற கருத்தினைக் கொண்டிருந்தார். இவ்வாறு சண்டைப் பாதைக்குப் போகக்கூடிய நிலைமைகள் தோற்றம் பெற்று மீண்டும் யுத்தம் ஆரம்பிக்குமானால் இது விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் பாதகமானதாக அமையும் என்பதே அவரது கருத்தாக இருந்தது. பிரபாகரனும் அரசியல் பாதையின் ஆரம்ப அணுமுறையினைத் தொடர அவர் விரும்பவில்லை. பேச்சுவார்த்தைகளில் எடுக்கப்படும் முடிவுகள் நடைமுறைக்குக் கொண்டுவரப்படாது இழுபட்டுச் சென்றமைக்கும்இ ‘ஒஸ்லோ பிரகடனம்’ தொடர்பாக எழுந்த சர்ச்சைகளுக்கும் பின்னர் அணுகுமுறை மாற்றம் அவசியம் என்ற முடிவுக்கு அவர் வந்திருந்தார். இதனால் தொடர்ச்சியாக பழைய அணுகுமுறையுடன் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதில்லை என்ற முடிவினையும் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தை முன்வைத்து அரசியல் அணுகுமுறையைத் தொடர வேண்டும் என்ற முடிவினையும் கரவெட்டி பாலசிங்கத்துடன் கலந்து பேசாமலேயே அவர் எடுத்திருந்தார். இவை நடைபெறும்போது கரவெட்டி பாலசிங்கம் லண்டனில் இருந்தார். 2003 ஆம் ஆண்டு மே மாதம் முதல் வாரம் அவர் வன்னிக்கு வருகை தந்த போது இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை குறித்து இருவரும் நேரில் பேசிக் கொள்கின்றனர். இப் பேச்சுக்களின் போதே இடைக்கால தன்னாட்சி அதிகாரசபைத் திட்டத்தை முன்வைப்பதில் உள்ள ஆபத்துக்களை கரவெட்டி பாலசிங்கம் கரையார பிரபாகரனுக்கு எடுத்துக் கூறுகிறார். கரவெட்டி பாலசிங்கம் முன்வைத்த வாதங்களை கரையார பிரபாகரன் ஏற்கவில்லை. எந்த விளைவுகள் வந்தாலும் அவற்றைச் சந்திப்போம். ஆனால் பழைய அணுகுமுறையைத் தொடரமுடியாது எனத் தீர்க்கமாகக் கூறிவிட்டார். சிறிலங்கா வெளிநாட்டமைச்சராக இருந்த லக்ஸ்மன் கதிர்காமரின் கொலையும்இ மேற்குலகத்தின் விருப்பத்துக்குரிய ஜனாதிபதி வேட்பாளராக இருந்த ரணில் விக்கிரமசிங்க தேர்தலில் தோற்றுப்போகக் காரணமாக இருந்த தமிழ் மக்களின் தேர்தல் பகிஸ்கரிப்பும்இ இவற்றுக்கெல்லாம் புலிகளே காரணம் என மேற்குலகம் கருதிய நிலையும் புலிகள் மீதான மேற்குலகின் சகிப்புத்தன்மையினை முடிவுக்குக் கொண்டு வந்தது என்றே கூறவேண்டும்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...