ரஜீவ் காந்தி கொலையில் தொடர்புடயவர்கள் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரிய வழக்கு விசாரணையை ஜுன் 22ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
இந்த வழக்கில் தமிழக அரசின் சந்தர்ப்பவாத முடிவைத் தொடர்ந்து இது புதிய பரிமாணத்தை அடைந்தது.
தூக்கு தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் நிராகரித்தார். இதையடுத்து இந்த 3 பேரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் நாகப்பன், சத்யநாராயணன் ஆகியோர் இந்த 3 பேரையும் தூக்கில் போட தடை விதித்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. பேரறிவாளன் சார்பில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஆஜராகி வாதாடினார். அவர் வாதாடும்போது, கொலை வழக்கு ஒன்றில் தூக்கு தண்டனை பெற்ற புல்ஸர் என்பவரின் கருணை மனுவை பரிசீலனை செய்ய ஜனாதிபதி காலதாமதப்படுத்தினார். இதையடுத்து அவர், தனது கருணை மனுவை ஜனாதிபதி பரிசீலிக்க மிகவும் தாமதமானதால் தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை ரத்து செய்யும்படி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இவ்வழக்கு விசாரணை ஏப்ரல் 3ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் பிரபல வக்கீல்கள் ராம்ஜெத்மலானி, அந்தி அர்ஜுனா ஆகியோர் ஆஜராகி வாதாடி வருகிறார்கள்.
இந்த வழக்கு முடிந்த பிறகுதான் சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள இந்த வழக்கை விசாரிக்கவேண்டும் என்று மூப்பனார் பேரவை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அம்மனு தற்போது நிலுவையில் உள்ளது.
புல்ஸர் வழக்கில் ஒரு முடிவு எட்டப்படும் வரை முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோர் தொடர்ந்துள்ள இவ்வழக்கு விசாரணையை ஒத்தி வைக்கவேண்டும் என்றார்.
வைகோவின் இந்த வாதத்தை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர். பின்னர் 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரிய வழக்கு விசாரணையை ஜுன் 22ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.








Cho said that not only Rajiv Gandhi another 16 people also died that day along with a Superintendant of Police. Honourable Evan Bayh as the Governour of Indiana, USA, once said that sometimes the punishment have to fit the gravity of the crime.
இந்தியா தனது படைகளை மீண்டும் சிறிலங்காவுக்கு அனுப்பியிருக்க வேண்டும்.
ராஜிவ்காந்தி படுகொலைக்குப் பின்னர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கொல்வதற்கு அல்லது உயிருடன் பிடிப்பதற்கு இந்தியா தனது படைகளை மீண்டும் சிறிலங்காவுக்கு அனுப்பியிருக்க வேண்டும் என்று முன்னாள் அமெரிக்க இராஜதந்திரி ஒருவர் எழுதியுள்ள நூல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
“சீனாவை அச்சுறுத்தும் கனவு, அமெரிக்காவின் கனவு:
அடுத்த உலக சக்தியாக இந்தியா” என்ற நூலிலேயே அமெரிக்காவின் முன்னாள் இராஜதந்திரி வில்லியம் எச். அவெரி இவ்வாறு கூறியுள்ளார். பில் கிளின்ரன் மற்றும் ஜோர்ஜ் புஸ் நிர்வாகங்களில் இந்தியாவிலும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திலும் இவர் இராஜதந்திரியாகப் பணியாற்றியுள்ளார் என்பது சிறப்பு. அவர் தனது நூலில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:”ராஜிவ்காந்தி படுகொலை இந்தியாவின் பிராந்திய வல்லாதிக்க சக்தி என்ற நிலை மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கட்டாயமாக இந்தியாவுக்கு கொண்டு வந்து, நீதியின் முன்நிறுத்துவதன் மூலம், இந்தியா தனது அரசியல் தலைவர்களை தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும், தனது அரசியல் முறைகளை அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கும், தெற்காசியாவில் எந்தவொரு சவால்களில் இருந்தும் பாதுகாக்கும் என்று பிராந்தியத்துக்கும் உலகத்துக்கும் தெளிவான செய்தி ஒன்றை சொல்லியிருக்கலாம்.ராஜிவ்காந்தி படுகொலைக்குப் பின்னர், சிறிலங்காவில் தலையிடுவதற்கு இந்தியாவுக்கு கதவுகள் அகலத் திறந்திருந்தன. 1991ல் தனது முன்னாள் பிரதமர் ஒருவரை தீவிரவாத அமைப்பின் தாக்குதலில் இழந்த அவமானம், நவீன இந்திய வரலாற்றில் குறைத்து மதிப்பிட வைத்துள்ளது. இந்தியா உறுதியான வெளிவிவகாரக் கொள்கையை இராணுவ வல்லமையை கொண்டிருக்க வேண்டும்.” என்றும் கூறியுள்ளார். தேனீ,கொம்
JRJ said that we are small and that is why everybody wants to mess with us. All including India created misery here for all for over 30 years. Singapore – Where Worlds Meet – Getting Benefits from Everybody for ever.