யுத்தம் முடிவடைந்து இரண்டரை வருடங்கள் கழிந்துள்ள போதிலும், வடக்கு கிழக்கில் இருந்து இராணுவம் விலகிக்கொள்ளப்படவில்லை என மக்கள் போராட்ட அமைப்பு , வடக்கு, கிழக்கில், இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்த, இந்த மாகாணங்களில் இருக்கும் இராணுவ முகாம்கள் குறைக்கப்பட்டு, சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
அரசாங்கம் உடனடியாக இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்றால், தமிழ் மக்களுக்கு சம உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்காக தமது அமைப்பு விரைவில் அரசியல் அமைப்பொன்றை ஆரம்பிக்கும் என மக்கள் போராட்ட அமைப்பின் செயற்பாட்டாளரான மேல் மாகாண சபை உறுப்பினர் வருண ராஜபக்ச தெரிவித்துள்ளார்.







