Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

யார் தேசிய வாதிகள் ? : சபா நாவலன்

இனியொரு... by இனியொரு...
07/20/2014
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
111
Home பிரதான பதிவுகள் | Principle posts

தேசிய விடுதலைப் போராட்டம் என்றால் என்ன? தேசிய விடுதலைப் போராட்டம் எவ்வாறு உருப்பெறுகிறது? அன்னிய ஆதிக்கத்திலிருந்து ஒரு தேசத்தை விடுவித்தலே தேசிய விடுதலைப் போராட்டத்தின் அடிப்படையாகும். அன்னிய ஆதிக்கம் என்பது ஒரு நாடு இன்னொரு நாட்டின் மேல் ஆதிக்கம் செலுத்தும் போது அந்த ஆதிக்கத்திலிருந்து விடுபடுவதற்கான போராட்டமாகும். ஆதிக்கம் செலுத்தும் நாட்டின் பின்பலமாக அதன் பின்புலத்தில் ஏகாதிபத்திய நாடுகள் எப்போதுமே காணப்படும். இந்த ஏகாதிபத்திய நாடுகளின் ஒரே நோக்கம் தமது பொருளாதாரச் சுரண்டலை தம்மாலான அனைத்து வழிகளிலும் நிலைநாட்டுவதாகும். ஆக, அடிப்படையில் தேசிய விடுதலைப் போராட்டம் என்பது அன்னிய மூலதனத்திற்கு எதிரான போராட்டமாகவும் அமைந்திருக்கும்.

குறிப்பாக இலங்கையின் அரசியல் சூழலை எடுத்துக்கொண்டால் சிறுபான்மையின மக்கள் சார்ந்த பிரதேசங்களின் மீதான பொருளாதார ஆதிக்கதை சிறீலங்கா அரசு செலுத்துகின்றது. இதற்கு எதிரான குரல் எழுகின்ற போது அது கலாச்சார ஆதிக்கமாகவும், அரசியல் அதிகாரமாகவும் இன்னும் இராணுவ ஒடுக்கு முறையாகவும் விரிவடைகிறது.

இலங்கையில் நாடுதழுவிய பொருளாதார உற்பத்தி வளர்ச்சியடையும் நிலையிலிருந்த போது அதனைக்கண்டு அஞ்சிய பிரித்தானிய காலனியாதிக்க அரசு இனங்களுக்கு இடையேயான பகைமையாகவும் போட்டியாகவும் அதனைத் திசை திருப்பிவிடுகின்றது. இதுவே தேசிய இனப்பிரச்சனையின் ஊற்று மூலமாகும்.

இவ்வாறான இன முரண்பாடு மக்களிடையே பிரதான முரண்பாடாக முன்னெழும் போது ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் தாம் பிரிந்து சென்று தனியரசு அமைப்பதற்காகப் போராடுதல் தவிர்க்க முடியாத முன்னிபந்தனையாக அமையும்.

தேசிய விடுதலைப் போராட்டம் என்பது தேசிய மூலதனத்தை, முதலாளித்துவ அபிவிருத்தியை முன்னிறுத்துவதாகும். மூலதனத்தின் சுதந்திரமான அசைவிற்கும் வர்த்தக மூலதனத்தின் விரிவாக்கலுக்கும் ஜனநாயகம் அவசியமானதாகும்.ஆக, ஜனநாயகப் புரட்சி என்பது தேசிய விடுதலைப் போராட்டத்தின் பிரிக்க முடியாத பகுதியாகும்.

தேசிய விடுதலைப் போராட்டம் என்பது ஒரு குறித்த நாட்டை ஆதிக்கத்திலிருந்து விடுவிப்பதாகும். நாட்டை விடுவித்தல் என்றால் என்ன? நிலப்பகுதி ஒன்றை மட்டும் விடுவித்துக்கொள்வதா இல்லை மக்களை விடுதலை செய்வதா? ஒடுக்கப்படும் தேசத்தில் மக்கள் யார்?
இந்தக் வினாக்களுக்கு எல்லாம் விடைகளிலிருந்து தேசிய விடுதலைப் போராட்டம் என்றால் என்ன என்ற குறைந்தபட்ச அனுமானத்திற்கு வந்துசேர முடியும்.

அடிப்படை ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்ட மக்கள் கூட்டம், பெருந்தேசிய ஒடுக்கு முறையால் பாதிக்கப்பட்ட மக்கள் பகுதி, அன்னிய மூலதனத்தின் ஆதிக்கத்திற்கு உட்ப்பட்ட தேசிய இனம், தம் மீதான ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராட முனைவார்கள். அவ்வாறான போராட்டம் என்பது தாம் பிரிந்து சென்று ஜனநாயக விழுமியங்களோடு கூடிய ஒரு ஆட்சியை அமைத்துக்கொள்வதற்கான போராட்டமாகும். அங்கு அவர்களின் தேசிய உற்பத்தியும் தேசியப் பொருளாதாரமும் உருவாகுவதற்கான அடித்தளத்தை அமைத்துக்கொள்வார்கள். இதற்கான போராட்டமே தேசிய விடுதலைப் போராட்டம் என்ற குறைந்தபட்ச கருத்துநிலைக்கு வந்து சேர முடியும்.

ஐரோப்பியத் தேசிய இனங்கள் குறித்த கருத்து..

ஐரோப்பிய நாடுகளில் தேசிய இனங்கள் உருவான காலத்தில் அதன் அடிப்படை என்பது வேறானது. முதலாளித்துவமும் மூலதன்மும் ஒரு தேசம் அல்லது தேசியம் என்ற கருத்தை உருவாக்கிக் கொள்வதற்கான அடிப்படைகளைக் கொண்டிருந்தது.

ஏகாதிபத்தியங்களின் ஆக்கிரமிப்பிற்கு உள்ளான மூன்றாவது உலக நாடுகளில் அவ்வாறான முதலாளித்துவம் உருவாகவில்லை. தேசிய இனங்கள் இன்னமும் வளரும் நிலையிலேயே காணப்படுகின்றன. இவ்வாறான நிலையில் தேசியம் என்ற கருத்து ஒடுக்கு முறைகளினாலேயே வலுப்பெறுகின்றது. ஒடுக்கு முறைக்கெதிராக வலிமையோடு ஒன்றிணையும் மக்கள் கூட்டம், தனது உள்முரண்பாடுகளை மறந்து தேசிய இனமாக இணைந்து கொள்கிறது.

தமிழ்த் தேசியக் கருத்தும் போராடங்களும்…

தேசியம் என்ற கருத்து தமிழரசுக் கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய பாராளுமன்றக் கட்சிகளால் முதலில் முன்வைக்கப்பட்டது. எஸ்.ஜே.வி.செல்வநாயகம், ஜீ,ஜீ.பொன்னம்பலம் போன்ற கொழும்பு சார் சிங்கள பெருந்தேசிய வாதிகளின் வர்க்க நண்பர்களான இவர்களால் இக்கருத்து முன்வைக்கப்படுகிறது. மக்கள் மத்தியில் ஒடுக்கு முறைகளின் ஊடாக உறைந்து கிடந்த தேசிய உணர்வு அவர்களின் வாக்குப் பலத்தை அதிகரித்துக் கொள்வதற்காக தட்டியெழுப்பப்பட்டது.

இவர்களால் தேசிய எழுச்சிப் போராட்டங்கள் “சமாதான” வழிகளில் நடத்தப்பட்டது. இவை மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டமாக வளர்ச்சியடைந்து விடாமல் மிக அவதானமாக இவர்கள் பார்த்துக்கொண்டார்கள். இப்ப்போராட்டங்கள் வன்முறையாக வளர்ச்சியடையுமானால் தமது பாராளுமன்ற சட்ட வரைமுறைகளுக்கு எதிரானதாக மாற்ரமடையும் என்பதிலும் விழிப்புடையவர்களாக இருந்தனர்.

மக்கள் மத்தியில் உருவாகியிருந்த கற்பனையான ஒருங்கிணைவு அவர்களை மக்களின் மன்னர்களாக மாற்றியது. தேசிய விடுதலையின் அடிப்படையான தேசிய உற்பத்திக்கும், ஜனநாகத்திற்கும் எதிரான இவர்கள், அன்னிய மூலதனதிற்கு எதிரானவர்களல்ல, ஆக, தேசிய விடுதலைக் முழக்கத்தை அதற்கு அடிப்படையில் எதிரானவர்களே முன்வைத்தனர்.

எது எவ்வாறாயினும், தேசிய இன ஒடுக்குமுறையும் சிங்கள பௌத்த மேலாதிக்கமும் , இராணுவ ஒடுக்குமுறையும் வளர்ச்சியடைய அவர்களது வழிமுறை செயலிழந்து போனது.

போராளிக்குழுக்களின் உருவாக்கம்…

இதன் பின்னதாக இந்தப் பாராழுமன்றக் கட்சிகளின் வன்முறைத் தொடர்ச்சியாக விடுதலை இயக்கங்கள் உருவாகின. விடுதலை இயக்கங்களும் தேசிய விடுதலை என்பதன் உள்ளர்த்தைப் புரிந்து கொள்ளவில்லை. அன்னிய முலதனமும், தேசியத்திற்கு எதிரான ஏகாதிபத்தியங்களும் இவர்களுக்கு கருத்தளவில் கூட எதிரிகளாகத் தென்பட்டதில்லை.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தேசிய பானமாக, அமரிக்கக் குடிபானமான கொக்கோ கோலா மட்டுமே திகழ்ந்தது. புலிகள் சில பிரதேசங்களை ஆட்சிக்கு உட்படுத்தியிருந்த வேளையில் கூட தேசிய உற்பத்தியை ஊக்குவிக்கும் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.

ஆக, பாராளுமன்றவாதக் கட்சிகளைப் போலவே போராட்ட அமைப்புக்களும் தேசியத்திற்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொண்ட அதேவேளை தேசியத்திற்காகப் போராடுவதாகவும் கருதிக்கொண்டனர்.

முன்னய பாராளுமன்றக் கட்சிகளைப் போலவே இவர்களும் தேசியத்தின் வளர்ச்சிக்கான முன்நிபந்தனையாக அடிப்படை ஜனநாயக உரிமைகளைக் கூட ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் உள்ளார்ந்த அர்த்ததில் அதனைப் புரிந்துகொள்ளவில்லை. ஆக, பலமான இராணுவக் குழுவொன்றையும் அதற்காகப் பிரசாரம் மேற்கொள்ளும் ஏனைய கூறுகளையும் உருவாக்கினால் மட்டுமே தேசிய விடுதலைப்போராட்டத்தை வெற்றிகொள்ளலாம் என நம்பியிருந்தனர்.

தலைமையின் அல்லது ஒரு குழுவின் கட்டுப்பாட்டில் அமைந்தத ஜனநாயமற்ற தன்மை தேசியத்திற்கு எதிரான நிலைமைகளைத் தோற்றுவித்தன. ஒரு குறித்த நிலப்பரப்பில் வாழும் மக்கள் சார்ந்த போராட்டமாக அன்றி, நிலத்தை விடுவிப்பதற்கான போராட்டமாக பரிணாமமடைந்த அவர்களின் போராட்டம் தேசியத்தின் அடிப்படையான மக்களின் ஒருங்கிணைவை நிராகரித்தது. மக்களின் ஒருங்கிணைவு என்பது தேசியப் பொருளாதாரத்தையும் அதன் உள்ளூர் சந்தையையும் அடிப்படையாகக் கொண்டதாக அமையாமல் தமது இயக்கதை நோக்கிய ஒருங்கிணைவாக மாறியிருந்தது. ஆக, அடிப்படையில் தேசியத்திற்கு எதிரான குழு தேசிய விடுதலைப் போராட்டத்தை ஏகமாகத் தலைமை தாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட துர்ப்பாகியமான சூழல் எம்மை முள்ளி வாய்க்கால் வரை நகர்த்திச் சென்றது.

ஈழ தேசியத்தை மையமாகக் கொண்டியங்கும் அனைத்துக் குழுக்களும் இதே தவறை இன்னமும் தமது அடிப்படைகளாகக் கொண்டிருக்கின்றனர். நாடுகடந்த தமிழீழம், தமிழர் பேரவை அமைப்புக்கள் போன்ற அனைத்தும் இந்த எல்லைக்குள்ளேயே இந்தச் சிந்தனை முறைக்குள்ளேயே இன்னும் நகர்ந்துகொண்டிருக்கின்றன.

தேசியத்திற்கு எதிரானவர்கள்…

தேசியத்திற்கு எதிரான போக்குகளே தேசிய விடுதலைப் போராட்டம் என்ற மாயைக்குள் மக்களை கட்டிவைத்திருந்தது. போராட்டம் நியாயமானது என்றும் அதன் வழிமுறையே தவறானது என்றும் விமர்சித்த தேசிய வாதிகள் கூட துரோகிகள் என்ற ஒதுக்கப்பட்டுக் கொன்றொழிக்க்ப்பட்டார்கள்.

மக்கள் மீது ஒடுக்குமுறை பிரயோகிக்கப்படும் போது அதற்கு எதிரான உணர்வு இயல்பாகவே மக்களுக்கு உருவாகும். அந்த ஒடுக்குமுறை ஈழத்தில் நடப்பதைப் போன்று இராணுவ ஒடுக்கு முறையாக விரிவடையும் போது மக்கள் போராடுவதற்கு துணிவார்கள். அதீத பாசிச அதிகாரம் இலங்கையைச் சூறையாடும் பயங்கரமான நிலையில் கூட அரசிற்கு எதிரான மக்களின் போராடங்கல் ஆங்காங்கே எழுகின்றன. இவ்வாறு போராடும் மக்களை மேலும் பயிற்றுவிப்பதும் அவர்களின் போராட்டத்தை அடுத்த நிலையை நோக்கி வளர்த்தெடுப்பதும் அரசியல் தலைமை ஒன்றின் இன்றியமையாத கடமையாகும்.

தேசியப் போராட்டத்தின் அடிப்படைத் தவறுகள்…

தமிழர் விடுதலைக் கூட்டணி தேசியம் பேசிய காலத்தில் மக்கள் போராட்டத்தைத் தமது வாக்குப் பலத்தை அதிகரித்து பாராளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றிக்கொள்ளப் பயன்படுத்தினார்கள். பின்னதாக, தேசிய விடுதலை இயக்கங்கள் தேசியம் பேசிய காலத்தில் மக்களைப் போராட வேண்டாம் என்றும் தாங்கள் இராணுவக் குழுக்களை உருவாக்கி அவர்களைக் காப்பாற்றிக்கொள்வோம் என்றும் கூறினார்கள். தம்மைத் தாமே மக்களின் கதாநாயகர்களாக உருவாக்கிக்கொண்டு மக்கள் பலத்தைப் போராட்டத்திலிருந்து அன்னியமாக்கினார்கள்,

பலமிழந்த மக்கள் சிறிது சிறிதாகப் போராளிக் குழுக்களின் இராணுவபலத்தால் கட்டுப்படுத்தப்படார்கள். அதன் இறுதி வடிவமாக வன்னி இனப்படுகொலைக் காலப்பகுதியில் தம்மைக் காப்பாற்றிக் கொள்ள மக்களை அரணாகப் பயன்படுத்தும் எல்லை வரை வளர்ந்திருக்கிறது. நியாயமான போராட்டம் மிக நீண்ட காலத்திற்கு பின் தள்ளப்பட்டுவிட்டது.

வெற்றிக்கான அடிப்படைகள்…

பெரும்பான்மை என்பதே போராட்டங்களில் வெற்றிகொள்ளும் என்பது வரலாற்று நியதி. தேசியப் போராட்டம் பெரும்பான்மைப் பலம் கொண்டது. தேசிய வாதிகள் தமது வெற்றிக்காக பெரும்பான்மையோடு இணைந்து கொள்வார்கள். உலகில் பெரும்பான்மை ஒடுக்கப்படும் நாடுகளும் ஒடுக்கப்படும் மக்களுமே. ஈழ தேசிய விடுதலைப் போராட்டம் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டம் என்ற அடிப்படையில் பெரும்பான்மை மக்களின் பலத்தைப் பெற்றுக்கொள்வதென்பதும் பரஸ்பர ஒத்துழைப்புக்களை வளர்த்துக்கொள்வதென்பதும் இயல்பாகவே நடைபெறக்கூடிய நடைமுறைச் சாத்தியமான ஒன்று.

ஆனால் ஈழப் போராட்டம் முதலில் முஸ்லீம்களை தனது எதிரியாக்கியிருக்கிறது. மலையக மக்களை எதிரியாக்கியிருக்கின்றது. இந்தியாவில் போராடும் மக்களை எதிரிகளாகக் கணிப்பிட்டிருக்கின்றது. இவ்வாறே இன்னும் உலகம் முழுவது உதாரணங்கள் நீண்டுகிடக்கின்றன.

ஒரு நாட்டின் எல்லைக்குள்ளே சிங்கள மக்களைத் தனது ஒடுக்கு முறைகளுக்கு எதிராகப் போராடாமல் தடுப்பதற்காக இலங்கை அரசு அவர்களை பேரினவாத சிந்தனைக்குள் முடக்கி வைத்திருக்கிறது. இவர்களில் நாளாந்த உணவிற்கே வழியின்றி மரணித்துப் போகும் மக்கள் பிரிவினர் ஏராளம். தேசிய விடுதலைப் போராட்டம் அரசிற்கு எதிரானதாகவும் ஒடுக்கப்படும் சிங்கள மக்களைக்குறித்துப் பேசுவதாகவும் இருந்தால் இப்பிரிவினர் தேசிய விடுதலைப் போராட்டத்தின் அதரவு சக்திகளாக அமைவர். இதனூடாக பெரும்பான்மை மக்களின் பலத்தைத் தேசிய விடுதலைப் போராட்டம் பெற்றுக்கொள்ளும்.

ஈழ தேசிய விடுதலைப் போராட்டம் ஆரம்பத்திலிருந்தே இவற்றிற்கு எதிர்த்திசையிலும், தேசியத்திற்கு எதிராகவுமே கட்டமைக்கப்பட்டு நந்தக்கடலோடு சங்கமாகிவிட்டது. அனுபவங்களிலுருந்தும், தவறுகளிலிருந்தும் கற்றுகொண்டு ஈழ தேசிய விடுதலைப் போராட்டம் மறுபடி மக்கள் சார்ந்த போராட்டமாக எழுவதற்கான பகைப்புலம் இலங்கையில் காணப்படுகிறது. அது முன்னைப்போல் தேசியத்திற்கு எதிரான சக்திகள் மீது நம்பிக்கை கொள்ளாது. தமிழ்ப்பேசும் மக்கள் மத்தியிலுள்ள அனைத்துப் மக்கள் பிரிவினரதும் ஐக்கிய முன்னணியாக முன்னெழும்.

இது ஒரு மீள் பதிவு | Published on: Jun 28, 2011 @ 7:55 

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
மனிதர்கள் கொல்லப்படும் போது மகிழ்ச்சியாக ஆர்ப்பரிக்கும் இஸ்ரேலியர்கள்(காணொளி)

மனிதர்கள் கொல்லப்படும் போது மகிழ்ச்சியாக ஆர்ப்பரிக்கும் இஸ்ரேலியர்கள்(காணொளி)

Comments 111

  1. prof.பிரதீபன் leaks says:
    15 years ago

    வெற்றிக்கான அடிப்படைகள்_ முன்னேறிய பிரிவினர்_ ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களுடன் தொடர் என்று பீடிகை போடாமல் முதலில் புலிகளுக்கு எதிரான தரப்பினர் ஏன் இன்னும் ஒன்றுபட்டு செயற்பட முடியவில்லை என்று ஆய்வு செய்யுங்கள்.
    இயக்கங்கள் தொடங்கிய 1980களின் முற்பகுதில் ஊர் ஊராக செய்த அதே பிரச்சாரங்களையே மீண்டும் பார்க்கமுடிகிறது. மக்களுக்கு பூர்சுவா என்றாலும் வர்க்கம் என்றாலும் விளங்காது. அதை எளிய முறையில் கையாண்டதால் தான் புலிகள் முன்னேறிய பிரிவினராக மக்களிடம் சென்றடைந்தார்கள். இனியாவது நடைமுறையில் மக்களுக்கு விளங்க கூடியபடி சிந்தித்து செயற்படுங்கள்.

  2. Pingback: Indli.com
  3. prof says:
    15 years ago

    நான் Prof  என்ற பெயரில் தொடர்ந்து இனியொருவில் கருத்து எழுதிவருபவன். இதுதான் உங்களின் புதிய திசை வெளியோ?
    நீங்கள் யாரையோ எண்ணி  எனது கருத்தை தணிக்கை செய்து கருத்தையும் அவமதித்துள்ளீர்கள்.
    எனக்கு இப்போது தெரிந்தாக வேண்டிய விடயம் பிரதீபன் என்பது யார் என்பதே? 
    நீங்கள் மக்களுக்கு ஒரு போதும் வழிக்காட்ட மாட்டீர்கள் என்பதற்கு  இந்த ஒரு சந்தர்ப்பமே போதும்.

    • இனியொரு.. says:
      15 years ago

      நண்பருக்கு வணக்கம், நீங்கள் எழுதிய கருத்து இன்று காலை வெளியிடப்பட்டதும் பின்னதாக அது தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டதும் உண்மையே. உங்கள் கருத்தின் ஒரு பகுதி பின்னதாக பிரதீபன் என்பவரால் பதியப்பட்டது. நீங்கள் எழுதிய கருத்தில் கட்டுரையின் கருத்துக்களுக்குத் தொடர்பற்ற பல விடயங்கள் சில தனி நபர்களின் பெயர்களோடு குறிப்பிடப்பட்டிருந்தது. சரி தவறு என்பதற்கு அப்பால் தனி நபர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த அதிலும் தொழில் விபரங்கள் குறித்த விடயங்களை இனியொரு வெளியிடுவதில்லை. நீங்கள் உங்களுடைய சொந்த அனுமானங்களிலிருந்து நபர்களை முன்னிறுத்தி முன்வைக்கும் கருத்துக்களை வெளியிடுவதற்கான தளம் இனியொரு அல்ல. இது குறித்து நாம் தெளிவாக முன்வைத்துள்ளோம். கட்டுரைகளில் கூறப்படும் கருத்துக்களோடு முரண்பாடு அல்லது உடன்பாடு குறித்த விடயங்களை விவாதிக்க நாம் எப்போதும் தயாராக உள்ளோம்.
      பிரதீபனின் கருத்துக்கள் தனி நபர்களின் வாழ்க்கை குறித்த விபரங்களைக்கொண்டிராத கட்டுரையோடு குறைந்த பட்ச தொடர்பைக் கொண்டிருந்ததால் வெளியிடுவது ஏற்புடையதாக இருந்தது. உங்கள் கருத்துக்களை மேலும் வரவேற்கிறோம்.

  4. prof says:
    15 years ago

    யார் தேசிய வாதிகள் என்ற தலைப்பிலேயே  தனி நபர்களும் குறிக்கப்படுகின்றார்கள்.
    ஊருக்கும் உபதேசம் உனக்கில்லையடி என்ற பொது தத்துவம் தான் இனியொரு பின்னரும் தணிக்கை செய்த மாற்று அரசியலுக்கான உரைவெளியோ?
    நான் எழுதியதில் இருந்து  தெரிந்தெடுத்து  கொப்பியடித்த பிரதீபன் பெயரில் வந்த‌ எனது கருத்தையும் பிரதீபனின் கருத்து என்று  சொல்லியிருப்பது நகைப்புக்குரியது.
    உங்களுக்கு முரண்பாடில்லாத  மாற்று அரசியலுக்கான உரைவெளியைதான்  நீங்கள் புதிய திசைகள் என்கிறீர்களா?
    உங்களின் தன்னியல்பை அம்மணப்படுத்தினால் தனி நபர் அசிங்கமோ? 
    அப்படியென்றால் இனியொரு யார் ஒருவரினதும் பெயர் குறிப்பிட்டு  கட்டுரை எழுத முடியாது. 
    ஜீ.ஜீயையும், செல்வ நாயகத்தையும்  உங்களது கட்டுரையில் தனி நபர்களாக பார்க்கவில்லையா? 
    ரயாகரனும் ,ஜெயபாலனும், நாவலனும், அசோக்கும், ராகவனும், சோபாசக்தியும் ,மாசில்பாலனும்  தான் தனி நபர்களோ? 
    இவர்களுக்கு என்று ஏதும் அரசியல் இல்லையோ? 
    உங்களின் தகிடு தத்தங்கள் எல்லாம்  புரிகிறது. 

    • THAMIL MARAN says:
      15 years ago

      தனி நபர்கள் என்போர் தமது சொந்த வாழ்வுப் பிரச்சனைகளோடு பொதுப் பிரச்சனைகள தொட்டுப் போவோர் ஆனால் பொது வாழ்வில் இருந்து கொண்டு தமது வாழ்வையும் கொண்டு போவோர் தனி நபரல்ல அவர்களூக்கு சமூகத்தின் மீது கேள்வி எழுப்பும் உரிமை எவ்வாறூ உண்டோ அவ்வாறே அவர்கள கேள்வி கேட் கும் உரிமையும் சமூகத்திற்கு உண்டு,ஜெயபாலன் தனிநபரா? சும்மா குட்டையையே குழப்பும் தமிழ்மாறன் தனிநபரா?

    • mamani says:
      15 years ago

      உங்களிற்கு ரி.ரி.என் முறைகேடும் அதன் சொத்து சுருட்டலும் நன்றாக தெரியும்தானே அதனை முதலில் வெளிக்காட்டுங்கள்

  5. mahendran says:
    15 years ago

    சில அமைப்புக்கள், தனிநபர் மீது அவதூறு செய்வதற்கு, இணையத் தளங்கள் சிலவற்றை பயன்படுத்துகின்றன. தமிழ் மக்கள் தங்களை கவனிக்கவில்லையே என்ற ஆதங்கத்தில், அந்த இணையங்களும், அவ்வாறான செய்திகளை, தாங்களே உருவாக்கி, வெளியிடுகின்றன. கருத்துக்களம் என்பது, மன அரிப்புக்களை சொறிந்துவிடும் இடமாக மாறிவிடக்கூடாது. ஆகவே ‘இனியொரு’ வின் நிலைப்பாடு சரியானது.

  6. gandesh says:
    15 years ago

    தணிக்கை என் கிறதே இப்பாடியான வலைப்பூக்களின் பரம்பரை சொத்து. சர்வாதிகாரிகள். வினவு, இனியொரு, கீற்று என்ற குறுகிய ஒரு வட்டம் தமிழ் அறிவுசார் வலை சமூகத்தை ஆகிரமிப்பு செய்து வைத்திருக்கிறது. கவலைக்கு இடமான இந்த சூழல் மாற வேண்டும்.

  7. mamani says:
    15 years ago

    ஊடக சுதந்திரம் என்ற பெயரில் தனி நபரை வசைபாடுவதை அனுமதிக்க முடியாது. பொதுவாழ்வில் யாரும் விமரிசனத்திற்கு உட்பட்டவர்களே ஆனால் சில விமரிசனங்கள் புதிய திசைகள் சரியான திசை நோக்கி முன்னெடுப்பதை தடுக்க சில சக்திகள் முனைவதுபோல் தெரிகிறது.

  8. karnan says:
    15 years ago

    “விடுதலைப் புலிகள் அமைப்பின் தேசிய பானமாக, அமரிக்கக் குடிபானமான கொக்கோ கோலா மட்டுமே திகழ்ந்தது. புலிகள் சில பிரதேசங்களை ஆட்சிக்கு உட்படுத்தியிருந்த வேளையில் கூட தேசிய உற்பத்தியை ஊக்குவிக்கும் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.

    ”

    எழுதுவது என்றால் எதையும் எழுதுவது , புலிகள் தேசிய உற்பத்தியை ஊக்குவிக்க வில்லை என்று ஒரு அப்பட்டமான பொய்யை சொல்லும் உம் மாதிரி ஆள்களின் கதைகளை உண்மையான ஈழத்தமிழன் நம்பமாட்டான்.நல்ல மொழி நடையில் புலிகளிற்கு எதிரான கருத்தை விதைக்கும் உம் முயற்சி பலிக்காது .
    பெரிய அறிவாளி போல கடினமான , சாதரண மக்களிற்கு விளங்க கடினமான தமிழ் சொற்களை பிரயோகித்து மக்கள் மனதை புலிகளிற்கு எதிராக திருப்பும் முயற்சி

    • Thevan 2 says:
      15 years ago

      //// புலிகளிற்கு எதிராக திருப்பும் முயற்சி
      ////

      புலி எதிர்ப்பு என்று குறுக்கி பார்க்காது தேசிய விடுதலைப் போராட்டதின் தவறுகளை பார்க்கவும்.

      1.விடுதலை இயக்கங்களும் தேசிய விடுதலை என்பதன் உள்ளர்த்தைப் புரிந்து கொள்ளவில்லை. அன்னிய முலதனமும், தேசியத்திற்கு எதிரான ஏகாதிபத்தியங்களும் இவர்களுக்கு கருத்தளவில் கூட எதிரிகளாகத் தென்பட்டதில்லை. 2. புலிகளால் மட்டுமல்ல அனைவராலுமே எமது தேசிய விடுதலைப் போராட்டம் ஆரம்பத்திலிருந்தே எதிர்த்திசையிலும், தேசியத்திற்கு எதிராகவுமே கட்டமைக்கப்பட்டு நந்தக்கடலோடு சங்கமாகிவிட்டது

  9. aalavanthaan. says:
    15 years ago

    யார் தேசியவாதிகள்? என்ற கேள்வியுடன் இலகுவார்த்தை பிரயோகங்களுடன் எழுதப்பட்டுள்ள அழுத்தனமான கட்டுரை. திண்ணைக்கு காத்திருந்த ஏனைய இனவாதிகளும், பிழைப்புவாதிகளும், ஏன் லும்பனுகளும், இன்று தேசியம், ஜனநாயகம் போன்ற சொற்றொடர்களை வகைதொகையின்றி பயன்படுத்திவருவதையும் காண்கின்றோம். இவர்கள் எல்லோரிடமும் பொதுத்தன்மையாக விதேசியமும், ஜனநாயக மறுப்பும் இருப்பதனைக் காணக்கூடியதாக இருக்கும். தமிழ் குறுந்தேசியவாதத்தையும், யாழ் வெள்ளாள மேலாதிக்க உணர்வையுமே தேசியமாக பலரும் கருதிக்கொள்கின்றார்கள். நாம் ஆண்ட பரம்பரை என்று கருதிக்கொள்வதால் ஆளும்வர்க்கங்களுடன், ஏகாதிபத்திய அதிகார வர்க்கங்களுடன் தோளோடு தோளுரசி இழந்த அரச அதிகாரத்தை பெறமுனையும் அரச குலத்து இளவல்கள் போல செயல்படுகின்றோம். இதனாலேயே சிங்கள தொழிலாள வர்க்கத்தின்மீதும், ஏனைய போராடுகின்ற ஒடுக்கப்பட்ட மக்கள்மீதும், இயல்பிலேயே மலினமான பார்வைஇருக்கின்றது. நாம் ஒடுக்கப்படுகின்ற இனம், எம்து மீட்சிக்கான அரசியலை எங்கிருந்து தொடங்குவது என்றவிவாதத்தில் இந்த குறுந்தேசியவாத, யாழ் வெள்ளாள மேலாதிக்க கருத்தியலுக்கு எதிரான கருத்த்ப்பொதுவெளியை உருவாக்குதலே இன்றைய தேவையாகும். இதற்காக நாவலனுக்கு எனது பாராட்டுக்கள்.

  10. para says:
    15 years ago

    குறும் செய்தி வந்தாலே முண்டியடித்துக்கொண்டு விமர்சிக்கும் பலருக்கு இப்படியான கட்டுரைகள் வரும் போது கப்சிப் ஆகிவிடுகிறார்கள். அப்பு, சந்திரன் ராஜா, துரை எல்லாம் அடிபட முடியாத இடம் இது

  11. S.G.Ragavan says:
    15 years ago

    யாழ் வெள்ளாள மேலாதிக்க கருத்தியலுக்கு எதிரான கருத்துப்பொதுவெளியை உருவாக்குதலே இன்றைய தேவையாகும். ஆளவந்தான் நீங்கள் இதனை ( யாழ் வெள்ளாள மேலாதிக்க கருத்தியலுக்கு) தமிழ் சமுகத்தின் மீது வலிந்து திணிக்க முற்படுகிறீர்களா? புலிகளை தவிர்த்து ஒரு புதிய அரசியலை பேசமுடியாது எப்படி புலி எதிர்பாளர்கள் தவிக்கிறார்களோ அப்படித்தான் இந்த யாழ் வேளாள மேலாதிக்க எதிர்ப்பு கோசமிடுபவர்களின் . இதனை தவிர்த்து எம்மால் அரசியல் செய்ய முடியாதா?

    • aalavanthaan. says:
      15 years ago

      திரு.ராகவன் உஙகளுடைய கேள்வியை என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை. எதை நான் வலிந்து திணிப்பதாக விசனப்படுகின்றீர்கள். யாழ் வெள்ளாள மேலாதிக்க கருத்தியலை நான் திணிக்கின்றேனா? அல்லது அப்படி எதுமே இல்லை என்று சாதிக்கின்றீர்களா? அப்படி இருக்கும்படசத்தில் அந்த கருத்தியல் நன்றாக செயல்படும்போது (அவரவருக்கு விதிக்கப்பட்ட ஒழுங்கின்படி) எதற்காக கல்லெறிய வேண்டும் என்ற ஆதங்கமா? வெளிப்படையாக உரையாடுவதில் என்ன தயக்கம்.

  12. thurai says:
    15 years ago

    சமூக,பொருளாதார அபிவிருதிகளில் நாட்டம் காட்டாத எந்த இனமும்
    தேசியம் பற்ரிப் பேசுவதற்கு தகுதியற்ரவ்ர்கள். ஈழத் தமிழினமென்பது ஓர் மாயை.
    இதன் பின்னால் சென்றதாலேயே இலங்கைத்தமிழ் மக்கள் இன்று இந்தநிலமையில்லுள்ளனர்.-துரை

  13. நிர்மலன் says:
    15 years ago

    //இலங்கையில் நாடுதழுவிய பொருளாதார உற்பத்தி வளர்ச்சியடையும் நிலையிலிருந்த போது அதனைக்கண்டு அஞ்சிய பிரித்தானிய காலனியாதிக்க அரசு இனங்களுக்கு இடையேயான பகைமையாகவும் போட்டியாகவும் அதனைத் திசை திருப்பிவிடுகின்றது. இதுவே தேசிய இனப்பிரச்சனையின் ஊற்று மூலமாகும்.//
    ஓஓ! அப்ப போர்த்துக்கேயரின் வருகையின் போது இலங்கைத்தீவில் மூன்று இராட்சியங்களிலிருந்ததென்பது தவறான தகவலா! எந்த காலப்பகுதியில் இலங்கையில் நாடுதழுவிய பொருளாதார உற்பத்தி வளர்ச்சியடையும் நிலையிலிருந்தது? சிங்கப்பூர் வளர்சியடைய உதவிய பிரித்தானியாவிற்கு இலங்கை வளர்சி ஏன் அச்சத்தை கொடுக்கணும்! உலகவல்லரசா வந்திடுமெனும் பயமா! சிங்கள மகாவம்ச மனநிலையில் ஒற்றுமையை அழித்த சிங்கள பேரினவாத திமிரின் நேரடி விளைவுதான் இனமுரண்பாடு. அந்த அழிவில் தமது சலுகைபேராசையை முன்னெடுத்த சிறிலங்கா முஸ்லீம்களின் நயவஞ்சகம்தான் ஊதி எண்ணெய் ஊற்றி மேலும் எரியவைத்தது. உங்களிற்கு உண்மையை உணர அதை ஏற்க திராணியில்லை. இருக்கவே இருக்கிறது சர்வதேச ஏகாதிபத்திய பல்லவி. ராகமெடுத்து பாடி முடிக்கவேண்டியதுதான்.
    //தேசியம் என்ற கருத்து தமிழரசுக் கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய பாராளுமன்றக் கட்சிகளால் முதலில் முன்வைக்கப்பட்டது. எஸ்.ஜே.வி.செல்வநாயகம்இ ஜீஇஜீ.பொன்னம்பலம் போன்ற கொழும்பு சார் சிங்கள பெருந்தேசிய வாதிகளின் வர்க்க நண்பர்களான இவர்களால் இக்கருத்து முன்வைக்கப்படுகிறது. மக்கள் மத்தியில் ஒடுக்கு முறைகளின் ஊடாக உறைந்து கிடந்த தேசிய உணர்வு அவர்களின் வாக்குப் பலத்தை அதிகரித்துக் கொள்வதற்காக தட்டியெழுப்பப்பட்டது.//
    ஜீஜீ.பொன்னம்பலம் கண்டிச் சிங்களவரின் நலன் பேண வெளிக்கிட்டதற்காக செல்வாவும் அதை செய்தார் என்பது போலி தமிழ்கொம்முனிசிட்டுக்கள் தாங்கள் செய்த சிங்கள அடிமைச்சேவகத்தை மறைக்க மறுக்க இட்டுக்கட்டிய புனைகதை. செல்வா சிங்களத்திற்கு செய்த சேவைக்குத்தான் காலிமுகத்திடலில் மண்டையை உடைத்து பண்டா கெளரவித்தாரென்றும் சொல்ல வேண்டியதுதானே! 1960 வரை ஒடுக்கப்பட்ட மக்களின் இனதுவேசமற்ற தோழன் என்று புலுடாவிட்டவர்கள். தமது கபடமுகத்தை 1960ல் செல்வாவிற்கு கொடுத்த வாய்மொழி உறுதியை மீறி தாங்களும் சிங்கள மகாவம்ச சிங்களவர் தானென காட்டினர். அதை இன்றுவரை திசவிதாரண வாசுதோவா டிசிகுணசேகரா தொடர்கிறார்கள். இந்த சந்தர்பவாத திருட்டுக் கூட்டத்தின் புனைவுகளை காவித்திரியும் உங்களிற்கு சுயசிந்தனை இல்லையா!
    //விடுதலைப் புலிகள் அமைப்பின் தேசிய பானமாக அமரிக்கக் குடிபானமான கொக்கோ கோலா மட்டுமே திகழ்ந்தது. புலிகள் சில பிரதேசங்களை ஆட்சிக்கு உட்படுத்தியிருந்த வேளையில் கூட தேசிய உற்பத்தியை ஊக்குவிக்கும் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.//
    கோலா குடிப்பவனெல்லாம் அமெரிக்கா ஆதரவாளனா! நல்ல ஆராய்ச்சி முடிவுதான். 1990லிருந்து 2002வரை யிருந்த கடும் உணவு மருந்துதடையையும் மீறி 12 வருடங்களாக தமது கட்டுப்பாட்டு பிரதேசத்தில் குறிப்பிட்டு சொல்ல முடியாதளவிற்கு பட்டினி சாவையும் தொற்றுநோய் பலிகளையும் தவிர்த்தது எப்படியாம்? இயற்கை உரங்களையும் பூச்சி கொல்லிகளையும் பாவித்து விவசாயநடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டதை மற்றவர்கள் மறந்துவிட்டதாக நினைக்கிறீர்களா! வெறும் புலிக்காழ்புணர்விற்காக பொய் பேசாதீர்கள்.
    //தேசிய விடுதலை இயக்கங்கள் தேசியம் பேசிய காலத்தில் மக்களைப் போராட வேண்டாம் என்றும் தாங்கள் இராணுவக் குழுக்களை உருவாக்கி அவர்களைக் காப்பாற்றிக்கொள்வோம் என்றும் கூறினார்கள். தம்மைத் தாமே மக்களின் கதாநாயகர்களாக உருவாக்கிக்கொண்டு மக்கள் பலத்தைப் போராட்டத்திலிருந்து அன்னியமாக்கினார்கள்//
    அப்ப புளொட்டும் ஈபிஆர்எல்எப்ம் விட்ட மக்கள் போராட்ட கதைகள். தொழிலாளர் மாணவர் பெண்கள் அமைப்புக்கள் மற்றும் நீங்கள்விட்ட பாசறை கதைகளெல்லாம் அப்பட்டமான பம்மாத்துக்கள் என்கிறீர்கள். அதுசரி புளொட்டும் ஈபிஆர்எல்எப்ம் போராட்டத்தை சிதைப்பதற்காக இந்தியாவாலும் சிறிலங்காவாலும் பலஸ்தீன பயங்கரவாதிகளின் உதவியுடன் உருவாக்கப்பட்ட நாசகார அமைப்புக்கள் என்பது தெரிந்த விடயம்தானே!அவர்கள் தமிழீழத்திற்கு போராட உருவாகிய அமைப்புகளில்லை இந்திய சிறிலங்கா நலன்பேணத்தானே உருவாக்கப்பட்டவர்கள்.
    //ஈழப் போராட்டம் முதலில் முஸ்லீம்களை தனது எதிரியாக்கியிருக்கிறது. மலையக மக்களை எதிரியாக்கியிருக்கின்றது. இந்தியாவில் போராடும் மக்களை எதிரிகளாகக் கணிப்பிட்டிருக்கின்றது. இவ்வாறே இன்னும் உலகம் முழுவது உதாரணங்கள் நீண்டுகிடக்கின்றன.//
    சிறிலங்கா முஸ்லீம்கள் என்றாலே தமிழின நாசகாரர்கள் என்பது 80 வருடகால பட்டறிவு.
    1)சிங்கள மகாவம்ச கனவான முழுத்தீவும் சிங்களத்திற்கே சொந்த மென்பதை செயல்வடிவமாக்க அமைக்கப்பட்ட சோல்பரி அரசியல் யாப்பை ஆதரித்தது.
    2)மலையகத்தமிழரின் குடியுரிமை பறிப்புச் சட்டங்களிற்கு ஆதரவளித்தது.
    3)பண்டா கொண்டுவந்த சிங்களம் மட்டும் சட்டத்தை ஆதரித்தது.
    4)கொல்வின் ஆர்டி சில்வாவின் நாசகார சிறிலங்கா குடியரசுயாப்பை ஆதரித்தது.
    5)1977லில் 90வீதத்திற்கு மேற்பட்ட ஈழத்தமிழரின் தமிழீழஆதரவு வாக்களிப்பிற்கெதிராக 90 வீதத்திற்கு மேற்பட்ட வடகிழக்கு முஸ்லீம்கள் வாக்களித்தது.
    புலிகளின் காலத்திற்கு முற்ப்பட்ட காலத்தில் செய்து முடிக்கப்பட்ட தமிழ்தேசீயத்திற்கும் அவர்களது அரசியலுக்கும் சிறிலங்கா முஸ்லீம்கள் செய்த நாசகாரச் செயல்கள் இவை. இதற்குப்பிறகும் “ஈழத்தமிழரின் போராட்டம் முஸ்லீம்களை எதிரியாக்கியது” என்பதும். தவிகூட்டணி உருவாக்கத்தின் போதே மறைந்த தொண்டமான் மிகத்தெளிவாக சொல்லிவிட்டார் மலையகத்தமிழரின் பிரச்சினை வேறு வடகிழக்கு தமிழரின் பிரச்சினை வேறு. தங்களை தங்கள் வழியில்விட்டிடும் படி. இதுதான் தமிழீழ விடுதலையில் அவர்களின் பங்களிப்பு இல்லாது போகக்காரணமே தவிர வேறு எதுவுமில்லை. இதை தெரிந்த தாங்கள் “மலையக மக்களை எதிரியாக்கியிருக்கின்றது. இந்தியாவில் போராடும் மக்களை எதிரிகளாகக் கணிப்பிட்டிருக்கின்றது.” என்பதும் ஈழத்தமிழ்தேசீயத்தின் மீதான திட்டமிட்ட அவதூறுமட்டுமே!
    //தமிழ்ப்பேசும் மக்கள் மத்தியிலுள்ள அனைத்துப் மக்கள் பிரிவினரதும் ஐக்கிய முன்னணியாக முன்னெழும்.//
    சிறிலங்கா முஸ்லீம்கள் சலுகைக்காக அலைபவர்களே தவிர உரிமை அவர்களிற்கு தேவையற்ற விடயம். இதுதெளிவான பின்னரும் அவர்களுடன் சேர்த்து போராடுவது என்பது (வெள்ளி பிற்பகல் பொழுது போக செய்யும் போராட்டத்திற்கு வருவார்கள்.) உங்கள் பகல்கனவு உரிமை. அதை நான் மறுக்கவில்லை.
    உங்கள் கட்டுரையுடன் சம்பந்தப்படாவிட்டாலும் எனது சந்தேகமொன்றை கேட்கிறேன். தமிழர்/மக்கள் நலனை வலியுறுத்துபவர்கள் மீது சிறிலங்கா அரச பயங்கரவாதம் கடுமையாக நடந்து கொள்ளும் போது. புதியஜனநாயக முன்னனி விடயத்தில் சிறிலங்கா அரச பயங்கரவாதம் அமைதிகாக்கும் காரணம் என்னவென்று தெரியுமா! இவர்களும் மகிந்தாவின் துணைக்குழு அரசியல் அமைப்பு போலுள்ளது.! எனென்றால் அதிலுள்ள தமிழர் ஒருவர் டக்ளசின் கூட்டாளி.

    • aalavanthaan. says:
      15 years ago

      அன்பரே! உஙகள் பட்டறிவு முள்ளிவாய்க்காலில் மக்களை பாழ் படுத்திய அறிவு. இந்த அரைவேக்காட்டுத்தனத்தை பொதுவெளியில் விவாதிப்பதற்குரிய துணிச்சலை, (சிலவேளை முழுக்க நனைந்த பின் முக்காடு எதற்கு? என்ற சுயபச்சாத்தாபமோ. அன்றேல் விபச்சாரிகளுக்கு மட்டுமே இருக்கக்கூடிய சிறப்பான குண்மா?) பாராட்டியே ஆகவேண்டும். அரைவேக்காடுகளை இந்த துணிச்சலுக்காக வாழ்த்தலாம் வைய முடியாது.

      • நிர்மலன் says:
        15 years ago

        தங்கள் கவலை முய்ளிவாய்காலில் பலியான தமிழர் பற்றியல். அதுவே சிறிலங்கா அரசபயங்கரவாதத்திற்கு முடிவுரை எழுத காரணமாகிவிடுமோ என்ற பதைபதைப்புதான். ஈழத்தமிழனுக்கு துணிச்சல் அவனோடு கூடப்பிறந்த இயல்பு. தமிழை பேசுஎழும மட்டும் தெரிந்தவர்களிற்கு கூடவிருந்து குழிபறிக்கத்தான் தெரியும். தேவையெதுவுமின்றி விபச்சாரத்தை இழுப்பது. என்ன குழந்தைகளை/பெண்களை விபச்சாரத்திற்கு அனுப்பி சிறிலங்கா மில்லியோனர்பட்டியலில் இணைந்த சிறிலங்காதேசீய பெருமையா! முக்காடு என்ன உங்கள் இனப்பெருமையா!

        • thurai says:
          15 years ago

          //ஈழத்தமிழனுக்கு துணிச்சல் அவனோடு கூடப்பிறந்த இயல்பு//நிர்மலன்

          இராணுவத்தை தமிழ்ப்பகுதியிலிருந்து விரட்டியடிக்க தோன்றிய படை இராணுவமில்லாத வீதியில்லா. மல்செய்துவிட்டுமுள்ளிவாய்க்காலில்முடிவு கண்டது. அதுமட்டுமா? தமிழரைக்காக்க புறப்பட்டபடை தமிழரின் பின்னால்நின்று
          தன்னைப்பாதுகாத்தது.பரவாயில்லை மக்களைப்பலி கொடுத்தும் முடியாமல் போனபோது வெள்ளைகொடி பிடித்தாவ்து தப்ப ஆசைப்பட்டது. அதுவும் ஏலாம்ல் போனது.
          இப்போது சன்ல் 4 கட்டிப்பிடித்து புலம்பெயர்நாடுகளில் வாழ ஆசைபடுகின்றது. இதனைத்தமிழரின் வீரமென்பதா புலிகளின் வீரமென்பதா? பதிலை தெளிவாக்த்தரவும். மறைந்த சேர, சோழ, பாண்டியரிற்கும் அவமானம்
          வரக்கூடாது.-துரை

        • theni says:
          15 years ago

          “அரைவேக்காடுகளை இந்த துணிச்சலுக்காக வாழ்த்தலாம் வைய முடியாது”.
          சரியான மதிப்பீடு வேறு எதுவும் சொல்லவேண்டியதில்லை!

      • நிர்மலன் says:
        15 years ago

        இலங்கைப் பெண்கள் பலர் ஏனைய நாடுகளில் வீட்டுப் பணிப் பெண் போன்ற வேலைகளுக்கு வாக்குறுதி வழங்கப்பட்டு ஆனால் அங்கு வந்து சேர்ந்த பின் விபசார நிலையங்கள் போன்றவற்றில் (அதிகமாக சிங்கப்பூரில்) பணியாற்றுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். சொற்ப எண்ணிக்கையான பெண்கள் மாலைதீவில் பாலியல் தொழிலில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்பட்டனர். இந்த நாட்டிற்குள் பெண்களும் சிறார்களும் விபசார விடுதிகளுக்கான பாலியல் கடத்தல்களுக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக வடக்கிற்குச் செல்லும் இலங்கை படையினரின் முக்கிய இடைத்தங்கல் நிலையமாக விளங்கும் அநுராதபுரம் பகுதியில் சிறுமிகளை விட சிறுவர்கள் விபசாரத்திற்கு தள்ளப்படுகின்றனர். குறிப்பாக கரையோரப் பகுதிகளில் பாலியல் சுற்றுலாவுக்காக இது நடைபெறுகிறது. சுமார் 1இ000 சிறார்கள் இலங்கையில் பாலியல் சுரண்டல்களுக்குள்ளாவதாக 2009 ஆம் ஆண்டில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மதிப்பிட்டிருந்தது. எனினும் சில அரச சார்பற்ற நிறுவனங்கள் இந்த எண்ணிக்கை 10இ000 இற்கும் 15இ000 இற்கும் இடைப்பட்டதாகும் எனத் தெரிவித்திருந்தன.
        –
        வீரகேசரி இணையம்.

    • vampu says:
      15 years ago

      கூடியிருந்து குழிபறித்தது கே.பி அண்ணையும், கருணா அம்மானும், என்று அன்பர்கள் குறிப்பிட்ட நினைவு வந்துதொலைக்கின்றது. காட்டிக்கொடுப்பும், கூட்டிக்கொடுப்பும். உள்வீட்டு விவகாரம் என்றும் கேள்வி. தேசிய போர்வாளாக உறுமுவதும் உறுமுகின்ற அழவை தீர்மானிப்பதும் சுருட்டிய பணத்தின் மதிப்பின் அழவிலேயே தங்கியிப்பதென்பது சான்றோர் துணிபு.

    • Thevan 2 says:
      15 years ago

      ///அப்ப புளொட்டும் ஈபிஆர்எல்எப்ம் விட்ட மக்கள் போராட்ட கதைகள். தொழிலாளர் மாணவர் பெண்கள் அமைப்புக்கள் மற்றும் நீங்கள்விட்ட ////

      தேசிய விடுதலை இயக்கங்கள் “”””(except புளொட்டும் ஈபிஆர்எல்எப்ம்) “”””””” தேசியம் பேசிய காலத்தில் மக்களைப் போராட வேண்டாம் என்றும் தாங்கள் இராணுவக் குழுக்களை உருவாக்கி அவர்களைக் காப்பாற்றிக்கொள்வோம் என்றும் கூறினார்கள். தம்மைத் தாமே மக்களின் கதாநாயகர்களாக உருவாக்கிக்கொண்டு மக்கள் பலத்தைப் போராட்டத்திலிருந்து அன்னியமாக்கினார்கள்

      :

      Well spotted Nirmalan.How did you you get “”(except புளொட்டும் ஈபிஆர்எல்எப்ம்)””

      this?

      • நிர்மலன் says:
        15 years ago

        உங்கள் கேள்வி மிகத்தெளிவாக புரியவில்லை! Thevan 2
        அவர்களே

        • Thevan 2 says:
          15 years ago

          from INIORU:

          //தேசிய விடுதலை இயக்கங்கள் தேசியம் பேசிய காலத்தில் மக்களைப் போராட வேண்டாம் என்றும் தாங்கள் இராணுவக் குழுக்களை உருவாக்கி அவர்களைக் காப்பாற்றிக்கொள்வோம் என்றும் கூறினார்கள். தம்மைத் தாமே மக்களின் கதாநாயகர்களாக உருவாக்கிக்கொண்டு மக்கள் பலத்தைப் போராட்டத்திலிருந்து அன்னியமாக்கினார்கள்//

          கட்டுரை அனைத்து தேசிய இயக்கங்களையும் சாடுகிறது .

          ஒரு இயக்கத்தையும் நியாயப்படுத்தவில்லை
          அப்படி இருக்கும் போது எங்கிருந்து , ஏன் உங்கள் eprlf ,plote பற்றிய கருத்துக்கள்.?

          உங்கள் பார்வை தேசியம் ,தேசிய நலனையும் மீறி ஒரு குழு நலன் சார்ந்த பார்வையாக இருக்கிறது.
          இருக்கட்டும்,உங்கள் உரிமை

  14. thurai says:
    15 years ago

    இலங்கையில் வாழும் தமிழர்களின் தற்போதையை  நிலைப்பாட்டை கருத்திற்கொண்டே
    அர்சியல் பேசப்படவேண்டும்.  தமிழர்களின் தலைவர்கள் தாங்கள் தான் என்று  சொல்லியே
    தமிழரின் அழிவில் வாழ்ந்தோர்கழும் அவர்க்ளிற்கு ஒத்தாசை புரிந்து  தம்மை வள்ர்த்தவ்ர்கழும்  இனியாவ்து ஒதுங்கி வாழ்வதே நாக்ரீகமான செயல். 

    தமிழையும் ஈழ்த்தையும் சொல்லியே  தரணியெங்கும் தம்மை  வளர்த்துவருவோர்
    ஓய்வெடுத்தாலே  தமிழர்  முதலில்நிம்மதியாக  உலகெங்கும் வாழ்வார்கள்.-துரை

    • நிர்மலன் says:
      15 years ago

      அதை ஒரு சிங்களக்கைகூலி சொல்லக் கூடாது!. ஏகோபித்த ஈழத்தமிழர் சொல்லனும். அதையும் ஐனநாயகவழியில் ஆதாரத்துடன் உறுதிபடச் சொல்லணும்.

      • thurai says:
        15 years ago

        சிங்களவ்ர்களின் கால் கழுவும் கூலியாக மாறிய புலிகளைவிட
        தமிழரிற்கு துரோகம் செய்தவ்ர்கள் வேறு யாருமுண்டோ? உண்மைகளைச் சொல்பவர்கள் கைக்கூலிகள். தமிழர்களைப் பலிகொடுத்துவிட்டு சமாதான்ப் புறாவாகமாறியவ்ர்கள் உத்தம்ர்களா? கைகூலி, துரோகி இதனை விட தலை உங்களிற்கு வேறு என்னத்தை கற்பித்துவிட்டு தலையைக் கொடுத்தது.

        தமிழர்களோடு நாக்ரீக முறையில் கருத்தாட இயலாத் உங்க்ளிற்லெல்லாம் தமிழ்தேசியம் எதற்கு? மீண்டும் தமிழரை
        பலிகொடுக்கவேயன்றி வேறொன்றிற்குமில்லை .தமிழ்தேசியம் என்பது தமிழரின் அழிவில் வாழ்வோரின் மூல மந்திரம்.-துரை

        • Thevan 2 says:
          15 years ago

          துரை!

          தேசியம் சார் கருத்து வேறுபாடுகளில்

          நாங்கள் வெட்டுவம் புடுங்குவம் , அது எங்களிட்குல்லை.

          நீங்கள் இங்கை மினக்கடிரியல் , அங்கை சிங்கத்தை தூங்க வைப்பது யாராம் ?.
          ப்ளீஸ், நீங்கள் அங்கை போய் சிங்கத்திற்கு பாட்டுப் பாடி தூங்க வையுங்கோ .

          • thurai says:
            15 years ago

            தமிழீழபோராட்டமும்,புலிகொடியும்,வீரவச்னங்கழும்புலம்பெயர்நாட்டிலேதானே நடைபெறுகின்றது. அதனையுமங்கே கொண்டு போங்க முதலில்.அதுக்கு துணிவில்லை. இங்க் மினக்கெடுங்கோ.-துரை

  15. கொடுமுடி says:
    15 years ago

    நிர்மலன் உங்கள் தத்துவ முத்துக்கள் அபாரம் ஐயா. உந்த அறுவார் உங்கட கோயில் குளத்திலயும் கை வப்பாங்கள் போல கிடக்கு. மெத்தப் பத்திரம். உங்கட தேசியத் தலையும் குறுக்கால ஒடின கேபியும் முஸ்லீம் மக்கள உள்ள விட்டு அடிச்சு நகை பிடுங்கி ஏரப் பிளேனுக்கு தோசை சுடுற பென்னாம் பெரிய துவக்கு வாங்கப் பிளான் பண்ணி இனச்சுத்திகரிப்பு செய்யுற வரைக்கும் முஸ்லீம் பொடியள் எத்தின பேர் இயக்கங்கள்ள இருந்தவ? நீங்கள் பாக்கிறது எல்லாம் நாசமாப் போன முஸ்லீம் தலைவர் மாரை மட்டும் தான். எண்டாலும் அவை கூத்தாடி அமைப்பையும், டக்கியையும், உங்கட கோணல் கருணா அம்மாத்தையையும் விட எத்தினையோ முழம் மேலானவை கண்டியளோ. ஒண்டு கேக்கிறன் நிர்மலன் சொத்ப்பாமலுக்கு பதில் சொல்லுங்கோ. உவன் அறுவான் கே.பியனைப் பற்றி என்ன நினைக்கிறியள்? அவர் தேசியப் பிள்ளையோ கக்காப் பிள்ளையோ?

  16. கொடுமுடி says:
    15 years ago

    உதென்ன 2 பட்ட தேவன்? கொண்ட குடி கெடும் கண்டியளே. நாங்கள் தேசியத்துக்கு வெட்டுவம் புடுங்குவம் எண்டு? இனி தேசிய வெட்டு, தேசியப் புடுங்கு, எண்டில்லே வெளிக்கிடப் போயின! வன்னியன் பூட்டில தேசியம் மெத்த மலிவாக் கிடைக்கேக்க ஏனிந்த கோதாரி விழுவார் இனிஒருவில புடுங்குப் படுகீன? உவங்கள் எக்பென்சீவ் பாருங்கோ.

  17. நிர்மலன் says:
    15 years ago

    //கட்டுரை அனைத்து தேசிய இயக்கங்களையும் சாடுகிறது .

    ஒரு இயக்கத்தையும் நியாயப்படுத்தவில்லை
    அப்படி இருக்கும் போது எங்கிருந்து , ஏன் உங்கள் eprlf ,plote பற்றிய கருத்துக்கள்.?

    உங்கள் பார்வை தேசியம் ,தேசிய நலனையும் மீறி ஒரு குழு நலன் சார்ந்த பார்வையாக இருக்கிறது.
    இருக்கட்டும்,உங்கள் உரிமை

    //Thevan 2
    அனைத்து தேசீய இயக்கங்களென பொதுப்படையாக சொன்னாலும் 5 இயக்கங்களே முக்கியமாக கொள்ளப்பட்டது. புளொட் ரெலோ ஈரோஸ் ஈபீஆர்எல்எப் புலிகள். இதில் ரெலோவும் புலிகளும் மக்கள் போராட்ட சிந்தாந்தம் பேசியவர்கள் அல்ல. கட்டுரையாளரின் “மக்கள் போராட்டத்தில் அக்கறை காட்டாதவர்கள்” எனும் வரிக்கு இவர்கள் பொருத்தமானவர்கள்தான். அதனால் அவர்கள் பற்றிய விமர்சனம் தேவைப்படவில்லை! ஈரோஸ் திருகோணமலை மாவட்டத்தில் மக்களிடையே மக்கள் கட்டமைப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுத்தாலும் அதை வடகிழக்கெங்கும் செயற்படுத்த முயற்சிக்கவில்லை. எனவே அவர்கள் வெறும் வாய்ப்பேச்சு மக்கள் போராட்டகாரர்கள் என்பது முடிவாச்சு. புளொட்ம் ஈபீஆர்எல்எப்ம் தான் மிகமும்மரமாக மக்கள் கட்டமைப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுத்தனர். அதில் சபா நாவலனும் அதிக ஈடுபாடு காட்டியதாக அவரது வேறு கட்டுரைகளில் குறிப்பிட்டிருந்தார். இப்போ அதற்கு எதிர்மாறாக இக்கட்டுரையில் அனைத்து தேசிய இயக்கங்களையும் மக்கள் போராட்டத்தை புறக்கணித்ததாக குறிப்பிட்ட படியால்தான். ஈபீஆர்எல்எப் புளொட்டுடன் சேர்த்து சபா நாவலனையும் கேள்விக்குட்படுத்தியிருந்தேன். எனது கேள்வியென்பது யதார்த்தின் பாற்பட்டதே தவிர குழுவாத சிந்தனையல்ல!
    காலம்கடந்த ஞானமாகத்தான் எனக்கு புரிந்தது புளொட்ம் ஈபீஆர்எல்எப்ம் ஈழவிடுதலை போராட்ட சக்திகள் அல்ல. ஈழவிடுதலை போராட்டத்தை பலவீனப்படுத்தி குலைக்க சிறிலங்கா இந்திய அரசுகளால் உருவாக்கப்பட்ட நாசகார சக்திகளென. இந்த உண்மையை புலி முற்கூட்டியே சொன்னபோது புரியவில்லை.சிறிலங்கா இந்திய துணைஇராணுவகுழுக்களாக வந்து சொந்த மக்களையே பலியெடுத்த போதுதான் புரிந்தது இவர்களின் சுயரூபம். சிறிசபாரட்ணம் பத்மநாபா வரதராசாபெருமாள் டக்ளஸ் உமா சித்தார்த்தன் சுகு….. போன்ற கோடாரிகாம்புகள் செய்த செய்யும் கோடாரி காம்புத்தனத்திற்கு இவர்களை ஒரு போராட்ட தலைமை சக்திகள் என நம்பி ஏமாந்து விலகிச்சென்ற போராளிகளை ஆதரவாளர்களை நான் குற்றம் சாட்டவில்லை. மாறாக இப்பவும் இந்த கோடாரிகாம்புகளிற்கு பின்னால் அலைபவர்களும். மறக்கப்பட்டு ஒதுக்கப்பட வேண்டியவர்களிற்கு “தியாகிகள்தினம்” “வீரமக்கள் தினம்” என அனுட்டிக்கும் வீனர்கள் ஒரு போதும் திருத்தமுடியாத ஈனர்கள்தான். இவர்களிற்கும் வீரத்திற்கும் தியாகத்திற்கும் என்ன சம்பந்தம்!

    • Thevan 2 says:
      15 years ago

      /எனது கேள்வியென்பது யதார்த்தின் பாற்பட்டதே தவிர குழுவாத சிந்தனையல்ல!/

      நிர்மலன்!!

      ஆகவே நீங்கள் கூறவருவது :

      1: EROS:
      வெறும் வாய்ப்பேச்சு மக்கள் போராட்டகாரர்

      கள் என்பது முடிவாச்சு.

      2..
      PLOTE , ,eprlf

      ஈழவிடுதலை போராட்ட சக்திகள் அல்ல.

      போராட்டத்தை சிதைப்பதற்காக இந்தியாவாலும் சிறிலங்காவாலும் பலஸ்தீன பயங்கரவாதிகளின் உதவியுடன் உருவாக்கப்பட்ட நாசகார அமைப்புக்கள். மக்களை தவறாக வழி நடத்தியவர்கள் .

      3. TELO :

      மக்களைப் போராட வேண்டாம் என்றும் தாங்கள் இராணுவக் குழுக்களை உருவாக்கி அவர்களைக் காப்பாற்றிக்கொள்வோம் என்றும் கூறினார்கள். தம்மைத் தாமே மக்களின் கதாநாயகர்களாக உருவாக்கிக்கொண்டு மக்கள் பலத்தைப் போராட்டத்திலிருந்து அன்னியமாக்கினார்கள்.ஈழவிடுதலை போராட்ட சக்திகள் அல்ல.

      போராட்டத்தை சிதைப்பதற்காக இந்தியாவால் உருவாக்கப்பட்ட நாசகார அமைப்பு.

      4..
      புலிகள் மக்கள் போராட்ட சிந்தாந்தம் பேசியவர்கள் அல்ல.

      மக்களைப் போராட வேண்டாம் என்றும் தாங்கள் இராணுவக் குழுக்களை உருவாக்கி அவர்களைக் காப்பாற்றிக்கொள்வோம் என்றும் கூறினார்கள். தம்மைத் தாமே மக்களின் கதாநாயகர்களாக உருவாக்கிக்கொண்டு மக்கள் பலத்தைப் போராட்டத்திலிருந்து அன்னியமாக்கினார்கள்.

      நிர்மலன்!!

      சரியா ?

    • mamani says:
      15 years ago

      சிறிசபாரட்ணம் பத்மநாபா வரதராசாபெருமாள் டக்ளஸ் உமா சித்தார்த்தன் சுகு…..
      ராகவன், மாத்தையா,கருணா,கே.பி, வி.பி(கால்நக்கி) அதனால்தான் மாவீரர் பட்டியலில் இன்னும் சேர்க்கவில்லையோ?
      ஒரு உமாவின் மீது கொண்ட வெறுப்பில் ” வீரமக்கள் தினத்தை வீனர்கள், ஈனர்கள் என விழிக்கும் நீர் மாவீரர் துயிலும் இல்லங்களை அரசு அழிக்கும் செயலை கண்டிக்க தகுதியற்றவர். உமக்கு மாவீரர் துயிலும் இல்லம் அழிந்தால் என்ன ஈலிங் அம்மன் கோயில் உண்டியல் பத்திரமாகவிருந்தால் சரிதானே நிர்மலன்?

  18. நிர்மலன் says:
    15 years ago

    //புலிகள் மக்கள் போராட்ட சிந்தாந்தம் பேசியவர்கள் அல்ல.
    மக்களைப் போராட வேண்டாம் என்றும் தாங்கள் இராணுவக் குழுக்களை உருவாக்கி அவர்களைக் காப்பாற்றிக்கொள்வோம் என்றும் கூறினார்கள். தம்மைத் தாமே மக்களின் கதாநாயகர்களாக உருவாக்கிக்கொண்டு மக்கள் பலத்தைப் போராட்டத்திலிருந்து அன்னியமாக்கினார்கள்.
    நிர்மலன்!!சரியா ?//
    எனது கருத்தென்பது 1986 வரை நான் சொன்ன 5 இயக்கங்களும் வடகிழக்கில் இயங்கிய நிலைமையை! இவை எல்லாற்றையும் வேகமாக புரட்டிப்போட்டது 1987ல் நடந்த வடமாரட்சி சிங்கள ஆக்கிரப்பும். அதைதொடர்ந்து கரும்புலி மில்லரின் தற்கொடைதாக்குதலும். அடுத்தது தியாகி தீலிபன் மேற்கொண்ட உண்ணாவிரதமும். புலிகளை மக்கள் முழுமையதக நம்பதலைப்பட்டனர். இந்திய இராணுவத்திடமிருந்து புலிகளை தம்முயிரை கொடுத்துக் கூட பாதுகாத்தனர். 2002 வரை புலிகளின் கட்டுப்பாட்டில் வராத இடங்களில் நிலைமை இதுதான். புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் உதவிபடையாகவும் பெரும்தாக்குதல்களில் விநியோகம் விழுப்புண் அடைந்த போராளிகள் பராமரிபென மக்கள் பங்கெடுத்தனர். அதன்பின்னரன சமாதான காலமும் சுனாமி அழிவிலும் மக்களும்புலிகளும் ஒருவரை ஒருவர் தாங்கினர். புலிகள் விட்ட ஜனாதிபதிக்கான தேர்தல் புறக்கணிப்பை மக்கள் ஏற்றனர். அதன்பின் வந்த போர்க்காலத்தில் சிறிலங்கா அரசபயங்கரவாதப்படை சர்வதேச ஆதரவுடன் தமிழின அழிப்பை செய்த போது ஒரு இலட்சம்வரை மக்கள் கொல்லப்பட்டும் காணாமல் போக செய்யப்பட்ட போது சர்வதேசம் கண்ணை காதை இறுக மூடிக்கொண்டதை பார்த்து தாம் உலகத்தலேயே கைவிடப்பட்டுவிட்டோம் என்பதை உணர்ந்து அடங்கி போயினர். புலி தனித்து நின்றா 1987-2009 வரை தாக்குப்பிடித்தது? அது நடக்ககூடிய காரியமா! சிந்தாந்த வாதிகள் வெறும் வார்த்தை ஜாலத்தில் காட்டியதை புலிகள் தமது தியாகம் மூலம் மக்களை தம்முடன் வைத்திருந்தனர். இந்நிலையில் எப்படிக்கூற முடியும் “மக்கள் பலத்தைப் போராட்டத்திலிருந்து அன்னியமாக்கினார்கள். என்று. இந்தளவு இராணுவ பின்னடைவிற்கு பின்னரும் புலிக்கொடியின் கீழ் மக்கள் திரள்வதை என்னவெனச் சொல்வது!
    சிந்தாந்தவாதிகள் போடும் மக்கள் போராட்டமென்பது ஒரு அரசமைப்பு மாற்ற புரட்சிக்கு உதவுமேதவிர ஒரு தனிநாடு கோரிநடக்கும் விடுதலை போருக்கு சரிவராது. எனது கருத்திற்கு மாறாக ஏதாவது ஒரு தனிநாடு கோரிநடக்கும் விடுதலை போர் வெற்றியடைந்த உதாரணம் இருந்தால் சொல்லுங்கள் . நானும் அறிந்து கொள்கிறேன்.

    • Thevan 2 says:
      15 years ago

      //சிந்தாந்தவாதிகள் போடும் மக்கள் போராட்டமென்பது ஒரு அரசமைப்பு மாற்ற புரட்சிக்கு உதவுமேதவிர ஒரு தனிநாடு கோரிநடக்கும் விடுதலை போருக்கு சரிவராது. எனது கருத்திற்கு மாறாக ஏதாவது ஒரு தனிநாடு கோரிநடக்கும் விடுதலை போர் வெற்றியடைந்த உதாரணம் இருந்தால் சொல்லுங்கள் ///

      .

      இது அரசியல்,இதையே பேசுவோம் . குழு வாதம் வேண்டாம் . எலோருக்கும் எல்லாம் தெரியும்.

      இல்லை தமிழரின் ஆயுதங்கள் செய்தது எல்லாம் சரியே என்று நீங்கள் தொடர்ந்தும் கூறுவதாலோ, நியாயப் படுத்துவதாலோ,
      விதண்டாவாதம் புரிவதலோ ஒரு நன்மையையும் தமிழரின் தேசியத்திற்கு ஆகப்போவதில்லை..

      குறிப்பு:எனது கருத்துக்கள் அனைத்து ஆயுத சித்தாந்த தேசிய இயக்கங்களையும் சாடுகிறது ஒரு இயக்கத்தையும் நியாயப்படுத்தவில்லை.

      விடுதலை யாருக்கு, விடுதலை என்றால் என்ன ,எதிடம் இருந்து விடுதலை போன்ற தெளிவில்லா ஆயுதப் போரரட்டம் வெற்றியடைந்த உதாரணம் இருந்தால் சொல்லுங்கள் . நானும் அறிந்து கொள்கிறேன்.

      .குழுவாததிட்கு வெளியில் நின்று பேசுவோம். வேண்டாம் .நீங்கள் கூறப்போகும் குழுவாத வரலாறு வேண்டாம்

      • நிர்மலன் says:
        15 years ago

        நல்லது நீங்களும் புலியெதிர்ப்பு குழுவாதத்தை விடுத்து முதலில் வெளியில் வாருங்கள். அந்நிலையில் நானும் புலிகளின் நியாயத்தை சொல்ல வேண்டி இருக்காது.

        • Thevan 2 says:
          15 years ago

          தமிழரின் ஆயுதங்கள் செய்தது எல்லாம் சரியே என்று நீங்கள் தொடர்ந்தும் கூறுவதாலோ, நியாயப் படுத்துவதாலோ,
          விதண்டாவாதம் புரிவதலோ ஒரு நன்மையையும் தமிழரின் தேசியத்திற்கு ஆகப்போவதில்லை

      • நிர்மலன் says:
        15 years ago

        எரித்திரியா தென் சூடான் கிழக்குதீமோர் ஆயுதபோராட்டத்தின் வழியில் வழியில் சுதந்திரம் பெற்றவை.

        • thurai says:
          15 years ago

          ஈழத்தமிழர்கள் போராட்டத்தின்மூலம் தமிழினத்தை தாமாகவே அழித்தவ்ர்கள்.
          ஈழ்த்தமிழினம் சுதந்திரம் கேட்கும் தங்கள்நாட்டிலும் பார்க்க செல்வம் மிகுந்த மேல்நாடுகளில் பக்தி கொண்டவ்ர்கள். போராடி உயிர் போவதிலும் பார்க்க கடல்கட்ந்து
          பணம் தேட விரும்புபவ்ர்கள். தங்கள் நாட்டிற்கு சுற்ருலா
          செய்வதில் ஆர்வமுள்ளவ்ர்கள். பண்த்திற்காக
          தாம்
          பிறந்தநாட்டை அவமான்ப்படுத்தியும் தம் தாய்மொழியை தங்கள் வருமானத்திற்காக
          பயன்படுத்தவும் தெரிந்த மாவீரர்கள்.-துரை

  19. thurai says:
    15 years ago

    நிர்மலன், ஈழத்தில் வாழும் தமிழர்களிற்கு தனிநாடு கோரி 30 வருடம்போராடி
    ஒரு வீடுமில்லாமல் செய்து போட்டீர்கள். இன்ன்மும் அந்த எண்ணம் உங்களை
    விட்டுப்போகவில்லை. காரணம் சமாதி கட்டி காட்டி கொத்து ரொட்டி வியாபாரம் செய்து பிழைப்பவ்ர்கள் நீங்கள். வடபகுதியில் போய் ஒரு மாதிரி கிராமம் அமைத்து நாங்களெல்லாம் தமிழர்கள் என்று சொல்லி வாழ்ந்து காட்டுங்கள்.

    சர்வதேசம் ஏன் உங்களை கைவிட்டு அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியதென
    சிந்தித்து பார்த்தீர்களா? அதற்கும் நீங்கள் தான் காரணமென கைகூலிகள்,
    துரோகிகள்தான் என்பீர்களா? அப்போ தமிழரிடையே வாழ்ந்த துரோகிகளை
    போட்டுத்த்ள்ள முப்படையாலும் முடியவில்லையா? தமிழ்,தமிழ்தேசியம்,தமிழீழம்
    எல்லாம் தமிழரை அழித்து வாழ்வோரின் மந்திரங்கள். மக்களாக் மக்களோடு வாழப்பழகுங்கள். கருத்தை கருத்தால்வெல்ல முடியாமல் துரோகி பட்டம் சூட்டி
    தமிழரையே கொலைசெய்து மகிழும் உங்களிற்கு தமிழனைவிட தமிழ் மொழியே மேலானதா? தமிழிற்காக உயிரைக்கொடுங்கள் போற்றுவோம். தமிழிற்காக தமிழனின்
    உயிரையேபறிக்கும் உங்களைபோன்றவ்ர்கள் சிங்களவ்ர்களை தமிழ்ர்களின்
    எதிரிகளாக் விமர்சிக்க தகுதியேயில்லை.-துரை

    • நிர்மலன் says:
      15 years ago

      துரை முதலில் ஒருவிடயத்தை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். ஒரு இனம் சார்ந்த அபிலாசையை/முடிவை நிர்மலனோ இல்லை துரையோ தனித்து எடுக்கமுடியாது. அவ்வினத்தின் பெரும்பான்னை மக்களின் ஐனநாயக ரீதியிலான முடிவே சொல்லணும் தங்களிற்கு எது தேவை எது தேவையில்லையென! இதை ஏற்கமறுப்பது ஐனநாயக விரோதத்தனம். நீங்கள் ஈழத்தமிழினத்தின் பெரும்பான்னை மக்களின் ஐனநாயக ரீதியிலான முடிவை ஏற்காது விதாண்டவாதம் செய்வதன் மூலம் ஐனநாயக விரோதி என்பதைதான் மீண்டும் மீண்டும் உறுதி செய்கிறீர்கள்.
      நான் அகதியாய் இடம்பெயரக்காரணமே சிறிலங்கா அரசபயங்கரவாதத்தின் தமிழின அழிப்பிலிருந்து தப்பத்தான். நான் புலம் பெயரும் போது இருந்ததை விட இப்போ சிறிலங்கா அரசபயங்கரவாதத்தின் கோரப்பிடி இன்னும் தமிழர் தாயகத்தில் வலுப்பட்டுவிட்டது.இந்நிலையில் நான் எப்படி தாயகம் திரும்ப முடியும்? எதையும் தர்க்கரீதியில் சிந்தித்து எழுதுங்கள். மறுதலையாக பார்த்தால் உங்களிற்கான வாழ்க்கை பாதுகாப்பு இப்போ சிறிலங்கா அரசபயங்கரவாதத்தால் நன்றாக உறுதிபடுத்தப்பட்டு விட்டுது. எனவே தாரளமாக ஊர்திரும்பலாமே! இன்னும் ஏன் போலி அகதி வேசம்!
      புலிகளால்தான் மக்களிற்கு பேரழிவு என்று குற்றச்சாட்டை முன் வைக்கிறீர்கள். ஆனால் உங்கள் கண்முன்னலேயே புலிக்கொடியின் கீழ் அணிதிரளும் மக்கள் அதிகமா! இல்லை உங்கள் கருத்துநிலையிலுள்ளவர் பக்கம் அணிதிரளும் மக்கள் அதிகமாக! உங்களிற்கு உண்மைநிலை நன்றாக தெரிந்தும் பெரும்பான்னை மக்களின் விருப்பத்தை உதாசீனம் செய்யும் நபர் ஒரு ஐனநாயக விரோதியாக அல்லது சிங்கள கைக்கூலியாக இருத்தல் வேண்டும்.
      சிறிலங்கா அரசபயங்கரவாதம் என்னினத்தின் உரிமையை சர்வாதிகாரமாக மறுக்கும் நிலையில் நான் சிறிலங்கா அரசபயங்கரவாதத்தை விமர்சிப்பதற்கு பூரண உருத்துடையவன்.யதார்த்தம் என்பது இப்படி இருக்கையில் “எனக்கு சிறிலங்கா அரசபயங்கரவாதத்தை விமர்சிப்பதற்கு தகுதியில்லை” என்பதன் மூலம் நீங்களொரு சிங்கள அடிவருடி என்பதையே உறுதி செய்கிறது.

    • கொடுமுடி says:
      15 years ago

      நிர்மலன் துரை சரியான யாரியள் காணும். உப்பிடியே இனியொருவில செப்பரேட் தளத்தை ஏற்பாடு செய்து ரண்டு பேருக்கும் தனியா அடிபட இடம் கொடுத்து சனநாயகத்தை உறுதிப்படுத்த வேணும். விரும்பினால் சிவன் கோவில்ல கோல் புக்பண்ணி அடிதடி, குத்துவெட்டு போட்டியும் வைக்கலாம். குட்டிய விமர்சகராயும். ரயாவை நீதிபதியாயும் போட்டு ஜெயபாலனை பரிசளிக்க விடலாம்.

      • Thevan 2 says:
        15 years ago

        முடி
        கொடு
        :

        எல்லாரும் முடியை கொடுக்க தயாரில்லை.

        மண்டையிலை கொண்டையை காவிக்கொண்டு கருத்து சொல்வதும் , அங்கே கொண்டை தெரியுது பார் என்றதும்
        ரண்டக்க ரண்டக்க பாடுற எல்லை வரை தான் தேசியம் .

        கொண்டை: video:

        http://www.youtube.com/watch?v=pFk3IPkB9uk

        ரண்டக்க ரண்டக்க :

        http://vdo4you.com/watch.php?hid=749

        • கொடுமுடி says:
          15 years ago

          தேவன் ரண்டு,
          உந்த அர்த்தமான குத்துப்பாடெல்லாம் தியாகராசர் காலத்தில இருக்கிற உவங்களுகு எல்லாம் எங்க வியங்கப்போகுது காணும். பேசாம போத்திகினு படுத்துகலாம். இல்லாட்டி படுத்துகினும் போத்திகலாம். தேசியம் எல்லாம் பிரீ டைம்மில பீரியா டைம் கிடச்சா ஒரு சுதிக்காக பேசுவீன. அல்லாட்டால் கொஞ்சம் காசு பாக்கலேம் எண்டால் ரை பண்லாம். என்ற அப்பூ சனிக்கிழம காலம பங்கு வாங்கப் போவோனும் .. லேட்டான ஈரல் கிடையாது .. உங்க படலேக்கு வெளியால மனுசி வேற காருக்க ஏறிட்டாள். வந்து சிவாசோட ஒரு பிடி பிசடிச்சுட்டு தேசியம் பேசுவமே?

  20. மகேன் மாசில் says:
    15 years ago

    பெரும்பான்னை மக்களின் விருப்பத்தை உதாசீனம் செய்யும் நபர் ஒரு ஐனநாயக விரோதியாக அல்லது சிங்கள கைக்கூலியாக இருத்தல் வேண்டும்.

    இலங்கை வாழ் பெரும்பானமையினரின் கருத்து என்ன என்பது உங்களுக்கு தெரியும்.
    பெரும்பான்மையினர் கருத்து எப்போதும் சரியாக இருக்க வேண்டுமென்பதல்ல.
    1986 இல் புளொட்டை புலிகள் தடை செய்யும்போது பெரும்பான்மையான வட கிழக்கு தமிழ் மக்கள் புளொட் ஆதரவாளர்களாகவிருந்தார்கள். அப்போ புலிகள் யாரின் கைகூலிகளாக இருந்தார்கள்.

  21. மகேன் மாசில் says:
    15 years ago

    நிர்மலனிடம் நேரடியாக ஒரு கேள்வி ஒரே வரி பதிலை எதிர்பார்க்கிறேன். இலங்கையில் சமஷ்டி முறையிலான அதிகாரபகிர்வை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?

    • Soorya says:
      15 years ago

      இதற்கு சிங்கள இனவெறி அரசு தயாரா? இல்லை இந்தியா அதைத் தட்டில் வைத்துத் தரப்போகிறதா? அல்லது சிங்களத்தின் கூலிப் படைகள் சமஸ்டி ஆட்சி என்று மக்களை தொடர்ந்து அடிமையாக வைத்திருக்க வேண்டுமா? இப்படி ஒரு அற்புதமான யோசனை எப்படி வந்தது? உண்மையில் இப்படி ஒருவருக்கும் முன்பு உதிக்காத ஒரு எண்ணம் உதித்த உங்களுக்கு முதலில் பொன்னாடை போர்க்க வேண்டும்!

      • மகேன் மாசில் says:
        15 years ago

        நிர்மலன் என்னநிலைப்பாட்டில் உள்ளார் என்பதை அறிய வினவப்பட்ட கேள்வியே தவிர எனது நிலைப்பாடு கிடையாது. அரசியல் அலோசகர் திரு. அன்ரன் பாலசிங்கத்தின் வேண்டுகோளின் பேரில் சமஷ்டி முறையை பரீசிக்கலாமா என்று தேசிய தலைவரால் தளபதிகள் அழைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது நீங்கள் அறியாத ஒன்றல்ல.
        எமது விடுதலையை நாம்தான் போராடி பெறவேண்டும் தமிழீழத்தை யாரும் தட்டில் கொண்டு வந்து தர மாட்டார்கள்.

    • நாவலன் says:
      15 years ago

      இலங்கையில் இடதுசாரிகள் பலர் இன்றுவரை சுயநிர்ணய உரிமைக்கும் பிரிந்து செல்வதல்ல என்ற விவாதத்தை முன்வைத்த வேளையில் பின்வரும் கட்டுரை எழுதப்பட்டது. https://inioru.com/?p=18384

    • vampu says:
      15 years ago

      தனித்த்மிழீழம் தான் தீர்வு. அப்பதான் நிர்மல அன்பர்கள் “தொழில்துறையை” விருத்திசெய்யமுடியும்.

  22. நிர்மலன் says:
    15 years ago

    // //
    சிறிலங்கா அரச பயங்கரவாத கூலியாகவிருந்து ஆட்காட்டும் பேர்வழி எல்லாம் மாவீரர்களிற்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள். அதுசரி புளொட்டில் வீரர்களா! இருந்த நேர்மையானவர்கள் விலகிச் சென்றுவிட இருந்தது எல்லாம் காடையர் கூட்டமல்லவா! சங்கிலி மாணிக்கதாசன் புளொட்மோகன் போதைசித்தார்த்தன்…. அதுசரி உமக்கு தலைவராய் இருக்ககூடிய தகமை படைத்தவர்கள் இப்படியானவர்கள் தானே!மற்றப்படி சிங்களம் கக்குவதை காவிவந்து இங்கு கொட்டுவதுதானே அரச பயங்கரவாத ஊகச்சிப்பாய்களின் தொழில்.
    //ஒரு கேள்வி ஒரே வரி பதிலை எதிர்பார்க்கிறேன் //
    ஆம்.
    //இலங்கை வாழ் பெரும்பானமையினரின் கருத்து என்ன என்பது உங்களுக்கு தெரியும்.
    பெரும்பான்மையினர் கருத்து எப்போதும் சரியாக இருக்க வேண்டுமென்பதல்ல //
    சிறிலங்காவின் பெருபான்மை என்பது 74 வீத சிங்களம். இவர்கள் தமிழர் உரிமைமறுப்பில் இனவழிப்பில் ஆதரவு கொடுப்பதென்பது இயல்பானது. நாங்கள் இங்கு பேசுவது ஈழத்தமிழரின் அபிலாசை பற்றி அதனால் ஈழத்தமிழரில் பெருபான்மை மக்களின் விருப்பு பற்றியது.
    நாடென்பதும் இனமென்பதும் ஒன்றல்ல.சிறிலங்கா பெரும்பான்மை மக்களென சொல்லும் போது அது சிங்கள இனத்தின் விருப்பாக மாறிவிடுகிறது. இதை தெரிந்து கொண்டு நீங்கள் செய்வது விதாண்டவாதம். ஒருவிடயத்தில் பெருபான்மை மக்கள் எடுக்கும் முடிவே /தெரிவே தானே ஐனநாயக உலகில் கவனத்தில் கொள்ளப்படுகிறது. அது உங்களிற்கு உவப்பில்லை என எதிர்த்தாலும் அது மாற்றத்தை உண்டு பண்ணாது. புளட்டெனும் நாசகார அமைப்பை ஈழத்தமிழரின் பிரதிநிதிகளான புலிகள் தடைசெய்தார்கள். இந்நிலையில் ஈழத்தமிழரின் பிரதிநிதிகளை யாரின் கைகூலி என கேட்பது ஈழத்தமிழரை அவதூறு செய்யும் இழி செயலே!

  23. நிர்மலன் says:
    15 years ago

    //ஒரு உமாவின் மீது கொண்ட வெறுப்பில் ” வீரமக்கள் தினத்தை வீனர்கள், ஈனர்கள் என விழிக்கும் நீர் மாவீரர் துயிலும் இல்லங்களை அரசு அழிக்கும் செயலை கண்டிக்க தகுதியற்றவர். //
    சிறிலங்கா அரச பயங்கரவாத கூலியாகவிருந்து ஆட்காட்டும் பேர்வழி எல்லாம் மாவீரர்களிற்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள். அதுசரி புளொட்டில் வீரர்களா! இருந்த நேர்மையானவர்கள் விலகிச் சென்றுவிட இருந்தது எல்லாம் காடையர் கூட்டமல்லவா! சங்கிலி மாணிக்கதாசன் புளொட்மோகன் போதைசித்தார்த்தன்…. அதுசரி உமக்கு தலைவராய் இருக்ககூடிய தகமை படைத்தவர்கள் இப்படியானவர்கள் தானே!மற்றப்படி சிங்களம் கக்குவதை காவிவந்து இங்கு கொட்டுவதுதானே அரச பயங்கரவாத ஊகச்சிப்பாய்களின் தொழில்.
    //ஒரு கேள்வி ஒரே வரி பதிலை எதிர்பார்க்கிறேன் //
    ஆம்.
    //இலங்கை வாழ் பெரும்பானமையினரின் கருத்து என்ன என்பது உங்களுக்கு தெரியும்.
    பெரும்பான்மையினர் கருத்து எப்போதும் சரியாக இருக்க வேண்டுமென்பதல்ல //
    சிறிலங்காவின் பெருபான்மை என்பது 74 வீத சிங்களம். இவர்கள் தமிழர் உரிமைமறுப்பில் இனவழிப்பில் ஆதரவு கொடுப்பதென்பது இயல்பானது. நாங்கள் இங்கு பேசுவது ஈழத்தமிழரின் அபிலாசை பற்றி அதனால் ஈழத்தமிழரில் பெருபான்மை மக்களின் விருப்பு பற்றியது.
    நாடென்பதும் இனமென்பதும் ஒன்றல்ல.சிறிலங்கா பெரும்பான்மை மக்களென சொல்லும் போது அது சிங்கள இனத்தின் விருப்பாக மாறிவிடுகிறது. இதை தெரிந்து கொண்டு நீங்கள் செய்வது விதாண்டவாதம். ஒருவிடயத்தில் பெருபான்மை மக்கள் எடுக்கும் முடிவே /தெரிவே தானே ஐனநாயக உலகில் கவனத்தில் கொள்ளப்படுகிறது. அது உங்களிற்கு உவப்பில்லை என எதிர்த்தாலும் அது மாற்றத்தை உண்டு பண்ணாது. புளட்டெனும் நாசகார அமைப்பை ஈழத்தமிழரின் பிரதிநிதிகளான புலிகள் தடைசெய்தார்கள். இந்நிலையில் ஈழத்தமிழரின் பிரதிநிதிகளை யாரின் கைகூலி என கேட்பது ஈழத்தமிழரை அவதூறு செய்யும் இழி செயலே!

  24. நிர்மலன் says:
    15 years ago

    திரு சபா நாவலன் அவர்களே!”
    தீபம் தொலைக்காட்சி அறிமுகப்படுத்தி உள்ள புதிய தொலைபேசி விஸ் மோபைல் இலங்கையில் ஸ்ரீலங்கா ரெலிகொம் உடன் இணைந்து செயற்படுகிறது. அதற்கு இலங்கை அரசு விதித்த நிபந்தனை புலிகளுடைய கருத்துக்களை ஒளிபரப்பும் அதேசமயம் அதற்கு மாறுபட்ட கருத்துக்களுக்கும் தீபம் தொலைக்காட்சி இடமளிக்க வேண்டும் என்பது. ஆகவே சபா நாவலன் முதல் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் வரை தீபம் என்ற வெகுஜனத் தொலைக்காட்சியில் தோன்றுவதற்கும் கருத்து வெளியிடுவதற்கும் கூட ஒரு விலை செலுத்தப்பட்டு உள்ளது. ” எனும் ஒரு இணையதளதகவலும் உண்டு. இந்நிலையில் தாங்களும் ஒரு சிறிலங்கா அரசபயங்கரவாதத்தின் ஊடகச்சிப்பாயா?! எனும் கேள்வி எழுவது தவிர்க்க முடியாது போகிறது.. “வி சிவலிங்கம் ரி கொன்ஸ்ரன்ரைன் எஸ் வாசுதேவன் சி ராஜேஸ்குமார் மாசில் பாலன் சஞ்ஜீவ்ராஜ் என் கெங்காதரன் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ” போன்றோர் யார்! என்பது ஏற்கனவே மிகத்தெளிவாக தெரிந்த விடயம்.நீங்கள் இன்றுவரை தமிழ் தேசீயத்தின் பக்கமாக உங்களை அடையாளப் படுத்துகிறீர்கள். அது ஒரு இணையதளதகவலூடக இப்போ கேள்விக்குட்படுத்தப்படுகிறது. எனவே நீங்கள் எங்கு நிற்கிறீர்கள் என்பதை தெளிவுபடுத்த வேண்டிய இக்கட்டுள்ளது. இதை சரியாக புரிந்து கொள்வீர்களென நினைக்கிறேன்.

    • thurai says:
      15 years ago

      புலிகள் வன்னியில் மக்களை பலிகொடுத்துக்கொண்டிருக்கும் வேளையிலும்,
      புலிஊடகங்கள் அரசிற்கு எதிராக உலகமெங்கும் பிரச்சாரம் செய்யும் போதும்க்கூடபுலிகளின் ஒரு பகுதியினர் அரசுடன் மறைமுகமாக வர்த்தக்க்தில் ஈடுபட்டுள்ளனர். எனக்கு புலியின் ஆதரவாளர் ஒருவர் நான் கேட்ட கேள்விக்கு
      இவ்வாறு பதிலளித்தார். நான் மக்டொனாலில் வேலைசெய்கின்றேன் அதோடு புலிக்கும் வேலைசெய்கின்றேன் என்னிட்மும் எனது ஒருநண்பனிடமும் 8 லடச்ம்
      டொலர் உள்ளது.இலங்கையுடன் வர்த்தக்ம் செய்யவுள்ளோம் என்றார். விடுதலைப்போராட்டம் வேறு தனது சொந்த தொழில் வேறாம். இப்படிப்பட்ட மக்களின் இரத்த்தில் தேடிய பணத்தில் சிங்கள அரசுடன் வியாபர்ரம் செய்யும்புலிகள் உத்தம்ர்கள்.இதனை எழுதும் வெளிப்படுத்தும் துரை அரசின்

      கைக்கூலி துரோகி.இதுதானா உங்களின் வேதாந்தம்.-துரை

      • நிர்மலன் says:
        15 years ago

        ஈழத்தமிழரில் சிங்களகைக்கூலிகள் தாரளமாக இருப்பதை போல் புலிகளிலும் மாத்தையா கருணா கேபி இராகவன் இருந்தார்கள். இன்னும் இருப்பார்கள். நீங்கள் ஒரு சிங்களகைக்கூலி இருப்பதால் எல்லா ஈழத்தமிழரும் அப்படியா? விகாரிகள் எங்கும் நீக்கமற இருப்பார்கள். உங்களின் புலிஆதரவாளர(?) நண்பர் உங்களைப்போல் இருப்பது வியப்பில்லையே!

        • thurai says:
          15 years ago

          //புலிஆதரவாளர(?) நண்பர் உங்களைப்போல் இருப்பதுவியப்பில்லையே//நிர்மலன்

          புலியின் ஆதரவாள்ரென்பதை எனது நண்பராகக்காட்டியதில் வியப்பில்லை. உலக்த்தின் கைக்கூலியாக் புலிகள் இருப்ப்து தெரியாத் அப்பாவியே நிர்மல்ன்.-துரை

        • vampu says:
          15 years ago

          அன்பரே! உங்களைக்கூடத்தான் சிலர் நீங்கள் கே.பியின் ஆளெண்டும், கர்ஜிப்பதெல்லாம் சும்மா சுருட்டின அளவுக்கு பிலிம்காட்டுறியள் எண்டும் சொல்கிறார்கள்.

      • S.G.Ragavan says:
        15 years ago

        நிர்மலன் துரையின் கேள்விக்கு இது பதில் அல்ல. விவேகமாகவும் ஆரோக்கியமாகவும் பதில் அளியுங்கள்.

        • நிர்மலன் says:
          15 years ago

          பதில் மிக மிக சரியானது. அது உங்களிற்கு உவப்பில்லாது கசக்கிறது. என்ன உண்மை சுடுகிறதோ?

          • thurai says:
            15 years ago

            குற்ரம்ட்சாட்டுபவரும் புலி,நீதிபதியும் புலி  குற்ரம்சாட்டபபடுபவர்  மட்டும்
            எப்போதும் துரோகி.  இதனை தமிழர்க்ழும் ஏற்கவேண்டும் உலகமும் ஏற்கவேண்டும்.  இதுவேநிர்மலனின்   தமிழீழ அர்சின்
            தீர்மான்ம்.-துரை

    • kovilkaaran says:
      15 years ago

      Page 384
      “That Jaffna was occupied by the Sinhalese earlier than by the Tamils is seen not only in the place names of Jaffna, but also in some of the habits and customs of the people. The system of branding cattle with the communal brand by which not only the caste but also the position and the family of the owner could be traced, was peculiarly Sinhalese. The very ancient way of wearing the hair in the form of a konde behind the head…..The women’s fashion of dressing their cloth across their breasts and mens of wearing their tufts of hair on the side of the head, as was the custom in Jaffna, were introduced by the Malabar immigrants.”
      Page v (Foreward)
      ” Dr. S. Krishnaswami Aiyangar of the Madras University writing on 29.8.1926 the Foreword to Ancient Jaffna by Mudaliyar C. Rasanayagam says: “The attempt of the author to derive the name Ilam does not appeal to us as quite successful; Ilam to us seems to be directly derived from the Pali word Sihalam, which in Tamil would be Singalam or even Singanam, but a strict Tamilising would make it Ilam….” Ancient Jaffna-Mudaliyar C Rasanayagam (Foreword p. v.).
      Page 382
      ” After the massacre of the Christians, Sankili’s ( king of Jaffna) insane fury longed for more victims and he fell upon the Buddhists of Jaffna who were all Sinhalese. He expelled them beyond the limits of the country and destroyed their numerous places of worship. Most of them betook themselves to the Vanni’s and the Kandyan territories (as per Yalpana Vaipava Malai by Mailvagana Pulavar translated by C Brito.), and those who were unable to do so became the slaves of the Tamil chieftains and are now known as ‘Kovia’, a corruption of the Sinhalese word ‘ Goviya’ or ‘Goiya’ and that their original status was equal to that of the Vellalas can be inferred from customs which are still in Vogue in Jaffna. The ‘Tanakaras’ and the ‘Nalavas’ of Jaffna should also be considered Sinhalese remnants in spite of the fanciful derivation of the word ‘Nalava’ given by the author of the Vaipava Malai. The Nalavas were perhaps originally the Sinhalese climbers and received the Tamil name on account of their peculiar way of climbing trees. They too became the slaves of the Tamil chieftains. The Tanakaras were the ancient elephant keepers and those who supplied the necessary fodder to the stables of the king. ( Sinhalese: Tana=grass). They perhaps on account of the service rendered by them were not expelled from the country and later became inseparably mixed with the Tamils among whom they had to remain………the fact that the Kovias, Tanakaras and Nalavas were originally Sinhalese can be seen from the peculiar dress of their women who wear the inner end of their cloth over the shoulders in a manner quite strange to the genuine Tamils.”
      Page 179 Upon the introduction of copious Pali and Sanskrit works, a new language ( Sinhalese) came into existence, with a ground work of Elu ( language spoken by Yakkha,Naga) and Tamil and the superstructure of Pali and Sanskrit….In a similar manner were formed Malayalam and Telugu; from their copious vocabulary of Sanskritic words it is now almost impossible to trace their origin to dravidian dialects. While the process of forming the Sinhalese nation was going on by the continual mixture of the Yakkhas, the Nagas, the Tamils and the Kalingas(Vijaya), the Sinhalese language too was growing and expanding…..Thus it will be seen that the mixed population from Point Pedro ( in the north) to Dondra Head (in the South) known by the name Sinhalam………during the early centuries of the Christian era, spoken one language. This propersition is further supported by most of the place names in Jaffna which have an Elu or semi-Sinhalese origin. They became divided only when the Vannis came in and intervened between them. From that time the people in the North became estranged from their brethren in the centre and the south and progressed altogether on Tamil lines, whereas the Sinhalese grew into a new nation absorbing into themselves even the millions of pure Tamils who remained in Central and Southern Ceylon after the Chola (Tamil invaders) power had declined….a process which can be witnessed even today in the western coast. The difference must have accentuated after the downfall of Buddhism in Southern India, and after a large number of new Tamil colonists began to settle down in Northern Ceylon, for we find that even from the 10th to the 15th centuryAD the Sinhalese eliment was so strong in the North that there were constant troubles between the Sinhalese and the Tamils in Jaffna. (as per Yalpana Vaipava Malai by Mailvagana Pulavar translated by C Brito.) ”
      Page 250 Some others are of the opinion that ‘Yalpanam’ is the Tamil adaptation of the Sinhalese name ‘Yapane’, which like many other Sinhalese names of places in the district existed prior to the Tamil occupation……It is not at all surprising to see the name appearing in Sinhalese and Indian works earlier than in Tamil writings in Jaffna, for it appears that the application of the name for the whole district did not become popular among the inhabitants until the Portuguese period.”
      Page 37
      “Now it is rather significant that Manarridal was the name given to Jaffna in the ‘Yalpana Vaipava Malai’, and that the name Veligama (sandy district), a Sinhalese name with the same meaning was given to a portion of Jaffna by the Sinhalese.(Valigama..Valigamam..Valikamam)”
      Page 42
      “The Mahabharatha, which mentions……….Vavravahan the son of Chitrangadai by Arjuna……It is also said that Vavravahan, while fighting against Arjuna, ‘raised his standard which was decorated most beautifully, and which bore the device of a lion in gold’ ……….This standard displaying a lion appears, therefore to have been the one used by the Naga kings of North Ceylon ( Naga and Yakkas…before arrival of Vijaya and later Tamils)……the standard of the lion, which appears to have been the emblem of the Nagas of North Ceylon, continued to be the flag of the Ceylon king till the Island was ceded to the British in 1815 AD.”
      Page 52 But, according to a local tradition which still exists, and which has been embodied in the ‘Yalpana Vaipava Malai’, Vijaya landed on the northern coast of Jaffna and took up his residence at Kadiramalai……. It is said that Vijaya, who was undoubtedly a Hindu, built the temple called Tirutambalesvaram in the North of Ceylon. This temple must have been built near the present Kirimalai, as there are lands in the vicinity still going under the name of Tirutampalai. Tamba is the Sanskrit word for copper; and the Tambapanni of the Sinhalese chronicler can therefore quite conceivably be the ‘Tirutambalesvaram’ mentioned in the ‘Yalpana Vaipava Malai’ ”
      Page 5
      “In the Mahabharatha the Nagas are frequently mentioned as living in various parts of India and Ceylon in a highly civilized state under their own kings…..Nagpur ( Nagapuram), Nagarjuna Kills, Nagarcoil, Nagarcot, Nargapattinum etc.”
      Page 59 Waves of conquest and colonisation ….names of places translated into tongue of the invaders or settlers . Kadiramalai (Naga)… Kadiragoda(Sinhalese). ..Kandergoda.. ..Kandercudde.. ..Kantarrodai.. ..Odaikurichchi.. .Kantarodai (Tamil) …The discovery of extensive Buddhistic archaelogical remains and large quantities of Indian and Roman coins affords ample testimony to its ancient greatness………. The other Tamil name Katirkamam is the literal transformation of the Sinhalese name Kataragama and has no connection with the Tamil components ‘ Katir'(divine glory) and ‘kamam’ (love), a resemblance seen through religious fervor only. The tradition mentioned in the ‘Yalpana Vaipava Malai’ that Vijaya built a temple for ‘Kadirai Andavar’ might possibly have referred to the temple at Kataragama.”
      Page 332
      ” Bhuvaneka Bahu (Kotte) who caused the Jaffna Town and the Nalur temple to be built was known as Sri Sanghabodhi, a title borne by the Sinhalese kings….In the Kattiyam ( daily repeated at the Kandaswamy Temple) too he is referred to as Sri Sangabodhi Bhuvaneka Bahu.”
      Page 62
      ” Jambukola ( now Sambu turai in Jaffna) was the port of disembarkation of the Buddhist emigrants from Magadha during the time of Devanampiya Tissa. A great trunk road seem to have been in existence, leading from Jambukola and passing through Kantarodai and running parallel to the present central road to the northern gate of Anuradhapura. The remains of two stone bridges, one over the Malvatu oya……… The Ambassadors sent by Devanampiya Tissa to king Asoka of Magadha embarked at Jumbukola and reached Pataliputra in 14 days; and Asoka’s ambassadors, sent to Ceylon landed at Jambukola and reached Anuradhapura in 12 days ( Mahavamsa)…….Sangamitta and the Bo tree landed at Jambukola…of the first eight plants (Bo) raised out of the seed of the tree planted at Anuradhapura, one was planted at Jambukola Patuna on the spot where the Bo tree was deposited at disembarkation. The very old Bo tree standing by the side of the Paralay Kandaswamy temple at Chulipuram, about half a mile from the Port was perhaps the plant here referred to….. Devanampiya Tissa erected a vihare at the port of Jambukola in Nagadipa; likewise the Tissa maha vihare and the Pacina Vihare. The ruins of a dagoba and a vihare can still be seen close to the port; and the place called Tissa maluva about a hundred yards opposite to the Kandaswamy temple above mentioned, perhaps marks the site of Tissa maha vihare. The ancient broad road from Jambukola to Tissa maha vihare still exists but serves no useful purpose.”
      Page 117 Anoubingara (on Ptolomy’s map) can be traced to Singai Nagar (in Jaffna) or Sinhapura, a town built and occupied by Kalinga colonists who accompanied Vijaya and who are said to have landed at Mahisadipa. It came into prominence and fame during the time of the later Jaffna kings called Arya Chakravartis and its extensive ruins can still be seen at Vallipuram near Point Pedro.( Singa Nagar was trans formed to Ana Singara and then Anubingara by foreign merchants.)”
      Page 190
      ” In the early days when buddhism flourished in North Ceylon, the outlying islands off the coast of Jaffna contained important monasteries and viharas… ”
      Page 309
      “Kings of Jaffna belonged to, claimed connection with or imitated the Eastern gangas ( Ganges) who went from Gangavadi and settled at Kalinga. If the earliest kings of Jaffna came from amongst them, it must have been Ugra Singan, for it was after this time that the kings ruling in the north were called Kalingas. Whether Ugra Singan was a member of the Eastern Gangas or not, he came down with a large army of Kalingas to secure the throne of Kadiramalai for himself. As it is said in the Vaipava Malai that he was ‘a prince of a dynasty founded by King Vijaya’s brother’ it may be surmised that he was a member of one of the Kalinga families that came with Vijaya and settled at Singai Nagar (Sinhapura) near Vallipuram.
      Page 370
      The following is a list of kings who reigned at Singai Nagar (Sinhapura) Jaffna from the 13th to the middle of the 15 th century is adapted from the Vaipava Malai giving probable dates.

  25. பரதேசி says:
    15 years ago

    தொடர்ந்து எமக்குள் மோதிக்கொள்வதனால் ஒரு நன்மையும் விளையப்போவதில்லை. மாற்றம் வரும் என்பதை நாம் ஏன் நம்ப மறுக்கிறோம். இங்கு இடுகைகளை இடுபவர்கள் யாரும் நேரடியாக மக்களின் அவலத்தைப் பார்க்காதவர்கள். எமது மக்களின் பேரவலம் எந்த மனிதனையும் மாற்றும். அது ஸ்ரீலங்கா அரசாகினும் அல்லது அவர்களுக்கு உதவி செய்த அரசுகளானாலும் அல்லது ஸ்ரீலங்கா அரசுடனும் கூட நின்ற முன்னாள் போராளிகனாலும் மாற்றம் நிச்சயம் வந்தே தீரும். குற்ற உணர்ச்சி என்பது நீதியைத் தீர்மானிக்கும். அதே போன்று முள்ளிவாய்க்காலில் அவலப்பட்ட மக்களும் போராளிகளும் நிச்சயம் மாறியே இருப்பார்கள். எதையும் தீர்மானிக்கப்போகிறவர்கள் அங்கு தமது எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகிற மக்களேயன்றி நாமல்ல. அவர்களின் கொடியையும் போராட்டவழிமுறையையும் அவர்களே தீர்மானிக்கட்டும். புலம் பெயர் தேசத்தில் வாழும் மக்கள் முள்ளிவாய்க்காலில் எமது மக்கள் பட்ட வலியில் ஒரு வீதத்தைக்கூட அநுபவித்திருக்க முடியாது. அவர்களின் துயரம் அவர்களது பாதையைக் காட்டும். நாமும் அவர்களுடன் சென்று அந்தத் துயரங்களை பகிர தயாரானால் நாமும் கருத்துச் சொல்ல முடியும். அந்த மக்களின் துயரங்களைக் களைய நாம் இது வரை என்ன செய்தோம் என்பதுதான் நாம் எவ்வளவு சரியானவர்கள் என்பதற்கு அளவுகோல்.

  26. S.G.Ragavan says:
    15 years ago

    ஈழத்தமிழனுக்கு துணிச்சல் அவனோடு கூடப்பிறந்த இயல்பு! கோதாரி விழுந்த துணிச்சலில் விவேகம் எதுவும் இல்லை இதனால் நாம் தடக்கி விழுந்த இடங்கள் ஒன்றல்ல பல. சார் பொன் ராமநாதன் தொடக்கம் பிரபாகரன் வரை இதுதான் நிர்மலன் தமிழரின் நிலை. இதற்கு மேல் நாம் எதனையும் சாதிக்கவில்லை. போராளிகளின் தியாகங்கள் இலங்கை அரசினை போர் குற்றம் வரை இழுத்திருக்கின்றது
    என வாதிட முனைவது அப்பாவித்தனமா? அறிவீலித்தனமா? ஏமாற்றும் கபடத்தனமா?கையாலாகத்தனமா?. மொத்தத்தில் பெறுமதி அற்ற பிதற்றல் மாத்திரமே.

    ஆளவந்தான் அவர்களே யாழ் வேளாள மேலாதிக்கம் இருந்தது உண்மை ஆனால் இது நாவலரின் காலம் அல்ல நாம் பல மாற்றங்களை கண்டுள்ளோம். யாழ் வேளாள மேலாதிக்கம் எனக் கூறிக்கொண்டிருப்பதன் மூலம் அதனை வலுப் படுத்தும் அல்லது அதற்கு முண்டு கொடுக்கும் அல்லது வலிய தூக்கி நிறுத்தும் முயற்சியாகவே இருக்கும் என்பது எனது கருத்தாகும். அவ்வாறான பன்னாடைகள்
    இருப்பின் அவர்களை சமுகத்தில் இனங்கண்டு தூர விலக்கி வைப்பது அல்லது அம்பலப் படுத்துவது இன்றைய உலகில் மிக இலகுவானது எனவே
    சாதீய பிளவுகளை கூர்மை படுத்தும் சொல்லாடல்களை தவிர்த்து சமுகம் சார்ந்து சிந்திப்பதே நல்லது.

    • thurai says:
      15 years ago

      //சாதீய பிளவுகளை கூர்மை படுத்தும் சொல்லாடல்களை தவிர்த்து சமுகம் சார்ந்து சிந்திப்பதே நல்லது.//

      தமிழர்  தாம் தமிழினம் என்று கூறுவத்ற்கு முன் செய்ய வேண்டிய விடயம்.-துரை

    • நிர்மலன் says:
      15 years ago

      உங்களின் கருத்து எத்தனம் படு அப்பட்டமான ஏமாற்றுத்தனமானம். சிறிலங்கா அரசபயங்கரவாத ஆதரவை கலரும் இனிப்பும் பூசி ஈழத்தமிழருக்கு ஏமாற்றி கொடுக்கப்பார்க்கிறீர்கள். இதுதானே போலி தமிழ் கொம்முனிசிட்டுக்களின் 60 வருட ஈனத்தனமான எத்தனம்.

      • thurai says:
        15 years ago

        தமிழீழ விடுதலிப் போரின் பின்ணணியில் சர்வதேச முதாலாளித்துவமும் இணந்து  ஏழைகளை மேலும் ஏழைகளாக்கி
        ஏமாற்ருவதை இன்னமும் அறியவில்லையா அந்தோ பரிதாபம்
        யாரிடம் சொல்லி அழுவேன்.-துரை

  27. S.G.Ragavan says:
    15 years ago

    “புளட்டெனும் நாசகார அமைப்பை ஈழத்தமிழரின் பிரதிநிதிகளான புலிகள் தடைசெய்தார்கள். இந்நிலையில் ஈழத்தமிழரின் பிரதிநிதிகளை யாரின் கைக்கூலி என கேட்பது ஈழத்தமிழரை அவதூறு செய்யும் இழி செயலே!” நல்லது நண்பர் நிர்மலன் அவர்களே பிளாட் 1986 களில் தடை செய்யப்பட்ட போது (தடைசெய்யப் பட்டதாக புலிகள் சொல்லவில்லை) புலிகளின் யாழ் மாவட்ட தளபதி கிட்டு விடுத்த அறிக்கையில் நான் வன்னியில் (வன்னியில் தான் பிளாட் முதலில் தடை செய்யப் பட்டது) உள்ள மாத்தையாவிடம் கதைத்துள்ளேன் அவர்கள் பிளாட் அமைப்பை தடை செய்யவில்லை எனக் கூறுகின்றனர் ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கையற்று போராட வலுவற்று பிளாட் அமைப்பு தாமாகவே விலகிக் கொண்டு புலிகள் மீது அபாண்டமாக பழி சுமத்துகிறார்கள் என அறிக்கையிட்டனர். ஆக சில காலங்களின் பின்னரே பிளாட் தடை செய்யப் பட்டதாக புலிகள் அறிவித்தனர்.

    எனவே பிளாட் தடைசெய்யப் பட்ட போது புலிகளிடம் வலுவான காரணிகள் எதுவும் இருக்கவில்லை என்பதுவே உண்மை.

    முள்ளிக்குளம் பிளாட் முகாம் புலிகளால் தகர்க்கப் பட்டது செட்டிகுளம் ஸ்ரீலங்கா ராணுவத்தின் துணையுடனே, அதே போன்று பொத்துவில் திருக்கோவில் TNA முகாம் தகர்க்கப்பட்டது ஸ்ரீலங்கா விசேட அதிரடிப்படையின் துணையுடன்.
    பிளாட் ஒன்றும் சுத்தமான கரங்களை கொண்டது அல்ல. சில ஆயிரம் டொலர்களுக்கு பல ஆற்றல் உள்ள இளையர்களை மாலைதீவில் பலி கொடுத்தது மாத்திரம் அல்ல JR இன் சேலையில் நேரடியாக தொங்கிய மகான்கள் அவர்கள். இன்று மகிந்தவின் சேலையை பிடித்து தொங்கும் 90 வீதமான புலிகளை போல் பிளாட் அமைப்பும் ஆனதில் என்ன வியப்பு?

    இவர்கள் எல்லோரும் ஆன்மிகம் பேசும் அகோரிகள் அல்லது தமிழின நாசகாரிகள் அவ்வளவுதான். மகிந்தவின் சேலையில் தொங்குவதற்கு ஏதுவாக மகிந்தரை யதார்த்தவாதியாக்கி இறுதியில் எங்களை முட்டாளாக்கி …………..ஆ சும்மா போங்கள் நாங்கள் தோழர் என்போம் துரோகி என்போம் கட்டி அணைப்போம் சுட்டுப் போடுவோம் கேட்டால் டே தமிழன்டா என்போம். இதை எல்லாம் கேட்டு களைத்துப் போய் விட்டேன் எமது அப்பாவி தமிழர்களை போல்.

  28. நிர்மலன் says:
    15 years ago

    //தமிழரின் ஆயுதங்கள் செய்தது எல்லாம் சரியே என்று நீங்கள் தொடர்ந்தும் கூறுவதாலோ நியாயப் படுத்துவதாலோவிதண்டாவாதம் புரிவதலோ ஒரு நன்மையையும் தமிழரின் தேசியத்திற்கு ஆகப்போவதில்லை//Thevan 2

    அதே போல். தாங்களும் வெறும் புலியெதிர்ப்பு குழுவாதத்தை எல்லாம் சரியே என்று நீங்கள் தொடர்ந்தும் கூறுவதாலோ நியாயப்படுத்துவதாலோ விதண்டாவாதம் புரிவதலோ ஒரு நன்மையையும் தமிழரின் தேசியத்திற்கு ஆகப்போவதில்லை. மறுதலையாக சிறிலங்கா அரசபயங்கரவாதத்திற்கு ஒரு புலியெதிர்ப்பு ஊடகப்பரப்புரையாகவே அமையும். அதை தெரிந்து கொண்டும் புலியெதிர்ப்பு குழுவாதத்தை தொடரும் நோக்கமென்ன!
    உங்களால் வெறும் புலியெதிர்ப்பு குற்றச்சாட்டுக்களையும் கேள்விகளையும் முன்வைக்க முடியுதே தவிர. ஆக்கபூர்வமான விதத்தில் விவாதத்தை நடத்த முடியுதில்லை. உங்கள் கேள்விக்கு நான் பதிலளித்த போது அதை இப்படி “எலோருக்கும் எல்லாம் தெரியும்.” சொன்னீர்கள். நீங்கள் என்னிடம் எதிர்பார்ப்பது உங்களை திருப்தி படுத்தும் பதிலே தவிர யதார்த்தமான பதில்களல்ல.
    உலகில் எங்குமே வெற்றி பெற்றிராத வெறும் சித்தார்ந்த கற்பனை போராட்டம் தமிழ் தேசீயத்திற்கு உதவபோவதில்லை. புலியெதிர்ப்பு குழுவாதம் பேசவே உதவும்.
    //புலியின் ஆதரவாள்ரென்பதை எனது நண்பராகக்காட்டியதில் வியப்பில்லை.//thurai

    ஒருவர் முன்பின் பழக்கமில்லாதவரிடம் போய் ” நான் மக்டொனாலில் வேலைசெய்கின்றேன் அதோடு புலிக்கும் வேலைசெய்கின்றேன் என்னிட்மும் எனது ஒருநண்பனிடமும் 8 லடச்ம்டொலர் உள்ளது.இலங்கையுடன் வர்த்தக்ம் செய்யவுள்ளோம் …” எனச்சொல்வரா? ஒரு நெருங்கியவரிடம்தான் இதை சொல்லியிருப்பார். அந்த நெருங்கியவர் அவரின் நண்பராக/உறவினராகவே இருக்க முடியும். இல்லையெனில் நீங்கள் கற்பனை செய்து சொல்கிறீர்கள்.
    //நிர்மலன் என்னநிலைப்பாட்டில் உள்ளார் என்பதை அறிய வினவப்பட்ட கேள்வியே தவிர எனது நிலைப்பாடு கிடையாது.//மகேன் மாசில்

    சரி நான் “ஆம்” என பதில் சொல்லிவிட்டேன் எனி என்ன சொல்லப் போகிறீர்கள்?
    கொடுமுடி! உங்களிற்கு எப்போவாவது தெளிவாக உங்கள் கருத்தை முன்வைக்க முடிந்ததா? நீங்கள் ஒரு கையாலகதா பேர்வழி என்பது தெளிவு. எனக்கு பதில்சொல்லும் சாக்கில் என்னுடன்/கருத்துடன் சம்பந்தபடாதவர்களை இங்கு அழைப்பது கையாலகத்தனமே!

    • thurai says:
      15 years ago

      புலியிலிருப்பவர்கள் யாராவது  செய்யும்  துரோகத்தன்ங்கள் யாவும்  அவரின்நண்பர்களையோ  அல்ல்து அவ்ர் சார்ந்த சமூகத்தையே சார்ந்துவிடுமா?
      இதுவரை காலமும்  புலிகளிற்காக  உலகமெங்கும் செய்ற்பட்டுவருபவ்ர்களில்
      நேர்மையான  ஒருவரின் பெயரை இங்கு குறிப்பிட முடியுமா? ஏன் தயக்கம்?மாறி மாறி  எல்லோருக்கும் துரோகிப்பட்டம் சூட்டும் உங்களிற்கு  தலைவரை விட வேறு துணைக்கடவுள்  கிடைக்கவில்லையா?  மக்களை தொடர்ந்து ஏமாற்றுவதை
      எப்போநிறுத்துவீர்கள்?   மக்களை ஏமாரற்ரி வாழ்வதன் பெயர்தான் தம்ழீழவிடுதலைப்போராட்டமா?-துரை

    • Thevan 2 says:
      15 years ago

      இலக்கு என்ன?

      புலி ஆதரவலனாக இருந்தேயாக வேண்டியதற்காக புலிக்கு ஆதரவல்லாத தமிழ் மக்கள் சார்பனவர்களுடன் முரண் படுவது என்ன பலனைத் தரப் போகுமோ தெரியலை.

      தடைகள். : குழு வாதத்தை கையாளுதல்

      எம்மிடையே உள்ள மிகப் பெரிய தடை, கவனமாக கையாளப் படவேண்டியது.

      எம் இலக்கு, மூலோபாயம் மற்றும் தந்திரோபாயம் போன்றவற்றில் நாம் தெளிவாக இருப்போமானால் , வெவ்வேறு காரணங்களிட்காகவும்,தெரிந்தோ தெரியாமலோ எம் தவறிட்கும்,முதன்மை எதிரிக்கும் ஆதரவுக் கருத்துக் கொண்டோரையும் எம் கருத்துக்கள் மூலம் அவர்களின் குழப்பத்தை போக்கி அவர்களை எம் இலக்கு நோக்கி மட்டும் சிந்திக்கத் தூண்டலாம்.

      உடனடி தந்திரோபயதிட்கு வரக் கூடிய தடைகளை தகர்க்க கூடிய வேலைத்திட்டங்கள் உடனடியாக முன்னெடுத்தல் அவசியம்
      .

      குழப்பங்கள் யாவை ?

      வெளியக குழப்பங்களை பார்க்க முன் எம்மிடையே உள்ள முக்கியமான உள்ளக அணிகள்,குழப்பங்கள், எம் ஒற்றுமைக்கும் மக்கள் சார் அணிக்கும் ஏன் எதிராக உள்ளன பற்றி ஆராய்ந்து ஆக குறைந்த ஒரு புரிந்துணர்வுடன் பொது இலக்கு நோக்கி நகர்வது அவசியம்.

      புலி சார்பு, எதிர்ப்பு
      அணி:
      அரசு எதிர்ப்பு,சார்பு
      அணிகள் உள்ளன இவற்றினுள் தமிழ் மக்கள் நலன் மட்டுமே தங்கள் நோக்காக பொது அணியும் ஓன்று உள்ளது.

      இந்தப் பொது அணிகள் தொடர்ச்சியாக அணிகளிட்கு இடையே ஆன கருத்துப் பரிமாற்றங்களிநூடு அணைத்து அணிகளில் உள்ளோரையும் ஒரு மக்கள் சார் பொது வேலைத்திட்ட நோக்கிட்காவது வென்றெடுக்க

      முயற்சிக்க வேண்டும், முயற்சி செய்யாது ஒதுக்குவது எமக்கு எதிராக அவர்களை எதிரிகள் பாவிக்க கூடிய வாய்ப்புகள் உண்டு.

      எம்மிடையே உள்ள முக்கியமான உள்ளக அணிகள்,குழப்பங்கள்

      தவறுகள் காரணமாக எமது இலக்குகளிட்கு எதிரான சக்திகள், அதிகாரங்களை நாம் ஆதரிப்பது எம் மூலோபயதிட்கு எதிரானது.

      கருத்துப் பரிமாற்றங்கள் :

      புலி சார்பு, எதிர் கருத்துகள்: முக்கிய மீள் பரிசோதனைக்கு , திருத்தங்களிட்கு உள்ளாக வேண்டிய நிலையில் உள்ளது.

      புலி சார்பு :

      புலிகளே ஏக பிரதி நிதிகள் என்பதை அன்றைய தேவை, சூழ்நிலை, நியாயங்கள் , அவர்களிற்கு இருந்த தகுதி கருதி உருவாக்கப் பட்ட அடையாளங்களான தேசியக் கோடி , தேசியத் தலைவர் போன்றன மறு பரிசீலனைக்கு உட்படுத்தப் படல் வேண்டும்.

      ஏக பிரதி நிதிகள் :

      அன்றைய தேவை, சூழ்நிலை, நியாயங்கள் , அவர்களிற்கு இருந்த தகுதி வேறு ஆனால் இன்றைய குறிப்பாக மே 09 , முள்ளிவாய்க்கால் ,தலைவரின் இருப்பு , இறப்பு ,புலிகளின் அழிவு பற்றி முழுமையாக ஆராயாது ,தெளிவாக மக்கள் முன் வைக்காது உள்ள நிலைமையில் பழைய காரணங்களையே முன் நிறுத்துவது எந்த விதத்தில் தமிழ் மக்களின் ஒற்றுமை , அடுத்த கட்ட அரசியல் நகர்வு ,நலனிற்கு உதவும் என்று தெளிவாக்க வேண்டிய கடமையும் புலி சார் கருத்துக் கொண்டோருக்குண்டு.

      புலி எதிர் கருத்துக்கள்:

      புலி எதிர்ப்பு மட்டுமே .தமிழ் மக்களின் ஒற்றுமை , அடுத்த கட்ட அரசியல் நகர்வு ,நலனிற்கு உதவும் என்று தெளிவாக்க வேண்டிய கடமை புலி எதிர் கருத்துக் கொண்டோருக்குண்டு.

      இல்லையேல் குழுவாதம் மட்டும் தான் தீவிரமடையும், ஒரு பலனும் தமிழ் மக்களிற்கு இராது. தமிழ் மக்களின் நலனிற்காக என்று புறப்பட்டு குழுவாதத்தில் சிக்குண்டு நாம் எல்லோரும் என்னுமொரு அரசியல் முள்ளிவாய்க்காலிட்கு வழி காட்டுவதாகத்தான் முடியும். think! do we need another period of groupism.

      தமிழ் மக்களின் ஒற்றுமை , அடுத்த கட்ட அரசியல் நகர்வு ,நலனிற்கு உதவாத எந்த புலி சார் ,எதிர் கருத்துகளையும் முதலில் நிராகரிப்போம்.
      இல்லை வைத்தேயாக வேண்டிய கட்டாயம் இருந்தால் எந்த விதத்தில் உதவும் என்று விளக்குவது ஆரோக்கியமானதாக இருக்கும்.

      please

      NO MOREகொண்டை

      ரண்டக்க ரண்டக்க.

      கொண்டை

      : video:

      http://www.youtube.com/watch?v=pFk3IPkB9uk

      ரண்டக்க ரண்டக்க :

      http://vdo4you.com/watch.php?hid=749

      • கொடுமுடி says:
        15 years ago

        இன்னி ஒரு காரருக்கு,
        தேவன் ரண்டு ஒரே பாட்டை திரும்ப திரும்ப போட்டு கடுப்பு ஏத்துவதாக இத்தால் தாழ்மையுடன் அறிவிக்கிறேன். அடுத்த கட்ட நடவடிக்கையாக பிரிஎப் இல் உறுபினராக சேர்ந்து வன்னியன் பூட்டுக்கு முன்னால் நிற்க வேண்டி வரும் என்பதையும் கடுமையான கண்டனமாக தெரிவிக்கிறேன். நிர்மலன் எதுக்கும் உங்கட போன் நம்பரை தாங்கோ, உவங்களை பற்றி டிஸ்கஸ் பண்ணோணும்.

        • Thevan 2 says:
          15 years ago

          கொடு முடியிடம் ஒரு கொண்டையும் (முடி முழுக்க கொடுத்தாச்சு) இல்லாததது நிம்மதியாக உள்ளது

  29. மகேன் மாசில் says:
    15 years ago

    நிர்மலன் தேசிய நலனில் யாராவது சந்தேகபட்டார்களா? ஆனால்நீங்கள் உங்கள் அமைப்பு சார்ந்தவரை தவிர மற்றவர்களை ஈனர்கள் , போதையர்கள் என்று விழிப்பதை எப்படி ஆரோக்கிய விவாதமாக்க முடியும. புலிகளுக்கு வேலை செய்த பலர் பணசுருட்டலுடன் ஒதுங்கி விட்டனர் அவர்களை யாராவது அடையாளப்படுத்தினீர்களா? அவர்கள் இலங்கை அரசுடன் சேர்ந்து வேலை செய்பவர்களை விட மோசமானவர்கள் இல்லையா? புலிகளுடன் வேலை செய்த உங்களைப்போன்ற தேசிய வாதிகளும் மற்றைய அமைப்புகளில் வேலை செய்த தேசியவாதிகளை ஒன்றிணைத்து இயங்காவிடின் புலம் பெயர்நாடுகளில்நாம் எதையும் சாதிக்க போவதில்லை. உங்களின் பின்னூட்டங்களினூடே உங்களிடம் சற்று குற்ந்தேசிய வாடை வீசுகிறது.

    • நிர்மலன் says:
      15 years ago

      அப்ப இதற்கு என்ன பெயராம்?”mahen masil
      Posted on 06/24/2011 at 9:46 am
      உங்களுக்கு தரப்பட்ட உண்டியல் குலுக்கும் சேவகம் இப்பொழுது மந்தம் போல் தெரிகிறது அதற்கு புலிக்கொடி நிழல் தேவைபடுகிறது. இதிலும் காசியில் போய் பிச்சை எடுக்கலாம்
      “இது எந்தவகை தேசீயம் குறுக்கா! இல்லை நெடுக்கா!
      ஈபிஆர்எல்எப் ஈபிடிபி புளட் கும்பல்கள் ஈழதேசீயவாதிகளென இன்னும் நம்பச்சொல்கிறீர்களா! சித்தார்த்தன் சதா போதையிலுருப்பதை மறுக்கப்போகிறீர்களா! கேபி கும்பலை கருணா கும்பலை நானெங்காவது ஆதரித்துள்ளேனா! உமா நாபா சபாரட்ணம் வரிசையில் தானே அவர்களையும் சேர்த்தேன் . அதை இல்லையென்று சொல்லப் போகிறீர்களா!

      • கொடுமுடி says:
        15 years ago

        அப்பு நிர்மலன் நல்ல திறமான வரிசை ஒண்டப் போட்டு வசிரீக்க்ங்கள் கண்டியலே. உமா, நாபா, சபாரத்தினத்தார், அவயோடு நீங்கள் குதறிய போராளிகள், முஸ்லீம் குழந்தப் பிள்ளையள் .. எல்லாம் அந்த மாதிரி தான் அப்பு எனக்கே உங்கட அரைசியல் அரிவு அரிப்பெடுக்குதப்பு.. அப்ப வன்னில பிடிச்சு வச்சு மூட்டப் பூச்சி மாதிரி சாகடிச்ச டம்மில் சனத்தையும் இந்த வரியேக்க சேத்தியள் எண்டால் உங்கட அரசியலை அப்புச்சாமியே கும்புடுவார் நிர்மலன்,

      • கொடுமுடி says:
        15 years ago

        நிர்மலன் காச்சடையும் இல்லாம மூக்குச் சளியும் வழிய விளையாடித் திரியேக்கையே உங்கள எனக்க்கு தெரிம். இப்பெல்லம் பெரியா வளர்ந்து சும்மா தளதள தள எண்டு இருக்கிறீங்கள் ஆனாப் பாருங்கோ நீங்கள் பேசுறது தான் இன்னும் காச்சட்டையும் இல்லாத மூக்குச் சளி அரசியல். வன்னியன் பூட்டுக்கு தான் உது சரி.

        • நிர்மலன் says:
          15 years ago

          அம்சாவின் உபயத்தில் ஆட்டுப்பங்கும் சிவாசும் சேர்ந்து புசித்த நன்றியை காட்டுகிறீர்கள். அதையேன் நான் கெடுப்பான்! தூ! இப்படியுமொரு வாழ்கை தேவையா!

          • கொடுமுடி says:
            15 years ago

            னாயிறு விடிய எழும்பினா, இப்பிடி ஒரு அதிர்ச்சியா? இனிமேல் லண்டன் கடேலே சிவாசும் பங்கும் வாங்கினா தேசிய வீரர் ராம் அண்ணன் தன்ற மா வீரச் செயலை காட்டுவாரோ? அம்சாக்கும் சிவாசுக்கும் இப்பிடி ஒரு ரிலேசனோ? அப்பு … என்ன வாழ்க்கை இது … தூ….தூத்தூ..

      • மகேன் மாசில் says:
        15 years ago

         நிர்மலன் உங்கள் நிலைப்பாடு நன்றாக புரிகிறது. மீண்டும் ஏகபிரதினிதித்துவம் கோரி கூத்தாட முனைகிறீர். புத்திஜீவிகள் உள்வாங்கப்பட்டு தேசியம் வலுப்பெற்ரால் உங்களைப் போன்ற அரைவேக்காடுகளை யாரும் கணக்கெடுககமாட்டார் என ஐயப்படுகிறீர். உங்கள் சுயநலத்திற்கு தயவுசெய்து ஒவ்வொருவருக்கும் ஒரு சாயம் பூசி தூரே வைக்க முயற்சிக்காதீர். சித்தார்த்தன் போதையிலிருக்கிறாரோ இல்லையோ எனக்கு தெரியாது ஆனால் சில தத்துவ ஆசிரியர்கள் போதையர் என்பது உங்களுக்கு தெரியும்.  நாபா ஒரு எளிமையான தலைவர் ஆனால் அடாவடி படை வந்த காலங்களில் சில அடிப்படை தவறுகளை இழைத்து விட்டார். 

    • kovilkaaran says:
      15 years ago

      பன்னிகளுக்கு சோப்புபோடுவது, அல்லது சொக்காபொடி போடுவது அமர்க்களம். ஆக அன்பரின் அமுதில் சற்று குறுந்தேசிய வாடை வீசுகின்றது. என்ன கண்டுபிடிப்பு. வேறொரு வாடையும் வீசவில்லையா ? வீணர்களை விதந்துரைக்கும் நீங்களெல்லாம்………?

  30. S.G.Ragavan says:
    15 years ago

    ஆம் நிர்மலனும் துரையும் மனநிலையில் ஒருவரை ஒருவர் ஒத்தவர்கள் கருத்துகளில் மாத்திரம் வேறு போக்கானவர்கள் அவ்வளவுதான்.

    • Thevan 2 says:
      15 years ago

      இருவரும் ஒரே வேலையை தான் செய்கிறார்கள் .ஒன்றில் நீ புலி, இல்லை நீ அரசு சார்பாக இரு.
      நாங்கள் இருவரும் சேர்ந்து தமிழ் மக்களை பிணமாக்குவம்.நீ தா நான் கொல்லுறேன்.

      இடையிலே யார் இவை தமிழ் மக்களின் ஒற்றுமை உரிமை பற்றி பேசுறது.இவங்களை ஒன்றாக விட்டு உரிமை பற்றி பேச விட்டால் எனக்கும் ஆபத்து , உனக்கும் ஆபத்து .

      • thurai says:
        15 years ago

        புலியாகவோ  அரசு ஆதரவாகவோ   இருப்பவ்ர்களைவிட
        சந்தர்ப்பத்திற்கேற்ப மாறுவேடம் போடுவோரும் சந்தர்ப்பவாதிகழுமே
        என்றும் ஆபத்தானவ்ர்கள்.-துரை

  31. நிர்மலன் says:
    15 years ago

    Thevan 2 அவர்களே!
    //புலி ஆதரவலனாக இருந்தேயாக வேண்டியதற்காக …//
    மிகப்பெருபான்மையான ஈழத்தமிழனுக்கு புலியாதரவு நிலைப்பாடு எடுக்கவேண்டிய சூழ்நிலையேன் உள்ளது? இதற்கான காரணத்தின் அடிப்படையை சொல்லுங்கள்/சிந்தியுங்கள் பார்க்கலாம்.
    //வெவ்வேறு காரணங்களிட்காகவும் தெரிந்தோ தெரியாமலோ எம் தவறிட்கும் முதன்மை எதிரிக்கும் ஆதரவுக் கருத்துக் கொண்டோரையும் எம் கருத்துக்கள் மூலம் அவர்களின் குழப்பத்தை போக்கி அவர்களை எம் இலக்கு நோக்கி மட்டும் சிந்திக்கத் தூண்டலாம்.//
    சரி ஒருவர் ஏன் புலியெதிர்பாளராக இருக்கிறார் என பார்த்தால். இதில் வரக்கூடிய முதன்மை காரணங்கள்!
    1) சிறிலங்கா அரச ஆதரவாளனாக இருந்து சலுகை பெறுதல்.
    2) தமக்கு தமிழ்சமூகத்தில் பிரத்தியேக கெளரவம் கிடைக்காத விரக்தி கோபத்தில் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் பழிவாங்க துடிக்கும் சைக்கோதனம்.
    3) சிறிலங்கா அரச ஆதரவாளனாக இருந்து சலுகை பெறுதலை புலிகள் தடுத்த/தண்டித்த போது அதனால் தமக்கேற்பட்ட சலுகை/ பொருளாதார/உயிர் இழப்பிற்கு பழிக்குப் பழி வாங்கும் இயல்பு.
    4) ஒருபிழையான அமைப்பில் தம்மை தெரிந்தோ தெரியாதோ இணைத்து விட்டு அந்த அமைப்பின் செயற்பாட்டை புலிகள் தடை செய்ததற்கு பழிவாங்கும் குருர எண்ணம்.
    5) கொடூர சமூகக்குற்றவாளிகள்.
    6) தாம் மட்டும் தான் அறிவாளிகள். தமக்கு மட்டுமே எங்கும் கெளரவம் கிடைக்கணும் என அழையும் அற்பர்கள்.
    7) சமூக நெறிமுறை தவறி வாழ்ந்தவர்களும். அதனால் சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்களும். கொண்டிருக்கும் ஒட்டுமொத்த தாய் சமூகக்கோபம்.
    8)சாதீய அடக்குமுறைக்கு உட்பட்டவர்களின் கோபம். ஒடுக்கியவர்களை பழிவாங்க துடிக்கும் இயல்பான குணம். புலிகள் மேட்டுக்குடிகள் என்ற தவறான கற்பனை.
    9)….
    “முதன்மை எதிரிக்கும் ஆதரவுக் கருத்துக் கொண்டோரையும் எம் கருத்துக்கள் மூலம் அவர்களின் குழப்பத்தை போக்கி அவர்களை எம் இலக்கு நோக்கி மட்டும் சிந்திக்கத் தூண்டலாம்” இதற்கான அனைத்து முயற்சியும் எடுக்கப்பட்டது. போலிதமிழ் கொம்முனிசிட்டுக்கள். /சிங்கள அரசஆதரவு இராணுவ துணைக்குழுக்கள் தமது இருப்பிற்காக எதிர்த்து முழுமையடைய விடாது தடுத்தனர். அதைதான் இன்னும் வலிமைபடுத்த முயற்சிக்கின்றனர்.
    தமிழ்தேசீயத்தை முன்னெடுப்பதாக வாயளவில் சொல்லும் மாற்றுக்கருத்தாளர்கள்(??) புலிக்கொடி எதிர்ப்பூடாக இதே காரியத்தையே செய்ய முயல்கிறார்கள்.
    //எம் ஒற்றுமைக்கும் மக்கள் சார் அணிக்கும் ஏன் எதிராக உள்ளன பற்றி ஆராய்ந்து ஆக குறைந்த ஒரு புரிந்துணர்வுடன் பொது இலக்கு நோக்கி நகர்வது அவசியம்.//
    நல்லது புலி/மக்கள் சார் அணியெதிர்ப்பில் காலத்தையும் சக்தியையும் விரையம் செய்வதை விடுத்து பொது எதிரியான சிங்கள பேரினவாதத்தை எதிர் கொள்வோம். வாருங்கள் இன்னுமேன் தயக்கம்! தாமதம்!
    //புலி சார்பு எதிர்ப்புஅணி:அரசு எதிர்ப்பு சார்பு அணிகள் உள்ளன இவற்றினுள் தமிழ் மக்கள் நலன் மட்டுமே தங்கள் நோக்காக பொது அணியும் ஓன்று உள்ளது.//
    “மக்கள் நலன் மட்டுமே தங்கள் நோக்காக பொது அணியும் ஓன்று உள்ளது” அப்படி சொல்லி புலுடாவிட்டவரின் முகமூடிதானே தீபத்திலும் வன்னியன் பூட்டிலும் கிழிந்து அம்பலமாச்சு அம்மணமாச்சு! சிங்கள ஊடகச்சிப்பாய்கள் பலவிதம் அதிலொன்றுதான். “மக்கள் நலன் மட்டுமே தங்கள் நோக்காக பொது அணி” எனும் புலுடாக்காரர்.
    //அணைத்து அணிகளில் உள்ளோரையும் ஒரு மக்கள் சார் பொது வேலைத்திட்ட நோக்கிட்காவது வென்றெடுக்கமுயற்சிக்க வேண்டும் முயற்சி செய்யாது ஒதுக்குவது எமக்கு எதிராக அவர்களை எதிரிகள் பாவிக்க கூடிய வாய்ப்புகள் உண்டு.//
    இப்போ மாத்திரம் ஏதோ வாழுதமோ! தீபத்திலும் வன்னியன் பூட்டிலும் கிழிந்து அம்பலமாச்சு அம்மணமாச்சு! சிங்களஊடகச்சிப்பாய்கள் என்று நிரூபணமாச்சே!
    “முதலையும் மூர்க்கரும் கொண்டது விடார்” என்பதற்கு இவர்கள்தான் சாலப்பொருத்தமானவர்கள்.
    //புலிகளே ஏக பிரதி நிதிகள் என்பதை அன்றைய தேவை சூழ்நிலை நியாயங்கள் அவர்களிற்கு இருந்த தகுதி கருதி உருவாக்கப் பட்ட அடையாளங்களான தேசியக் கோடி தேசியத் தலைவர் போன்றன மறு பரிசீலனைக்கு உட்படுத்தப் படல் வேண்டும்.//
    “புலிகளே ஏக பிரதி நிதிகள் என்பதை அன்றைய தேவை சூழ்நிலை நியாயங்கள் அவர்களிற்கு இருந்த தகுதி கருதி” என்பதை நீங்கள் எந்த ஒரு காலகட்டத்திலும் ஏற்காத நிலையில் என்ன புதிதாக மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டி இருக்கு!
    //குறிப்பாக மே 09 இ முள்ளிவாய்க்கால் இதலைவரின் இருப்பு இறப்பு புலிகளின் அழிவு பற்றி முழுமையாக ஆராயாது தெளிவாக மக்கள் முன் வைக்காது உள்ள நிலைமையில் பழைய காரணங்களையே முன் நிறுத்துவது எந்த விதத்தில் தமிழ் மக்களின் ஒற்றுமை அடுத்த கட்ட அரசியல் நகர்வு நலனிற்கு உதவும் என்று தெளிவாக்க வேண்டிய கடமையும் புலி சார் கருத்துக் கொண்டோருக்குண்டு.//
    ஈழத்தமிழருக்கு புலியமைப்பு தொடங்கமுதல் என்னென்ன உரிமை மறுப்புக்கள் இருந்ததோ அது சிங்கள பேரினவாதத்தாலும் அதன் தமிழ் துணைக்குழுக்களாலும் மேலும் உக்கிரப்படுத்தப்பட்ட நிலையில். நேர்மையையும் தியாகத்தையும் வீரத்தையும் கொண்டு கட்டியமைக்கப்பட்ட அமைப்பை மீள் பரிசீலனை செய்ய வேண்டிய தேவை ஈழத்தமிழருக்கில்லை. “மக்கள் நலன் மட்டுமே தங்கள் நோக்காக பொது அணி” எனும் புலுடாக்காரர்களின் தேவையொன்றும் ஈழத்தமிழரின் தேவையல்ல!
    //புலி எதிர்ப்பு மட்டுமே .தமிழ் மக்களின் ஒற்றுமை அடுத்த கட்ட அரசியல் நகர்வு நலனிற்கு உதவும் என்று தெளிவாக்க வேண்டிய கடமை புலி எதிர் கருத்துக் கொண்டோருக்குண்டு.//
    சரி யாரவது புலியெதிர்ப்பு மட்டுமே அடுத்த கட்ட அரசியல் நகர்வு நலனிற்கு உதவும் என்று தர்க்க ஆதார ரீதியில் விளக்க கூடியவர் முன்வரட்டும் நான் கேட்கும் சந்தேகங்களிற்கும் விடைபகருட்டும் பார்க்கலாம். தீபத்தில் புலிக்கொடி எதிர்ப்பிற்கு வந்தவரை பார்த்தேன். புலிக்கொடிக்கு பின்னாலுள்ள அரசியலை எதிர்பதாக என்று திருப்பிதிருப்பி சொன்னரே தவிர அது என்ன அரசியல் கடைசி வரை சொல்லவில்லை. சட்டியிலிருந்தால்தானே அகப்பையில் வருவதற்கு!
    //தமிழ் மக்களின் ஒற்றுமை அடுத்த கட்ட அரசியல் நகர்வு இநலனிற்கு உதவாத எந்த புலி சார் எதிர் கருத்துகளையும் முதலில் நிராகரிப்போம்.இல்லை வைத்தேயாக வேண்டிய கட்டாயம் இருந்தால் எந்த விதத்தில் உதவும் என்று விளக்குவது ஆரோக்கியமானதாக இருக்கும்.//
    புலிகள் அமைப்பென்பது நேர்மையையும், தியாகத்தையும், வீரத்தையும் கொண்டு கட்டியமைக்கப்பட்ட அமைப்பு. அதைவிட எந்த அமைப்பிடமும் நேர்மையும், தியாகமும் கடுகளவேணும் கிடையாது. ஏற்கனவே ஒரு உயரிய தியாக அமைப்பு எங்களிடம் இருக்கும் போது புதிய பெயரில் பழைய சந்தர்ப்பவாதிகளை/ விலாங்குகளை ஏற்க வேண்டிய தேவை என்ன! தமிழ்தேசீய போராட்ட சக்தியான புலிகளை பெரும்பாலான ஈழத்தமிழர் ஆதரிக்கும் போது. அந்த யதார்த்தத்தை மீறி எத்தனை பெயரில் இயங்கும் கடிததலைப்பு மினிக்குழுக்கள் எதிர்கிறர்கள்? சிறிலங்காவின் புலம்பெயர் தமிழரை நோக்கிய முனைப்பான வேலைத்திட்டமும் இந்த கடித தலைப்பு குழுக்களின் வேலைத்திட்டமும் ஒரே கோட்டில் இருக்கும் மர்மமென்ன! எனவே இந்த கடித தலைப்பு குழுக்கள் புலியெதிர்ப்பு என்ற போர்வையில் செய்வது அப்பட்டமான தமிழ்தேசீய எதிர்ப்பு.

    • Thevan 2 says:
      15 years ago

      ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க

      I like your songs. Nirmalan.

      • நிர்மலன் says:
        15 years ago

        கேள்விக்கு பதிலில்லாத வெற்றுக்கோம்பைகளின் பதுங்குமிடம் “ரண்டக்க ரண்டக்க” தான். பாவம் நீங்களும்தான் என்ன செய்வீர்கள் சட்டியிலிருந்தால்தானே அகப்பையில் வருவதற்கு!

        • Thevan 2 says:
          15 years ago

          நன்றி நிர்மலன் , என்னிடம் இருந்து பதிலை எதிர் பார்த்ததிட்கு.

          உங்களின்,ஏன் அனைத்து அணிகளையும் அவர்களின் இன்றைய நிலைப்பாட்டையும் அதற்க்கான காரணிகளையும் ஆராய்ந்து பரஸ்பரம் புரிந்து ஒரு பொது வேலைத் திட்டத்தில் இணைக்க முயற்சிப்பது தவறல்லவே?

          இது தான் திருத்தங்களை எதிர்பார்த்து நிற்கும் தாழ்மையான என் கருத்து,

          சுருக்கம்:யாருமே பிறக்கும் போதே தேசியத்திற்கு எதிராகத்தான் செயல் படுவேன் என்று கங்கணம் கட்டி வந்தவர்கள் அல்ல. வந்திருப்பார்கள் என்று கூற முனைவதும் நன்றல்ல.

          இதில் நீங்கள் உடன் படவில்லை. அது உங்கள் உரிமை. எதிர்க்கருத்தை அல்லது திருத்தங்களை மட்டும் எதிர் பார்க்கின்றேன்.

  32. S.G.Ragavan says:
    15 years ago

    நிர்மலன் நீங்கள் சொல்பவை என்றோ நாங்கள் கேட்டவை ஆக நீங்கள் சொல்வதன் படி புலிகளை கேள்விகிடமின்றி ஆதரிக்காதவர்கள் அனைவரும் தமிழின விரோதிகள்? ஆக வாய் பேசாத மடந்தைகளாக இருங்கள் நாம் செய்வதை பார்த்துக் கொண்டு நல்லது. கோவிக்க வேண்டாம் துரையும் நிர்மலனும் ஒருவரா பாழாய் போன இந்த தமிழனுக்கு இப்படி ஒரு சந்தேகம் வருகின்றது. புலிகளையும் மகிந்தா பற்றியும் கதைப்பதை நிறுத்திவிடலாம் என நினைக்கிறேன் துரை, நிர்மலன் உங்களுக்கு எப்படி?

  33. நிர்மலன் says:
    15 years ago

    //மீண்டும் ஏகபிரதினிதித்துவம் கோரி கூத்தாட முனைகிறீர்.//மகேன் மாசில்

    புலிகள் ஏலவே ஈழத்தமிழரின் தனிப்பெரும் சக்தி. அவர்கள் எனியென்ன புதிதாக கோரவிருக்கு! அதுவும் போயும் போயும் உங்களிடம்.
    //புத்திஜீவிகள் உள்வாங்கப்பட்டு தேசியம் வலுப்பெற்ரால் உங்களைப் போன்ற அரைவேக்காடுகளை யாரும் கணக்கெடுககமாட்டார் என ஐயப்படுகிறீர். //மகேன் மாசில்

    சரி நான் முழுமையாக வேகாதவன் அப்ப இன்னும் என்னை சரியான பதத்திற்கு வேகவைக்க முடியும். அளவிற்கு மிஞ்சி வெந்து கரிக்கட்டையான அறப்படிச்ச புத்திஜீவி தாங்கள். கொஞ்சம் விலாவாரியாக எனிச்சொல்லுங்கோ!
    1) புலிக்கொடிக்குப் பின்னாலுள்ள அரசியல் என்ன? அது ஏன் மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும்?
    2) தங்களின் பின்னாலுள்ள அரசியல் என்ன? அது எந்தவகையில் தமிழ்தேசீய பிரச்சினையை தீர்க்கும்.
    //தயவுசெய்து ஒவ்வொருவருக்கும் ஒரு சாயம் பூசி தூரே வைக்க முயற்சிக்காதீர்.//
    புதிதாக சாயம் பூச என்னவிருக்கு! நீங்கள் பேசிய சாய சித்தார்த்தங்கள் இந்திய சிறிலங்கா இராணுவ /அரசியல் துணைக்குழுக்களாயிருந்து களன்று போச்சு. திருப்பி கஸ்ரப்பட்டு பூசிய சாயமும் தீபத்திலும் வன்னியன் பூட்டிலும் கரைஞ்சிட்டுது. உங்களின் அப்பட்டமான பின்னனியின் உண்மையை சொன்னால் சாயபூச்சோ! அம்மணமாயிட்ட தாங்கள்தான் அவசர அவசரமாக மீண்டும் உங்களிற்கு தமிழ் தேசீய சாயம் பூசிகிறீர்கள்.
    // நாபா ஒரு எளிமையான தலைவர்//
    ஆம் நாபா இந்திய சேவகம் செய்ய ஈழத்தமிழரின் உயிரையும் வாழ்வையும் பறித்த ஈனர்களின் தலைவர். இந்திய கொடுத்த கூலிப்பணத்தை மலையாளிக்கு கொடுத்திட்டு நம்பிப் போன ஈனர்களை பட்டினி போட்ட எழியவர்தான்.
    //ஆனால் சில தத்துவ ஆசிரியர்கள் போதையர் என்பது உங்களுக்கு தெரியும்.//
    தான் அப்பப்ப போதை போடுவதை பகிரங்கமாக ஒத்துக்கொண்ட நேர்மையாளர்!

    • மகேன் மாசில் says:
      15 years ago

      நிர்மலன்
      புலிகளுக்கு வேலை செய்த பலர் பணசுருட்டலுடன் ஒதுங்கி விட்டனர் அவர்களை யாராவது அடையாளப்படுத்தினீர்களா?
      இந்த வகையான கேள்விகள் வேண்டுமென்றே தவிர்க்க படுவதன் நோக்கம் என்ன?

      உங்களின் இரண்டு கேள்விகளுக்கும் பதிலளிப்பதானால் ஒரு விரிவான் அரசியல் வ்குப்பெடுக்க வேண்டும். ஆனால் எனக்கு அவர்களவு அரசியல் அறிவு கிடையாது இருப்பினும் முடிந்தளவு விபரமாக அடுத்த பின்னூட்டத்தில் முயற்சிக்கிறேன்.

      • நிர்மலன் says:
        15 years ago

        புலிகள் அமைப்பிலிருந்து தமிழ்தேசீயத்திற்கு எதிராக செயற்பட்டவர்களை நான் விமர்சிக்காது விடவில்லை. என்ன அவர்கள் இப்போ முற்றுமுழுதாக மகிந்தா சேவகர்களாய் மாறி தமிழ்தேசீயத்தை அப்பட்டமாக எதிர்க்கிறார்கள். இனி அந்தஈனர்களை பற்றி பேசி என்ன பயன்!
        ஆதாரம்.நிர்மலன்
        Posted on 07/01/2011 at 9:17 am
        ஈழத்தமிழரில் சிங்களகைக்கூலிகள் தாரளமாக இருப்பதை போல் புலிகளிலும் மாத்தையா கருணா கேபி இராகவன் இருந்தார்கள். இன்னும் இருப்பார்கள்.

        • மகேன் மாசில் says:
          15 years ago

          இல்லை நிர்மலன் ஊருக்கு தெரிந்த கருணா , கே.பியை அல்ல நான் குறிப்பிடுவது.
          உங்களுக்கு தெரிந்து இன்னும் முக மூடிகிழிக்கபடாமலிருக்கும் முன்னாள் —— புரியவில்லையா தனவான்கள் ,வாகனக்காரர், சீவகசிந்தாமணிகள் ……………………………………………….

  34. thurai says:
    15 years ago

    தமிழீழ விடுதலைப்புலிகளென்பது தமிழினத்தினை அழிவிற்கு அழைத்துச் செல்லும்
    ஒரு கொடியநோய். இந்த நோய் இலங்கையில் தமிழரை விட மற்ர
    இனங்களிற்கும் தீங்கானதினால் இலங்கை அரசால்ழிக்கப்ப்ட்டு விட்டது. புலம்பெயர்நாடுகளில் வாழும்த்மிழர் தமது சொந்தநாடகா எந்தநாட்டையும்
    ஏற்பதில்லை. வாழும்நாடுகளிற்கு விசுவாசமுமில்லை(குறிப்பிட்ட சிலர்).
    இதனால்புலிகளினால் புலம் பெயர் தமிழர் சமூகம் அவப்பெயர்வாங்குவதை
    தடுப்பதற்கே புலி எதிர்ப்பாளர் முனைகின்றனர். இலங்கைத்தமிழர்களிற்கு
    இதனால் எந்த கெடுதியும் வரப்போவதில்லை.

    இங்கிலாந்தில் அனைவரும் ஆங்கிலம் பேசினாலும் எல்லோரும் ஆங்கிலேயர் அல்ல. இதே போல்தான் தமிழை எல்லோரும்பேசினாலும் ஒரு சமூகமாக
    எங்கும் வாழ்வதில்லை. இவ்வாறு உண்மைநிலையிருக்க உலக்மெல்லாம் வாழும்தமிழ் பேசுமெல்லோரும் தமிழினமென்றும், இவர்களிற்கு பகைவர் சிங்களவ்ர் என்றும்
    .ஒரே வழி தனிநாடென்பதும் உலகினை ஏமாற்ரி வாழும் ஒரு தனிப்பட்ட சமூகத்தினரின் பயங்கரவாத நடவடிக்கையேயாகும். இதனை மறைக்க எத்தனை பேரை துரோகியாக்கி கொலைகள் செய்தார்கள். ஒரு அறையில் இருந்து இருவர் பேசி முடிக்கும் அர்சியல் பிரச்சினையை உலகெங்கும் கொண்டோடித்திரிந்து
    போட்டுடைத்தவர்களே இனியாவது ஓய்வெடுப்பீர்களா?-துரை

  35. பரதேசி says:
    15 years ago

    இலங்கைத் தீவை மட்டுமல்ல உலக அரசியலையே மாற்றப்போகும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை மிகச்சாதாரணமாக கருதும் தமிழர்களை நினைத்து அழுவதா அல்லது சிரிப்பதா. அந்தக் கடற்கரை மணலில் எமது மக்கள் சிந்திய கண்ணீரையும் குருதியையும் சாதாரணமாக எடை போடும் அறியாமையை என்ன சொல்வது. அந்தக் கண்ணீரும் குருதியும் எல்லா அரசியலையும் மாற்றும். காலம் சரியான தீர்ப்பை எழுதியே தீரும்.

    • thurai says:
      15 years ago

      அந்த மக்களின் கண்ணீருக்குக் காரணம் உலக் அரசியலல்ல உலகத்தமிழ்ரகளின்
      நடவடிக்கைதான் என்பதை இன்ன்மும் புரியவில்லையா? -துரை

      • பரதேசி says:
        15 years ago

        நீங்கள் புரிந்து கொள்ளாதது போல் இருப்பதும் புரியும். சிறிது காலம் பொறுங்கள்.

  36. தயா says:
    15 years ago

    தேவன்2 அவர்களே!
    எல்லா அமைப்புகள் பற்றி சொல்லும் நீங்கள் ஏன் என்.எல்.எவ்.டி பற்றி சொல்லவில்லை?

    • Thevan 2 says:
      15 years ago

      வணக்கம் தயா!

      நல்ல முயற்ச்சி எங்காவது எப்படியாவது கொண்டையை கட்டியே விட்டு விடுவீர்கள்.
      ஏன் ?

      என் கருத்துகளில் இருக்கும் தவறுகளை கண்டு திருத்தியதிட்கு நன்றி தயா(? )

      எனக்கும் தான் தயா! மண்டையே வெடிச்சிடும் முத்திரை குத்த விட்டால்.

  37. தயா says:
    15 years ago

    தேவன்2 அவர்களே!

    என்.எல்.எவ்.டி பற்றி சொல்லவும்.!

  38. Thevan 2 says:
    15 years ago

    என் கருத்துகளில் இருக்கும் தவறுகளை கண்டு திருத்தியதிட்கு நன்றி தயா(? )

    எனக்கும் தான் தயா! மண்டையே வெடிச்சிடும் முத்திரை குத்த விட்டால்.

  39. Bharathi says:
    15 years ago

    தயா,
    இப்படியே போனால், ரெலி, டெலா, ஈலோ, ரெலோ, என்று 40 வரையன இயக்கங்கள் இருந்தன. நீங்கள் என்.எல்.எப்.டி பற்றி மட்டும் ஏன் கேதிறீர்கள்? அதற்கு மட்டும் என்ன முக்கியம் என்று சொன்னால் தேவன் 2 மட்டுமல்ல நானே அதப்பற்றியும் சொல்கிறேன்.

    • Thevan 2 says:
      15 years ago

      நிரமலனின் கூற்று
      “அனைத்து தேசீய இயக்கங்களென … 5 இயக்கங்களே முக்கியமாக கொள்ளப்பட்டது. புளொட் ரெலோ ஈரோஸ் ஈபீஆர்எல்எப் புலிகள். இதில் ரெலோவும் புலிகளும் மக்கள் போராட்ட சிந்தாந்தம் பேசியவர்கள் அல்ல”
      சம்பந்தமான எனது கருத்துப் பரிமாற்றத்தில் நான் ஏன் NLFT ,பற்றிக் கூறவில்லை என்ற நியாயமான கேள்வி (?) தான் தயா முன் வைப்பது .

      பதில் வேறு எதிர் பார்க்கிறார் , கோபமும் வருகுது தயாவிட்கு

  40. தயா says:
    15 years ago

    பாரதி அண்ணை, நியாயம் தான். ஏன் எனில் என்.எல்.எப்.டி யினர் தங்களை மற்றவர்க்ளிடம் இருந்து சித்தாந்தரீதியாகவும், கோட்பாட்டுரீதியாகவும் மேலானவர்களாக காட்ட முனைந்தால் தான் கேட்கிறேன்.

    • Thevan 2 says:
      15 years ago

      அதையேன் என்னிடம் கேட்கிறீர் தயா?

      நல்ல முயற்ச்சி எங்காவது எப்படியாவது கொண்டையை கட்டியே விட்டு விடுவீர்கள்.
      ஏன் ?

      என் கருத்துகளில் இருக்கும் தவறுகளை கண்டு திருத்தியதிட்கு நன்றி தயா(? )

      எனக்கும் தான் தயா! மண்டையே வெடிச்சிடும் முத்திரை குத்த விட்டால்.

  41. Bharathi says:
    15 years ago

    என்.எல்.எப்.ரி இடதுசாரியம் பேசிய இயக்கங்களுள் ஒன்று.  இடதுசாரியம் பேசிய இயக்கங்களுக்குள் ஈ.பி.ஆர்.எல்.எப் என் ஆரம்பப்பகுதி ஒப்பீட்டளவில் வர்க்கசார்பானதாக இருந்தது. என்.எல்.எப்.ரி போன்ற குழுக்களுக்கு மக்களை அணிதிரட்ட எந்த வழிமுறைகளையும் வைத்திருக்கவில்லை. அதே வேளை புலிகள் போன்ற தீவிரக் குழுவாத அமைப்பாகவே காணப்பட்டது. 
    தயா, உண்மையிலேயே அரசியல் ரீதியாகக் ஏதையாவது சாதிக்கலாம் என்றநோக்கம் இருந்தால் மட்டும் இந்த இயக்கத்தைப் பற்றிக் கூறுங்கள்.

  42. yahthavan says:
    15 years ago

    யார் தேசிய வாதிகள் என்று கேள்வியெழுப்பி யார் தேசிய வாதிகள் இல்லை என்று மட்டும் சொல்லி இருக்கீங்க. அப்ப யார் தேசிய வாதிகள்?

  43. yahthavan says:
    15 years ago

    இன்னொரு கேள்வி, சீமான் தேசிய வாதியா இல்லையா?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...