Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

மிடில் கிளாஸ் மாஸ்டர்கள் –கே.வி 

இனியொரு... by இனியொரு...
02/05/2021
in பிரதான பதிவுகள் | Principle posts, இந்தியா
0 0
0
Home பிரதான பதிவுகள் | Principle posts

தில்லி டிராக்டர் பேரணிக்குப் பின் போலீசார் உருவாக்கியிருக்கும் தடுப்பு அரண்களை பார்த்தேன் . பேரிகேட்களை குறுக்குவாட்டில் ரோட்டில் அடுக்கி கான்கிரீட் கலவை ஊற்றியிருக்கிறார்கள் .பல வரிசை கான்க்ரீட் தடுப்புகள் .கூரான ஆணிகள் பதித்த இரும்புப் பட்டைகளை ரோட்டில் பதித்திருக்கிறார்கள் . சுருள் முள் கம்பிகள் , போலீசாருக்கு லோக்கல் பட்டறை மேட் இரும்புத்தடி ஆயுதங்கள் .

இது ஏதோ குற்றங்கள் மலிந்த ,கேங்வார் நடக்கும் டிஸ்டோப்பியன் நகரம் ஒன்றை நினைவுறுத்தியது .

போலீசார் தரப்பில் மேலோட்டமாக பார்த்தால் இதற்கான நியாயங்கள் இருப்பது போல தோன்றலாம் . ஆனால் இதன் பின் இருக்கும் மனநிலையை யோசித்து பார்த்தால் பகீரென்கிறது. இது பிராக்டிகலாக பயன் உள்ளதா இல்லையா என்பதல்ல கேள்வி , இது விடுக்கும் செய்தி என்ன என்பது தான் நாம் யோசிக்க வேண்டியுள்ளது.

அதாவது விவசாயிகள் ஆபத்தானவர்கள் , காட்டுமிராண்டிகள் , எதிரிகள் , தூரத்தில் வைக்கப்பட வேண்டியவர்கள் .அவர்கள் வேறு அரசு வேறு என்று அடையாளப்படுத்தும் மனநிலை . இவ்வித நடவடிக்கைகளில் இருக்கும் ஒரு கீழ்மையான அவமதிப்பு அரசுக்கு புரியவில்லை . போராடும் விவசாயிகள் மீதான அடிப்படை மரியாதை இல்லாத கண்ணியமற்ற அணுகுமுறை இது .

இது ஏன் நிகழ்கிறது ?

நம் பண்பாட்டில் ஊறிப்போயிருக்கும் பாகுபாடு காட்டும் வழக்கம் என்பதன் வேறொரு மாதிரிதான் இது . நாம் பாகுபாடு என்ற உடனே சாதிய பாகுபாடு என்பதையே மனதுள் உருவகிப்போம் . ஆம் அது தான் மையமானது ஆனால் அது உருவாக்கும் இந்த பாகுபாட்டு சார்ந்த மனநிலை சாதியையும் கடந்தது . Caste is a structure , discrimination is a practice.

மனிதர்களை சமமான மரியாதை கொண்டவர்களாக நடத்தும் வழக்கம் நம் பண்பாட்டில் உருவாகவே இல்லை, அந்த எண்ணமே நம் சிந்தனை முறைக்கு அன்னியமானது. அங்கிருந்து கொண்டு நவீன ஐனநாயக வழுமியங்கள் நோக்கி வர நாம் தடுமாறிக் கொண்டிருக்கிறோம் . முதலில் வேறுபாடாக அடையாளப்படுத்தியது மெல்ல திரிந்து பாகுபாடாகிறது , பாகுபாடு என்பது பின் கீழ் மேலாக graded ஆக அடுக்கப்படுகிறது.

“Differentiate ,Distance , Discriminate , Demonize ”

இதன் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு குழுவை அல்லது ஒரு அடையாளத்தை மையத்தை விட்டு வெளி தள்ளிக்கொண்டே இருக்கிறோம்.இப்படி எவ்வளவு தூரம் ஒரு குழுவை நாம் வேறுபடுத்தி , பாகுபாடு காட்டி நம்மிலிருந்து தூர வைக்கிறோமே அவ்வளவுக்கு அவர்களின் மேல் நாம் மெல்ல மெல்ல empathy ஐ இழக்கத் துவங்குகிறோம் .

வெறுப்பும் ,அருவருப்பும், indifference உம் அந்த இடைவெளிகளை நிரப்ப ஆரம்பித்துவிடுகிறது . ஒரு கட்டத்தில் அவர்களை தீமையின் உருவமாகவே உருவகித்துக்கொள்ள ஆரம்பிக்கிறோம் .

மரபான சாதிய அடையாளத்தை முன்வைத்து தான் இந்த பாகுபாடு கட்டமைக்கப்பட வேண்டும் என்பதில்லை.ஜெய் ஸ்ரீராம் , தேசப்பற்று , ஒரே தேசம் , வல்லரசு , மரபின் மூர்க்கம் போன்றவை எல்லாமே நவீன உயர் சாதியாக கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.மாறாக ஆண்டி இந்தியன் , அர்பன் நக்ஸல் , காலிஸ்தான் விவசாயி, பிர்ஸ்டிடியூட், பிராந்தியவாதம் என்பதெல்லாம் நவீன தாழ்த்தப்பட்ட சாதிகள். அவ்வாறு தான் இன்று அவை நம் popular narration ஆல் கட்டமைக்கபடுகிறது

சில மாதங்களுக்கு முன்பு வரை நாட்டுக்கு உணவளிக்கும் இனமாக , இந்திய ராணுவத்தின் முதுகெலும்பாக , சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாக , மாடல் இந்தியனாக நாம் கொண்டாடிய பஞ்சாபியர்கள் இன்று திடீரென்று காலிஸ்தான் தீவிரவாதிகளாக , தேச துரோகிகளாக , கோடாலிக்காம்பாக மாறியிருக்கிறார்கள்.

இப்படி சாதிய இயங்கிலை நவீன ஜனநாயக கருத்தியல் செயல்பாட்டின் மீது superimpose செய்தது தான் பாரதிய ஜனதா கட்சியின் பெரும் சாதனை என்று சொல்லலாம். அதனால் தான் இங்கு ஜனநாயக செயல்பாட்டில் தகவல் சார்ந்த அறிவார்ந்த விவாதங்கள் நிகழ்வதில்லை , இங்கு உரையாடல் என்னும் வடிவில் நிகழ்ந்துகொண்டிருப்பது discrimination என்பதன் நவீன வடிவம் தான்.

இங்கு அதிகார மையம் செய்ய வேண்டியது ஒன்றே . யார் யார் “என்ன சாதி” என்று முத்திரை குத்துவதை மட்டும் செய்தால் போதும் இந்த நவீன சாதிய மனநிலை அதை தன்பாட்டுக்கு ஏற்கவோ எதிர்க்கவோ ஆரம்பித்துவிடும், தரவுகளோ , விவாதங்களோ ,அற அடிப்படைகளோ தேவையில்லை.

தேசப்பற்று இருக்கும். நாடு முக்கியம் , நாடு முன்னேற வேண்டும் , செழிப்பாக இருக்கவேண்டும் வல்லரசு ஆக வேண்டும் , மரபு பேணப்பட வேண்டும் என்றெல்லாம் கனவு இருக்கும் .ஆனால் நாட்டு மக்கள் நலன் என்று வரும்போது இந்த தேசப்பற்று என்பது காணாமல் போய்விடும் , திருதிருவென விழிப்பார்கள் . தேசம் வேறு மக்கள் வேறு என்றாகிவிடும் .இது தான் இந்திய மிடில் கிளாஸ் மெண்டாலிட்டியின் ஆதார கட்டமைப்பு .

சச்சின் டெண்டுல்கர் போன்றோர் அந்த மிடில் கிளாஸ் மெண்டாலிட்டியின் மனசாட்சிகளே .

நானும் சச்சின் ரசிகன் தான் , ஆனால் விவசாயிகள் போராட்டம் குறித்த அவரின் கருத்து ஆச்சரியமளிக்கவில்லை , வருத்தமாக இருந்தது . சச்சின் மேல் கோபப்படுவதில் பிரயோஜனம் இல்லை. அவரிடம் ஏன் இப்படி சொல்கிறீர்கள் இதை விளக்க முடியுமா என்றெல்லாம் கேட்டால் அவருக்கு தெரியாது . அவர் இப்பொது தேசப்பற்று சாதியின் ஒரு மெம்பர் , தேசவிரோத சாதி என்று உருவாக்கி அளிக்கப்பட்ட லேபிளின் மீது தனது discriminatory view ஐ கண்ணியமாக வெளிப்படுத்துகிறார் அவ்வளவுதான்.

அதனால் தான் வெளியிருந்து பார்ப்போருக்கு – இரண்டு மாதங்களாக லட்சக்கணக்கான விவசாயிகள் வீதியில் இறங்கி ஒரு sustained protest நிகழ்கிறது இது பெரிய விஷயம் அதில் எப்படியும் ஒரு தார்மீக நியாயம் இருக்கும் என்று தோன்றுகிறது. ஆனால் அதே விஷயம் உள்நாட்டில் இருந்து கொண்டு , போராட்ட நிகழ்வுகளுக்கு அணுக்கமாக இருந்தாலும் , இந்த disrcriminatory கதையாடலுக்குள் இருந்து பார்க்கும் ஒருவருக்கு புராபகேண்டா தேசவிரோதம் என்று தோன்றுகிறது .

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
பேரினவாத பாசிஸ்டுக்களுக்கு எதிராக பொத்துவில் முதல் பொலிகண்டிவரை: புதிய அரசியலுக்கான நுளை வாசல்

பேரினவாத பாசிஸ்டுக்களுக்கு எதிராக பொத்துவில் முதல் பொலிகண்டிவரை: புதிய அரசியலுக்கான நுளை வாசல்

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In