Thursday, April 30, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

மாவீரர் தினம் : புதிய திசைகள்

இனியொரு... by இனியொரு...
11/20/2011
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
5
Home பிரதான பதிவுகள் | Principle posts

இலங்கை அரச பேரினவாதத்திற்கு எதிரான தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டத்தில் முற்றிலும் மாறுபட்ட புதிய சிக்கல்கள் நிறைந்த காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பேரினவாதத்தின் ஒடுக்குமுறை அதன் கட்டற்ற உச்சவடிவத்தை தொட்டிருக்கிறது. ஆக்கிரமிப்பு, இனப்படுகொலை, இனச்சுத்திகரிப்பு என்ற அத்தனை மனித விரோத செயற்பாடுகளதும் மொத்த உருவமாக சிங்கள பவுத்த பேரின வாதம் தனது பயங்கரவாதத்தை மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளது. தமிழ் தேசிய விடுதலைப் போரில் பிரதான பங்கு வகித்த ஆயுதப் போராட்ட வடிவத்தை முற்று முழுதாகத் தோற்கடித்த பின் அவலங்களும் அழிவுகளுமே தாயகத்தில் தேங்கி நிற்க, இலங்கை பேரினவாத அரசின் இரத்தம் படிந்த கோரக் கரங்கள் புலம் பெயர் நாடுகள் வரை நீட்சியடைகின்றன.

இலங்கை அரசினால் நன்கு திட்டமிடப் பட்ட செயற்பாடுகளின் விளைவாக, உலகெங்கும் ஒடுக்கு முறைக்கு எதிரான மக்கள் குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்க, நாமோ எமக்குள் மேலும் மோதல்கள் மூலம் உணர்வுபூர்வமான புலம் பெயர் மக்களை நம்பிக்கையீனத்திற்கு தள்ளி விடும் ஆபத்தை எதிர் நோக்குகிறோம்.

ஒரு நாட்டை ஆக்கிரமிப்பில் இருந்து காப்பாற்றுவதற்காக, சொந்த தேசத்தின் மீதான ஒடுக்குமுறையில் இருந்து விடுதலை பெறுவதற்காக, ஒடுக்கப்படும் சுரண்டப்படும் மக்களின் விடிவிற்காக என்று ஈகம் செய்யப் படும் போற்றத்தக்க உயிர் தியாகங்கள் உலகவரலாற்றில் பதியப்படுகிறது. பேரினவாதத்திற்கெதிரான தமிழ் மக்களது தேசியவிடுதலை போராட்டம் சமூக வரலாற்றில் ஒரு முற்போக்கு பாத்திரத்தை வகிக்கும் நிகழ்வாகும்.

ஒடுக்கு முறைக்கு எதிரான வீரம் மிக்க போராட்டங்களில் தம்மை இணைத்துக்கொண்டவர்கள் அனைவருமே, அவர்கள் புலிகள் இயக்கத்தைச் சார்ந்தவர்களானாலும், ஏனைய அரசியல் வழிமுறைகளை முன்வைத்த இயக்கங்களைச் சார்ந்தவர்களானாலும் போராளிகள் என்ற தியாகக் குறியீட்டைப் பெறுகிறார்கள். இந்த வகையில் ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராடி தம் உயிரைத் தியாகம் செய்த அனைத்துப் போராளிகளுக்கும், மக்களுக்கும் நமது வீர அஞ்சலிகளைச் சமர்ப்பிக்கின்றோம். போராட்ட வழிமுறை தவறுகள், அகமுரண்பாடுகளுக்கு அப்பால் வடகிழக்கு தமிழ் மக்களின் தேசியவிடுதலை போரில் சமரசமின்றி இலட்சியத்தில் உறுதியுடன் போராடி மடிந்த அனைத்துப் போராளிகளையும் நாங்கள் நினைவு கூருவோம். போராளிகள் தினமென்பது சோகம் கொண்டாடி அனுதாபம் பெறும் தினமாக அர்த்தப் படுத்திக் கொள்ளப் படாமல் மறைந்த போராளிகளுக்கு வணக்கம் செலுத்தி போராட்டத்தை மேலும் முன்னோக்கி உந்திச் செல்ல உறுதி எடுத்துக் கொள்ளும் நாள் என்பதை மனதில் நிறுத்துவோம்.

இலங்கை அரச பாசிச ஒடுக்கு முறைக்கு எதிராக ஒன்றிணைய வேண்டிய நாம் “மாவீரர்கள்” எல்லாம் புலிகள் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் என்ற வரம்பை அமைத்துக்கொண்டு ஏனையோரை அன்னியமாக்கியிருக்கிறோம். தமது சொந்த நலன்களுக்காக தலைமை, புனிதம் என்ற கருத்தியல்கள் மூலம் துரோகி என்றொரு சாதியை உருவாக்கி, தமது தலைமைக்கு சார்பல்லாத அனைத்துப் போராளிகளையும் அன்னியப்படுத்தி அவர்களின் தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும் கொச்சைப்படுத்தியதன் பாதகமான பக்க விளைவுகளினாலேயே, எமது ஆயதப் போராட்டம் எமது எதிரிகளால் தந்திரமாகக் கையாளப் பட்டு வெற்றி கொள்ளப் பட முடிந்தது.

எம்மக்கள் மேல் கட்டமைக்கப் பட்ட “புனிதம்” என்ற கருத்தியல்களை மீளாய்வு செய்யக் கூடியவர்கள்; தலைமைகளுக்காக,ஒரு அணிக்காக அன்றி தமிழ் ஈழ மக்களின் விடிவிற்காக மட்டுமே இவ்வளவு அர்ப்பணங்களும் தியாகங்களும் என்பதை முன் நிறுத்தக்கூடியவர்கள் இவ்வாறான தேசிய எழுச்சி நிகழ்வுகளை தலைமை தாங்குவது வரலாற்றுத் தேவையாகிறது.

புலம்பெயர் தேசங்களில், இவ்வருடம் அரசியல் வியாபாரிகள் அப்பட்டமாகவே தமது கோர முகத்தைக் காட்டத் தொடங்கியுள்ளார்கள். இதுவரை காலமும் மற்றவர்களைத் துரோகிகள் என்று அன்னியப்படுத்தியவர்கள் இம்முறை வியாபாரக் கணக்கு, செல்வாக்குப் பலப் பரீட்சை என்று தமக்குள்ளேயே மோதிக்கொள்கிறார்கள். விடுதலையை மட்டுமே நோக்காகக் கொண்டு சமூக வரம்புகளைக் கடந்து போராடுவதற்காக முன்வந்த போராளிகளை இந்த வியாபாரிகள் கொச்சைப்படுத்துகிறார்கள்; அவமானப்படுத்துகிறார்கள்; கேவலப்படுத்துகிறார்கள்.

எமது தேசத்தின் விடுதலைக்காகப் போராடிய அனைத்துப் போராளிகளினதும் தியாகங்கள் எம்மால் போற்றப் படவேண்டியவை. இதை நாங்கள் எந்த வியாபாரிகள் கைகளிலும் விட்டுவிடமுடியாது. மாயைகளில் இருந்து விடுபடுவதும், எமது வளர்சியை தடுக்கும் எதிரியின், துரோகிகளின் ஆயுதமும் அதுதான் என்பதையும் உணர்ந்துகொள்வோம். உலகில் உரிமைக்காக, விடுதலைக்காக போராடும் மக்கள்; இலங்கையில் ஒடுக்கப்படும் சக சிறுபான்மையின மக்கள்; எமது உரிமைக்கு குரல் கொடுக்கக் கூடிய சிங்கள மக்கள்; தமிழ் நாட்டு மக்கள் எமது நண்பர்கள் என்பதை நினைவில் கொள்வோம். இந்த நிலையில் எதிர்காலத்தை நோக்கிய புதிய பயணம் நண்பர்களையும் எதிரிகளையும் இனங்காண்பதிலிருந்தே ஆரம்பமாகும்.

நன்றி
புதிய திசைகள்

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடு! வழக்கறிஞர்கள் போராட்டம்!

Comments 5

  1. mamani says:
    14 years ago

     என்ன சொன்னாலும் தேசிய தலைவரின் கீழ் பணியாற்றிய துரோகிகளிடமும்
    வியாபாரிகளிடம் மட்டும்தான்  நாம் ஏமாறுமோவே தவிர உங்களை போன்ற மாற்று கருத்தாளரின் கருத்து எமக்கு தேவையில்லை-   புலம் பெயர் புண்ணாக்குகள்

  2. நெருஞ்சி says:
    14 years ago

    தேசிய இனம்,சுயநிர்ணய உரிமை என்பன தீண்டத்தகாத வார்த்தைகள் ஆன பின், “ஒடுக்குமுறைக்கெதிரான” என்ற வார்த்தைஜாலம் எதற்கு?
    நேற்றுக்கூட பாலஸ்தீனர்கள்,கொலைவெறி தேசத்தில் வந்து,
    “கட்ட சம்பலும் கிரிபத்தும்” சாப்பிட்டுவிட்டுப் போகிறார்கள்.
    இல்லாததை இருப்பததாகக் காட்டுதல்தான் புதிய திசையா?

    ஆட்டக்காரர் தவறு விட்டா,அதைப்பிடித்து வைத்து,வாராது வந்த மாமணி போல்,அறிக்கை ஒன்றை அவிட்டு விட்டுட்டு,
    அப்படியே அயர்ந்து தூங்கி விட வேண்டியதுதான்.
    அப்போ மக்கள்,கூத்தாடிகளின் பின்னேதான் குவிந்து நிற்பார்கள்.

  3. siva says:
    14 years ago

    இலங்கை பேரினவாத அரசின் இரத்தம் படிந்த கோரக் கரங்கள் புலம் பெயர் நாடுகள் வரை நீட்சியடைகின்றன.எமது தேசத்தின் விடுதலைக்காகப் போராடிய அனைத்துப் போராளிகளினதும் தியாகங்கள் எம்மால் போற்றப் படவேண்டியவை. இதை நாங்கள் எந்த வியாபாரிகள் கைகளிலும் விட்டுவிடமுடியாது.தமிழ் ஈழ மக்களின் விடிவிற்காக மட்டுமே இவ்வளவு அர்ப்பணங்களும் தியாகங்களும் என்பதை முன் நிறுத்தக்கூடியவர்கள் இவ்வாறான தேசிய எழுச்சி நிகழ்வுகளை தலைமை தாங்குவது வரலாற்றுத் தேவையாகிறது
    விடுதலையை மட்டுமே நோக்காகக் கொண்டு சமூக வரம்புகளைக் கடந்து போராடுவதற்காக முன்வந்த போராளிகளை இந்த வியாபாரிகள் கொச்சைப்படுத்துகிறார்கள்; அவமானப்படுத்துகிறார்கள்; கேவலப்படுத்துகிறார்கள்

  4. Indran says:
    14 years ago

    மாவீரர் தின நிகழ்வுகளுக்குச் செல்ல விரும்புவோர் இனிமேல் இந்த வியாபாரிகளுக்கு வருமானம் தரக் கூடிய எதையும் கொள்வனவு செய்யாமல் விட்டால் காலப் போக்கில் இந்த வியாபாரிகள் ஒதுங்கிக் கொள்வார்கள்.

  5. nada kannan says:
    14 years ago

    we need a common day to remember every freedom fighters under one roof.  LTTTE has marveerar day, PLOT has veeramakkal day and EPRLF  has thiyagigal day..so it should very right to find a common day and common label to remember all the freedom fighters..hope leaders from all sects will sit together and sort this problem soon .further we need to find a right flag which sympolizes Thamils in Eelam

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...