Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

மாபலி விருந்து அழைப்பு!- மாலதி மைத்ரி

இனியொரு... by இனியொரு...
06/03/2010
in அரசியல்
0 0
21
Home அரசியல்

ஆன்றோரே சான்றோரே
பேரரறிஞர்களே மூதறிஞர்களே
கவிஞர்களே கலைஞர்களே
அரசு ஊழியர்களே
என் உயிரினும் உயிரான தமிழர்களே
நாம் சுவாசித்தது ஒரே காற்று
நாம் பேசியது ஒரே மொழி
நாம் நடத்தியது ஒரே பேரம்
நாம் விதித்தது ஒரே விலை
நாம் விற்றது ஒரே இனம்
காட்டிக்கொடுக்க நீண்டதும்
நம் ஒரே விரல்
நாம் செய்ததும் ஒரே துரோகம்
இம்மாபெரும் வரலாற்றை
நாம் சாதித்த ஓராண்டின் நிறைவைக்
கொண்டாடும்
விருந்துக்கு அழைக்கிறேன்
உலகே தமிழ் மண்ணில் திரளட்டும்
விரோதி வருடம்
சித்திரை ஐந்தாம் நாள்
வங்கக் கடல் தீவில்
சிங்கப் படைகள்
சில லட்சம் மக்களைக் கொன்றொழித்து
சீர்மிகு வரலாறு படைத்த
மாபலி நாளின்
மாண்பினைப் போற்றும் வகையில்
இச்சித்திரை மாதம்
பௌர்ணமி தினத்தில்

மனிதகுலமே கண்டிராத வகையில்
மாபெரும் விருந்து நடக்கிறது
அனைவரும் கலந்துகொண்டு
விருந்தினைச் சிறப்பிக்குமாறு அழைக்கிறோம்
அறுக்கப்பட்ட மென்முலைகள்போன்ற
இட்லியுடன் பிள்ளைக்கறி பிசைந்த
செவ்வரிசிச் சோறு
மதுவருந்தும் கவிஞர்களுக்கு மட்டும்
நுரை பொங்கும் செங்குருதியுடன்
மூளை வறுவல் வழங்கப்படும்
இதிலுள்ளவை தவிர்த்து
சிறப்புணவு தேவையெனில்
மூன்று தினங்களுக்கு முன்
எங்கள் கவனத்துக்குக் கொண்டுவந்தால்
தீவிலிருந்து
தனி விமானத்தில்
தருவித்துத் தர ஏதுவாக இருக்கும்
உலகச் சமூகமே வியந்து நிற்க
உலகத் தமிழர்கள் ஒன்றாய் நின்று
இப்பலி விருந்தைச் சிறப்பிக்கும்படி
கேட்டுக்கொள்கிறேன்.

இவ்விருந்தை வழங்குபவர்கள்

ஹைடு அண்ட் சீக் வேர்ல்டு விஷன்
ஹனி டியூ அண்ட் ஸ்பிரிங் பிரிவரிஸ்,
ஆன்ட்டி வார் அண்ட் பீஸ் ஹன்டர்ஸ்,
வேர்ல்டு நைட்ரோ கெமிக்கல்ஸ்,
இன்டர்நேஷனல் வார் கிரிமினல்ஸ் அசோஸியேஷன்.

குறிப்பு: தவிர்க்க இயலாத காரணத்தால் ஆங்கிலத்திலேயே அயல் நாட்டு நிறுவனங்களின் பெயர்கள் அச்சிடப்பட்டு உள்ளன. இதைப் பிழையாகக் கருதி தமிழ்ப் பற்றாளர்கள் விருந்துக்கு வராமல் இருந்துவிடக் கூடாது. இது எங்கள் அன்புக் கட்டளை!

(நன்றி-ஆனந்த விகடன்)

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

கொழும்பு சென்றுள்ள நடிகர் நடிகைகளுக்கு எச்சரிக்கை.

Comments 21

  1. rajjathi says:
    16 years ago

    நிச்சயமான இந்தக் கவிதையை பெரியவர் சிவத்தம்பி படிப்பார் என நினைக்கிறேன். வெள்ளை உடை அணிந்து தமிழ் ஆசிரியார்களாகவும் மதிக்கத்தக்க அய்யாக்களாகவும் பார்த்த நமக்கு தமிழ் கற்றுக் கொடுத்தவர்கள். இப்படியான விருந்தும் ரத்த உணவு உண்ணச் செல்லக் கூடாது என்பதே விருப்பம்…. அதுதான் இன்றைய இலங்கை, இந்திய, கூட்டுப் பாசிசத்திற்கான எதிர்ப்புமாகும்.

  2. அன்பன் says:
    16 years ago

    ஒரு மாபெரும் மக்கள் படுகொலையை மறைக்க கருணாநிதி நடத்தும் விருந்தை சரியான தருணத்தில் அம்பலப்பத்தியிருக்கிறார்..

    மாலதி……… இலக்கியவாதிகளும்,,, தமிழறிஞர்களும் நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு கருணாநிதி வீடும் எலும்புத் துண்டுகளுக்காக அணி வகுத்து நின்று துரோகிக்கு பட்டுக் குஞ்சம் கட்டும் போது இவர்களின் முகத்திரையைக் கிழித்திருக்கிறார் மாலது வாழ்த்துக்களும் மரியாதை கலந்த வணக்கங்களும்….

  3. satyan says:
    16 years ago

    great…super

  4. தீபச்செல்வன் says:
    16 years ago

    சரியான கவிதை. கருணாநிதி கம்பனிக்கு என்ன பூரியப்போகுது?

  5. CHEZHIAN says:
    16 years ago

    தமிழினத் துரோகி மாலதிமைத்ரி,
    செம்மொழி மாநாட்டை குழப்ப கிழம்பியிருக்கும் கூலிப்படையின் சதிதான் இந்த கவிதை.அன்று தண்டவாளத்தில் தலைவைத்து இன்று தமிழகத்தையே பெயர்த்தெடுத்துக்கொண்டிருக்கும் தமிழினத்தலைவனின் தியாகங்களை மறந்து இப்படி எழுதலாமா?தள்ளாத வயதிலும் தடுமாறும் நிலையிலும் ஈழத்தில் போர் நிறுத்தத்திற்காக காலை உணவுக்கும் மாதிய உணவுக்கும் இடையில் மாபெரும் உண்ணாவிரதம் இருந்த தலைவர் கூட்டும் மாநாட்டை கிண்டலடிக்கும் இக்கவிதையை வன்மையாய் கண்டிக்கிறேன்

  6. satyan says:
    16 years ago

    இந்த லூசு கோமாளியின் உண்மையான முகத்தை அம்பலப்படுத்துகிறது இந்தக் கவிதை. இந்த கிழ போல்டு– 87-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். தமிழகம் முழுக்க ஆடம்பர விழா.. மக்களுக்கு மின் சாரம் இல்லை. இந்தாளுக்கு பாராட்டு விழா நடத்த அத்தனை மின்சாரமும் வீணடிக்கப்படுகிறது……… பெரியாரும் திராவிட இயக்கமும் தோற்றது கருணாநிதியிடமே

  7. எஞ்சிக்கிடக்கும் எலும்புக்கூடு says:
    16 years ago

    நானும் ஒரு ஈழத் தமிழன் என்ற முறையில் கடைசிவரை நம்பியிருந்தோம் இந்தக் கிழவன் ஏதாவது செய்வார் என்று……கை விரித்து விட்டாரே !!!! இன்று தமிழீழம் சின்னாபின்னாப்பட்டு சிங்களனின் போர்வைக்குள் சிக்கித் தவிக்கிறது…பார்த்தும் பாராமலும் கறுப்புக் கண்ணாடியோடு சிரித்துக்கொள்கிறாரே…

  8. அண்ணா says:
    16 years ago

    ஒட்டு மொத்த தமிழகமுமே தன்னைப் பாராட்டிக் கொண்டிருப்பது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார் இந்தத் துரோகி…………..தமிழுக்கோ தமிழனுக்கோ திராவிடனுக்கோ எதுவுமே செய்யாத இந்த கருணா வின் ஆட்டுக்குட்டிகள் இந்தாளை புகழ்ந்து தள்ளுகிறது……. வடிவேலுவின் வார்த்தைகளில் சொன்னால் வாங்குன காசுக்காக ரொம்பவே கூவிக் கொண்டிருக்கிறார்கள். அடத் தூ…….. நீயும் ஒரு மனிதனா?

  9. மனிதன் says:
    16 years ago

    தமிழகத்தில் சிலர் பரபரப்புக்காக யோனி, கூதி என்று கவிதை எழுதி அதை பெண்ணியக் கவிதை என்று வெளியிடுகிறார்கள். பெண்ணின் வேதனைகளைப் பேசுவதற்கு அந்த வார்த்தைகளை பிரயோகிப்பதில் தவறில்லை என்றாலும்…. மார்க்ஸிய ஆசான்களை இழிவு படுத்தும் லீனா போன்றவர்கள் பரபரப்புக்காக எழுதுகிறவர்கள்தான். ஆனால் ஆளும் வர்க்கங்களை அண்டிப்பிழைப்பவர்களாக இருக்கிறார்கள். ஒரு வரி கூட ஆளும் வர்க்கங்களை கண்டிக்காத லீனா மாலதி மைத்ரி போன்ற அரசியல் கவிதை எழுதும் பெண்ணிய போராளிகளிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

  10. போராட்டம் says:
    16 years ago

    தக்க சமயத்தில் கூர்மையான கவிதையை எழுதியிருக்கிறார் மாலதி மைத்ரி. ராஜாத்தி குறிப்பிட்ட பெரியவர் சிவத்தம்பி மட்டுமல்ல, பல பெரியவர்களை முகத்திலறைகிற கவிதை. நன்றி மாலதி மைத்ரி.

  11. tamilan says:
    16 years ago

    good poem to tamil politician idiot. they leads the situvation there this like. a poet can only explain what happening the truth. keep it up. with sorrow by tamilan

  12. ஜமாலன் says:
    16 years ago

    சரியான சூழலில் வெளிப்பட்டிருக்கிறது இக்கவிதை.

  13. suagathy says:
    16 years ago

    very thought provoking poem.A dynamite

  14. suagathy says:
    16 years ago

    the poem doesn not discredit kalainyar past action,but the present…..malathi becomes a public intellectual….keep it up..

  15. டி.அருள் எழிலன் says:
    16 years ago

    சிறந்த அரசியல் கவிதை……… அதிகாரத்திற்கெதிராக உண்ம்களைப் பேசியிருக்கிறார் மாலதி வாழ்த்துக்கள்.

  16. yaazh athiyan says:
    16 years ago

    நுகர்வில் சுயமிழந்துபோன சமூகத்தின் இறுகிய மனத்தையும், வாழ்விருப்பின் மீதான கனிவில் ஏதும்செய்ய இயலாமல் உள்ளொடுங்கிப்போன மனிதத்துவத்தின் மரணத்தையும் போலிமைகளின் கானல்களையும் உரித்துக் காட்டி உயிர் கசியும் தருணங்களை உயிர்ப்பிக்கும் உயிர்க் கவிதை.

  17. அம்பேதன் says:
    16 years ago

    மாலதி மைத்ரியை வெறும் பெண்ணியம் மட்டும் வசதியாகப் பேசிக்கொள்ளும் கவிஞராகவே நினைத்திருந்தேன். மிகத் துணிவான கவிதை.
    கவிஞனின் கம்பீரமான சுயமரியாதை கூட இல்லாத முத்துக்குமார், வைரமுத்து, சு.ப. வீரபாண்டியன் மற்றும் யச்சூரி போன்றோரை அம்பலப்படுத்தும் வரிகள்.

    தமிழ் இலக்கியம் தமிழர்களின் அரசியல் உணர்வை தட்டியெழுப்பினாலன்றி நம்மிடம் அரசியல் விழிப்புணர்வு இனிச் சாத்தியமில்லை. காசு கொடுத்த அரசியல்வாதியை கண்டிப்பது மட்டுமின்றி, பல்லிளித்துக் கொண்டு உரிமையாகப் போய் கட்சிக்காரர்களிடம் கேட்டு காசு வாங்கிக்கொண்டு ஓட்டுப்போட்ட மக்களையும் பளாரென்று கன்னத்தில் அறையும் கவிதைகளும் வரவேண்டும்.

    சமீபத்தில் பழ.கருப்பையா என்கிற அ.தி.மு.க பிரமுகர், கட்டுரையாளர் செம்மொழி மாநாட்டை எதிர்த்து பேட்டி கொடுத்ததற்காக வீடு புகுந்து தாக்கப்பட்டார். உடமைகள் நொறுக்கப்பட்டன. “எங்க தலைவனை எதிர்த்து இந்த வாய்தானே பேசிச்சு?” என்று வாயிலேயே குத்தியிருக்கிறார்கள் ரவுடிகள். இதுதான் இன்றைய அதிகாரத்தின் கோரமுகம். மாலதி மைத்ரி அவர்களை பாதுகாப்பு கருதி கவனமாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

  18. M.S.vasan says:
    15 years ago

    என் உயிர் மேல் ஆசை இல்லை ஆனால் என் தமிழ் மேல் ஆசை எதாவது எழுதி கெடுக்காத

  19. M.S.vasan says:
    15 years ago

    வகையில் அமைந்தது உங்க கவிதை வாழ்த்தி பேச இது ஒன்ட்ரும் கவிதை அல்ல உள்ள குமுறல் எல்லாம் வல்ல இனறவனை வேன்டுகிறேன்

    • M.S.vasan says:
      15 years ago

      என் தமிழ் மக்கள் வாழ வழி தருவாயா இறைவா

      • p.s.nesan says:
        15 years ago

        தருகிறேன் மகனே,ஆனால் நீ நெற்றீயில் நீறூ பூசி உன்னை எனது பக்தனாய் காட்ட வேண்டும்.வெள்ளக்காரனாய் வேசம் கட்டி பம்மாத்து நாடகம் ஆடக் கூடாது செய்வாயா மகனே.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...