Monday, May 18, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

மலேஷியத் தூதரிடம் திருமா மனு.

இனியொரு... by இனியொரு...
05/04/2010
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

மலேஷியாவில் கைது செய்யப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் தொடர்பாக திருமா வெளியிட்டுள்ள அறிக்கை,மலேசியாவில் ஈழத் தமிழர்கள் மொத்தம் 75 பேர் பினாங்கு துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் சிங்கள இனவெறியர்களின் வதைக்குள்ளாகி, ஆனந்தக்குமாரசாமி முகாம் மற்றும் அருணாசலம் முகாம் ஆகிய முகாம்களிலிருந்து வன்னிப் பகுதிக்கு மீள் குடியேற்றம் செய்வதற்காக அனுப்பப்பட்டவர்கள் எனத் தெரிகிறது. வதை முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள் என்றாலும் மீள்குடியேற்றத்திற்கான எத்தகைய அடிப்படை வசதியும் இல்லாத நிலையில் “அம்போ’வென விடப்பட்டிருக்கிறார்கள். அவரவர் சொந்த கிராமங்களுக்குச் சென்று குடியேறுவதற்கு அங்கே கிராமங்களுமில்லை; கிராமங்கள் இருந்ததற்கான வடுக்களும் இல்லை. சிங்கள இனவெறி ஆட்சியாளர்கள் வன்னியில் தமது இராணுவ முகாம்களை நிலைகொள்ளச் செய்து பெரும்பான்மையான பகுதிகளை ஆக்கிரமித்துள்ள நிலையில், அங்கே ஒரு குடிசை அமைத்து முடங்கிக்கொள்ளலாம் என்று எண்ணுவதற்குக்கூட இயலாத நிலை உள்ளது. இத்தகைய பாதுகாப்பற்ற சூழலில் எங்கோ ஒரு தேசத்தில் அகதிகளாய் அடைக்கலம் ஆகலாம் என்னும் மனநிலைக்கு அம்மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

அதனடிப்படையில் கடந்த 19-4-2010 அன்று ஒரு படகின் மூலம் பெண்கள், குழந்தைகள் உட்பட 75 பேர் மலேசியாவை நோக்கிப் பயணம் செய்துள்ளனர். சிங்கள இனவெறியர்களிடமிருந்து தப்பித்து உயிர்பிழைத்தால் போதும் என்னும் மனநிலையில், அயல்நாட்டாரின் கருணை கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் அவர்கள் பயணித்துள்ளனர். எந்தப் பாதுகாப்பும் இல்லாத சூழலில் அவர்கள் பயணம் செய்த படகு பழுதாகி பாதியிலேயே நின்றுபோயுள்ளது. அது ஒரு சாதாரணப் படகு என்பதனால் எந்த நேரத்திலும் கடலில் மூழ்கலாம் என்கிற ஆபத்து இருந்தது. இந்த நிலையில் தம்மைக் காப்பாற்ற வேண்டுமென அவர்கள் நடுக்கடலில் இருந்தபடியே உலக நாடுகளில் வாழும் நண்பர்கள், உறவினர்கள் மூலம் கோரிக்கை வைத்துக் கதறியிருக்கின்றனர். கடந்த 23Š4Š2010 அன்று விடுதலைச் சிறுத்தைகளுக்கும் இத்தகவல் எட்டியது. அதனடிப்படையில் அவர்களைத் தொடர்புகொண்டு பேசியதுடன் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் ஆறுதல்படுத்தியிருக்கிறோம். அத்துடன் அங்குள்ள நிலைமைகளைக் கண்டறிந்து அவர்களை பாதுகாப்பாக வைப்பதற்கு உதவ வேண்டுமென மலேசியாவைச் சேர்ந்த அமைப்புகளைத் தொடர்புகொண்டு வேண்டுகோள் வைத்தோம்.

தற்போது அவர்களைக் கைது செய்துள்ள மலேசிய அரசு அவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பி விடுவார்களோ என்கிற பேரச்சம் உலகத் தமிழர்களிடையே ஏற்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களை கருணை உள்ளத்தோடு அகதிகளாய் ஏற்று அடைக்கலம் அளிக்க வேண்டும். மாறாக, இலங்கைக்குத் திருப்பி அனுப்பினால் அது ஈவிரக்கமற்ற கொடுஞ்செயலாக அமையும். எனவே தமிழக அரசும், இந்திய அரசும் உடனடியாக இதில் தலையிட்டு அவர்களை மலேசியாவிலேயே தங்கச் செய்வதற்கு மலேசிய அரசை வற்புறுத்த வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இது தொடர்பான கோரிக்கை விண்ணப்பத்தினை விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் தமிழகத்திலுள்ள மலேசியத் தூதரகத்தில் சமர்ப்பிக்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார் திருமா.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

அமெரிக்காவுக்கு சூடு போட்டார் அகமதி நிஜாத்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Loading Comments...