Friday, May 9, 2025
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

மரணப்பிடியில் பின் நவீனத்துவம் : N.குணசேகரன்

இனியொரு... by இனியொரு...
08/30/2008
in அரசியல்
0 0
2
Home அரசியல்

இருபது ஆண்டுகளுக்கு முன்பு, தத்துவ உலகில் பரபரப்பாகப் பேசப்பட்ட ‘தத்துவம்’ பின்நவீனத்துவம் (Postmodernism). இதுவரை வந்த தத்துவங்கள் எல்லாம் பயனற்றவை, பின் நவீனத்துவம் மட்டுமே எதிர்கால மீட்சித் தத்துவமாக ஆரவாரம் செய்யப்பட்டது. சிந்தனையாளர் நீட்சேவை தத்துவ முன்னோடியாகக் கொண்டு மிகையில் பூக்கோ, தெரிதா, லியோதர்ட் போன்றவர்களால் ஒரு தத்துவப்போக்காக பின்நவீனத்துவம் வளர்க்கப்பட்டது. மேற்கத்திய உலகில், குறிப்பாக, பிரான்சில் விஷம்போல பரவிய இந்தக் ‘காய்ச்சல்’ தமிழகத்தையும் விடவில்லை. மார்க்சி°ட்டாக வாழ்க்கையைத் துவக்கியவர்கள், தங்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கை வறட்சியால் பின்நவீனத்துவத்தில் சரணடைந்தனர்.
தமிழகத்தில் கலை, இலக்கியத்துறை மட்டுமல்ல, சமூக வர்க்க இயக்கங்களையும் பலிவாங்கிட பின்நவீனத்துவவாதிகள் என்று சொல்லிக் கொண்டவர்கள் முனைப்புக் காட்டினர். மார்க்சி°ட் என்று சொல்லிக்கொள்வதைக்காட்டிலும் தான் ஒரு பின் நவீனத்துவவாதி என்று சொல்லுவது ‘பாஷன்’ ஆனது.
ஆனால், இன்று மேற்கத்திய நிலைமை முற்றிலும் மாறிவிட்டது.
பின்நவீனத்துவம் எனும் பெயரில் சில ஓலக்குரல்கள் தவிர, அத்தத்துவம் சவக்குழிக்குச் சென்றுவிட்டது. பின்நவீனத்துவ உளறல்களை எதிர்த்து கடந்த பத்தாண்டுகளாக மார்க்சி°ட்டுகள் பலர் (இவர்கள் நம்மூர் அறிவுஜீவிகள் போன்றவர்கள் அல்லர். வர்க்க இயக்கங்களில் ஈடுபட்டு களத்திலும் போராளியாக விளங்கு பவர்கள்) நடத்திய சித்தாந்தப் போரில் பின்நவீனத்துவம் காலாவதியாகிப் போனது. (உதாரணத்திற்கு அலெக்°காலினிகா° எழுதிய “பின்நவீனத்துவத்திற்கு எதிரான மார்க்சிய விமர்சனம்”) தற்போது மீண்டும் அடிப்படை மார்க்சியத்தின் மீது அலாதிப் பிரியம் ஏற்பட்டு, வெகு உற்சாகத்தோடு பலர் மார்க்சியம் பயில் கின்றனர். குறிப்பாக, இளந்தலைமுறையினர் மார்க்சிய நூல்களை அதிக அளவில் வாங்கிப் படிப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
உதாரணமாக, பால்-டி-அமட்டோ எழுதிய (The Meaning of Marxism) என்ற நூல் சமீபத்தில் வெளியானது. அழுத்தமான வாதங்களோடும், பக்கபலமான ஆதாரங்கள், விவரங்களோடும் விளங்கும் இந்நூல் அடிப்படை மார்க்சியத்தை மிகவும் எளிமையாகவும், அழகாகவும் விளக்குகிறது. இதன் விற்பனை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது.
ஆக, மேற்கில், காற்று திசைமாறி அடிக்கிறபோது தமிழகத்தில் இருக்கும் சிலர் இன்னமும், காலாவதியாகிப்போன பின்நவீனத்துவத்தை உயர்த்திப் பிடிக்க முனைகின்றனர். மார்க்சி°ட்டுகள் என்று தங்களைப் பிரகடனப்படுத்திக் கொள்ளாமல் பின்நவீனத்துவம் பேசுகிறவர்கள் ஒரு ரகம். தங்களை மார்க்சி°ட்டுகள் என்று கூறிக்கொண்டு பின்நவீனத்துவத்திற்கு வக்காலத்து வாங்குபவர்கள் மற்றொரு ரகம். இத்தகு ‘ரகங்கள்’ மேற்கிலும் உலாவந்து ஓய்ந்தன. தமிழகத்தில் இந்தப்போக்குகள் இரண்டும் உள்ளன.

பகுத்தறிவு, அறிவியல் எதிர்ப்போடு… ……

19 ம் நூற்றாண்டு இறுதி மற்றும் 20 ம் நூற்றாண்டு துவக்க காலத்தை நவீனத்துவ காலம் என்கின்றனர். இக்காலக்கட்டத்தில் எழுந்த பல தத்துவார்த்த மற்றும் பண்பாட்டுச் சிந்தனைகளை எதிர்ப்பதாகக் கிளம்பியது தான் பின்நவீனத்துவம்.
நவீனத்துவம் என்றழைக்கப்படும் இக்காலக்கட்டத்தில் நிகழ்ந்த முதலாளித்துவப் பேரழிவுகளை எதிர்த்துப் போராடியது மார்க்சியம். கம்யூனிச லட்சியங்களை முன் வைத்துப் போராடிய மார்க்சியம் இக்காலக்கட்டத்தில் ரஷியப்புரட்சி மூலம் மேலும் வளம் பெற்று மார்க்சிய லெனினிசமாக உருவெடுத்தது. நவீனத்துவத்தை எதிர்ப்பது அல்லது அதன் நீட்சி என்று சொல்லிக்கொண்டே பின் நவீனத்துவம் மிகச் சாதுர்யமாக, ரஷியப் புரட்சிக்குப் பிறகு வந்த புரட்சிகர அரசு, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரக் கோட்பாடு, கட்சி அமைப்பு அனைத்தையும் எதிர்க்கிற ஒரு போக்காக வளர்ந்தது.
‘நவீனத்துவக் காலம்’ அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி கொண்டதாகவும் விளங்கியது. ஆனால், பின்நவீனத்துவம் அறிவியல், தருக்க முறை அனைத்தையும் நிராகரித்து, பொதுவான, யதார்த்தமான உண்மை என்று எதுவுமில்லை, அதனை அறியவும் முடியாது என்று வாதிட்டது. நவீனத்துவ காலத்திலும் அதற்கு முன்னரும் நிலவிய மறுமலர்ச்சி மற்றும் அறிவொளி சிந்தனைகளையும் அது விமர்சித்தது. முதலாளித்துவ அரசு அதிகாரத்தைத் தூக்கியெறிந்து பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதான் மார்க்சியம் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால், அதிகாரம் என்பது சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் இருப்பதாக விளக்கி அதிகாரம்பற்றிய மார்க்சியப்பார்வையை மங்கிடச் செய்ய பின்நவீனத்துவம் முனைந்தது.
“விசால மனது” கோரும் பசப்பு
சமீபத்தில், ‘அரசியல்’ என்ற தலைப்பில் தோழர் நல்லகண்ணுவும், அ.மார்க்ஸூம் நிகழ்த்திய ஒரு உரையாடல் புத்தகமாக வெளிவந்துள்ளது. (தென்திசை பதிப்பகம்) அது பின்நவீனத்துவம் பற்றிய நூல் அல்ல. எனினும் விவாதத்தின் ஒரு கட்டத்தில் பேசிய அ.மார்க்° பின்நவீனத்துவம் குறித்து விவரிக்கிறார்.
“கம்யூனி°ட்டுகள் போ°ட்மார்டனிசத்தை எதிரியாகப் பார்ப்பது தேவையில்லை…”
“போ°ட் மார்டனிசத்தின் பங்களிப்புக்களை நாம் புறக்கணிக்கத் தேவையில்லை…”
இதையொட்டி, பின்நவீனத்துவத்தின் சில அடிப்படைக் கூறுகளைச் சுருக்கமாக விளக்கி அந்தத் தத்துவத்தை “விசால மனத்துடன்” அணுகவும், “போ°ட்மார்டனிசம் குறித்து முன் முடிவுகள் இல்லாமல் அணுக வேண்டு” மெனவும் கம்யூனி°ட்டு களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆக, மேற்கத்திய உலகில் உதித்த ஒரு ‘தத்துவம்’ அங்கே மரணப்படுக்கையில் இருந்தாலும், அதைவிடாமல் தூக்கிப்பிடிக்கிற அறிவுஜீவிகள் இன்றும் தமிழகத்தில் உள்ளனர் என்பது தெளிவு.
எனவே, மார்க்சியத்திற்குத் தோழமையாக இருப்பது போன்று தோற்றமளித்து, மார்க்சியத்தை உருக்குலைக்க முயலும் பின்நவீனத்துவத்தை மீண்டும் அம்பலப்படுத்துவது அவசியமாகிறது.
அதற்கு முன்னதாக மார்க்சிய – லெனினிய நிலைபாட்டில், ஒரு தத்துவத்தை ஆராய்ந்திட எத்தகைய கேள்விகள் பிரதானமானவை என்பதில் தெளிவான வரையறுப்பு தேவை.

மார்க்சியம் : அடிப்படைக் கேள்விகள்

முதலாவதாக, சமூக இயக்கம் பற்றி ஒரு தத்துவம் எப்படிப் பார்க்கிறது? வர்க்கங்களை அந்தத் தத்துவம் ஏற்றுக் கொள்கிறதா? சமூக வரலாறு, வர்க்கங்களுக்கிடையே நிகழும் வர்க்கப் போராட்டங்கள் தான் என்பதை அத்தத்துவம் ஏற்றுக்கொள்கிறதா?
இரண்டாவதாக, சமூகம் மற்றும் இயற்கை நிகழ்வுகளை ஆராயும் கருவியான இயக்கவியல் பொருள்முதல்வாதம் அடிப் படையில் ஒரு குறிப்பிட்ட தத்துவத்தை எடை போடுகிறபோது எத்தகைய முடிவுகளுக்கு நாம் வந்தடைகிறோம்?
மூன்றாவதாக, எதிர்வரும் சமூக மாற்றம் பற்றி, குறிப்பிட்ட தத்துவத்திற்கு என்ன பார்வை உள்ளது? குறிப்பாக புரட்சி பற்றியும், புரட்சிக்குத் தலைமை தாங்கும் வர்க்கம் பற்றியும் அத் தத்துவத்திற்கு என்ன நிலைபாடு? மிக முக்கியமாக, இன்றைய முதலாளித்துவத்தை வீழ்த்த அவசியத் தேவையாக உள்ள கட்சி அமைப்பு பற்றி அந்தத் தத்துவங்களின் நிலைபாடு என்ன?
இவற்றைக் கூறுகிற போது, மார்க்சி°ட்களின் கருத்தாக்கங் களை எப்படி மற்ற தத்துவங்கள் மீது திணிக்க முடியும் என்று ஆட்சேபம் எழலாம். ஆனால், மேற்கண்ட கேள்விகளும், கார்ல் மார்க்° அல்லது ஒரு மார்க்சி°ட்டின் கற்பனையான சொந்த அபிப்பிராயங்கள் அல்ல. இவை சமூக இயக்கவிதிகள். அறிவியலில் அடிப்படை விதிகள் என்ன பங்காற்றுகின்றனவோ அதேபோன்று, வர்க்கப் போராட்டம், இயக்கவியல் – வரலாற்றுப் பொருள்முதல் வாதம், புரட்சி, கட்சி அமைப்புக் கோட்பாடுகள் ஆகியன சமூக இயக்கத்தின் அடிப்படை விதிகளாக உள்ளன. இதைக்கண்டறிந்தது மார்க்சியம். எனவே இந்தக்கேள்விகள் கட்டாயமாக ஒவ்வொரு தத்துவத்தையும் நோக்கி எழுப்பப்பட வேண்டியவை. இதற்கு அந்த தத்துவங்கள் மழுப்பல், உதாசீனம், அலட்சியம் என்ற வகையில் எதிர்வினை செய்கிற போது, அத்தத்துவங்கள் கோடானுகோடி உழைப்பாளி மக்களுக்கு தீங்கு விளைவிப்பவை; அவர்களது விடுதலையை எதிர்ப்பவை என்கிற முடிவுக்குச் சுலபமாக வந்துவிடலாம்.
பின்நவீனத்துவம் பேசுகிற அத்துனை சிந்தனையாளர்களும் மேற்கண்ட கேள்விகளுக்குச் சரியான விடை தருவதில்லை. ‘அரசியல்’ உரையாடலில் அ.மார்க்ஸ்° சொல்லுகிற கருத்துக்களை மேற்கண்ட கேள்விகளோடு ஒப்பிடலாம்.
உதாரணமாக, சோவியத் யூனியன் உள்பட சோசலிச நாடுகளில் உருவான சோசலிசம் மற்றும் புரட்சிகர அரசு பற்றி பேசுகிறார் அவர்.
“புரட்சிகரப் பிந்தைய சமூகங்கள் அனைத்தும் அரசு ரொம்பவும் வலிமையான சமூகங்களாகவும் இருந்தன. இந்த அடிப்படையில் தான் அதிகாரம் குறித்த கேள்வியை போ°ட்மார்டனி°டுகள் எழுப்புகிறார்கள்”. ஆக, இந்த அதிகாரத்தை எதிர்ப்பதால், பின்நவீனத்துவம் “ஒரு உறுதியான பாசிச எதிர்ப்புத் தளத்தை”க் கொண்டுள்ளதாகப் புகழ்கிறார் அவர். உலகம் முழுவதும் முதலாளித்துவ அரசுகள் பலமிக்கதாக இருக்கும் போது, சோவியத் அரசு மட்டும் பலவீனமாகி உதிர்ந்து போயிருக்க வேண்டுமென்று கோருவது எத்தகைய பொறுப்பற்ற கருத்து?
இது முழுக்க, முழுக்க, சோவியத் மற்றும் இதர சோசலிச நாடுகளில் எழுந்த சோசலிச சமூகத்தை எதிர்ப்பது தான். இதை எதிர்ப்பது தான் ‘பாசிச எதிர்ப்பு’ என்கிறார் அவர். முதலாளித்துவ சர்வாதிகாரம் மற்றும் அதன் அதிகார ஒடுக்குமுறை பற்றி பேசுவதை விடக் கம்யூனி°ட்களின் “பாசிசம்” “அதிகாரம்” ஆகியவற்றை எதிர்ப்பது தான் தங்களது ‘மேலான’ பணியாகப் பின்நவீனத்துவ வாதிகள் கருதுகின்றனர்.
இது ‘அதிகாரம்’ என்று ஃபூக்கோவின் கருத்தாக்கத்திலிருந்து வருவது. அவர் அதிகாரம் வெறும் அரசு உறவுகளில் மட்டுமல்ல எங்கும் நீக்கமற நிறைந்துள்ளதாகக் கருதுகிறார். ஒவ்வொரு சமூக உறவுகளிலும், பரவி, விரவிக் கிடக்கிறது. அந்த அதிகார மேலாதிக்கத்திற்கு எந்த வரையறுக்கப்பட்ட நோக்கமும் இல்லை. (மூலதன அதிகாரத்திற்கும் எந்த நோக்கமும் இல்லை என நாம் புரிந்து கொள்ள வேண்டும்!) மொத்தத்தில் அரசு, அரசியல், பொருளாதாரம் ஆகிய தளங்களில் மட்டும் அதிகாரத்தைப் புரிந்து கொள்வது சாத்தியமற்றது என்பது ஃபூக்கோவின் நிலை.
இந்தக் கருத்தாக்கம் எங்கு இட்டுச்செல்கிறது? அதிகாரம் எங்கும் பரவியிருக்கிறது என்கிறபோது அதற்கு எதிர்ப்பு என்பது ஒரு குறிப்பிட்டத் திட்டம் மூலம் செய்திட முடியாது. ஒரு ஒழுங்கு படுத்தப்பட்ட கட்சி என்ற வகையில் இந்த எதிர்ப்பை நிகழ்த்தினால், அதுவே ஒரு அதிகார நிறுவனம் ஆகிவிடும். எனவே, ஒழுங்குமய மாக்கப்பட்ட கட்சி போன்ற எந்த அமைப்பும் கூடாது என்பதே பின்நவீனத்துவவாதிகளின் நிலை. அதனால்தான் அ.மார்க்° உள்ளிட்டவர்கள் லெனினிசத்தையும் விமர்சிக்கிறார்கள். ஏனெனில் லெனின்தான் கட்சி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ஆகிய உன்னதக் கோட்பாடுகளை ஒருவாக்கி மார்க்சியத்தை வளர்த்தவர். மேற்கண்ட உரையாடலில்கூட, ‘பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் மறுபரிசீலனை தேவை’ என்கிறார். இது கைவிடப்பட வேண்டும் என்று நாசூக்காகச் சொல்லப்படுகிறது. உறுதியான வர்க்க நிலைபாட்டில் வர்க்கங்களைத் திரட்டி, புரட்சியை முன்னெடுத்துச் சென்று, எதிரி வர்க்க மேலாதிக்கத்தை முற்றாக ஒழிக்கிற இந்தக் கோட்பாட்டை கைவிடுவது என்றால் பிறகு லெனினிசம் எங்கே இருக்கிறது? லெனினிசம் தவிர்த்து மார்க்சியம் பேசுவது என்றால் சமூக மாற்றம் பேசுவதில் எந்த நேர்மையும் இல்லை என்பது மட்டுமல்ல, தொழிலாளி வர்க்க இயக்கத்தை இது திசை திருப்பும் செயலாகும்.
சோவியத்திலும், இதர சோசலிச நாடுகளிலும் சோசலிசத்தைக் கட்டியமைப்பதற்கான முயற்சிகளில் ஏற்பட்ட விலகல்கள், தவறுகள், குறைபாடுகள் முழுமையாகக் கிரகிக்கப்படல் வேண்டும். ஆனால், இது மார்க்சிய லெனினிய நிலைபாட்டில் செய்திட வேண்டிய ஒன்று. முதலாளித்துவப் பார்வையிலிருந்தும், பின் நவீனத்துவப் பார்வையிலிருந்தும் சொல்லப்படுகிற கருத்துக்கள் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டியவை.

மார்க்சியத்தோடு நட்பா? பகையா?

மேற்கண்ட உரையாடலின்போது, தோழர் நல்லகண்ணு “உபரி மதிப்பு என்பதையே போ°ட்மார்டனிசத்தில் மறுக்கிறார்கள்” என்று கூறுகிறார். அதற்குப் பதில் கூறுகிறபோது, அ.மார்க்ஸ்° “உபரி மதிப்பு என்கிற கோட்பாட்டை போ°ட்மார்டனிசம் மறுக்கிறது என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள்…?” என்று கூறி தோழர் நல்லகண்ணுவின் கூற்றை மறுக்கிறார்.
 
அந்த நீண்ட விளக்கத்தின் இடையில், அவரே மேற்கண்ட நிலையிலிருந்து முரண்படுகிறார், அவர் கூறுகிறபோது… “வர்க்கம், இனம் என்றெல்லாம் மட்டும் பிரித்து இந்த உள்வித்தியாசங்களை (தலித், பெண்கள் போன்று) மறுக்கப்படுவதையும், மக்களை வித்தியாசங்களற்ற பொதுமைகளாகப் பார்த்து, எல்லோருக்குமான விடுதலை, புரட்சி போன்ற பெருங்கதையாடல்களை விவரிப் பதிலும் உள்ள பிரச்சனைகளை போ°ட்மார்டனிசம் சுட்டிக்காட்டுகிறது” என்கிறார் அவர்.
இதற்கு அர்த்தம் என்ன? மார்க்சியம் என்பது ஒரு பெருங்கதை யாடல் என்று பின்நவீனத்துவவாதிகள் கூறுகின்றனர். அதாவது, தொழிலாளியின் உழைப்பினால் உபரி மதிப்பு உருவாக்கப்பட்டு, முதலாளியின் லாபமும், அதையொட்டி மூலதன வளர்ச்சியும் ஏற்படுகிற நிகழ்வை தர்க்க ரீதியாகவும், அறிவியல் அடிப்படை யிலும் மார்க்சியம் விளக்குகிறது. இந்த மூலதனச் சேர்க்கை ஏற்படுத்தும் முரண்பாடுகள் வர்க்க மோதலாக, புரட்சியில் கொண்டு செல்கிறது என்கிற அறிவியல் நிகழ்வை ‘பெருங் கதையாடல்’ என்று முத்திரை குத்தி, மார்க்சியத்தை நிராகரித்த வர்கள் பின்நவீனத்துவவாதிகள். முற்றாக மார்க்சியத்தை நிராகரிக் கிறபோது உபரி மதிப்பையும் இந்தப் ‘பெருங்கதையாடலின்’ ஆதாரம் என்பதால் அதையும் நிராகரிப்பதாகத்தானே அர்த்தம்?
மார்க்சியத்தைப் பின்நவீனத்துவவாதிகள் நிராகரிக்கவில்லை என்று அ.மார்க்° சப்பைக்கட்டு கட்டுவது எந்த அடிப்படையில்? ‘வர்க்கம்’, ‘புரட்சி’, ‘வர்க்கப் போராட்டம்’ போன்ற அடிப்படை கருத்தாக்கங்களே மார்க்சியத்தின் ஜீவனாக இருக்கின்றபோது, அவற்றை மறுத்துவிட்டு எந்த மார்க்சியத்தோடு பின்நவீனத்துவம் உறவு கொள்கிறது? (அ.மார்க்ஸின் சொந்த மார்க்சியத்தோடா?) மார்க்சியத்தோடு நட்பு பாராட்டுவதாகக் கூறி மார்க்சியத்தின் கூர்முனையை மழுங்கடிக்கச் செய்தவர்கள் ஏராளம். அந்தப் போக்கின் சமீபத்திய அவதாரம் தான் பின்நவீனத்துவம். இது வர்க்கப்போராட்டத்தை தேன் தடவிய சொல்லடுக்குகளால் உருக்குலைக்க முயலுகிற தத்துவம் ‘வித்தியாசங்கள் பார்க்கப்பட வேண்டுமென்ற’ இனிமை நிறைந்த சொல்லடுக்கைப் பிரயோகித்து, வர்க்கம் என்ற அடிப்படையில் விரிந்து பரந்து உருவாகின்ற வர்க்க ஒற்றுமையைக் குலைக்க வந்த ஒரு கோடாரி தான் இந்த பின்நவீனத்துவம்.
பெருங்கதையாடல் (Meta – narrative) என்ற கருத்தாக்கமே சமுக மாற்ற லட்சியத்துக்கு உதவாது. பின்நவீனத்துவ சிந்தனை யாளரான லியோதர்ட் “பின்நவீனத்துவம் என்பதே பெருங்கதை யாடல்கள், அனைத்தும் நம்பத் தகுந்தவை அல்ல” என்கிறார். பல்வேறு தர்க்கரீதியான ஆதாரங்கள் மற்றும் அறிவியல் சோதனை முறைகள் மூலம் வந்தடைந்த உண்மைகளை விளக்கு பவை அனைத்தும் பெருங்கதையாடல் என்று அவர்கள் நிராகரிக் கின்றனர். இந்த அடிப்படையில் மார்க்சியம் நிராகரிக்கப்படுகிறது. மார்க்சியம் வலுவாக இருக்கும் பகுதியில் மார்க்சிய நண்பர்கள் போல் நடிப்பது அவர்கள் வழக்கம்.

“வித்தியாசங்கள்” என்ற பெயரில் வர்க்கப்பிளவு வேலை

கவர்ச்சியான சொல்லடுக்குகளைப் பயன்படுத்துவது ஒருபுறம் இருக்க, மற்றொரு தந்திரத்தையும் இவர்கள் பின்பற்றுகின்றனர். அதாவது, எதிராளி கருத்தையும் அங்கீகரித்துவிடுவது அல்லது ‘கவலை’ தெரிவிப்பது. பின்நவீனத்துவம் பற்றி மார்க்சியம் எழுப்பும் “வித்தியாசத்தை” எதிர்க்க முடியாமல், சரணாகதி அடைவது போல் பாசாங்கு செய்வதும் இதில் அடங்கும்.
வர்க்கம் என்று பார்க்காமல், வர்க்கத்திற்குள் இருக்கும் ‘வித்தியாசங்களைப்’ பார்க்க வேண்டுமென்று அவர்கள் கூறுகின்றனர். அதாவது சமூக, சாதி அடிப்படையில் ஒருவர் தலித்தாக இருக்கின்றனர். அதேசமயம் கூலி விவசாயி எனும் வகையில் அவர் விவாசய வர்க்கமாகவும் இருக்கின்றார். பின்நவீனத்துவவாதிகள் வர்க்கம் என்று பொத்தாம் பொதுவாகப் பார்க்க வேண்டியதில்லை; தலித் என்ற வகையில் அவரை, அவர் சமூகம் சார்ந்த மக்களைத் திரட்டிட வேண்டும் என்கின்றனர். இதையே தலித்தியம் எனும் பெயரில் இந்தத் திரட்டலை அவர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் செய்து வந்துள்ளனர்.
இதேபோன்றே ஒரு பெண், தொழிற்சாலையில் உழைக்கும் தொழிலாளியாக இருக்கலாம். ‘வர்க்கம்’ என்று உழைப்பாளி வர்க்கத்திற்குள் அவர் உள்ளடக்கம் என்று பார்க்கக் கூடாது. பெண் என்ற நிலையில் மட்டும் தான் பெண்கள் திரட்டப்பட வேண்டும். இதனால் பெண்ணியம் பேசுகிற பல குழுக்களில் பின்நவீனத்துவ வாடை இருப்பதைக் காண முடியும்.
ஆக, தலித், பெண் உள்ளிட்ட “விளம்பு நிலை மனிதர்கள்” தனித்தனியாகத் திரட்டப்பட வேண்டும். வர்க்கம் என்று ஒட்டுமொத்தமாகத் திரட்டுவது கூடாது என்பது அவர்களின் வாதம்.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இந்தக்கருத்து எத்தகைய சீரழிவை “விளிம்புநிலை மனிதர்களுக்கு” ஏற்படுத்தியுள்ளது என்பதைக் காண முடியும்.
1940 – 60 ம் ஆண்டுகளில் தஞ்சையில் மார்க்சிய ‘வர்க்கம்’ என்ற நிலையிலிருந்து விவசாயத் தொழிலாளர்கள் திரட்டப் பட்டனர். அவர்கள் முன் வைத்துப் போராடிய ‘கூலி’ என்ற கோரிக்கை வெளிப்படையில் பார்த்தால் பொருளாதாரக் கோரிக்கை போன்று தோன்றலாம். நிலப்பிரபுத்துவ மற்றும் சாதிய ஒடுக்குமுறை பின்னிப்பிணைந்து நின்ற சூழலில், “கூலி உயர்வு” என்று முழக்கமிட்டு அவர்கள் திரண்டனர். அந்த கோஷம் அனைத்து ஒடுக்குமுறை எதிர்ப்புகளையும் உள்ளடக்கியதாக வெடித்தது.
இவ்வாறு சாதிய ஒடுக்குமுறையையும், வர்க்க ஒடுக்கு முறையையும் தனித்தனியாகப் பிரித்திடாமல், இரண்டையும் இயல்பான பிணைப்போடு அணுகிய இந்தச் செயல்பாடு, தொடர்ந்து நீடித்து, தமிழகம் முழுவதும் விரிவாக்கம் பெற்றிருந் தால், இன்று தமிழகத்தில் இடதுசாரி இயக்கம் முதன்மை இடத்திற்கு வந்திருக்கும். இந்த நிகழ்வுப்போக்கைச் சீர்குலைத்தவை எவை என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்று. எனினும் 1990 ம் ஆண்டுகளில் தலித் மற்றும் சாதி அடையாளங்களை வலுப்படுத்தித் தனி இயக்கங்கள் உருவானது வர்க்க இயக்க வளர்ச்சிக்கு ஊறு விளைவித்தது என்பது உண்மை.

“அடையாள அரசியலை” தூண்டுவதில் முன்னணி

தலித் என்ற வித்தியாசம் உள்ளிட்ட வித்தியாசங்களை “உருவாக்குவதே போ°ட்மார்டனிசம் என்பது போலப் பார்க்க வேண்டியதில்லை. ஏற்கெனவே வித்தியாசங்கள் இங்கே இருக்கிறது தானே” என்கிறார் மார்க்°. உண்மைதான், ஏற்கெனவே இருக்கின்ற வித்தியாசங்களில் முதலாளி, தொழிலாளி, நிலவுடைமையாளர், உழைக்கும் விவசாயி போன்ற ‘வித்தியாசங்கள்’ எல்லாம் ஏன் வித்தியாசங்களாக எடுத்துக் கொண்டு முக்கியத்துவம் கொடுக்கப் படுவதில்லை? இவர்களது செயல்திட்டம் இதுதான்.
‘விளிம்பு மனிதர்களை’ அவர்களது சாதி மற்றும் இதர அடையாள உணர்வு அடிப்படையில் தனியாகத் திரட்ட வேண்டுமென்றால், அவர்களிடம் நிஜவாழ்க்கையில் யதார்த்தமாக இருக்கும் வர்க்கம் என்ற உணர்வை பின்னுக்குத் தள்ளிட வேண்டும். மாறாக ‘தலித்’ போன்ற இந்த அடையாள உணர்வை மேலும், மேலும் வலுப்படுத்தினால், வர்க்கம் என்ற நிலைக்கு அந்த உணர்வைக் கொண்டுவராமல் மழுங்கடிக்கச் செய்திட இயலும். இதுதான் தமிழகத்தின் பின்நவீனத்துவம் பேசுபவர்கள் செய்திட்ட பெரும் சேவை! எனினும், இவர்களது சீரழிவுப் பணியையும் மீறி வர்க்க இயக்கம் தற்போது தலித் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் வேகமாக, வளர்ந்து வருகிறது என்பது வேறுவிஷயம். அடிப்படை மார்க்சிய நிலைப்பாடுகளை குழப்புபவர்கள் விஷயத்தில், வர்க்க இயக்கம் கட்ட அன்றாடம் பல இன்னல்களுக்கு இடையே பாடுபட்டுக் கொண்டிருக்கின்ற தோழர்கள், எச்சரிக் கையாக இருக்க வேண்டியுள்ளது. தினந்தோறும் நடைபெறும் நடைமுறைப் போராட்டங்களோடு தொடர்பற்று ‘தத்துவ விசாரணை’ நடத்தும் விஷமத்தனமான அறிவுஜீவிகள் பல நேரங்களில் வர்க்க இயக்க ஒற்றுமையை குலைப்பதில் வல்லவர் களாகவும் இருக்கின்றனர்.
அவர்களது தந்திரத்திற்கு இதோ ஒரு உதாரணம். மேற்கண்ட உரையாடலில் ‘வித்தியாசம்’ வலியுறுத்தும் பின்நவீனத்துவ கருத்தைக் கூறிவிட்டு, மார்க்° கூறுகிறார்…
“இப்படி வித்தியாசம் பார்ப்பது ஒட்டுமொத்தத்தை பலவீனப் படுத்திவிடும் என்ற கவலை நியாயமானதுதான்”. அதாவது ‘பொது’வைப் பார்க்கக்கூடாது, ‘தனி’யைப் பார்க்க வேண்டு மென்று சொல்லிவிட்டு, பிறகு ‘ஒட்டுமொத்தம்’ பலவீனமாகிறதே என்று கவலை தெரிவிப்பது எப்படிப்பட்டது? வீட்டை தீ வைத்துக் கொளுத்திவிட்டு தீ பரவுகிற ‘பலவீனத்தைப்’ பற்றிக் கவலை தெரிவிப்பது போல் உள்ளது. என்ன தந்திரம் என்றால், எதிரான கருத்தையும் சொல்லி வைத்துவிட்டால், பிறகு தன் கருத்தை மூளையில் ஏற்றிடலாம் அல்லவா?
பின்நவீனத்துவ சிந்தனையாளர்களின் மேன்மையைப் புகழ்கிறார் அ.மார்க்°. ஃபூக்கோ, தெரிதா, பாத்ரிலா உள்ளிட்ட பலர் “கலகக்கார சிந்தனையாளர்களாகவே வாழ்ந்து மடிந்திருக் கிறார்கள். அதிகபட்சமாக இவர்களுக்குக் கிடைத்த அங்கீகாரம் போராசிரியப் பதவிகள் தான். அதற்கு மேல் பெரிய அளவில் அரசுப் பாராட்டுகளோ, நோபல் பரிசுகளோ இவர்களுக்குக் கிடைத்த தில்லை” என்கிறார் அவர்.
உண்மைதான். இதோடு, தாராளவாதம் (டுiநெசயடளைஅ) எனும் சித்தாந்தத்தை உருவாக்கிய சிந்தனையாளர்களையும் ஒப்பிடலாம். ரூ°ஸோ, ஜான் °டூவர்ட் மில், தாம° ஹாப்° இப்படி அவர்களது வரிசை நீள்கிறது. இவர்கள் அடித்தளமிட்ட தாராளவாத ஜனநாயகம் எதற்குப் பயன்பட்டது? முதலாளித்துவம் வளருவதற்குத் தானே பயன்பட்டது. இந்த சித்தாந்தத்தை உருவாக்கியதற்காகப் போராசிரியப் பதவி கூட இல்லாமல் பல சோதனைகளை அனுபவத்தவர்கள் பலர். தாம° ஹாப்° தூக்கிலிடப்பட்டவர். இவர்களுக்கெல்லாம் நல்ல நோக்கங்கள் இருந்திருக்கலாம். ஆனால் அவர்களது சித்தாந்தம் முதலாளித்து வத்திற்கு மிகச் சிறந்த கருவியாகப் பயன்பட்டது என்பதே வரலாறு. சரியாக, அதே போன்று பின்நவீனத்துவ சிந்தனை இன்றைய ஏகாதிபத்திய சக்திகளுக்கு உதவிடும் கருவியாக உள்ளது. இனம், சாதி அடிப்படையில் மக்களைக் கூறுபோடுகிற அடையாள அரசியல் யாருக்கு உதவிடும்? பின்நவீனத்துவம் நடைமுறையில் இதைத்தானே செய்துள்ளது?
ஆக, பின்நவீனத்துவம் ஏன் உருவானது?
இதற்கான சரியான விடையை அலெக்°காலினிக்கா° அளிக்கின்றனர்.
1968 ம் ஆண்டுக்கால புரட்சிகரத் தலைமுறையின் ஏமாற்றம் தான் பின்நவீனத்துவமாக வடிவெடுத்தது. அந்தத் தலைமுறைசார்ந்த பலர் தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகப் பணிகளில் உயர் பொறுப்புக்களில் சேர்ந்து ஒரு “புதிய நடுத்தர வர்க்கமாக’ உருவெடுத்தனர். எனவே, பின்நவீனத்துவத்தை உண்மையில் சமூக அரசியல் இயக்கம் மீது விரக்தி அடைந்த ஒரு போக்காகப் பார்க்கலாமே தவிர, அறிவுத்துறை மற்றும் பண்பாட்டுத்துறையில் ஒரு முக்கிய தத்துவப் போக்காக எடுத்துக்கொள்ள இயலாது. இது மார்க்சி°ட்டான அலெக்° காலினிக்காஸின் நிறைவான ஆய்வு முடிவு.
பின்நவீனத்துவத்திற்கு எதிராக வலுவாகப் போராடிய மார்க்சி°ட்டுகளை மறைத்து, மேற்கத்திய தத்துவ உலகின் ஒருபக்கத்தை மட்டும் சிலாகிப்பது தமிழக ‘அறிவுஜீவி’களின் வழக்கம்.
மேலே குறிப்பிட்ட மார்க்சிய அடிப்படைகளிலிருந்து இத்தகு போக்குகளை எதிர்த்துப் போராடுவது மிக முக்கியமான வர்க்கப் போராட்டம். இது தீவிரமாக நடைபெற வேண்டும்

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

ஷாங்காய் மாநாட்டில் ரஷ்யாவுக்கு ஆதரவு!

Comments 2

  1. vincent says:
    17 years ago

    கடைசியாக இனியொருவில் அவந்த பின்நவீனத்வம் பற்றிய கட்டுரைய பாரத்தேன்.
    இன்னும படிக்கவில்லை.
    முன்னதாக கட்டுரைக்கிடையில் படத்தைப்போடுவதை மிக மிகத் தேவையிருந்தாலொழியத் தவிருங்கள்.
    இணையத்தில் அவற்றைப் பார்ப்பதற்கு பெரிய இடையூறாக உள்ளன. சிறிதாகப் போடலாம்.

    கட்டுரை படித்துவிட்ட எனது கருத்தை அனுப்புகின்றேன்.

  2. Ramachandran says:
    14 years ago

    Good. very good. Mikka nandrai irundhadhu. 

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In