Wednesday, April 29, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

மகிந்த – பன்கி மூன் கபட நாடகம்?

இனியொரு... by இனியொரு...
05/01/2011
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
4
Home பிரதான பதிவுகள் | Principle posts

இலங்கையில் இடம் பெற்ற யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இடம் பெற்ற சம்பவங்களைப் பற்றி, ஆராய்ந்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு, ஐ.நா. செயலாளர் நாயகம் பன்கி மூன் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கை குறித்து வெளிநாடுகள் தொடர்பான பீதியை ஏற்படுத்தும் முயற்சியில் மகிந்த ராஜபக்ஷ அரசு ஈடுபட்டுள்ளது.

நிபுணர்; குழுவை, ஐ.நா. செயலாளர் நாயகம் எவ்வாறு நியமித்தார் என்பதை நாம் ஆராய வேண்டும்.

இலங்கையில் யுத்தம் முடிவுற்றதும் 2009 மே மாதத்தில் இலங்கைக்கு விஜயம் செய்த பன்கி மூன் ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் ஏற்படுத்திக்கொண்ட உடன்பாட்டிற்கமைய இந் நிபுணர் குழுவை ஐ.நா. செயலாளர் நாயகம் நியமித்தார். எனவே, இந்நிபுணர் குழு இலங்கை அரசின் உடன்பாட்டுடனேயே நியமிக்கப்பட்டது.

பின்னர் இந்நிபுணர் குழுவிடம் தனது சான்றாதாரங்களைத் தெரிவிக்க மறுத்த

இலங்கையரசு, மேற்படி நிபுணர் குழு இலங்கைக்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்வதற்கும் அனுமதி வழங்காமல் இவ்வறிக்கையை ஒரு தரப்பு அறிக்கையாக வெளியிடவும் உதவியது.

ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய இவ்வறிக்கை எவ்வாறு பகிரங்கப்படுத்தப்பட்டது?

இத்தகைய ஓர் அறிக்கையை பகிரங்கப் படுத்துவது தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட சம்பிரதாயம் இல்லாது விட்டாலும், அது ஐ.நா. செயலாளரிடம் உத்தியோக பூர்வமாகக் கையளிப்பதற்கு முன்னர் அது பற்றிய கருத்துக்களை ஏற்புடைய அரசிடம் சமர்ப்பித்து அதன் அபிப்பிராயங்களைப் பெறுவது சம்பிரதாயமாகும் அதற்கமைய, இலங்கை அரசின் கருத்துக்களைப் பெறுவதற்கு 2011 ஏப்ரல் 12ம் திகதி இவ்வறிக்கை இலங்கை அரசிடம் கையளிக்கப்பட்டது. ஆனால் ஏப்ரல் 25ல் நிபுணர் குழு அறிக்கையை ஐ.நா. செயலாளர் நாயகம் பகிரங்கப்படுத்தும் வரை தனது எதிர்ப்பையோ அல்லது அபிப்பிராயத்தையோ ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு உத்தியோகபூர்;வமாக இலங்கையரசு தெரிவிக்கவில்லை.

இதற்குப் பதிலாக தனக்குச் சாதகமான ஊடகங்கள் மூலம் அறிக்கையைப் பகிரங்கப்படுத்தி, ஜனாதிபதியை மின்சாரக் கதிரையில் அமர்த்துவதற்கான சர்வதேச சதித்திட்டம் நடைபெறுகிறது என ஒரு சர்ச்கையை இலங்கையரசு நாடு பூராவும் ஏற்படுத்த முயற்சித்துள்ளது.

இதுவரை இந்நாட்டின் உழைக்கும் மக்கள் சார்பில் அவர்;களின் சம்பளத்தை உயாத்துவதாகக் கூறிய உறுதிமொழியை மறந்துவிட்ட ராஜபக்ஷ அரசு இன்று பன்கீ மூனின் அறிக்கையை எதிர்ப்பதையே தனது மே தின அறை கூவலாகக் கொண்டுள்ளது.

இவ்வறிக்கையை அடிப்படையாகக் கொண்டு ஜனாதிபதி ராஜபக்ஷவை மின்சாரக் கதிரையில் அமர்த்த முடியுமா?

இலங்கை அரசின் உடன்பாட்டுடன் ஐ.நா. செயலாளர் நாயகம் நியமித்த நிபுணர் குழு அறிக்கை அத்தகையதொரு பரிந்துரையைச் செய்யவில்லை. அவ்வாறு செய்யும் சட்டபூர்வமான அதிகாரமும் அதற்குக் கிடையாது.

ஐ.நா. செயலாளர் நாயகம், நிபுணர் குழு அறிக்கை தொடர்பாக ஏதாவது நடவடிக்கை மேற்கொள்வதாயின் பின்வரும் விடயங்களில் ஒன்றையேனும் பூர்த்தி செய்தல் வேண்டும்:

• ஐ. நா. பாதுகாப்புச் சபையில் பிரேரணையொன்று நிறைவேற்றப்பட வேண்டும்.அல்லது

• ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழப் பேரவையில் பிரேரணையொன்றை நிறைவேற்ற வேண்டும் அல்லது

• ஐ.நா. பொதுச் சபையில் பிரேரணையொன்று நிறைவேற்றப்பட வேண்டும்.

ஐ.நா. பாதுகாப்புச் சபையின் வீட்டோ அதிகாரம் உடைய் சீனா, ரஷ;யா போன்ற நாடுகள் உட்பட இந்தியாவும் ஏற்கனவே இலங்கை அரசை ஆதரிப்பதால், மேற்கூறிய நடவடிக்கைகள் மூலம் செயலாற்ற. ஐ.நா. செயலாளர் நாயகம் அதிகாரத்தைப் பெறமாட்டார். எனவே, மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியை மின்சாரக் கதிரையில் அமர்த்துவதற்கான சாத்தியம் இல்லை. போர்க் குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டை இலங்கையரசுக்கு எதிராக முன்வைக்க முடியுமா?

சர்வதேசக் குற்றங்கள் தொடர்பான நீதிமன்றம் முன்னே அத்தகைய குற்றங்களைச் சார்த்துவதாயின் மேற்படி உடன்படிக்கையில் கைச்hத்திட்ட நாடுகள் தொடர்பாக மாத்திரமே அவ்வாறான நடவடிக்கை எடுக்க முடியும். இலங்கை இவ்வுடன்படிக்கையில் கைச்சாத்திடாத காரணத்தினால் போர்க் குற்றங்களை முன்வைப்பதற்கான சாத்தியப்பாடு கிடையாது.

மேற்கூறிய காரணங்களால் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் பிரேரணையொன்றை அங்கீகரிப்பதற்கான சாத்தியமும் இல்லை.

உண்மை நிலை இவ்வாறு இருக்கையில் மகிந்தராஜபக்ஷ அரசு வெளிநாட்டுப் பீதியை ஏன் உருவாக்கியுள்ளது?

நாள்தோறும் வாழ்க்கைச் செலவு அதிகரித்த வண்ணமுள்ளது. நிவாரணங்கள் படிப்படியாக வெட்டப்படுகின்றன. மக்கள் மீது பல்வேறு அழுத்தங்கள் சுமத்தப்படுவதால் அவர்களின் கோபத்துக்கு ஆளாகாமல் கவனத்தைத் திசை திருப்பவே இக்கபட நாடகம். அரசு 68 வீதமான வரிச்சுமைகளை மக்கள் மீது சுமத்தியுள்ளது. இன்று நாம் ஒரு ரூபாயைச் செலவு செய்தால் 68 சதங்களை அரசு வரியாக அறவிட்டுக்கொள்கின்றது. உலக வங்கியின் ஆலோசனைகளுக்கமைய பல லட்சக்கணக்கான தனியார்; ஊழியர்;களின் சேமலாபநிதியைக் கொள்னையடித்து அரச வருமானத்தை அதிகரிக்க மேற்கொள்ளும் அநீதிகளுக்கெதிராக கொதித்தெழும் மக்களின்; கோபத்தைத் திசை திருப்ப இத்தகைய கபட நாடகங்கள் அரசுக்குத் தேவை.

உண்மையிலேயே இது தேசப்பற்றுன்ற அரசா?

இன்று இவ்வரசு விடுவித்ததாகப் பறை சாற்றும் நிலங்களை வெளிநாட்டுக் கம்பனிகளுக்குத் தாரைவார்த்துக் கொடுத்து வருகிறது. கொழும்பில் உள்ள இராணுவத் தலைமையகம் அமைந்த காணியை வெளிநாட்டுக் கம்பனியொன்றிற்கு ஏற்கனவே ஹோட்டல் ஒன்றை நிறுவ விற்கப்பட்டுள்ளது.

உண்மையான தேசப்பற்றாளர்களாயின் நாட்டின் வளங்களை அனைத்து மக்களின் நல்வாழ்விற்கும் பயன்படுத்தப்பட வேண்டும். ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்தி மனித உரிமைகளைப் பேண வேண்டும்.

இவை இன்று இலங்கையில் இடம்பெறுகின்றனவா?

‘உரிமைகளுக்கான கலந்துரையாடல்’
(Rights-Dialogue)
1149,ராஜகிரிய வீதி,,ராஜகிரிய.
01.05.2011

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

வன்னிப் போரில் அப்பாவி மக்கள் கொல்லப்படவில்லை : டக்ளஸ் தேவானந்தா

Comments 4

  1. APPUU says:
    15 years ago

    ஈழம்,சிங்களம் இரண்டு நாடுகள் அமைய வேண்டுவது இன்றைய காலத்தின் தேவை யாதர்த்தமும் கூட.தேசிய இன முரண்கள் நீடித்திருப்பது முதலாளிகளுக்கே சாதகமாய்முடியும் என்பது பாலபாடம். .இல்லையென்றால் தமிழர் சிங்களர் என்ற மோதல் சூழலை ஒருபுறம் வளர்த்தெடுத்துக்கொண்டே ஒட்டுமொத்தநாட்டையும் இவர்கள் விற்றுவிடுவார்கள். 

    • thurai says:
      15 years ago

      சிங்கள அரசாங்கம் மக்களை தன் சொந்தநாட்டிலேயே வைத்துக்கொண்டுதான்
      தவறு விடுகினறது. ஆனால் ஈழ்த்தமிழரோ உலகமுழ்வதும் அகதியாகிக்கொண்டும்,
      அந்த அகதிகளிடம் சுரண்டி வாழ்ந்துகொண்டும் கூட் ஈழப்பேச்சு இன்னமும்போகவில்லையே.-துரை

  2. karnan says:
    15 years ago

    திரு துரை , புலம்பெயர் தமிழர் ஏன் ஈழம் பற்றி பேசக்கூடாது? வாழும் வாடகை வீடு சொந்த வீடாகிவிடாது , எங்கிருந்தாலும் ஈழம் தான் புலம்பெயர் தமிழரின் தாயகம் .

  3. thurai says:
    15 years ago

    ஒவ்வொரு கிழமையும் போய் வரக்கூடிய தொலைவிலுள்ள கொழும்புநகரம்
    எவ்வளவு காலம் வாழ்ந்தாலும் அந்நிய தேசம் என்று சொல்லி அடிவாங்கியாச்சு. வருடமொருமுறையாவது போய் வரமுடியாத 10 ஆயிரம்கிலோ மீற்ரர் தூரத்துக்கப்பாலிருந்து கிண்ற்று தவளைபோல் கத்தியே முள்ளிவாய்க்காலில்
    பலிகொடுத்துவிட்டீர்கள். இன்னுமா திருந்தவில்லை.-துரை

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...