தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம், நிபுணர்கள் குழு விசாரணை நடத்தாது என ஐக்கிய நாடுகள் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளதாக இன்னர் சிட்டி பிரஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. இதேவேளை ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு இலங்கைக்கு செல்லாது என திவயின பத்திரிகை தெரிவித்துள்ளது. இலங்கையில் நடந்த இனப்படுகொலை ஐக்கிய நாடுகள் சபையில் மௌனத்தின் மத்தியிலேயெ நடந்தது எனப்து முன்னதாக பல அமைப்புக்கள் சுட்டிக்காட்டியிருந்தன. அதே வேளை புலம்பெயர் தமிழர்களின் அதிகாரம் சார் அரசியல் இந்த நிறுவனங்களுக்கு எவ்வகையான அழுத்ததையும் வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.







