Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

மகிந்தவின் வரவுசெலவுத்திட்டம் நிறைவேறியது, மைத்திரிபால வாக்களிக்கவில்லை!

இனியொரு... by இனியொரு...
11/24/2014
in இன்றைய செய்திகள்
0 0
3
Home இன்றைய செய்திகள்

maithiripalaமகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் 2015 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றத்தில் 95 அதிகபடியான வாக்குகளால் வெற்றியடைந்துள்ளது. இலங்கை மகிந்த குடும்ப அரசின் தரப்பிலிருந்து பெரும்தொகையான பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சிக்குத் தாவவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

57 உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டதிற்கு எதிராக வாக்களித்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி ஆகிய கட்சிகள் எதிராக வாக்களித்தன.

மகிந்தவிற்கு எதிராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் மத்திரிபால் சிறிசேன உட்பட ஆளும் கட்சியிலிருந்து கட்சி தாவிய ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கூடவே அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஜாதிக ஹெல உறுமைய கட்சியும் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
முன்னதாக வாக்களிப்பில் மகிந்த குடும்ப ஆட்சி தோல்வியடைந்தால், பாராளுமன்றம் கலைக்கபடலாம் என்று எதிர்வுகூறப்பட்டது. இந்த நிலையிலும் வாக்கெடுப்பில் எதிரணியில் இணைந்துகொண்ட ஆளும் கட்சி உறுப்பினர்கள் எவரும் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமை பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

எதிரணியில் இணைந்து கொண்ட மகிந்த ராஜபக்சவிற்கு இணையான பேரினவாதிகள் இதுவரை மகிந்தவிற்கு எதிரான வலுவான குற்றச்சாட்டுக்கள் எதனையும் முன்வைக்கவில்லை. மேலோட்டமான சில தகவல்களை மட்டுமே முன்வைத்துள்ளனர். அதே வேளை ஒடுக்கப்படும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் மத்தியிலிருந்து உரிமைகள் தொடர்பாக எதிர்க்கட்சியிடம் கோரிக்கைகளை முன்வைப்பதற்கு வலுவான அரசியல் தலைமைகள் எதுவும் காணப்படவில்லை. புலம்பெயர் நாடுகளிலிருக்கும் அரசியல் பிழைப்புவாதிகள் தலைமைக்கான வெற்றிடம்ஏற்படுவதற்கு முக்கியமான காரணமாக இன்றும் காணப்படுகின்றனர்.

இலங்கையில் மகிந்தவை மையப்படுத்தி பேரினவாதிகளுக்கு எதிரான அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்புவதை மேலும் பின்னடையச் செய்யும் இன்றைய அரசியல் தலைமைகள் வாழும் வரை அழிவுகளே எஞ்சும்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
மாவீரர் தினம் – என்ன செய்யவேண்டும்? : தர்சிகன்

மாவீரர் தினம் - என்ன செய்யவேண்டும்? : தர்சிகன்

Comments 3

  1. Parai player says:
    11 years ago

    தனதும் ஓரளவில் மகிந்தவினதும் நண்பன் லசந்த விக்கிரமசிங்கவை பட்டப்பகலில் ரத்மலானையில் பலரும் பார்த்துக் கொண்டிருக்க குரூரமான முறையில் சாகடித்த குழு இராணுவத் தளபதி பொன்சேகா-இனால் இயக்கப்பட்டது எனவும்- மேலும் அக்குழு பாதுகாப்புச் செயலாளன் கோத்தபாயா-வின் உத்தரவினடிப்படையிலேயே செயற்பட்டது எனவும் ரணில் விக்கிரமசிங்க 2009 ஜனவரி 13 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பிசுபிசுத்தான். அது தான் கடைசித் தடவை. அன்றிலிருந்து (பொய்த்) தேசிய அரசியல்வாதிகளும் ஊடகவியலாளன்களும் மகிந்த ராஜபக்சவை நேரே எதிர் கொள்வதில்லை. அதுவும் முகங்கொடுத்து குற்றச்சாட்டுக்களை வைப்பது என்பது நினைத்துக்கூட பார்க்கமுடியாததொன்றாகி விட்டது.
    போர்க்கோலத்தையே வைத்து பயப்படுத்தப்பட்ட பல அமைச்சன்களும் ஊடகவியலாளன்களும் கைப்பொம்மைகள் போல் வாராவாரம் அருகே அழைக்கப்பட்டு ராஜபக்சவினால் மறைமுகமாக கண்கட்டு வித்தை போல ஒரு யுக்தியினாலும் அடக்கப்படுவது தான் நிலைமை. குழப்பம் விளைவிக்க முயன்ற சிலர் பக்கத்திலுள்ள அறைக்கு அழைக்கப்பட்டு மகிந்த ராஜபக்சவினால் அடி வாங்கப்படுவதும் பலர் தெரிந்த உண்மை. ராஜபக்ச-உடனான கடைசி அமைச்சரவை கூட்டத்தில் சந்திரிகா எசமாட்டியை தன் மனக்கண் முன்னிறுத்தி மைத்திரிபால ஒருவாறு தப்பித்து ஓடியது பெருங் காரியம். பின்னர் வெளிப்படையாகவே கண்ணீர் வடித்து அழுது கொண்டிருக்கும் மைத்திரிபால சிரிசேன ஒரு மண்ணாங்கட்டியையும் தானாக செய்யப்போவதில்லை. சந்திரிகா, மங்கள சமரவீர மற்றும் ஒருவிதத்தில் ரணில் என்பவர்கள் ஊடாக அவர்கள் அனைவரையும் இயக்கும் சக்தி தரும் அறிவுரைகளையே மைத்திரிபால-இனால் செய்யமுடியும்.
    அதெ டிரைமறைவில் இயங்கும் சக்தியின் ஒரு கூறு சர்வதேச நாணய நிதியம். இந்த வரவுசெலவு திட்டதிற்கு மகிந்தா உரிமை கொண்டாடுவதும் ஒரு ஏமாற்று வித்தையே.
    மைத்திரிபால தவிர்க்க நேரிட்டடது முன்னெப்பொழுதுமில்லாத வகையில் சர்வதேச நாணய நிதியத்தின் வரவுசெலவு திட்டத்தையே.
    கொழும்பு பங்குசந்தை கடந்த சில நாட்களாக படும் அந்திரம் தற்போதைய திட்டமிடப்பட்ட அரசியல் ஆட்டத்தைப் பாவித்து முதலீடுகளை ஆரம்பிக்கும் தந்திரம். கொழும்பு பங்குசந்தை வரலாறு காணாத வீழ்ச்சியில் என்ற கண்கட்டு வித்தையும் உலகம் பூராக உண்மையான முதலாலித்துவ மையப்புள்ளிகளுக்கு ஒரு ரகசிய சமிக்ஞையாக ரொய்டர் அமைப்பினூடு நேற்று அனுப்பப்பட்டுள்ளது.

    • Parai player says:
      11 years ago

      திருத்தம்:-
      அதெ டிரைமறைவில் இயங்கும் சக்தி => அத்திரைமறைவில் இயங்கும் சக்தி
      மைத்திரிபால தவிர்க்க நேரிட்டடது முன்னெப்பொழுதுமில்லாத வகையில் சர்வதேச நாணய நிதியத்தின் வரவுசெலவு திட்டத்தையே => மைத்திரிபால தவிர்க்க நேரிட்டடது முன்னெப்பொழுதுமில்லாத வகையில் சர்வதேச நாணய நிதியத்தின் தலையீட்டாலான வரவுசெலவு திட்டத்தையே

  2. Alex Eravi says:
    11 years ago

    Ok, is it true premises of KKS Cement factory’s 104 acres of land. &!buildings acquired by the Defence Ministry…?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...