Monday, May 11, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

போர் நிறுத்தம் செய்ய சிறிலங்கா அரசாங்கம் முன்வர வேண்டும்:பிரணாப் முகர்ஜி.

இனியொரு... by இனியொரு...
02/28/2009
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்

28.02.2009.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்யத் தயார் என தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அறிவித்திருப்பதைப் பயன்படுத்தி, அங்கு போரை நிறுத்த சிறிலங்கா அரசாங்கம் முன்வர வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் நடைபெற்று வரும் போரால் அங்குள்ள தமிழ் மக்களின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவது இந்தியாவுக்கு மிகுந்த கவலை அளிக்கின்றது.

இலங்கையில் போர் நடைபெறும் பகுதியில் 70 ஆயிரத்திற்கும் அதிகமான அப்பாவி மக்கள் சிக்கித் தவிக்கின்றனர் என்றும், அங்கு உணவு, குடிநீர், தண்ணீர் மற்றும் மருந்துப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

போரில் அப்பாவித் தமிழர்கள் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர் என்று புதுடில்லியில் இன்று சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற ஆயிரம் உயர்வலு கொண்ட மின் உற்பத்தி நிலையத்திற்கு அடிக்கல் நாட்டி உரையாற்றும் போதும் இதே கருத்தை பிரணாப் முகர்ஜி வெளியிட்டார்.

இலங்கையில் போர் நடைபெறும் பகுதியில் சிக்கியுள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட வேண்டும் என்று இந்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.

இலங்கையில் சண்டை நிறுத்தம் செய்ய தயாராக இருப்பதாக விடுதலைப் புலிகள் இயக்கம் அறிவித்திருக்கிறது. ஆயுதங்களைக் கீழே போடுவோம் என்பதை விட இது சிறிய அறிவிப்புதான்.

எனினும் இலங்கையில் போரை நிறுத்துவதற்காக விடுதலைப் புலிகள் ஏற்படுத்தியுள்ள இந்த வாய்ப்பை சிறிலங்கா அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடாகும்.

எனவே, இலங்கையில் போரை நிறுத்தி முல்லைத்தீவு மாவட்டத்தில் சிக்கியுள்ள தமிழ் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறிலங்கா அரசை கேட்டுக்கொள்கிறோம். இந்த முயற்சிக்கு விடுதலைப் புலிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று பிரணாப் முகர்ஜி கேட்டுக்கொண்டார்.

போர் பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட வேண்டும். அவர்களுக்கு முறையான மறுவாழ்வு வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருந்து உள்ளிட்ட உதவிகளை வழங்க அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட அமைப்புக்களுக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும்.

இலங்கை வடக்கு பகுதியில் இடம்பெயர்ந்த மக்களுக்குத் தேவையான மருத்துவ உதவியை வழங்க மருத்துவர்கள், மருந்துப் பொருட்கள் அடங்கிய குழுவை இந்தியா விரைவில் அனுப்பி வைக்கும்.

போர் நிறுத்தத்திற்குப் பிறகு தமிழ் மக்கள் வாழும் மாநிலங்களுக்கு சமத்துவம், அனைத்து மக்களுக்கும் சம உரிமை உள்ளிட்ட அதிகாரங்கள் ஒன்றுபட்ட இலங்கைக்குள் வழங்கப்பட வேண்டும்.

இலங்கையில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் நலன் கருதி நான் விடுத்துள்ள இந்தத் தாழ்மையான வேண்டுகோளை சிறிலங்கா அரசும், மற்றவர்களும் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன் என்றும் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

இந்திய மத்திய அரசும் இலங்கைத் தமிழர்களும்:வெகுஜனன்

Comments 2

  1. subburam says:
    17 years ago

    நேற்று சென்னையில் நடைபெற்ற ஒரு அரங்கக் கூட்டத்தில் இலங்கையில் அரசியல் அமைப்புச்சட்டம் திருத்தப்பட்டு அது ஒரு பௌத்த நாடு என்று அறுவிக்கப்பட்டுவிட்டது என்றும் சிங்களம் மட்டுமே தேசிய மொழி என்றும் பேசப்பட்டது.அது மிகவும் மோசமான விளைவுகளை இலங்கை அரசியலில் ஏற்ப்படுத்தும். இவை குறித்த சரியான தகவல்களை எங்கே பெறுவது. உதவி வேண்டுகிறேன்.

  2. shan says:
    17 years ago

    தகவல்களை பெற:

    http://noolaham.net/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In