Friday, May 9, 2025
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

பொது வாக்கெடுப்பு ஒருஜனநாயக பொறிமுறையாகும் : மனோ கணேசனுக்கு த.தே.ம.மு பதில்

இனியொரு... by இனியொரு...
04/07/2013
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்

பொது வாக்கெடுப்பு ஒருஜனநாயக பொறிமுறையாகும்

மனோகணேசனின் நேர்காணலுக்கு தமிழ்த் தேசிய மகக்ள் முன்னணியின் பதில்.

manoஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் கடந்த (31-03-2013)ஞாயிறு தினக்குரலுக்கு அளித்த நேர்காணலில் தமிழக மாணவர்களின் போராட்டம் தொடர்பாக தெரிவித்துள்ள கருத்துக்களினால் தமிழத்; தேசிய மக்கள் முன்னணி அதிருப்தியும் ஏமாற்றமும் அடைந்துள்ளது. மனோகணேசன் முக்கியமாக பின்வரும் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
• ‘தமிழக மாணவர்கள் அரசியல் கோரிக்கைகளை முன்வைப்பதனை தவிர்த்து மனித உரிமைகள் தொடர்பான கோரிக்கைகளையே முதன்மைப்படுத்த வேண்டும்’.
• ‘மனித உரிமை மீறல் என்பதுதான் இன்றைய உலகை உலுக்கும் ஒரே மகா மருந்து’.
• ‘மாணவர்கள் அரசியல் கோரிக்கைகளை முன்வைத்தால் இந்திய மத்திய அரசுக்கும் அதே அரசியல் அடிப்படையில் மாணவர் போராட்டங்களை நிராகரிக்க வாய்ப்பு ஏற்படும்’.
• ‘அரசியல் கோரிக்கைகளை முன்வைக்கும் பொறுப்பினை தமிழ் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிடமே விட்டுவிடவேண்டும்’.
• ‘தமிழக மாணவர்கள் அரசியல் கோரிக்கைகளை வைப்பதாக இருந்தால் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துங்கள் என்பதனையே முன்வைத்தல் வேண்டும்’.
• ‘தமிழக மாணவர்கள் முன்வைத்த பொது வாக்கெடுப்பு கோரிக்கையினை சர்வதேச மனித உரிமை நிறுவனங்கள் கூட ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அவை தமிழ் மக்களின் மனிதாபிமான நெருக்கடிகளைப்பற்றி பேசுவதையே நிறுத்திவிடலாம்’.
• ‘இலங்கை பற்றி முழுமையான அரசியல், புவியியல், சமூகவியல் தெளிவுகளில்லாமல்
தமிழக மாணவர்கள் போராட்டங்களை முன்னெடுக்கின்றனர். சரியான திசைநோக்கி வழிநடாத்தப்படாதது ஒருபுறமிருக்க அவர்களுக்கு சிலர் பிழையான பாதையைக் காட்டி வருகின்றனர்’. மேற்குறிப்பிட்ட கருத்துக்கள் தமிழ் மக்களின் இதுவரை கால
தியாகம் நிறைந்த அரசியலை கொச்சைப்படுத்துவதாக உள்ளதுடன், தமிழர் தாயகத்திற்கு வெளியே வாழ்ந்தபோதும் கடந்த காலங்கலங்களில் தமிழ் மக்களிற்காக பல போராட்டங்களை முன்னின்று நடாத்திய மனோகணேசன் தமிழக மாணவர்கள் முன்வைத்துள்ள அரசியற் கோரிக்கைகள் தொடர்பில் அதிருப்தியான கருத்துக்களை தெரிவித்திருப்பது கவலையளிக்கின்றது. தமிழ் மக்கள் இன்று எதிர்நோக்கும் மனித உரிமைகள் மற்றும்
மனிதாபிமானப் பிரச்சனைகளானவை அவர்களது நீண்டகால அரசியல் பிரச்சனையின் விளைவுகள் மட்டுமேயாகும். எனவே எமது மக்களது பிரதான கோரிக்கைகள் அரசியல் பிரச்சினையை அடிப்படையாக கொண்டதாக இருக்க
வேண்டும் என்றே எமது கட்சி கருதுகின்றது. மனித உரிமை கோரிக்கைகளை முன்வைத்தால் கூட அரசியல் இலக்கு நோக்கியே மக்களை நாம் கொண்டு செல்லவேண்டும். இந்த வகையில் தமிழக மாணவர்களின் அரசியல் கோரிக்கைகளை எமது கட்சி வரவேற்கின்றது. அவர்களது கோரிக்கைகளுக்கு காரணம் சிறிலங்கா அரசின் மிகமோசமான தமிழின அழிப்புச் செயற்பாடுகளேயாகும். தமிழ் மக்களால் ஆரம்பக்காலம் தொட்டே நிராகரிக்கப்பட்டுவந்த 13 வது திருத்தம் தமிழ் மக்களது அபிலாசைகளை பூர்த்தி செய்வதற்கு சிறிதளவு கூட பொருத்தப்பாடு உடையதல்ல. இது பற்றி நாம் முன்னரும்; பல தடவை கூறியிருக்கின்றோம். இது தமிழ் மக்களின் தேசம், இறைமை, சுயநிர்ணயம் என்கின்ற அடிப்படைக் கோட்பாடுகளை குழிதோண்டிப் புதைப்பதுடன், என்றென்றும் தமிழ்த் தேசத்தை சிங்கள தேசத்திற்கு அடிமையாக்குகின்றது.
இந்தியா அல்லது சர்வதேச சமூகம் விரும்புகின்ற கோரிக்கைகளைத்தான் வெறுமனே தமிழக மாணவர்கள் முன்வைக்க வேண்டும் என மனோகணேசன் கருதுவாராக இருந்தால் தமிழ் மக்களுக்கென தனியான அரசியலும் தேவையில்லை, தலைவர்களும்
தேவையில்லை. தமிழ் மக்களின் அபிலாசைகளை ஒன்று திரட்டி முன்வைத்து வெற்றி ஆக்குவதற்குத்தான் தனியான அரசியலும் அதனை முன்னெடுப்பதற்கான தலைவர்களும் தேவை. அந்த வகையில் தமிழ் மக்களின் உரிமைக்காக பல்வேறு தளங்களில் நடைபெற்றுவரும் போராட்டங்களில் ஓர் அங்கமான தமிழக மாணவர்களின் போராட்டமானது ஈழத் தமிழ் மக்களின் அரசியலில் மிகக் காத்திரமான பங்கு வகிக்கின்றது. சர்வதேச மனித உரிமை நிறுவனங்கள் அரசியல் கோரிக்கைகளை முன்னெடுப்பதற்காக உருவாக்கப்பட்டவை அல்ல. அவை மனித உரிமை விவகாரங்களை கையாள்வதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டவை. எவர், என்ன அரசியல் கோரிக்கைகளை முன்வைத்தாலும் அக்கோரிக்கைகளில் உடன்பாடுகள் இல்லா விட்டாலும் அவ்வமைப்புக்கள் மனித உரிமை விவகாரங்களை
முன்னெடுத்;தே செல்லும். மனித உரிமை நிறுவனங்கள் மாணவர்களின் அரசியல் கோரிக்கைகளை விரும்பாவிட்டாலும் கூட எமது மக்களின் இருப்பை உறுதிப்படுத்தக்கூடிய அரசியல் கோரிக்கைகளை வலியுறுத்துவதனை நாம் ஒருபோதும் கைவிட முடியாது.
அரசியல் கோரிக்கைகள் முன்வைப்பதை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிடம் விட்டுவிட வேண்டும் எனவும் மனோகணேசன் கூறுகின்றார். இது எந்த வகை ஜனநாயகத்தை சேர்ந்தது என்பது எமக்குப் புரியவில்லை. ஜனநாயக சிந்தனையின் படி மாற்றுக்
கருத்துக்களை முன்வைக்கும் உரிமை அந்த விவகாரத்துடன் அக்கறை உள்ள அனைத்துத் தரப்புகளுக்கும் உண்டு. தமிழக மாணவர்கள் மட்டும் இதற்கு விதி விலக்காக இருக்க முடியாது. மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தேர்தலில் மக்கள் 13 வது திருத்தத்தினை நடைமுறைப்படுத்த வேண்டுமெனக் கோருவதற்கான ஆணையை எந்தவொருசந்தர்ப்பத்திலும் வழங்கவில்லை. மாறாக தேசியம் சுயநிர்ணயம் என்பவற்றிற்கான ஆணையினையே வழங்கியுள்ளனர். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் வழங்கிய ஆணைக்கு துரோமிழைக்கும் வகையில் 13வது திருத்தத்தினையே அமுல்படுத்துமாறு கோருகின்றது. இந்நிலையில் அரசியல் கோரிக்கைகளை தீர்மானிக்கும் தகுதியை கூட்டமைப்பு முழுமையாக இழந்துள்ளது.
தாயகத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஜனநாயக உரிமைகள் இருப்பதால் இங்கு இருப்பவர்கள் முழுமையான கருத்துக்களை முன்வைக்க முடிவதில்லை. தமிழகத்தில் ஜனநாயக வெளி ஒப்பீட்டில் அதிகமாக இருப்பதால் அவர்கள் சற்று முன்கையெடுத்து செயற்படுகின்றனர். இந்த முன்கையெடுப்பு முயற்சிகளை நாம் எல்லோரும் வரவேற்க வேண்டுமேயன்றி குழப்புவதாக இருக்கக்கூடாது.
தமிழ் மக்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பினை சர்வதேசம் ஏற்காது என்று மனோகணேசன் கூறுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது. பொது வாக்கெடுப்பு ஒரு ஜனநாயக பொறிமுறையாகும். ஒரு இனத்தின் தலைவிதியினை தீர்மானிக்கும் செயல்முறையினை ஓர் அரசியற் கட்சியிடம் விட்டு விடுவதனைவிட அதனை அம்மக்களிடம் விட்டு விடுவதே ஐனநாயகத்தின் உச்சப்பண்பாகும். இந்த பொதுவாக்கெடுப்பு முறை கியூபெக்(கனடா), கிழக்குத்தீமோர், தென்சூடான், கொசேவாஉட்பட பல இடங்களில் பின்பற்றப்பட்டுள்ளது. மேலும் ஸ்கொட்லாந்து (பிரித்தானியா), கற்ரலோனியா (ஸ்பெயின்) உட்பட பல இடங்களில் பின்பற்றப்பட உள்ளன.
ஒரு பேச்சுக்காவது சர்வதேச சக்திகள் தமது நலன்களின் அடிப்படையில் இதனை விரும்பாதுவிட்டாலும், ஜனநாயக நிலை நின்று அதனை வலியுறுத்த வேண்டிய கடப்பாடு தமிழ் மக்களுக்கு உண்டு. சர்வதேச சக்திகள் தமது பூகோள அரசியல் நலன்களை முன்னிலைப்படுத்தியே முடிவுகளை எடுக்கின்றன என்பதனையும், இவற்றிற்கெல்லாம் தமிழ் மக்களையே கருவியாகப் பயன்படுத்த முற்படுகின்றன என்பதனையும் நன்றாகப் புரிந்து கொண்டஅடிப்படையிலேயே தமிழக மாணவர்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்து போராடுகின்றனர். சர்வதேச சக்திகள் தமது நலன் சார்ந்த பூகோள அரசியலின்;
அடிப்படையிலேயே செயற்படுகின்றன என்பதனை நீண்டகால அரசியல் அனுபவம் கொண்ட மனோகணேசன் அவர்கள் அறியாமல் இருப்பதும், இலங்கை பற்றி முழுமையான அரசியல், புவியியல், சமூகவியல் தெளிவுகளில்லாமல் தமிழக மாணவர்கள் போராட்டங்களை முன்னெடுக்கின்றனர் என விமர்சனங்களை முன்வைப்பதும் கவலையையும் ஏமாற்றத்தயும் அளிக்கின்றது.
தமிழர் தாயகத்திற்கு வெளியில் வாழ்ந்தவாறு அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் மனோகணேசனுக்கு வடக்கு கிழக்கை தாயகமாகக் கொண்டு வாழும் தமிழ் மக்களது அரசியல் தலைவிதி தொடர்பாக கருத்துத் தெரிவிப்பதற்கு எந்தளவு உரிமை உள்ளதோ, அதேயளவு உரிமை தமிழக மாணவர்களுக்கும் உண்டு என்பதனை நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
செங்கடல் – என்னோடு பயணிக்கவில்லை : கவிதா (நோர்வே)

செங்கடல் - என்னோடு பயணிக்கவில்லை : கவிதா (நோர்வே)

Comments 2

  1. Thavachandran says:
    12 years ago

    ஒரு மாலைப் பொழுதை  ஈழத்தில்   யாரோடு  பகிருந்து கொள்ள  விருப்பம்  என்று  கேட்டால்  தயங்காமல்  மனோ சார்  என்று   சொல்லியிருப்பேன்  இந்த  செய்திக்கு  முதல்…

  2. Mahendra says:
    12 years ago

    சிங்களனையும் இந்தியனையும் திருப்தி செய்துதான் ஈழத்தமிழர் உரிமைபெற வேண்டுமாயின் இன்னும் இலட்சக்கணக்கான தமிழர்கள் தங்களது உயிரைக் காவு கொடுத்தாலும் அது நடைபெறாது.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...