Monday, May 12, 2025
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

பொதுவுடமை போராளி சூடாமணியுடனான அனுபவ பகிர்வு : சை. கிங்ஸ்லி கோமஸ்

இனியொரு... by இனியொரு...
10/12/2011
in போராளிகள் டயரி, அரசியல்
0 0
4
Home அரசியல் போராளிகள் டயரி

மனித நேயம் உலகின் மாற்றத்தின் முதல் அத்தியாயம் என்று உறுதியாய் வாழும் பொதுவுடமை போராளி சூடாமணியுடனான அனுபவ பகிர்வு

2011.10.08 தினம் வவுனியா தோணிக்கல் பிரதேசத்தில் வித்தியாசமான நிகழ்வொன்றில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது. தனது 75 ஆவது வயதினை பூர்த்தி செய்த மூத்த பொதுவுடமை போராளி இ.கா. சூடாமணியின் பிறந்த தினத்தை முன்னிட்டு புதிய ஜனநாயக மார்க்சிய லெனினிச கட்சியின் வவுனியா கிளை, தோழர் சூடாமணியின் குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து தோழர் சூடாமணியின் அனுபவப் பகிர்வொன்றினை ஏற்பாடு செய்திருந்தது.

முதிர்ச்சி,அனுபவம் ,பொறுமை ஆகிய மூன்றையும் இணைத்து மனித நேயத்தினை அடிநாதமாக கொண்டு மானுட விடுதலைக்கான பாதையினை வெட்டிய தோழர் சூடாமணி, சீனத்துக் கிழவன் மலை வெட்டப் போன கதையினை ஞாபகமூட்டியதனைக் காணக்கூடியதாய் இருந்தது.கடந்த பல மாதங்களாக வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த இவர் தனது தோழர்களை சந்திக்க பெரும் ஆவல் கொண்டிருந்ததன் காரணத்தாலும் அவரது வாழ்வும் தியாகமும் இன்றைய இளம் தலைமுறையினருக்கு பெரும் படிப்பினையாக அமைந்தது.

யாழ்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட சூடாமணி

கடந்த 60 வருடங்களாக பொதுவுடமைத்தத்துவத்தை ஏற்றுக் கொண்டவராக மாத்திரம் வாழாது சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களில் கலந்து பொலிசாரினால் தாக்கப்பட்டவர் என்பது மட்டுமல்ல பலமுறை பொலிசாரின் ஒடுக்கு முறை காரணத்தினால் சிறையில் அடைக்கப்படடு விடுதலை செய்யப்பட்டவர் என்பது மாத்திரம் அல்லாமல் இன்று யாழ் நகர இந்து ஆலயங்களில் எல்லா மனிதர்களும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடின்றி சுதந்திரமாக ஆலய தரிசனம் செய்கின்றார்கள் இந்த ஆலய நுழைவு போராட்டங்களில் இரத்தம் சிந்தியவர்கள் பலர் இருக்கின்றார்கள் என்பதற்கு ஆதாரம் சூடாமணி என்றால் மிகையாகாது.யுத்தத்தின் போது கால்களை இழந்த தனது மனைவியின் கடினமான வாழ்க்கை; புலம் பெயர்வு; தொழில் இழப்பு வறுமை என்று பல இன்னல்களுக்கு முகம் கொடுத்தாலும் மிக திடமாக தான் கொண்ட கொள்கையில் இருந்து சற்றும் தளராமல் இன்றும் தனது கட்சிக்காய் உழைத்துக் கொண்டு இருப்பதனை பெருமையாக கூறுகின்றார் சூடாமணி.

சின்ன சின்ன சலுகைகளுக்காக தங்களின் கட்சியை கொள்கையை தூக்கி எறிந்தவர்கள் மத்தியில் துப்பாக்கி அச்சுறுத்தல்களுக்கு பயந்து பொது வுடமையi காட்டிக் கொடுத்து தமிழ் தேசியத்தினுள் புதைந்து போனவர்கள் மத்தியில் குடும்பத்தில் இருந்து வரக் கூடிய விமர்சனங்கள் அதைரியப்படுத்தக்கூடிய கதையாடல்களை வெற்றிக் கொண்டு தான் மாத்திரம் இல்லாமல் தனது குடும்பத்தினரையும் கொள்கைப் பிடிப்பாளர்களாக செதுக்கி வவுனியா பிரதேசத்தில் பு.ஜ.மா.லெ.க பலரை உள்வாங்கி தனது கடமையை மிக சரியாக செய்து முடித்துள்ளார்.

மலையகத்தின் மக்கள் போராட்டங்கள் பலவற்றிலும் இவர் பங்கெடுத்துள்ளார் என்பதனை மலையக தோழர்கள் பலர் சுட்டிக் காட்டத் தவறவில்லை.

தோழர்கள் நண்பர்கள் உற்றார் உறவினர்கள் வாழ்த்து கூற புரட்சிப்பாடல்,கவிதைகள், என நடைப் பெற்ற நிகழ்வின் போது ஒவ்வொரு பிறந்த தினத்தின் போதும் கட்சிக்காகவும் தேசிய கலை இலக்கிய பேரவைக்கும் தான் வழங்கும் நன்கொடையை இம்முறையும் வழங்கியது மாத்திரம் அல்லாது தனக்கு கிடைத்த பணநன்கொடைகள் அனைத்தையும் ஒரு மாணவனிண் மருத்துவ செலவிற்காக அந்த மேடையிலேயே வைத்து வழங்கியது அனைவரினதும் கண்களை கலங்க வைத்தது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு மலையகம் யாழ்ப்பாணம் மட்டக்களப்பு சப்ரகமுவ போன்ற பிரதேச தோழர்களும்; கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர்களும் உறவினர் நண்பர்களும் கலந்து இந்நிகழ்வை சிறப்பித்தனர்

65 வருடங்களாக தான் கொண்ட தத்துவத்தினுள் மக்களுக்காய் வாழ்ந்த வாழும் தோழர் சூடாமணி தொடர்பான நூல் தயாராகி வருவதுடன் அவர் தொடர்பான ஆவணப் படம் ஒன்றும் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது இவரது வாழ்வும் பகிர்வும் களப்பணியும் இளைய தலைமுறையினரின் இதயத்தில் பதிய வேண்டிய பாடங்களாகும்

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

உள்ளாட்சித் தேர்தலும் உழைக்கும் மக்கள் கடமையும் -ஓர் அறைகூவல்

Comments 4

  1. udayasoorian says:
    14 years ago

    சிறப்பான கட்டுரை. தோழர் சூடாமணியின் தத்துவ ஞானம் அதனை சாத்தியமுள்ள வகையில் பிரயோகித்தல் ஏனையவர்களுக்கு வழி காட்டல் போன்ற ஆற்றல்களையும் கொண்டிருப்பவர். அவரது இன்னொரு ஆற்றல் சகல நிகழ்வுகளையும் ஞாபகத்தில் வைத்திருத்தலாகும். பொதுவுடைமைத்; தத்துவத்தை ஆழ்ந்து கற்றல் வெற்றிகரமாக பிரயோகித்தல் தாபனத்தைக் கட்டியெழுப்புதல் ஆகிய செயல்களின் மூலம் தொழிலாளர் வரக்க விடுதலை நோக்கி பயணித்தல் நாம் அவருக்கு செய்யும் கெளரவமாகும்.

  2. maran says:
    13 years ago

    உண்மைல கேக்கும் போது மனசுக்கு சந்தோசமா இருக்கு வாழ்க 100 வருடம்
    சூடாமணி அவர்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்

  3. kingsley says:
    13 years ago

    nandri

  4. ந.முரளிதரன் says:
    13 years ago

    நான் படித்த கல்லூரியான காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரிக்கு அண்மையில்தான் அவரது(சூடாமணி) கடை இருந்தது. சாதி எதிர்ப்புப் போராட்டத்தில் அவரது பங்களிப்பு அந்நாட்களிலேயே எமக்குத் தெரிந்திருந்தது. அடக்கமும், அமைதியும் கொண்ட அவர் இன்றும் வாழ்ந்து கொண்டு தான் வரித்த கொள்கைக்காகப் போராடுவது என்னை வியக்க வைக்கிறது.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...