Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

புலிசார் புலம்பெயர் குழுக்களுக்கு மக்கள் பற்றிருந்தால்…? : அஜித்

இனியொரு... by இனியொரு...
04/23/2011
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
7
Home பிரதான பதிவுகள் | Principle posts

ஐக்கிய நாடுகள் சபையின் யுத்தக் குற்றங்கள் தொடர்பான அறிக்கை உலகின் குறித்துக் காட்டத்தக்க பல அரசியல் தளங்களில் ஈழத் தமிழர் போராட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. மனிதாபிமானிகள், சமூக உணர்வு மிக்கோர் போன்ற பலர் இன்று ஈழப் போராட்டத்தையும் அதன் ஊற்றுமூலமாக அமைந்த அவலத்தையும் திரும்பிப் பார்க்கிறார்கள். ஈழத்தில் பயங்கரவாதம் வெற்றிகொள்ளப்படவில்லை மாறாக மக்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற உண்மை உலக மக்களின் ஒரு பகுதியினர் ஏற்றுக்கொள்வதற்கான வெளியை இது உருவாக்கியுள்ளது.

அழிவுகளை தடுப்பதற்கான இடைவெளியாக இதனை நாம் பயன்படுத்திக்கொள்ள நிறையவே வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

இலங்கை அரசின் பாசிச சர்வாதிகாரம் குறித்த உலகளாவிய பொது அபிப்பிராயத்தை உருவாக்கவும் அதனூடாக இலங்கை அரசிற்கு அழுத்தங்கள் வழங்கவும் நிபுணர் குழுவின் அறிக்கையைப் பயன்படுத்தும் அரிய வாய்ப்பினை மக்கள் பற்றுள்ள அனைத்துத் தரப்பினரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இலங்கை அரச உளவுத்துறையினதும் அரச துணைக் குழுக்களதும் கொலைக் களமாக மாற்றமடைந்துள்ள வடக்கு கிழக்கில் குறைந்தபட்ச ஜனநாயக வெளியை ஏற்படுத்த புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் அரசியல் சக்திகள் அறிக்கையையைப் பயன்படுத்திக் கொள்வார்களானால் அழிவுகளை மட்டுப்படுத்தும் நிலையை உருவாக்கலாம்.

ஆக, தாம் வாழ்ந்த தேசத்தின் மீதும் மக்கள் மீதும் பற்றுள்ள ஒவ்வொருவரும் நிபுணர் குழுவின் அறிக்கையை இலங்கை அரசிற்கு எதிராகப் பயன்படுத்தத் தவறின் ராஜபக்ச குடும்பத்தின் சர்வாதிகார ஆட்சியையும் அதன் பின்னால் அணிதிரளும் பேரினவாதிகளையும் மிக நீண்ட காலத்திற்கு அழிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுவோம்.

வெளியாகியுள்ள யுத்தக் குற்றங்கள் குறித்த அறிக்கையின் பல்வேறு பகுதிகளிலும் இலங்கை அரசின் கோர முகத்தைக் கண்டுகொள்ளும் அதே வேளை புலிகளின் யுத்தக் குற்றங்களும் சுட்டிக்காட்டுள்ளப்பட்டுள்ளதையும் அவதானிக்கலாம். இலங்கை அரசு தன் மீதான குற்றச் சாட்டுக்களை நிராகரிக்கும் அதே வழிமுறையில் புலி சார் அமைப்புக்கள் புலிகளின் மீதான குற்றங்களை நிராகரிக்குமானால் அதன் எதிர்விளைவுகள் மக்கள் சார்ந்ததாக அமையாது. இரண்டு யுத்தக் குற்றவாளிகளுக்கு இடையேயான பிரசாரப் போர் போன்றே அது கருதப்படும்.

ஆக, அறிக்கையைப் பெறுமானமுடையதாக உள் வாங்கிக் கொள்ள வேண்டியதும், அதன் பெறுமானங்களை மக்கள் சார்பானதாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியதும் ஜனநாயகத்தை விரும்பும் ஒவ்வொரு மனிதனதும் பொறுப்பு.
இந்த நிலையில் புலி சார் அமைப்புக்களான பிரித்தானியத் தமிழர் பேரவை,ஐரோப்பிய நாடுகளில் செயற்படும் தமிழர் பேரவைகள், உலகத் தமிழர் பேரவை, நாடுகடந்த தமிழீழம், சர்வதேசச் செயலகம், தலைமைச் செயலகம் போன்ற அனைத்தும் மூன்று பிரதான விடயங்களைக் கருத்தில் கொள்ளவேண்டும்.

1. புலிகள் என்ற அடையாளத்தைத் தொடர்ச்சியாகப் பேணுதல் குறித்து மறு பரிசீலனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும்.

2. தமது கடந்தகால அரசியல் குறித்த வெளிப்படையான சுய விமர்சனத்தை முன்வைத்தல்.

3. தொடர்ச்சியான வெளிப்படைத் தன்மையைப் பேணுகின்ற அரசியலை முன்னெடுத்தல்.

முதலில், புலிகளின் கொடி, சின்னம், அடையாளம் போன்றன தொடர்ச்சியாகப் பேணப்படுமானால் அதன் பின்னால் ஒளிந்திருக்கும் யுத்தக் குற்றங்களையும் நாம் பேணிக்கொள்கிறோம் என உலக மக்களுக்கு மீண்டும் மீண்டும் கூறுவதாக அமையும்.

ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை இந்த குறியீடுகள் அடையாளங்களுக்கு அப்பால் அழிவிலிருந்து பாதுகாத்தலே இன்றைய பிரதான பிரச்சனையாக அமைந்திருக்கிறது. குழுவாதம்; அதிலிருந்து வெளிப்படும் குறுகிய நலன்கள் போன்ற இன்னொரன்ன புலம் பெயர் புலிசார் அமைப்புக்களின் நலன்கள் அவர்களுக்கு அன்னியமானது.

இரண்டாவதாக, புலிசார் அமைப்புக்கள் தம்மை வெளிப்படையாகச் சுயவிமர்சனம் செய்துகொள்ளத் தவறின் அவர்களது ஒவ்வொரு நடவடிக்கைகளும் யுத்தக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புபடுத்தியே இனம்காணப்படும். இலங்கை அரசின் இன்றைய நிலைப்பாட்டிற்கும் இவர்களுக்கும் வேறுபாட்டைப் பிரித்தறிய உலகம் முழுவதுமுள்ள ஜனநாயக சக்திகளுக்கு இவ்விமரசனம் பயன்படும். விமர்சனங்கள் அழிந்துபோவதற்காக அல்ல, செழுமைப்படுவதற்கே பயன்படுகின்றன.

மூன்றாவதாக, சுய விமர்சனத்தினூடான வெளிப்படைத் தன்மை உருவாகுமானால், தொடர்ச்சியான புலம் பெயர் அரசியலை அது மேலும் வலுவடையச் செய்ய்யும்.

இவை அனைத்தையும் புலி சார் அமைப்புக்கள் கருத்தில் கொள்வார்களானால்,

1. அவர்கள் குறுகிய குழுவாதத்திற்காக அன்றி மக்களின் நலன்களுக்காகவே போராடுகிறார்கள் என்ற தோற்றப்பாடு உருவாகும்.

2. இலங்கை அரசும் அதன் ஆதரவுக் குழுக்களும் புலம்பெயர் அமைப்புக்களை நோக்கி விரலை நீட்டி “நீங்கள் இன்னும் குற்றவாளிகள் ” என்று கூற முடியாத நிலை உருவாகும்.

3. நிபுணர் குழுவின் அறிக்கையை உலகின் முன்னால் கறைபடியாத கரங்களோடு கொண்டு செல்ல முடியும்.

4. வன் முறை யுத்தமாக மட்டுமே கருதப்பட்ட போராட்டம் செழுமைப்படுத்தப்பட்டதாகக் கருதப்பாட்டு முன் நகர்த்தப்படும்; வளர்ச்சி பெறும்.

5. இனவாதமாகக் கருதப்பட்ட போராட்டம், புதிய சிந்தனைத் தளத்தில் முன்னேசெல்லும்.

6. சிங்கள மக்கள் மத்தியிலும், ஏனைய சிறுபான்மைத் தேசிய இனங்கள் மத்தியிலும் ஆரோக்கியமான உரையாடல் வெளியும் அதனூடாக ராஜபக்ச சர்வாதிகாரத்திற்கு எதிரான இணைவும் உருவாகும்.

7. தேசியத்தைப் பயனபடுத்தி அரசியல் களத்தில் வியாபாரிகளாக உலாவும் பலர் வெளிச்சத்திற்கு வருவார்கள்.
குறுகிய தேசிய வாதத்தையும் அதன் வழியேயான அடையாளத்தையும் தமது அரசியலாகக் கொண்ட புலிசார் அமைப்புகள் தம்மை புதிய அரசியலை நோக்கிச் செலுத்துவதற்கான சோதனக் களமக இத்னைக் கருதிக்கொள்ளலாம். இன்னும், குறுங் குழுவாதமா அன்றி மக்கள் நலனா பிரதானமானது என்ற வினாவிற்கான விடையை அவர்களிடமிருந்தே எதிர்பார்க்க வேண்டும். மீண்டும், நிபுணர் குழுவின் அறிக்கையைப் பயன்படுத்தும் அரிய வாய்ப்பினை மக்கள் பற்றுள்ள அனைத்துத் தரப்பினரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

யுத்தக் குற்றச்சாட்டு - அரசின் முன்னால் உள்ள சவால்களும் புலம் பெயர் தமிழர்களின் கடமையும் : பாக்கியசோதி சரவணமுத்து

Comments 7

  1. Joseph says:
    15 years ago

    ketta pinbu gnyaani

  2. ethayam says:
    15 years ago

    மகிந்தவை வசப்படுத்திக் கொண்டாலும் தூக்கி எறிந்தாலும் அதன் பின் தயாபரன் உருத்திரகுமாரன் இத்தியாதிகள் பக்கம் (யார் இந்த யுத்தத்தை மூர்க்கத்தனமாக நடத்தி கொண்டிருந்தார்களோ) யுத்தக் குற்றத்தை திருப்புவார்கள். ஆனால் இவர்கள் மக்களுக்காக சுயவிமர்சனம் செய்ய போவதில்லை. வேண்டுமானால் ஐ.நா வின் எஜமானர்கள் காலடியில் விழுந்து நக்குவார்கள்.

  3. indiran says:
    15 years ago

    வரவேற்கத்தக்க கட்டுரை.ஆனால் புலிக்கொடி வேறு தமிழீழ தேசியக்கொடிவேறு.

  4. MANMATHAN -EMIL says:
    15 years ago

    1=RECONCILIATION -ON EASTER SUNDAY IF YOU CAN
    2=மூன்று பிரதான விடயங்களைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
    =================================================================

    1. புலிகள் என்ற அடையாளத்தைத் தொடர்ச்சியாகப் பேணுதல் குறித்து மறு பரிசீலனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும்.

    2. தமது கடந்தகால அரசியல் குறித்த வெளிப்படையான சுய விமர்சனத்தை முன்வைத்தல்.

    3. தொடர்ச்சியான வெளிப்படைத் தன்மையைப் பேணுகின்ற அரசியலை முன்னெடுத்தல்.
    ================================================
    3=THE 3 TAMIL LEADERS NOW MUST TALK TO EACH OTHER
    RAJ SAMPANTHAR, RUDRAKUMARAN-FR ESJAY EMMANUEL

  5. MANMATHAN -EMIL says:
    15 years ago

    THE UN REPORT IS A GOOD START
    OR A GOOD NON -STARTER??
    PLEASE DIACUSS

  6. MANMATHAN -EMIL says:
    15 years ago

    DR MOORTHY(AN INNOCENT VICTIM OF CIRCUMSTANCE>

    WILL BE RELEASED FROM JAIL >ON 26TH APRIL 2011 OR 2015? OR 2020??
    ======================
    HE WENT IN 2006??
    MANMATHAN

  7. sinnathurai says:
    15 years ago

    வன.பிதா.இமானுவல் ஐயாவின் நேர்காணல் இக்கட்டுரைக்குப் பொருத்தமாக இருக்கிறது.http://transcurrents.com/tc/2011/04/allegations_against_ltte_must.html

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...