எதிர்வரும் 7,8,9 ம் திகதிகளில் பிரித்தானிய தமிழா் பேரவையினால் பிரித்தானிய அனைத்துக்கட்சி பாராளுமன்றக்குழுவினருடன் இணைந்து நடாத்தவுள்ள மாநாட்டில் நிறைவேற்றவுள்ளதாக கூறி அவா்களால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பார்வைக்கு கடந்த 2ம் திகதி அனுப்பிவைக்கப்பட்ட தீர்மானம் முக்கியமான சில அடிப்படைகளை வலியுறுத்தத் தவறியுள்ளமையினால் தீர்மானத்தில் உள்ளடக்கப்படவேண்டிய முக்கிய விடயங்கள் தொடர்பான மாற்று யோசனை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவா்களால் ஏற்பாட்டாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் பிரதி மொழியாக்கத்தோடு இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் மீதான சிறிலங்கா அரசின் வெறுப்புணர்வு என்பது நீண்டகாலமாக இருந்து வருவது. பிரித்தாநியாவிடமிருந்து சிங்களத்துக்கு அதிகாரம் கைமாற்றிக் கொடுக்கப்பட்டபோதிருந்தே தமிழினம் என்ற ஒன்று இல்லாமல் செய்து விட சிங்களம் முயன்று வருகிறது.
தமிழர்களின் வரலாற்றுப் பூர்வமான தாயகம் அரசினால் உந்தப் பட்ட சிங்களக் குடியமர்வுகளால் தனது புவியியலை இழக்குமாறு சிதைக்கப்பட்டு வருகிறது.
°தமிழ் மக்களின் மொழி உரிமை மறுக்கப் பட்டு வருகிறது.
°தமிழ் மக்களின் கலாசார பாரம்பரியம் அழிக்கப்பட்டு அவர்களது கல்வி புறக்கணிக்கப் படுகிறது.
°தமிழ் மக்களின் தன்னிலை வாய்ந்த பொருளாதாரம் கையறு நிலைக்கு தள்ளப் பட்டு அழிக்கப் பட்டு வருகிறது.
°தமிழர் தாயகம் புத்தமயமாக்கப் பட்டு வருகிறது.
தமிழ் மக்கள் இந்தப் போக்கினை ஜனநாயக வழியில் அரசியல் ரீதியாக எதிர்த்தபோது சிறிலங்க அரசு அவர்கள் மீது வன்முறையையும் சாவையும் கட்டவிழ்த்து விட்டது.
இந்த சூழமைவில் தமிழ் மக்கள் கடைசி புகலாக ஓர் ஆயுதப் போராட்டத்தை தொடங்கி சிறி லங்கா அரசின் அழிப்பு வேலைகளை எதிர்த்ததோடல்லாமல் தமது அரசியல் உரிமைகளை தமிழ் தேசத்துக்கு தனியுரிமையை நிலைநாட்டிடவும் முயன்றனர். இந்த நிகழ்வுப் போக்கின் போது தமிழ் தேசத்தின் இருப்பானது திட்டமிட்டமுறையில் சுருக்கப் பட்டது. அதே வேளையில் பயங்கரவாதத்துக்கெதிரான போர் என்ற போர்வையில் சிறிலங்கா அரசு தமிழ் மக்களை தனது சிங்களர் மட்டுமே இடம்பெற்ற ராணுவத்தைக் கொண்டு இனப் படுகொலை செய்தது.
தற்போது தமிழர்களின் கருவி வழி எதிர்ப்பின்றி நிலவும் சூழலில் சிறி லங்கா அரசானது தனது முந்தைய பல்முனை அழிப்பு வேலைகளை தமிழினத்தின் மீது கட்டவிழ்த்து விட்டு வருகிறது.
டப்ளினில் நடைபெற்ற சிறி லங்கா மீதான நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் முடிவுகளையும், பரிந்துரைகளையும் ஏற்று பாராட்டுகிறோம்.
ஐ.நா. பொதுச்செயலரால் நியமிக்கப் பட்ட ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை ஏற்று பாராட்டுகிறோம்.
தமிழ் மக்கள் மீதான சிறி லங்கா அரசின் மொத்த நடத்தையையும் பற்றி, குறிப்பாக போர்க் குற்றம், மனித இனத்துக்கெதிரான குற்றம் தமிழினப் படுகொலைக் குற்றம் ஆகியன பற்றி ஒரு ‘தன்னிச்சையான அனைத்துலக விசாரணை’ நடத்தப்பட வேண்டுமென்று நாங்கள் கோருகிறோம்.
இது சார்பாக அனைத்துலக மட்டத்தில் இந்திய மற்றும் இங்கிலாந்து பிரதமர்கள் பொருத்தமான அனைத்துலக அமைப்புகளின் மற்றும் வழிமுறைகளின் மூலம் நடவடிக்கை எடுக்கக் கோருகிறோம்.








So nice that they are talking about us all over the world.
இனப்படுகொலை வழக்கு பரபரப்பு உண்மை நிலை என்ன ?????? ——சட்டத் துறை ஆய்வு —-
இனப்படுகொலை விசாரணை என்பது ஐ.நா சட்டங்களுக்குஅமைய ஏதாவது ஒரு உறுப்பு நாட்டினால் ஆரம்பிக்கக் கூடியவிடயம்.
இனப்படுகொலை வழக்கு, 1948 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி எடுக்கப்பட்ட ஐ.நா தீர்மானம் 260(iii) இற்கு அமைய தொடரக் கூடியதாகும்.
260 Resolution 260 (III) A of the United Nations General Assembly on 9 December 1948.
இந்த தீர்மானத்தில் இலங்கையும் கையெழுத்து இட்டு உறுப்பு நாடாக உள்ளது. ஆனால் சர்வதேச குற்ற நீதிமன்றில் இலங்கை உறுப்பு நாடாக இல்லை என்பதை மேலே பார்த்தோம். இனப்படுகொலைக்கு எதிரான இந்த சட்டம் 02.10.1950 இல் இலங்கையில் அமுலுக்கு வந்துள்ளது
இந்த விபரத்தை கீழ் காணும் இணைப்புகளில் பார்க்கலாம்.
http://www.hrweb.org/legal/genocide.html
http://www.icrc.org/ihl.nsf/WebSign?ReadForm&id=357&ps=ப
இனப்படுகொலை வழக்கை யார் பதிவு செய்யலாம்?
இனப்படுகொலை என்றால் என்ன?
இந்த இரண்டு விடயங்களையும் பாப்போம்
முதலில்,
இனப்படுகொலை தொடர்பான வழக்கை யார் பதிவு செய்யலாம்?
இனப் படுகொலை வழக்கை யார் பதிவு செய்யலாம் என்ற கேள்விக்குப் பதில் இனப்படுகொலை தொடர்பான ஐ.நா தீர்மானம் 260 இல் எட்டாவது அங்கத்தில் உள்ளது. அதனை கீழே பிரதி செய்கின்றேன்.
Article 8
Any Contracting Party may call upon the competent organs of the United Nations to take such action under the Charter of the United Nations as they consider appropriate for the prevention and suppression of acts of genocide or any of the other acts enumerated in Article 3.
ஒப்பந்தத்தில் உறுப்புநாடாக உள்ள ஏதாவது ஒரு நாடு அங்கம் எட்டாவதில் குறிக்கப்பட்டது உட்பட இனப் படுகொலை தொடர்பானதும், தடுப்பதற்கான பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐ.நா வின் அதிகாரமளிக்கப்பட்ட நிறுவனத்திடம் கோரலாம்.
மேலே குறிப்பிடப்பட்ட ஐ.நாவின் அதிகாரம் அளிக்கப்பட்ட நீதிநிறுவனம் என்பது என்ன?
இப்போது எம்மிடம், ஐ.நா வின் அதிகாரம் அளிக்கப்பட்ட நிறுவனம் எது என்பது தொடர்பான கேள்வி உள்ளது.
அதற்கான பதில், சர்வதேச நீதிமன்றம் எனப்படும் International Court of Justice (ICJ) என்பதாகும். சர்வதேச நீதிமன்றத்தின் கீழே உள்ள இணைய முகவரியில் பார்த்தால்,
http://www.icj-cij.org/court/index.php?p1=1
இந்தக் கேள்விக்கான பதில் கிடைக்கும். அந்தப் பதிலை அப்படியே கீழே பிரதி செய்கின்றேன்.
The International Court of Justice (ICJ) is the principal judicial organ of the United Nations (UN). It was established in June 1945 by the Charter of the United Nations and began work in April 1946.
சர்வதேச நீதிமன்றம் ஐ.நா வின் பிரதான நீதித்துறை நிறுவனமாகும் என இது தெளிவாகக் குறிப்பிடுகின்றது.
இனி சர்வதேச நீதிமன்ற விதிகளின்படி யார் வழக்கை பதிவு செய்யலாம் எனப் பார்ப்போம் இது நீதிமன்ற இணையத்தில் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. பின்வரும் இணைப்பை பாருங்கள்:
http://www.icj-cij.org/court/index.php?p1=1&p2=௬
இதில் பின்வருமாறு உள்ளது
Proceedings may be instituted in one of two ways:
by means of an application: the application, which is of a unilateral nature, is submitted by an applicant State against a respondent State.
ஒரு அரசினால் இன்னொரு அரசுக்கு எதிராக தனியாக விண்ணப்பிப்பதன் மூலம் வழக்கை பதிவு செய்யலாம்.
இனப்படுகொலை என்றால் என்ன என்பது தொடர்பான வரையறைஎங்கே உள்ளது?
இனப்படுகொலை தொடர்பான வரையறை ஐ.நா வின் இருவேறு சட்டங்களில் காணப்படுகின்றது முதலாவது 1948 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இனப்படுகொலைக்கு எதிரான சட்டம். இரண்டாவது 2007 இல் உருவாகப்பட்ட தொன்முதற்குடி மக்கள் பாதுகாப்பதற்கான சட்டம்.
முதலாவதாக 1948 ஆம் ஆண்டு இயற்றபட்டஇனப்படுகொலைக்கு எதிரான சட்டம் என்ன சொல்கின்றது எனப்பார்ப்போம்.
கீழே உள்ள இணைப்பில் இரண்டாவது சரத்தை பாருங்கள்:
http://www.hrweb.org/legal/genocide.html
Article 2
1) In the present Convention, genocide means any of the following acts committed with intent to destroy, in whole or in part, a national, ethnical, racial or religious group, as such:
(a) Killing members of the group – ஒரு குழுவின் உறுப்பினர்களை கொலை செய்தல்
(b) Causing serious bodily or mental harm to members of the group: ஒரு குழுவின் உறுப்பினர்களுக்கு உடல் அல்லது உள ரீதியான பாதிப்புக்களை ஏற்படுத்துதல்.
(c) Deliberately inflicting on the group conditions of life calculated to bring about its physical destruction in whole or in part: ஒருகுழுவின் வாழ்வாதாரங்களில் திட்டமிட்ட சூழ்நிலைகளை உருவாக்கி அதனை முழுமையாகவோ பகுதியாகவோ அழித்தல்
(d) Imposing measures intended to prevent births within the group: ஒரு குழுவின் இனப் பெருக்கத்தை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை எடுத்தல்,
(e) Forcibly transferring children of the group to another group: ஒரு குழுவில் இருந்து மற்ற குழுவுக்கு சிறுவர்களை பலவந்தமாக இடம் மாற்றுதல்.
இரண்டாவதாக 2007 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தொன்முதற்குடி மக்களை பாதுகாக்கும் சட்டம் என்ன சொல்கிறது எனப் பாப்போம்
அது பின் வருமாறு தெரிவிக்கின்றது
Adopted by General Assembly Resolution 61/295 on 13 September 2007
http://www.un.org/esa/socdev/unpfii/en/drip.html
Indigenous peoples and individuals have the right not to be subjected to forced assimilation or destruction of their culture.
நிலத்துக்குரிய தொன்முதற்குடி மக்களை பலவந்தமாக மற்ற இனத்துடன் இணைக்கப்படுதல், பலவந்தமாக கலாச்சாரம் அழிக்கப்படுதல் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கும் உரிமையை இது உறுதிப் படுத்துகின்றது.
2) States shall provide effective mechanisms for prevention of, and redress for:
அரசுகள் பின்வரும் விடயங்களில் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
(a) Any action which has the aim or effect of depriving them of their integrity as distinct peoples, or of their cultural values or ethnic identities: தனித்துவமான இனம், தனித்துவமான கலாச்சாரம், இன அடையாளங்கள் ஆகியவற்றை பாதுகாக்க அரசு கடப்பாடு உடையது.
(b) Any action which has the aim or effect of dispossessing them of their lands, territories or resources: அவர்களின் நிலங்கள், பிரதேசங்கள், மூல வளங்கள் பாதுகாக்கப்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
(c) Any form of forced population transfer which has the aim or effect of violating or undermining any of their rights: இனக்குழுவை பலவந்தமாக இடம் மாற்றி அவர்களது உரிமைகள் மீறுதல், குறைத்தல்
(d) Any form of forced assimilation or integration: பலவந்தமான இணைப்பு, கலத்தல்
(e) Any form of propaganda designed to promote or incite racial or ethnic discrimination directed against them: இன அடக்குமுறையை தூண்டும் பிரச்சாரம்.
எனவே இனப்படுகொலை சட்டங்கள இரண்டிலும் குறிக்கப்பட்டஇன அழிப்பு விடயங்கள் நீண்ட நெடுங்காலமாக நடைபெற்றுவருகின்றன. டி.எஸ் செனநாயக்காவின் கால சிங்கள குடியேற்றம்இன்றும் தொடர்கின்றன. மே 18 இன் பின் நடைபெறும் வடக்குகிழக்கு பவுத்த விகாரை அமைத்தல், சிங்கள குடியேற்றம்அத்தனையும் இன அழிப்பு நடவடிக்கை தான்.
தமிழர்கள் செய்ய வேண்டியது,
ஐ.நா வின் இன அழிப்புக்கு எதிராக கையெழுத்திட்ட நாடுகளை (http://www.icrc.org/ihl.nsf/WebSign?ReadForm&id=357&ps=P) அணுகி. இனழிப்புக்கு எதிரான வழக்கை சர்வதேச நீதிமன்றத்தில் இனப்படு கொலையை தடுக்க கோரி வழக்குப் பதிவு செய்ய வேண்டும் அத்துடன் அந்தந்த நாடுகள் சிறிலங்காவை பகிஸ்கரிக்க வைக்க வேண்டும்.
நடைமுறைச் சாத்தியமற்ற போர்க்குற்ற விசாரணையில் மட்டும் நம்பி இருக்க கூடாது. அதனை முயற்சிப்பதில் தவறில்லை. அந்த விசாரணைக் கடிதங்களில் மறக்காமல் இன அழிப்பு நடைபெறுகின்றது அதை தடுக்குமாறு ஐ.நா வை கோரவேண்டும்.
ஐ.நா தீர்மானம் 260 ஐ யும் 2007 தீர்மானம் 61/295 ஐயும் குறிக்க வேண்டும்.
ஈழத் தமிழர் விடயத்தில் ஐ.நா எடுக்கப் போகும் எந்த எதிர்கால நடவடிக்கையும் இந்த அறிக்கையில் இருந்து தான் ஆரம்பிக்க உள்ளது.
எனவே குற்றவாளிக்கு தண்டனை மட்டும் போதுமா? எமது இனம் பாதுகாக்கப்படவும் வேண்டுமா? என்ற கேள்விகளை மனதில் எழுப்பி ,
தண்டனை என்பதை விட எமது இனம் பாதுகாக்கப்பட்டு நாம் சுய நிர்ணய உரிமையுடன் வாழ வழி வகுக்கும் இனப்படுகொலை குற்றச்சாட்டையும் நாம் முன்னிறுத்த தவறக் கூடாது .
“சிறிலங்காவில் இனப்படுகொலையின் ஒரு அங்கம் தான்போர்குற்றம்“
இந்த சட்ட ஆய்வில் எனது கருத்தை தெரிவித்துள்ளேன்.
உணர்ச்சிவசப்பட்டு திட்டித் தீர்க்காமல் அறிவு கொண்டு ஆய்ந்து ஆதாரத்துடன் வரும் பதில்களை ஆர்வத்துடன் எதிர்பார்கின்றேன்.
சி.சந்திரமௌலிசன்
பொங்குதமிழுக்காக எழுதப்பட்ட இந்த கட்டுரையின் இரண்டாம் பகுதி இது .
நவம்பர் 2010 இல் வெளியிடப்பட்டது .
http://tamilwhiteelephant.blogspot.co.uk/2012/11/blog-post_7491.html#more
here is the link for above posting http://tamilwhiteelephant.blogspot.co.uk/2012/11/blog-post_7491.html#more
Lieutenent General LIonel Balagalle said that there are two armies in Sri Lanka – Shri Lanka. His calling code was Bravo. So, they had respect for him. They are God fearing people.
Starting with Mayor of Jaffna Alfred Thuraiyappah it has been murder.
அங்கம் 2-ConSide case Difrence Srcurity Gootapaiyah -சாட்சியம் அங்கம் 2
இனப்படுகொலை வழக்கு –ConSide case
லுக் ஐஸ் வரன் &Co
கிளிப் பேட்டோடை
நண்டுக் காலையும் வீசிக் கொண்டு
கம்போர்ட் கொட்டலிலை இருந்து பதிய ஏலாது !!!
here is the link for the above posting http://tamilwhiteelephant.blogspot.co.uk/2012/11/conside-case-difrence-srcurity.html
பஞ்சாயத்து போர்டுக்குப போற வழி தெரிஞ்சா யாராவது காட்டுங்க ◌பிளீ!
அண்ணனே மனோ நல்ல மனம் வேண்டும். மனதைரியம் வேண்டும் . மனதார இனத்தை நேசிக்க வேண்டும் . மனநோய் அற்றி ருக்கவேண்டும் . என்கிறேணுங்க .
ஒரு கதை சொல்லட்டுமா ,
ஒரு காட்டு யானையிடம் போய் ஒரு நரிக் குட்டி , இந்த காட்டிலை யார் ராஜா எண்டு கேட்டிச்சாம் . ஆணை ஒண்டுமே பேசாம தலையை ஆட்டினபடி நின்டிச்சாம் . அதாவது நரிக் கதைகளை இக்நோர். பண்ணிச்சாம் .
நரி விட்டபாடில்லையாம் .
எரிச்சல் வந்த ஆணை நரியை தூக்கி மரத்தில் அடிச்சுவிட்டுதாம் .அதாவது ஒரு கை பார்த்திச்சாம் .
நல்வேளையாக உயிர் தப்பிய நரிக்குட்டியார் ,
தெரியாட்டி தெரியாது எண்டு சொல்லுறதுக்கு ஏன் மரத்திலை தூகியடிச்சநீர் . நான் உம்மோடை போட்டிக்கா வந்தனான் எண்டு அழுதிச்சாம் . ஹி ஹி ஹி
கருத்தை பேசுங்க சும்மா வம்புக்கு வராதையுங்க சுவாமி
America President Barack Hussain Obama (August 4, 1961 – Lefty said that this is human tragedy. We must feel happy and comforted that he is re-elected for another four year term.
//////Starting with Mayor of Jaffna Alfred Thuraiyappah it has been murder.//////—Dr Sri
I may be wrong but following is my view
We all would have watched democratic debates . recent most popular debate being US election .
are we actually learning something from debating. I have serious doubts .
Obama was a democratic party candidate .
Bill Clinton & Monica affair was not in the subject of discussion. it irrelevant. the matter is closed .
SL gov declared VP dead LTTE destroyed . matter closed .
similarly the issue in front of us is about what is happening to Tamil people and why ?
talking about what was done by VP and LTTE is called fallacious argument .
The question that whether Tamils are persecuted by SL state just because they are Tamils.
Here is the definition for fallacious argument .
Though often used unintentionally, so-called fallacies can be used purposefully to win arguments. Such rhetorical devices, discussed in more detail below, are: “ignoring the question” to divert argument to unrelated issues using a red herring; making the argument personal (argumentum ad hominem) and discrediting the opposition’s character, “begging the question” (petitio principi), the use of the non-sequitur, false cause and effect (post hoc ergo propter hoc), bandwagoning (everyone says so), the “false dilemma” or “either-or fallacy” in which the situation is oversimplified, “card-stacking” or selective use of facts, “false equivalence”, and “false analogy”. Another common device is the “false generalization”, an abstraction of the argument that shifts discussion to platitudes where the facts of the matter are lost. There are many more tricks to divert attention from careful exploration of a subject.[1]
அண்ணா வணக்கங்கண்ணா!!!! அண்ணா வணக்கங்கண்ணா ,
சி.சந்திரமௌலீசன் அண்ணா!! பிரித்தானிய மாநாட்டிலும் , ஆனந்தவிகடனில் கட்டிய உங்கள் புலிக்கொண்டையை கழட்டி வைக்க மறந்திட்டீங்கண்ணா. …………………………………………………………………………………. /// talking about what was done by VP and LTTE is called fallacious argument ./// தவறு இருந்தால் கருத்து ரீதியாக நீர் எழுதும்// this is your தவறு
தவறு இருந்தால் கருத்து ரீதியாக நீர் எழுதும் /// தமிழீழ விடுதலைப் புலிகள் செய்தது எல்லாம் சரி என்று நான் சொன்னதாகவோ , எழுதியதாகவோ ஆதாரம் காட்டுவீர்களா ? பிழை என்று படுபவற்றை பிழை என்று சொல்வேன் /// நல்லது அண்ணா.
நீங்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் செய்த தவறுகளில், பிழை என்று சொன்ன ஒரு சிலவற்றை ஆதாரம் காட்டுவீர்களா ? அதாவது நீங்கள் கண்டித்த புலிகளின் கொலைகளிற்கு ஒரு உதாரணம் தருக
NOTE: இஸ்டப்படி கொலைகளை ஒருவன் செய்தால் ,
அதை ஒருவன் நியாயப்படுத்தி பரப்புரை செய்தால் ,
அதனை கருத்து எழுத்து சுதந்திரம் என அனுமதிக்கலாம் என நினைப்பவர்கள்
தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள் உங்களை நான் மனித குல எதிரிகள் என்றுதான் அழைப்பேன்