சமாதான நடவடிக்கைகளின் போது இலங்கை அரசு தொடர்பாக ஆன்டன் பாலசிங்கம் மென்போக்கோடு செயற்படுவதாகப் புலிகளின் ஒரு சாரார் கருதினர் என விக்கிலீக்ஸ் கேபிள் ஒன்றை கொழும்பு ரெலிகிராப் இணையம் வெளியிட்டுள்ளது.
சமாதான நடவடிக்கைகள் புலிகளின் ராணுவ தயார் நிலையை மோசமாகப் பாதித்திருப்பதாக புலிகளின் தளபதிகளில் ஒருவரான பானு உட்பட பலர் கருதினர். எந்த முடிவுகளையும் இறுதியாக புலிகளின் தலைவர் பிரபாகரனே எடுப்பார். எனினும் அவரின் முடிவுகளில் அதிக தாக்கம் செலுத்துவோராக கடும் போக்குடைய புலித்தலைவர்களே இருந்தனர். அத்தகைய கடும்போக்குடைய கருணா, பானு, கரிகாலன் போன்றோர் புலிகள் சமாதான நடவடிக்கைகளில் இருந்து பாலசிங்கத்தை ஓரங்கட்ட முயற்சிக்கின்றனர். இவ்வாறு அமெரிக்கத் தூதர் கேபிள் தகவல் அனுப்பியதை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் சார்பில் சமாதான பேச்சுவார்த்தைகளில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட இந்த தகவலை அமெரிக்க தூதரகத்தின் உயர் அதிகாரி லீவிஸ் எம்செலமுக்கு தெரிவித்துள்ளார்.
இதன்படி தாம் ஒட்டுக்கேட்ட தொடர்பாடல்களின் படி தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்தின் மென்மைப்போக்கை விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்த உயர் தளபதி தரப்புகள் விரும்பவில்லை என்று மொரகொட குறிப்பிட்டர்.








தமிழினத்தில் இருந்து வந்த எள்ளுபுண்ணாக்கே அன்ரன் பாலசிங்கம். வர்க்கம் பொருளாதாரஉறவுகள் உலகின் பொருளாதாரஉறவு முறைகளால் மாறிவரும் உறவுநிலைகளை கணிப்பிடுவதையும் அந்த பொருளாதர உறவுநிலைகளின் சூத்திரமே சர்வதேசதொழிலாளவர்க்கம் என்பதாக மாக்ஸியம்சொல்லப் படுகிறது. இதில்… பாலசிங்கம் எதையும் கற்றுக்கொள்ள வில்லை என்று சொல்ல முடியாது.
அரைவித்தையை கற்றுக் கொண்டார். அதை பிரயோகிப்பதற்கு இலங்கை தொழிலாளவர்கத்தை நாடவில்லை மாறாக வீரசாகஸசம் நிகழ்த்திக் காட்ட கூடிய குழுவை நம்பினார். இதுவே இந்த அன்ரன் பாலசிங்கத்தின் பலவீனம்.
அவர்சிந்தனை ரீதியாக ஊனமுற்றவரே யொழிய யதார்த்த வாழ்வில் சுகபோகத்தை தேடித்திரியும் ஒரு மனிதனாக காண முடியவில்லை. ஆனாபடியால் தான் ஒரு கிறிமினல் பேர்வழிகளை ஒரு இனத்தின் விடுதலை வீரர்களாக வர்ணித்தார்.
இவரின் புகழ்பெற்ற வார்த்தை ஒன்று உள்ளது. பிரபாகரனை ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் காப்பாற்றி விட்டேன். இனி இவரை காப்பாற்ற யாரும் வரப்போவதில்லை. என்னாலும் முடியாது. இது எனது இறுதி நேரம்.:
அரசியலின் அரிவரி தெரியாத விடலைகள்,தளபதிகள் ஆக்கப்பட்ட பிறகு,கிழக்கின் தளபதிகள் மட்டும்,அதி தீவிர போக்குக் கடைப் பிடித்ததாக,அதுவும் மிலிந்த மொரகொட போட்டுக் கொடுத்ததான செய்தி,நம்பும்படியாக இல்லை.
நான்காம் அகில,பன்னாடை பாலசிங்கம் மென்போக்காளராகத் தெரிவது, எல்லோருக்கும் தண்ணி’ பட்ட பாடந்தான்.
இடதுசாரியம் பேசி,தமிழினத்தை அழித்து,சிங்கள பௌத்த பேரினவாதிகளிடம் கொடுத்த பத்தோடு பதினொன்று,இந்தப் பாலசிங்கம்.