Thursday, March 12, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

பாம்பிற்கு தலையையும் மீனுக்கு வாலையும் காட்டி அரசியல் நடத்த முடியாது:13 ஆவது சட்டத் திருத்தம் குறித்த அரசின் நிலைப்பாடுதான் என்ன?

இனியொரு... by இனியொரு...
12/02/2009
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

mano10013 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆளுங்கட்சிகளுக்கிடையிலேயே முரண்பாடுகள் ஏற்பட்டிருக்கின்றன. ஈ.பி.டி.பியின் டக்ளஸ் தேவானந்தா, கிழக்கு முதலமைச்சர் சந்திரகாந்தன் (பிள்ளையான்) ஆகியோர் 13 ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணப்பட வேண்டும் என்கிறார்கள். ஆனால் அரசுடன் இணைந்திருக்கும் ஹெல உறுமயவின் சம்பிக்க ரணவக்க, தேசிய சுதந்திர முன்னணியின் விமல் வீரவன்ஸ ஆகியோர் அதனைப் பகிரங்கமாக எதிர்க்கின்றார்கள். எனவே இது தொடர்பில் அரசு தனது உறுதியான நிலைப்பாடு என்னவென்று மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு கோரியிருக்கின்றார் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:

தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் அரசின் பங்காளிக் கட்சிகளான ஈ.பி.டிபி., தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகியவை ஒருபுறமாகவும், ஜாதிக ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி ஆகியவை இன்னொரு புறமாகவும் 13ஆவது திருத்தம் தொடர்பில் பகிரங்கமாக முரண்பட்டு நிற்கின்றன. அரசின் அரசியல்வாதிகள் மூலமாகவும், ஊடக நண்பர்கள் மூலமாகவும் அரசில் இணைந்துகொள்ள எங்களுக்கு அழைப்பு விடுப்பதற்கு முன்னர், தமது கூட்டணிக்குள் இருக்கும் தேசிய இனப் பிரச்சினை தொடர்பிலான முரண்பாடுகளுக்கு ஜனாதிபதி முடிவுகாணவேண்டும்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தனும் மாகாணசபைகளுக்கு மேலதிக அதிகாரங்களைக் கோருகின்றார்கள். இது 13ஆவது திருத்தத்திற்கு அப்பால் செல்வதாகும். இதை நாங்கள் வரவேற்கின்றோம். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் 13ஆவது திருத்தத்திற்கு அப்பால் சென்று இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாக இந்தியாவுக்குச் சென்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் உறுதியளித்திருந்தார். இன்று இதை ஜனாதிபதியும் மறந்துவிட்டார். இந்திய அரசும் மறந்துவிட்டது.

ஆளும் தரப்புக்குள்ளேயே முரண்பாடுகள் அதிகம்
எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகா, தேசிய இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் 13ஆவது திருத்தத்திற்கு அப்பால் செல்லவேண்டிய தேவையைப் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளார். சரத் பொன்சேகாவின் இந்தக் கருத்தை அரசின் பங்காளிக் கட்சிகளான ஜாதிக ஹெல உறுமயவின் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும், தேசிய சுதந்திர முன்னணியின் விமல் வீரவன்ஸவும் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். விமல் வீரவன்ஸ ஒருபடி மேலேபோய் சரத் பொன்சேகாவின் இந்நிலைப்பாடு ஜே.வி.பிக்கு ஏற்புடையதா என்ற மேதாவித்தனமான கேள்வியையும் எழுப்ப, பொது வேட்பாளர் தொடர்பிலே முரண்பாடு ஏற்பட்டுள்ளது எனக் கூறுகின்றார்.ஆனால் உண்மையிலேயே ஆளுகின்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினுள்ளே இருக்கும் கட்சிகள் மத்தியில்தான் முரண்பாடு பகிரங்கமாக இருக்கின்றது.

தேசிய இனப்பிரச்சினைத் தீர்வு என்பது 13வது திருத்தத்திற்கு அப்பால் செல்லப்போகின்றதா இல்லையா என்பது பற்றி ஆளும் கூட்டணியின் உத்தேச ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களுக்குத் தெளிவாகத் தெரிவிக்கவேண்டும். ஜனாதிபதி தேர்தல் நியமனத்திற்கு முன் தெரிவிக்கவேண்டும்.
அரச சார்ந்த தமிழ் அரசியல் வாதிகள் பதில் சொல்லியாக வேண்டும்

தமிழ் மக்கள் சம்பிக்க ரணவக்கவையும், விமல் வீரவன்ஸவையும் கணக்கில் எடுக்கப்போவதில்லை. இவர்களை நாங்கள் அரசியல்வாதிகளாகவே பார்ப்பதில்லை. ஆனால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குத் தமிழ் மக்களின் வாக்குகளைக் கோருகின்ற தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களுக்கு இதுதொடர்பில் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளார்கள். அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகன் தொண்டமான், பெ.சந்திரசேகரன், முதலமைச்சர் சந்திரகாந்தன் மற்றும் ஆதரவு தெரிவிக்கும் தமிழ் அரசியல் தலைவர்களான சித்தார்த்தன், ஆனந்தசங்கரி ஆகியோரது பதில்கள் தமிழ் மக்களுக்குத் தெரிவிக்கப்படவேண்டும்.

இன்று போர் முடிவுக்கு வந்துவிட்டது. இனிமேலும் தேசிய இனப்பிரச்சினையை வைத்து எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் அரசியல் சித்துவிளையாட்டு விளையாட முடியாது. பாம்பிற்கு தலையையும் மீனுக்கு வாலையும் காட்டி அரசியல் நடத்த முடியாது. தெளிவான அரசியல் காரணங்கள் இல்லாமல் எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளருக்கும் தமிழ் மக்கள் கண்களை மூடிக்கொண்டு வாக்களிக்க மாட்டார்கள். ஜனாதிபதி தேர்தல் முடிந்த பிறகு இனப்பிரச்சினைக்கான தீர்வை அறிவிப்போம் என்ற பழைய பல்லவியை நம்பி ஏமாறுவதற்குத் தமிழ் மக்கள் இனிமேலும் தயாராகவும் இல்லை. இதுவே இந்நாட்டின் வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு, மலையகம் ஆகிய அனைத்துப் பகுதிகளிலும் வாழுகின்ற தமிழ் மக்களின் உறுதியான நிலைப்பாடாகும். இந்த உறுதிப்பாட்டையே நான் எதிரொலிக்கின்றேன். என்று உள்ளது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

முன்டாசர் அல் ஜெய்திக்கு பாரிஸில் செருப்பு வீசல்:"எனது 'டெக்னிக்கையே' அவர்கள் களவாடியுள்ளனர்!"

Comments 1

  1. xxx says:
    16 years ago

    “பாம்பிற்கு தலையையும் மீனுக்கு வாலையும் காட்டி அரசியல் நடத்த முடியாது” என்கிறார் மனோ கணேசன்.

    தோட்டத் தொழிலளரின் போராட்டத்தை யூ.என்.பி. தொழிற் சங்கம் காட்டிக் கொடுத்ததால் அதனுடனான கூட்டணியிலிருந்து விலகுவதாகச் சொன்னார். அனால் யூ.என்.பி. தொழிற் சங்கம் காட்டிக் கொடுத்தது. விலகினாரா?

    சரத் பொன்சேகாவுக்கும் தமிழருக்கும் பொதுவாக என்ன இருக்கிறது என்று சவால் விட்டார். இப்போது சரத் பொன்சேகாவுக்கும் தமிழருக்கும் நடுவே தன்னைத் தரகராக அமர்த்திக்கொள்ளப் போகிறார்.

    ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை என்கழற மாதிரி இவர்களின் பேச்சு.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...