Friday, April 24, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

பற்குணம் – இரண்டாவது உட்படுகொலை – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பகுதி ஐந்து) : ஐயர்

இனியொரு... by இனியொரு...
01/19/2010
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
61
Home பிரதான பதிவுகள் | Principle posts

சில மாதங்கள் இடைவெளியில் இருவேறு தாக்குதல் வெற்றிகரமாக நடத்தப்பட்டுவிட்டன. இவையெல்லாம் எமது இரத்ததில் புதிய நம்பிக்கை அணுக்களை உருவாக்கியிருந்தது. அனைவருக்கும் அதீத உற்சாகம் பொங்கியது. தமிழீழம் மிக அண்மையில் எட்டிவிடும் தூரத்திலேயே இருப்பதாக உணர்கிறோம்.

தனிமனிதப் படுகொலைகள் என்றாலும் உணர்ச்சியின் உந்துதலுக்கு உட்படுத்தப்பட்ட எமக்கெல்லாம் அவை தாக்குதல்கள் தான். மக்கள் போராட்டங்கள் பற்றியும் அதற்கான அரசியல் வழிமுறை பற்றியும் அறிந்து வைத்துக்கொண்டா இவற்றைத் திட்டமிட்டோம்!

எமது தோளில் புதிய சுமையை உணர்கிறோம். பற்குணமும் இணைந்துகொள்ள விரிவாக்கப்பட்ட மத்திய குழு ஒன்று கூடல்களை பல தடவை நிகழ்த்துகிறோம். ஒரு புறத்தில் உற்சாகத்தில் மக்கள் மக்கள் திளைத்திருக்க மறுபுறத்தில் நாமும் எமது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தல் குறித்து ஆராய்ந்து கொண்டிருந்தோம்.

பற்குணம் இந்தியாவில் வாழந்த வருடங்களில் ஈழப் புரட்சி அமைப்பு என்ற ஈரோஸ் (EROS) உடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தார். அருளர் என்ற அருட்பிரகாசத்துடன் ஏற்பட்ட தொடர்புகளூடாக அரசியல் விடயங்களில் அக்கறை உடையவராகவும் அதே வேளை ஈரோஸ் அமைப்பின் அனுதாபியாகவும் கூட மாற்றமடைந்திருந்தார்.

எமது மத்திய குழுக் கூட்டங்களில் பிரபாகரனுக்கும் பற்குணத்திற்கும் முரண்பாடுகள் ஏற்படுகின்றன. பிரபாகரனிற்கு அரசியல் விடயங்களில் அக்கறை இல்லை, எமக்கு என்று அரசியல் நிலைப்பாடும் அரசியல் வழிநடத்தலும் தேவை என்ற கருத்தைப் பற்குணம் முன்வைக்கிறார். பிரபாகரனைப் பொறுத்தவரை பலமான ஒரு இராணுவக் குழு தேவை என்பதே பிரதான நோக்கமாக இருந்தது. இந்த விவாதங்கள் எல்லாம் ஒரு குறித்த காலத்தின் பின்பாக, குறிப்பாக மத்திய குழு விவாதங்களின் போது பிரபாகரனுக்கும் பற்குணத்திற்கும் இடையிலான முரண்பாடாக எழுகிறது. பிரபாகரன் அரசியலற்ற வெறும் இராணுவச் சிப்பாய் போலச் செயற்படுவதாகவும் , ஒரு விடுதலை இயக்கத்தை வழி நடத்தத் தகமையற்றவர் என்ற கருத்தையும் கூட்டங்களில் முன்வைக்கிறார். இதற்குப் பிரபாகரனிடம் பதில் இருக்கவில்லை.

அதே வேளை பற்குணம் புகைப்பிடிகும் பழக்கததைத் தவிர சந்தர்ப்பங்களில் மதுபானம் அருந்தும் பழக்கததையும் கொண்டிருந்தார்.தவிர, இந்தியாவிலிருந்து திரும்பியதும் இந்தியாவில் பெண்களுடன் தொடர்புகள் கொண்டிருந்ததாகவும் எமக்கெல்லாம் கூறினார். மத்திய குழுக் கூட்டங்களில் பிரபாகரன் இது குறித்து விவாதங்களை முன்வைக்காவிட்டாலும், அதற்கு வெளியில் எம்மைத் தனித்தனியாகச் சந்திது, பலதடவைகள் பற்குணத்தின் இயல்புகள் குறித்து எம்மிடம் குறைகூறுவது வழமை.பற்குணம் ஒழுக்கமற்றவர் என்பதைப் பிரபாகரன் எம்மிடம் கூறுவார்.

பிரபாகரனைப் பொறுத்தவரை தேனிர், கோப்பி போன்றவற்றை கூட அருந்தாத தூய ஒழுக்கவாதியாகவே காணப்பட்டார். அவரைப் பின்பற்றிய எம்மில் பலர் இந்த ஒழுக்கவாதத்தை கடைப்பிடித்திருந்தனர்.

பிரபாகரன் மீதிருந்த தனிமனிதப்பற்று என்பது பற்குணம் கூறுவதை ஏற்கத் தடையாக இருந்தது. பிரபாகரனுக்கும் பற்குணத்திற்கும் இடையில் நிகழும் விவாதத்தில் நாமெல்லாம் மௌனம் சாதித்தாலும் பிரபாகரனை இந்தியாவிலிருந்து திடீரென வந்த பற்குணம் குறைகூறுவது எமக்கெல்லாம் நியாயமாகப்படவில்லை.

பற்குணத்தின் ஊடாக மன்னார் வீதியில் அமைந்திருந்த கன்னாட்டி என்னும் இடத்தில் ஈரோஸ் அமைப்பினர் ஒரு பண்ணை ஒன்றை நடத்திவருவதாக அறிந்தோம். எம்மைப் போலவே சில புதிய உறுப்பினர்களைப் பயிற்றுவிக்கும் இடைநிலை முகாமாகவிருந்த கன்னாட்டிப் பண்ணையிலிருந்த ஈரோஸ் உறுப்பினர்களுடன் எமக்குத் தொடர்புகள் ஏற்படுகிறது. அவ்வேளையில் சங்கர் ராஜி, அருளர்,அந்தோனி என்ற அழகிரி போன்ற ஈரோசின் முக்கிய உறுப்பினர்கள் அங்கு தங்கியிருந்தனர். பலஸ்தீன விடுதலை இயக்கத்துடன் தொடர்புகளைக் கொண்டிருந்த இவர்களில் சில உறுப்பினர்கள் அவர்களிடம் பயிற்சியையும் பெற்றிருந்தனர்.

சில நாட்களுக்கு உள்ளாகவே எமது பூந்தோட்டம் முகாமிற்கு அவர்கள் வருவதும், நாங்கள் அவர்களது முகாமிற்குச் செல்வதுமாக ஒரு நட்ப்பு வளர்ந்திருந்தது. பற்குணம் இது குறித்து மகிழ்ச்சியடைந்திருந்தாலும், எமது இயக்கத்திற்கும் அரசியல் நடைமுறைகள் தேவை என்பதையும், அரசியலற்ற பிரபாகரன் தலைமைக்குத் தகுதியற்றவர் என்பதையும் தொடர்ச்சியாக வலியுறுத்திவந்தார்.

ஈரோஸ் இயக்கத்தினர் எமது பூந்தோட்டம் பண்ணைக்கு வந்து எம்மோடு உரையாடல்களை நடத்துவார்கள். பெரும்பாலும் இராணுவ நடவடிக்கைகள், தாக்குதல்கள், பயிற்சி, துப்பாக்கி சுடுதல் போன்ற விடயங்களை நாங்கள் பேசிக்கொள்வோம். 1977 பொதுத் தேர்தலுக்குச் சில காலங்களின் முன்னர் சங்கர் ராஜி என்ற பலஸ்தீன விடுதலை இயக்கத்தில் பயிற்சி பெற்ற ஈரோஸ் உறுப்பினர் எமது முகாமிற்கு வந்திருந்த போது ஒரு சுவாரசியமான சம்பவம் நிகழ்ந்தது. பிரபாகரனோடு சங்கர் ராஜி, பலஸ்தீன விடுதலை இயக்கம் பயிற்சிகள் குறித்துப் பேசிக்கொண்டிருந்தனர். அரசியல் விவகாரங்களில் பிரபாகரன் ஆர்வம் காட்டவில்லை. எமக்கு அருகே இருந்த சிறிய இலக்கு ஒன்றை குறிவைத்துச் சுடுமாறு சங்கர் ராஜியிடம் பிரபாகரன் கேட்க, அவரும் அவ்வாறே சுடுகிறார். குறி தவறி வேறு இடத்தில் சூடு படுகிறது. துப்பாக்கியை வாங்கிக்கொண்ட பிரபாகரன் அதே இலக்கைக் குறிவைத்துச் சுடுகிறார். குறி தப்பவில்லை. இலக்கில் நேரடியாகச் சென்று குண்டு துளைத்ததும், ஈரோஸ் இயக்கதிலிருந்து எமது பண்ணைக்கு வந்த அனைத்து விருந்தினர்களும் ஆச்சர்யப்பட்டுப் போகிறார்கள்.

வங்கிக் கொள்ளை நிகழ்த்தியிருந்த நாம் ஒப்பீட்டளவில் ஈரோஸ் இயக்கத்தை விட வசதி வளங்களைக் கொண்டவர்களாக இருந்தோம். பற்குணதின் சிபார்சின் பேரில் ஈரோஸ் அமைப்பிற்குப் பண உதவி செய்வதென்ற கருத்தை எமது மத்திய குழுவைக் கூட்டி விவாதிக்கிறோம். இறுதியில் பிரபாகரனும் அவர்கள் நட்பு சக்திகள் என்ற அடிப்படையில் ஒரு குறித்த பணத் தொகையை வழங்க வேண்டும் என்று முன்மொழிய நாங்களும் அதை ஒத்துக்கொள்கிறோம். இந்த முடிவின் அடிப்படையில் ஈரோஸ் அமைப்பிற்கு 50 ஆயிரம் ரூபா வரையிலான பணம் வழங்கப்படுகிறது. பிரபாகரனுக்கோ எமக்கோ இலங்கை அரசிற்கு எதிரான இன்னொரு இயக்கம் வளர்வதில் எந்த பய உணர்வோ, காழ்ப்புணர்வோ அன்றைய சூழலில் இருந்ததில்லை.

பேபி சுப்பிரமணியம் , தங்கா போன்றவர்களூடாக, தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த அமிர்தலிங்கம், மாவை சேனானதிராஜா போன்றவர்களுன் இறுக்கமான தொடர்புகள் ஏற்படுகின்றன. சேனாதிராஜா தான் முதலில் எமக்குக் ஏற்பட்ட கூட்டணியின் முதல் நம்பிக்கையான தொடர்பு. அவரினுடாக அமிர்தலிங்கத்தின் தொடர்பு ஏற்படுகிறது. சேனாதிராஜா வீட்டிற்கும், அமிர்தலிங்கத்தின் வீட்டிற்கும் பிரபாகரன் வேறு உறுப்பினர்களோடும் தனியாகவும் செல்வது வழமையாகிவிட்டது. தவிர, மத்திய குழு சார்பிலான சந்திப்புக்கள் நடைபெறவில்லை. பின்னதாக நான் இலங்கைக்குத் திரும்பிச் சென்றதும், மத்திய குழுவுடனான சந்திப்பு ஒன்று நிகழ்கிறது. அந்த சந்தர்ப்பத்தில் நானும் அமிர்தலிங்கம் வீட்டிற்குச் சென்றேன் என்பது எனது நினைவுகளில் பதிந்துள்ளது.இவ்வாறான எந்தச் சந்திப்புக்களிலும் பற்குணம் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வேளைகளில், புதிதாக உருவான தமிழர் விடுதலைக் கூட்டணியுடனான அரசியல் தொடர்புகளையும் பற்குணம் கடுமையாக விமர்சிக்கிறார். கூட்டணியின் அரசியல் என்பது சந்தர்ப்பவாத அரசியல் என்றும் அதனால் நாங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் பற்குணம் விமர்சிக்கிறார். இந்த வேளைகளிலெல்லாம் எனக்குப் பிரபாகரன் சொல்வது தான் நியாயமாகத் தென்பட்டது. ஒருபக்கத்தில் அரச படைகள் மறுபக்கத்தில் தமிழர்கள் இதற்கு மேல் என்ன அரசியல் என்பது தான் பொதுவான மனோபாவமாக என்னிடமும் காணப்பட்டது. மத்திய குழுவின் அனைத்து உறுப்பினர்களும் பிரபாகரன் பக்கம்தான்.

பிரபாகரனுக்கும் பற்குணத்திற்கும் இடையேயான சச்சரவின் நடுவே நாங்கள் மௌனிகளாகவே இருந்தோம்.

ஈரோஸ் இயக்கம் தம்மை அரசியல் ஆளுமை மிக்கவர்களாக கருதிக்கொண்டிருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளோ அரசியல் என்பதெல்லாம் தேவையற்றதாகவே கருதியிருந்தது. இந்தச் சூழலில் ஈரோஸ் என்ற அரசியல் இயக்கம் தமது இராணுவப் படையாகத் தமிழீழ விடுத்லைப் புலிகளை இணைத்துக் கொள்வதற்காக முயற்சி செய்து வந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அதாவது ஈரோஸ் அரசியல் தலைமை வழங்க நாமெல்லாம் அவர்களின் இராணுவக் குழுவாகச் செயற்படுவோம் என்று எதிர்பார்த்தார்கள். தம்பி பிரபாகரனும், நாமும் பற்குணத்தின் ஊடாக அவர்களின் நோக்கத்தை நிறைவேற்ற எத்தனிப்பதாகக் கருதினோம். பற்குணமும் பல தடவைகள் அவரது விவாதங்களூடாக இதனைத் தெரிவித்திருந்தார். பிரபாகரனைக் குற்றம்சாட்டும் கருப்பொருளாக இதுவே அமைந்திருந்தது.

தொடர்ச்சியான விவாதங்களின் பின்னர் பற்குணம் ஒரு கருத்தை முன்வைக்கிறார். அவர் தனியே பிரிந்து சென்று புதிய அமைப்பாக இயங்க விரும்புவதாகவும் அதற்காக 25 ரூபா பணமும் ஒரு கைத்துப்பாக்கியும் வழங்குமாறு கோருகிறார். இந்தக் கோரிக்கை வியப்பாக இல்லாவிட்டாலும் அதிர்ச்சி தருவதாக அமைந்தது என்னவோ உண்மைதான்.

பற்குணம் இந்தக் கோரிக்கையை மத்தியகுழுவில் தான் முன்வைக்கிறார். அப்போது பிரபாகரன் ஏதும் பேசவில்லை. மத்திய குழுக் கூட்டம் முடிவடைந்ததும் பிரபாகரன் எம்மைத் தனித் தனியே சந்திக்கிறார். அப்போது, இயக்கத்திலிருந்து விலகிச் சென்று புதிய இயக்கம் உருவாக்கினால் மரண தண்டனை என்பதை பற்குணம் மறந்துவிட்டுப் பேசுகிறார் என்றும், இவருக்கு மரண தண்டனை தான் தீர்வு என்றும் எல்லோரிடமும் கூறுகிறார்.

இந்த விடையம் பற்குணத்திற்குத் தெரியாது. அவர் தவிர்ந்த, நான் உள்பட்ட அனைத்து மத்திய குழு உறுப்பினர்களும்ன் அவர் கூறுயதை ஆமோதிக்கிறார்கள். நாம் ஒரு இராணுவக் குழு; அதற்கு இராணுவக் கட்டுப்பாடுகள் உண்டு; மீறினால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்; இயக்கம் முழுவதுமே அழிக்கப்பட்டுவிடும் என்ற கருத்துக்கள் தான் மேலோங்குகிறது. இப்போது நாம் அனைவருமே பற்குணத்தின் மரண தண்டனையை ஏற்றுக்கொள்கிறோம். அவர் கொல்லப்பட வேண்டியவர் தான் என்பது எம்மளவில் முடிபாகிவிட்டது.

இதனிடையே ஜெயவேல் என்பவர் கைது பொலீசாரின் வலைக்குள் சிக்கிவிடுகிறார். எம்மிடம் வாங்கிய பணத்தை வைத்து ஆடம்பரச் செலவுகள் செய்துவந்ததால் சந்தேகத்தின் பேரில் ஜெயவேல் முதலில் கைதுசெய்யப்படுகிறார். குளிப் பானதினுள் நஞ்சு வைத்துக் கொலைசெய்ய முற்பட போது தப்பித்துக்கொண்ட ஜெயவேல் இப்போது பொலீசாரின் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார். விசாரணைகளின் கோரத்தில் அவர் என்னையும் ராகவனையும் காட்டிக்கொடுத்து விடுகிறார்.

இதன் பின்னர் நான் தேடப்படுகிறவன் ஆகிவிடுகிறேன். எனது வீட்டைப் பொலீசார் சோதனையிடுகின்றனர்.
புன்னாலைக்கட்டுவனில் எனது வீட்டைச் சுற்றிவளைத்த பொலிசார், வீட்டைச் சல்லடை போட்டுத் தேடுகின்றனர். எனது பெற்றோரை மிரட்டி என்னைப்பற்றிய தகவல்களைக் கேட்கின்றனர். புத்தூர் வங்கிக் கொள்ளைக்கான திட்டமிடல் நடவடிக்கைகளை எனது வீட்டிலிருந்தே மேற்கொண்டோம்.

ஜெயவேல் ஊடாக இதனை அறிந்துகொண்ட காவற்துறைக்கு இந்த வழக்கில் நான் முக்கிய எதிரியாகிவிடுகிறேன். புன்னைலைக்கட்டுவனில் பல பகுதிகளிலும் எனது நடம்மாட்டம் தொடர்பான தகவல்களைத் திரட்டுகிறார்கள். இந்த அவசர நிலையைக் கருத்தில்கொண்டு ராகவன், பட்டண்ணா ஆகியோரை இந்தியாவிற்குச் செல்லுமாறு பிரபாகரன் கூறுகிறார். ராகவன் பட்டண்ணா ஆகியோர் புலிகளில் ஆதரவாளர்களாக இருப்பினும் ஜெயவேலுக்கு இவர்களின் தொடர்புகள் இருப்பிடங்கள் என்பன தெரிந்திருந்தது. இதனால் இவர்களுக்கு ஆபத்து நேரலாம் என்பதால் பிரபாகரனே இவர்களையும் கூட்டிச் செல்லுமாறு கோருகிறார் தங்கத்துரை யின் கடத்தல் படகு ஒன்ன்றில் மன்னார் சென்று மன்னாரிலிருந்து ராமேஸ்வரம் செல்கிறோம்.

நான் நேசித்த தாய் மண்ணைப் பிரிந்த சோகத்தின் மத்தியில் இந்திய மண்ணிலிருந்த நம்பிக்கை அதன் மீதான மதிப்பாகவும் மாறியது. வெறும் உணர்ச்சிச் சமன்பாடுகள் தான் எமது சிந்தனையைத் தீர்மானிக்கும் வரம்புகளாகியிருந்த காலகட்டத்தில் இதைவிட வேறு எதையெல்லாம் எதிர்பார்க்க முடியும்?

அங்கிருந்து சேலத்திற்குச் செல்கிறோம். அங்கே பெரிய சோதி, சின்னச் சோதி என்றி அழைக்கப்படும் வல்வெட்டித்துறையச் சேர்ந்த இருவருடன் நாம் தங்கியிருந்தோம். இவர்கள் தங்கத்துரை குட்டிமணியின் கடத்தல் குழுவைச் சார்ந்தவர்கள். எமக்கு வேறு உழைப்போ பணவசதியோ இல்லாத நிலையில் இவர்கள் தான் எம்மைப் பாதுகாக்கிறார்கள். உணவருந்துதுவதும், உறங்குவதும், தமிழ் சினிமாப் பார்ப்பதும் தான் எமது வேலையாக இருந்தது. சுமார் நான்கு மாதங்கள் வரை சேலத்திலேயே எமது நாட்களைக் நகர்த்துகிறோம்.

உலகம் முழுவதும் எவ்வாறு போராட்டங்கள் முன்னோக்கிச் செல்கின்றன, முற்போக்கு சக்திகளுடனான உறவு, ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல்கொடுத்து அவர்களோடு கைகோர்த்துக் கொண்டு எமது தேசிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தைப் பலப்படுத்தல் போன்ற எந்த விடயங்களைப் பற்றிய எந்த சிந்தனையும் எமக்கு இருந்ததில்லை. பிற்காலப்பகுதியில், புலிகளுடனான நீண்ட நாட்கள் கடந்துபோன பின்னர், அவற்றை எல்லாம் தெரிந்து கொண்ட போது தான் நமது தவறுகள் குறித்தும், புதிய அரசியல் திசைவழி குறுத்தும் சிந்திக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.

அப்போதெல்லம் குறைந்த பட்சம் போராட்டங்கள் குறித்தும், அரசியல் குறித்தும், மார்க்சியம் குறித்தும் ஆயிரம் விடயங்களைப் படித்துத் தெரிந்துகொண்டாவது இருக்கலாம் என்று இப்போது வருந்துவதுண்டு. எமது குறுகிய உலகத்துள் எமக்குத் தெரிந்ததெல்லாம் தாக்குதலும் எதிர்த் தாக்குதலும் என்பது மட்டும்தான்.

இதனிடையே தாயகத்தில் பற்குணம் கொல்லப்படுவதற்கான முடிபு உறுதிப்படுத்தப்படுகிறது.

அவ்வேளையில் பற்குணம் கொழும்பிற்கு செல்கிறார். கொழும்பில் வேலை பார்த்துக்கொண்டிருந்த எமது மத்திய குழு உறுப்பினரான நாகராஜா(வாத்தி), பற்குணத்தை புளியங்குழம் முகாமிற்கு அழைத்து வருகிறார். அங்கு இரவிரவாக பற்குணத்துடன் பிரபாகரன் மற்றும் மத்திய குழு உறுப்பினர்கள் நண்பர்களாகப் பேசிக் கொண்டிருக்கின்றனர். நள்ளிரவிற்குச் சற்றே பிந்திய வேளையில் பற்குணத்தோடு உரையாடிக் கொண்டு இருக்கையிலேயே அவரைத் தனது கைத்துப்பாக்கியால் பிரபாகரன் கொலைசெய்துவிடுகிறார். அவ்வேளையில் பேபி, தங்கா, நாகராஜா, குலம் போன்றோர் அங்கிருக்கின்றனர். பற்குணம் இறந்து போகிறார்.

துரையப்பா கொலைச் சம்பவத்திற்கான செலவுகளுக்காக தனது தங்கையின் நகைகளை அடகுபிடித்து பணம்கொடுத்த பற்குணத்தையே கொலைசெய்ய வேண்டியதாகிவிட்டது என்று பிரபாகரன் பின்னரும் பல தடவைகள் கூறி வருந்தியிருக்கிறார்.

இந்தச் சம்பவம் நிகழ்ந்த போது நான் சேலத்திலேயே இருந்ததால் இது எனக்கு உடனடியாகத் தெரியாது.

நாங்கள் இந்தியாவில் தங்கியிருக்கும் வேளையில் ஐக்கிய தேசியக் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருகிறது. மறுபுறத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி பெரும் வெற்றியீட்டுகிறது. 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி பெற்ற அங்கீகாரமாக இத் தேர்தலின் வெற்றி கருதப்பட்டது. 1977 ஜூலை 21ம் பெரும்பாலும் எல்லாத் தமிழ் பேசும் மக்கள் வாழும் மாவட்டங்களும் பிரிவினைக்கான சுலோகத்தை முன்வைத்துப் போட்டியிட்ட கூட்டணிக்கு வாக்களிக்கின்றனர்.

இதே வேளையில் பிரதம மந்திரியாகத் தெரிவு வெற்றியீட்டிய ஜூனியஸ் ரிச்சார்ட் ஜெயவர்த்தன, யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த பொலீசாருக்கு எதிரான கொலைச் சம்பவங்களுக்குப் பொறுப்பான குழுக்களுக்கும், தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் நேரடியான தொடர்புகள் இருப்பதாகவும், இந்த இரு பகுதியினருமே அழிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறார்.

இதே வேளை வன்முறையாக நான்கு பொலீசார் யாழ்ப்பாணத்தில் நடந்த கானிவேல் ஒன்றினுள் அனுமதிசீட்டு இல்லாமல் பிரவேசிக்க முயன்ற போது உருவான தர்க்கத்தில் மக்களால் தாக்கப்படுகிறார்கள். இதனைத் தொடர்ந்து உருவான தமிழ் சிங்கள மோதல், இன வன்முறையாக மாற்றம் பெறுகிறது. 12ம் திகதி ஆகஸ்ட் 1977 ஆம் ஆண்டு ஆரம்பமான இவ்வன்முறைகள், அரசின் மறுதலையான ஆதரவுடன், இனப்படுகொலை வடிவத்தை கொள்கிறது.300 தமிழர்கள் சிங்களக் காடையர்களால் கொல்லப்படுகிறார்கள். தமிழர்களுக்கு உரிமை தருவதாகப் பேசி ஆட்சிக்கு வந்திருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன, தமிழர்களதும் தமிழர் விடுதலைக் கூட்டணியினதும் பிரிவினைக் வாதத்தில் ஆத்திரமடைந்த சிங்கள மக்களின் எழுச்சியே இவ் வன்முறைகள் என்று வெளிப்படையாகவே கூறுகிறார். இந்தியாவிலிருந்து இதை அறிந்த நாம் வெறுப்பும் கோபமும் அடைகிறோம்.

30 நாட்கள் நீடித்த இந்த வன்முறைகளின் சில நாட்களில் பிரபாகரன், மாவை சேனாதிராஜா, காசியானந்தன் ஆகியோர் தங்கத்துரை குட்டிமணியின் கடத்தல் படகு மூலமாக இந்தியாவிற்கு வருகின்றனர்.

பேபி சுப்பிரமணியம், தங்கா போன்றோர் ஊடாக நான் இந்தியாவிலி இருக்கும் வேளையில் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் புலிகளின் தொடர்பு வலுப்பெற்று வளர்ச்சியடைகிறது. பற்குணத்தின் மறைவிற்குப் பின்னர் புலிகளின் மத்திய குழுவுடனான தமிழர் விடுதலைக் கூட்டணியின் தொடர்புகள் வலுப்பெறுகின்றன. தேர்தல் வன்முறைகள், ஜெயவர்தன அரசு வெளிப்படையாகவே கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகள் என்பவற்றின் தொடர்ச்சியாக இச்சந்திப்புக்கள் மேலும் கூட்டணியுடனான இறுக்கத்தை வலுவாக்குகின்றன. பிரபாகரன் நான் இருந்த சேலத்திற்கு வருகிறார். இதே வேளை பேபி சுப்பிரமணியம் விமான மூலமாக இந்தியாவிற்கு வருகிறார்.

நான் இந்தியாவில் இருந்த வேளையில் எமது மத்தியிகுழுவும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஒரு எழுதப்படாத உடன்பாட்டிற்கு வருகின்றனர். தமிழர் விடுதலைக் கூட்டணி அரசியல் அமைப்பு என்றும், இளைஞர் பேரவை வெகுஜன அமைப்பு என்றும், புலிகள் இவற்றிற்கான இராணுவ அமைப்பு என்றும் முடிபிற்கு வருகின்றனர்.

தேர்தல் வெற்றியும், தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முரைகளும், அவற்றிற்கு எதிரான தமிழர் விடுதலைக் கூட்டணியின் வீராவேசப் பேச்சுக்களும் புலிகள் இந்த முடிபிற்கு வரக் காரணமாக அமைந்தது. இது தொடர்பாக தம்பி இந்தியா வந்ததும் என்னிடம் கூறுகிறார். நானும் அவற்றை எந்த மறுப்பும் இன்றி ஏற்றுக்கொள்கிறேன்.

தமிழ் நாட்டில் இருந்த காலப்பகுதியில் மதுரையில் நடராசா என்ற ஓவிரைப் பிரபாகரன் சந்திக்கிறார். அவர் தான் விடுதலைப் புலிகள் சின்னத்தை வரைந்து கொடுக்கிறார்.

சேனாதிராஜா, காசியானந்தன, பிரபாகரன் மூவரும் கலைஞர் கருணாநிதியை மரீனா பீச்சில் சந்திக்கிறார்கள். அச்சந்திப்பிற்கு சந்தர்ப்பவசமாக நான் செல்லவில்லை ஆனால் என்னோடு தங்கியிருந்த பட்டண்ணா சென்றார் என்பது நினைவிற்கு வருகிறது. இச் சந்திப்பிற்கான ஏற்பாட்டை சேனாதிராஜா தான் ஒழுங்குபடுத்தியிருக்க வேண்டும்.

இவ்வேளையில் இலங்கையில் எமது வழமையான இயக்க வேலைகள் முடங்கிப் போய்விடக் கூடாது என்பதற்காக நான் இலங்கைக்குப் போவதாக முடிவெடுக்கப்படுகிறது. சின்னச் சோதி நான் திரும்பிச் செல்வதற்கான படகை ஒழுங்கு செய்கிறார். மயிலிட்டிக்குப் படகு வந்து சேர்கிறது. மறுபடி சொந்த மண்ணில் கால்பதித்த உணர்வு மேலிடுகிறது!

பகுதி நான்கை வாசிக்க..

பகுதி மூன்றை வாசிக்க..

பகுதி இரண்டை வாசிக்க..

பகுதி ஒன்றை வாசிக்க..

இன்னும்  வரும்..

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

பொன்சேகாவின் ஆதரவாளர் அடித்துக்கொலை

Comments 61

  1. THOTTA says:
    16 years ago

    வணக்கம் ஜ்யர்.. கட்டுரையின் இடையில் வரும் சில படங்களில் உள்ளவர்கள் எனக்கு யார் என்றே தெரியவில்லை..முடிந்தால் அதன் கீழ் பெயர் போடமுடியுமா…………………………..பொதுவாகா புலிகள் மீது எப்போதுமே ஒரு குற்றசாட்டு இருக்கு……………..அவெர்கள் மாற்றுக்கருத்துள்ளோரை அழிக்கிறார்கள் எண்டு……விடுதலை வேண்டி ஊன், உறக்கம் இல்லாமல் ,உயிரைக் கொடுத்து போராடிக்கொண்டு இருக்கும் போது..போலியான விடுதலை விரும்பிகள்……தானும் ,தனது குடும்பவும் வாழ விடுதலை அமைப்பை பயன்படுத்துவதை யாருமெ ஏற்கமுடியாது.அதற்கு நல்ல உதாரணம் ஆரம்பத்தில் மத்தியகுழுவில் இருந்த சில பேர் , தமது குடும்பம் கஸ்டம் ,காசு தந்தால்தான் தம்மால் விடுதலைக்கா உழைக்க முடியும் எண்டு சொல்லி காசையும் வேண்டி ,கடசியில் என்ன சய்தார்கள் எண்டு ,இக் கட்டுரையை தொடர்ந்த்து வாசிபோரிற்கு புரியும்.,விடுதலைக்க்காக தொடர்ந்து உழைக்கும்நீங்களும் ,ராகவனும் அந்தபணியைத்தொடராமல் விட்டுப்போகவேன்டியநிலமை ஜெயவேல் அன்று கொல்லப்படாததாலேயே ஏற்பட்டது.இன்று பிரீந்து போகநினைக்கும் பற்குணத்தை விட்டால்..பிரபாகரனுக்கும்,புலிகளிற்கும் நிட்சியமாக உங்கள்நிலமையே ஏற்படும்.அவெர் கொல்லப்படவேண்டியவரே.

  2. Shan Nalliah gandhiyist norway says:
    16 years ago

    GREAT! YOU ARE TELLING TRUTH! GOD BLESS YOU FOR THAT!
    WE SHD LEARN FROM PAST MISTAKES! TRY TO UNDERSTAND,TRUST,INCLUDE EACH OTHERS! RESPECT ALL OPINIONS, BUT DECIDE BY DEMOCRATIC METHODS BY VOTING! THEN MUST ACCEPT AND FOLLOW BY ALL! PLEASE WRITE ABOUT GANDHIYAM DR.S.RAJASUNDARAM’S ROLE IN UNITING VP/UMA!
    ALL TAMILS WITH INTELLIGENCE,KNOWLEDGE,CONSCIENCE,NEUTRALITY,VISION SHD LEAD TAMILS IN FUTURE!OTHERS SHD FOLLOW! DEMOCRACY,HR,FREEDOM /SPEECH,DEBATE ETC,EQUALITY,POLITICAL TACTICS,DIPLOMATIC MOVES WILL HELP TAMILS TO THEIR GOAL!

  3. Eraavanan says:
    16 years ago

    ஐயோ ஐயோ கருத்தைக் கருத்தால் வெல்ல முடியாத அரசியல் வங்குரோத்துகளுக்கு சாமரம் வீசும் தோட்டா அவர்களே! ஐயர் ஒன்றையும் விட்டுப் போகவில்லை. இப்போது அவரிடம் அரசியல் ஞானமும் ஆற்றலும் சிறப்பாக இருக்கிறது. இப்போது அவரிடம் துப்பாக்கி இருந்தால் அது சுடாது. மாறாக அது பாதிக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகப் போராடும். ஐயர் எடுத்ததற்கெல்லாம் சுடாததால் இன்று எழுதுகிறார். எடுத்தவுடன் சுடுவதே மேலென்று அறிவிலியாக சுட்டவர்களெல்லாம் இப்போது எங்கே தோட்டா? உமது கருத்தைப் பார்க்கையில் உமக்குள்ளும் சாகவேண்டிய குட்டிப்புலி படுத்திருக்கிறது தோட்டா!

    • THOTTA says:
      16 years ago

      இராவணன்..உங்கள் எல்லொருக்கும் 100% தப்பு பண்ணாதா , 100% பொய் பேசாத……கொலை ,கொள்ளை பண்ணாத, தப்பு சய்தால் மன்னிக்கிற , இப்படி எந்த தீய பழக்கமும் இல்லாத……………………………….தலைவர்………………..தான் வேணும் எண்டால்…..? உங்களைப் போல ஆட்கள் எல்லாரும்………………………ஆ………………… எண் டு வானத்தைப் பாருங்கோ…….தேவதூதர் ஒருவர் வருவார்..வந்து…தமிழ் ஈழம் பெற்றுத் தருவார்!

      • chandrasegaran says:
        16 years ago

        ஐயா துப்பாக்கி இல்லாத( தோட்டாவே தவறுக்கெல்லாம் தண்டனை
        மரணமா

      • Prince says:
        16 years ago

        wel said thotta.

  4. thamilmaran says:
    16 years ago

    கடந்த காலச் சரித்திரமேநிகழ்காலச் சோகஙகலுக்கு காரணம்.முதல்ல கோபப்பட்டு விட்டு பின்னர் மன்னிப்பு என்பதை தலைவர் மாட்ரி இருந்தால் அது இழப்புக்கலை குரைத்திருக்கும் ஆனால்நானும் ஒரு தலைவர் என்ரு அவர் கதைக்க வெலிக்கிட்டதில் இருந்தே அவட்ர மண்டைக்க கழிமண் என்ரு தெரிந்து போயிட்ரு.இதில பாடங்கல் என்ரு ஒரு அரிவுஜிவி சொல்லுது.அண்டைக்கே இவர் தலைமைக்கு சர்யயில்ல என்ரு அந்த பரமாத்தா சொல்லிப் போட்டுது அதுக்கு விழுந்தது சூடு.இன்னும் எத்தனை விலையாட்டு இருக்கோ யாருக்கு தெரியும்?

  5. thurai says:
    16 years ago

    பிரபாகரன் கொலைகள் செய்யத் தொடங்கிய்தே தன் உயிரைக்காக்கவும்,
    பயத்தினாலுமேயாகும். தமிழினத்தைப் பற்ரியோ ,பின் விளைவுகளைப்
    பற்ரியோ
    சிந்திக்கவில்லை. இதனையே புலங்களில் வாழும் புலியின் ஆதரவாளர்கள்
    செய்கிறார்கள். தண்ட வாளத்தில் படுப்பது, பெரும்டசாலைகளை மறிப்பது
    போன்றவை தமிபியின் சிந்தனையிலிருந்து வந்தவையே.

    துரை

    • THOTTA says:
      16 years ago

      தண்டவாளத்தில் படுப்பதும் ,பெரும் சாலையை மறிப்பதும்….ஆயுதப்போரட்டமில்ல…அது ஜெனநாயகப்போராட்டமே……பிராபகரனை உருவாக்கியது.. நீரும் நானுமோ………ஜ்யரும் ராகவனுமோ…. , உமாவும்,பற்குனமுமோ அல்ல………..சிங்களவரும், சிங்கள அரசுகளுமே……….உருவாக்கினவன் எப்படியோ……உருவாகினவனும் அப்படியேதான் இருப்பான்.பிரபாகரன் தமிழரைப் பற்ரிச் சிந்திக்காட்டியும்……தமிழர் தங்களைப் பற்றி சிந்தித்ததின் விளைவே….இத்தனை வருடமும் அவரோடு நின்றார்கள் ….அவரின் செய்கைகளை ஏற்றார்கள்….தலைவர் பிராபகரனையும்,புலிகளையும் எதிர்க்கிறேன் எண்டு சொல்லி , நீங்கள் எல்லாரும்…….மல்லாக்காக் கிடந்து…….எச்சி ..துப்புறீர்கள்…..அவ்வளவே…..

      • thurai says:
        16 years ago

        ஈழத்தமிழர் உருமைப் போராட்டத்தை சிங்கள அரசு பயஙரவாதமாக்
        உலகிற்குக் காட்டி புலிகளை அழிக்க, முற்பட, அப்பாவி மக்களை

        பாதுகாப்பிற்காக தடுத்து வைத்து, பலிகொடுத்து புலிகளைக் காப்பாற்ரவே
        தண்டவாளத்தில் உலக்மெங்கும் படுத்தார்கள்.
        இன்று உலக்த் தமிழரனைவரும் பயங்கரவாதிகளாக்கி விட்டு

        உல்லாசமாக சுருட்டிய பணத்தில் புலிகள் வாழ்கிறார்கள்.

        இவர்கள் தான் தலைசிற்ந்த தல்வனின் வாரிசுகள்.

        துரை

        • THOTTA says:
          16 years ago

          நண்பர் துரை அவெர்களெ….. நீங்கள் ஒரு சதம் போராட்டத்துக்கு கொடுத்தீர்களோ……லட்சியத்திற்காக..லட்சக்கணக்கில் குடுத்த நாங்களே பேசாமல் இருக்கும்போதுநீங்கள் ஏன் நீங்கள் கவலைப்படுகிறிர்கள். அ மேரிக்காவில் போராட்டத்துக்கு ஆயுதம் வாங்கமுற்பட்டவர்களிற்கு 20 உம் 25 வருசமும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிறிற்கிறது. பிரான்சில் போராட்டத்திற்கு காசு சேர்க்க முற்பட்டவர்களிற்கு 15 தொடக்கம் 20 வருசம் ஜெயில் தீர்ந்திற்கிறது…அவுஸ்திரியாவிலும் வழக்கு தொடரபட்டிருக்கிறது..இப்படி 30 வருசமாய் ஓயாது உழ்ச்சவை இனியாவது சொகுசாய் இருக்கட்டுமே..ஆனால் பாருங்கோ புலிகழை எதிர்க்கிறேன் எண்டு 30 வருசமாய் ராஜாதி ராஜா வாழ்க்கை வாழ்பவைபற்றி உங்கட கண்ணுக்கு தெரியாதோ………………………

          • thurai says:
            16 years ago

            தோட்டா,

            விடுதலை பற்ரிப் பேசி, சிங்களவரிற்கு, தமிழரைப் பலி கொடுத்தும்,, புலத்திலுள்ள வர்களை
            மறியலில் வைத்தும் விட்டீர்கள்.
            இனி தலைவரின் வருகை ஏன்?

            துரை

          • shanthan says:
            16 years ago

            தப்பு செய்த நீங்கள் இன்று மக்களிடம் மன்னிப்பு கேளாமல் மீண்டும் எப்போது இப்படி வருமானத்திற்காக இலவு காத்த கிளி மாதிரி காத்திருக்கும் நீங்கள் இலட்சக்கணக்கில் கொடுத்ததாக யாருக்கு கதை விடுகின்றீர்கள்.

  6. thass says:
    16 years ago

    ஈழப் போராட்ட வரலாற்றில் தன்நலம் இல்லாமல் உண்மை பேசுகின்ற முதல் மனிதன் ஐயராகத்தான் இருக்க முடியும். தமிழின வரலாறு ஐயரை மறக்காது! தனது இமேஜைப் பற்றி கூட கவலைபடாமல் ஐயர் கூறும் உண்மைகள் உலகத்தின் ஏனைய போராட்டங்களுக்கும் உதவியாக இருக்கும். வாழ்த்துக்கள் ஐயரே!

  7. proffessor says:
    16 years ago

    ஆக  மொத்தத்தில்  பற்றிக், மைக்கல்  இருவரின்  கொலைகள்  தொடர்பில்  முன் வரலாறு  தெரியாதவர்களுக்கு    கொலைகளுக்கான   மூலம்   அறியக்கூடியபடி  ஜயரின்   பதிவு  உணர்த்தியுள்ளது.

    அமிர்  பிரபா   தொடர்பும்   பின்னர்  இதே  அமீர்  ஏன்  கொல்லப்பட்டார்   என்பதற்கு  சாட்சி  சொல்ல  எவரும்  இல்லாமல்  போய்விட்டாலும்   அமிரின்    கொலைக்கும்  காரணம்  இல்லாமல்  இருக்காது.

  8. Alex Eravi says:
    16 years ago

    ஐயர் அவர்களே!

    “பிரபாகரனைப் பொறுத்தவரை தேனிர், கோப்பி போன்றவற்றை கூட அருந்தாத தூய ஒழுக்கவாதியாகவே காணப்பட்டார். அவரைப் பின்பற்றிய எம்மில் பலர் இந்த ஒழுக்கவாதத்தை கடைப்பிடித்திருந்தனர்.” என்று குறிப்பிட்டிருந்தீர்கள், அதுமட்டுமல்ல தன்னுடன் சேர்ந்தவர்களுக்கும் பால் தான் அருந்தக் கொடுப்பார். உதாரணத்திற்கு நினைவில் வருபவை, சுந்தரம் கொலையின் பின், இராசுப்பிள்ளையுடன் இருந்து பயிற்சியெடுத்து தனியாக 10 பேருடன் பிரிந்து தமிழ்நாடில் மனித வேட்டையாடி திரிந்த வேளையில், திருச்சியில் வைத்து கழுகுப்படையை சேர்ந்த இராஜ்மோகன் அண்ணர் அவர்களை கடத்தி சென்று ஒரு மாதத்திற்கு மேல் வைத்திருந்து முகுந்தனிற்கு அவரும் அவரை சேர்ந்தவர்களும் உதவி ஒன்றும் செய்யக்கூட்டாது என்ற நிபந்தனையில் விடுவிக்கப்பட்ட பின், பாண்டி பஜார் துப்பாக்கி சூட்டுச் சம்பவத்திற்குப் பின் பிடிபட்டு வீட்டுக்காவல் முறையிலான பிணையுடன் கூடிய நிபந்தனையில் விடுவிக்ககப்பட்ட பின் ஒவ்வொரு முறையும் சென்னைக்கு வழக்கிற்கு செல்லும் போது எந்த பஸ்ஸில் எந்தனை மணிக்கு திருச்சிக்கு வருவதாக இராஜ்மோகன் அண்ணர் அவர்கட்கு அறிவித்து விட்டு வரும்போது, பஸ்நிலையத்தில் எல்லோருக்கும் தேநீர், கோப்பி தவிர்த்து பால்தான் ஓடர் பண்ணுவார், அதுவும் மற்றவர்களை பணம் கொடுக்க விடாமல் தான் தான் பணம் கொடுக்கவேண்டும் என்று அடம் பிடிக்கும் பழக்கம் உடையவர். இதை பின்னால் கழகத்தில் இருந்த சுழிபுரத்தை சேர்ந்த பாலமோட்டை சிவம் அவர்களுடன் பகிரும்போதும் அறிந்துகொண்டேன்.

    ஓர் மனிதனிற்கு இரண்டு பக்கங்கள் உள்ளது என்ற அடிப்படையில் பிரபாகரன் அவர்கட்கும் இரண்டு பக்கங்கள், அவருக்கென்று சில தனிப்பட்ட கொள்கைகள் இருந்தன.

    “சில நேரங்களில் சில மனிதர்கள்” என்று ஜெயகாந்தன் அவர்கள் எழுதியமாதிரி, சந்தர்பங்களும் சூழ்நிலைகளும் தான் மனிதனை மாற்றுவது.

    இன்று 30 வருடங்களிற்கு முன் நடந்தவைகளை சரியாக ஜாபகப்படுத்த்தி எழுதுவது சுலபமல்ல, தங்கள் இவ் ஓர் ஆவணமான எழுத்து, இடையூறுகள் ஒன்றுமில்லாமல் தொடரவேண்டும், அத்துடன் உட்கொலைகள் பிரபாகரன் தலைமையில் மட்டுமல்ல, கருத்துக்ககளை கருத்துக்களால் எதிர் கொள்ள முடியாத மாற்று கருத்து கொண்டவர்கள் தலைமையிலும் அண்மைய காலம் வரை நடைபெற்றுக்கொண்டு இருந்தன, தற்போது அது வடிவத்தை மாற்றி மிரட்டல்கள், முதுகுப்பின் குத்துவது என்று காலத்திற்கு ஏற்ற மாதிரி தொடர்ந்தவண்ணமேயுள்ளது.

    வரலாறுகளும் அனுபவங்களும் பாடமாகட்டும்!

    எல்லாவற்றிகும் மனித நேயம் வேண்டும்!

    நன்றி!

    – அலெக்ஸ் இரவிவர்மா.

    பிற்குறிப்பு:

    மன்னிக்கவும், தங்களது முன்றாம் பாகத்தில் “தங்களது இரண்டாம் முன்றாம் பாகத்தில் குறிப்பிட்டிருந்த மட்டக்களப்பை சேர்ந்த மைக்கல் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டு, எரிக்கப்பட்ட பின்னரும் அவரின் தாயாருக்கு அவர் உயிருடன் இருந்து எழுதியமாதிரி கடிதமும், செலவிற்கு பணஉதவியும் சென்றுகொண்டிருந்தது உண்மையா?” என்று தெரிவித்திருந்தேன். தற்போது ஜாபகம் வருகிறது பற்குணம் கீரிமலையை சேர்
    ந்தவறேன்றால் அது பற்குணமாக இருக்க வேண்டும்.

  9. J says:
    16 years ago

    http://www.lttepress.com/

    Prabha is alive and SAfe BEWARE

  10. thass says:
    16 years ago

    தோட்டா,
    பிரபாகரனை உருவாக்கியது அடக்குமுறைதான். அதற்கு எதிரான போராட்டத்தை அழித்ததும் பிரபாகரன் தான். ஐயர் கூறுவது தவறுகளில் இருந்து படியுங்கள் என்று தானே தோட்டா. நீங்களோ தவறுகளை இன்னும் இன்னும் செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்கள். என்ன தோட்டா இது ?

  11. எதிர்வு says:
    16 years ago

    ஐயரே!

    பிரபாகரனுக்கோ,எமக்கோ இலங்கை அரசிற்கு எதிரான இன்னொரு இயக்கம் வளர்வதில் எந்த பய உணர்வோ, காழ்ப்புணர்வோ அன்றைய சூழலில் இருந்ததில்லை என்பதை விட பாலஸ்தீன இராணுவப் பயிற்சி,ஆயுதக் கொள்வனவு என்ற ஆசை காட்டி ஈரோசால் வாங்கப்பட்ட பணம் என்று சொன்னால் உண்மை ஒருபடி உயர்ந்து நிற்குமல்லவா?
    ஜெயவேலை கொலை செய்ய முயன்று தோற்றுப் போய் பொலிசாரிடம் காட்டி கொடுக்கப்படவில்லை என்று உறுதியாக சொல்லமுடியுமா?
    அப்போதெல்லம் குறைந்த பட்சம் போராட்டங்கள் குறித்தும், அரசியல் குறித்தும், மார்க்சியம் குறித்தும் ஆயிரம் விடயங்களைப் படித்துத் தெரிந்துகொண்டாவது இருக்கலாம் என்று இப்போது வருந்துவதுண்டு என்று எழுதி உள்ளீர்கள்.தெரிந்து இருந்தால் உயிரே இருந்திருக்காது என்று பெருமைப்படுங்கள். இறுதியாக ஆரம்பத்திலிருந்தே
    ஆமாஞ்சாமிகளாக மத்திய குழுவொன்று செயற்பட்டதை பட்டவர்த்தனமாக தெளிவுபடுத்தியுள்ளீர்கள்.
    நன்றி.

  12. Eraavanan says:
    16 years ago

    ஐயா தோட்டா! எனக்கு நீர் தம்பிபோல் உள்ளது. அதை உமது எழுத்து> கருத்து நடையிலிருந்து புரிந்துகொண்டேன். நிமிர்ந்து கிடந்தவாறே துப்பினால் அது எனக்குமேல் வீழும் என்ற அறிவே இல்லாமற்தான் இதுவரை நடந்துமுடிந்த தமிழீழ விடுதலை என்ற போராட்டம் இடம்பெற்றது. அதனை நீர் ஏற்றுக்கொள்ளும். எனைப் போன்றோரும் முன்பு அப்படித் துப்பியவர்கள்தான். அது பிழையென்று தெரிந்ததும் எமது செயற்பாட்டை மாற்றிவிட்டோம். தம்பி தோட்டா அமைதி. அமைதி. நாம் பல தடவை கேட்டும் எழுத விரும்பாத ஐயர் தற்போது எழுதுகிறார் என்றால் அதற்கான காலம் கனிந்திருப்பதாக அவருக்குத் தெரிந்திருக்கிறது. அவரின் இடத்தில் நீர் இருந்தால் அவர் அரசியற் தெளிவின்றி அந்தக் காலத்தில் இருந்ததுபோல் ஆகும். சரி சரி தம்பி தோட்டா அந்தக் குட்டிப் புலியை இனியாவது காட்டில் விடும். அது சுதந்திரம்தேடி அங்கே அலையட்டும். நான் எனது விடுதலைக்காக நானே போராடுபவன். எந்தத் தேவ தூதரையும் எதிர்பார்ப்பவன் அல்ல. அரசியலற்ற அவசரப் போக்கும் ஆத்திரமுமே இதுவரைக்கான காரணங்கள். அதுபோல் நீரும் அவசரப்படாமல் ஆத்திரப்படாமல் உண்மைகளை உணர்ந்துகொள்ளும். நன்றி தம்பி.

    • solo says:
      16 years ago

      சரி, உங்கட யொசனைய சொல்லுங்கொவன்

    • Prince says:
      16 years ago

      தோட்டா சின்ன பையன் நீர் குழந்தை.

  13. Guru.Radhakrishn an,Nellikuppam--607105 --Cuddalore District says:
    16 years ago

    கண் கெட்ட பின் சுரியநமஷகாரம் . .

  14. sayantha says:
    16 years ago

    மயிரிழையில் தப்பி தலைமைப்பொறுப்பை பற்குணம் எடுத்திருக்கலாம். இவ்வளவு இழப்புகள் வந்திராது. அதுசரி ஈழப்போரட்டத்தையும் தமிழர் தலைவிதியையும் வெளச்சக்திகள் தீர்மானிக்கும்போது யாரைக்குறை சொல்லி என்ன பயன்?

    • SRIRAM says:
      16 years ago

      ஓம் ..மயிரிழையில் தப்பிய உங்கட டக்கிளசும், கருணாவும் மற்ரதுகளும் இங்க எங்களுக்கு சய்யிற அருமை பெருமைகளை பாத்துக்கொண்டுதானே இருக்கிறம். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி எண்டு சொல்லிக் கொண்டு சிங்கள தலைவர்களின் ஒளிந்துகொண்டு செய்யிற கூத்தை……….மற்றது காரிலும் பாரிலும் திரியுது. இதுகள் தான் எமக்கு விடுதலை வேன்டித் தரப் போகினமாம்?

      • thurai says:
        16 years ago

        தமிழர் கேட்பது தமிழரைத் தமிழரே அடக்கியாள்வதற்கான, அதிகாரம்.
        சிங்கள மொழி படிக்கமாட்டோம் ஆனால் உலகமொழி அனைத்தும்
        படிப்போம். காலி வரை சென்று கடைகள் போட்டு வியாபாரம் செய்வோம்
        ஆனால் வவுனியாவரை தான் சிங்களவன் வரலாம். இந்த கெட்ட குறுகிய குணமுள்ளவர்களிற்கும் விடுதலைக்கும் என்ன சம்பந்தம்.

        துரை

        • Prince says:
          16 years ago

          நம் சிறீலங்கா நமோ நமோ மாதா. இப்ப கதிரைல இருந்து எழும்பி நிண்டிருப்பிங்களே துரை.

  15. proffessor says:
    16 years ago

    அமிர்தலிங்கம் தனது ஆதரவாளரான சுந்தரத்தின் தந்தையாரான சதாசிவம் மூலம், சுந்தரத்துக்கு நெருக்கடி கொடுத்து, ‘புதிய பாதை’ பத்தி;ரிகையை நிறுத்திவிட பல வழிகளில் முயன்றார். சுந்தரம் அமிர்தலிங்கத்தின் மிரட்டல்களுக்கு அடிபணிந்து விடவில்லை. சுழிபுரத்தை சேர்ந்த சுந்தரம், தனது பத்திரிகையின் வெளியீட்டாளராக தனது ஊரைச் சேர்ந்த சுரேந்திரன் என்பவரின் பெயரை பத்திரிகையில் போட்டிருந்தார். அதை அவதானித்த அமிர்தலிங்கம், தனது இன்னொரு ஆதரவாளரான சுரேந்திரனின் தந்தையாரை அணுகி, அவரது மகனை ‘புதிய பாதை’ பத்திரிகை வெளியீட்டிலிருந்து விலகி விடும்படி நெருக்குதல் கொடுக்க ஆரம்பித்தார். தந்தையின் நெருக்குதலைத் தாங்க முடியாத சுரேந்திரன், தனது சம்மதம் இன்றியே தனது பெயர் பத்திரிகை வெளியீட்டாளராகப் போடப்படுகிறது என்று ஒரு பொய்யை தந்தையிடம் கூறித் தப்ப முயன்றார். அதை உண்மை என நம்பிய அவரது தகப்பனார், அவ்விடயத்தை அமிர்தலிங்கத்திடம் தெரிவித்தார். அதற்கு அமிர்தலிங்கம் அவருக்கு சில பாதகமான ஆலோசனைகளை வழங்கியதாக நாம் பின்னர் சுந்தரத்தின் மூலம் அறிந்தோம். 

    பிரிகேடியர் வீரதுங்க யாழ்ப்பாணம் வந்த பின்னரே, நவாலியைச் சேர்ந்த இன்பம், செல்வம் உட்பட அரசுக்கெதிராகச் செயல்பட்ட பல தமிழ் இளைஞர்கள் கொலை செய்யப்பட்டு, தெருவோரங்களில் வீசப்பட்டனர். அப்படியான வீரதுங்கவிடம் சென்று, தனது மகனின் சம்மதம் இன்றி அவரது பெயரை ‘புதிய பாதை’ வெளியீட்டாளராகப் போட்டுள்ளனர் என ஒரு முறைப்பாட்டை எமது அச்சகத்துக்கு எதிராக செய்வதற்காக, சுரேந்திரனின் தந்தை ஒரு கடிதத்தைத் தயாரித்து, வீரதுங்கவுக்கு அனுப்புவதற்கு தயார் நிலையில் வைத்திருந்தார். ஆனால் எமது அதிஸ்டமோ என்னமோ, சுரேந்திரனின் நெருங்கிய உறவினரும், பின்னர் புலிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டவருமான, நவ சம சமாஜக் கட்சியின் யாழ் மாவட்ட செயலாளருமான தோழர் ஆ.க.அண்ணாமலை அங்கு தற்செயலாக சென்றபோது இதைக் கேள்வியுற்று, உடனடியாக அதைத் தடுத்து நிறுத்தியதுடன், எனக்கும் உடனடியாகத் தகவல் தந்தார். அதன் மூலம் வீரதுங்கவிடமிருந்து எமது உயிர்கள் பாதுகாக்கப்பட்டன. இதைக் கேள்வியுற்ற சுந்தரம,; தனது நண்பர் சுரேந்திரனை வெளியீட்டாளர் பொறுப்பிலிருந்து விடுவித்துவிட்டு, குணரத்தினத்தை அதற்கு நியமித்து, எம்மையும், தனது நண்பர் சுரேந்திரனையும் இக்கட்டான நிலையிலிருந்து விடுவித்தார். இது அவரது நேர்மையையும், உயர்வான பண்பாட்டையும் எடுத்துக் காட்டுகிறது.

    • எதிர்வு says:
      16 years ago

      Professor!
      பெயருக்கு ஏற்றபடி தொழிலை செய்கிறீர்கள்.
      இலங்கை மார்க்சிச – லெனினிச கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் வட பிரதேசச் செயலாளர் ச.சுப்பிரமணியம் அவர்கள் ஆற்றிய உரையை தேனி இணையத் தளத்திலிருந்து திருடியதுதான் உங்கள் குறிப்பு. நன்றி.

    • K.K says:
      16 years ago

      Proffessor …your statments are 100% true…I was living that time near the chitra press. please sir continue your writing hier.Thanks

  16. கண் says:
    16 years ago

    விவாதம் செய்யும் அனைவருக்கும், கட்டுரையாளருக்கும்

    அரசியலின் முடிவிலிருந்தே அதனுடைய அமைப்பும் வடிவமைக்கப்படுகிறது. நீங்கள் எழுதும் அனேக விசயங்கள் அனைத்தும் அமைப்பும் அதனுடைய உறவு சம்பந்தப்பட்டவைகளாகவே இருக்கிறது. அரசியல் முடிவுகளை நீங்கள் குறிப்பதற்கு தயாராக இருக்கவில்லை.

    அன்றுள்ள சூழ்நிலையில் அனைத்து குழுக்களும் தங்களுக்குள் மோதிக்கொண்டுதான் இருந்தது. இதில் குறிப்பிட்டு ஒருவரை மற்றும் கூறுவது என்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல்தான். இந்த சண்டையை கொம்பு சீவி இந்தியாவும் தன் மேலாதிக்கத்தை நிலைநாட்டப் பயன்படுத்திக்கொண்டது.

    இறுதியாக ராஜிவ்-ஜெயவர்தனே ஒப்பந்தம் என்ற பெயரால் தமிழினத்தை கூட்டுச் சதியுடன் குழிதோண்டி புதைக்க முனைந்த போது அதை எதிர்த்து குரல் கொடுத்த விரல்விட்டு சொல்லக்கூடிய ஈழ அமைப்புகளில் முதன்மையானதாகவும் உறுதியானதாகவும் இருந்தது புலிகள் அமைப்பு என்பதும். மற்ற எல்லா ஆயுதக் குழுக்களும் இந்தியாவுடன் சேர்ந்துக்கொண்டு அழிக்கும் வேலைகளில் இறங்கியது என்பதும் மறைக்க முடியாத விசயங்கள். அப்பொழு அது இராணுவ ஆள் காட்டியாகத்தான் மற்ற அமைப்புகள் செயல்பட்டன. இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்பை எதிர்த்தும் சிங்கள பாசிச அரசை எதிர்த்தும் மற்றவர்களுடைய போராட்டம் என்ன ஆனது. ஈழத்தின் எந்த மூலையிலேயும் நீங்கள் மக்களின் நம்பிக்கையை பெற முடியாது போனது ஏன்? இல்லை சிங்கள பாசிச ஒடுக்க முறையை எதிர்த்து நிற்க முடியாமல் போனது ஏன்? இதற்கெல்லாம் உங்கள் பதிலென்ன?

    ஒரு போராட்டத்தின் அரசியல் உள்ளடக்கத்தை புறந்தள்ளுவதும், எல்லாம் ஒரு ஹீரோ வந்துதான் தீர்த்துவைப்பான் என்று நம்புவதும் இரண்டுமே பிழையானது. ஒரு விசயத்தை எல்லோருமே மூடி மறைக்கிறீர்கள். பெரும்பாண்மையான முரண்பாடு எங்கிருந்து வந்தது, ஒன்று தனி ஈழமல்ல ஒன்றுபட்ட இலங்கைக்குள் சுயநிர்ணய உரிமை என்றும், இல்லை என்றால் மாநில அளவு அந்தஸ்து போதும் என்றும் வரையருத்துக்கொண்டு அவர் அவர்கள் கழுத்தறுப்பு வேலையில் ஈடுபட்டிருந்ததை மறைத்துவிட்டு பேசுவதால் என்ன பயன்.

    இந்தியா ஈழத்தை ஆக்கிரமித்திருந்த போது அதை விரட்டியடிக்க மறைமுகமாகவேனும் இலங்கை அரசுடன் கூட்டு சேர்ந்து விரட்டியடித்தது என்பதை அனைவரும் அறிவர். இப்படி உள்நாட்டின் இன எதிரியுடனேயே கூட்டு சேர்ந்தவர்கள் மற்றவர்களுடன் கூட்டு சேர தயக்கம் இருக்க வாய்ப்பில்லை என்றே கருத வேண்டும். ஆனால் மற்றவர்கள் ஏதோ ஒரு இடத்தில் புலிகள் செல்வாக்கு செலுத்தமுடியாத இடத்தில் சிங்கள அரசுக்கு எதிராக நீங்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தியிருந்தால் தவிர்க்க முடியாமல் அவர்கள் மற்றவர்களை ஏற்க வேண்டிய சூழ்நிலை வந்திருக்கும்.

    அவர்கள் தவறுகளுக்கு எவரும் மாற்றாகவும் இருந்ததில்லை. அரசியல் ரீதியில் பின் தங்கிய சிந்தனையையே வைத்திருந்தனர். நடைமுறையில் சிங்கள பாசிசத்திற்கு சேவை செய்யும் அரசியலையும், காட்டிக்கொடுக்கும் நடைமுறையையும் வைத்திருந்தனர். இந்திய ராணுவத்தினை வெளியேற்ற சிங்கள அரசோடு ஒரு புரிந்துணர்வை வைத்திருந்ததை மற்றவர்கள் புலிகளை போராட்டத்தினை கைவிட்டதாக கதைத்தனர். இப்படி அரசியல் ரீதியில் அனைத்தும் எதிராகவே இருந்தது.

    இறுதியில் நடந்த தோல்வியும் சர்வதேசிய சூழ்நிலையை தவறாக மதிப்பிட்டமையே காரணம். ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் நடந்த போட்டியில் சிங்கள பாசிச அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்தியது. ஆனால் மற்ற அனைவரும் ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் நடந்த ஆதிக்க மறைமுக போரினை ஒதுக்கிவிட்டனர். அனைத்தும் அமெரிக்கா என்று அமெரிக்காவை எதிர்க்க கோரினர். அவர்கள் அமெரிக்காவினை ஒத்துக்கொள்ள வைத்துவிட்டால் எல்லாம் முடிவுக்குவரும் என்று நினைத்தனர். ஆனால் சிங்கள் பாசிச இராணுவ அரசோ, எதிர்முகாமில் உள்ள இரஷ்ய சீன கூட்டணியை சரியாக பயன்படுத்தினார்கள். இந்தியாவை சீனாவை காட்டியே தனக்கு சாதகமான சூழ்நிலையை வைத்தனர். அதற்கு அவர்கள் இலங்கை முழுவதையும் மற்றவர்களுக்கு கூறு போட்டு விற்கவும் செய்தனர்.

    இதை புலிகள் பயன்படுத்த தவறியதையும், தற்காலிகமாகவேனும் உறுதியாக மொத்தமாகவும் பின்வாங்காமல் இறுதி நேரத்தில் கையறு நிலையில் இருந்ததும், அனைத்து படைகளையும் ஒரு இடத்தில் ஒதுங்கி முடங்கிப்போனதும், சர்வதேச அரசியலின் பலவீனங்களை புரிந்துகொண்டு இன்னும் அவர்களுக்கு இடையில் பகை முற்றும் வரையில் பதுங்கி பின்வாங்கி இருந்திருக்க வேண்டும். அதாவது மீண்டும் கொரிலா யுத்தத்திற்கு மாறி இருக்கவேண்டும். ஆனால் அவர்கள் கடைசி வரை ஊசலாட்டமாக மரபு யுத்தத்தையே நம்பியிருந்தனர். சர்வதேச சமூகத்தின் கருணையை எதிர்ப்பார்த்திருந்தனர்.

    இதுவே அவர்கள் மீதிருந்த விமர்சனம். இதிலிருந்து அவர்கள் எப்படி தனது அமைப்பினை புதுப்பித்திருக்க வேண்டும், அடுத்த அமைப்பினை எப்படி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். மற்றவர்களும் அவர்களுக்கு அந்த நேரத்தில் கூட்டினை வலியுறுத்தி நிர்பந்த்திருக்கவேண்டும். அதையெல்லாம் புலிகளும் செய்யவில்லை மற்ற எவரும் செய்யவில்லை. அப்பொழுது நடந்தது (ego) ஈகோ சண்டையில்லை. அதை விடுத்து அவர்கள் பாசிசஸ்டுகள் என்ற ஒன்றை சொல்லிக்கொண்டு சிங்கள பாசிஸ்டுகளுக்கு மறைமுக சாமரம் வீசிக்கொண்டிருக்க வேண்டாம்.

    இப்பொழுது கூட வன்னி பகுதி தவிர மற்ற பகுதிகளில் யாரும் எந்தவித அமைப்பினை கட்ட முன்வரவில்லை. ஒரு சரியான அரசியல் முன்மொழிவை செய்யவில்லை. இந்த பின்னடைவை காரணம் காட்டி அனைத்து சமரசத்திற்கு தயாராக வெவ்வேறு தத்துவமாக முன்வைக்கிறார்கள். சிங்கள பாசிசத்தை இராணுவத்தை முறியடிப்பதற்கு அங்கு சிறிய குழுவைகூட கட்டியமைக்கத் தயாரில்லை. வாய்ஜாலங்களையும், மற்றவர்களை குறைகூறிக்கொண்டு தன் துரோகத்தையும், வெட்டிப் பேச்சுகளையும் ஞாயப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். போராட்டத்தினை அங்கீகரிக்க கற்றுக்கொள்ளவேண்டும். அதில் உங்கள் வன்மத்தை தீர்த்துக்கொள்ள உங்கள் மனம்போன போக்கில் தவறுகளை சுட்டிக்காட்டுவதை நிறுத்துவதும், பழைய தவறுகளை சுட்டிக்காட்டி அதற்கு பிறகு அவர்கள் மாறி வந்ததை கொஞ்சம்கூட பொருட்படுத்தாமல் மீண்டும் பழைய கஞ்சியையே காய்ச்சுவதும், மீண்டும் ஒரு மாற்றத்தினை விரும்பாததே காட்டுகிறது.

    அரசியல் பிழையினையும், ஏற்கெனவே மாறிவிட்டதை விட்டுவிட்டு இன்னும் ஜனநாயகப் படுத்துதல் எப்படி அதுவும் அரசியலை விட்டுவிடாமல், சமரசமில்லாமல் வன்மத்திற்கு இடம்கொடுக்காமல் எதிர்கால கடமையினை மனதில் கொண்டு விமர்சனத்தை ஆக்கப்பூர்வமான விமர்சனத்தை, சாவு குறி சாபத்தை விட்டுவிட்டு இருப்பவர்களையோ அல்லது அந்த அமைப்பினையோ, அல்லது ஒரு புதிய அமைப்பினையோ எப்படி கட்டியமைப்பது என்பதனை விவாதிக்க முற்படுங்கள். அவர்களை குறைசொல்வது ஒன்றையே தொழிலாக கொள்ளாமல், ஏதோ அவர்கள் குறைசொல்வதாலேயே நீங்கள் சரியான அரசியலை வைத்துக்கொண்டிருப்பதாக ஏமாற்றாமல் தெளிவாக இனி செய்ய வேண்டியதை விவாதியுங்கள். அதற்கு பழைய அரசியல் பிழையை சுட்டிக்காட்டுங்கள்.

    இதுவல்லாமல் ராஜபக்சேவை, சிங்கள் இனவாத பாசிச இராணுவ ஆட்சியினை எதிர்பதை எப்படி எப்படி என்று விவாதிக்காமல், போராடுபவர்களைப் பற்றி மட்டுமே விவாதிப்பது மறைமுகவோ நேரடியாகவோ அந்த இனவாத பாசிசத்திற்கு மட்டுமே சேவை செய்யும். ஏகாதிபத்தியத்தின் அடிமைத்தனத்தை ஈழத்திலோ, இலங்கையிலோ விடிவிக்காது. இனியும் மாற்றிக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். தவறான முன் உதாரணத்தை உருவாக்காதீர்கள். ஒரு முனைக்கத்தியாக தமிழர்கள் மீது மட்டுமே பாய்ச்சும் கத்தியாக மாறாதீர்கள்.

    • அயலவன் says:
      16 years ago

      புது டில்லியில் நடந்த பிரபாகரனுடனான சந்திப்பில் பிரபாகரனுக்கு இரு அழகான குழந்தைகள் இருப்பதையும் அவர்கள் பாதுகாப்பான சூழலில் வாழ்வதை பார்க்க ஆசைப்படுவதாகக் கூறப்படுகின்றது.இதன் அர்த்தம் என்னவென்று இப்போது தான் புரிகின்றது இந்தியா பதினெட்டுவருடமாக மறைத்துவைத்திருந்த வஞ்சத்தைத் தீர்த்திருக்கின்றது என்பதனை இந்த இணைப்பைப் பார்த்துப் புரிந்து கொள்ளலாம். திட்டமிட்ட நயவஞ்சகப்படுகொலை
      .http://www.youtube.com/watch?v=qwW2JHWwlj4&feature=related

      தென் இந்திய அரசியல் தலைவர்களை ஒரு சதத்திற்கு கணக்கெடுக்கூடாதென்றும் அவர்கள் நகைச்சுவையாளர்கள் என்ற உண்மையையும் சரத்பொன்சேகா கூறியுள்ளார். http://www.thinakaran.lk/2010/01/20/_art.asp?fn=f1001203

    • thurai says:
      16 years ago

      பிரபாகரனும்,புலிப்படையும் ஏனைய அமைப்புகழும் தோன்றக் காரணம் தமிழர் விடுதலிக் கூட்டணியினரே. அடித்தளமற்ர விடுதலைப்போர்.. தமிழ்மக்களை
      சிங்கள அரசிற்கும் சிங்கள மக்களிற்கும் எதிரா அணிதிரட்டினார்கள்.
      சிங்கள இராணுவத்தை அழிப்பதும், மண்ணை மீட்பதுமே விடுதலையாகக் கருதியவர்களே புலிகள்.

      யாழ்ப்பாணத்தை விட்டு வன்னிக்குள் புலிகள் புகுந்த போதே, தமிழர்களின் விடுதலைப்போர் அஸ்தமிக்கத் தொடங்கியது. இறுதியில் தமிழரை பலிகொடுத்தும்
      புலிகளைக் காப்பாற்ர முடியாத நிலையிலேயே விடுத்லைப்போர் முடிந்தது.
      துரை

  17. thamilmaran says:
    16 years ago

    கண்னிக்கு பார்வைக் குரைபாடு இருன்ட்தால் வைத்தியரிடம்தானே காட்ட வேண்டும்,சரியாகிவிடும் என்ரு இருன்டதால் பார்வைக்குரைபாடே ஏட்படும்.இது பழுதுபார்க்கும் இடம் ஆக குட்ரம்,குரைகலை சரிபார்க்கப் படுகின்ரன.புலிகளீன் இராணணூவம் மாட்ருக்கருத்தாளர்கலை விட்டு வைக்கவில்லை.தமது முகாமிது என தெரின்ட்தும் காரைநிருத்தினார்கல் என் எங்கல் அப்பாவை அடிக்காத குரையாக திட்டினார்கல்.இன்னும் பல் கதைகள்,காய்ங்கல் புலிகளால் பலருக்கும் உண்டு ஆனாலும் மக்கள் புலிகள் பக்கம்தானேநின்ரார்கள்.
    இராமரே ஆனாலும் தவரு என்ரால் தவருதான்.

  18. அயலவன் says:
    16 years ago

    • ganesan says:
      15 years ago

      கனெசன் க்ஷ்ய்ட்ர்வ்ட்fச்ட்ய்க்fச்ச்ட்ச்வ்வுக்பொல்க்வ்க்

  19. thamilmaran says:
    16 years ago

    இந்தியாவுடன்நட்பை காட்டுவது என்ரு புலிகள் இந்திய எதிர்ப்பாளர்களூடன் உரவை பேணீனார்கள்.அரசியலுக்கு ஒரு புண்ணாக்கை கொன்டு வந்தரர்கள்.மொத்தத்தில் எல்லாமே புலிகளூக்கு எதிராயிட்ரு.இந்தியா மீது பகை வளர்ப்பது ஆரோக்கியமானதல்ல.சத்தியம்நமது.தளராது வாழநம் சொந்தங்களூக்கு கட்ருத்தருவோம்.காலம் மாரும்.

  20. samy says:
    16 years ago

    இப்போது அடுத்து என்ன செய்ய வேண்டும் வியூகம் புதிய திசைகளின் செயற்பாடுகளும் இப்படி முடியாது என்பதற்கு ஏதாவது விடிவெள்ளிகள் தெரிகிறதா?

  21. அயலவன் says:
    16 years ago

    மைக்கலுடனும்,பற்குணத்துடனும் பக்கத்தில் பிரபாகரன் படுத்துவிட்டு இடையில் எழுந்து அவர்கள் நித்திரையில் இருக்கும் போதே துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாகவே குறிப்பாக புளொட்,ரெலா இயக்கத்தினரால் எண்பதுகளின் ஆரம்பத்தில் பரவலாகப் பேசப்பட்டது.

    உண்மைகள் எப்போதோ ஒருநாள் வெளிவரும் என்பதை முப்பத்தைந்து வருடங்களின் பின்னான ஜய்யரின் பதிவுகள் உணர்த்துகின்றன. இன்னும் உறங்கிக்கிடக்கும் உண்மைகள் பல வெளிவருமென எதிர்பார்க்கின்றேன்.

  22. sayantha says:
    16 years ago

    தேவகுமாரன் உயிரோடு இருப்பதாக உலகம் நம்புவது போல்இ தேசியத் தலைவர் அவர்களும் ஒரு நாள் வருவார் என்று தமிழர்கள் நம்புகிறார்கள்.

    இத்தனை பேரழிவு யுத்தத்தை நடாத்திஇ தமிழீழ மண்ணைத் தமிழர்களின் புதைகுழிகளாக மாற்றிய எதிரிகள் விட்டு விடுவார்களா? சிங்களத்தில் சொல்வதைத் தமிழர்கள் ஏற்க மறுப்பதால் அதனைத் தமிழில் சொல்லவும் ஏற்பாடுகள் செய்தார்கள். தமிழில் சொல்லியும் தமிழர்கள் அதை ஏற்க மறுத்தே விட்டார்கள். ஆனாலும்இ பாலூற்றிக் கதை முடிக்கப் புறப்பட்டவர்கள் அதனை விட்டு விடுவதாக இல்லை. தலைவர் குறித்த நம்பிக்கை தமிழர்களிடம் இருக்கும்வரை தமக்கு இடம் கிடைக்கப் போவதில்லை என்பதால்இ முள்ளிவாய்க்கால் பேரவலம் முடியும்வரை முகம் காட்ட மறுத்தவர்கள் மீண்டும்… மீண்டும்… அதே வசனங்களோடு அரங்கிற்கு வரத் தவிக்கிறார்கள். அதற்காகத் தமிழ் மக்களை இரு துருவப்படுத்தும் முயற்சியிலும் சளைக்காமல் ஈடுபடுகிறார்கள்.

    தற்போது அவர்களுக்கான அரங்கமாகவே ‘நாடு கடந்த தமிழீழ அரசு’ உருவாகி வருகின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ்இ பாரிஸ் புறநகரான சார்சேலில் நடைபெற்ற ‘நாடு கடந்த தமிழீழ அரசு’ அரங்கத்தில் இடம்பெற்ற உரையாடல்களும் இதையே உணர்த்தியது. தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இறந்துவிட்டார் என்று நிரூபிக்கும் முயற்சிகளும் அங்கே மேற்கொள்ளப்பட்டது. விடுதலைப் புலிகளின் தலைவராக கே.பி. அவர்களே நியமிக்கப்பட்டதாகவும்இ அதன் தொடர்ச்சியாகவே ‘நாடு கடந்த தமிழீழ அரசு’ உருவாக்கப்படுகின்றது என்றும் கூறப்பட்டது. விடுதலைப் புலிகளின் தற்போதைய புலம்பெயர் கட்டமைப்புக்களும் விமர்சனப்படுத்தப்பட்டது. மக்கள் பேரவைகளும் அவர்களது விமர்சனங்களிலிருந்து தப்பவில்லை.

    திரு. விசுவநாதன் உருத்திரகுமார் அவர்கள் மிகப் பெரிய தமிழீழ உணர்வாளர். தேசியத் தலைவர் அவர்களுடன் மிக நெருக்கமாகப் பழகியவர். தமிழீழ மீட்பிற்கான அவரது முயற்சியும்இ பணியும் புனிதமானது என நாம் நம்புகின்றோம். ஆனாலும்இ அவரது பக்கத்தில் அமர முற்படுபவர்களது செயற்பாடுகள் அவரையும் தாழ்த்தும் அபாயங்கள் கொண்டதாகவே உள்ளன. தேசியத் தலைவர் அவர்களுக்குப் பாலூற்றிக் கதை முடிக்க முயற்சிப்பதுஇ வட்டுக்கோட்டைத் தீர்மானம் ஒரு வரலாற்று அவமானம் எனப் பிரகடனப்படுத்துவதுஇ விடுதலைப் புலிகளின் புலம்பெயர் கட்டமைப்புக்களை விமர்சிப்பதுஇ மக்கள் பேரவைகள்மீது அவதூறான தாக்குதல்களைக் தொடுப்பது என்று அவரது அணியிலிருந்து சகதிகள் மட்டுமே வெளிவந்து கொண்டுள்ளன. மிகப் பெரிய தேசியக் கடமையினை நிறைவேற்றத் துடிக்கும் திரு உருத்திரகுமார் அவர்கள் காலம் தாழ்த்தாது இத்தகைய சேறடிப்புக்களை தடுத்து நிறுத்தாதுவிட்டால்இ அவரது முயற்சியே அதில் மூழ்கடிக்கப்பட்டுவிடும்..

    ..
    பாரிஸ் ஈழநாடு

  23. Vijay_kck says:
    16 years ago

    ஆமாம். பிரபாகரன் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து விட்டு தப்பித்து ஓடி விட்டார். அதனால் கருணா போன்ற உண்மையும் உத்தமமுமானவர்கள் ஈழத்தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவார்கள். உரிமைகளைப் பெற்றுத் தருவார்கள். கண்டிப்பாக.

  24. xxx says:
    16 years ago

    “திரு. விசுவநாதன் உருத்திரகுமார் அவர்கள் மிகப் பெரிய தமிழீழ உணர்வாளர். தேசியத் தலைவர் அவர்களுடன் மிக நெருக்கமாகப் பழகியவர். தமிழீழ மீட்பிற்கான அவரது முயற்சியும் பணியும் புனிதமானது என நாம் நம்புகின்றோம். ஆனாலும் அவரது பக்கத்தில் அமர முற்படுபவர்களது செயற்பாடுகள் அவரையும் தாழ்த்தும் அபாயங்கள் கொண்டதாகவே உள்ளன.”

    ஆமாம். தளபதிகள் என்றுமே தவறு செய்வதில்லை.
    மற்றவர்கள் தான் அவர்கட்காக எல்லாத் தவறுகளையும் செய்கிறார்கள்.
    அப்பா sayantha,
    தந்தை” “அண்ணன்” “தம்பி” காலம் எல்லாம் நாங்கள் கேட்ட கதை திரும்பவும் சொல்லப்படுகிறதா?

  25. S.தமிழவன் says:
    16 years ago

    இங்கு விவாதம் செய்கிற தோட்டா, தமிழ் மாறன், சாந்தன் , அயலவன், அலெக்ஸ் ரவி போன்ற அனைவருமே ஒன்றை மட்டும் தான் சொல்லத் துணிகிறர்கள். பிரபாகரன் சரியா தவறா என்பது தான் அது. ஐயரின் தொடரில் ஆரம்பத்திலிருந்தே இழையோடும் அரசியல் சிந்தனையை யாருமே புரிந்து கொள்ளவும் விவாதிக்கவும் பின்னிற்கிறார்கள். மீளாய்விற்கான ஆரம்பப் புள்ளியாகக் கூட இந்தத் தொடர்ளின் பயன்பாடு அமைய வாய்ப்புண்டு. எனவே, நண்பர்களே எதிர்காலத்தைப் திட்டமிட்டுக் கொள்வட்கற்கான நிகழ்கால உரையாடலை கையாளும் வகையிலான அரசியல் விவாதங்களில் ஈடுபடலாமே?

  26. thamilmaran says:
    16 years ago

    தெளீந்தநீரில் கல்லெரிந்தால் கலங்கும்,மறூபடி தெளீந்து வரும்.னாமும் எரியப்படும் கற்களால் குழம்புவதும்,மறூபடி தெளீவதுமாக் பேசுகிறோம்.சரவனை கிராமத்தில்நான் பார்த்தநெல் வயல்களூம் தெளீந்தனீரில் ஓடும் இறால்கள் சின்ன வயதில் எங்கள் கை விரல்கலை கடித்திருக்கின்ரன.இப்போது சமயங்களீல் சிந்திக்காது பேசுவதும் தெளீந்தனீரில் இறால்களோடு விலையாடுவது போன்றதுதான்.

  27. shanthan says:
    16 years ago

    ‘கடந்த வருடம் தை மாதம் 2ம் திகதி புலிகளின் கோட்டையான கிளிநொச்சி அரசின் கைவசப்பட்டது. புலிகள் பின்வாங்குகிறார்கள். எங்களை பணயக் கைதிகளாக இருக்கும்படியாக்கினார்கள். விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் இடையில் சண்டை உக்கிரமானபோது சாதாரண தமிழ் மக்களாகிய நாங்கள்தான் இருதரப்பினராலும் மிகக் கொடுமைகளை அனுபவித்தோம். வார்த்தைகளால் வடிக்க முடியாத துயர அனுபவங்கள் அவை. புலிகள் தோற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்த ஒருசிலர் தங்களிடமுள்ள பணத்தின் வலிமையால் தப்பி ஓடிவிட்டார்கள். காயம்பட்டவர்களை ஏற்றவந்த றெட்குறொஸ் கப்பல், ஐசிஆர்சி கப்பல்களில் தங்களின் சொந்தங்களையும் சினேகிதர்களையும்புலிப்பிரமுர்கள் அனுப்பி விட்டார்கள். முன்னேறிவரும் இலங்கை இராணுவத்துடன் போராட எங்கள் குழந்தைகளை புலிகள் இழுத்துக்கொண்டு போனார்கள். ஒன்றிரண்டு மணித்தியாலப் பயிற்சியுடன் அந்தக் குழந்தைகள் போர்க்களத்தில் மடிந்தார்கள்.

    இந்தக் கொடுமைகளைத் தாங்கமுடியவில்லை. பசி, பட்டினி, உயிரிழப்புக்களை அவர்களிடம் (புலிகளிடம்) சொல்லியழுதபோது ‘தயங்காமல் எங்களுடன் இருங்கள். இலங்கை இராணுவம் எங்களை ஒருநாளும் வெற்றி கொள்ள முடியாது. வெளிநாட்டில் எங்களுக்காக குரல் கொடுக்கும் தமிழர்களின் முயற்சியால் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா எங்களைக் காப்பாற்றுவார். ஒபாமாவின் பெரிய கப்பல்கள் பெரிய படையுடன் வந்திறங்கும். நீங்களும் உங்கள் குழந்தைகளும் அமெரிக்கா போய்ச் சேர கடவுள் உதவப்போகிறார். பொறுமையாக இருங்கள,எத்தனையோ பணக்காரர்கள் எவ்வளவோ செலவழித்து அயல்நாடு போகிறார்கள் ஆனால் நீங்கள்புலிகளுடன் இருப்பதால் புலிகைளுடன்சேர்த்து உங்களையும் அமெரிக்காவக்கு அழைத்துச்செல்வார்கள் என்று புலிகள் சொன்னார்கள். அவர்களின் வார்த்தைகளை நாங்கள் நம்பினோம். நம்பவேண்டிய நிர்ப்பந்தம்” அப்படி புலிகளின் படைக்குத் தங்கள் குழந்தைகளை பறிகொடுத்தோரின் புலம்பல், கதறல் பரிதாபமாக இருக்கும்.

    புலிகளிடம் தங்கள் குழந்தைகளை கொடுக்காமல் தங்களின் குழந்தைகளைத் தாங்கள் குடியிருந்த காம்களின் அடியில் குழிதோண்டிப் புதைத்துக் காப்பாற்ற முயன்று அந்த மண்குழியில் தங்கள் அருமைக் குழந்தைகளை இழந்தோரும் எங்கள் முன்னால் நடைப்பிணமாக வாழ்ந்தார்கள்.

    ”நான் சுதந்திரபுரத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு அவர்களுடன் புதுமாத்தளன் வந்திருக்கின்றேன். புலிகளிடமிருந்து தப்பி ஓடும்போது புலிகள் சுட்டபோது தாய் விழுந்திறந்தார். இராணுவத்தினரின் செல் அடியில் தகப்பன் சிதறிப்போனார். தாயின் பிணத்தை மிதித்துக்கொண்டு, தகப்பனின் குருதியில் நனைந்துகொண்டு ஓடிவந்து உயிர் தப்பினேன’;.(வைகாசி 15ம் திகதி வரையும் ஒபாமாவின் கப்பல் வரவில்லை. பாவம் புலிகளும் அவர்களை நம்பிய ஆயிரமாயிரம் அப்பாவித் தமிழர்களும் இலங்கை இராணுவத்தின் வெற்றிக்குப் பலியாகியிருப்பார்கள்.
    இது இருபத்தி நான்கு வயதுப் பெண்ணின் வாக்கு மூலம்.

    ஒபாமாவின் கப்பலைப் புலிகளுக்கு அனுப்புவதாகச் சொன்ன புலம்பெயர்ந்த தமிழர்கள் இன்று வேறு விதத்தில் தங்கள் தந்திரங்களைக் கையாள்கிறார்கள். புலிகளைத் தவறாக வழிநடத்தியவர்கள் புலம்பெயர்ந்த தமிழர்கள். தங்களின் பணச்சேர்ப்புக்காகவும், மேடைகளில் பெரிய மனிதர்களாக இருப்பதற்கும் இலங்கையின் தமிழ்ச் சமுதாயத்தை ஈவிரக்கமின்றிக் கொன்று குவிப்பதற்குச் சூத்திரதாரிகள் புலம்பெயர்ந்த புலி ஆதரவாளர்கள்.

    • THOTTA says:
      16 years ago

      உம்முடைய கதை ,வசனம், திரைக்கதை நல்லாதான் இருக்கு.ஆனால் தமிழர்களிடத்தில் இந்த படம் ஓடாது.வேணூமெண்டால் கோம்- சினிமாவில் தமிழ் மாறனுக்கும்,துரைக்கும்(அவெரும்நீரோ) போட்டுக் காட்டும் . உமக்கு 100 மார்க்ஸ் போடுவார்கள்:

  28. shanthan says:
    16 years ago

    ஒபாமா கப்பல் அனுப்புவதாகப் புலிகளின் தலைமையை ஏமாற்றியவர் விஸ்வநாதன் உருத்திரகுமார். அவர்தான் இன்றைய நாடு கடந்த தமிழீழ செயற்குழுப் பொறுப்பாளர்.அவரது தற்போதைய கடமை புலிகளின் பெயரால் சேர்த்த பலமில்லியன் டொலர்களை காப்பாற்றுவதும் மேலும் நாடுகடந்த தமிழீழத்தின் பெயரால் மேலும் பணம் சேர்ப்பதும் தான்.முள்ளிவாய்க்காலில் புலிகளின் தலைமை ஒட்டுமொத்தமாக அழிவதற்கு
    கேபி உடன் சேர்ந்து முதலில் செயற்பட்டார். பின்னர் முழு
    சொத்தையும் தான் மடக்க கேபியையும் மாட்டிவிட்டார்.

  29. கேபி says:
    16 years ago

    இரண்டு தமிழ் கனடியர்களுக்கு அமெரிக்காவில் அளிக்கப்பட்ட தண்டனையை பற்றி ஒரு தமிழ் தேசிய ஆதரவாளர்களும் மூச்சே விடவில்லை.. ஜேர்மனியில் தேர்தல் திருவிழா 🙂

    • shanthan says:
      16 years ago

      ஏவுகணை வாங்குவதற்காக அமெரிக்கன் பொலிஸிடம் பணம் கட்டிய மாமேதைகள். அவர்களைப் பற்றி இந்த தமிழ் தேசியவாதிகள் எதுவுமே பேச மாட்டார்கள்.அவர்களின் பெயரால் இவர்கள் எத்தனை மில்லியன் டொலரை ஏப்பம் விட்டார்களோ.

    • shanthan says:
      16 years ago

      தமிழர்கள் கௌரவமாக வாழக்கூடியதாக ஒரு அரசியல்தீர்வு நிச்சயமாக வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.ஆனால் முதல் 30 வருடங்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியும் பின்னர் 30 வருடங்கள் புலிகளும் தம்மை ஏக பிரதிகளாகக் கூறி தமிழர் தலையில் மிளகாய் அரைத்தார்கள். அவர்கள் தமிழ் மக்களுக்காக என்ன சாதித்தார்கள். தமிழ்மக்களை தெருவில் அல்லவா கொண்டுவந்து விட்டுள்ளார்கள்.தமிழ்மக்கள் இந்த நிலைக்கு வருவதற்கு காரணமானவர்களின் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் அல்லவா இப்போது நாடுகடந்த தமிழீழத்தையும் வட்டுக்கோட்டைத்தீர்மானத்தையும் முன்னெடுக்கின்றார்கள்.இவர்கள் மிச்சத்தமிழர்களையும் எங்கே கொண்டுபோய் விடுவார்களோ என்று பயமாக இருக்கின்றது.

      • THOTTA says:
        16 years ago

        சாந்தன்…தெருவில விட்ட தமிழரை… நீர் வீட்டில கொண்டுபோய் விடலாம் தானே.சீக்கிரமே நீர் ஒரு சுத்தமானா அரசியல் கட்சியை ஆரம்பியும். நீர் எல்லாம்… ..வைக்கல் பட்டறை நாய் போல….தானும் வைக்கலை தின்னாது…மாட்டையும் தின்னவிடாதாம் அந்த நாய்……….தமிழரை புலிகள் தெருவில விட்ட எண்டு கத்துறீர்…..தமிழரின் வரலாறு படிக்கவில்லையோ…..அனுராதபுரத்து எல்லை ஓரங்களில்…எல்லாளன் படைகளும்…..துட்டகைமுவினதும் படைகள் முடிவின்றி மோதுகின்றன…முடிவின்றி தொடரும் மோதலால் இரு பக்கமும் அழிவிகள் ஏராளம்.இறுதியில் 70 வயது எல்லாளன் , இளைஜனாம் துட்டகைமுவிடம்.. நீயும்நானும் தனியே மோதுவோம் எண்ட முட்டாள் தனமான முடிவால் எல்லாளன் இறப்பால் அனுராதபுரத்து தமிழ் மக்கழை தவிக்க விட்டு போனதோடு இல்லாமல் அனுராதபுரமும் எங்களை விட்டு போய் விட்டதே …சங்கிலியன் ஆங்கிலயரோடு மோதி வெல்லமுடியாது எண்டுதெரிந்தும் அவெர்களோடு மோதி தானும் தன் படைகளும் தன் மக்களும் அழிந்ததுதானே மிச்சம்..இறுதியில் கண்டி ராச்சியமும் கோட்டை, யாழ் இராச்சியங்களும், கரையோரங்களும் ஆங்கிலேயரிடம் வீழ்ந்தபின்னர் வெல்ல முடியாது எண்டு தெரிந்தும் பண்டாரவன்னியன் இறுதிவரை போராடி மிச்சமாய் என்ன கண்டான்.உம்முடைய பார்வைல் இவெர்கள் எல்லாம் போராடாமல் இருந்தால் பல உயிர்கள் காப்பாற்டப்பட்டு இருக்கும்,பல அழிவுகழை தவிர்த்து இருக்கலாம்..இல்லையா.அட டா..என்ன ஒரு அரியகண்டு பிடிப்பு.மானம்.சூடு ..சொரனை..வீரம் இருக்கிற எந்த மனிதனும் தன் தாய்நிலம் எதிரியிடம் பறி போவதை பாத்துக் கொண்டு இருக்க மாட்டான்.இவை எல்லம் உம்மிடம் இருக்கா? இருந்தா னீர் இப்டி பேசுவீரா.அழிவில்லாமல் விடுதலை பெற முடியாது.தனது சொந்த இனத்தின் விடுதலையை விலை பேசுகின்ற ,காட்டிக் கொடுக்கிற உம்மைபோன்றவர்கள் இருக்கும் வரை விடுதலைக்கான அழிவுகள் தொடர்ந்துகொண்டே இருக்கும்.

        • shanthan says:
          16 years ago

          திருவாளர் சன்னம் இல்லாத தோட்டா அவர்களே தமது தவறுகளுக்கு அடுத்தவர்மீது பழியைப் போடுவது புலிகளையும் அவர்களது ஆதரவாளர்களையும் பற்றிக்கொண்ட தொற்றுநோய்.அவர்கள் எப்போதுமே கருத்தைக் கருத்தால் மோதிக்கொண்டதில்லை.காரணம் அவர்களிடம் காணப்பட்ட அறிவுப்பற்றாக்குறை. அவர்கள் தம்மீது தவறு காண்பவர்களை எட்டப்பன், துரோகி எனப் பட்டமளித்து கொன்றுவிடும் பல்கொலைக்கழகங்கள். அவர்கள் எந்தக்காலத்திலும் தம்மை சுயவிமர்சனம் செய்ததுமில்லை. மற்றவர் விமர்சனத்தை ஏற்றுக்கொண்டதுமில்லை. ஆனபடியால் தான் அவர்கள் அழிந்தார்கள். மானம்.சூடு ..சொரனை..வீரம் இருக்கிற எந்த மனிதனும் தன் தாய்நிலம் எதிரியிடம் பறி போவதை பாத்துக் கொண்டு இருக்க மாட்டான் என்றால் நீங்கள் எப்படி உயிருடன் இருக்கின்றீர்கள். திமிருடன் மரியாதைஇல்லாமல் பேசிய எவரும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. உங்களுக்கு அந்த நிலை ஏற்படாமலிருக்கட்டும்.

        • Vijay_kck says:
          16 years ago

          அருமையான கேள்விகள். எட்டப்பர்கள் எப்போதும் தமிழினத்தில் அதிகமாகத்தானே இருக்கிறார்கள்.

    • thurai says:
      16 years ago

      புலிகளின் ஆதரவாளர்களிற்கு தமிழர்களை பலிகொடுப்பது, மாவீரர் ஆக்குவது,

      சிறையில்வைப்பது கை வந்த கலை.

      புலிகள் வாழ வேண்டுமானால் தமிழர் மாண்டேயாகவேண்டும்.

      துரை

    • shanthan says:
      16 years ago

      தமிழ்மாறன் அவர்களே அரசியலுக்குள் இறங்கும் எவரும் இரண்டு வாரங்களுக்கு மேல் நல்லவர்களாக இருக்கமுடியாது என்பது ஒரு பொதுமொழி. இதற்கு உருத்திரகுமார் மட்டும் விதிவிலக்கல்ல. தற்போது இவர்கள் நடாத்துவது அரசியல். விடுதலைப் போராட்டமல்ல.இவர்கள் எதுவும் செய்யட்டும். ஆனால் இனிமேல் ஏகபிரதிநித்துவக் கோசம் வேண்டாம்.அது தான் சர்வதேசத்தில் இருந்து தமிழரைப் பிரித்தது. எவரும் தமக்குத் தெரிந்த வழியில் தமிழர் உரிமைக்காகப் பாடுபடட்டும். தங்களால் இயன்ற உரிமைகளையும் அபிவிருத்தியையும் பெற்றுக் கொடுக்கட்டும். கோவணத்துடம் இருக்கும் ஒருவர் பட்டுவேட்டிக்கு ஆசைப்படுவதில் தப்பில்லை. ஆனால் பட்டுவேட்டி கிடைக்கும் வரை கிடைக்கும் பருத்தி வேட்டியை அணிவதில் தப்பில்லை. உருத்திரகுமார் போன்றோர் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

  30. thamilmaran says:
    16 years ago

    சாந்தன் பேசுவது உண்மை, இதுதன் உண்மையில்நிகழ்ந்தது தங்கலை பாதுகாக்க மக்கலை புளீகள் பலியாக்கினார்கள்.மக்களீன் அடிப்படை வசதிகள்,உரிமைகலை பரித்து உங்களூக்காக் போராடுகிறோம் என்ற போர்வையில் தாம் வசதிக்ளால் வாழ்ந்து இறூதில் மக்கலையும் தமக்காக காட்டிக் கொடுத்து கொலை செய்த கொடியவர் புலிகள்.

    திரு.உருத்திரகுமரர் பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்தவர் அவருக்கும் ஊழலுக்கும் சம்பந்தமில்லை.தமிழ் உணர்வோடு செயற்படுபவரை காயப்படுத்தாதீர்க்ள்.எல்லோருமே பிழை என்றால் சரியானவர் யார்?

    சிங்கள மக்கள் சிந்திப்பதே இன வெறீ அடிப்படையில் எனும் போது தமிழ்ருக்கு தன்மானத்தோடு வாழும் சூழல் இல்ங்கையில் உண்டா/

    புலிகளீன் தவறூ போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்றாதது,தனியான் அரசுநாடாத்தியது இதனால்தான் புலிகாளால் எமதுநிலங்கள் எடுக்கப் பட்டபோது,எமது வீடுகளீள் பிறத்தியாருக்கு கொடுக்கப்பட்டபோது எம்மை கொதிப்படுத்தியது.

    அரசியல் அறீவற்ற போராளீகளீன்நடத்தை எம்மை சினப்படுத்தியது.எம்து மரபுகளீல் தலையிடுகிரார்கள் ஏண்ரு கோப்படுத்தியது.

    • shanthan says:
      16 years ago

      தமிழ்மாறன் அவர்களே அரசியலுக்குள் இறங்கும் எவரும் இரண்டு வாரங்களுக்கு மேல் நல்லவர்களாக இருக்கமுடியாது என்பது ஒரு பொதுமொழி. இதற்கு உருத்திரகுமார் மட்டும் விதிவிலக்கல்ல. தற்போது இவர்கள் நடாத்துவது அரசியல். விடுதலைப் போராட்டமல்ல.இவர்கள் எதுவும் செய்யட்டும். ஆனால் இனிமேல் ஏகபிரதிநித்துவக் கோசம் வேண்டாம்.அது தான் சர்வதேசத்தில் இருந்து தமிழரைப் பிரித்தது. எவரும் தமக்குத் தெரிந்த வழியில் தமிழர் உரிமைக்காகப் பாடுபடட்டும். தங்களால் இயன்ற உரிமைகளையும் அபிவிருத்தியையும் பெற்றுக் கொடுக்கட்டும். கோவணத்துடம் இருக்கும் ஒருவர் பட்டுவேட்டிக்கு ஆசைப்படுவதில் தப்பில்லை. ஆனால் பட்டுவேட்டி கிடைக்கும் வரை கிடைக்கும் பருத்தி வேட்டியை அணிவதில் தப்பில்லை. உருத்திரகுமார் போன்றோர் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும். தாங்கள் வழ்வது போன்று மக்களையும் வாழவிட வேண்டும். புலிகள் கடந்த காலங்களில் செய்த தவறுகளை இவர்கள் ஆராயவேண்டும். பகிரங்கமாக தவறுகளை ஒப்புக்கொள்ள வேண்டும். அதன் மூலமே இவர்கள் திருந்தி விட்டார்கள் என்பதை நிரூபிக்க முடியும்.

  31. thamilmaran says:
    16 years ago

    புலம் பெயர்ந்த மண்ணீல் காசு அதிகம் கொடுத்தவர்களே தலைவர்க்ள் ஆனார்கள்.இவர்களூம் பகுதிநேரக்கார்க்களே புலிகள் தமக்கான குழியை இவர்கலைக்கொண்டே தோண்டினார்கள்.உருத்திரகுமரர் அவர்கலை இப்போது பந்தாடுபவர்களூம் இந்த வியாரிகலே.

    எனது கவலைகள் எல்லாம் கடவுள் ஏன் தமிழர் தலையில் சோகங்கலை எழுதினான்?

  32. rathan says:
    16 years ago

    ஜயர் தொடர்ந்து எழுத வேண்டும் புலிகளின் வரலாற்றை மட்டும் .பல கேள்விக்குறியாக இருந்த விடயங்களுக்கு விடை கிடைக்கின்றது.அந்த நேரம் எங்களுக்கு அப்படியான அறிவு இல்லை,அல்லது அப்படி செய்திருக்கலாம் என்று எழுதுவதை தவிர்த்தால் இன்னமும் நன்றாக இருக்கும்
    .மேலும் பழைய சென்றல் கொமிட்டியில் இருந்தவர்களை பற்றிய சிறிய பின்புலமும் தந்தால் உதவியாக இருக்கும்

    • sivaguru says:
      16 years ago

      I am sorry for making my commments in English on the comments on the Iyer’s skills in writing the history of the LTTE. I have earned the skills in typing in Tamil. I agree with Iyer on his way of writing. While he writes the history he points out that they made mistakes because they did not have learned about the fundamental knowledge on the liberation movement as there was in Vietnam, Cuba etc. A real liberation fighter should have learned about the history of those countries. Iyer writes from this point of view. it is aneducational approach.

  33. thamilmaran says:
    16 years ago

    அரசியல் என்பது வாழ்க்கையில் இல்லையா?வேலையிடத்தில் இல்லையா?எங்குதான் அரசியல் இல்லை.அரசியல் இல்லாத ஒன்ரை உங்களால் அடையாளப்படுத்தமுடியுமா?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...