Wednesday, March 18, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

மகிந்த பரம்பரையினரின் சுகபோகத்துக்காக ஏற்பாடுகள்; ஜே.வி.பி. குற்றச்சாட்டு !

இனியொரு... by இனியொரு...
07/19/2008
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

ரொஷான் நாகலிங்கம்-

மக்களின் போராட்டங்களை திசை திருப்பவும் ஜனாதிபதி தனது பதவிக் காலத்தை 10 வருடங்களாக நீடிப்பதற்குமே அரசாங்கம் தனது ஆட்சியின் கீழிருந்த மாகாண சபைகளை கலைத்து அங்கு தேர்தலை நடத்துவதாக ஜே.வி.பி. குற்றம்சாட்டியதுடன் இதற்கு இடமளிக்க முடியாதெனவும் தெரிவித்துள்ளது.

கொழும்பு தேசிய நூலகத்தில் ஜே.வி.பி. நேற்று வெள்ளிக்கிழமை காலை நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்கா கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்;

அரசாங்கத்துக்கு எதிராக மக்களும் தொழிற்சங்கங்களும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில் இவர்களது கவனத்தை திசை திருப்பும் முகமாகவே இன்னும் 14 மாதங்களில் முடிவுறவுள்ள சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளை கலைத்து அங்கு தேர்தலை நடத்துகின்றது.

அரசின் கைகளிலுள்ள இரு மாகாண சபைகளை கலைத்து தேர்தலை நடத்துவதற்கு மற்றுமொரு காரணம் இத்தேர்தலில் வெற்றிபெற்றால் அடுத்த வருடத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்தி இரண்டு வருடத்தின் பின்னர் சத்தியப்பிரமாணம் செய்து மேலும் 10 வருடம் ஆட்சியை நீடிப்பதற்கான திட்டமும் உள்ளடங்கும்.

எனவே, ஊழல் மோசடி மற்றும் துஷ்பிரயோகமுள்ள இந்த அரசை கலைப்பதற்கும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் மக்கள் தீர்க்கமான முடிவினை மேற்கொள்ள வேண்டுமென நாம் கேட்கின்றோம்.

இலங்கையில் சார்க் மகாநாடு நடத்துவதன் மூலம் வெளிநாட்டு முதலீட்டை மேற்கொள்வதற்கு ஏற்ற இடமென காண்பிக்கவும் மற்றும் பல நன்மைகளையும் பெற முடியும். இந்நிலையில் இந்திய பிரதமரின் பாதுகாப்புக்கு இந்திய படையினர் வருவது எமது படையினரை அவமதிப்பதாக அமைந்துள்ளதுடன் இங்கு பாதுகாப்பு இல்லையென்பதை உலகுக்கு அறிவிப்பதாகவும் உள்ளது.

இந்த மகாநாட்டை நடத்துவதன் மூலம் எந்த நன்மைகளும் நாட்டுக்கு கிடைக்கப்போவதில்லை. நாட்டுக்கு வருகின்ற முதலீடுகளும் இல்லாமல் செய்யவே வழி வகுத்துள்ளது. இந்தியப் பிரதமரின் பாதுகாப்பு தொடர்பில் எமது பாதுகாப்பு படையினரிடம் எந்தவித கோரிக்கையும் விடப்படாது. மேலும் அவர்கள் இது குறித்து எந்தக் கருத்தையும் முன்வைக்காத நிலையிலேயே இந்தியப் படையினர் வருகின்றனர். இது எந்தவகையில் நியாயமானது? இது எமது படையினரை அவமதிப்புக்குள்ளாக்கும் செயலாகவே அமைந்துள்ளது.

வடக்கு வெற்றி அரசின் வெற்றியல்ல. இராணுவத்தினர் மழையிலும் வெயிலிலும் கஷ்டப்பட்டு பெறுகின்ற வெற்றிகளே அவையாகும். இதற்கு நாம் அவர்களுக்கு தைரியத்தை அளிக்க வேண்டும். எமது படையினருக்காக அமைச்சர்கள் எதுவும் செய்யாமல் அதனை தமது ஊழல் மோசடிகளை மேற்கொள்வதற்கும் மறைந்து கொள்வதற்கும் பயன்படுத்துகின்றனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அமைச்சர்களின் மகன்மாரும் உறவினருமே இத்தேர்தல்களில் போட்டியிடுகின்றனர். மாகாண சபைகளை பரம்பரை ஆட்சிச் சபைகளாக மாற்றி தமது ஊழல் மோசடிகளை மேற்கொண்டு பரம்பரையினர் உல்லாச வாழ்க்கை வாழ்வதற்கே பயன்படுத்துகின்றனர். இந்த பரம்பரையினரை அகற்ற வேண்டும்.

தமக்கு எதிரானவர்களை புலிகளென முத்திரை குத்துவது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். இவ்வாறான நிலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை தவிர அனைவருமே புலிகளாகிவிடுவர். இந்நிலையில் புலிகள் இதன் கீழ் மறைந்திருந்து தமது செயற்பாட்டை முன்னெடுக்க வழிவகுக்கும். இதனை முதலில் நிறுத்த வேண்டும்.

1999 இல் சந்திரிகா பண்டாரநாயக்க கொண்டு வந்த தீர்வுத் திட்டத்தின் போது மகிந்த ராஜபக்ஷ அவரது அரசில் இருந்தவர். அதுபோல் 94 இல் அவர் புலிகளுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தை மற்றும் கடல்கோள் கட்டமைப்பு ஆகியவை மேற்கொள்ளும்போது அவர் அவரது அரசில் இருந்தவர். இந்நிலையில் தமக்கு எதிரானவர்களை அரசாங்கம் புலியென கூறுவது எந்தவகையில் நியாயமானது.

படையினர் ஈட்டும் வெற்றிகள் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றது. கிழக்கை படையினர் மீட்டனர். தற்போது பிள்ளையான் ஜனாதிபதியிடம் பொலிஸ், காணி அதிகாரங்களை கேட்கின்றார். இவ்வாறு சொல்லப்பட்டதன் பிரகாரமே கேட்கப்படுகின்றது. இது தொடர்பில் இந்தியாவின் அழுத்தம் ஜனாதிபதிக்கு உள்ளது.

இந்தியாவிலிருந்து வந்த மூன்று முக்கிய பிரமுகர்கள் ஜனாதிபதி பசில் ராஜபக்ஷ, கோதாபயவுடனே கதைத்துவிட்டுச் சென்றுள்ளனர். இவர்கள் என்ன பேசினார்கள் என்பது புதிராகவேயுள்ளது.

இதன் பின்னர் எண்ணெய் தொடர்பில் உடன்படிக்கை இடம்பெற்றதுடன் ஜனாதிபதி இந்தியா சென்றார். இந்தியாவின் தெற்கு மாநிலங்களுடன் இலங்கையையும் சேர்த்து பொருளாதார வலயமாக்க வேண்டுமென கூறப்படுகின்றது. எமது பொருளாதாரத்தை நாமே ஈட்ட வேண்டும். இதற்கு ஏன் கூட்டுச் சேர வேண்டும்.

110 அமைச்சர்களை தற்போது உருவாக்கி ஊழல் மோசடியுடனும் பரம்பரை அதிகாரத்தை அகற்றுவதற்கும் அனைவரும் இத்தேர்தலில் எமக்கு வாக்களிக்க வேண்டும். ஊடகவியலாளர்களும் உண்மைகளை தெரிவிக்க வேண்டும்.

2004 இல் திருகோணமலையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளரான கிருபராஜா தற்போது ஆட்கடத்தல், கப்பம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இதன் பின்னணியில் யார் உள்ளது என்பதை எடுத்துக்காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

க‌ச்ச‌த்‌தீவை ‌‌‌மீ‌ட்கு‌ம் கால‌ம் நெரு‌ங்‌கி ‌வி‌ட்டது: ‌திருமாவளவ‌ன்!

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In