நாளை கொழும்பு வரவுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத் துணைச்செயலர் மரியா ஒட்டேரோ மற்றும் உதவி இராஜாங்கச் செயலர் ரொபேட் ஓ பிளேக் ஆகியோர் பல தரப்பினரையும் சந்திக்கின்றனர். போர்நடைபெற்ற வேளையில் பிரபாகரனைக் கைது செய்ய இலங்கை அரசிற்கு உதவுவதற்கு பிளேக் முன்வந்தமை அறிந்ததே. இன அழிப்பைத் துரிதமாகநடத்தி முடிப்பதற்கு அமரிகாவும் ஐரோப்பிய நாடுகளும் இலங்கை அரசிற்கு அத்தனை ஒத்துழைப்புக்களையும் வழங்கின.
இன்றும் இலங்கை அரசிசோடு பேரம் பேசுவதற்காக அமரிக்க தரப்பு அலைகிறது. பொருளாதார நெருக்கடியில் மூழ்கும் அமரிக்கா மாலைதீவு போன்ற சிறியநாடுகளைக்கூட விட்டுவைத்ததில்லை. ராஜபக்ச போன்று மற்றொரு இனக் கொலையாளியை ஆட்சிக்கு அமர்த்தி இனப்படுகொலையை அமரிக்கா திவிரப்படுத்த முயற்சித்தாலும் ஒடுக்கப்படும் தமிழ்ப் பேசும் மக்களுக்கு ஆதரவாக அவர்கள் முன்வர மாட்டார்கள். இதே வேளை மக்களை மாயைக்குள் வைத்திருக்க முற்படும் குறுந்தேசிய தமிழ் ஊடகங்கள் அமரிக்க தமிழ் மக்களுக்கு உதவப்போவதாகப் பொய்ப்பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன.








பிளேக் தமிழ்ப் பேசும் மக்களுக்கு ஆதரவாக அவர்கள் முன்வர மாட்டார்கள். இதே வேளை பிரபாகரன் தமிழ்மக்களை விட்டுவைத்ததில்லை. ராஜபக்ச போன்று
இவர்கள் எவரும் ஈழத்தமிழருக்கு உதவ முன் வர மாட்டார்கள். வருவது அவர்களது பொருளாதார சுயநலன்களுக்காக. எம்மிடையே உள்ள பிரிவனைகளை மறந்து ஒன்றுபட்டு எம் பிரச்சனைகளை முடிக்க வேண்டும். கண் முன்னே மனித பலியெடுத்த கொலைவெறியருடன் கூடிக் குலவும இவர்கள் எமக்கு ஏதெனும் நல்லது செய்வார்கள் என்று எண்ணுவது மடமையே. மறுபடியும் எம் நிம்மதியான வாழ்வை தர வல்லவர் தேசியத் தலைவர் ஒருவரே..
போர்க்குற்ற விவகாரத்தை , தமிழ் பேசும் மக்களின் உரிமையை வென்றெடுப்பதற்கு பயன்படுத்தப்போவதில்லை. மாறாக, சரத்பொன்சேகாவை
ஆட்சியில் அமர்த்துவதற்கே அமெரிக்கா பாவிக்கும். அமெரிக்கக் கனவுகளை கலைத்துவிட்டு, ஜெனீவா மாயைகளை அகற்றிவிட்டு, ஒடுக்கப்படும் மக்களோடு இணைத்து போராட முன்வரவேண்டும். இல்லையேல் மாவாட்டும் சபையும் கிடைக்காது.